புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_lcapசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_voting_barசீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 4:52 pm

First topic message reminder :

கவியேறு உமறுப் புலவரவர் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்

அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர். அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.

உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.

இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.

புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.

ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரை அணுகி, கவலைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று, எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார். உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும், அவருக்குப் பகரமாக அவரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும், வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.

அதைச் செவியேற்ற வாலைவாருதி, தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!' என்று உண்டாயின. அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார்.

அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!' என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:

"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று
சரிசமா சனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு
மமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்
தீரனணி வாயில்வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு
முள்ளச்சம் வையும்பிள்ளாய்!"


இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி, உளம் பதறி, மெய் நடுக்குற்று, தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு அகன்றார்.

இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:24 pm

505 பாலுறச் செழுங்கதிர் பரப்பி மென்கணைக்
காலுற வளர்ந்தசெங் கரமும் பொன்மலை
போலென வீங்கிய புயமு மாமுகக்
கோலமுங் காட்சியென் றுணர்ந்து கூறினார். 1.8.24

506 மண்ணகத் துதித்தமா னுடன்கொ லோவலால்
விண்ணகத் தமரர்கள் வேந்த னோவென
வெண்ணிய வெண்ணகத் தடங்கி லாவெழி
லண்ணலைப் பார்த்தடுத் தைய முற்றனர். 1.8.25

507 முத்திரை யொன்றுள முழுது மெய்யினிற்
பத்திவிட் டொளிர்வன பாதம் பாருறாச்
சித்திர நீழலுந் தெரியக் காண்குறா
வித்திற நபியெனத் துணிந்தி யற்றினார். 1.8.26

508 பூரண மதியமே போலவ் பின்னைநாட்
டாரணி தனினபி வருவர் சான்றென
வாரணத் துணர்ந்தறிந் தறிஞர் கூறிய
காரணக் குறிப்பிவர் காணுங் காணென்றார். 1.8.27

509 கண்டவர் கேட்டவர்க் குரைப்பக் காதினிற்
கொண்டவர் கருத்தினிற் குறித்து சாவுவ
ரண்டர்நா யகநபி யுண்டென் றாதிநூல்
விண்டது தவறுறா மெய்யென் றோதுவார். 1.8.28

510 தேந்தரு தடத்தரு விடுத்துச் செம்மலு
மாந்தர்கண் களிப்புற மனையிற் புக்கபி
னேந்தெழி லாமினா வினமு மாயமுந்
தாந்தம துளங்களி னெண்ணஞ் சாற்றுவார். 1.8.29

511 நபியெனு மொருவர்பின் னாளிற் றோன்றியிப்
புவியிடை வருவரென் றோதிப் போந்தவ
ரிவரெனக் குறித்தன ரினியிவ் வூரிடைக்
கவர்மனக் காபிர்கள் கொடியர் காணென்றார். 1.8.30

512 குருத்திறன் முகம்மதைக் குடியிவ் வூரிடை
யிருத்துதல் பழுதுநம் மினத்த ரியாவர்க்கும்
பொருத்தமில் லெனமனம் புழுங்கித் தங்குலத்
திருத்திழை யாமினா வறியச் செப்பினார். 1.8.31

513 தம்பியர் தனையர்சொற் கேட்டுத் தம்முளம்
வெம்பியே யாமினா மிகவி சாரமிட்
டம்பினை யடர்ந்தகண் ணாலி சிந்திட
நம்பியை நோக்கித்தந் நகரை நாடினார். 1.8.32

514 இனத்துளார் தங்கடம் மிதயத் துள்ளுயிர்ப்
புனக்கொடி துன்புறப் புந்தி கூர்தர
நினைத்தநன் மொழிபல நிகழ்த்திப் பங்கய
நனைத்தட மக்கமா நகர்க்க னுப்பினார். 1.8.33

515 விட்டொளிர் விளங்குமி னாமி னாநறுங்
கட்டழ ககுமதை நடத்திக் கள்ளறா
வட்டிலை முள்ளரை வனச வாவியு
நெட்டிலை முளிக்கழைக் காடு நீந்தினார். 1.8.34

516 கொடியிடை யாமினா வென்னுங் கோதையோர்
பிடியென வனமெலாம் பெருக மான்மதக்
கடிகமழ் முகம்மதோர் கன்றும் போலவே
யடவிவிட் டகன்றபு வாவி லாயினார். 1.8.35



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:24 pm

517 கருவிளை வரிவிழிக் கன்னி யாமினா
வரியமெய் நடுக்கமுற் றவலித் தேங்கவே
சுரமென வொருபகை தோன்றித் துக்கமுற்
றிரவலர் போற்றனி யிறந்திட் டாரரோ. 1.8.36

518 அரசர்நா யகநபிக் காண்டோ ராறுட
னொருதிருத் திங்களு நிறைந்த தோதிய
வரிதினிற் கணக்கிலக் காக வாண்டுமோ
ரிருபஃ தாமினா விறந்த காலமே. 1.8.37

519 தாயிறத் தலுமனஞ் சலித்துச் சஞ்சலத்
தீயினிற் கிரிமியிற் றிடுக்கிட் டேங்கியே
மாயிரும் புவியிடை தனித்து மன்னுயிர்
போயின தெனநி னைவறப் புலம்பினார். 1.8.38

520 சிறுகுடி யெனமபு லாவிற் சேர்ந்தவர்
மறைநபி முகம்மதின் வாட்டந் தேற்றியே
குறைவறாக் கற்பெனுங் கோதை மாதினை
யறைமறை முழக்கொ டும்மெடுத் தடக்கினார். 1.8.39

521 ஒலிபுனற் றடத்தபு வாவி லுள்ளவர்
கலியிரு டுரந்தசெங் கவிகை வள்ளறந்
நலிதலைப் போக்கிமக் காவை நாடியே
வலிதனிற் பாசுரம் வரைந்திட் டாரரோ. 1.8.40

522 சிலைநுத லாமினா விறந்த செய்தியின்
மலைவுறு வாசகங் கண்டு வாய்புலர்ந்
தலைகுலைந் தப்துல்முத் தலிபு மன்றுதந்
நிலைதடு மாறியுள் ளறிவு நீங்கினார். 1.8.41

523 மனத்துலை கவலையை மாற்றித் தம்முயி
ரினத்தவர் சிலர்தமக் கிசைந்த வாசக
மனைத்தையு முரைத்தபு வாவிற் போய்நபி
தனைச்சிறு பொழுதினிற் றருதி ரென்றனர். 1.8.42

524 வில்லுற விசைத்தெறி சரத்தின் வேகமா
யொல்லையிற் சிலரபு வாவிற் லோடியே
மல்லுறு புயமுகம் மதுவைக் கண்டுநற்
சொல்லொடுந் தேற்றியுட் டுயர மாற்றினார். 1.8.43

525 மதிமுக முகம்மதை மக்க மாநகர்ப்
பதியினிற் கொடுவரப் பார்த்துச் சிந்தைகூர்ந்
ததிசயித் தப்துல்முத் தலிபு மாமலர்
பொதிதரு தடப்புயம் பொருந்தப் புல்லினார். 1.8.44

526 மண்ணினிற் பதமுறா வள்ள றம்மைதங்
கண்ணெதிர் விட்டக லாத காட்சியா
யெண்ணியுள் ளகத்தினி லிருத்தி யெங்குலப்
புண்ணிய மிதுகொலென் றுவந்து பூரித்தார். 1.8.45

527 இலைமலர் கிழிந்துதே னிழிய வாய்மடுத்
தலகில்வண் டுண்டுபண் ணார்க்குந் தார்ப்புயர்
கலைதெரி ஹபீபுல்லா வென்னுங் காளைதந்
நிலைபெற வாண்டொரே ழாநி றைந்தவே. 1.8.46

528 கனைகுரன் மும்மதக் களிற்றின் மத்தகச்
தினையுறக் கீண்டுயிர் குடிக்குஞ் சீயமே
யனையவ ரப்துல்முத் தலிபு தந்திரு
மனையர செனநபி வளரு நாளினில். 1.8.47

529 தழையறக் கருகிநீர்த் தடங்கள் வற்றிமெய்க்
குழைவொடு கானலைக் குறித்து நீரென
வுழையின மோடியுள் ளொடுங்கப் பாரிடை
மழையறச் சனமெலா மறுக்க முற்றதே. 1.8.48



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:25 pm

530 புவியிடை மழைபொழி யாத நோவினா
லப்துல்முத் தலிபெனு மரசர் நாயகர்
நபிதமைக் கூட்டிமுன் னடத்தி யாங்கொரு
தவிசெனு முரம்புறு தலத்தி ருத்தினார். 1.8.49

531 இருகையு நபிதமை யேந்தச் சொல்லித்தம்
மிருகர நபிதிருக் கரத்தை யேந்தியே
யிருவரு மிரங்கிநின் றிரந்து நோக்கவே
யிருவிசும் பிடைமழை யிறைத்த தெங்குமே. 1.8.50

532 பாரின்ற் பெரும்புனல் பரந்த செல்வமித்
தாருடை முகம்மதின் பறக்கத் தாலென
வூரினிற் றலைவருக் கியம்பி யுண்மகிழ்ந்
தேர்பெறு மப்துல்முத் தலிபி ருந்தனர். 1.8.51

533 நறைபொழில் ஹபுசுநன் னாட்டின் சேனையை
அறபிகள் பொருதுவெ றோரென் றோதிய
திறனறு செய்திகேட்டிதுவுஞ் செவ்விநூ
லிறைநபி பொருட்டலா திலையென் றோதினார். 1.8.52

534 நபிதிரு வயதிரு நான்குந் திங்களுங்
கவினுற விரண்டுசென் றதற்பின் காணுநாட்
புவியினிற் பத்துறப் பொருந்தும் போதினி
லபுதுல்முத் தலிபுமே லுலக டைந்தனர். 1.8.53

535 விறகரத் தபுதுல்முத் தலிபு மேலுல
கிற்புகுந் தாரென வினமு மக்களுங்
கற்புடை மகளிருங் கமல வாண்முகம்
பொற்பறப் புடைத்தழு தேங்கிப் பொங்கினார். 1.8.54

536 விதிமறை நூலவர் விருத்தர் மன்னவ
ரிதமுற வந்தடுத் திரங்கும் பேர்க்கெலா
மதிபல சொல்லியுட் புழுக்க மாற்றியே
யதிவிதத் துடனெடுத் தடக்கி னாரரோ. 1.8.55

537 சடங்குள தெவ்வையுந் துடைத்துத் தங்குல
மடங்கலே றனையவர் கூண்டு மாசிலாத்
தடம்புய முகம்மதை வளர்க்கத் தக்கதோ
ரிடம்பெறு மனத்தவ ரெவரென் றோதினார். 1.8.56

538 அம்மொழி கேட்டபித் தாலி பாகிய
மும்மதக் கரியுயிர் முகம்ம துக்கினி
யெம்மனை யலதுவே றிடமுண் டோவெனச்
செம்மலர்க் கரத்தெடுத் தணைத்துச் சென்றனர். 1.8.57

புனல் விளையாட்டுப் படலம் முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:26 pm


1..9 புகைறா கண்ட படலம்

539 மலையெ னத்திரட் புயரபுத் தாலிபு மனையி
லலைக டற்புடை வருமுழு மணியகு மதுவு
நிலைத ரித்தவெண் கதிட்மதி நிகரென வளர
வுலைவில் செல்வமும் வளர்ந்தன வொன்றுபத் தெனவே. 1.9. 1

540 சலத ரத்தைநேர் கரத்தபித் தாலிபு தம்பாற்
குலவு வீரமுங் கல்வியும் வெற்றியுங் குடியாய்
நலமு றப்புகுந் திருந்தன நாடொறும் வனசத்
திலகு செல்வியு மிவர்மனை முன்றில்வீற் றிருந்தாள். 1.9.2

541 சுரபி யின்றிரள் கூன்றொறுத் திரளொடுஞ் சுரந்த
கரிய மேதியின் குலமொரு பெருங்கடல் கடுப்பப்
பெருகி யோங்கின கொறிகளும் பல்கின பிறரும்
பருகப் பாறயிர் குறைவறப் பெரும்பலன் படைத்தார். 1.9.3

542 நான மெய்கமழ் வேதநா யகர்நம திடத்தி
லான தாலிவை பெற்றன மெனவக மகிழ்ந்து
வானு லாவுவெண் புகழபித் தாலிபு மன்னர்
தேனு லாம்பொழிற் சாமினிற் செலக்கரு தினரே. 1.9. 4

543 வெள்ளி வெண்டகட் டொளிர்நிலா வெறித்தமே னிலைக
ணள்ளி ருட்களி சீத்தெறி மக்கமா நகரிற்
கொள்ளும் பற்பல சரக்கெவை யவையெலாங் கொண்டு
தெள்ளி தாகித்தம் புறச்சரக் கறையையுந் திறந்தார். 1.9. 5

544 ஏறு வாம்பரி யொட்டையி லெடுத்தெடுத் தேற்றிக்
கூற வல்லவ ரெவரவ ரவர்க்கெலாங் கூறி
யாற டுத்தொரு பொழில்புற விடுதிய தாகி
யூறு தேன்குழன் மனைவியர்க் கிவையெலா முரைத்தார். 1.9.6

545 சொன்ன வாசகங் கேட்டலு முகம்மது துணுக்குற்
றென்னை யுங்கொடு ஷாமினுக் கேகுமென் றிசைப்பப்
பொன்னு நன்கதிர் மணியையும் போர்த்தெடுப் பவர்போல்
வன்ன வார்கழற் குரிசிலுக் குறுமொழி வகுத்தார். 1.9.7

546 பாதை போவதும் வருவது மௌிதல பரற்கா
டேத முற்றது சுரத்திடை படுமிடர் கொடிது
காத நான்கினுக் கொருகர நீருறாக் கடுங்கான்
வாதை மிக்குள வருமொழி மறுமென மறுத்தார். 1.9.8

547 தந்தை சொல்லிய சொல்லினுக் கரியகட் டரளஞ்
சிந்த நோக்கிய முகம்மது திருமுக நோக்கிப்
புந்தி நேர்ந்தனை தேற்றவுந் தெலிந்திலை புகழோ
யெந்த வாற்றினு நிற்பிரிந் தேகல னென்றார். 1.9.9

548 குலத்த டக்கிளைத் தாமரைக் குழுவினி னாப்ப
ணலத்து தித்தெழுந் செழுமணி நபிகணா யகத்தைச்
சிலைத்த டப்புயர் வருகெனப் பணிபல திருத்தி
யிலைத்த டக்கதிர் வேலெடுத் தினத்துட னெழுந்தார். 1.9.10

549 பார்த்தி வரபூ பக்கரும் பாதையர் பலரு
மேத்து மெய்ப்புகழ் முகம்மதைச் சூழ்தர வியைந்து
மாத்த டக்கரி கூன்றொறுச் சுமைதிசை மலியப்
பூத்த தாமரைக் கழனிவிட் டருநெறி புகுந்தார். 1.9.11

550 காறு நீங்கியே முகம்மது வருவது கண்டு
மாறி லாதசந் தோடமு மொன்பதாம் வயதிற்
றேறி லாமனச் சிறுவனென் றெண்ணிய திடுக்கு
மூறு துன்பமு மின்பமு முடன்வர நடந்தார். 1.9. 12



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:26 pm

551 மடங்க லேறபித் தாலிபென் றோதிய மன்னர்
கடங்கொண் மும்மதக் கரிதிரி வனத்தையுங் கடந்து
சடங்க முங்கிய சடிலமு மிடபமுஞ் சாய்த்தே
யடங்க லுங்கொடு நடந்தொரு தலத்தினி லானார். 1.9. 13

552 தக்க தோர்புசு றாவெனுந் தலத்தினிற் சார
மிக்க பேரொளி வெய்யவன் மேற்றிசைச் சார்ந்தான்
றிக்கெ லாந்துதி செயுமபித் தாலிபுஞ் செறிந்த
வொக்கல் சூழ்தர வின்னுயிர்ப் புதல்வரோ டுறைந்தார். 1.9.14

553 ஆங்கி ருந்தனர் விடிந்தபி னத்தலத் தொருவ
னோங்கி மும்மறை நுண்பொரு ளனைத்தையு முணர்ந்து
தீங்கி லாதமுக் காலமுந் தௌிந்தறி திறலோன்
றாங்கு மில்லறந் துறவறந் தெரிந்தமா தவத்தோன். 1.9. 15

554 நகையு றாவுறூ மெனும்பகுத் தறிவினை நாளும்
வகையு றாநசு றானிகள் குருக்களின் மதியோன்
புகையு றாவெனும் பெயரின னெத்திசைப் புறத்தும்
பகையு றாதசெம் மலர்முக முகம்மதைப் பார்த்தான். 1.9.16

555 கண்டு நந்நபி மெய்யெழி லிருமலர்க் கண்ணா
லுண்டு தன்னகங் குளிர்தர வுடலெலாங் களிப்புக்
கொண்டு வீங்கினன் மறையினிற் கண்டதுங் குலத்தோர்
பண்டு சொற்றதுங் கேட்டதுங் கனவினிற் பயனும். 1.9.17

556 வாய்ந்த முத்திரைக் குறியுஞ்செங் கரங்களின் வனப்புந்
தோய்ந்து சீரடி படியுறாப் புதுமையுஞ் சுடரால்
வேய்ந்த மெய்யின் மாசணு காததும் விறலோ
னாய்ந்து நன்னபி யிவரெனத் திடமுற வறிந்தான். 1.9.18

557 அறிந்து ணர்ந்தபண் டிதனபித் தாலிபை யழைத்துச்
சிறந்த வாதனத் திருத்தித்தன் செவ்விதழ் திறந்து
பிறந்த் வூர்குல நும்பெய ரிப்பெரும் பெயரோ
டுறைந்த பிள்ளையின் பெயர்தெரி தரவுரை மென்றான். 1.9. 19

558 ஆதி மாகமூர் கிளையது னான்குலத் தாசீ
மோது மியானபித் தாலிபென் பின்னவ னுயிரின்
போத ரத்தின னப்துல்லா தருதிருப் புதல்வன்
மாத வனிவன் பெயர்முகம் மதுவென வகுத்தார். 1.9.20

559 பைத்த டப்பணி நௌிதர விண்டுகள் பரப்ப
மொய்த்த வொட்டையு மிடபமு முழக்கொடு நடத்தி
யெத்த லத்தினுக் கேகுவிர் நீவிரென் றியம்ப
வித்த கர்பொழில் ஷாமினுக் கெனவிளம் பினரே. 1.9.21

560 அரும்பு மென்மலர்த் தொடைதிரட் புயவபித் தாலிபு
விரும்பிச் சாமினுக் கெழுந்தன மெனவுரை விளம்பத்
தரும்பெ ரும்பயன் முகம்மதைச் சடுதியிற் கூட்டித்
திரும்பு நும்மனைச் சென்மென வுரைத்தனன் றிறலோன். 1.9.22



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:26 pm

561 வெடித்த மென்மலர்த் தேனையுண் டினவெறிச் சுரும்பு
படித்த பாட்டயர் பொழிறிகழ் ஷாமெனும் பதிக்குப்
பிடித்து நோக்கிய சரக்குட னெமையொரு பேச்சி
லடித்த லம்புக வுரைத்தசொல் லென்னென வறைந்தார். 1.9.23

562 வாடி றத்தபித் தாலிபு நடுங்கியுள் வருந்திக்
கேட்ட போதினிற் புகையுறா வெனுமறைக் கிழவோன்
பூட்டும் விற்றடக் கரமுகம் மதுமைப் புகழ்ந்திந்
நாட்டின் மேல்வருங் காரண மனைத்தையு நவில்வான். 1.9.24

563 ஆத மக்கடந் தலைமுறை யைம்பதின் பின்னர்
சோதி மாநபி வருவரிந் நாளெனத் துணிந்து
பேத மற்றவ ருரைத்ததுங் கண்டதும் பெரியோன்
வேதஞ் சொற்றது மிவரலாற் பிறிதுவே றிலையே. 1.9.25

564 கொலையெ ஹூதிகள் வன்னசு றனியின் குலத்தோ
ரலகில் கூட்டமுண் டப்பெரும் ஷாமினி லடைந்தாற்
றொலைவி றுன்புற வறக்கொடு வினையொடுந் தொடர்வர்
கலைவ தன்றிநும் மிடர்தவிர்த் திடுவதுங் கடிதே. 1.9.26

565 நபியு மிங்கிவ ரலதுவே றிலையிவ ணபிக்குத்
தவறெ டுத்தவர் முடித்திட நினக்கினுஞ் சாரா
நபியு மோமுதி யவரலச் சிறுவரா கையினார்
றவிரு நும்பதி புகுமென வுரைத்தனன் றவத்தோன். 1.9. 27

566 உரைத்த வாசகங் கேட்டபித் தாலிப்தம் முளத்திற்
பொருத்த மீதெனச் சம்மதித் திருக்குமப் போதிற்
றிருத்து நந்நபிக் குறுபகை விளைத்திடச் சினந்து
நிரைத்தே ஹூதிகள் வந்தடைந் தனர்சிலர் நெருங்கி. 1.9.28

567 அடர்ந்து வந்துநின் றவர்முகக் குறிப்பையு மவரைத்
தொடர்ந்து மாயவன் சூழ்ச்சியுங் கொடுமனத் துணிவுங்
கடந்த வார்த்தையுங் கண்டுபண் டிதனகங் கறுத்து
ளிடைந்து நோக்கினன் றழற்கதி ரெழவிரு விழியால். 1.9.29

568 கடுத்து நோக்கியங் கவருளங் கலங்கக்கட் டுரைக
ளெடுத்து ரைத்துநின் னபிதமை வாழ்த்துமென் றிசைத்து
விடுத்திர் நும்மன நினைவெனக் காபிர்கள் விரைவி
னடுத்த வல்வினைத் துணிவைவிட் டப்புற மகன்றார். 1.9.30

569 ஈத லால்நசு றானிக ளெண்ணிலொன் பதுபேர்
சீத மென்றடம் புனைபுசு றாவினைச் சேர்ந்து
மாத வத்தின னறப்புறச் சாலையில் வந்து
கோத றப்பணிந் திருகரஞ் சிரத்தினிற் குவித்தார். 1.9.31

570 வந்து கண்டவர்க் கின்புறு மொழிபல வழங்கி
யெந்த வூருளீ ரெவ்விடத் தேகுவிர் நீரென்
றந்த மிக்குறு பண்டிதன் கேட்டபி னடைந்தோர்
சிந்தை கூர்ந்துதம் வரவினை யெடுத்துரை செய்தார். 1.9.32



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:27 pm

571 அந்த மில்லவன் மும்மறை யுணர்த்திய தழகாய்
நந்த மார்க்கமுஞ் சமயமுங் கெடநமர் நலிய
வந்து தோன்றுவர் நபியென முகம்மதிவ் வருட
மிந்த மாதமிற் சாமினுக் கேகுவ ரெனவே. 1.9.33

572 கோதி லாமறை யுரைத்தசொ லுலத்தினிற் குறித்துச்
சூத மென்பொழில் வளைதரு ஷாமினைச் சூழ்ந்த
பாதை நான்கினு மொற்றரை யனுப்பியிப் பாதைக்
கேத மன்றிநும் பாலடைந் தோமென விசைத்தார். 1.9.34

573 வடிவு றும்மறை யுரைத்தது முளதுமும் மறைக்கு
நெடிய வன்னபி யுதித்தவண் வருவது நிசமே
படிய திர்ந்திட நடந்தலைக் துலைந்துமெய் பதறக்
கடிதிற் றேடியே திரிவதெக் காரண மென்றான். 1.9.35

574 முதிய வேதிய னுரைத்தலும் பகையென முளைத்துப்
புதிய தாய்நபி யெனவரி லவரைவிண் புகுதச்
சதிசெய் வோமென வந்தனஞ் சரதமென் றுரைத்தார்
மதியி லாதறை யிருளினு மிருண்டபுன் மனத்தார். 1.9. 36

575 நிறைம திக்கதி ரெனவொரு நபியையிந் நிலத்திற்
குறைவி லாதவன் விதித்தனே னீவிர்நுங் குலத்துக்
கிறைவர் கூடியு மிடர்செயுங் கொடுங்கொலை யிருளான்
மறையு மோமறை யாதென வுரைத்தனன் மறையோன். 1.9.37

576 சுடிகை மன்னவர் குலத்துறு தொன்மறை நபிக்குப்
படியி டத்திடர் நினைத்திடி லிம்மையிற் பழியுங்
குடிகு டித்தொறும் வழுவும் லாற்கொடு நரக
முடிவி லெய்துவ ரென்றன னீதிநூன் முறையால். 1.9.38

577 வானர் முன்னினும் பின்னினுஞ் சுற்றியெவ் வழிக்கு
மீன மின்றியே திரிகுவ ரெண்ணிறந் தோர்க
ளான தாலொரு தீங்கிலை நபிக்கென வறைந்தான்
ஞான மூற்றிருந் தொழுகிட மொழிந்தசெந் நாவால். 1.9.39

578 வச்சி ரத்தினி லெழுதிய வெழுத்தினை மாற்றப்
பச்சை மென்மல ரிதழ்கொடு துடைத்திடும் படிபோற்
செச்சை முங்கிய புயநபிக் குறுகொலை செயவே
யச்ச மின்றிநீர் துணிந்ததென் றறைந்தன னறிவால். 1.9.40

579 வேத வேதிய னுரைத்தநன் மொழியெலாம் விரைவிற்
காதி னுட்புகுந் தெண்ணிய கருத்தினைக் கலக்கப்
பாத கப்பய னியாம்நினைத் தவையெனப் பயந்து
கோத றத்தௌிந் தார்நசா றாக்கடங் குலத்தோர். 1.9. 41

580 பொருந்து மாதவன் செம்மலர் பொருவுசே வடியில்
விரிந்த செங்கரங் கூப்பியுண் மனவினை வெறுத்துத்
தருந்த வப்பய னும்மொழி யெனவெதிர் சாற்றித்
திருந்து நல்வழி கொண்டன ரவரவர் திசைக்கே. 1.9.42



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:27 pm

581 முன்னர் மாமறை முதியவன் சொற்றபின் முறையா
யிந்நி லத்தெஹூ திகள்சில ரடைந்து மிடராய்
வன்னி தாநசா றாக்கள்வந் ததுவுமுள் ளகத்தி
லுன்னி னாரபித் தாலிபென் றொழுங்குறு முரவோர். 1.9.43

582 நன்ன யம்பெறு முகம்மதை மக்கமா நகரிற்
கின்ன ணம்விடுத்து துதுமென வெழிலபித் தாலிப்
சொன்ன போழ்தினிற் பண்டிதன் முகமதி துலங்கி
யன்ன தேகருத் தாமெனக் களித்தக மகிழ்ந்தான். 1.9. 44

583 வருதி யென்றெழின் முகம்மதைத் தவிசில்வைத் துயர்த்தித்
திரிகை யின்கனி மோதகத் தொடுசில வெடுத்துப்
பரிவி னிற்கொடுத் தணிமல ரடியிடைப் பணிந்து
பொருவின் மக்கமா நகரினிற் புகுமெனப் புகன்றான். 1.9.45

584 சிசைசு மந்தொளிர் புயத்தபித் தாலிபு செழுங்க
மலைகு டிக்குறு மனியபூ பக்கரை வாழ்த்தி
நலனு றும்படி முகம்மதை மக்கமா நகரிற்
கலைவி னல்விழி கொடுசொலு மெனவனுப் பினரே. 1.9. 46

585 அண்ண லச்செழு மக்கமா நகரினுக் கனுப்பி
வண்ண வார்கழ லடலபித் தாலிபு மறையின்
பண்ண மைந்தவாய் முத்யவற் கிவையெலாம் பகர்ந்து
கண்ண கன்பொழிற் சாமினுக் கெழுந்தனர் கடிதின். 1.9.47

586 குன்றுங் கானமு மடவியுஞ் சுரங்களுங் குறுகிப்
பொன்றி லாப்புகழ் ஷாமெனும் பதியிடைப் புகுந்தே
யொன்று நாலென வாணீபத் தொழின்முடித் தொடுக்கி
வென்றி கொண்டெழுந் தனரது னான்கிளை வேந்தர். 1.9.48

587 எழுந்து ஷாமெனும் பதியைவிட் டிருஞ்சுரங் கடந்து
பொழிந்த சாரலிற் பொருப்பிட மனைத்தினும் பொங்கி
வழிந்து பாய்தரு மருவியுங் கண்டுள மகிழ்ந்து
செழுந்த டம்பொழின் மக்கமா நகரினைச் சேர்ந்தார். 1.9.49

588 அறநெ றிக்குயி ராயபித் தாலிபு மடுத்தோர்க்
குறுபொ ருட்கொடுத் திரவலர்க் கின்னமு தூட்டி
யிறையிவ னன்மறை முதியவர் வேட்டவை யீந்து
மறுவில் வண்புகழ் முகம்மதை யினிதொடும் வளர்த்தார். 1.9. 50

589 கான றைப்பொழில் சூழ்தரச் சிறந்தமக் காவிற்
றான வன்னரு டழைத்தெழு முகம்மது தமக்கு
வானர் வந்திரு செம்மல ரடியிணை வருட
வான நல்வய தொருபதினன்குசென் றனவே. 1.9.51

590 அந்த நாளினின் மக்கம நகரினை யடுத்து
வந்த தோர்படை கயிசென வரும்பெருங் கூட்டந்
தந்த மில்விடுத் தனைவரு மோரிடஞ் சார்ந்து
சிந்தை நொந்துவன் மறமற வொடுங்கினர் திகைத்தே. 1.9.52

591 கலக்க முற்றவ ரெவரெவ ரெனச்சிலர் கடுத்து
நலக்க முற்றிடப் பொருகுவ மியாமென நவில்வார்
நிலைக்கு மோநிலை யாதுநம் படையென நிகழ்வா
ரலக்க ழிந்தொரு மொழியுரைத் தனரனை வருமே. 1.9.53

592 சந்த மான்மதங் கமழ்புய வப்துல்லா தவத்தால்
வந்த பேரொளி வெற்றிவெம் புலிமுகம் மதுவை
நந்த மூரவ ரினப்படை யுடன்கொடு நடந்தா
லிந்த வல்வினைப் பகையிடர் தவிர்ந்திடு மெனவே. 1.9.54

593 நன்று நன்றென இபுனுசுத் ஆனுநந் நபியுந்
துன்று வெம்படைத் தலைவரும் பரியுடன் சூழக்
குன்று லாவுகொ ளரிக்குலக் குறைஷிக ணடந்து
சென்று தாக்கினர் கைசெனும் படைதெறித் ததுவே. 1.9.55

594 தருவே னத்தரு முசைனயி னார்தரு மதலை
திருவு லாவிய புயனபுல் காசிஞ்செங் கரத்தாற்
பொருள்வ ரப்பெறு மவர்கலி யுடைந்தது போல
வெருவி யோடின கைசெனும் படைமிடை மிடைந்தே. 1.9.56

595 மாறு கொண்டகை செனும்படை தெறித்திட வயவர்
பேறு கொண்டனம் வெற்றியுங் கொண்டனம் பெரியோன்
வீறு கொண்டநன் முகம்மதின் பொருட்டென வியத்தி
யாறு கொண்டன ரூரடைந் தனரனை வருமே. 1.9.57

596 பண்டு நாட்டொடுத் திற்றைநாள் வரைக்குமப் படையைக்
கண்டு நாமுறிந் தனமலால் வெற்றிகண் டறியோம்
வண்டு வாழ்மலர்த் தொடைப்புய முகம்மது வரலாற்
கொண்ட வெற்றிபோல் வெற்றிவே றிலையெனக் குறித்தார். 1.9.58

புகைறா கண்ட படலம் முற்றிற்று




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 6:31 pm

பதிவைப் பார்த்தவுடன் மகிழ்ந்தேன். என்றோ நாம் கற்ற சீறா ஈகரையில் அதற்க்கொரு இடம் பிடித்து அலங்காரமாய் அமர்ந்து இருப்பதைப் பார்த்தபோது பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தேன்...
நண்பர் சிவா பகிர்ந்த கர்ணன் என் காதலன் மற்றும் சீறா இரண்டுமே மனித மாண்புகளை வளர்க்கும் இலக்கிய மகுடங்கள்....
தொடருங்கள் ...தேவைப்பட்ட போது தொட்டெடுத்து ஈகரை பெட்டகத்திலிருந்து படித்துக்கொள்கிறோம் ....பகிர்வுக்கு மிக்க நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 18, 2011 8:07 pm

தொடருங்கள் அண்ணா!

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக