புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
89 Posts - 68%
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
266 Posts - 45%
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
18 Posts - 3%
prajai
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:22

First topic message reminder :

கவியேறு உமறுப் புலவரவர் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்

அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர். அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.

உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.

இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.

புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.

ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரை அணுகி, கவலைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று, எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார். உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும், அவருக்குப் பகரமாக அவரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும், வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.

அதைச் செவியேற்ற வாலைவாருதி, தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!' என்று உண்டாயின. அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார்.

அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!' என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:

"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று
சரிசமா சனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு
மமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்
தீரனணி வாயில்வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு
முள்ளச்சம் வையும்பிள்ளாய்!"


இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி, உளம் பதறி, மெய் நடுக்குற்று, தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு அகன்றார்.

இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:49

401 பருதியின் கரங்கள் காணாப் பாசடை செறிந்த நீழற்
றருவிடை முகம்ம தென்னுஞ் சலதரக் கவிகை வேந்தை
யிருமென விருத்திச் சூழ்ந்த விளையரிற் சிலர்புற் கானிற்
றுருவைமேய்த் தருநீ ரூட்டித் தோன்றுவ ரலது நீங்கார். 1.7.11

402 சுற்றிய துணைவ ரோடுஞ் சொரிகதிர் முகம்ம தென்னு
நற்றவ முடைய நம்பி வருவதை நோக்கி நாடிச்
சிற்றிடை யலிமா வென்னுஞ் சேயிழை யெதிரிற் சென்று
பொற்றொடிக் கரத்தி லேந்திக் கொறியுடன் மனையிற் புக்கார். 1.7.12

403 மற்றுமிவ் வண்ணஞ் சின்னாண் முகம்மது மப்துல் லாவும்
பற்றுவிட் டகலா ராடும் பலுகின தொன்று பத்தாய்க்
குற்றமி லலிமா வென்னுங் கொடிமனை தயிர்பா னன்னெய்
வற்றுறாப் பெருகிச் செல்வம் வளர்ந்தினி தோங்கிற் றன்றே. 1.7.13

404 குறுமறி யாய ராருங் குரிசிலைச் சூழவ ரல்லாற்
பிறிதொரு நெறியுஞ் செல்லார் பெய்பரற் கானி லாங்கோர்
செறிபுனற் றடத்தி னீழற் சேர்ந்தொரு முகமாய்க் கூடி
யிறையவன் றூதர் முன்சென் றேவல்செய் திருப்ப ரன்றே. 1.7.14

405 நன்றிகொ ளிளையோ ரெல்லா நறைமுகம் மதுவை யார்க்கும்
வென்றிகொ ளரசா வைத்து வேறுவே றதிகா ரத்தா
ரென்றவ ரவர்க்கே பேரிட் டிருந்தடி பணிந்து சார்ந்த
மன்றல்சே ருவாயி னீழன் மகிழ்ந்தினி திருக்கும் போதில். 1.7.15

406 பட்டுடை யினராய்ச் சாந்தம் பழகுதோ ளினராய் வாய்ந்த
கட்டழ கினராய் வீசுங் கதிர்மதி வதன ராய்மெய்க்
கிட்டகஞ் சுகரா யாண்மை யிலங்கும்வா லிபராய்ச் சோதி
விட்டொளிர் மின்னி னொப்ப விழைவினி லிருவர் வந்தார். 1.7.16

407 படியகங் கெண்டி செம்பொற் பதுமமென் கரத்தி லேந்தி
வடிவுட னொருவர் நிற்ப மற்றொரு காளை கையிற்
றொடிபகுப் பென்னக் கூன்வா டோன்றிட வெதிர தாகத்
திடமுட னிற்பக் கண்டு சிறுவர்கள் கலக்க முற்றார். 1.7.17

408 சிறுவர்க ளுள்ளந் தேம்பிக் திடுக்கிட நிற்குங் காலை
மறுவகன் மதியம் போன்ற முகம்மதை யடுத்துப் பாரி
லிறையவன் றூதே யெங்கட் கின்னுயிர்க் குயிரே யென்ன
நறைமலர்க் கரத்தைப் பற்றி நடந்துவாய் நிழலி லானார். 1.7.18

409 தருநிழ லிடத்தில் வள்ள றம்முனும் பின்னு மாக
விருவரு மிருப்பக் கண்ட விளையவ ரனைத்து மேங்கி
வெருவுவ ருள்ளந் தேறா மெலிகுவ ரிவரியா ரென்ன
வுருகுவர் கரைவர் கண்ணீ ரொழுகிட வொருங்கு நிற்பார். 1.7.19

410 பதறுவர் கலங்கி யேங்கிப் பதைபதைத் தலறி விம்மிக்
கதறுவ ரந்தோ வென்னக் கலங்குவர் கலன்க ளியாவுஞ்
சிதறிட வோடி யோடித் திரும்பிநெட் டுயிர்ப்பு வீங்கி
யிதயநொந் தாவி சோர விடைந்துவா டுவர்க ளன்றே. 1.7.20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:50

411 மல்விதம் பயிலுந் திண்டோண் மன்னவ ரிவர்க ளியாரோ
தொல்விதிப் பயனால் வந்து சூழ்ந்துகைக் கருவி தன்னாற்
கொல்வதுக் கிசைந்த பேரோ குரிசிலைக் கொண்டு தம்மூர்
செல்வதுக் கிருக்கின் றாரோ தெரிகிலோ மென்ன நைவார். 1.7.21

412 கடலிடைப் புவியி லெங்கண் முகம்மது பேரிற் கையாற்
றொடநினைத் தவரு மில்லைத் தொடர்ந்துகைப் பற்றி நுங்க
ளிடமற விருத்தல் செய்தீ ரேதுகா ரணமோ வெங்க
ளுடனுரைத் திடுவீ ரென்ன வுரைத்துவாய் புலர்ந்து நிற்பார். 1.7.22

413 மறைபடாச் செவ்வி வாய்ந்த முகம்மது பேரிற் சற்றே
குறைபட நினைக்கின் றீராற் குடிகுடி வடு நுங்கட்
கிறையவன் மினிவும் பாரி லெண்ணிலாப் பழியுஞ் சூழு
முறையல விடுமி னென்ன மொழிந்துநெஞ் சழிந்து நிற்பார். 1.7.23

414 முகம்மது பேரி னும்மால் வடுவரு மாகி லிந்தச்
செகமகி ழலிமா வென்னுந் திருந்திழை பழியு மீன்ற
நகைமணி முறுவ லாமி னாவுயிர்ப் பழியு மல்லாற்
பகைபெரி துடைய ராகிப் பழியெலாஞ் சுமப்பீ ரென்றார். 1.7.24

415 இத்திறஞ் சிறுவர் கூற வியலபு துல்லா வென்னுஞ்
சித்திர வடிவன் செவ்வாய் திறந்திரு வரையு நோக்கி
வித்தகர் முகம்ம தின்னை விடுமெனை நுங்கட் கேற்ற
குத்திரங் கொலையா தேனுங் குறித்ததி முடித்தி ரென்றான். 1.7.25

416 சிறுவர்க ளுரைக்கு மாற்றங் கேட்டபின் ஜிபுற யீலு
மறநெறி மீக்கா யீலு மதிசயித் தகத்தி னுள்ளே
மூறுவல்செய் துரையா தொன்று மொழிந்தில ராகிச் செவ்வி
நிறைமுகம் மதுவைச் சேர்ந்த நிழலிடைப் படுத்தல் செய்தார். 1.7.26

417 படுத்தொளி பரப்புஞ் செவ்வி முகம்மதைப் பார்த்துக் கூன்வா
ளெடுத்துநாற் றிசையு நோக்கி யியல்பெற வுரத்தி னேரே
வடுப்பட வூன்றி நொய்தாய் வகிர்ந்திடும் போதி னெஞ்சந்
திடுக்கொடு பதறி நின்ற சிறுவர்கள் சிதறி னாரே. 1.7.27

418 நேயமுற் றுரத்தைக் கீண்டு நிறையொளி பொங்குங் கஞ்சக்
காய்முகை கிழித்துள் ளுற்ற கறுப்பொடு கசடு மான
மாயவன் கூற்றை மாற்ரி வழுவறக் கழுவி மாறா
தாயுநன் னினைவீ மானல் லறிவுட னிறப்பல் செய்தார். 1.7.28

419 உண்மையு நினைவுஞ் சேர்த்தி யூறிலா துறப்பொ ருத்தி
வண்மைசேர் முகம்ம தின்றண் மணிப்பிடர்த் தணிவ தாகத்
திண்மைகொள் புயமி ரண்டிற் றெரிதர நடுவிற் றூய
வொண்ணிறப் புறவி னண்டத் தோதிய வளவ தாக. 1.7.29

420 முத்திரை யென்னு மவ்வி லாஞ்சனை டஹ்ரித்து மூவா
வுத்தமர் தெரிந்து நோக்கி யொருவருக் கொருவர் சொல்வா
ரித்தகைக் குரிசி னின்ற நிறையிடை கண்டோ ரெல்லாம்
பத்திவிட் டொளிருஞ் சொர்க்கப் பலன்பதம் பெறுவ ரென்றே. 1.7.30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:50

421 தரம்பெறு மாயி ரம்பேர் நிறையெனச் சாற்றிப் பத்தா
யிரம்பெயர் நிறையுண் டென்ன வியம்பிநூ றாயி ரம்பேர்க்
குரம்பெறக் கனமுண் டென்ன வோதியோர் கோடி கோடி
நிரம்புமா னிடருக் குற்ற நிறையென்று நிகழ்த்தி னாரே. 1.7.31

422 வகுத்தநாட் டொடுத்துப் பின்னாள் வருவதோர் நாளீ றாகத்
தொகுத்தவ சனங்க ளெல்லா மிவரெடை தோன்றா தென்னப்
பகுத்தவர் பார்த்துப் பாரிற் படைப்புள சனங்க ளெல்லா
மிகத்திவர் ஷபாஅத் தாலீ டேறுவ ரென்ருஞ் சொன்னார். 1.7.32

423 அதிசயித் துரைத்து நின்றங் ககுமது சிரசைத் தொட்டுத்
துதிசெய்து முத்த மிட்டுத் தூயவன் றோழ ரான
புதியதோர் ஹபீபுல் லாவென் றோதிய பேரும் போர்த்து
மதிமகிழ்ந் துவகை பொங்கி வானவர் வாழ்த்திச் சொல்வார். 1.7.33

424 அருமறை முகம்ம தேநும் மகத்தினி லஞ்சல் வேண்டாம்
வரமுறு புதுமை நும்பால் வருவதுண் டனேக மந்தத்
தரமறிந் துவகை யெய்து முமக்கெனச் சாற்றிப் போற்றிப்
பெரியவ னருளால் வானோர் பேருல கடைந்தா ரன்றே. 1.7.34

425 ஓடிய சிறுவர் கானொந் துலைந்திளைத் துடலம் வேர்த்து
வாடிய முகத்திற் கண்ணீர் மார்பக நனைப்பச் சோர்ந்து
பாடியிற் புகுந்து தங்கண் மனப்பயங் கரத்தை வந்து
கூடிய பெயருக் கெல்லாம் வகைவகை கூறு கின்றார். 1.7.35

426 அப்பொழு தப்துல் லாவும் லமுறத்து மழுது விம்மி
யெய்ப்பொடு மேங்கி யேங்கி யீன்றவர் முகத்தை நோக்கி
மைப்படுங் கவிகை வள்ளன் முகம்மதைக் கொன்றா ரென்று
செப்பிய மாற்றக் கூற்றஞ் செவிப்புக மயங்கி வீழ்ந்தார். 1.7.36

427 ஆரிது தெருமந் துள்ளத் தறிவழிந் தாவி சோரக்
காரிகை யலிமா பூண்ட கலன்பல திசையுஞ் சிந்த
வேரியங் குழன்மா மேக மின்னென மேனி தேம்பிப்
பாரினிற் புரண்டே றுண்ட மயிலெனப் பதைக்க லுற்றார். 1.7.37

428 பதைத்தெழுந் தையோ வென்னப் பாலக னப்துல் லாவை
மதித்துமுன் னடத்திக் காந்தண் மலர்க்கரஞ் சிரசி லேற்றி
யுதித்தெழுங் கமலப் பாத முதிரங்கொப் பளிப்பக் கானின்
மிதித்தலைந் திடுங்கொம் பொப்ப விரைவினி னடந்து சென்றார். 1.7.38

429 அயிரொழித் தரம்பொற் றேய்க்கு மறக்கொடும் பரற்கா னேகிக்
குயில்புரை சொல்லார் செல்லக் கோட்டுவாய் நிழலின் கண்ணே
யியிருந்தம் மனமுங் கண்ணு மோருருக் கண்ட தன்ன
செயிரற மகன்வா னோக்கி நின்றிடுங் செய்தி கண்டார். 1.7.39

430 கண்ணினின் மணியே யெந்தங் கருத்துறு மறிவே காமர்
விண்ணினிற் குறைப டாமல் விளங்கிய மதிய மேயிம்
மண்ணினுக் கரசே நந்த மனைக்குறு செல்வ மேயெம்
புண்ணியப் பலனே யென்னப் பூங்கொடி யெடுத்த ணைத்தார். 1.7.40



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:51

431 வடிவுறு மேனி நோக்கி மாமதி வதன நோக்கி
யுடலுறும் வடுக்கா ணேனிங் குற்றவை யுரைப்பா யென்று
கொடியிடை யலிமா கூறக் கொடுவரை முழையிற் றோன்று
மடலுறு சீய மன்ன அகுமது புகல லுற்றார். 1.7.41

432 இத்தரு நிழலி லியாங்க ளிருக்கையி லிருவர் வந்தேன்
கைத்தலம் பற்ற நின்ற காளையர் வெருவி யேகப்
பத்திர மாயென் றன்னைப் படிமிசைக் கிடத்திக் கூன்வாள்
வைத்துரங் கீண்டல் கண்டேன் மறுத்தொன்றுந் தெரிகிலேனே. 1.7.42

433 நினைவொடு மெழுந்தேன் பின்னென் னெஞ்சினில் வடுவுங் காணேன்
மனமகிழ்ந் திருவ ரும்மெய் மகிழ்ச்சியா லெனது சென்னி
தனையுறத் தடவி முத்திச் சஞ்சலம் வேண்டா நும்பாற்
கனபுது மைகளுண் டென்றோர் காரணப் பெயரு மிட்டார். 1.7.43

434 ஈதலா லனேக மாற்ற மெடுத்தெடுத் தியம்பி யென்னை
மாதவ முகம்ம தேநல் வரிசையின் மணியே யென்ன
வோதின ரோதி வானத் துறைந்திடல் பார்த்து நின்றேன்
றாதையு நீரு மென்னைத் தழுவவுங் கண்டே னென்றார். 1.7.44

435 உரைத்தவிச் செய்தி யெல்லா மூரவ ருடனு முற்ற
வரைச்சிலை சுமந்த திண்டோண் மன்னரா ரிதுவு மோசைத்
திரைக்கொடிப் பவள மன்ன சேயிழை யலிமா வுங்கேட்
டிரைத்தக மகிழ்ச்சி பொங்கி யெழுந்துதம் பதியிற் புக்கார். 1.7.45

436 வேறுவாடு மெல்லிழைப் பாதிநுண் ணிடைமயி லலிமா
கூடி வந்தவ ரனைவர்க்கு நன்மொழி கொடுத்து
நாடி நும்மனை புகுமெனத் தமர்களை நடத்தித்
தேடி டாப்பொருண் முகம்மதை மனைவயிற் செறித்தார். 1.7.46

437 வனந்த னிற்செலுஞ் சிறுவரோ டிணக்கிலார் மறியி
னினந்த னிற்றொடர்ந் தேகவு மனத்தினி லியையார்
சினந்த சின்மொழி மறந்தொரு நாளினுஞ் செப்பா
ரனந்த ரத்தவர் மனையினிற் புகுத்தியு மறியார். 1.7.47

438 சேம மாகிய பொருளினைக் காத்திடுந் திறம்போல்
வாம மாமணி முகம்மதை வளர்க்குமந் நாளிற்
றாம வொண்புயத் தினர்நசு றானிக டடஞ்சூழ்
பூம லர்ப்பொழில் குனையின்வந் தடைந்தனர் புதிதாய். 1.7.48

439 ஹபஷி நாட்டினி லுறைநசு றானிக ளானோர்
குவித ருந்தனக் கொடியலி மாவையுங் கூண்டு
கவின்ப ழுத்தொழு கியமுகம் மதுவையுங் கண்டு
செவியி ராசிய மொருவருக் கொருவர்செப் பினரால். 1.7. 49

440 நபியெ னும்பெரு முத்திரைக் குறியும்பொன் னகர்க்கும்
புவியி னுக்குமோ ரரசெனப் பொருந்திலக் கணமு
மவிரொ ளித்திரு மேனியு மவயவத் தழகு
மிவையெ லாமறிந் திவர்நபி யெனவுளத் திசைந்தார். 1.7.50



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:51

441 புனைம ணிப்புய ராரிதுக் குயிரெனப் பொருந்து
மனைவி யாகிய மயிலலி மாமுனம் வந்து
கனைத ருங்கட லமுதமென வாழ்த்தியுட் களித்து
வினைய மாய்நசு றானிகள் சிலமொழி விரித்தார். 1.7.51

442 உங்க டம்மனைக் குளதொரு குழந்தைநும் முயிர்போ
லெங்க டம்மனத் துவகையால் வளர்ப்பதற் கிசைந்தோந்
திங்கள் வாணுத லளித்தியேற் செல்வமுஞ் செருக்கும்
பொங்கு மாநிதி தருகுவ மியாமெனப் புகன்றார். 1.7.52

443 நன்று நும்மனத் தெண்ணிய வுவகையா னடுக்க
மின்றிக் கேட்பதெக் குழந்தைநீ ரியம்புமென் றிசைத்தார்
வென்றி மற்புயன் முகம்மது வெனப்பெயர் விரித்தார்
குன்று போன்முலை செவிசுட மனங்கொதித் திடவே. 1.7.53

444 புகன்ற புன்மொழி போதுநும் பதிபுகப் போது
மிகழ்ந்தி ருந்திராற் பழிவரு மூரிலெம் மினத்தார்
திகழ்ந்தி ருப்பவ ரறிகிலர் கேட்கிலோ செகுப்ப
ரகந்த னைப்புற மிடுஞ்செலும் போமென வறைந்தார். 1.7.54

445 காட்டி னிற்புஜ விளைந்தகா ரணத்தையும் ஹபஷா
நாட்டி லுற்றவர் கேட்டகா ரியங்களு நறவூ
ரேட்டி லங்கிதழ்ப் பதத்தலி மாமனத் தெண்ணிக்
கூட்டித் தாயிடஞ் சேர்ப்பதே கருத்தெனக் குறித்தார். 1.7.55

446 வருட மைந்துமோர் திங்களுஞ் சென்றது மக்கா
புரம டைந்தியா முகம்மதைப் புகழொடும் பொருவில்
அரிவை யாமினா வகத்திடைப் புகுத்தலே யறிவென்
றுரைத ரத்திற லாரிது மனங்களித் துவந்தார். 1.7.56

447 மாத வமுகம் மதும்வரி விழியலி மாவுங்
கோத றுந்துணை வரும்வழித் துணையுடன் கூடித்
தீது றுங்கொடும் பாலையுங் குறிஞ்சியுஞ் சேர்ந்த
பாதை யின்றரு நிழலிளைப் பாறினர் பரிவாய். 1.7.57

448 இறங்கி யங்கிருந் தெழுத்நிட நினைக்குமந் நேரம்
பிறங்கு மோர்கர நீடரக் கண்டனர் பெரிதா
யறங்கி டந்தொளிர் முகம்மதை காண்கில ரலிமா
மறங்கி டந்தவேற் கட்கடன் மடைதிறந் தனவே. 1.7.58

449 என்ன மாயமிங் கென்னென நெட்டுயிர்ப் பெறிந்து
வன்ன மென்மலர்க் கரநெரித் துதரத்தில் வைத்துத்
துன்னு பூங்குழல் விரிதரச் செவ்விதழ் துடிப்பக்
கன்னி மாமயில் கலங்கினர் புலம்பி கதறி. 1.7.59

450 படியின் மீதினி லோடுவர் தேடுவர் பதறிக்
கடிதிற் கன்முழை முட்செறி பொதும்பினுங் கவிழ்ந்து
நெடிது நோக்குவர் செடியறக் கிளறுவர் நிகரில்
வடிவு றும்மக வேயெனக் கூவுவர் வருந்தி. 1.7.60



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:52

451 வெய்ய கானிடை நீங்கவுங் காண்கிலன் வேறோர்
கைய லாற்பினைப் பிறரெடுத் தேகவுங் காணே
னுய்யு மாறினி யேதென வுலைந்துட லொடுங்கி
அய்ய கோமக னேவிதி யோவென வழுதார். 1.7.61

452 கவச வல்லுரங் கீண்டவர் வஞ்சனைக் கருத்தோ
ஹபஷி மாநசு றானிகண் மாயமோ வலது
புவியிற் பூதங்க ளலகைகள் செய்தொழிற் பொருளோ
வெவர்க ளிவ்விடர் செய்தவ ரெனமன மிடைந்தார். 1.7.62

453 வஞ்சி மெல்லிடை வாட்டமு நடுக்கமும் வாசக்
கஞ்ச மென்முகக் கோட்டமுங் கண்ணினீர்க் கவிழ்ப்புங்
கொஞ்சு மென்மொழி குழறிடப் புலம்பிய குறிப்பு
மஞ்சி நின்றதும் பயந்தொடுங் கியவர லாறும். 1.7.63

454 கரிய பூங்குழல் சென்னிறப் பூழ்தியிற் கரந்து
விரித ரக்கிடந் தொளிருமெய் பதைத்துவாய் வெளிறி
யெரியு நெய்யிடை யிட்டபைந் தளிரென விருந்த
வரிவை தன்வயி னெறிசெலும் பேர்கள்கண் டடைந்தார். 1.7.64

455 ஏது வந்தவை யென்றடைந் தவர்சில ரியம்பக்
கோதை யீரென துறுகுலக் களிறொரு குழந்தை
தீதி லாப்பெயர் முகம்மது வெனுஞ்சிறு வரையிப்
பாதை யின்னிழந் தேன்கொடி யேனெனப் பகர்ந்தார். 1.7.65

456 கேட்ட பேர்கடம் மனம்பயந் தறக்கெடி கலங்கிக்
காட்டி னிப்பெரும் புதுமையைக் கருத்தினிற் றௌிந்து
மூட்டும் வல்வினை பிரித்திட முடித்தவன் முறையாய்க்
கூட்டி விப்பதும் வலியதோ கூட்டுவன் கோதாய். 1.7.66

457 எனவெ டுத்தநன் மொழிகளா லிவர்கருத் தியைய
நனைத ருங்குழன் மடந்தையர் தேற்றியு நடுக்கந்
தினையி னவ்வள வாயினுந் தேறிலர் தியங்கு
மனைய காலையில் விருத்தனென் றொருத்தன்வந் தடைந்தான். 1.7.67

458 கையி லூன்றிய தடியுமோர் கயிற்கவி கையுமாய்
மெய்யெ லாநரம் பெழுந்துல ரியவிரி திரையாய்த்
துய்ய நூல்விரித் தனநரை துலங்கிடக் கூனி
நையு மென்றலை நடுக்கொடு மெலமெல நடந்தே. 1.7.68

459 வந்து தோன்றிய முதியவ னரிவைநின் மனத்தி
னொந்தி ருந்தவா றேதெனப் பூஙொடி நுவன்றார்
கந்த டர்க்கயக் களிறெனு முகம்மதைக் கானிற்
சிந்தி னேனுயிர் சிந்தவு நினைத்தன னெனவே. 1.7.69

460 திருந்து மென்மலர்க் கொடியிடை கேட்டிநின் சிந்தை
வருந்த னின்றிரு மகன்முகம் மதுவையிவ் வழியிற்
பொருந்தக் கூட்டுறுந் தெய்வமொன் றுளதியாம் புகுந்தங்
கிருந்து கேட்குவம் வம்மென நன்மொழி யிசைத்தான். 1.7.70



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:52

461 விருத்த னம்மொழி யியம்பிட விளங்கிழை யலிமா
கருத்தி லுற்றிவை யறிகுவ மெனநடுக் கானிற்
குருத்த செங்கதி ருதித்தெனக் கொடுமுடி யியற்றி
யிருத்து மாலயத் தேகின ரவன்மொழிக் கிசைந்தே. 1.7.71

462 முருகு லாங்குழன் மடந்தையர்க் காய்நரை முதியோன்
செருகு பொன்மலர்க் கோயிலிற் காவணத் தினினின்
றுருகு தன்மனப் பயத்தொடும் வாய்புதைத் தொதுங்கிப்
பொருவி லாமணி யேமுத் லேயெனப் புகழ்ந்தான். 1.7.72

463 போற்றித் தெண்டனிட் டெழுந்தொரு வரமெனப் புகன்று
கூற்ற டர்ந்தவேல் விழியௌி யவளிவள் குழந்தை
மாற்ற லர்க்கரி வடிவுறும் பெயர்முகம் மதுவை
யாற்றி னிலிழந் தாளருள் வாயென வறைந்தான். 1.7.73

464 மாது தன்மகன் முகம்மது வெனும்பெயர் சிலையின்
காதி னுட்புகக் கருத்துறக் கலங்கிமெய் நடுங்கிப்
பாதை யிற்புகு முதியவன் பதமலர் கெதியா
மோதி வீழ்ந்தது முகந்தரை படமுனங் கியதே. 1.7.74

465 சிலைம ருண்டது கண்டலி மாமனந் திடுக்கிட்
டலைவி னோடற நரைமுதி யவன்முக நோக்கிக்
கொலைகொ னீசெலு நெறிகுறு கெனக்கொழுங் கமலத்
திலையின் மேனடுத் துளியென வழியினின் றிடைந்தார். 1.7.75

466 இந்த நாளையிற் றேவத மவன்பெய ரியம்ப
வந்த போதினிற் றலைமுகங் கவிழ்ந்தது மடவா
யுந்த மைந்தனுக் குடையவன் வேறுள னொருவ
னந்த நாயக னிடத்தினி லறைகென வகன்றான். 1.7.76

467 ஆற்றி ருந்தெழுந் திருகையுஞ் சிரசினி லாக்கித்
தூற்றும் வேல்விழி நீரிடுஞ் சுவடுகண் மறைப்ப
நாற்றி சையினுங் கண்மலர் பரப்பிட நடந்து
தேற்று நன்மறை மக்கமா நகரினைச் சேர்ந்தார். 1.7.77

468 அபுதுல் முத்தலி பெனுமர சணிமனை யடுத்துச்
சுவன நாயகக் குரிசிலை வழியிடை தோற்றிப்
புவியிற் றோன்றிய துன்பமு முதியவன் புகலச்
சவிகெ டப்பெருந் தேவதந் தரைபடிந் ததுவும். 1.7.78

469 மரும லர்த்தொடைத் தடம்புயர் செவிமடற் றுளையிற்
றிருக வெந்துதீ யுமிழ்ந்தவே றிணித்தன சிவணக்
கருகி யீரலுஞ் சிந்திடத் தௌிமனங் கலங்கி
யுருகக் கூறின ரூற்றெடுத் தொழுகுநீர் விழியார். 1.7.79

470 பழுதி ருந்தசொற் கேட்டலும் படர்ந்தசெந் நெருப்பி
லொழுகு மென்மெழு காயுறு கருத்தழிந் துடைந்து
கொழும டற்செழுங் கமலமென் மலர்முகம் கூம்பி
யழுது சஞ்சலத் துறைந்தன ரப்துல்முத் தலிபு. 1.7.80



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:53

471 கலவை மான்மத மார்பகஞ் சிவந்தகட் டரளங்
குலவ வந்தவை யெவைகொலென் றினத்தவர் கூற
மலையெ னுந்திடக் கடக்கரி யுதிரம்வாய் மடுத்துண்
டுலவு வேற்கர ருற்றவை யனைத்தையு முரைத்தார். 1.7.81

472 மலைய டங்கலுந் தடவியும் வனத்தினை வகிர்ந்துந்
தொலைவிற் றீவினுஞ் சுற்றியு முகம்மதைத் தொடர்ந்து
நிலைத ருங்கதிர் படுமுனந் தருகுவ நுமது
நலித லைத்தவிர் மெனத்திசை திசைதொறு நடந்தார். 1.7.82

473 பரற்செ றிந்தகா னிடத்தினும் பருப்பத நெறியும்
விரற்பு குந்திடா வனத்தினும் வேறுசிற் றூரு
மிரைத்த பீடிகை மாடமா நகரிக ளெவையு
நிரைத்துத் தேடியுங் காண்கில மெனநிகழ்த் தினரே. 1.7.83

474 அகந்த யங்கிமெய் மறந்தெழி லப்துல்முத் தலிபு
வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்தகஃ பாவிற்
புகுந்து சுற்றிவந் தடிபணிந் திறைஞ்சிவாய் புதைத்து
நெகிழ்ந்த நெஞ்சினோ டாகுலத் தயருமந் நேரம். 1.7.84

475 தரையில் வானகத் திருந்திறங் கியதொரு சத்தம்
விரைக மழ்ந்திடுங் ககுபத்துல் லாவிற்றென் மேல்பா
னிரைம லர்த்தடத் தோடையின் வாழையி னிழற்கீ
ழரிய மாமறை முகம்மதங் கிருப்பதென் றதிர்ந்தே. 1.7.85

476 அந்த ரத்தினின் முழங்கிய மொழிவழி யறிந்து
சிந்தை கூரவத் திசையினிற் சிலருடன் செலும்போழ்
திந்து தண்கலை யெண்ணிரண் டுடனிறைந் திறங்கி
வந்தி ருந்ததொத் திருந்தன ரெழின்முகம் மதுவே. 1.7.86

477 கதலி நீழலி லிருந்தொளிர் குரிசிலைக் கண்டென்
மதலை தம்மிரு கண்மணி யேமுகம் மதுவே
யதிரு மைக்கடற் றரளமே யெனவட லரச
ரிதய மீதுறக் களித்துத்தம் மிருகரத் தெடுத்தார். 1.7.87

478 அடைய லர்க்கரி யேறெனு மப்துல்முத் தலிபு
கொடிமி டைந்தசை புரிசைசூழ் நகரினைக் குறுகிக்
கடிம லர்க்குழ லாமினா செழுமலர்க் கரத்தில்
வடிவின் மிக்குயர் முகம்மதைக் கொடுத்தனர் மகிழ்ந்தே. 1.7.88

479 கண்ணி ருந்தொளிர் மணியெனக் கண்டுகண் களித்துட்
புண்ணி ருந்தென விடுந்திடுந் துன்பமும் போக்கி
வண்ண வார்குழ லாமினா முகம்மதை வாழ்த்தி
யெண்ண மொன்றுநம் மிடத்திலை யெனச்சிறந் திருந்தார். 1.7.89

480 அடர்ந்த செவ்வரிக் கொடிபட ரரிவிழி யலிமா
தொடர்ந்த தன்மனத் திருட்களி வாளினாற் றுணித்து
மடந்தை யாமினா மனையினில் வரமலர்க் கரத்தா
லிடம்பெ றத்தழீஇ யிருவரு மொருவரா யிருந்தார். 1.7. 90

481 போது லாங்குழ லாமினா வெனுமணிப் பூவைச்
சாதெ னுங்குலத் தாரலி மாவுறத் தழுவி
யாத ரத்தொடு முகம்மதை யெடுத்துமுத் தாடிச்
சீத வொண்பொழிற் குனைனெனும் பதியினைச் சேர்ந்தார். 1.7.91

இலாஞ்சனை தரித்த படலம் முற்றிற்று.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:53


1.8. புனல் விளையாட்டுப் படலம்


482 அலத்தக மலர்ப்பதந் தாமி னாவெழிற்
சிலைத்தடப் புயமுகம் மதுமெய்ச் சீர்பெறக்
கலைத்தட மதியென வளரக் கண்டுறு
நலத்தரு கண்களித் திருக்கு நாளினில். 1.8. 1

483 பொறிநிக ராமினா வென்னும் பூங்கொடி
யறிவக முகம்மதைக் கூட்டி யாதிநூ
னெறிதரு மக்கமா நகரை நீங்கியே
செறிவள மதினமா நகரிற் சென்றனர். 1.8.2

484 தன்னுயி ரனையமுன் னவரிற் சார்ந்தவர்
பொன்னடி வணங்கிய பொருவி றங்கையை
யென்னுயி ரென்னுயி ரெனத்தழீ இக்குல
மன்னுயிர் முகம்மதை யெடுத்து வாழ்த்தினார். 1.8.3

485 பிடிநடை யமினா பெரிய தந்தைதம்
வடிவுறு மைந்தரு மன்னு சின்னையர்
குடிவளர்த் திடுங்குலக் கொற்ற வேந்தரு
மடிகளென் றகுமதி னடியைப் போற்றினார். 1.8. 4

486 அனநடைச் சின்மொழி யாமி னாதிருத்
தனையருந் தம்பிய ரியாருந் தன்குல
மனைமயி லனைவரு மனம கிழ்ச்சியாற்
கனைகட லமுதென நபியைக் காமுற்றார். 1.8.5

487 இப்பெரு முவகையுற் றிருப்ப மன்னெறிக்
கொப்பரு மதீனமென் றோது மூரிடைத்
துப்புறழ் மதுரவாய்ச் சிறுவர் சூழ்தர
மைப்புயன் முகம்மதோர் வாவி நண்ணினார். 1.8.6

488 பண்ணரு மறைநபி பாரிற் றோன்றிய
நண்ணிய புனல்விளை யாட நாடுநா
ளெண்ணுற வடுத்ததென் றிறங்கி வானதி
மண்ணினிற் குடியிருந் தனைய வாவியே. 1.8.7

489 வடுவிழித் தடமுலை யார்கண் மாமத
னடறரு முசைனயி னார்தம் மாருயிர்க்
கடகரி யெனுமபுல் காசிம் செல்வம்போ
லிடனறப் பெருகியங் கிருந்த வாவியே. 1.8.8

490 சேடுறு முகம்மது செவ்வி வாய்ப்பநீ
ராடுவ திஃதென வாவி யம்புயம்
பாடுறு மாசணு காது பைந்துண
ரேடலர் போர்வைபோர்த் திருந்த தொத்ததே. 1.8.9

491 கரைதவழ் தென்றலங் காலி னால்விரை
சொரிமலர் வாவிநீ ரசைந்து தோன்றுவ
தரிதிரைக் கரங்களிற் சங்க மார்த்திட
விருகரை முத்தெடுத் தெறிதல் போலுமே. 1.8.10

492 தேன்மலர்ச் சண்பகஞ் செறிந்த நீழலும்
பானிறக் கதிர்மணற் பரப்பு மன்னமுஞ்
சூன்முதிர் குடவளைத் தொனியும் வைகிய
கான்மலர் வாவிகண் களிப்ப நோக்கினார். 1.8.11



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:54

493 மணிமுர சதிரறா மதீன மாநகர்த்
திணிபுய வரசர்கள் செல்வ ரியாவரும்
பணிமணி முகம்மது நிறைந்த பங்கயத்
தணிதிகழ் வாவிநீ ராட லுற்றனர். 1.8.12

494 நிறைதட மசைதலா னிகரி லாமுத
லிறையவன் றூதர்தம் மிடத்தின் மூழ்குறக்
குறைபடா வரியமெய் குளிரு மோவென
நறைபுனல் கலங்கியுண் ணடுங்கல் போன்றதே. 1.8.13

495 பம்புநீர் வாவிகண் குளிர்ந்திப் பாரிடை
யெம்பெரு மானம திடத்தின் மூழ்கலாற்
செம்பொனா டவர்க்குறாச் சீர்பெற் றோமெனக்
கம்பித மம்புயக் கரங்கள் காட்டுமே. 1.8.14

496 தங்கிய புனலிடை குளிப்பத் தத்துநீ
ரெங்கணுங் கரைதவழ்ந் திழிந்து தோன்றுவ
கங்கைதன் னுள்ளகங் களிப்புற் றானந்தம்
பொங்கியே யுடற்புறம் பொசிவ போன்றதே. 1.8.15

497 வடிவுறு முகம்மது வாவித் தண்புன
லிடைகுளித் துயர்தர விலங்கும் வாண்முகம்
படிமிசை யாயிரங் கலைகொள் பான்மதி
கடலிடை முளைத்தெழுங் காட்சி போன்றதே. 1.8.16

498 வருந்திமெய் நடுக்கொடு மரைகண் மூழ்குவ
தருந்தவப் பேறெனு மகும தின்றிருக்
கருந்தடங் கண்முகந் தாள்கைக் கொப்பெனப்
பொருந்துறோ மெனவனம் புகுதல் போன்றதே. 1.8.17

499 அகுமது வாவிநீ ராடல் காண்டலுஞ்
சகமகிழ் தடக்கரைத் தருக்க டேமலர்
வகைவகை சொரிந்தன வெற்றி வானவர்
புகழொடும் பொன்மலர் பொழிவ போன்றவே. 1.8.18

500 மதுமலர்த் தேனையுண் டிருந்த வண்டினம்
புதுமணச் சுரும்பொடு மிசைத்த பொங்கிசை
சதுமறை முகம்மது தழைத்து வாழ்கவென்
றதிவிதப் புகழெடுத் தறைத லன்னதே. 1.8.19

501 பின்னிய தடத்தரு சினையிற் பேடொடு
மன்னிய குயிலினம் வாய்விட் டார்ப்பது
கன்னலஞ் சுவைக்கலி மாவை நந்நபிக்
கின்னண மியம்புமென் றிசைத்தல் போலுமே. 1.8.20

502 பொன்முடி வேந்தர்கள் புதல்வர் தம்மொடு
மன்னவர் முகம்மதும் வாவி நீர்குளித்
தன்னமென் றூவியி னரிய வெண்டுகின்
மின்னினைப் பொதிந்தென வரையில் வீக்கினார். 1.8.21

503 கணமணிக் கலன்பல வணிந்து கள்ளறா
மணமலர் மாலிகை சூடி வான்றொடு
பணர்தரு பாசடைத் தருவின் பாலுயிருத்
துணைவரோ டரியெனத் தோன்றல் வைகினார். 1.8.22

504 வரிவளைத் தடம்புனை மதீன மாநகர்க்
குரியவர் குபிரினி லுறையெ கூதிக
ளரிதினிற் றடக்கரை யடுத்துப் பூமழை
சொரிதல்கண் டகுமதைச் சூழ்ந்து நோக்கினார். 1.8.23



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக