புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_m10ஜெயலலிதா மாறிவிட்டாரா!? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா மாறிவிட்டாரா!?


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 11:06 am






இரண்டு அரசியல் தலைவர்கள் இரு துருவங்களாக இருந்துகொண்டு, தமிழகத்தை எதிரெதிர் திசைகளில் இழுத்துச் செல்லும் அவலத்திற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் விடிவு பிறக்கவில்லை. காமராஜர்-அண்ணா, கருணாநிதி-எம்.ஜி.ஆர். ஆகிய இணைகளில் இல்லாத போட்டி அரசியல் 1989ல் கருணாநிதி-ஜெயலலிதா துவக்கி வைத்தனர். ஒவ்வொரு ஐந்து ஆண்டு இடைவெளிகளிலும் தமிழகம் என்ற மாநிலத்தின் கடிகாரம் இடப்புறமும் வலப்புறமும் மாறி மாறி சுற்றுகிறது. சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்குச் சென்றாவது 200 சொச்சம் கோடிகளைப் பழைய பேப்பர் கடைக்குப் போட்டே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் இந்த அவலத்திற்கான சமீபத்திய உதாரணமாகியிருக்கிறது.

கடந்த தி.மு.க. அரசு கொண்டு வந்த இலவச டி.வி. திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்ததோடு நிற்காமல், ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டுள்ள டி.வி.க்கள் அனாதை இல்லங்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது இங்கு எவ்வளவு அசிங்கமான அரசியல் நடக்கிறது என்பதற்கு சாட்சி. அரசுத் திட்டங்களுக்கு முதல்வரின் பெயரை வைத்து தி.மு.க. ஒரு மோசமான அரசியலை அரங்கேற்றியது என்றால், அத்தகைய திட்டங்களில் சிற்சில மாற்றங்களைச் செய்து அவற்றைத் தங்களின் திட்டங்கள் போல மாற்றி அதற்கு சரியாக ஈடு கொடுக்கிறது அ.தி.மு.க அரசு. கடந்த 20 வருடங்களாக சந்தர்ப்பவாத அரசியலே அரங்கேறி வருகிறது. இதன்கீழ் செய்கிற காரியங்களைவிட, யார் செய்தார்கள் என்ற பெயர்ப் பலகை முக்கியமானது. சென்னை கோயம்பேடு புதிய போக்குவரத்து நிலையத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் தனித் தனியாக உள்ள கல்வெட்டே சாட்சி. ஒன்று, பணித் துவக்கத்திற்கானது. மற்றொன்று, பணிகள் முடிந்து திறந்து வைத்ததற்கானது. வரலாறு முக்கியம் அமைச்சரே!

ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே இந்தத் தேர்தல் முடிவிலிருந்து கற்க வேண்டிய ஒரு பாடத்தைக் கற்கவில்லை. தி.மு.க அரசாங்கம் கொண்டு வந்தாலும் அந்த மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு செய்தததாகவே மக்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தி.மு.க. ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினாலும் அந்தக் கட்சியின் செயல்பாட்டை வேறு காரணிகளின் அடிப்படையில் தீர்மானித்தார்கள். அதைப் பார்த்த பிறகும்கூட, திட்டங்களை அங்குமிங்கும் மாற்றிவிட்டு அதைத் தங்கள் திட்டம் என நம்பி மக்கள் எதிர்காலத்தில் ஓட்டு போடுவார்கள் என அ.தி.மு.க. அரசு நினைக்கும் அபத்தம் சிரிப்பை வரவழைக்கிறது. பழைய திரைப்படங்களில் முகத்தில் மரு ஒட்டினாலே மாறு வேடமாகிவிடும் என்பது போல, முதல்வர் ஜெயல்லிதாவின் ஆட்சியில் இலவச வீடுகள் திட்ட்த்தை பசுமை வீடுகள் திட்டம் என மாற்றிவிட்டால் அதற்கான பெருமை தனக்குக் கிடைக்கும் என்று குழந்தைத்தனமாக நினைக்கிறார்கள். எல்லாவற்றிலும் காட்டும் அவசரத்தை இதிலும் காட்டும் தமிழக ஊடகங்கள் சமச்சீர் கல்விக் கொடுமையை நிகழ்த்தும் முன்பே ஜெயலலிதா மாறிவிட்டார் என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டன.

அ.தி.மு.க. தலைவி ஜெ.ஜெயலலிதா முதல்வராகி சரியாக ஒரு மாதம்தான் ஆகிறது. அதற்குள் தமிழகத்தின் 300 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களை இடமாற்றம் செய்துவிட்டார். 175 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் கணிசமானவர்கள் இடம் மாறியிருப்பார்கள். இவர்களில் பலர் மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சர்களின் தலைக்கு மேல் தொங்கிய கத்தி இப்போது அதிகாரிகளின் தலைக்கு மேல் தொங்குகிறது. உள்துறைச் செயலாளர் போன்ற முக்கியமான பொறுப்புக்களில் இருப்பவர்கூட இரு முறை மாற்றப்பட்டுவிட்டார். முந்தைய ஆட்சியின் போது அமைச்சர்களின் ஜாதகத்தைப் பார்த்து, ராகு கேதுவின் ஏற்ற இறக்கங்களின்படி பதவியில் அமர்த்தப்பட்டார்கள், அகற்றப்பட்டார்கள் என்ற பேச்சுக்கள் இருந்தது உண்டு. இந்த முறை அதிகாரிகளின் கிரக சஞ்சாரங்கள் அவர்களின் நியமனத்தில் விளையாடுகிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

ஜெயலலிதா மாறவே இல்லை என்று சான்றிதழ் கொடுப்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவுக்கு அவர் மாறிவிட்டார் என்று சான்றிதழ் கொடுப்பதும் அபத்தமானது. ஒரு ஆட்சியையும் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரையும் மதிப்பிடுவதற்கு ஒரு மாதம் என்பது மிகக் குறைவான அவகாசம். முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை வென்றதோடு தனது வேலை முடிந்துவிட்டது என்று நினைத்தாலாவது இந்த ஒரு மாதத்தை ஒரு ஆரம்ப அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 2001-06ல் இல்லாதபடி இந்த முறை புத்திசாலித்தனமாக தில்லி அரசியலையும் தனக்கு சாதகமாகத் திருப்பிய பிறகே தனக்கு முழுமையான வெற்றி கிடைத்ததாக அர்த்தம் என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். 1991-96ல் தனக்கு எத்தனையோ சிக்கல்கள் வந்தாலும் மத்தியில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவின் ஆசீர்வாதம் இருந்ததால் அவர் தப்பிப் பிழைத்தார். 2001-06ல் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மத்தியிலிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினர் அன்றைய அ.தி.மு.க. ஆட்சிக்கு பல நெருக்கடிகளைக் கொடுக்க முடிந்தது. தமிழகத்தை ஆள்வதற்கான உண்மையான ரகசியம் மத்திய அரசியலில் இருக்கிறது என்பதை ஜெயலலிதா இப்போது தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார். அதனால் மத்தியில் தனது செல்வாக்கை உறுதி செய்த பிறகுதான் அவரின் இப்போதைய நிஜ முகம் எது என்பது குறித்து நாம் ஒரு முடிவிற்கு வர முடியும். விஜயகாந்தை அவர் என்ன செய்வார் என்பதற்கும் அப்போதுதான் பதில் கிடைக்கும்.

மத்தியில் இப்போது ஒரு குழப்பமான நிலை உள்ளது. காங்கிரசுக்கு இன்னமும் மூன்றாண்டுகால ஆட்சிக் காலம் இருந்தாலும் அது மீண்டும் ஜெயிக்கப் போவதில்லை என்ற மனநிலை நிலவுகிறது. இந்தச் சூழல் பா.ஜ.க, மூன்றாவது அணி இருவரில் யாருக்கு சாதகமாகப் போகும் அல்லது காங்கிரசே விட்டதைப் பிடிக்குமா என்ற கணிப்புகளின் அடிப்படையில் அவர் ஒரு தேர்வைச் செய்யலாம். இப்போதே தி.மு.க. காங்கிரசுடன் வெட்டிக்கொண்டு வெளியேறினால் அ.தி.மு.க. அந்த இடத்தில் அமர்ந்துகொள்ளும் என்று தி.மு.க.வினர் அஞ்சுவதாகப் பேசப்படுகிறது. ஐ.மு.கூ. அமைச்சரவையிலிருந்து வெளியேறும் முடிவைக் கடந்த வாரம் தி.மு.க. கைவிட்டதற்கு அதுதான் காரணம் என்ற பேச்சுக்கள் உண்மையானால் ஜெயலலிதா தேசிய அளவில் காய் நகர்த்தல்கள் செய்கிறார் என்பதும் உண்மை. தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க.வும் அதன் ஸ்பெக்ட்ரம் ஊழலும்தான் காரணம் என்று கூறியிருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரபூர்வ இதழான சந்தேஷ். "தி.மு.க.வைத் தாண்டி சிந்திக்கும்படி" அந்த இதழ் கட்சிக்கு "ஆலோசனையும்" வழங்கியிருக்கிறது. தி.மு.க.வைத் தாண்டி அவர்கள் ரொம்பவும் சிந்திக்க வேண்டியதில்லை. ஒரே ஒரு எழுத்து தாண்டி சிந்தித்தால் போதுமானது.

நன்றி: உயிரோசை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 14, 2011 11:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 14, 2011 11:42 am

அவர் எப்போதும் மாறமாட்டார் ,,அவர் அவராகத்தான் இருப்பார் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 1:19 pm

ரபீக் wrote:அவர் எப்போதும் மாறமாட்டார் ,,அவர் அவராகத்தான் இருப்பார் !!
அதான் நிருப்பிக்கிறாரே! தினமும் கோபம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 14, 2011 2:34 pm

கே. பாலா wrote:
ரபீக் wrote:அவர் எப்போதும் மாறமாட்டார் ,,அவர் அவராகத்தான் இருப்பார் !!
அதான் நிருப்பிக்கிறாரே! தினமும் ஜெயலலிதா மாறிவிட்டாரா!? 44296

ஜெயலலிதா மாறிவிட்டாரா!? 359383



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 7:52 am

ஜெ நிச்சயம் மாறிவிட்டார்.
எப்படியென்றால் ஏற்கனவே எதிர்கட்சி தலைவராக இருந்து இப்போது முதலமைச்சராக மாறிவிட்டார். மற்றபடி ஒன்றும் மாற்றமில்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக