புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:29

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
72 Posts - 65%
heezulia
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
264 Posts - 45%
heezulia
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_m10ஆயுர்வேத வைத்திய முறைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுர்வேத வைத்திய முறைகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 6 Jun 2011 - 8:25

பிழிச்சல் சிகிச்சை
இப்போது அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றினாலும், பின்விளைவு இல்லாத நிரந்தர ஆரோக்கியத்தை என்றும் தரக்கூடியது ஆயுர்வேதம் மட்டுமே என்கின்றனர் ஆயுர்வேத வைத்தியர்கள்.

ஆமாம் ஆயுர்வேத வைத்தியத்தின் வரலாறு தெரியுமா?

"வாழ்க்கையின் விஞ்ஞானம்" என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. மிக நீண்ட வரலாறு கொண்ட ஆயுர்வேதம் பல்வேறு நிலைகளில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.

வேத காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய ஆயுர்வேதம் இந்தோனேஷியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிற நாடுகளில் இந்திய ஆயுர்வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதை தங்களுடைய தேவைகளுக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொண்டனர்.

இன்றைய உயரிய வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஓலைச்சுவடிகளில் பெரும்பாலும் எழுதி வைக்கப்பட்ட இந்திய ஆயுர்வேத ரகசியங்கள் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

நோய் வரும் முன் காப்பதையும், நோய் வந்த பின் என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பழங்கால ஆயுர்வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன.

நோய்கள் தோன்றி மனிதகுலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும் தீவிரமாக யோசித்ததன் விளைவுதான் ஆயுர்வேதம் பிறப்பு. பரத்வாஜர் என்ற ரிஷி தேவேந்திரனிடம் ஆயுர்வேத முறையைக் கற்று, அதை மற்ற ரிஷிகளுக்கு கற்பித்தார். அவர்கள் தங்களது சீடர்களுக்கு அதை எடுத்துரைத்தனர். ஆயுர்வேதம் பற்றிய நூல்களும் எழுந்தன.

புனர்வசு ஆத்திரேயர் என்ற ரிஷியின் சீடரான அக்னி வேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதையே ஆயுர்வேதத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்த அக்னிவேச சம்ஹிதையே "சரக சம்ஹிதை" என்று அழைக்கப்படுகிறது.

ஆயுர்வேத நூல்களில் மற்றொரு மிகச் சிறந்த நூலாகத் திகழ்கிறது, சுஷ்ருதரால் இயற்றப்பட்ட "சஷ்ருத சம்ஹிதை". புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டவர் இந்த சுஷ்ருதர்.

- இப்படித்தான் ஆயுர்வேதம் தோன்றி வளர்ந்துள்ளது.

இதே ஆயுர்வேத முறையை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நம் நாட்டவரை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால்தான், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் கேரளாவுக்குச் சென்று கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துப் புதுப்பொலிவோடு திரும்புகின்றனர். இதனால், ஆரோக்கிய சுற்றுலாவில் (Healthu Tourism) முதன்மையாகத் திகழ்கிறது கேரளா.

கேரளாவில் அப்படி என்ன ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கிறார்கள்?

அப்யங்க ஸ்வேதனா
மிக எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல - ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.


பிழிச்சில்
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலி மற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்சினைகள் இந்த சிகிச்சையால் விலகும்.



தாரா சிகிச்சை
தாரா
ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்... போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.


நவரக்கிழி
பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்மை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகின்றன.

நஸ்யம்
இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன், பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.


உத்வர்த்தனம்
இது மசாஜ் முறையிலான சிகிச்சை. மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.

- வருடம் முழுவதும் உழைத்து உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கொஞ்சம் அதிகச் செலவுடைய சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக்கூடியது என்பதால் தாராளமாக எடுத்துக் கொள்ள முன்வரலாம்.அதற்காகப் போலி ஆயுர்வேத சிகிச்சை மையங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது.

இப்போதெல்லாம் கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவுக்குச் சென்று இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால், அங்குள்ள இயற்கையோடு ஒன்றி லயிக்கலாம். கூடுதல் பலனும் கிடைக்கும்.


எனவே.. இந்த கோடை காலத்தில் கேரளாவுக்கு ஒருமுறை சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துத்தான் பாருங்களேன்...


jskpondy




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 6 Jun 2011 - 8:38

பகிர்ந்தமைக்கு நன்றி தாமு சூப்பருங்க
தாமு wrote:
இந்த கோடை காலத்தில் கேரளாவுக்கு ஒருமுறை சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துத்தான் பாருங்களேன்...


நிச்சயம் சென்று வருகிறேன் தாமு அதற்கான பயண செலவை நீங்கள் ஏற்றுகொண்டால் புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 6 Jun 2011 - 10:43

பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon 6 Jun 2011 - 11:06

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆயுர்வேத வைத்திய முறைகள் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 6 Jun 2011 - 11:06

சிகிச்சை முறைகள் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது! ஆனால் பணத்தைக் கறந்துவிடுவார்களே தாமு!



ஆயுர்வேத வைத்திய முறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 6 Jun 2011 - 11:36

முரளிராஜா wrote:பகிர்ந்தமைக்கு நன்றி தாமு சூப்பருங்க
தாமு wrote:
இந்த கோடை காலத்தில் கேரளாவுக்கு ஒருமுறை சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துத்தான் பாருங்களேன்...


நிச்சயம் சென்று வருகிறேன் தாமு அதற்கான பயண செலவை நீங்கள் ஏற்றுகொண்டால் புன்னகை
நானும் இதையே சொல்ல நினைத்தேன். தயாள ப்ரபோ தாமு வாழ்க வாழ்க...எனக்கும் ஒரு டிக்கெட்... எங்க வீட்ல 5 டிக்கெட்பா...




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆயுர்வேத வைத்திய முறைகள் 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 6 Jun 2011 - 16:30

சரி போட்டுட்டா போச்சு..... டிக்கட்டதான் ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக