ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

+2
உதயசுதா
சிவா
6 posters

Go down

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Empty விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

Post by சிவா Wed Jun 15, 2011 6:37 pm

எதிர்பாராமல் நடப்பவை விபத்துகள். விலை மதிப்பற்ற உயிர்களை விபத்தில் பறிகொடுக்காமல் காக்க உதவுவது மருத்துவம் மட்டுமல்ல. காலம் தவறாமல் செய்யும் முதலுதவியும் தான். முதலுதவி என்பது மருத்துவர்களால் அளிக்கப்படுவதல்ல. ஆபத்துக் காலத்தில் சம்பவ இடத்தில் இருக்கும் யாரும் முதலுதவி அளிக்கலாம். பிறகு மருத்துவர் அவசியமான சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றுவார். ஒரு மனிதருக்குச் செய்யும் முதல்உதவி என்பது மிக முக்கிய உதவி.

காயத்தின் தன்மை மற்றும் அதன் கடுமையை உணர்தல், பாதிக்கப்பட்டவரின் மூச்சு, இருதயப் பணிகளை கவனித்து அவற்றில் ஏற்பட்ட கோளாறுகளுக்கு ஏற்ப கட்டுப்படுத்தும் முறையை அறிதல், ரத்தப்போக்கை நிறுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கது. காயங்களுக்கு கட்டுப்போடுதல், எலும்பு முறிவின்போது பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் கையாளுதல், பாதிக்கப்பட்டவர்களை ஒழுங்காக தூக்குதல், வேண்டாத துணிகளை அகற்றுதல், வாகனத்தில் ஏற்றும் முறையை தெரிந்து வைத்திருத்தல் போன்றவைகளும் முதலுதவி செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.

விபத்தில் அடிபட்டவரை தூக்கும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். காயத்தின் தன்மை, ரத்தப்போக்கு, எலும்பு முறிவை கவனித்து அதிக அழுத்தம் கொடுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். படுகாயம் அடைந்தவர்களை குறைந்தது 3 பேர் சேர்ந்து தூக்கி உதவ வேண்டும். எந்த பாகமும் பிடிமானம் இல்லாமல் வளையும்படியாக தூக்கக்கூடாது. கூடுமான வரையில் தூக்குக்கட்டில் கொண்டு காயமடைந்தவரின் உடலை தூக்குவது சிறந்தது. கிடைக்கும் கம்புகளைக் கொண்டு தற்காலிகமாக டோலி உருவாக்கி செயல்படுவது சிறப்பாகும்.

காயங்களில் இருந்து குருதி வெளியேறும். இதன் வழியே கிருமிகள் நுழைந்து காயத்தை பெரிதாக்கி, வேறு வியாதிகளையும் உருவாக்கக்கூடும். எனவே சிறிதளவு ரத்தப்போக்கு என்றால் கட்டுப்போடுவதன் மூலம் தடுத்து விடலாம். அதிக ரத்தப்போக்கை தடுக்க முதலில் காயத்திற்கு மேல் விரல்களால் அழுத்திப்பிடித்து சும்மாடு (பட்டைவார்) கட்ட வேண்டும். ரப்பர் பட்டை குழாய், இடுப்பு பெல்ட், டை ஆகியவை கொண்டு பட்டைவார் கட்டலாம். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பட்டைவாரை தளர்த்தி ரத்தஓட்டத்திற்கு வகை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தசை செல்கள் பாதிக்கும்.

எலும்பு முறிவு பார்வைக்குத் தெரியாது. வீக்கம், அசைக்க முடியாத வலியை வைத்து எலும்பு முறிந்த இடத்தை கண்டுபிடிக்கலாம். பாதித்த இடத்தில் கொதித்து ஆறிய தண்ணீரில் நனைத்த பஞ்சால் சுத்தம் செய்ய வேண்டும். எலும்பு சதையை கிழித்து வெளியே தெரிந்தால் பெருங் காயம். இத்தகைய பாதிப்பு கொண்டவர்களை இடம் மாற்றும்போது கவனமாக இருக்க வேண்டும். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். எலும்புகள் அசையாமல் இருக்க மரப்பட்டைகள் வைத்து பஞ்சு, துணிகொண்டு கட்டுப்போடலாம். மரப்பட்டைகளுக்குப் பதில் சாதுரியமாக வேறு பொருட்களையும் பயன்படுத்தலாம்.

மின் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முதலில் மின்தடை செய்யுங்கள். முடியாவிட்டால் ரப்பர் செருப்புகள் அணிந்து, மரக்கட்டை மீது நின்றுகொண்டு கயிறு, சாக்கு கொண்டு பாதிக்கப்பட்டவரை மின்தாக்குதலில் இருந்து விடுவிக்க வேண்டும். மூச்சு தடைபட்டால் வாயால் ஊதி செயற்கை சுவாசமூட்டலாம். இதயதுடிப்பை சீராக்க மார்பில் கைகளால் அழுத்த வேண்டும். தோல் கருகிய இடங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரினால் நனைத்து அதேநீரில் தோய்த்த துணியால் கட்டு போடுங்கள்.

விபத்துகளில் சிக்குபவர்களுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்படலாம். அப்போது செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். முதலில் அவரது உடைகளை தளர்த்தி மார்பை அழுத்தமாக தேய்த்துவிடவும், பிறகு குப்புற படுக்கவைத்து கைகளை அவரது தலைக்குமேல் குவித்து வைக்கவும். பிறகு சுவாசமளிப்பவர் தலைப்பக்கமாக அமர்ந்து பின்புஜத்தின் அடி முதுகை அழுத்தம் கொடுக்கவும். பிறகு ஆளை நிமிர்த்தியும், கீழ்நோக்கி சாய்த்தும் சுவாசம் கொடுக்கலாம். வாயில் ஊதுதல், மூக்கில் ஊதுதல் முறையிலும் செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலில் அவர்கள் குடித்த தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இதற்கு தலையையும், தோள்களையும் முன்னோக்கி வளைத்தபடி அழுத்த வேண்டும். பிறகு குப்புற படுக்க வைத்து, கால்களை சற்று உயரமாக வைக்க வேண்டும். இதனால் தண்ணீர் வெளியேறும். வயிற்றின் இருபுறமும் கைகளை வைத்து அழுத்தியும் வெளியேற்றலாம். தொண்டைக்குள் விரல் விட்டு வாந்தி எடுக்க வைக்கலாம். மூச்சுத்தடை இருந்தால் செயற்கை சுவாசமூட்டலாம். மின்னல் தாக்கியவர்களுக்கும் சுவாசமூட்டி சிகிச்சைக்கு கொண்டு செல்லலாம்.

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவரை படுக்க வைக்காமல் உட்கார வைத்து பின்புறம் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். சுற்றிலும் கூட்டம் கூடி நிற்கக்கூடாது. கழுத்து, இடுப்பு உடைகளை தளர்த்த வேண்டும். புகைமூட்டத்தால் மூச்சடைப்பு ஏற்பட்டால் ஜன்னல், கதவுகளை திறந்து காற்றோட்டமான இடத்துக்கு கொண்டு செல்லுங்கள். புகை மூட்டத்துக்குள் செல்ல வேண்டி இருந்தால் சுத்தமான துணியை நனைத்து வாய், மூக்கை கட்டிக்கொண்டு நுழையவும். குனிந்து தவழ்ந்த நிலையில் வருவது விஷவாயுக்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.

தீ விபத்தின்போது கோணி அல்லது போர்வையால் மூடி தீயை அணைக்கலாம். சூடான பாத்திரம், எண்ணை தெறித்தலால் கொப்புளங்கள் ஏற்பட்டால் அவற்றை கிள்ளிவிடக்கூடாது. ஆன்டிசெப்டிக் மருந்துகளை தடவுங்கள். தேன், முட்டை வெள்ளைக்கரு தடவலாம். கடுமையான தீக்காயம் ஏற்பட்டால் காயத்தை காற்றுபடாமல் மூட வேண்டும். கருகிய துணி உடலுடன் ஒட்டியிருந்தால் அகற்ற வேண்டாம். சமையல்சோடா சேர்த்து கொதிக்க வைத்த நீரில் சுத்தமான துணியை நனைத்து புண்ணில் கட்டலாம். காயம்பட்டவருக்கு உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி கொடுக்க வேண்டும்.

தினதந்தி


விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Empty Re: விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

Post by உதயசுதா Wed Jun 15, 2011 6:41 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் சிவா இது
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா


விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Uவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Dவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Aவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Yவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Aவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Sவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Uவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Dவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Hவிபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Empty Re: விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

Post by முரளிராஜா Wed Jun 15, 2011 8:11 pm

பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Empty Re: விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 15, 2011 10:16 pm

பயனுள்ள தவகல் அண்ணா... நன்றி
நடந்து செல்லும் போது சாலையின் வலது புறம் செல்ல வேண்டும் அப்பொழுது தான் முன்னால் வரும் வாகனங்களை பொறுத்து நாம் ஒதுங்கி செல்ல முடியும் இடது புறம் நடந்து சென்றால் பின்னால் வரும் வாகணங்களை அறியாமல் விபத்தில் சிக்க நேரிடும்.வாகணங்களும் இடது புறம் வரும் நாமும் இடது புறம் நடந்து சென்றால் பின்னால் வரும் வாகணங்களை பார்க்க முடியாது இதனால் நாம் சரியாக சென்று கொண்டிருந்தாலும் பின்னால் வரும் வாகணங்களால் விபத்து ஏற்பட்டு விடும்.இதே வலது புறம் செல்லும் போது எதிரே வரும் வாகணத்தை நம்மால் பார்க்க இயலும் அதனால் வாகணம் நம்மை நோக்கி வரும் போது அதற்க்கு ஏற்றாற்போல் நாம் சற்று விலகி செல்ல முடியும்-வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற சென்ற போது அவர்கள் கூறிய தகவல்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Empty Re: விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

Post by தாமு Thu Jun 16, 2011 6:33 am

பயனுள்ள தவகல் அண்ணா...



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Empty Re: விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

Post by மகா பிரபு Fri Jun 17, 2011 10:06 am

ரா.ரமேஷ்குமார் wrote:பயனுள்ள தவகல் அண்ணா... விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! 678642
நடந்து செல்லும் போது சாலையின் வலது புறம் செல்ல வேண்டும் அப்பொழுது தான் முன்னால் வரும் வாகனங்களை பொறுத்து நாம் ஒதுங்கி செல்ல முடியும் இடது புறம் நடந்து சென்றால் பின்னால் வரும் வாகணங்களை அறியாமல் விபத்தில் சிக்க நேரிடும்.வாகணங்களும் இடது புறம் வரும் நாமும் இடது புறம் நடந்து சென்றால் பின்னால் வரும் வாகணங்களை பார்க்க முடியாது இதனால் நாம் சரியாக சென்று கொண்டிருந்தாலும் பின்னால் வரும் வாகணங்களால் விபத்து ஏற்பட்டு விடும்.இதே வலது புறம் செல்லும் போது எதிரே வரும் வாகணத்தை நம்மால் பார்க்க இயலும் அதனால் வாகணம் நம்மை நோக்கி வரும் போது அதற்க்கு ஏற்றாற்போல் நாம் சற்று விலகி செல்ல முடியும்-வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற சென்ற போது அவர்கள் கூறிய தகவல்
இது சட்டப்படி தவறாச்சே??
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Empty Re: விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

Post by மகா பிரபு Fri Jun 17, 2011 10:08 am

முதலுதவி பற்றிய இந்த கட்டுரையை அணிவரும் கண்டிப்பாக படிக்கவும்..

http://www.eegarai.net/t58251-topic
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்! Empty Re: விபத்துகள் பற்றி அறிந்துகொள்ளுவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum