ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை

4 posters

Go down

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Empty மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை

Post by சிவா Wed Jun 15, 2011 12:41 pm

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை மரணத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று முதல்-அமைச்சர் பிரிவில் அவரது மகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

4 மகள்கள்

சென்னை மாங்காடு பஜார் தெருவைச்சேர்ந்தவர் பாசிலா பி (வயது 62). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் பாசிலாவின் மூத்த மகள் நூர்ஜகான் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. படிப்பறிவும் இல்லை. எனக்கும் மற்றும் எனது சகோதரிகள் 2 பேருக்கு திருமணம் நடந்தது. நான் சாலையோர வெங்காய வியாபாரியையும், எனது 2 தங்கைகள் முறையே காய்கறி வியாபாரி மற்றும் பீடித்தொழிலாளி ஆகியோரை திருமணம் செய்துள்ளனர். எங்கள் தாயார் பாசிலா, பல ஆண்டுகள் மலேசியாவில் ஒரு வீட்டில் வேலை செய்து பணம் சேர்த்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

வீட்டு வேலைக்கு

எனது கடைசி தங்கைக்கு திருமணம் நடக்கவில்லை. அவரது திருமணத்துக்கு பணம் சம்பாதிப்பதற்காக மீண்டும் மலேசியா செல்ல எனது தாயார் முடிவு செய்தார். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர் எங்களை அணுகினார். மலேசியாவில் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் வேண்டுமென்றும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறினார்.

அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று ரூ.35 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தோம். 13.2.09 அன்று சென்னையில் இருந்து எனது தாயார் மலேசியா புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திற்கு தாயார் சென்றபோது அவரை டிராவல்ஸ் ஊழியர் சந்தித்தார்.

மலேசியாவில் கைது

மலேசியாவில் ஒருவரிடம் பார்சல் ஒன்றை கொடுக்க வேண்டும் என்றும் அந்த பார்சலை எடுத்துச் செல்லுங்கள் என்று எனது தாயாரை மிகவும் வற்புறுத்தினார். மேலும் ஒரு பெண்ணை காட்டி, மலேசியாவுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார் என்றும் குறிப்பிட்டார். அதிகாரிகள் யாரும் எப்போது கேட்டாலும், பார்சலை திறந்து காட்டலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்கான சாவியையும் கொடுத்தார்.

மலேசியாவில் கிடைத்த வேலையை கெடுத்துவிடக் கூடாதே என்று பயந்த எனது தாயார் பாசிலா, அறைகுறை மனதுடன் சம்மதித்து அந்த பார்சலை அவரிடம் இருந்து வாங்கிச் சென்றார். மலேசியா சென்றதும் போன் செய்வதாக தாயார் கூறிச்சென்றார். ஆனால் போய் 4 நாட்கள் ஆகியும் அவரிடம் இருந்து போன் வரவில்லை. எனவே டிராவல்சில் விசாரித்தபோது, போதை பொருள் கடத்தியதாக மலேசியாவில் எனது தாயார் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்து அதிர்ந்து போனோம்.

தாயார் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட எனது 3-வது தங்கை, மனஇறுக்கம் அடைந்து பரிதாபமாக மரணம் அடைந்தார்.

மரண தண்டனை

இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு இடி போன்ற மற்றொரு செய்தி எங்களுக்கு கிடைத்தது. `தி நேஷன்' என்ற பத்திரிகையில் கடந்த மே 21-ந் தேதி வெளியிடப்பட்ட செய்தி எங்களுக்கு ஒரு அமைப்பு மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், `2.92 கிலோ கேட்டமின் என்ற போதை பொருளை கடத்திய குற்றத்துக்காக பாசிலா என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு வெளியே எனது தாயார் அழுதுகொண்டு போலீசுடன் போவதுபோன்ற படமும் வெளியிடப்பட்டுள்ளது.

என் தாயார் எந்த குற்றமும் செய்யாதவர். அவர் உயிர் அநியாயமாய் போய்விடக்கூடாது. கடவுளுக்கு அடுத்தபடியாக உங்களையே நாங்கள் நம்பி இருக்கிறோம். எனவே தகுந்த நடவடிக்கை எடுத்து எனது தாயார் பாசிலா பி-யை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி


மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Empty Re: மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை

Post by Manik Wed Jun 15, 2011 12:45 pm

இந்த மாதிரி தண்டனை நம்ம ஊரிலும் இருந்தால் யாரும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாயிருக்க முடியாது.... கண்ணுக்கெதிரே கஞ்சா விற்பது தெரிந்தாலும் போலீஸிடம் சொல்லியும் ஒரு பயனும் இல்லை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Empty Re: மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை

Post by உதயசுதா Wed Jun 15, 2011 1:49 pm

அங்க இருக்கற இந்தியா தூதரகமும்,தமிழ் சங்கமும் என்ன பண்ணிட்டு இருக்காங்க?
அது சரி தமிழ் சங்கத்துல நீயா,நானான்னு போட்டி போட தான் நேரம் சரியா இருக்கு.
அவர்கிட்ட அந்த பெட்டிய கொடுத்த travels ஊழியர நம்ம போலீஸ் முறைப்படி விசாரித்தாலே அந்தம்மாவை காப்பாற்றலாம்.பார்ப்போம் நமது முதல்வர் மனது இறங்கி அவங்களுக்கு உதவி செய்ராங்களான்னு


மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Uமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Dமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Aமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Yமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Aமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Sமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Uமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Dமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Hமலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Empty Re: மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை

Post by realvampire Wed Jun 15, 2011 2:13 pm

இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல உள்ளது..
காரணம்..
1. பாசிலா பி (வயது 62)
இந்த வயதில் வேலைக்கு அனுப்பியது?
2.வீட்டு வேலை-ரூ.10 ஆயிரம் சம்பளம்(மலேசியாவில்)
10 ஆயிரத்திற்கு வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கேயே வேலை செய்து இருக்கலாம்.
3.எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று ரூ.35 ஆயிரத்தை கொடுத்தோம்.
ரூ.35 ஆயிரத்தில் சிறு பெட்டிக்கடை வைத்து இருக்கலாம்.. நீண்டநாள் வருமானம் கிட்டி இருக்கும்.
4.மேலும் ஒரு பெண்ணை காட்டி, மலேசியாவுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார் என்றும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பாக அழைத்து சென்ற பெண் விமானநிலையதில் எங்கே போனார்.
5.13.2.09 அன்று சென்னையில் இருந்து எனது தாயார் மலேசியா புறப்பட்டார்.(போய் 4 நாட்கள் ஆகியும் அவரிடம் இருந்து போன் வரவில்லை. எனவே டிராவல்சில்
விசாரித்தபோது, போதை பொருள் கடத்தியதாக மலேசியாவில் எனது தாயார் கைது
செய்யப்பட்டதாக தகவல் கிடைத்து அதிர்ந்து போனோம்)
அப்போதே டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது முறையீடு செய்து இருக்கலாமே.. ஆட்சி மாறட்டும் என காத்து இருந்தார்களா?
6.`தி நேஷன்' என்ற பத்திரிகையில் கடந்த மே 21-ந் தேதி வெளியிடப்பட்ட செய்தி எங்களுக்கு ஒரு அமைப்பு மூலம் அனுப்பி
வைக்கப்பட்டது.
இந்த அமைப்பை வைத்து உண்மையை கூறி மலேசியாவில் வாதாடி இருக்கலாமே?

இது குடும்பதாரின் பணத்ஆசை சூழ்ச்சி போல் உள்ளது..

எதுவாக இருப்பினும் 62 வயது முதியவருக்கு மரண தண்டனை கோடுப்பது தவறு..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Empty Re: மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை

Post by சிவா Wed Jun 15, 2011 4:59 pm

realvampire wrote:இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல உள்ளது..
காரணம்..
1. பாசிலா பி (வயது 62)
இந்த வயதில் வேலைக்கு அனுப்பியது?
2.வீட்டு வேலை-ரூ.10 ஆயிரம் சம்பளம்(மலேசியாவில்)
10 ஆயிரத்திற்கு வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கேயே வேலை செய்து இருக்கலாம்.
3.எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று ரூ.35 ஆயிரத்தை கொடுத்தோம்.
ரூ.35 ஆயிரத்தில் சிறு பெட்டிக்கடை வைத்து இருக்கலாம்.. நீண்டநாள் வருமானம் கிட்டி இருக்கும்.
4.மேலும் ஒரு பெண்ணை காட்டி, மலேசியாவுக்கு அவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார் என்றும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பாக அழைத்து சென்ற பெண் விமானநிலையதில் எங்கே போனார்.
5.13.2.09 அன்று சென்னையில் இருந்து எனது தாயார் மலேசியா புறப்பட்டார்.(போய் 4 நாட்கள் ஆகியும் அவரிடம் இருந்து போன் வரவில்லை. எனவே டிராவல்சில்
விசாரித்தபோது, போதை பொருள் கடத்தியதாக மலேசியாவில் எனது தாயார் கைது
செய்யப்பட்டதாக தகவல் கிடைத்து அதிர்ந்து போனோம்)
அப்போதே டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது முறையீடு செய்து இருக்கலாமே.. ஆட்சி மாறட்டும் என காத்து இருந்தார்களா?
6.`தி நேஷன்' என்ற பத்திரிகையில் கடந்த மே 21-ந் தேதி வெளியிடப்பட்ட செய்தி எங்களுக்கு ஒரு அமைப்பு மூலம் அனுப்பி
வைக்கப்பட்டது.
இந்த அமைப்பை வைத்து உண்மையை கூறி மலேசியாவில் வாதாடி இருக்கலாமே?

இது குடும்பதாரின் பணத்ஆசை சூழ்ச்சி போல் உள்ளது..

எதுவாக இருப்பினும் 62 வயது முதியவருக்கு மரண தண்டனை கொடுப்பது தவறு..

சிறந்த பதில்!


மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை  Empty Re: மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற வேண்டும் - மகள் கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போதை மருந்து கடத்திய இந்தியருக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை
» வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை
» நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாள்: ஜூன் 12, 1964
» துபாயில் இந்தியருக்கு தூக்கு தண்டனை
» 'ஹெராயின்'-செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு விதிக்கப்பட்ட 18 ஆண்டு சிறை தண்டனை ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum