Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
5 posters
Page 1 of 1
ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
''ஜெயலலிதா
தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம்
நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை
விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி
ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து
பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று முன்னாள்
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி விரக்தியுடன்
கேட்டுள்ளார்.
கடந்த
2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை
இராணுவத்தினருக்கும் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது மத்திய
அரசில் அங்கும் வகித்து வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம்
போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று ஈழத் தமிழர்கள்
கூக்குரல் எழுப்பியபோது செவிடன் காதில் ஊதிய
சங்குபோலத்தான் இருந்தார் கருணாநிதி.
தற்போது
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கடந்த 1977 ஆம் ஆண்டு சென்னையிலே
ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி பிரம்மாண்டப் பேரணி
நடத்தினேன், 1983ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை
ராஜினாமா செய்தேன் என்று கூறும் கருணாநிதி, ஆட்சியில்
இருந்தபோது 2009ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்
என்பதுதான் தற்போதைய கேள்வி.
2009ஆம்
ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, அங்கே போர் தமிழர்கள் மீது சிறிலங்க் இராணுவம்
உச்சக்கட்டத் தாக்குதல் நடத்தியபோது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம்
இருக்கிறேன் என்று கூறி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா
நினைவிடத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கருணாநிதி, சில மணி
நேரத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார் என்று சொல்லிவிட்டு
போராட்டத்தை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு
சென்றுவிட்டார்.
உண்ணாவிரதத்தை
முடித்துவிட்டு சென்ற அடுத்த நிமிடமே பாதுகாப்பு வளையத்தில்
இருந்த தமிழ் மக்களை அந்நாட்டு இராணுவம் தடை செய்யப்பட்ட
குண்டுகளை கொத்துக் கொத்தாக வீசிக் கொன்றது. இலங்கையில் போர்
முடிந்துவிட்டது என்று கூறினீர்கள், ஆனால் அங்கு கடுமையான தாக்குதல் நடந்து
வருகிறதே என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, “மழை
விட்டுவிட்டது, ஆனால் துவானம் விடவில்லை” என்றார்.
தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம்
நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை
விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி
ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து
பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று முன்னாள்
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி விரக்தியுடன்
கேட்டுள்ளார்.
கடந்த
2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை
இராணுவத்தினருக்கும் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது மத்திய
அரசில் அங்கும் வகித்து வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம்
போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று ஈழத் தமிழர்கள்
கூக்குரல் எழுப்பியபோது செவிடன் காதில் ஊதிய
சங்குபோலத்தான் இருந்தார் கருணாநிதி.
தற்போது
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கடந்த 1977 ஆம் ஆண்டு சென்னையிலே
ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி பிரம்மாண்டப் பேரணி
நடத்தினேன், 1983ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை
ராஜினாமா செய்தேன் என்று கூறும் கருணாநிதி, ஆட்சியில்
இருந்தபோது 2009ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்
என்பதுதான் தற்போதைய கேள்வி.
2009ஆம்
ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, அங்கே போர் தமிழர்கள் மீது சிறிலங்க் இராணுவம்
உச்சக்கட்டத் தாக்குதல் நடத்தியபோது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம்
இருக்கிறேன் என்று கூறி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா
நினைவிடத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கருணாநிதி, சில மணி
நேரத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார் என்று சொல்லிவிட்டு
போராட்டத்தை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு
சென்றுவிட்டார்.
உண்ணாவிரதத்தை
முடித்துவிட்டு சென்ற அடுத்த நிமிடமே பாதுகாப்பு வளையத்தில்
இருந்த தமிழ் மக்களை அந்நாட்டு இராணுவம் தடை செய்யப்பட்ட
குண்டுகளை கொத்துக் கொத்தாக வீசிக் கொன்றது. இலங்கையில் போர்
முடிந்துவிட்டது என்று கூறினீர்கள், ஆனால் அங்கு கடுமையான தாக்குதல் நடந்து
வருகிறதே என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, “மழை
விட்டுவிட்டது, ஆனால் துவானம் விடவில்லை” என்றார்.
Last edited by alwin on Mon Jun 13, 2011 8:46 pm; edited 2 times in total
alwin- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
Re: ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
தலைப்பை சின்னதா வையுங்கள் நண்பா இவ்வளவு பெரிய தலைப்பு மற்ற பதிவுகளுக்கு இடையூறாக இருக்கும்....
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
மன்னியுங்கள் சிறிய தவறு நடந்து விட்டது. இதை எப்படி சரி செய்வது
alwin- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
Re: ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
அவர்
அன்று குறிப்பிட்ட தூவாணத்தில்தான் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள
இனவெறி இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள்,
கொத்துக் குண்டுகள், கனரக பீரங்கிகள், வான் வழி குண்டு வீச்சு, வெப்பக்
குண்டுகள் என்று உலகினால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு சிங்கள
இனவெறி இராணுவம் தமிழர்களை அழித்தொழித்தபோது மத்திய அரசு அதற்கு
முழுமையாகத் துணை நின்றது. ஈழத் தமிழினத்தின் அழிப்பிற்குத் துணை நின்ற
டெல்லி அரசிற்கு கருணாநிதியின் அரசு முழுவதுமாகத் தெரிந்தே துணை நின்றது.
இதுதான் உண்மை. இதை கருணாநிதியால் மறுத்துவிட முடியாது. ஏனெனில் உலகம்
அறிந்த உண்மை இது.
இலங்கை
மீது பொருளாதார தடை கோரி தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா
தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை தற்போது பொறுக்க முடியாமல் இலங்கை
தமிழர்களுக்காக நான் செய்தது என்ன என்ற ஒரு நீண்ட பட்டியலை
வெளியிட்டுள்ளார் கருணாநிதி.
தி.மு.க
பொறுப்பிலே இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக்
கூட்டம், சட்டப் பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப்
பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை
தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்றெல்லாம்
நடத்தியதாகவும், ஆனால் அவைகள் எல்லாம் என்னால் நடத்தப்பட்ட நாடகங்கள்
என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையிலே கூறியது நூற்றுக்குநூறு
உண்மைதான்.
செல்வம்
கொழிக்கும் அமைச்சர் பதவியை பொறுவதற்காக டெல்லிக்கு ஓடோடி
சென்று பதவிகளை பெற்றுக் கொண்ட கருணாநிதி, இலங்கையில் போர்
உச்சகட்டத்தை அடைந்தபோது பல லட்சக்கணக்கான தமிழர்களை காப்பாற்ற
டெல்லி சென்றாரா என்பதுதான் கேள்வி.
அன்று குறிப்பிட்ட தூவாணத்தில்தான் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள
இனவெறி இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள்,
கொத்துக் குண்டுகள், கனரக பீரங்கிகள், வான் வழி குண்டு வீச்சு, வெப்பக்
குண்டுகள் என்று உலகினால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு சிங்கள
இனவெறி இராணுவம் தமிழர்களை அழித்தொழித்தபோது மத்திய அரசு அதற்கு
முழுமையாகத் துணை நின்றது. ஈழத் தமிழினத்தின் அழிப்பிற்குத் துணை நின்ற
டெல்லி அரசிற்கு கருணாநிதியின் அரசு முழுவதுமாகத் தெரிந்தே துணை நின்றது.
இதுதான் உண்மை. இதை கருணாநிதியால் மறுத்துவிட முடியாது. ஏனெனில் உலகம்
அறிந்த உண்மை இது.
இலங்கை
மீது பொருளாதார தடை கோரி தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா
தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை தற்போது பொறுக்க முடியாமல் இலங்கை
தமிழர்களுக்காக நான் செய்தது என்ன என்ற ஒரு நீண்ட பட்டியலை
வெளியிட்டுள்ளார் கருணாநிதி.
தி.மு.க
பொறுப்பிலே இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக்
கூட்டம், சட்டப் பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப்
பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை
தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்றெல்லாம்
நடத்தியதாகவும், ஆனால் அவைகள் எல்லாம் என்னால் நடத்தப்பட்ட நாடகங்கள்
என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையிலே கூறியது நூற்றுக்குநூறு
உண்மைதான்.
செல்வம்
கொழிக்கும் அமைச்சர் பதவியை பொறுவதற்காக டெல்லிக்கு ஓடோடி
சென்று பதவிகளை பெற்றுக் கொண்ட கருணாநிதி, இலங்கையில் போர்
உச்சகட்டத்தை அடைந்தபோது பல லட்சக்கணக்கான தமிழர்களை காப்பாற்ற
டெல்லி சென்றாரா என்பதுதான் கேள்வி.
alwin- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
Re: ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
இலங்கையில்
தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சியுடன் சட்டப் பேரவைத்
தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட தி.மு.க. படுதோல்வியை
சந்தித்தது. இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசில் விலகி
இருந்தாலோ அல்லது காங்கிரஸ் கட்சியை தேர்தலில் கூட்டணி
சேர்க்காமல் இருந்திருந்தாலோ கொஞ்சம் கெளரவமான தோல்வியை
சந்தித்திருக்கும். ஆனால் தி.மு.க.வுக்கு கிடைத்தோ
படுதோல்வி.
''இலங்கை
தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை; போர் என்றால்
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஒரு கட்டத்தில் ஜெயலலிதா
அறிக்கை விட்டது தவறு என்றாலும், தற்போது சட்டப்பேரவையில்
வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றி அதனை
சரிப்படுத்திக் கொண்டார். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற
கருணாநிதிக்கு துணிச்சல் இருந்ததா என்பதுதான் கேள்வி.
தற்போது
ஈழத் தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல அதை செய்தேன்
இதைத் செய்தேன் என்று கூறி நீண்ட பட்டியலை போட்டுள்ள
கருணாநிதி, உண்மையான தமிழர்களுக்கு நாடகம் நடத்துவது யார் என்பது
புரியாமலா போய் விடும்?
முதலில்
குடும்பம், அப்புறம்தான் மக்கள் என்ற நினைவில் இருந்த
கருணாநிதிக்கு ஜெயலலிதா கொடுக்கும் அடியும் மரண அடிதான்.
இலங்கைத் தமிழர்களுக்காக இனியும் பதவியை துறந்தேன், கைது
செய்யப்பட்டேன் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, இதற்குப் பிறகாவது
நேர்மையாகவும், நியாயமாகவும் தமிழர்கள் பிரச்சனையில் நடந்துகொள்ள
கருணாநிதி முன்வர வேண்டும். அதைச் செய்யாமல், பெரிய கடிதத்தை எழுதி, அதை
முரசொலியில் வெளியிட்டுவிட்டால் அது உண்மையாகிவிடும் என்றோ, வரலாறாகிவிடும்
என்றோ எண்ணினால் அரசியலில் மதிப்பற்று போவார்.
நன்றி:தமிழ் வெப்துனியா
தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சியுடன் சட்டப் பேரவைத்
தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட தி.மு.க. படுதோல்வியை
சந்தித்தது. இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசில் விலகி
இருந்தாலோ அல்லது காங்கிரஸ் கட்சியை தேர்தலில் கூட்டணி
சேர்க்காமல் இருந்திருந்தாலோ கொஞ்சம் கெளரவமான தோல்வியை
சந்தித்திருக்கும். ஆனால் தி.மு.க.வுக்கு கிடைத்தோ
படுதோல்வி.
''இலங்கை
தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை; போர் என்றால்
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஒரு கட்டத்தில் ஜெயலலிதா
அறிக்கை விட்டது தவறு என்றாலும், தற்போது சட்டப்பேரவையில்
வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றி அதனை
சரிப்படுத்திக் கொண்டார். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற
கருணாநிதிக்கு துணிச்சல் இருந்ததா என்பதுதான் கேள்வி.
தற்போது
ஈழத் தமிழர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல அதை செய்தேன்
இதைத் செய்தேன் என்று கூறி நீண்ட பட்டியலை போட்டுள்ள
கருணாநிதி, உண்மையான தமிழர்களுக்கு நாடகம் நடத்துவது யார் என்பது
புரியாமலா போய் விடும்?
முதலில்
குடும்பம், அப்புறம்தான் மக்கள் என்ற நினைவில் இருந்த
கருணாநிதிக்கு ஜெயலலிதா கொடுக்கும் அடியும் மரண அடிதான்.
இலங்கைத் தமிழர்களுக்காக இனியும் பதவியை துறந்தேன், கைது
செய்யப்பட்டேன் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, இதற்குப் பிறகாவது
நேர்மையாகவும், நியாயமாகவும் தமிழர்கள் பிரச்சனையில் நடந்துகொள்ள
கருணாநிதி முன்வர வேண்டும். அதைச் செய்யாமல், பெரிய கடிதத்தை எழுதி, அதை
முரசொலியில் வெளியிட்டுவிட்டால் அது உண்மையாகிவிடும் என்றோ, வரலாறாகிவிடும்
என்றோ எண்ணினால் அரசியலில் மதிப்பற்று போவார்.
நன்றி:தமிழ் வெப்துனியா
alwin- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
Re: ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும்
தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான்
நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை
கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது
அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில்
சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில
பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை
பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில்
இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப்
பிரச்சினையில் தங்களது பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர
வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில்
குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க
வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை
வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன்
கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த
தீர்மானத்தால் என்ன பயன் ?
தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும்
இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின்
வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின்
அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்
என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள்.
அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு
நன்றாகப் புரியவைத்து விடும்.
வினவின் கேள்வி இது?
தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான்
நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை
கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது
அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில்
சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில
பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை
பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில்
இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப்
பிரச்சினையில் தங்களது பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர
வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில்
குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க
வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை
வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன்
கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த
தீர்மானத்தால் என்ன பயன் ?
தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும்
இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின்
வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின்
அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்
என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள்.
அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு
நன்றாகப் புரியவைத்து விடும்.
வினவின் கேள்வி இது?
Re: ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
இந்த கிழட்டு கருணையில்லாத கருணாநிதி, இன்னும் ஏன் சாகாமல் அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கு. போயா போ, சீக்கிரமா போயிடு.உன்னை எப்படி ஏசுறதுன்னு எனக்கு தெரியல, நீ செய்த பல அநியாய அட்டூழியங்களுக்கு நல்ல தண்டனை நரபத்தில உனக்காக காத்திருக்கு. உன் பேரக் கேட்டாலே உடம்பெல்லாம் எரியுது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
ஐநா சபையில் எந்த தீர்மானம் போட்டாலும், சீனா தனது வீட்டோ பவர் மூலம் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. அப்படி இருக்கும் போது தமிழக சட்டசபை தீர்மானம் வேஸ்ட் தான். கருணாநிதிக்கு எதிராக ஒரு மாயை ஏற்படுத்துவதற்காக தான் இந்த தீர்மானம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» பொறுப்பாளர்கள் நீக்கம். ஜெயலலிதா அதிரடி
» மாறன் சகோதரர்களிடம் சமரசம் ஏன்? - ஜெயலலிதா
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» பொறுப்பாளர்கள் நீக்கம். ஜெயலலிதா அதிரடி
» மாறன் சகோதரர்களிடம் சமரசம் ஏன்? - ஜெயலலிதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|