ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு

3 posters

Go down

ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு Empty ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு

Post by முரளிராஜா Sat Jun 11, 2011 10:26 am

ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு 11-jayalalitha300-32
தமிழகத்தில் மின்வெட்டு நேரம் 2 மணி நேரமாகக் குறைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசினார்.

அப்போது, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் ஆக்கப்படும், மின்சார வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும், தீ விபத்தினால் பாதிக்கப்படும் குடிசைகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்த்தப்படும், பட்டா மாறுதல் முறை எளிமைப்படுத்தப்படும் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேச்சு விவரம்:

இந்த தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் உண்மையான "ஜனநாயகம்'' மலர தமிழக மக்கள் வழிவகை செய்து உள்ளனர். மக்களின் உள்ளக்கிடக்கை இந்த தேர்தலில் பிரதிபலிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், கிடைத்துள்ள இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

மக்கள் சக்தியை முடக்கி விடலாம் என்ற மமதையில், "தேர்தல் முடிந்து மே மாதத்திற்கு பிறகு அ.தி.மு.க. என்ற இயக்கம் இருக்காது'' என்று பேட்டி அளித்தார் பாராளுமன்றத்தில் பதில் அளிக்கவே அஞ்சும் ஒரு மத்திய அமைச்சர்.

இன்று அந்த அமைச்சர் இருக்கின்ற இடம் தெரியாத அளவுக்கு; நான் எதிர்க்கட்சி தலைவராக இங்கே உரையாற்றிய நாட்களில் என்னை பேசவிடாமல் குறுக்கீடுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த முன்னாள் மைனாரிட்டி தி.மு.க. அரசின் அமைச்சர்கள்; இந்த அவையிலேயே நுழைய முடியாத அளவுக்கு மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர்.

தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், தமிழ்நாட்டை மீண்டும் அமைதிப்பூங்காவாக மாற்றவும் அயராது பாடுபடுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்வெட்டு ஏன்?

இங்கே பேசிய உறுப்பினர்கள் பலரும், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை சூழ்நிலை பற்றி கருத்து தெரிவித்தார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் மின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து, மக்களுக்கு எவ்வளவு நேரம் மின்சாரம் கிடைக்கும் என்பதே தெரியாத ஒரு நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.

சென்னை மாநகரில் ஒரு மணி நேரம், மாநிலத்தின் இதர பகுதிகளில், மூன்று மணி நேரம் மின் தடை என முந்தைய தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், உண்மையில், அதற்கு மேலும் அறிவிக்கப்படாத மின் தடையாக மேலும் 2, 3 மணி நேரம் எல்லா பகுதிகளிலும் மின் தடை இருந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

மேலும், தொழிற்சாலைகளுக்கு 20 சதவீதம் மின் வெட்டும், மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான உச்ச மின் தேவை காலத்தில் 90 சதவீதம் மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டது. தேவைக்கேற்ப மின் திட்டங்களை ஏற்படுத்தாததும், நிர்வாக சீர்கேடுகளும் தான் இவ்வாறு மின் வெட்டு ஏற்பட முக்கிய காரணம் ஆகும்.

கடந்த ஐந்தாண்டு முழுமையும், இவற்றை எல்லாம் மறைத்து, முந்தைய எனது ஆட்சிக் காலத்தில் திட்டங்கள் தீட்டப்படாதது தான் மின் வெட்டுக்குக் காரணம் என உண்மைக்கு மாறான செய்தியை முந்தைய தி.மு.க. அரசு பரப்பி வந்தது.

எனது அரசு மேற்கொண்ட முயற்சிகளை அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தொடர்ந்திருந்தால் தற்போது மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சுலபமாக தவிர்த்திருக்க முடியும். ஆனால், இத்திட்டங்கள் அமைவதற்கான இடங்களை தெரிவு செய்ய முந்தைய தி.மு.க. அரசு காலதாமதம் செய்ததால் இத்திட்டங்கள் இன்னமும் தொடங்கப் பெறாமல் உள்ளன.

2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில், அதாவது, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், நம்முடைய அனல் மின் நிலையங்கள் முறையான பராமரிப்பினாலும், தகுந்த கண்காணிப்பினாலும் மிக நன்றாக செயல்பட்டு, மத்திய எரிசக்தி துறையினுடைய சிறந்த உற்பத்தித் திறனுக்கான தேசிய விருதுகளைப் பெற்றன. ஆனால், 2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில், அதாவது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில், எந்த விதமான விருதையும் இந்த அனல் மின் நிலையங்கள் பெறவில்லை.

காற்றாலை மின் உற்பத்தி

6000 மெகாவாட்டிற்கும் அதிகமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான மின் தொடரமைப்பு வசதி இல்லாததால், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பெற இயலவில்லை. தேவையான மின் தொடர் கட்டமைப்பு வசதிகளை எனது அரசு விரைவில் ஏற்படுத்தும்.

பழுதடைந்த நிலையில் உள்ள மின் நிலையங்களை உடனே சரி செய்ய போர்க்கால அடிப்படையில் எனது அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2,518 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக நிறுவப்பட்டது. ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில் வெறும் 206 மெகாவாட் மட்டுமே நிறுவு திறன் அதிகரிக்கப்பட்டது. இதே போன்று, எனது முந்தைய ஆட்சி காலத்தில் 2,595 மெகாவாட் கூடுதல் மின் திட்டங்கள் நிறுவுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

முந்தைய தி.மு.க. அரசு மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக வியாபாரிகளிடம் இருந்தும், மின் சந்தையிலிருந்தும், மின் திருப்புதல் முறையிலும், மின் கொள்முதல் செய்து வந்தது. இதில் மின் கொள் முதலுக்காக சராசரியாக, யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய் 50 பைசா வரை செலவிடப்பட்டது. ஆனால், இந்திய மின்சார சட்டம், 2003-ன் படி, நீண்ட கால கொள்முதல் முறையான மின் கொள்முதல் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் ஏற்கெனவே மின் கொள்முதல் செய்த விலையில் பாதி விலைக்கே மின் கொள்முதல் செய்திருக்க முடியும்.

முறையான மின் கொள்முதல்

தற்போது மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை நிலையை மாற்றி அமைக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் எனது அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல பழுதடைந்த மின் நிலையங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு உள்ளன.

குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் முறையை இணைத்து லாபகரமான மற்றும் நிலையான மின் கொள்முதல் கொள்கையை எனது அரசு கடைபிடிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில், மின் வாரியத்தின் நிறுவு திறன் மேலும் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக அதிகரிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்

தற்போது, எனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், வரும் ஜுலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும். படிப்படியாக, மின் வெட்டே இல்லா மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில், 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாகத்தான் இருந்தது. இன்னும் அதிகமான மின் நிறுவுத் திறனுடன் அதைவிட சுபிட்சமான நிலையை இந்த ஆட்சிக் காலத்தில் அடைவோம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு

Post by SK Mon Jun 13, 2011 2:59 pm

மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்

தற்போது, எனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், வரும் ஜுலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும். படிப்படியாக, மின் வெட்டே இல்லா மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில், 2006-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாகத்தான் இருந்தது. இன்னும் அதிகமான மின் நிறுவுத் திறனுடன் அதைவிட சுபிட்சமான நிலையை இந்த ஆட்சிக் காலத்தில் அடைவோம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.


ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு 677196 ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு 677196 ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு 677196


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு

Post by kitcha Mon Jun 13, 2011 3:06 pm

ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு 224747944 ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஜூலை முதல் மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும்-ஜெயலலிதா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு
» மின்வெட்டு: சென்னைக்கு 2 மணி நேரம், மற்ற ஊர்களுக்கு 5 மணி நேரமாகக் குறைப்பு
» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
» 27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்
» 3 மாதம் பொறுத்திருங்க... மின்வெட்டு குறையும்: முதல்வர் ஜெ.,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum