ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!

4 posters

Go down

open இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!

Post by realvampire Thu 9 Jun 2011 - 21:14

இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே! Sharmila%252520anna_thumb%25255B2%25255D சமூகத்தின்
நாடித்துடிப்புகளை கச்சிதமாக அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தும்
முதலாளித்துவத்தின் இப்போதைய அழுகுணி ஆட்டத்தில் அவர்தான் மதிப்பிற்குரிய
ராஜா. ஊழலில் ஊறித் திளைத்த அதிகார வர்க்கத்தின் மீது சாதாரண மனிதனுக்கு
கோபமும், வெறுப்பும் மண்டிக்கிடந்த வேளையில் அவரது வருகையை முதலாளித்துவ
ஊடகங்கள் அறிவித்தன. தங்களது ஆக்டோபஸ் சக்தியால் ஒரே நாளில் அவர்தான்
தேசத்தின் தலைவர் என்று அடையாளம் காட்டின. விடாமல் எந்நேரமும் அவரது பெயரை
உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டாம் சுதந்திரப் போரை அவர் துவக்கி
விட்டதாக கணிக்கின்றன. இந்த நாடகத்தின் ஆரம்பத்திலேயே
ஒரு ஊழல் இருந்தது. சட்டங்களை வரையறை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றம் இருக்கும்போது அதன் எல்லையை மீறினார்
அன்னா ஹசாரே. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது லோக்பால்
மசோதாவை வரைவு செய்கிற குழுவில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அன்னா
ஹசாரே கோரிக்கை வைத்தார். அப்படியொரு அதிகாரபூர்வமற்ற அதிகாரத்தை அவரே
எடுத்துக்கொண்டார். உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று நேரான வழிகளில்
போராடுவதாய் சொல்லிக்கொண்ட அன்னா ஹசாரேவின் குரல் புறவாசல் வழியாக தான்
இப்படி நுழையக் கதவை திறக்கும்படி அரசிடம் அடாவடியாக எழுப்பியது.
பாராளுமன்றம், அதன் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது அவருக்கு
நம்பிக்கையில்லையென்றால் முதலில் அவரது போராட்டம் அரசியல் கட்சிகளுக்கு
எதிராக இருந்து தேர்தலை சந்தித்து, வென்று, பாராளுமன்றம் சென்று, சட்டத்தை
தாங்கள் நினத்தது போல இறுதி செய்து, அமல் படுத்த முனைந்திருக்க வேண்டும்.
அப்படியெல்லையென்றால், இந்தப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானதாக
இருந்திருக்க வேண்டும். அதைச் செய்ய மாட்டார். இந்த முதலாளித்துவ ஊடகங்கள்
அவரை ஒரே நாளில் குப்பையில் தூக்கி எறிந்துவிடும். அரசோ ‘தேசத் துரோகி’ என
குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். அதுவுமில்லாமல்
இதுவுமில்லாமல் குறுக்கு வழியில், முதலாளித்துவத்தின் தேரோட்டவே அன்னா
ஹசாரே விரும்புகிறார். லோக்பால் மசோதாவை இவரெல்லாம் சேர்ந்து வரைவு
செய்வார்களாம். அதை பாராளுமன்றம் இறுதிப்படுத்துமாம். விளக்கெண்ணய்த்தனமாக
இல்லை இது? இதற்குத்தான் இத்தனை செய்திகளும், ஆரவாரங்களும் பேரிரைச்சலாய்
கேட்டுக்கொண்டு இருக்கிறது. எல்லாம் இந்திய முதலாளிகளின்
திட்டப்படியே வெற்றிகரமாக அரங்கேற்றப்படுகிறது. இந்த சிவில் சமூகத்தின்
மத்திய தர வர்க்கத்தில் ஒரு பகுதி எப்போதும் போல், எதையும் யோசிக்காமல்,
‘தங்கள் தேவ தூதன் வந்துவிட்டார்’ என சட்டென தங்கள் தோளில் தூக்கி வைத்துக்
கொள்கின்றனர். இருண்ட இந்தியாவின் ஓளிவிளக்கு அவர்தான் என வாய் கிழிய
பேசுகின்றனர். அவர் குறித்து கேள்விகள் எழுப்பினால் ‘யாருமே பூனைக்கு மணி
கட்டவில்லை, இவராவது முன் வந்திருக்கிறாரே” என வியாக்கியானம் வேறு. ஐயா,
இந்த லோக்பால் மசோதா என்றால் என்ன, யார் யாரெல்லாம் இதற்கு தொடர்ந்து குரல்
கொடுத்து வருகிறார்கள் என்று இருபது வருட வரலாற்றை கொஞ்சமேனும்
அறிந்துகொண்டு பேசுங்கள் என்றுதான் அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.
அவை எல்லாவற்றையும் நேற்று வரை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் இன்று இவர்
ஒருத்தர் முகத்தின் மீது மட்டும் வெளிச்சம் காட்டியதும் ஏன் இப்படி
‘கண்டுகொண்டேன்’ என துள்ளிக் குதிக்கிறார்கள். முதலாளித்துவ
ஊடகங்கள் இவ்வளவு மெனக்கெட்டு இவர்தான் இந்தியாவில் ஊழல்
எதிர்ப்புக்கென்றே பிறந்தவராக ஏன் இப்படி ஜோடனை செய்கின்றன என்று யோசிக்க
வேண்டாமா? இதோ, மணிப்பூரில் ஷர்மிளா என்னும் பெண் ஒரு நாளல்ல, இரண்டு
நாளல்ல, பத்து வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார் என்னும் செய்தி எத்தனை
பேருக்குத் தெரியும். அவரை சிறையிலடைத்தும், வலுக்கட்டாயமாக குழல் மூலமாக
உணவை அவருக்குள் திணித்தும், ஏற்றுக்கொள்ளாத அவரை மருத்துவமனைக்கு கொண்டு
சென்று அலைக்கழித்தாலும், விடாமல் இராணுவத்திற்கும், இந்திய அரசுக்கும்
எதிராக தன் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார் அவர். இந்த ஊடகங்கள்
அவரை ஏன் நமக்குத் தொடர்ந்து காட்டுவதில்லை. அன்னா ஹசாரேவின்
உண்ணாவிரதத்திற்கு தெரிவிக்கும் ஆதரவை ஷர்மிளாவுக்கு ஏன் நாம் தெரிவிக்க
முடியவில்லை? இதே ஊழல் எதிர்ப்புக்காக, நாளை பெரும்
மக்கள் போராட்டம் வெடித்தால் இதே முதலாளித்துவ ஊடகங்கள் தங்கள் முகங்களை
வேறு திசையில் திருப்பிக் கொள்ளும். அப்படி எதுவும் விபரீதமாக நடந்துவிடக்
கூடாது என்று அனுப்பப்பட்ட தூதரே அன்னா ஹசாரே. தெளிவான பார்வை, தீர்க்கமான
செயல்திட்டம் இல்லாமல் விளக்கெண்ணய்த்தனமான குழப்பங்களுக்குள் மக்களின்
கோபத்தையும், வேகத்தையும் நீர்த்துப் போகவைக்கவே இந்த ஏற்பாடுகள். பெரும்
ஆதரவைத் திரட்டி, மிகப் பிரம்மாண்டமானதாய் அவர்களே காட்டி, கடைசியில்
அன்னா ஹசாரேவால் கூட முடியவில்லை என அவநம்பிக்கையையும் விதைத்து, ஒரு
தலைமுறையை காயடைக்கும் வேலையே இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. ஊழலின்
ஊற்றுக்கண்ணாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே, ஊழலை ஒழிக்க வழி
எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்கிறார். அவர்
சமீபத்தில் சொன்னதைக் கேளுங்கள் “மன்மோகன் சிங் நல்ல மனிதர்.
நம்பிக்கையானவர். சோனியா காந்திதான் அவரை கட்டுப்படுத்துகிறார்”. அதாவது
இந்திய முதலாளிகளுக்கு சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட மன்மோகன்சிங்
மீது எந்தத் தவறும் இல்லையாம். மொத்தப் பழியையும் சோனியா காந்தி மீது
சுமத்தி, மன்மோகன்சிங்கை பாதுகாப்பதில் இந்திய முதலாளிகளுக்கு இருக்கும்
அக்கறையே அன்னா ஹசாரேவிடமிருந்து இப்படி வெளிப்படுகிறது. இவரை
காந்தியென சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. ஒத்துழையாமை இயக்கமும்,
வெள்ளையனே வெளியேறு இயக்கமும், மக்களின் போராட்டமாக பரிணாமம் கொண்டபோது
காந்தி தனது அஹிம்சைக்கு எதிரான போராட்டங்களென அவற்றை நிறுத்திக்கொண்டார்.
அப்போது ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா தங்கள் வசம் வரவேண்டும் எனும்
அபிலாஷை கொண்ட இந்திய முதலாளிகளின் ஆதரவு காந்திக்கு இருந்தது. அதை
தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவே இப்போது அதே முதலாளிகள் அன்னா ஹசாரேவுக்கு
ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், காந்தியின் கை மீறி
போராட்டங்கள் மக்களின் கைகளுக்கு வந்த பிறகே, வெள்ளையன் இந்தியாவை விட்டு
புறப்படும் காலம் தனக்கு நெருங்கியதை உணர்ந்தான். அதுதான் வரலாறு
இந்தியாவுக்கு. ஊழலுக்கும்தான்.

நன்றி:தீராதபக்கங்கள்
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

open Re: இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!

Post by கோவை ராம் Thu 9 Jun 2011 - 21:22

இந்த நாட்டில் யாருமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை போலிருக்கிறது

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

open Re: இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!

Post by ரா.ரமேஷ்குமார் Thu 9 Jun 2011 - 21:49

இதனை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆனாலும் இதில் உள்ளதை மறுக்க முடியவில்லை...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

open Re: இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!

Post by கண்ணன்3536 Fri 10 Jun 2011 - 12:52

ஆனால், காந்தியின் கை மீறி
போராட்டங்கள் மக்களின் கைகளுக்கு வந்த பிறகே, வெள்ளையன் இந்தியாவை விட்டு
புறப்படும் காலம் தனக்கு நெருங்கியதை உணர்ந்தான். அதுதான் வரலாறு
இந்தியாவுக்கு. ஊழ
லுக்கும்தான்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

open Re: இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
»  அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
» அன்னா ஹசாரே குழுவின் தப்புத் தாளங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum