புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_m10ஜென்வழி - பார், கேள், படி!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென்வழி - பார், கேள், படி!


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 2:13 pm

‘எதையும் கேள்வி கேட்கணும்!’ என்றார் குருநாதர். ‘அடுத்தவங்க
சொல்றாங்க-ங்கறதுக்காகமட்டும் ஒரு விஷயத்தை நம்பிடக்கூடாது. நாமே
பார்த்துப் புரிஞ்சுக்கறதுமட்டும்தான் உண்மை. ஆனா அதுவும்
அப்போதைக்குமட்டும்தான் உண்மை. கொஞ்ச நேரம் கழிச்சு, அது பொய்யாகிடலாம்,
அதையும் நாம பார்த்துப் புரிஞ்சுக்கணும், நம்மோட நம்பிக்கைகள்
ஒவ்வொண்ணையும் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திகிட்டே இருக்கணும்.’
மாணவர்களுக்குக் குழப்பம். ‘அப்படீன்னா, எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோட
பார்க்கறதுதான் ஜென்னா?’ என்றார்கள்.
‘ம்ஹூம், இல்லை. எல்லாத்தையும் சட்டுன்னு நம்பிடாம, உன்னோட கண்ணால
பார்த்து உணர்றதுதான் ஜென்!’
‘புரியலை குருவே. இப்போ, நான் உங்கமேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கேன்.
நீங்க அதை நம்பமாட்டீங்களா?’
‘ம்ஹூம். நம்பமாட்டேன்!’ என்றார் குருநாதர். கேள்வி கேட்ட சீடனின் முகம்
வாடிப்போனது.
குருநாதர் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். ‘நீயும் அதேமாதிரிதான்
இருக்கணும், நான் பெரிய ஜென் குரு, மகான்னு எல்லாரும் சொல்றாங்கன்னா, அதை
உடனே நம்பிடக்கூடாது, என்னைப் பரிசோதிச்சு உண்மையை நீயே பார்த்துத்
தெரிஞ்சுக்கணும், அதுவும் ஒருவாட்டி, ரெண்டுவாட்டி இல்லை, தொடர்ந்து,
வாழ்நாள்முழுக்க!’
‘இவ்வளவு ஏன்? புத்தரே ’என் போதனைகளை யாரும் கண்மூடித்தனமா நம்பவேணாம்,
ஒவ்வொரு வார்த்தையையும் கடுமையாச் சோதனை செஞ்சு
உறுதிப்படுத்திக்கோங்க’ன்னுதான் சொல்றார்! ஒரு விஷயத்தை நாம
நம்பறோம்ங்கறதாலயோ, விரும்பறோம்ங்கறதாலயோ, அப்படி நடக்கணும்ன்னு
எதிர்பார்க்கறோம்ங்கறதாலயோமட்டும் அது உண்மையாகிடாது, எதையும் கேள்வி
கேட்கிற, பரிசோதிச்சுத் தெரிஞ்சுக்கற குணம் நமக்கு வேணும். அந்த
அடிப்படையில சொல்லணும்ன்னா, ஜென் என்பது நம்பிக்கை அல்ல, பின்பற்றுதல்
அல்ல, கீழ்ப்படிதல் அல்ல, ஊகித்தல் அல்ல, வாதம் செய்தல் அல்ல, வெறுமனே
பார்த்தல், உணர்தல்! அவ்ளோதான்!’

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 2:14 pm

ஒரு ஜென் ஆசிரமம். பல மாணவர்கள் அங்கே தங்கிப் பயின்றுவந்தார்கள்.
தினமும் காலை 11 மணிக்குத் தியான வகுப்பு. சுமார் ஐம்பது மாணவர்கள் ஒரு
பெரிய மண்டபத்தில் அமர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தியானம்
செய்வார்கள்.
இந்த வகுப்பின்போது சில மாணவர்கள் தூங்கிவிடுவது உண்டு. எப்போதாவது
குறட்டைச் சத்தம்கூடக் கேட்கும்.
இதனால் எரிச்சலடைந்த குருநாதர், தன்னுடைய தோட்டக்காரனை அழைத்தார். அவன்
கையில் ஒரு சின்னக் குச்சியைக் கொடுத்தார். ‘தம்பி, உன்னுடைய வேலை, இந்த
மாணவர்களைக் கவனிப்பது.
யாராவது தூங்கி வழிவதுபோல் தெரிந்தால், அவர்களுடைய முதுகில் இந்தக்
குச்சியால் ஒருமுறை தட்டு. விழித்துக்கொள்வார்கள், தியானத்தைத்
தொடர்வார்கள். புரிந்ததா?’
’புரிஞ்சதுங்கய்யா!’ என்றான் அந்தத் தோட்டக்காரன். அதன்படி தினந்தோறும்
மாணவர்களைக் கூர்ந்து கவனித்து, தூங்குபவர்களை உடனுக்குடன்
எழுப்பிவிட்டுக்கொண்டிருந்தான்
அவன்.
வருடக்கடைசியில், அந்த ஐம்பது மாணவர்களின் படிப்பு முடிவடைந்தது.
எல்லோரையும் வழியனுப்பும் நேரம்.
அப்போது ஒரு மாணவன் கேட்டான். ‘குருவே, எங்கள் வகுப்பில் தியானத்தில்
அதிகக் கவனமும் தேர்ச்சியும் பெற்றது யார்?’
குருநாதர் அரை விநாடியும் யோசிக்காமல் பதில் சொன்னார். ‘சந்தேகமென்ன?
அந்தத் தோட்டக்காரன்தான்!’

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 2:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 09, 2011 2:17 pm

கலக்குறீங்க உதுமான் மாம்ஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 2:18 pm

maniajith007 wrote:கலக்குறீங்க உதுமான் மாம்ஸ்

என்ன கலக்குறார் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 09, 2011 2:20 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:கலக்குறீங்க உதுமான் மாம்ஸ்

என்ன கலக்குறார் ?

வாங்க டாஸ்மாக் சங்க தலைவரே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 2:22 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:கலக்குறீங்க உதுமான் மாம்ஸ்

என்ன கலக்குறார் ?

வாங்க டாஸ்மாக் சங்க தலைவரே
என்னை ரொம்ப புகழாத மணி !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 2:39 pm

ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார்.
“குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க
நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”

ஜென் குருக்கள்
வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள்
காட்டுவதோ, மணிக்கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார்.
“உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல
முடியும்”

சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது”

பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”

சீடருக்கு
ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்?
திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா?
அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர
முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம்
வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்”

பான்காய் சொன்னார்.
“அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான
இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது
வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது
இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து
தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை
விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய
முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”

பான்காய்
மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என்
கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று
சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன்
இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.

பான்காய்
சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை.
நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது
தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால்
அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து
எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை.
ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று
பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

இது
கோபத்திற்கு மட்டுமல்ல நம்மை அலைக்கழிக்கும் வெறுப்பு, பொறாமை, வருத்தம்
போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். இது போன்ற உணர்ச்சிகள் எல்லாம்
துன்பத்தைப் பெருக்குபவை. அவற்றை நம்முடையதாக பாவிக்கும் போது, அவற்றை
நம்மை அறியாமல் வளர்த்து வலுவாக்குகிறோம். அவை வலிமையாகும் போது அதன்
விளைவுகளும் வலிமையாக நம்மைத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதலால்
பாதிக்கப்படும் போது நாம் மூன்று உண்மைகளை நினைவில் வைத்தால் அவற்றின்
பிடியில் இருந்து விலகி விடுதலையாகலாம்.

1. இந்த உணர்ச்சிகள்
என்றுமே என்னுடைய மன அமைதிக்கோ, மகிழ்ச்சிக்கோ வழி வகுப்பதில்லை. மாறாக இவை
கவலைக்கும், துக்கத்திற்குமே வழி வகுக்கக் கூடியவை.

2. இந்த
உணர்ச்சிகள் தவறான அபிப்பிராயங்களாலும், கணிப்புகளாலும் ஏற்படுபவை. இவை
என்னிடம் வர முயற்சிக்கும் உணர்ச்சிகள். ஆனால் இவை என்னுடையவை அல்ல.

3. இவற்றை என்னுடையவை என்று நான் அங்கீகரித்தால் ஒழிய, அப்படி நினைத்து பற்றிக் கொண்டிருந்தால் ஒழிய இவை என்னைப் பாதிக்க முடியாது.

இந்த
உணர்ச்சிகளை பான்காய் கூறுவது போல புறத்தில் இருந்து வருபவை என்று
உணருங்கள். இதற்கெல்லாம் கோபப்பட வேண்டும், இதையெல்லாம் வெறுக்க வேண்டும்,
இதற்கெல்லாம் பொறாமைப் பட வேண்டும் என்று நாம் யாரோ போட்ட பாதையில் போக
வேண்டியதில்லை. அதை நம் பாதையாக முட்டாள்தனமாய் ஆக்கிக் கொள்ள
வேண்டியதில்லை. நாம் அப்படி போய் அவதிப்பட வேண்டியதில்லை.

இது
போன்ற உணர்ச்சிகள் வரும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். அவை
வரும் போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களுக்குள்ளே
விடாதீர்கள். “எனக்கு இயல்பானவன் போன்ற தோற்றத்தில் வந்தாலும் நீ
அன்னியன். என்னுடையவன் அல்ல. எனவே போய் விடு” என்று அனுப்பி விடுங்கள்.

இந்த
உணர்ச்சிகளை உங்களுடையது என்று நீங்களாகப் பற்றிக் கொண்டு இருந்தால்
மட்டுமே உங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படும். அவற்றை உங்களுடையது அல்ல
என்று கை விட்டு விடுங்கள். உதறித் தள்ளி விடுங்கள். அவை உங்களை
கஷ்டப்படுத்துவது தானாக முடிந்து விடும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக