ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

5 posters

Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by jeylakesengg Wed Jun 08, 2011 2:04 pm

மைசூர்: மைசூர் நகருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் நகரையே ஸ்தம்பிக்க வைத்து விட்டன. ஒரு யானை தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மைசூர் நகருக்குள் இன்று அதிகாலையில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து விட்டன. தாறுமாறாக ஓடிய அந்த யானைகளால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும், காவல்படையினரும் விரைந்து வந்தனர். நகர் முழுவதும் அந்த யானைகள் தாறுமாறாக ஓடி அமர்க்களம் செய்ய ஆரம்பித்ததால், மக்கள் யாரும் வீடுகளை விட்டு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ் கூறுகையில், இன்று காலை 6 மணியளவில் இந்த யானைகள் அருகில் உள்ள காட்டிலிருந்து புகுந்தன. புறநகர்ப் பகுதிகளில் இவை பெரும் அமளியில் ஈடுபட்டன. யானை தாக்கியதில் வங்கிக் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றார்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த இரு யானைகளும் மைசூரையே தடம்புரள வைத்து விட்டன. இந்த அமளி காரணமாக மைசூர் நகரில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது.

கடும் போராட்டத்திற்குப் பின்னர் இந்த இருயானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அவற்றைப் பிடித்துக் கட்டினர்.

யானை தாக்கி உயிரிழந்தவர் பெயர் ரேணுகாபிரசாத். இவருக்கு வயது 55. பாம்பூ பஸாரில் வசித்து வந்தவர்.

வங்கிக் காவலாளியான இவர் இன்று காலை தனது வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானைகளில் ஒன்று ரேணுகா பிரசாத்தை தூக்கி தாக்கி எறிந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எதியூரப்பா, பிரசாத்தின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ளார்.

மைசூர் மகளிர் கல்லூரி ஒன்றுக்குள் புகுந்த ஒரு யானை அந்த இடத்தை சூறையாடி விட்டது. பின்னர் இன்னொரு யானை அருகில் உள்ள மார்கெட்டுக்குள் புகுந்தது. அப்போது வழியில் குறுக்கிட்ட ஒரு பசு மாட்டை அந்த யானை மிதித்துக் கொன்றது.

:வணக்கம்: தட்ஸ் தமிழ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by முரளிராஜா Wed Jun 08, 2011 2:57 pm

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 3:17 pm

மதம் கொண்ட யானை எவராலும் அடக்க முடியாது. அதே போல் தனது மதம் தான் உயர்ந்தது எனும் அகம்பாவ மானுடங்களை இறைவன்தான் அடக்க முடியும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by கோவை ராம் Wed Jun 08, 2011 3:30 pm

இதே போன்ற சம்பவம் கோவையிலும் விரைவில் வரலாம் .இந்த மனுஷ பயக காட்டில போயி யானைய தொந்தரவு செய்வதால் வரும் விளைவுகள் இது .கோவையில் கடந்த 10 வருடங்களில் 10 சதம் காடுகள் குறைந்து உள்ளதாம் .அப்புறம் யானைகள் எங்கே போகும்

பாவம் யானைகள் ,அனுபவிக்கட்டும் மனிதர்கள்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by ரபீக் Wed Jun 08, 2011 4:05 pm

என்னுடைய உறவினர்கள் வசிக்கும் பகுதிதான் அது ,,,,,இரண்டு நபர்கள் உயிர் இழந்துள்ளனர் என கூறினார்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி Empty Re: மைசூரை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானைகள்-ஒருவர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum