ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தழும்பே போ.. அழகே வா!

2 posters

Go down

தழும்பே போ.. அழகே வா! Empty தழும்பே போ.. அழகே வா!

Post by தாமு Tue Jun 07, 2011 11:09 am

பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி
பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் காஸ்மெடிக் சர்ஜரியை எத்தனை முறை செய்துகொண்டாலும், தழும்புகள் முழுமையாக மறைவது இல்லை. ஓரளவு தெரியத் தான் செய்கிறது என்பது பலருக்கும் உள்ள வருத்தம். இந்த குறையைத் தீர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுக மாகி விட்டது.



சென்னை குளோபல் மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜன் பேராசிரியர் வி.பி.நாராயணமூர்த்தி இதுபற்றி நம்மிடம் சொல்கிறார்...



''காஸ்மெடிக் சர்ஜரி எனப்படும் அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. இதைப் புதிய தொழில்நுட்பம் என்று கூற முடியாது. ஏனென்றால் எண்டோஸ்கோபி அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கருவியை பிளாஸ்டிக் சர்ஜரியில் பயன்படுத்துவதை வேண்டுமானால், புதிய டெக்னிக் என்று சொல்லலாம். இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பிளாஸ்டிக் சர்ஜரியில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படு கிறது.

ஏஜிங் எனப்படும் வயதானதை மறைக்கும் அறுவைச் சிகிச்சைகளில் அது பெரும் அளவு பயன்படுகிறது. முகத்தில் சுருக்கங்களைச் சரி செய்யும் 'ஃபேஸ் லிஃப்டிங்’, 'ஐப்ரோ லிஃப்டிங்’ எனப்படும் புருவத்தை உயர்த்தும் அறுவைச் சிகிச்சை மற்றும் மார்பகத்தைப் பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காக தலையில் இருந்து காது பகுதி வரை அறுத்து, எலும்பை ஒட்டி உள்ள தோலின் அடிப்பகுதியை இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தழும்பு மறைவாக இருக்கும்.

எபிடெர்மிஸ் எனப்படும் மேல்புறத் தோல், சுருக்கத்துக்குக் காரணம் இல்லை. அடிப்பகுதியில் உள்ள டெர்மிஸ்தான் காரணம். அதனால், முன்பு முகத்தில் காதுப் பகுதியில் முழுவதும் அறுக்க வேண்டி இருந்தது. இப்போது எண்டோஸ்கோபியில் 1 செ.மீ-க்கும் குறைவான அளவுக்கே துளையிடப்படுகிறது. அந்த துளை வழியாக டியூப் செலுத்தப்படுகிறது. அந்த டியூப்புக்குள் அறுவைச் சிகிச்சை செய்யும் கருவி, கேமரா மற்றும் லைட் போன்றவற்றை உள்ளே செலுத்தி, தோலின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கிறோம். அதன் பிறகு, தோலின் அடிப்பகுதியை இழுத்துத் தையல் போடுகிறோம். இதனால் பெரிய அளவில் தழும்புகள் ஏற்படுவதில்லை. 10 ஆண்டுகள் வரை சுருக்கமும் ஏற்படாது.



புருவம் உயர்த்தும் அறுவைச் சிகிச்சையில் காதுப் பகுதியில் தொடங்கி தலை, மீண்டும் அடுத்த காது வரை தோல் அறுக்கப்பட வேண்டும். தலைப் பகுதியில் பெரிஸ்டியம் என்ற லேயரை உரித்து மண்டை ஓட்டில் இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தலையில் லேசான தழும்பு இருக்கும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. நெற்றி பரந்த பகுதி என்பதால், இங்கு மூன்று துளையிடப்பட்டு அதன் உள்ளே கருவிகள் செலுத்தப்பட்டு, பெரிஸ்டியம் லேயர் இழுத்துத் தைக்கப்படுகிறது. இதிலும் தையல் போடுவதற்குப் பதில், ஃபைபரின் க்ளூ எனப்படும் பசைகொண்டு ஒட்டும் முறை வந்துள்ளது.

மார்பகம் பெரிதாக்கும் அறுவை சிகிச்சையிலும் எண்டோஸ்கோபியை பயன்படுத்த முடியும். வழக்கமாக மார்பகத்தின் அடிப்பகுதியில் 5 செ.மீ. அளவுக்கு அறுத்து, உள்ளே சிலிகான் பை வைக்கப்படும். இதனால் சிறிய அளவில் தழும்பு தெரியும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் தொப்புளில் ஒரு துளை போட்டு, அதன் உள்ளே தேவையான கருவிகள் செலுத்தப்படும். தோலின் அடிப்பகுதி வழியாக மார்பகம் வரை கருவியைக் கொண்டுசெல்கிறோம். பின்னர், அங்கு அறுவைச் சிகிச்சைக்கான இடத்தை உருவாக்கி, உப்பு நீர் கரைசல் அடங்கிய பையை செலுத்தி மார்பகம் பெரிதாக்கப்படும். இதனால் தழும்பு வெளியே தெரியாது.

இதயம் செயல் இழந்துவிட்டால் எப்படி மாற்று இதயம் பொருத்துகிறோமோ, அதுபோல கை, கால் துண்டானால் மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை முறைகளும் பிளாஸ்டிக் சர்ஜரியில் வந்துள்ளன. உலகில் ஒருசில நாடுகளில் மட்டுமே நடக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள உரிமம் கேட்டு நாங்கள் விண்ணப்பித்து உள்ளோம். அதேபோல, கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியும் நவீன கருவிகளும், அப்படி குறை இருந்தால் கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும் முறையும் வந்துள்ளது. கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும்போது தழும்பு தெரியா மல் போய்விடும். இந்த சிகிச்சை முறைகள் எல்லாம் இங்கு வர சில காலம் ஆகும்.

உடலில் மிக நீளமானது தோல்தான். அதில் தீக்காயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றிவிட வேண்டும். அப்போதுதான் அதில் சீழ் பிடிக்காது. 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டு, 20 சதவிகிதம் நன்றாக இருந்தால்கூட இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம். தோல் எடுத்த இடத்தில் மீண்டும் தானாகவே தோல் வளர்ந்துவிடும். முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக் காக, செயற்கைத் தோல் சிகிச்சை இருக்கிறது என்றாலும் இதற்கான செலவு மிக மிக அதிகம். ஒரு சதுர அடிக்கும் குறை வான அளவு செயற்கைத் தோலின் விலை 1 லட்சம் ஆகும். வரும் காலத்தில் உள்நாட்டிலேயே செயற்கைத் தோல் உற்பத்தி செய்யப்படும்போது, விலை வெகுவாக குறைந்து மக்களுக்குப் பேருதவி யாக இருக்கும்'' என்று விளக்கம் தருகிறார் பேராசிரியர் நாராயணமூர்த்தி!

- பா.பிரவீன்குமார்


ஜீ.விகடன்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தழும்பே போ.. அழகே வா! Empty Re: தழும்பே போ.. அழகே வா!

Post by முரளிராஜா Tue Jun 07, 2011 11:26 am

பகிர்வுக்கு நன்றி தாமு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தழும்பே போ.. அழகே வா! Empty Re: தழும்பே போ.. அழகே வா!

Post by தாமு Tue Jun 07, 2011 11:47 am

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தழும்பே போ.. அழகே வா! Empty Re: தழும்பே போ.. அழகே வா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum