ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

+7
முரளிராஜா
அருண்
JUJU
realvampire
மகா பிரபு
ரபீக்
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by தாமு Tue Jun 07, 2011 10:32 am




தேர்தல் முடிவு வந்தவுடன் நான் போகும் இடமெல்லாம் ஒரே அம்மா புராணம்தான். டீ கடையில் இருந்து சலூன் கடை வரை எங்கே சென்றாலும் அம்மா வந்துட்டாங்க இனி விலைவாசி குறைந்துவிடும், குற்றங்கள் குறைந்து விடும், தமிழ்நாடு அப்படி ஆகிடும், இப்படி ஆகிடும் என்று ஒரே அம்மா புராணம்தான். அதிலும் ஒருவர் ஒருபடி மேலே போய் இனி இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வார்கள், அம்மா வந்துட்டாங்க இனி ஒருத்தனும் தமிழன் மேல கைய வைக்க முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்த போது எனது மனதுக்குள் இழுந்த கேள்வி இதுதான் "தமிழன் ஏன் இவ்வளவு முட்டாளா இருக்கான்?"


தி.மு.க தோல்வியடைய சில அடிப்படை காரணங்கள் உண்டுதான் அதற்காக இந்த அம்மையாரை அநியாயத்துக்கு நம்புவதையும், புகழ்வதையும் பார்க்கும்போது இவர்களை திருத்தவே முடியாதா என்றுத்தான் எண்ணத்தோன்றுகிறது. இந்த அம்மையார் அப்படி பெரிதாக சாதித்தது தான் என்ன? இவர் ஆட்சியில் தமிழகம் அப்படி என்ன சாதித்துவிட்டது? யாராவது ஒருவர் சொல்ல முடியுமா? வெறும் போலி ஊடக பிரச்சாரங்களை மட்டுமே நம்பி இன்று கோமாளிகளாகவும், ஏமாளிகளாகவும் நிற்கிறார்கள் சிங்கத்தமிழர்கள்.


"அமைதிப்பூங்காவாம்!, நேற்று கலைஞர் கடந்த பதினைந்து நாட்களில் நடந்த குற்றங்களை பட்டியலிட்டபோது அமைதி பூங்காவின் டவுசர் கிழிந்து தொங்கவிடப்பட்டு விட்டது. "

ஈழத்தமிழர் நலன், இனி வரும் நாட்களிலேயே தெரிந்துவிடும் ஈழத்தமிழர்கள் மேல் ஈழத்தாய் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்று. கலைஞர் ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த கொஞ்ச நஞ்ச உதவியும் நிறுத்தப்படப்போவதே நிஜம். இது வைகோவுக்கும் தெரியும், சிங்கத்தமிழன் சீமானுக்கும் தெரியும். இவர்களையெல்லாம் இனி பொடா, தடா போன்ற சட்டங்களை கொண்டு "உள்ளே போடா" என்று சொல்லும்போது தான் ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக ராமேஸ்வரம் கடற்கரையில் காத்திருக்கும் தமிழர்களுக்கும் தெரியும். இனி தமிழக மீனவர்களை சிங்கள கடற்ப்படை சுட்டுக் கொன்றால் கடிதம் கூட வேண்டாம் பிரதமருக்கு ஒரு எஸ்.எம்.எஸ்சாவது அனுப்புங்களேன் என்று போராடப்போகும் அவலநிலையும் வரத்தான் போகிறது.

விலைவாசி உயர்வு:
அன்று ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பளம் வாங்கிய நான் இன்று ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் வாங்குவேன் ஆனால் எனக்கு வெங்காயம், தக்காளி மட்டும் அன்றைக்கு கிடைத்த அதே விலைக்கு கிடைக்க வேண்டும்?. ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் விவசாயிகள் விலையை ஏற்றினால் அய்யய்யோ காப்பாத்துங்க என்று அலறுவது. பிக்காளிப்பயலுங்களா உங்க மனச தொட்டு சொல்லுங்க போன ஆட்சியால் நான் பாதிக்கப்பட்டேன் என்று? இந்த காரணத்தால் தான் நான் பாதிக்கப்பட்டேன் என்று ஒரு காரணம் உங்களால் சொல்ல முடியுமா? எனக்கு தெரிந்த வரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்றே சொல்வேன். பலருடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது, கூலி வேலை செய்பவன் கூட இன்று பைக், மொபைல் என்று சுற்றும் நிலை வந்துவிட்டது. பைக்கில் சுற்றிக்கொண்டிருந்தவர்கள் இன்று காரில் போகும் நிலை வந்திருக்கிறது. மாதம் மூவாயிரம், ஐந்தாயிரம் ரூபாய்க்கு சிங்கியடித்துக்கொண்டிருந்த காலம் போய் இன்று பன்னிரெண்டாம் படித்த பெண்ணே மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் நிலை வந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் போலி ஊடக செய்திகளை மட்டுமே பார்த்து ஏதோ தமிழகமே இருண்டு விட்டது போல் அலறுகிறார்கள். தொலைக்காட்சியை பார்த்து ஏன் கூச்சலிடுகிறீர்கள்? இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் "கடந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா இல்லையா என்று?". என் வீட்டின் அருகில் வசித்த ஒரு விதவையின் மகளே இன்று வேலைக்கு சென்றப்பின் வீடு, பிரிட்ஜ், வாஷின் மெஷின் என்று வாங்கி வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய வளர்ச்சியை இந்த ஐந்தாண்டுகளில் கண்கூடாக பார்த்தவன் நான், உங்கள் குடும்பம் இந்த ஐந்தாண்டுகளில் உயரவில்லை என்றால் அது உங்கள் முட்டாள்தனமாக இருக்குமே தவிர ஆட்சியை குறைக்கூறவே முடியாது. ஏன் என்றால் அவ்வளவு வாய்ப்புகளை கலைஞர் ஆட்சி செய்து கொடுத்திருக்கிறது கடந்த ஐந்தாண்டுகளில்.


மின்வெட்டு:
தி.மு.க வின் தோல்விக்கு பெரிதாக சொல்லப்படும் காரணம் மின்வெட்டு. மின்வெட்டு பற்றி வாய்கிழிய பேசும் ஒவ்வொரு நாதாரியும் ஒரு ஏ.சி பெட்டியை வீட்டில் இந்த ஐந்தாண்டுகளில் மாட்டிவிட்டது என்பதையே மறந்துவிட்டது. ஆட்சியாளர்கள் என்றால் ஏதோ மாயாஜாலம் செய்பவர்கள் என்று நினைத்துவிட்டார்கள் போல, நமக்கு கையில் பணம் வந்தவுடன் உடனே ஏ சி, பிரிட்ஜ் வாங்கியதை போல அரசும் உடனே மின்சார நிலையங்களை கட்டி திறக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு படை எடுத்தது என்று உங்களுக்கே தெரியும், அவைகளுக்கெல்லாம் மின்சாரம் கொடுக்க வேண்டும் என்றால் மின்பற்றா குறை வரத்தான் செய்யும். ஒரு சில அறிவு ஜீவிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுத்துவிட்டு எங்களுக்கு ஏன் மின்சார தடை விதிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள், அவர்களுக்கு மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கெல்லாம் ஏது வேலை? எங்கே இருந்து வந்திருக்கும் இவ்வளவு பணம்? இவைகள் எல்லாம் இல்லை என்றால் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது போல் மொபைல், பைக், கார், பிரிட்ஜ், ஏ.சி போன்றவற்றை எல்லாம் எப்போது வாங்குவோம் என்று கனவுதான் கண்டிருக்க வேண்டும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு புதிதாக இந்த ஆட்சி எதையும் செய்யப்போவது இல்லை, கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு மின்சார நிலையங்களை முடித்தாலே மின்வெட்டு குறைந்துவிடும்/தீர்ந்துவிடும்.




தொப்பிதொப்பி கலைஞரின் அடிவருடி:
இந்த பதிவை பிடித்து நிச்சயம் சில சிங்கத்தமிழர்கள் நான் கலைஞரின் அடிவருடி அதனால் தான் இப்படி பதிவு எழுதுகிறேன் என்று நிச்சயம் பின்னூட்டம் போடுவார்கள், போடும் மன நிலையில் இப்போது வந்திருப்பார்கள். அவர்களுக்காகவே கடந்த பதினைந்து நாட்களில் நடந்த அம்மாவின் சாதனைகளை பட்டியலிடுகிறேன்.


►சட்டசபை மாற்றம்
►கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து
►மோனோ ரயில்
►சமத்துவ கல்வி திட்டம் ரத்து
►திருமண உதவி திட்டம் ரத்து
►கல்வி கட்டணம் பிரச்சனை

இனி வரப்போகும் நாட்களில் மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் பந்தாடப்படப்போகிறது, பானா காத்தாடியாக பறக்கப்போகிறது என்பதற்கு சட்டசபை மாற்றம், சமத்துவ கல்வி திட்டம் ரத்து, மெட்ரோ ரயில் திட்டம் போன்றவையே உதாரணம். சட்டசபை மாற்றம், சமத்துவ கல்வி ரத்து போன்றவற்றால் எத்தனையோ கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணான நிலையில் புதிதாக ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது மக்கள் பணத்தை விரைவாக விரையம் செய்ய "மோனோ ரயில் திட்டம்" என்ற பெயரில். மோனோ ரயில் திட்டத்தால் என்ன பயன் என்பதும், அதனால் எவ்வளவு கோடி பணம் விரையம் ஆகும் என்று ஏற்கனவே பல நண்பர்கள் இணையத்தில் விவாதித்து விட்டார்கள். அடுத்தது திருமண உதவி திட்டம், தங்கத்தில் தாளி வேறு தரப்போகிறார்களாம்? இதையெல்லாம் கேட்டு மகிழ்ந்த ஏழைகளுக்கு தெரியாது இதை பெறவேண்டும் என்றால் சில தகுதிகள் வேண்டும் என்று. ஒருநாள் சம்பளம் குறைந்தது 60 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் தான் இந்த திட்டத்தால் பயனடைய முடியுமாம்(பிச்சை எடுப்பவர்கள் கூட இதைவிட அதிகம் என்று நினைக்கிறேன்) இதுதான் இந்த திட்டத்தை பெற முதல் விதிமுறையாம். அடுத்தது குறைந்தது பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டுமாம்( இதுவரை பத்தாம் வகுப்பு படிக்காத பெண்கள் திரும்பவும் படிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிரார்போல) ஆக இந்த திட்டத்தை அறிவிக்காமலே நிறுத்திவிட்டார் இந்த அம்மையார் என்றே கூறலாம்( இதில் எங்கே உள்ளது ஏழைகள் நலன்). கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து, அ,தி.மு.க வுக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு, வாக்களிக்காத ஏழைகளுக்கு மிகப்பெரிய தண்டனை.


ஜெயலலிதா திருந்திவிட்டார்:
தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு இது நிர்வாகத்துக்கும், கமிட்டிக்கும் உள்ள பிரச்சனை அரசு தலையிடாது, பெட்டிசன் கொடுத்தால் தலையிடுவேன் என்று கூரியதை கேட்ட பெரும்பாலான அ.தி.மு.க தொண்டர்களே வையடைத்து விட்டனர் இப்படியும் அறிக்கை விடலாமா என்று. "ஜெயலலிதா திருந்திவிட்டார்" என்று ஒரு நண்பர் என்னிடம் கூறினார் அவரும் இந்த பதிவை படித்துக்கொண்டுத்தான் இருப்பார் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை இந்த அறிக்கை பற்றி. அடுத்தது "தோடு அணிந்தது" பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அது என் இஷ்ட்டம் என்று கூறியிருந்தால் கூட பராவாயில்லை, தொண்டர்கள் தீக்குளிப்பேன் என்று கூறியதால்தான் அணிந்துக்கொண்டேன் என்று கூறியதை கேட்டபோது எனக்குள் எழுந்த கேள்வி "இவர் மக்களுக்கு பெரிதாக ஆப்பு வைக்க காத்திருக்கிறாரோ?" என்பதுதான். இந்த அறிக்கைகளை எல்லாம் மக்கள் தொலைக்காட்சியில் பார்ப்பார்களே இதை நம்புவார்களா? என்பது கூடவா அம்மையாருக்கு தெரியாது? மக்களை இவ்வளவு பெரிய முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு இவர் இப்படி கூறுகிறார் என்றால் இன்னும் வரப்போகும் காலங்களில் தங்கதாளி திட்டம்போல் என்னென்ன திட்டம் வைத்திருக்கிறாரோ, தோடு அணிந்ததற்கு சொன்ன காரணங்கள் போல் என்னென்ன காரணங்கள் சொல்லப்போகிறாரோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்!.


http://thoppithoppi.blogspot.com/2011/06/blog-post_9970.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by ரபீக் Tue Jun 07, 2011 10:35 am

விழுந்த ஓட்டுக்கள் எல்லாம் தனக்கு கிடைத்தைவை என அம்மா நினைத்து கொண்டுள்ளார் ,உண்மையில் அது கருணாநிதிக்கு எதிராக விழுந்த ஓட்டுக்கள் என்பதனை மறந்து பழைய பாணியில் ஆட்சி தொடருமேயானால் அது அவருக்கு பெரும் கேடாக முடியும் என்பதனை அவர் நினைவில் கொள்ளல்வேண்டும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by மகா பிரபு Tue Jun 07, 2011 10:54 am

அனைத்து தமிழர்களும் சிந்திக்க வேண்டிய கட்டுரை.

மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் கலைஞரை குறை சொல்லும் பச்சைத் தமிழர்கள் இதை சிந்திக்கவும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by realvampire Tue Jun 07, 2011 11:18 am

என்ன சிந்தித்து என்ன பயன் 5 வருடம் குனிந்துதான் ஆக வேண்டும் .
ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; 9452 ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; 9452 ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; 9452
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by JUJU Tue Jun 07, 2011 11:36 am

இந்த அம்மையார் அப்படி பெரிதாக சாதித்தது தான் என்ன? இவர் ஆட்சியில் தமிழகம் அப்படி என்ன சாதித்துவிட்டது? யாராவது ஒருவர் சொல்ல முடியுமா?---தாமு வின் கேள்வி

வீராணம் திட்டம் , கைவிட்ட திட்டம் அதை சாதித்து காட்டினார்கள் ,சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சம் குறைந்து விட்டது.
எஸ்மா ,டெஸ்மா சட்டம் அமுல்.
மழை நீர் சேகரிப்பு (இந்தியா வில் முதல் முறை அமுல் )
அரசு ஊழியர் நேரத்திருக்கு வருகை.
டாஸ்மாக் ,மணல் குவாரி மூலம் அரசு வருவாய் பெருக்கியது,
தேர்தலின் போதும் அரசு கஜானாவை FULL கா வைத்திருந்தது,
வீரப்பன் பிடித்தது,
..............................................................................................
......................இன்னும் இருக்கு


Last edited by JUJU on Tue Jun 07, 2011 11:39 am; edited 1 time in total
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by அருண் Tue Jun 07, 2011 11:38 am

அப்ப மக்கள் ஏமாற்றம் அடைந்து விட்டார்களா! அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by முரளிராஜா Tue Jun 07, 2011 11:41 am

ரபீக் wrote:விழுந்த ஓட்டுக்கள் எல்லாம் தனக்கு கிடைத்தைவை என அம்மா நினைத்து கொண்டுள்ளார் ,உண்மையில் அது கருணாநிதிக்கு எதிராக விழுந்த ஓட்டுக்கள் என்பதனை மறந்து பழைய பாணியில் ஆட்சி தொடருமேயானால் அது அவருக்கு பெரும் கேடாக முடியும் என்பதனை அவர் நினைவில் கொள்ளல்வேண்டும்
சியர்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by ஜாஹீதாபானு Tue Jun 07, 2011 12:01 pm

எவ்வளவோ பிரச்சனை இருக்கு இவுங்க தோடு போடலங்குறது தான் இப்போ தலையாய பிரச்சனையா? எனக்கும் ரொம்ப கோவமா வந்தது. தோடு போடலங்குறதுக்காக தீக்குளிப்பேன்னு சொன்னது. எவன் சொன்னானு தெரியல. அம்மா நல்ல ஜோக்கடிக்கிறாங்கணு மட்டும் தெரியுது. கொஞ்சம் கூட கூச்சமில்லாம இதை செய்தியா சொல்லி இருக்காங்களே இதை கேட்டுட்டு எனக்கு அப்போ சிரிப்பு தான் வந்தது. 5 வருஷத்துக்கு நம்ம தலைவிதி இப்படி தான் இருக்கும் என்ன பண்ணுறது. அதை மாத்த முடியாது பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by தாமு Tue Jun 07, 2011 12:06 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by alwin Tue Jun 07, 2011 12:35 pm

JUJU wrote:இந்த அம்மையார் அப்படி பெரிதாக சாதித்தது தான் என்ன? இவர் ஆட்சியில் தமிழகம் அப்படி என்ன சாதித்துவிட்டது? யாராவது ஒருவர் சொல்ல முடியுமா?---தாமு வின் கேள்வி

வீராணம் திட்டம் , கைவிட்ட திட்டம் அதை சாதித்து காட்டினார்கள் ,சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சம் குறைந்து விட்டது.
எஸ்மா ,டெஸ்மா சட்டம் அமுல்.
மழை நீர் சேகரிப்பு (இந்தியா வில் முதல் முறை அமுல் )
அரசு ஊழியர் நேரத்திருக்கு வருகை.
டாஸ்மாக் ,மணல் குவாரி மூலம் அரசு வருவாய் பெருக்கியது,
தேர்தலின் போதும் அரசு கஜானாவை FULL கா வைத்திருந்தது,
வீரப்பன் பிடித்தது,
..............................................................................................
......................இன்னும் இருக்கு
உண்மையான ஏழை மக்களை சென்று அரசின் திட்டங்கள் சேர வேண்டும். ஆனால் கலைஞரின் ஆட்சியில் ஏழைகளை விட பணக்காரர்கள்தான் அதிகம் பயன் அடைந்தார்கள். வரம்பிற்குல்லாகத்தான் ஒரு திட்டத்தை செயல் படுத்த வேண்டும். அப்போதுதான் அரசின் கஜானா சீராக இருக்கும்.ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் அவரின் ஆட்சியில் கஜானா காலியாக தான் இருக்கும். அவரின் ஆட்சியின் மூலம் ஒரு குடும்பம் தான் அதிக பயன் அடைந்தது.
avatar
alwin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Back to top Go down

ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு; Empty Re: ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு; ஜெயலலிதா தான் டாப்பு;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தான் முதல்வரா என்பது கலைஞருக்கு இப்போது தான் சந்தேகம், மக்களுக்கு 5 வருடங்களாக..! : சீமான்
» எங்களுக்கு ஏதாச்சும் நடந்தா ஜெயலலிதா தான் பொறுப்பு: கனிமொழி
» மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா
» கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum