ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

+4
kitcha
மஞ்சுபாஷிணி
கே. பாலா
அன்பு தளபதி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Empty நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Mon Jun 06, 2011 9:22 pm

First topic message reminder :

நான் ரசித்த கவிதைகளை ஒரு சங்கிலி கண்ணி கொர்ப்பதை தொடர் பதிவுகளாக இடலாம் என எண்ணுகிறேன் பெரும்பாலும் சக வலைப்பூ பதிவர்களின் கவிதைகள் தான் ஆனாலும் என் மனம் கவர்ந்தவை உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காமலும் போகும் என்ன செய்ய எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் இல்லை இருப்பினும் குறை இருந்தால் சொல்லுங்கள்

இந்த கவிதையை படித்தவுடன் ஒரு ஏக்கம் இது போல ஒன்றை நாம் எழுத வில்லையே என

கடவுளும், குழந்தையும்


சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.

சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.

**********

எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.

***********

குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.

**************

இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;

காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.


நன்றி அச்சம் தவிர் வலைப்பூ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by rameshnaga Mon Jul 11, 2011 11:33 pm

வெகு, வெகு, தனித்துவமான கவிதைக் குரலாயிருக்கிறது
பிரகாஷுடையது.
இது மாதிரியான கவிதைகள்தான், தனக்குள் கவிதையையும்,
எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோரும்
படிக்க வேண்டியது.

உண்மையில்..நான் இன்று ஒரு நல்ல பாடம் படித்தேன்.
மணி அஜீத்திற்கு எனது பிரத்தியேக வணக்கங்கள்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Tue Jul 12, 2011 10:00 pm

நன்றி ரமேஷ் அய்யா நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Tue Jul 12, 2011 10:06 pm

மிருணா மிக அழகான கவிதைகளை படைக்கும் ஆற்றலும் சொர்க்களில் நம்மை கைபிடித்து அழைத்து செல்லும் லாவகமும் அறிந்த கவிஞர் அவரின் கவிதை ஒன்று உங்களுக்கு

மெய்ப்பொருள்

ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின் அழகை
கண்களில் நிறைத்தபடி செல்கிறேன்...
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப் பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள்
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால்
வாழ்கையைப் பற்றிச் செல்ல
பிறிதொரு தேவை இல்லை.

-மிருணா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Sun Jul 17, 2011 9:07 pm

கண்ணதாசனின் தாசன் எழுக்திய அழகு கவிதை

வடிவேல வா..!
************************

ஆண்டொன்று செல்கிறதே
என வருந்தவா?
ஆண்டவனை நெருங்குகிறேன்
என சிரிக்கவா?

பூண்டேன்நான் திருநீறு
பொன் வேலவா?
வேண்டேன்நான் ஓர்பிறவி
விரைந் தாளவா!

நரைகொண்டு பிணிவாங்கி
நம னாளவா?
வரம்வாங்கி வந்தேன்நான்
வடி வேலவா?

கண்ணிருண்டு காதடைத்துக்
கடல் நீந்தவா?
எண்ணடங்கா உன்னருளால்
இளைப் பாறவா?

கரையேற்றும் கலமாகக்
கலந்தோடி வா!
பிறைகொண்ட தலைமகனின்
பிள்ளை நிலாவா!

உயர்வாக மயிலேறி
ஓடோடி வா!
அயர்வாக இருக்கின்றேன்
அணைத்தேற்ற வா!

வேலாக வா!-வடி
வேலாக வா!
காலாக வா!-வடி
காலாக வா!

மருந்தாக வா!-அரு
மருந்தாக வா!
விருந்தாக வா!-நான்
விருந்தாக வா?

மயிலாக வா!-மா
மயிலாக வா!
குயிலாக வா!-நான்
குயிலாக வா?

பழமாக வா!-மாம்
பழமாக வா!
பழமாக வா?-நான்
பசியாற வா!!!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Mon Sep 26, 2011 9:30 pm

வைகறைப் புல்

1.
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி

2.
பரிதியின் தாகவெறி முன்
எத்தனை தன்னம்பிக்கையோடு
துளி நீட்டி நிற்கிறது அச்சிறு புல்!
எத்தனை அன்போடு வாங்கிப் பருகுகிறது
பரிதியும்!

3.
புல்லும் பெருமிதத்துடன்
நிமிர்ந்து நிற்கிறது
வானின் வைரக்கல் அன்பு
அதனைக் குளிர்வித்ததால்

4.
பரிதி உதித்தவுடன்தான் தெரிந்தது
இரவோடு இரவாக
வானம் தனக்கு வழங்கியிருந்த
அரும்பொருள் என்னவென்று
அடைந்த பேருவகையில்
அப்பொருளை அது பரிதிக்கே
கொடுத்திழந்து மேலும் களித்தது
-தேவதேவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  - Page 2 Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum