ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

+4
kitcha
மஞ்சுபாஷிணி
கே. பாலா
அன்பு தளபதி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Mon Jun 06, 2011 9:22 pm

நான் ரசித்த கவிதைகளை ஒரு சங்கிலி கண்ணி கொர்ப்பதை தொடர் பதிவுகளாக இடலாம் என எண்ணுகிறேன் பெரும்பாலும் சக வலைப்பூ பதிவர்களின் கவிதைகள் தான் ஆனாலும் என் மனம் கவர்ந்தவை உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காமலும் போகும் என்ன செய்ய எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் இல்லை இருப்பினும் குறை இருந்தால் சொல்லுங்கள்

இந்த கவிதையை படித்தவுடன் ஒரு ஏக்கம் இது போல ஒன்றை நாம் எழுத வில்லையே என

கடவுளும், குழந்தையும்


சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.

சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.

**********

எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.

***********

குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.

**************

இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;

காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.


நன்றி அச்சம் தவிர் வலைப்பூ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by கே. பாலா Mon Jun 06, 2011 9:31 pm

நல்லது . தொடர்ந்து பதிவு இடுங்கள் நண்பா! இணையம் ஒரு சமுத்திரம் அதில் உங்கள் உள்ளம் தொட்ட நல்ல முத்துகளை மட்டும் தாருங்கள் .அனைத்து கவிதைகளும் அருமை ! மகிழ்ச்சி


Last edited by கே. பாலா on Mon Jun 06, 2011 9:37 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:35 pm

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று... அதான் சாமி சாப்பிடலையேன்னு பார்க்கிறது...

கடவுளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டதால் தான் கடவுளுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்கிறது....

எல்லோருமே விரும்புவது எந்த பிரச்சனைகளும் எட்டாத குழந்தைப்பருவமே...

ஹௌ ஸ்வீட். விருப்பமில்லாமல் குழந்தை கற்கவும் கடவுள் காக்கவும் செல்கிறார்களாம்...

நல்முத்து சரம் தொடரட்டும் மணி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by kitcha Mon Jun 06, 2011 9:54 pm

எல்லா கவிதைகளும் அருமை.ஒருகணம் நானும் குழந்தையானேன் கவிதைகளோடு சேர்ந்து நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  224747944 நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  224747944 நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  2825183110 நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by மகா பிரபு Mon Jun 06, 2011 9:58 pm

தொடருங்கள் மணி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by றினா Mon Jun 06, 2011 11:27 pm

இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;

நல்ல வரிகள்
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by முரளிராஜா Tue Jun 07, 2011 8:05 am

அருமையான கவிதைகள்
பகிர்வுக்கு நன்றி மணிஅஜித்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Sat Jul 02, 2011 8:38 pm

கவிஞர் தேவதேவன் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் தேவதேவன் எனது முன்மாதிரி எனது குரு என் துரோணாச்சரியார் அவரது கவிதைகள் போல இயற்க்கையை எவருடய கவிதையும் கூறியதில்லை சில கவிதைகளை பகிர்ந்து கொள்கின்றேன் படித்து பின் கருத்தை சொல்லுங்கள்

கூழாங்கற்கள் -கவிஞர் தேவதேவன்

இந்தக் கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்
”ஐயோ இதைப் போய்” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துள்
என்னைச் சரித்துவிட்டாய்
சொல்லொணாத
அந்த மலைவாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ
இக்கூழாங்கற்கள் உனக்கும்?
என எண்ணினேன்
இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது
இவற்றின் யெளவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது
இவற்றின் மெளனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம்
தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்த
ஒரு உன்னத சிருஷ்டி
நிறத்தில் தன் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி
தவம் மேற்கொண்ட நோக்கமென்ன? என்றால்
தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Tue Jul 05, 2011 9:36 pm

பிரகாஷின் அழகிய கவிதைகளில் இது புதியது மிக அளவெடுத்த வார்த்தைகளுடன் எழுதும் பிரகாஷின் பல கவிதைகளை ஈகரையில் பதிவிட்டு உள்ளேன் மற்றுமொரு கவிதை

மொழியற்ற நொடி


கவிதையின்
முதல்வரியால்
எழுதமுடிந்ததில்லை
மரணத்திலிருந்து
மீண்டவனின்
வார்த்தைகளற்ற
மறுநொடியை-
கூடு சிதைந்தபின்னும்
மறுகூட்டை நிறுவமுயலும்
பறவையின் நம்பிக்கையை-
தூக்குக்கயிற்றின் நிழலில்
மன்னிப்பு வழங்கப்பட்டவனின்
விசும்பும் கண்ணீரை-

கவிதையின்
இறுதிவரியாலும்
எழுதவாய்த்ததில்லை
பந்தயத்தில் தோற்றவனின்
விரக்திபூத்த வியர்வையை -
பிரார்த்தனைகளில்
மறைந்திருக்கும்
துன்பத்தின் பெருவலியை-
நாடிழந்த இனத்தின்
நெடுங்கனவு
கலைக்கப்பட்டுக்
காய்ந்த பின்னும்
சொட்டும் குருதியை-

கவிதையின்
முதல்
வரியாயும்
இறுதி வரியாயும்
இருக்க
வாய்த்ததில்லை
மொழியைக்
கடந்தவற்றிற்கும்
துறந்தவற்றிற்கும்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by அன்பு தளபதி Mon Jul 11, 2011 10:25 pm

மீண்டும் பிரகாஷின் கவிதை மிகவும் ரசிக்கும் படி இருக்கிறது

குரைப்பின் மொழி

வெளியே கூட்டிப் போக
ஒரு குரல்.
தனியே விட்டு
ஊர் போய்த்திரும்பினால்
தவிப்பாய்
வேறொரு குரல்.
பேப்பர் போட
வருபவருக்கு ஒருவிதம்.
கொய்யா மரத்தில்
அணிலும் காக்கையும்
விரட்டிப்பிடிக்கமுடியாக்
கோபத்தில் ஒருவிதம்.
மேயும் மாடுகளின்
நடமாட்டத்துக்கு
தொடர் குரைப்பு.
மாதமொருமுறை வரும்
சிலிண்டருக்கோ
பயத்தோடு ஓர் குரைப்பு.
ஓரெழுத்துக் கூடினாலும்
பால்காரருக்கும்
தபால்காரருக்கும்
வெவ்வேறுவிதம்.
பாம்புக்கு வன்குரல்.
சிறுநீர் கழிக்கவும்
இனம் பெருக்கவும்
வெவ்வேறு தொனிகளில்.
குட்டிகளுடன்
விளையாடுகையில்
செல்லமாய் ஒரு குரல்.
யாருமற்ற இரவுகளில்
தொலைதூரக்
குரைப்புக்கு
பதில்குரைப்பாய்
சிலநேரம்.
எதுவுமில்லா அலுப்பூட்டும்
பொழுதுகளில்
ஆயாசமாய் ஒரு குரல்.
திடுக்கிடும் கனவுகள்
கலைகையில்
குழப்பமாய் ஒரு குரல்.
எஜமானன்
இறந்துபோனால்
தேற்றமுடியாத
உயிரின் துயரம்
சொட்டும் குரலென
நாயின் குரல்
நாற்பது விதம்.
என் கவிதைக்குக்
கூட இல்லை
இத்தனை விதம்.
- பிரகாஷ்ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்  Empty Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum