Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
+2
மஞ்சுபாஷிணி
ஷீ-நிசி
6 posters
Page 1 of 1
ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
ஊழலை ஒழிக்கமுடியுமா?!
shenisi
இலஞ்சம் நாடெங்கும் ஒரு வியாதியைப்போல ஒவ்வொரு நுண்துளைகளிலும் நிரம்பியிருக்கிறது. இலஞ்சம் என்பது இல்லாமல் எங்கும் எதையும் சாதிக்கமுடியாத ஒரு நிலைதான் இன்று கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும்.
shenisi
நம் தாய்த்திருநாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு புற்றுநோயைப்போல இது இந்த தேசத்தை ஊடுருவியிருக்கிறது. எந்த துறையிலாவது இல்லை என்று எவராலும் சொல்லமுடியாத அளவிற்கு இன்று இந்த இலஞ்சம் எல்லைகளை கடந்து பரவியிருக்கிறது.
shenisi
பணம் இருப்பவன் எல்லா இடத்திலும் தன் காரியத்தை சாதித்துக்கொள்கிறான். பணம் இல்லாதவன்???
இந்த நாட்டிலே வாழ அருகதையற்றவன் என்ற நிலைதான் இன்று.
shenisi
கல்வித்துறையில் இலஞ்சம்...
நீதித்துறையில் இலஞ்சம்,
காவல்துறையில் இலஞ்சம்,
அரசியலில் இலஞ்சம்,
அலுவலகங்களில் இலஞ்சம்.... எங்கும் எங்கும் இலஞ்சம்.
shenisi
எவன் அதிகம் இலஞ்சம் கொடுக்கிறானோ அவனுக்கு தான் எல்லாத்துறையும் வளைந்துகொடுக்கிறது.
shenisi
இதற்கு தீர்வுதான் என்ன?
shenisi
புத்தர் சொல்வது போல ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம். பணம் என்னும் ஆசை மனிதனை நாளுக்கு நாள் விழுங்கிக்கொண்டிருக்கிறது.
shenisi
பணம் உருமாறுகிறது இலஞ்சமாய். இலஞ்சம் கொடுக்ககூடாது என்று வைராக்கியமாய் இருப்பவனையும் கூட இந்த சமூகம் விடுவதில்லை. தன் வீடுகட்டவோ, மின் இணைப்பு பெறவோ, பிள்ளைகளுக்கான சான்றிதழ் வாங்கவோ ஒருவன் முயற்சி செய்து எல்லா சான்றுகளையும் வைத்திருந்தாலும் அவன் இலஞ்சம் கொடுக்காமல் தன் காரியத்தை சாதிக்கமுடியாத ஒரு நிலைதான் இன்று எல்லா இடங்களிலும்...
shenisi
இந்த பிரபஞ்சம் இலஞ்சத்திலிருந்து விடுபட வழிதான் என்ன?
shenisi
இப்படி அவ்வபோது என் மனம் யோசித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் இதிலிருந்து இனி எந்த நாடும் விடுபட வழியில்லை என்று கூட தோன்றும்.
shenisi
ஆனால்.. சமீபகாலமாய் என் மனதில் இதற்கு ஒரு வழி தோன்றியுள்ளது. ஆம்! நிச்சயம் இந்த நாட்டிலிருந்து ஏன் இப்பிரபஞ்சத்திலிருந்தே இந்த இலஞ்சத்தை ஒழிக்கமுடியும் என்பதற்கான ஒரு வழி எனக்கு அவ்வபோது மனதில் அசைவாடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அது நடக்குமா என்ற கேள்வியும் எழும்புகிறது..
shenisi
இதோ என் மனதில் தோன்றி அசைவாடிக்கொண்டிருக்கும் அந்த வழி! மத்திய அரசு நினைத்தால் இது சாத்தியம் என்றே என் மனதிற்கு படுகிறது...
shenisi
ரூபாய், டாலர், ஈரோ என்று வெவ்வேறு வடிவங்களில் புழங்கிக்கொண்டிருக்கும் பணம், அரசாங்கத்தின் கணக்கிற்கு வந்தால் வெள்ளை பணம். அதுவே அரசாங்கத்தின் கணக்கில் வராமல் புழங்குமானால் கறுப்பு பணம். இந்த கறுப்பு பணம் தான் ஒரு ஜனநாயகத்தின் வளர்ச்சியையே அழிக்கிறது. அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்மை செய்யவிடாமல் ஏமாற்ற வைக்கிறது. எல்லாத்துறைகளும் இந்த கறுப்பு பணத்தின் மீதான மோகத்தால் எல்லாத்தீமையான செயல்களுக்கும் வளைந்துகொடுக்கிறது.
shenisi
இந்த பணம் என்பதே இல்லையென்று தடைசெய்யபடுமானால்........
shenisi
ஒரு எடுத்துக்காட்டாக மத்திய அரசு இன்று ஒரு அறிக்கை விடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
shenisi
வருகிற 1:1:2012 ஆம் வருடத்திலிருந்து ரூபாய்தாள்களுக்கும், காயின்களுக்கும் இனி மதிப்பில்லை. அவரவர் தங்கள் பணங்களை ரிசர்வ் பேங்கிடம் ஒப்படைத்து தங்கள் கணக்கிற்கு ஒரு ஸ்வைப்பிங் அட்டை பெற்றுக்கொள்ளவேண்டும். இனி எல்லா பரிமாற்றங்களுக்கும் இந்த அட்டையையே பயன்படுத்தவேண்டும். ஒவ்வொருமுறை நீங்கள் பயன்படுத்தும்போதும் உங்கள் கணக்கிலிருந்து உங்கள் சேமிப்புதொகை குறையும். ஒருவர் உங்களுக்கு தொகை அனுப்பவதும் அல்லது நீங்கள் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப நினைப்பதும் இதற்கென நாடெங்கும் நிறுவப்படும் ATB (ANYTIME BANK) (ATM இயந்திரம் என்பது இருக்காது) மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக மட்டுமே நீங்கள் பரிமாறிக்கொள்ளவேண்டும்.
shenisi
இப்படி ஒரு சட்டம் நிறுவப்பட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்.
shenisi
பணத்திற்கு மதிப்பில்லை என்றவுடன் ஓவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாவர். எங்கும் முதலீடு செய்யமுடியாது. பணத்திற்கு மதிப்பு இல்லை என்பதால் எவரும் எதையும் பணத்திற்காக விற்கமாட்டார்கள். வேறு வழியில்லாமல் எல்லா கறுப்பு பணங்களும் வீதிக்கு வரும். குப்பைகளாக!!!!!
shenisi
நாம் எங்கும் எவருக்கும் இலஞ்சம் என்பதே கொடுக்க தேவைப்படாது. ஒருவேளை அவர்களுடைய கணக்கிற்கு நம்மை அவர்கள் தொகை பரிமாற்றம் செய்ய நிர்பந்திப்பார்களானால் அதற்கான தொகைக்கு அவர்கள் அரசிற்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டியிருக்கும்.
எனவே நிச்சயம் தொகை பரிமாற்றம் செய்ய நிர்பந்திக்கமாட்டார்கள்.
shenisi
ஒவ்வொரு அரசியல்வாதிகள் பெறும் அனைத்து வருமானமும் வெளிப்படையாக அரசிற்கு தெரியவரும்.
shenisi
எல்லா தொகையுமே நாட்டில் வெள்ளை தொகைகளாக மட்டுமே இருக்கும். (நான் இங்கே தொகை என்று குறிப்பிட காரணம் இனி பணம் என்பதே இல்லை என்பதால்) பணம் என்ற ஒன்று இல்லாமல் வெறும் மறைமுகமாகவே நம்முடைய எல்லா பரிமாற்றங்களும் நடைபெறும்.
shenisi
பிச்சைக்காரர்கள் முற்றிலும் மறைந்துபோவார்கள். நீங்கள் பிச்சையிடுவதற்கு உங்களிடம் காயினும் இருக்காது, ரூபாய் தாளும் இருக்காது. ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் உழைத்து சாப்பிடவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளபடுவார்கள். மனித உழைப்பு அதிகமாகும்.
shenisi
ஒவ்வொரு கடைகளிலும் ஸ்வைப்பிங் இயந்திரம் இருந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அவரால் யாருக்கும் வியாபாரம் செய்யமுடியாது.
shenisi
தீப்பெட்டி முதல் குளிர்சாதனபெட்டி வரை எதுவாங்கவேண்டுமானாலும் நாம் ஸ்வைப்பிங் அட்டை வழியாகவே வாங்கமுடியும்.
shenisi
போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு எந்த லாரிகாரனும் எந்த தொகையும் கொடுக்கவேண்டிய தேவை இருக்காது. பெற முடியாத நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படும்போது சட்டப்படி செயல்பட முன்வருவார்கள். இரவு 10 மணிக்கு முன்னதாக எந்த கனரக வாகனமும் சென்னைக்குள் நுழையமுடியாது. எல்லாமே சட்டப்படி நடக்கும்.
shenisi
இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரால் பிடிக்கபடுவார்களானால், தங்களிடம் இருக்கும் ஸ்வைப்பிங் அட்டை மூலம் அதிகாரியிடம் இருக்கும் ஸ்வைப்பிங் இயந்திரம் வழியே அபராதத்தொகையை செலுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.
shenisi
வரி ஏய்ப்பு என்பதற்கே வாய்ப்பில்லாமல் போகும்.
shenisi
எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதி நிதியினை ஏப்பம் விட முடியாது. வளர்ச்சி நிதிக்காக மட்டுமே பயன்படும்.
shenisi
பணம் என்ற ஒன்று இல்லையென்றால் இலஞ்சம் என்ற ஒன்றும் இல்லை.
shenisi
நான் மேலே சொன்ன மாற்றங்கள் என் அறிவுக்கு எட்டியவரை.. ஆனால் ஒரு மிகப்பெரிய மாற்றமே நம் நாட்டில் நிகழும் என்று என் மனம் 100 மடங்கு உறுதியாய் சொல்கிறது..
shenisi
சொல்லுங்கள் இது சாத்தியமா?
shenisi
இலஞ்சம் நாடெங்கும் ஒரு வியாதியைப்போல ஒவ்வொரு நுண்துளைகளிலும் நிரம்பியிருக்கிறது. இலஞ்சம் என்பது இல்லாமல் எங்கும் எதையும் சாதிக்கமுடியாத ஒரு நிலைதான் இன்று கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும்.
shenisi
நம் தாய்த்திருநாடான இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு புற்றுநோயைப்போல இது இந்த தேசத்தை ஊடுருவியிருக்கிறது. எந்த துறையிலாவது இல்லை என்று எவராலும் சொல்லமுடியாத அளவிற்கு இன்று இந்த இலஞ்சம் எல்லைகளை கடந்து பரவியிருக்கிறது.
shenisi
பணம் இருப்பவன் எல்லா இடத்திலும் தன் காரியத்தை சாதித்துக்கொள்கிறான். பணம் இல்லாதவன்???
இந்த நாட்டிலே வாழ அருகதையற்றவன் என்ற நிலைதான் இன்று.
shenisi
கல்வித்துறையில் இலஞ்சம்...
நீதித்துறையில் இலஞ்சம்,
காவல்துறையில் இலஞ்சம்,
அரசியலில் இலஞ்சம்,
அலுவலகங்களில் இலஞ்சம்.... எங்கும் எங்கும் இலஞ்சம்.
shenisi
எவன் அதிகம் இலஞ்சம் கொடுக்கிறானோ அவனுக்கு தான் எல்லாத்துறையும் வளைந்துகொடுக்கிறது.
shenisi
இதற்கு தீர்வுதான் என்ன?
shenisi
புத்தர் சொல்வது போல ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம். பணம் என்னும் ஆசை மனிதனை நாளுக்கு நாள் விழுங்கிக்கொண்டிருக்கிறது.
shenisi
பணம் உருமாறுகிறது இலஞ்சமாய். இலஞ்சம் கொடுக்ககூடாது என்று வைராக்கியமாய் இருப்பவனையும் கூட இந்த சமூகம் விடுவதில்லை. தன் வீடுகட்டவோ, மின் இணைப்பு பெறவோ, பிள்ளைகளுக்கான சான்றிதழ் வாங்கவோ ஒருவன் முயற்சி செய்து எல்லா சான்றுகளையும் வைத்திருந்தாலும் அவன் இலஞ்சம் கொடுக்காமல் தன் காரியத்தை சாதிக்கமுடியாத ஒரு நிலைதான் இன்று எல்லா இடங்களிலும்...
shenisi
இந்த பிரபஞ்சம் இலஞ்சத்திலிருந்து விடுபட வழிதான் என்ன?
shenisi
இப்படி அவ்வபோது என் மனம் யோசித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் இதிலிருந்து இனி எந்த நாடும் விடுபட வழியில்லை என்று கூட தோன்றும்.
shenisi
ஆனால்.. சமீபகாலமாய் என் மனதில் இதற்கு ஒரு வழி தோன்றியுள்ளது. ஆம்! நிச்சயம் இந்த நாட்டிலிருந்து ஏன் இப்பிரபஞ்சத்திலிருந்தே இந்த இலஞ்சத்தை ஒழிக்கமுடியும் என்பதற்கான ஒரு வழி எனக்கு அவ்வபோது மனதில் அசைவாடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அது நடக்குமா என்ற கேள்வியும் எழும்புகிறது..
shenisi
இதோ என் மனதில் தோன்றி அசைவாடிக்கொண்டிருக்கும் அந்த வழி! மத்திய அரசு நினைத்தால் இது சாத்தியம் என்றே என் மனதிற்கு படுகிறது...
shenisi
ரூபாய், டாலர், ஈரோ என்று வெவ்வேறு வடிவங்களில் புழங்கிக்கொண்டிருக்கும் பணம், அரசாங்கத்தின் கணக்கிற்கு வந்தால் வெள்ளை பணம். அதுவே அரசாங்கத்தின் கணக்கில் வராமல் புழங்குமானால் கறுப்பு பணம். இந்த கறுப்பு பணம் தான் ஒரு ஜனநாயகத்தின் வளர்ச்சியையே அழிக்கிறது. அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்மை செய்யவிடாமல் ஏமாற்ற வைக்கிறது. எல்லாத்துறைகளும் இந்த கறுப்பு பணத்தின் மீதான மோகத்தால் எல்லாத்தீமையான செயல்களுக்கும் வளைந்துகொடுக்கிறது.
shenisi
இந்த பணம் என்பதே இல்லையென்று தடைசெய்யபடுமானால்........
shenisi
ஒரு எடுத்துக்காட்டாக மத்திய அரசு இன்று ஒரு அறிக்கை விடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
shenisi
வருகிற 1:1:2012 ஆம் வருடத்திலிருந்து ரூபாய்தாள்களுக்கும், காயின்களுக்கும் இனி மதிப்பில்லை. அவரவர் தங்கள் பணங்களை ரிசர்வ் பேங்கிடம் ஒப்படைத்து தங்கள் கணக்கிற்கு ஒரு ஸ்வைப்பிங் அட்டை பெற்றுக்கொள்ளவேண்டும். இனி எல்லா பரிமாற்றங்களுக்கும் இந்த அட்டையையே பயன்படுத்தவேண்டும். ஒவ்வொருமுறை நீங்கள் பயன்படுத்தும்போதும் உங்கள் கணக்கிலிருந்து உங்கள் சேமிப்புதொகை குறையும். ஒருவர் உங்களுக்கு தொகை அனுப்பவதும் அல்லது நீங்கள் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப நினைப்பதும் இதற்கென நாடெங்கும் நிறுவப்படும் ATB (ANYTIME BANK) (ATM இயந்திரம் என்பது இருக்காது) மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக மட்டுமே நீங்கள் பரிமாறிக்கொள்ளவேண்டும்.
shenisi
இப்படி ஒரு சட்டம் நிறுவப்பட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்.
shenisi
பணத்திற்கு மதிப்பில்லை என்றவுடன் ஓவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாவர். எங்கும் முதலீடு செய்யமுடியாது. பணத்திற்கு மதிப்பு இல்லை என்பதால் எவரும் எதையும் பணத்திற்காக விற்கமாட்டார்கள். வேறு வழியில்லாமல் எல்லா கறுப்பு பணங்களும் வீதிக்கு வரும். குப்பைகளாக!!!!!
shenisi
நாம் எங்கும் எவருக்கும் இலஞ்சம் என்பதே கொடுக்க தேவைப்படாது. ஒருவேளை அவர்களுடைய கணக்கிற்கு நம்மை அவர்கள் தொகை பரிமாற்றம் செய்ய நிர்பந்திப்பார்களானால் அதற்கான தொகைக்கு அவர்கள் அரசிற்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டியிருக்கும்.
எனவே நிச்சயம் தொகை பரிமாற்றம் செய்ய நிர்பந்திக்கமாட்டார்கள்.
shenisi
ஒவ்வொரு அரசியல்வாதிகள் பெறும் அனைத்து வருமானமும் வெளிப்படையாக அரசிற்கு தெரியவரும்.
shenisi
எல்லா தொகையுமே நாட்டில் வெள்ளை தொகைகளாக மட்டுமே இருக்கும். (நான் இங்கே தொகை என்று குறிப்பிட காரணம் இனி பணம் என்பதே இல்லை என்பதால்) பணம் என்ற ஒன்று இல்லாமல் வெறும் மறைமுகமாகவே நம்முடைய எல்லா பரிமாற்றங்களும் நடைபெறும்.
shenisi
பிச்சைக்காரர்கள் முற்றிலும் மறைந்துபோவார்கள். நீங்கள் பிச்சையிடுவதற்கு உங்களிடம் காயினும் இருக்காது, ரூபாய் தாளும் இருக்காது. ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் உழைத்து சாப்பிடவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளபடுவார்கள். மனித உழைப்பு அதிகமாகும்.
shenisi
ஒவ்வொரு கடைகளிலும் ஸ்வைப்பிங் இயந்திரம் இருந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் அவரால் யாருக்கும் வியாபாரம் செய்யமுடியாது.
shenisi
தீப்பெட்டி முதல் குளிர்சாதனபெட்டி வரை எதுவாங்கவேண்டுமானாலும் நாம் ஸ்வைப்பிங் அட்டை வழியாகவே வாங்கமுடியும்.
shenisi
போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு எந்த லாரிகாரனும் எந்த தொகையும் கொடுக்கவேண்டிய தேவை இருக்காது. பெற முடியாத நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படும்போது சட்டப்படி செயல்பட முன்வருவார்கள். இரவு 10 மணிக்கு முன்னதாக எந்த கனரக வாகனமும் சென்னைக்குள் நுழையமுடியாது. எல்லாமே சட்டப்படி நடக்கும்.
shenisi
இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரால் பிடிக்கபடுவார்களானால், தங்களிடம் இருக்கும் ஸ்வைப்பிங் அட்டை மூலம் அதிகாரியிடம் இருக்கும் ஸ்வைப்பிங் இயந்திரம் வழியே அபராதத்தொகையை செலுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.
shenisi
வரி ஏய்ப்பு என்பதற்கே வாய்ப்பில்லாமல் போகும்.
shenisi
எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதி நிதியினை ஏப்பம் விட முடியாது. வளர்ச்சி நிதிக்காக மட்டுமே பயன்படும்.
shenisi
பணம் என்ற ஒன்று இல்லையென்றால் இலஞ்சம் என்ற ஒன்றும் இல்லை.
shenisi
நான் மேலே சொன்ன மாற்றங்கள் என் அறிவுக்கு எட்டியவரை.. ஆனால் ஒரு மிகப்பெரிய மாற்றமே நம் நாட்டில் நிகழும் என்று என் மனம் 100 மடங்கு உறுதியாய் சொல்கிறது..
shenisi
சொல்லுங்கள் இது சாத்தியமா?
Last edited by ஷீ-நிசி on Wed Jul 13, 2011 1:57 pm; edited 1 time in total
ஷீ-நிசி- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
Re: ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் அண்ணா..!
எனக்கு இதில் சில சந்தேகங்கள் உள்ளன...
இதன் மூலம் கருப்பு பணத்தை தான் ஒழிக்க முடியுமோ தவிர இலஞ்சத்தை ஒழித்தல் என்பது இம்முறையில் இயலாது என நினைக்கிறேன் ஏனேனில் இலஞ்சம் வாங்குபவர்கள் பணமாக மட்டும் வாங்குவதில்லை பொருட்களாகவும் வாங்குவார்கள் அவர்களை திருத்த முடியாது நாம் தான் கொடுக்காமல் அவர்களை சிக்க வைக்க வேண்டும்
ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்துவது இந்தியாவில் இருக்கும் வரை சாத்தியம் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் போது அல்லது வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள் எப்படி பயன்படுத்துவது
அது மட்டும் இல்லாமல் நாம் ஸ்வைப்பிங் அட்டை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்னதான் கவணமாக இருந்தாலும் அதை தொலைத்துவிட்டால் வேறு உடனடி தீர்வாக எதை பயன்படுத்துவது
இனையம் மூலமாக பண பரிவர்த்தனை நடைபெறும் போது ஹெக்கர்கள் போன்றவர்களின் மூலம் பாதிப்பு ஏற்படும் அல்லவா..,
எனக்கு இதில் சில சந்தேகங்கள் உள்ளன...
இதன் மூலம் கருப்பு பணத்தை தான் ஒழிக்க முடியுமோ தவிர இலஞ்சத்தை ஒழித்தல் என்பது இம்முறையில் இயலாது என நினைக்கிறேன் ஏனேனில் இலஞ்சம் வாங்குபவர்கள் பணமாக மட்டும் வாங்குவதில்லை பொருட்களாகவும் வாங்குவார்கள் அவர்களை திருத்த முடியாது நாம் தான் கொடுக்காமல் அவர்களை சிக்க வைக்க வேண்டும்
ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்துவது இந்தியாவில் இருக்கும் வரை சாத்தியம் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் போது அல்லது வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள் எப்படி பயன்படுத்துவது
அது மட்டும் இல்லாமல் நாம் ஸ்வைப்பிங் அட்டை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்னதான் கவணமாக இருந்தாலும் அதை தொலைத்துவிட்டால் வேறு உடனடி தீர்வாக எதை பயன்படுத்துவது
இனையம் மூலமாக பண பரிவர்த்தனை நடைபெறும் போது ஹெக்கர்கள் போன்றவர்களின் மூலம் பாதிப்பு ஏற்படும் அல்லவா..,
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
கல்வி வளர்ச்சியில் நாம் பின் தங்கி உள்ளேம் நண்பரே.. கணினி பயன் பாடு என்பது பாமர மக்களிடம் ?
பணத்தை நம் போன்றவர் மட்டுமே வங்கியில் வெய்த்து
உள்ளோம்.
வளமை உள்ளவர்கள் தங்கமாகவும்,நிலமாகவும் கொண்டு உள்ளனர்.
பணத்தை நம் போன்றவர் மட்டுமே வங்கியில் வெய்த்து
உள்ளோம்.
வளமை உள்ளவர்கள் தங்கமாகவும்,நிலமாகவும் கொண்டு உள்ளனர்.
Re: ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
///எனக்கு இதில் சில சந்தேகங்கள் உள்ளன...
இதன் மூலம் கருப்பு பணத்தை தான் ஒழிக்க முடியுமோ தவிர இலஞ்சத்தை ஒழித்தல் என்பது இம்முறையில் இயலாது என நினைக்கிறேன் ஏனேனில் இலஞ்சம் வாங்குபவர்கள் பணமாக மட்டும் வாங்குவதில்லை பொருட்களாகவும் வாங்குவார்கள் அவர்களை திருத்த முடியாது நாம் தான் கொடுக்காமல் அவர்களை சிக்க வைக்க வேண்டும் ///
எவ்வளவுதான் ஒருவர் பொருட்களையே வாங்கிக்கொண்டிருப்பார். அதனால் நிச்சயம் நீண்ட நாட்களுக்கு அவ்வழி அவர்களுக்கு ஒத்துவராது..
///ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்துவது இந்தியாவில் இருக்கும் வரை சாத்தியம் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் போது அல்லது வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள் எப்படி பயன்படுத்துவது///
வெளிநாட்டில் செல்லத்தக்க டெபிட் கார்டுகள் இப்பொழுதே உள்ளதே. அதனால் அது நிச்சயம் பிரச்சனையில்லை. இங்கு வருபவர்கள் இந்தியாவில் தங்கள் கரன்சியை கொடுத்து தற்காலிக டெபிட் கார்டுகள் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் இருக்கும் நாட்கள் வரைக்குமான வேலிடிட்டியுடன் அக்காட்டை கொடுக்கலாம். குறிப்பிட்ட நாட்களுக்குமேல் யாரும் இங்கே கள்ளத்தனமாக தங்க முடியாது.
//அது மட்டும் இல்லாமல் நாம் ஸ்வைப்பிங் அட்டை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்னதான் கவணமாக இருந்தாலும் அதை தொலைத்துவிட்டால் வேறு உடனடி தீர்வாக எதை பயன்படுத்துவது
இனையம் மூலமாக பண பரிவர்த்தனை நடைபெறும் போது ஹெக்கர்கள் போன்றவர்களின் மூலம் பாதிப்பு ஏற்படும் அல்லவா..,////
தொழில்நுட்பமாக சில பிரச்சினைகள் வரவே செய்யும். எனினும் அவற்றையெல்லாம் களைந்து விட முடியும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. காரணம் நம்முடைய சம்பள பணம் முழுவதும் வங்கிகளுக்கு செலுத்தப்பட எந்த நம்பிக்கையில் நாம் ஏற்றுக்கொண்டோமோ.. எந்த தொழில்நுட்பத்தினை நம்பினோமோ அதே நம்பிக்கை இங்கும் செயல்படும்
இதன் மூலம் கருப்பு பணத்தை தான் ஒழிக்க முடியுமோ தவிர இலஞ்சத்தை ஒழித்தல் என்பது இம்முறையில் இயலாது என நினைக்கிறேன் ஏனேனில் இலஞ்சம் வாங்குபவர்கள் பணமாக மட்டும் வாங்குவதில்லை பொருட்களாகவும் வாங்குவார்கள் அவர்களை திருத்த முடியாது நாம் தான் கொடுக்காமல் அவர்களை சிக்க வைக்க வேண்டும் ///
எவ்வளவுதான் ஒருவர் பொருட்களையே வாங்கிக்கொண்டிருப்பார். அதனால் நிச்சயம் நீண்ட நாட்களுக்கு அவ்வழி அவர்களுக்கு ஒத்துவராது..
///ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்துவது இந்தியாவில் இருக்கும் வரை சாத்தியம் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் போது அல்லது வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள் எப்படி பயன்படுத்துவது///
வெளிநாட்டில் செல்லத்தக்க டெபிட் கார்டுகள் இப்பொழுதே உள்ளதே. அதனால் அது நிச்சயம் பிரச்சனையில்லை. இங்கு வருபவர்கள் இந்தியாவில் தங்கள் கரன்சியை கொடுத்து தற்காலிக டெபிட் கார்டுகள் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் இருக்கும் நாட்கள் வரைக்குமான வேலிடிட்டியுடன் அக்காட்டை கொடுக்கலாம். குறிப்பிட்ட நாட்களுக்குமேல் யாரும் இங்கே கள்ளத்தனமாக தங்க முடியாது.
//அது மட்டும் இல்லாமல் நாம் ஸ்வைப்பிங் அட்டை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என்னதான் கவணமாக இருந்தாலும் அதை தொலைத்துவிட்டால் வேறு உடனடி தீர்வாக எதை பயன்படுத்துவது
இனையம் மூலமாக பண பரிவர்த்தனை நடைபெறும் போது ஹெக்கர்கள் போன்றவர்களின் மூலம் பாதிப்பு ஏற்படும் அல்லவா..,////
தொழில்நுட்பமாக சில பிரச்சினைகள் வரவே செய்யும். எனினும் அவற்றையெல்லாம் களைந்து விட முடியும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. காரணம் நம்முடைய சம்பள பணம் முழுவதும் வங்கிகளுக்கு செலுத்தப்பட எந்த நம்பிக்கையில் நாம் ஏற்றுக்கொண்டோமோ.. எந்த தொழில்நுட்பத்தினை நம்பினோமோ அதே நம்பிக்கை இங்கும் செயல்படும்
ஷீ-நிசி- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
Re: ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
realvampire wrote:கல்வி வளர்ச்சியில் நாம் பின் தங்கி உள்ளேம் நண்பரே.. கணினி பயன் பாடு என்பது பாமர மக்களிடம் ?
பணத்தை நம் போன்றவர் மட்டுமே வங்கியில் வெய்த்து
உள்ளோம்.
வளமை உள்ளவர்கள் தங்கமாகவும்,நிலமாகவும் கொண்டு உள்ளனர்.
பாமர மக்களை எப்பொழுதுமே மிக சாதாரணமாக நாம் எடைபோடுகிறோம். லாட்டரியில் உங்களுக்கு பணம் விழுந்திருக்கிறது என்றவுடனே ஓடிச்சென்று டெபாசிட் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்பது படித்தவர்களே அதிகம். பாமரர்கள் அதிகம் ஏமாறுவதில்லை.
தொழில்நுட்பம் என்பதை கண்ணுக்கு மிக அருகில் வைத்து பார்ப்பது போல் பார்க்காமல் தள்ளிவைத்து பார்த்தாலே போதும். தொழில்நுட்பம் மிக சாதாரண ஒன்றாகிவிடும்.
செல்போன் வந்த புதிதில் இது உயர் நிலையிலிருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற நிலையிலிருந்து இன்று செல்போன் இல்லாத கிராமமே கிடையாது என்று வியக்கவைக்கும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் இது அவர்களுக்கு அதிக நன்மையை மட்டுமே அளிக்கும். எளிதில் அவர்களை ஏமாற்றாத வகையில் அரசாங்கத்தின் உதவிகள் முழுமையாய் அவர்களை வந்தடையும்.
ஷீ-நிசி- பண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
Re: ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
அரசாங்கம் என்பதே ஏமாற்றத்தின் முதல்படி..
"லாட்டரியில் உங்களுக்கு பணம் விழுந்திருக்கிறது என்றவுடனே ஓடிச்சென்று
டெபாசிட் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்பது
படித்தவர்களே அதிகம்."
புத்திசாலியை விட அதிபுத்திசாலியே விரைவில் ஏமாறுவான் என்பது இங்கு பொருந்தும்..
"லாட்டரியில் உங்களுக்கு பணம் விழுந்திருக்கிறது என்றவுடனே ஓடிச்சென்று
டெபாசிட் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்பது
படித்தவர்களே அதிகம்."
புத்திசாலியை விட அதிபுத்திசாலியே விரைவில் ஏமாறுவான் என்பது இங்கு பொருந்தும்..
Re: ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
"செல்போன் வந்த புதிதில் இது உயர் நிலையிலிருப்பவர்களுக்கு மட்டுமே
பொருந்தும் என்ற நிலையிலிருந்து இன்று செல்போன் இல்லாத கிராமமே கிடையாது
என்று வியக்கவைக்கும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது."
செல்போன் வந்த பேதை விட இப்போதுதான் மேம்பட்டு இருக்கிறது, தவிர அது கிராமங்களை சொன்றடைந்ததில் முக்கியமானது விலை மட்டுமே..
(ஏ.கா):
கி.பி.2000:நோக்கியா 6150
www.old-handphone.blogspot.com.jpg" alt="" />
ரூபாய்:9000 மேல்
இன்கமிங்:3 ரூபாய்/நிமிடம்
அவுட்கோயிங்:8 ரூபாய்/நிமிடம்
பார்ப்பதே அரிது..
கி.பி.2010:ஜி-பைவ்
ரூபாய்:1400/-
இன்கமிங்:இலவசம்
அவுட்கோயிங்:1செக்/1பைசா
போதுமா நண்பரே!
பொருந்தும் என்ற நிலையிலிருந்து இன்று செல்போன் இல்லாத கிராமமே கிடையாது
என்று வியக்கவைக்கும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது."
செல்போன் வந்த பேதை விட இப்போதுதான் மேம்பட்டு இருக்கிறது, தவிர அது கிராமங்களை சொன்றடைந்ததில் முக்கியமானது விலை மட்டுமே..
(ஏ.கா):
கி.பி.2000:நோக்கியா 6150
www.old-handphone.blogspot.com.jpg" alt="" />
ரூபாய்:9000 மேல்
இன்கமிங்:3 ரூபாய்/நிமிடம்
அவுட்கோயிங்:8 ரூபாய்/நிமிடம்
பார்ப்பதே அரிது..
கி.பி.2010:ஜி-பைவ்
ரூபாய்:1400/-
இன்கமிங்:இலவசம்
அவுட்கோயிங்:1செக்/1பைசா
போதுமா நண்பரே!
Re: ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
மேற்கோள் செய்த பதிவு: 547795ஷீ-நிசி wrote:ஊழலை ஒழிக்கமுடியுமா?!
இதோ என் மனதில் தோன்றி அசைவாடிக்கொண்டிருக்கும் அந்த வழி! மத்திய அரசு நினைத்தால் இது சாத்தியம் என்றே என் மனதிற்கு படுகிறது...
ஒரு எடுத்துக்காட்டாக மத்திய அரசு இன்று ஒரு அறிக்கை விடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
வருகிற 1:1:2012 ஆம் வருடத்திலிருந்து ரூபாய்தாள்களுக்கும், காயின்களுக்கும் இனி மதிப்பில்லை. அவரவர் தங்கள் பணங்களை ரிசர்வ் பேங்கிடம் ஒப்படைத்து தங்கள் கணக்கிற்கு ஒரு ஸ்வைப்பிங் அட்டை பெற்றுக்கொள்ளவேண்டும். இனி எல்லா பரிமாற்றங்களுக்கும் இந்த அட்டையையே பயன்படுத்தவேண்டும்.
இப்படி ஒரு சட்டம் நிறுவப்பட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்.
* பணத்திற்கு மதிப்பில்லை என்றவுடன் ஓவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாவர். வேறு வழியில்லாமல் எல்லா கறுப்பு பணங்களும் வீதிக்கு வரும். குப்பைகளாக!!!!!
* ஒவ்வொரு அரசியல்வாதிகள் பெறும் அனைத்து வருமானமும் வெளிப்படையாக அரசிற்கு தெரியவரும்.
* பிச்சைக்காரர்கள் முற்றிலும் மறைந்துபோவார்கள். நீங்கள் பிச்சையிடுவதற்கு உங்களிடம் காயினும் இருக்காது, ரூபாய் தாளும் இருக்காது. ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் உழைத்து சாப்பிடவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளபடுவார்கள். மனித உழைப்பு அதிகமாகும்.
* வரி ஏய்ப்பு என்பதற்கே வாய்ப்பில்லாமல் போகும்.
* எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதி நிதியினை ஏப்பம் விட முடியாது. வளர்ச்சி நிதிக்காக மட்டுமே பயன்படும்.
நான் மேலே சொன்ன மாற்றங்கள் என் அறிவுக்கு எட்டியவரை.. ஆனால் ஒரு மிகப்பெரிய மாற்றமே நம் நாட்டில் நிகழும் என்று என் மனம் 100 மடங்கு உறுதியாய் சொல்கிறது..
சொல்லுங்கள் இது சாத்தியமா?
நன்றி ஷீ-நிஷி!
யாரோ இந்த மிகப்பெரிய கட்டுரையை காப்பியடித்து இதே ஈகரையில் பதிந்திருக்கிறார்கள்.
ஆனால், உங்களுக்கு முன்பாகவே எப்படி காப்பியடித்திருப்பார்கள்? என்பதுதான் புரியவில்லை.
திருவள்ளுவர் எழுதிய குறுகத் தரித்த குறள் மாதரி சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. உண்மையிலேயே இது WORLD WIDE EVENT தான்!
VISIT: "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்? http://www.eegarai.net/t55369-topic#500004
நீதிமன்றத்தை நடுங்க வைப்பான்! காவல் மன்றத்தை கலங்க வைப்பான்!
பச்சைக் குழந்தையை அழ வைப்பான்! பிச்சை எடுப்பதிலும் கை வைப்பான்!
வா! வா! வா! தகாதவா!....
You are a Genius - தகாதவன்!!
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
நல்ல கற்பனை !
பணத்தை ஒழித்தால் – நாடு சுடுகாடாகும் !
பணத்தை ஒழித்தால் – நாடு சுடுகாடாகும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம்
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
» ஊழலை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்: மன்மோகன்
» ஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா?(பாகம்-1)
» ''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
» ஊழலை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்: மன்மோகன்
» ஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா?(பாகம்-1)
» ''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|