ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானம்

Go down

தானம் Empty தானம்

Post by சிவா Mon Jun 06, 2011 4:30 pm

ஞாயிற்றுக்கிழமை மதியம்.

குணவதி வீட்டுப்பாடங்களை எழுதி முடிக்கவும், அம்மா கோகிலா சாப்பிட அழைக்கவும் சரியாக இருந்தது. பையை ஒழுங்குபடுத்தி வைத்து விட்டு, கை, கால், முகம் கழுவி சாப்பிட அமர்ந்தாள். அப்போது...

``அம்மா... தாயே! பசிக்குது... கொஞ்சம் சோறு போடு தாயீ'' என்று வெளியே குரல் கேட்டது.

``சரியா சாப்பாட்டு நேரத்துல பிச்சை கேட்டு வந்திடுவாங்க'' என்று சலிப்போடு எரிச்சல்பட்ட கோகிலா, ``போ... போ... சாப்பாடு கிடையாது, எல்லாம் முடிஞ்சி போச்சு'' என்று பொய் சொன்னார்.

ஆனாலும் பிச்சைக்காரியின் அதே பல்லவி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

``ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டாங்களே!'' என்று கோபத்தோடு வெளியே போனார், கோகிலா.

அவரைப் பார்த்ததும் பிச்சை கேட்டு வந்த வயதான பெண்மணி, ``அம்மா... தாயே... பசிக்குது. கொஞ்சம் சோறு போடு தாயீ'' என்று மீண்டும் கேட்டாள்.

``சாப்பாடு இல்லைன்னு நான் சொன்னது உங்க காதுல விழலையா?'' என்றார் கோகிலா.

``என்ன தாயீ சொல்ற? என் காது சரியா கேட்காது. கொஞ்சம் பலமா சொல்லு தாயீ...'' என்றார் அந்த அம்மாள்.

அப்போது அங்கு வந்த குணவதி, தன் தட்டில் இருந்த சாப்பாட்டை அந்த வயதான பெண்மணியின் தட்டில் கொட்டினாள்.

``புண்ணியவதி, நீ நல்லாயிருப்ப தாயீ'' என்று வாழ்த்திவிட்டுச் சென்றார் அந்த அம்மாள்.

``ஏண்டி குணவதி, உனக்கு வச்ச சாப்பாட்டை அப்படியே போட்டுட்டியே! நாமோ அன்றாடம் காய்ச்சிங்கடி. வீட்டுல அளவாத்தானே சமைத்தேன்'' என்றார் கோகிலா.

``பரவாயில்லைம்மா, நான் ஒருவேளை சாப்பிடாம இருந்துக்குறேன்.''

அவள் அப்படிச் சொன்னதும் தாய் மனம் கேட்கவில்லை.

``ஒரு ஐம்பது காசாவது போட்டிருக்கலாமேடி.''

``காசை விட சோறு போடுறதுதாம்மா புண்ணியம். எங்க தமிழாசிரியை சொன்னாங்க, மிகப்பெரிய கொடையாளின்னு பேரெடுத்த கர்ணன், சொர்க்கத்துல சோறு கிடைக்காம திண்டாடினாராம். ஏன்னா, எல்லா தானமும் செய்த கர்ணன், அன்னதானம் மட்டும் செய்யலையாம். அதனால அன்னலட்சுமி அவருக்குப் படி அளக்கவில்லையாம்'' என்று விளக்கம் சொன்னாள்.

``இப்படி தானதர்மம் செய்யுறது தப்பு குணவதி. ஏன்னா, தானமும், தர்மமும் செய்வது பிச்சைக்காரர்கள் பெருகக் காரணமாகிடும். அதனால பல பேர்கள் உழைக்க எண்ணாம சோம்பேறிகளா ஆகிடுவாங்க. இலவசமாக கிடைப்பது தெரிஞ்சா... பிச்சை எடுக்கத்தான் புத்தி போகும். பிச்சை போடுறதை நிறுத்தினால்தான் பிச்சை எடுக்கு றவங்க பெருகாம இருப்பாங்க'' என்று பதிலுக்கு விளக்கம் சொன்னார் கோகிலா.

``அம்மா, கையேந்தி வாழுற வாழ்க்கை எவ்வளவு கேவலமானது, வேதனையானதுன்னு அவங்களுக்குத் தெரியும். இருந்தாலும், அவங்களால முடியாமத்தான் கையேந்துற நிலைமைக்கு ஆளாகுறாங்க. வயித்துப் பசிதான் அவங்களை இந்த நிலைக்கு ஆளாக்குது.

காசை தர்மம் செய்தா தான் நீங்க சொன்னபடி பிச்சை எடுக்குறவங்க எண்ணிக்கை அதிகமாகும். ஆனா, பசிக்கு சோறு போடுறது பாவமே இல்லைம்மா. காசு கேட்டு கையேந்துறவங்களுக்கு பழமோ, பலகாரமோ போடுற பழக்கம் ஏற்பட்டா பிச்சைக்காரங்க எண்ணிக்கை குறைஞ்சிடும். ஏன்னா, காசைச் சேர்த்து வைப்பது போல சோற்றைச் சேர்த்து வைக்க முடியாது.

பசிக்குதுன்னு யாரு வந்தாலும், அவங்க பசியைப் போக்கணும். அதுதான் மனித தர்மம். பசியோட வந்த அந்த பாட்டியைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா தெரிய லையா? அவரைக் காப்பாற்ற உறவுகள் இல்லாததால் தானே அவருக்கு இந்த நிலைமை. இப்படிப்பட்ட உறவுகளால் கைவிடப்பட்டவங்களுக்கு உதவுறது புண்ணிய மான செயல்'' என்றாள் குணவதி.

தான் பெற்ற மகள் தனக்கே பாடம் சொல்லியதைக் கேட்ட கோகிலாவுக்கு சந்தோஷமாக இருந்தது. மகளின் அறிவையும், குணத்தையும் கண்ட தாயின் மனதில் பேரானந்தம் வந்தது. குணவதி என்று அவளுக்கு தான் வைத்த பெயர் பொருத்தமாக இருப்பதை எண்ணி மகிழ்ந்தார் கோகிலா.

மாசு. சவுந்தரராசன்


தானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum