ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல்

Go down

பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Empty பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:27 am

சென்னை: ""யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைக்கு, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இது உள்ளிட்ட, குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க, பார்லிமென்ட் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தினார்.

சென்னையில், நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை, திரும்பக் கொண்டு வர வேண்டும் என, 2008ல், பா.ஜ., வலியுறுத்தியது. இந்த கருத்தை, யோகா குரு ராம்தேவ் வரவேற்றதுடன், தன் பல்வேறு கூட்டங்களிலும் இதை வலியுறுத்தி வந்தார். இதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, சத்தியாகிரக வழியில் உண்ணாவிரத போராட்டத்தை, டில்லி, ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கினார். போராட்டத்தை கைவிடுமாறு, ராம்தேவிடம் அமைச்சர்களை அனுப்பி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதே சமயத்தில், எதையாவது செய்து இந்த போராட்டத்தை சிதைக்கும் நோக்கத்திலும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், உண்ணாவிரத பந்தலில் இருந்து, ராம்தேவை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும், அவரது ஆதரவாளர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் கலைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த, 1975ல், தனது எல்லா செயல்பாடுகளிலும் தோல்வியடைந்த அப்போதைய மத்திய அரசு, அவசர நிலையை பிரகடனப்படுத்தி, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும், பாசிச நடவடிக்கைகள் எடுத்ததை, தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கை நினைவுப்படுத்துகிறது. ராம்தேவ் மீதான இந்த நடவடிக்கையை கண்டித்து, டில்லி ராஜ் கோட்டில் தர்ணா போராட்டம் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் அடக்குமுறையை பார்த்தால், நான் அதில் பங்கேற்க முடியுமா என்பதே சந்தேமாக உள்ளது. இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐ.மு., கூட்டணியின் தலைவர் சோனியா ஆகியோர், நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இது குறித்து விவாதிக்க, பார்லிமென்டின் அவசர கூட்டத் தொடரை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூட்ட வேண்டும். அதில், கடந்த ஆறு மாதங்களாக, மத்திய அரசில் உள்ளவர்கள் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், கறுப்புப் பண விவகாரம், ராம் தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறை ஆகிய மூன்று அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜனாதிபதி வெறும் பார்வையாளராக மட்டும் இருந்து விடாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து, ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின், முதல் முறையாக சென்னை வருவதால், மரியாதை நிமித்தமாக புதிய முதல்வரை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ராம்தேவ் விவகாரம் காரணமாக, உடனே டில்லி செல்ல வேண்டி இருப்பதால், இந்த சந்திப்புக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மாற்றமாக இல்லாமல், தேசிய அரசியலிலும் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில், நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது. ஆனால், இந்த மாநிலங்களை மற்ற மாநிலங்களுக்கு இணையாக மத்திய அரசு நடத்துவதில்லை. இதில், கர்நாடகத்தில் உள்ள அரசின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இதை, அந்த மாநிலத்தின் முதல்வரிடம் நேரடியாகவும், கட்சி மூலமும் தெரிவித்து விட்டேன். இவ்வாறு அத்வானி கூறினார்.

பின்னர், நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பேட்டி:

* மத்திய அமைச்சர் தயாநிதி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து...

இந்த விவகாரத்தை முதலில் வெளியிட்டது பா.ஜ., தான். இருப்பினும், ஊடகங்கள் இந்த விவகாரத்தை சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றன.

* பார்லிமென்ட் அவசர கூட்டத்தை ஜனாதிபதி கூட்டவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

மக்களிடம் சென்று, அவர்களை திரட்டி, நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் பா.ஜ., ஈடுபடும். அடுத்து வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், இப்பிரச்னையை எழுப்புவோம்.

* ஜெயலலிதாவை சந்தித்தால், அவரை, உங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுப்பீர்களா?

மரியாதை நிமித்தமாக சந்திக்கவே திட்டமிட்டிருந்தேன். கூட்டணிக்கு அழைப்பதற்கான சூழல் இது அல்ல என நினைக்கிறேன். இவ்வாறு அத்வானி கூறினார்.

"கூடா நட்பு' சொந்த அனுபவமோ...! கடந்த சில நாட்களுக்கு முன், தனது பிறந்த நாளன்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடன் பிறப்புகள், "கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற பொன் மொழியை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என கூறி இருந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, நேற்று சென்னை வந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியிடம், "கூடா நட்பு' குறித்து கருணாநிதி கூறியது குறித்து கருத்து கேட்ட போது, "அது அவரது தனிப்பட்ட கருத்து. ஒருவேளை அது அவரது சொந்த அனுபவமாகவும் இருக்கலாம்' என்றார்.

நன்றி தினமலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
» லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு
» நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
» 'நேட்டோ' அவசர கூட்டம்: ஜோ பைடன் பங்கேற்பு
» காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum