புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
2 Posts - 3%
prajai
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
1 Post - 2%
Barushree
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
8 Posts - 2%
prajai
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_m10செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்!


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 04, 2011 11:54 am









செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்! Irulayi




அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்தால்தான் நான்கு மணிக்கு சமையலை முடிக்க
முடியும். அம்மாவும் அப்பாவும் கூலி வேலைக்கு பழனியிலிருந்து தாராபுரம் வரை
செல்பவர்கள். அவர்களுக்கான மதிய உணவை தயார் செய்து தூக்குபோசியில்
கட்டிக்கொடுக்கும் பொறுப்பு இருளாயியுடையது. நான்கு மணிக்குள் வேலைகளை
முடித்துவிட்டு , ஆறு மணி வரை உறக்கம். அதற்கு பிறகு தம்பி தங்கையை
பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். அது முடித்த பின் அவர்களுக்கான உணவை
தயாரிக்க வேண்டும். வீட்டில் கேஸ் அடுப்பெல்லாம் கிடையாது. விறகு
அடுப்புதான். ஊதாங்குழலால் ஊதி ஊதி சமையலை முடிப்பதற்குள் போதும்
போதுமென்றாகிவிடும். இத்தனையையும் முடித்து விட்டு பள்ளிக்கு பல மைல் தூரம்
சைக்கிளில் செல்ல வேண்டும்.

பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து மீண்டும் சமையல், துணி துவைத்தல்,
பாத்திரங்கழுவுதல் என வீட்டு வேலைகள் மொத்தமும் முடித்துவிட்டு, தம்பிக்கு
பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு ஆயாசம் அடைவதற்குள் மணி பத்தாகிவிடும். அதற்கு
மேல்தான் படிக்க முடியும். வீட்டிலிருக்கும் ஒரே ஒரு குண்டு பல்பு பத்து
மணிக்கு மேல் எரிந்துகொண்டிருந்தால் தம்பி தங்கையும் பெற்றோரும் தூங்க
முடியாது. விளக்கை அணைத்துவிட்டு தெருவிளக்கிருக்கும் இடத்திற்கு வருவார்.
அர்த்தராத்திரியில் படிக்கத்தொடங்குவார். இரண்டு மணி வரை படிப்பு தொடரும்!

ஒரு நாளில் இரண்டு மணிநேரம் தூங்கி, வீட்டு வேலைகள் அனைத்தையும்
பார்த்துக்கொண்டு, தெருவிளக்கில் படித்த இருளாயி இன்று நர்சிங் பாடத்தில்
மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி. ஆனால் அவருடைய வறுமை அவரை
மேற்படிப்பை தொடரவிடாமல் செங்கல் சுமக்க வைத்திருக்கிறது.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் 200க்கு 181 மதிப்பெண்கள்
பெற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார்
இருளாயி. இவர் பழனிக்கு அருகிலிருக்கும் கோதைமங்கலம் என்னும் மிகச்சிறிய
கிராமத்தை சேர்ந்தவர். விவசாய கூலி வேலை பார்க்கும் பெற்றொர். பத்து ரூபாய்
கூட பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டிய வறுமையான சூழல். இவரை
படிக்கவைக்கவோ பெற்றோருக்கு விருப்பமில்லை. வீட்டில் போராடி சண்டைப்போட்டு
படிக்க வேண்டிய சூழ்நிலை. தனக்கு வேண்டிய பாட புத்தகங்களுக்காக பகுதிநேரமாக
செங்கல் சூளையில் செங்கல் சுமக்கிறார்.

பனிரென்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தினம். அவர் பணியாற்றி வந்த
நூற்பாலையில் விடுமுறை கேட்டிருகிகறார். முதலாளியோ அதெல்லாம் தேவையில்ல நீ
எடுக்கபோற நாலு மார்க்குக்கு லீவுதான் முக்கியம் என திட்டி
அனுப்பிவிட்டாராம். அதனால் மனமுடைந்து எப்போதும் போல வேலைக்கு
சென்றிருந்தார்.

தேர்ச்சி பெற்றோமா, எத்தனை மதிப்பெண் பெற்றோம் என தமிழகம் முழுக்க ஒவ்வொரு
மாணவரும் பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருக்க, இவரோ நூற்பாலையில்
பணியாற்றிக்கொண்டிருந்தார். தேர்ச்சி முடிவுகளும் மார்க் விபரங்களும்
வெளியாக, நர்சிங் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர் என்பதை கேள்விப்பட்டு
பத்திரிகைகளின் வழக்கப்படி பேட்டியெடுப்பதற்காக நிருபர்கள் சிலர் கோதை
மங்கலத்திலிருக்கும் அவருடைய சிறிய குடிசைக்கு படையெடுக்க, இருளாயி
வீட்டில் இல்லை. பக்கத்து வீடுகளில் விசாரிக்க , வேலை சென்றிருப்பது
தெரிந்தது. அங்கிருந்து நேராக அவர் பணியாற்றும் நூற்பாலைக்கே சென்றனர்.

எப்படியோ பத்திரிகையாளர்கள் நூற்பாலைக்குள் நுழைந்து இருளாயியிடம்
பேட்டியும் போட்டோவும் மாறி மாறி எடுத்துக்கொண்டிருக்க நூற்பாலை முதலாளி
கடுப்பாகிவிட்டார். அன்றைய தினமே இருளாயியை வேலையை விட்டு நீக்கினார்.
பள்ளி விடுமுறையில் கிடைத்துக்கொண்டிருந்த சொற்ப வருமானமும் போனது. முதல்
முதலாக ஏன்தான் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தோமோ என்று அன்றைக்கு
இரவெல்லாம் அழுதிருக்கிறார்.

‘’இனி இதற்கு மேல் படிக்க முடியாது. வேறு ஏதாவது வேலை தேட வேண்டும்.
உதவிகள் ஏதாவது கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருந்ததுதான் மிச்சம்.
அதனால் நல்ல வேலை கிடைக்கும் வரை வீட்டிற்கு அருகிலுள்ள செங்கல்சூளையில்
வேலைக்கு சேர்ந்தேன். தினக்கூலிதான்.. பரவாயில்லை’’ என அதைப்பற்றி
சொல்லும்போதே கண்கலங்குகிறார். சோகமிருந்தாலும் எதையும் எதிர்த்து
போராடுகிற மனநிலையும் போராட்ட குணமும் அவருடைய பேச்சில் தெறிக்கின்றன.

‘’நிச்சயமா மேலே படிப்பேன்ங்க இப்ப இல்லாட்டியும், நானே சம்பாதிச்சாவது
படிப்பேன். நர்சிங் படிக்கணுங்கறதுதான் என்னோட ஒரே லட்சியம் , டிப்ளமோ இன்
நர்சிங் படிச்சா கூட போதும். ஏன்னா நான் சீக்கிரம் படிச்சி முடிச்சாதான்,
சீக்கிரமா ஒரு நல்ல வேலைக்கு போய் என் தம்பி தங்கைகளை படிக்க வைக்க
முடியும், அப்புறம் பாருங்க இந்த வீடு , சின்ன மழை பெஞ்சாலும்
வீட்டுக்குள்ள மேலே கீழே எல்லா பக்கமும் தண்ணி வந்திடும், நைட்டெல்லாம்
தூங்க முடியாது, அப்புறம் வீட்டுல குண்டுபல்புதான் இருக்கு , ஒரு
டியூப்லைட் வாங்கி மாட்டணும்’’ என தன்னுடைய சின்ன சின்ன லட்சியங்களை
அடுக்கிக்கொண்டே போகிறார்.

எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர், சட்டென்று ‘’சார் வேலைக்கு டைம் ஆச்சு..
கிளம்பணும்’’ என அவசரமாக தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு செங்கல் சூளையை
நோக்கி தன் கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்தபடி படுவேகமாக கிளம்புகிறார்
செங்கல் சுமக்க!


(நன்றி புதியதலைமுறை)

(இந்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் - feedback@puthiyathalaimurai.com என்கிற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக