ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்!

Go down

கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்! Empty கத்தாரில் வேலை.. இன்றைய தேதியில்!

Post by தாமு Fri Jun 03, 2011 11:06 am

வெளிநாட்டிலிருந்து வேலைக்காக கத்தார் செல்பவர்கள், இன்றைய தேதியில் எப்படியான சூழ்நிலையில் உள்ளனர்?
கத்தார் நாட்டு குடிமக்கள், விரும்பிய அனைத்தையும் பெறக்கூடிய அதிர்ஷ்டசாலிகளாகவே தென்படுகின்றனர். பெரிய கார்களை ஓட்டிச் செல்கின்றனர். பெரிய வீடுகளில் வசிக்கின்றனர். பெரிய சொத்துக்களை வாங்க பெருமளவு கடன் கொடுக்கத் அந்த நாட்டு தேசிய வங்கிகள் தயாராக இருக்கின்றன. பகட்டான வாழ்க்கை.

நாட்டின் நிலைமை இத்தனை செழிப்பாக இருக்கையில், கத்தார் நாட்டு மக்கள் பலர் எதனால் கோபப்படுவதாக சமீபகாலமாக செய்திகள் வருகின்றன??

“எங்களது சொந்த நாட்டி லேயே நாங்கள் சிறுபான்மை இன மக்களாக நடாத்தப்படுவதுதான் எங்களது கோபத்துக்குக் காரணம்” என்று கத்தார் நாட்டவர்கள் பலர் கூறுகின்றனர்.

“நாட்டின் 1.6 மில்லியன் மக்கள் தொகையில் இந்த நாட்டின் பிரஜைகள் சுமார் 15 சதவீதம் மட்டும்தான். முன்னுரிமை எப்போதும் வெளிநாட்டினருக்கே கிடைக்கிறது” என்று அலி காலித் என்பவர் கூறுகிறார். இவர் அரசு சார்பில் அளிக்கப்பட்ட நிதியுதவியுடன் லண்டனில் சமீபத்தில் படிப்பை முடித்துவிட்டுத் தாயகம் திரும்பியிருக்கிறார்.

அவரது உறவினரான ஓமர் அலி உயர் பாடசாலைப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர். ஓமர் அலி தற்போது மின்சாதன உற்பத்தி நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை பார்த்து வருகிறார்.

“கத்தார் நாட்டைச் சேர்ந்த நாங்கள் தொழிலில் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும், எந்த வேலைக்கும் கத்தார் நாட்டவரைவிட வெளிநாட்டினர் சிறந்தவர்கள் என்ற மனப்பான்மை எமது சொந்த நாட்டிலேயே நிலவுகிறது. கத்தார் நாட்டவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள வேலையைவிட பல வழிகளில் சிறந்தவர்களாகவே தென்படுகின்றனர்” என்று ஓமர் அலி கூறினார்.


தோஹா விமான நிலையம்
நாட்டில் பணம் அதிகம் இருந்த காரணத்தால், எந்த வேலை என்றாலும் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைத்துவந்து பழகிய யாருமே, அதே வேலைகளை உள்நாட்டு ஆட்களாலும் செய்யமுடியும் என்று நினைப்பதில்லை என்பதே பிரச்சினைக்குக் காரணம்.

அரசாங்கமும் இதே மனோநிலையில் இருப்பதே உச்சக்கட்டச் சோகம். எந்தவொரு நாட்டிலும் வேலைகளுக்கு முன்னுரிமை அந்நாட்டின் பிரஜைகளுக்கு கொடுக்கப்படுவது வழமை. இங்கு அது தலைகீழாக இருக்கின்றது.

ஆரம்பத்தில் இந்நாட்டுப் பிரஜைகளிடம் பணம் இருந்தது, படிப்பு இருக்கவில்லை; பணத்தை வீசி வெளிநாட்டில் இருந்து ஆட்களைக் கொண்டுவர முடிந்தது. இப்போது இந்நாட்டுப் பிரஜைகள் தாமும் படித்து மற்றைய வெளிநாட்டவருடன் வேலையில் போட்டியிடத் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களது சொந்த நாட்டு அரசே அவர்களின் திறமையை நம்பத் தயாராக இல்லை.

“கத்தார் நாட்டவர்கள் வீணடிக்கப்பட்டுவிட்டனர்” என்று முகமது சபரானி கூறுகிறார். இவர் கத்தார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்காவில் சுகாதார அறிவியல்துறை ஆய்வு இயக்குனராக வேலை செய்துவரும், கத்தார் நாட்டைச் சேராத அரேபியர்.

“கத்தார் நாட்டவர்கள் கலாசாரம் மற்றும் அரசியல் பிரிவுகளில் மட்டுமே மதிக்கப்படுகின்றனர்; வேறு எதிலும் அவர்களுக்குத் திறமை இருப்பதாக இங்கு யாரும் மதிப்பிடுவதில்லை” என்று கூறிய அவர், “ஆனால் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இயல்பிலேயே செல்வத்தில் மிதக்கும் கத்தார் நாட்டவர் எவ்வளவுதான் விரும்பிப் படித்தாலும் படித்து வேலை செய்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமென்ன கட்டாயம் அவர்களுக்கு இல்லை” என்றும் கூறினார்.

பாரசீக வளைகுடாவில் எண்ணெய் வளம்மிக்க கத்தார் தீபகற்பம், சர்வதேச உறவுகள், கலை, உயர் கல்வி என பலமுனைகளில் உலக அளவில் செல்வாக்காக உள்ளது. ஆனால் உள்நாட்டிலோ, கத்தார் நாட்டவர்களுக்கும் வெளி நாட்டவர்களுக்கும் இடையே பதற்றம், கோபம், ஏமாற்றம் ஆகியவை காணப்படுகின்றன.

இந்தப் பதற்றம் கோபம் வெறுப்பு எல்லாமே நிஜமல்ல. வெளிநாட்டவர்களை வெளியே அனுப்பிவிட்டுக் கத்தாரிகளால் நாட்டை ஒருநாள் கூட நடத்தவே முடியாது என்பதாக மற்றொரு கருத்து உண்டு.

“வெளிநாட்டவரின் மீதான வெறுப்பு அனைத்தும் பாசாங்கானவை. அனைத்தும் வெளித்தோற்றம்தான்” என்று டாக்டர் மும்தாஜ் வாசெப் கூறுகிறார். இவர் அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டு, கத்தார் சுகாதார உயர்நிலைக் குழுவில் உயிரி மருத்துவ ஆராய்ச்சி இயக்குனராக வேலை செய்து வரும் அமெரிக்கப் பிரஜை.

“வெளிநாட்டவரை வெளியே அனுப்பவேண்டும் என்று சும்மா கூச்சலிடுவதன் மூலம் தாங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் (கத்தார் பிரஜைகள்) ஒருபோதும் ஒப்புக் கொள்ளப்போவதில்லை. தாங்கள் உலகிலேயே சிறந்தவர்கள் என்று மட்டுமே அவர்கள் கூறிக் கொண்டிருக்கப் போகிறார்கள். ஆனால், ஒரு வேலையைக் கொடுத்துப் பாருங்கள்; கவிழ்ந்து விடுவார்கள். காரணம், உழைத்துத்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் அவர்களில் பெரும்பாலானோருக்கு இல்லை” என்பது அவரது கருத்து.


கத்தார் பிரஜைகள்: வேண்டியது கிடைக்கிறது!
“அவர்கள் மின்சாரம், தண்ணீர், கல்வி அல்லது சுகாதாரம் என எதற்கும் பணம் செலுத்தத் தேவையில்லை. இவை அனைத்துமே கத்தார் பிரஜைகளுக்கு இங்கு இலவசம். அவர்களுக்குத் திருமணம் ஆகும்போது வீடு கட்ட வட்டியில்லாக் கடன் கிடைக்கிறது. தங்களுக்கு வேலை கிடைக்காவிட்டால், இந்தக் கடனைத் திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை என்பது சட்டம்” என்கிறார் அவர்.

கத்தார் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல்துறைப் பேராசிரியர் முகமது அல்-மெஸ்பர், “முக்கிய தொழில்களான, நிதி, உயர்கல்வி, ஊடகம் போன்றவற்றின் உயர்நிலை வேலைகள் பெரும்பாலானவற்றில் வெளிநாட்டவர்களே உள்ளனர். வேலைக்கான மொழியாக அராபிக் இல்லை. ஆங்கிலம்தான் இருக்கிறது. இதுதான் கத்தார் நாட்டவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

உள்ளூர் வைத்தியாசாலைகள், உணவகங்கள், சந்தைகள், தெருக்கள் என எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்களே கூட்டம் கூட்டமாகத் தென்படுகின்றனர். இதுதான் இங்குள்ள பிரச்சினை. வெளிநாட்டினர்கள் கூட்டமாக வந்து எங்களை வெளியேற்றி விடுகின்றனர் என்று உள்நாட்டவர்கள் கூறுகின்றனர்” என விளக்குகிறார்.

கத்தாரில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம், அதற்கு அருகிலுள்ள மற்றைய நாடுகளிலும் லேசாகத் தலையெடுக்கத் தொடங்குகின்றது. உள்நாட்டவர்களைவிட வெளிநாட்டவர்கள் அதிகமாக வசிக்கும் வேறு சில நாடுகளும், மத்திய கிழக்கில் உள்ளன.

கத்தாருக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின்போது, வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்கள், மற்றும் கத்தார் நாட்டுக் குடிமக்களிடம் பேசியபோது, உரையாடல் பெரும்பாலும் அவநம்பிக்கையை நோக்கியே நகர்ந்தது.

கனடாவிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் ஒருவர், தனது காரை பார்க்கிங் ஒன்றில் நிறுத்த முயன்றபோது நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் கூறினார். “நான் பார்க் பண்ண முயன்ற அதே இடத்தில், மற்றொரு கார் வந்து எனது காரை இடிப்பதுபோல நிறுத்தப்பட்டது. இது என்னுடைய இடம். நான் கத்தார் நாட்டவன். இந்த நாடு எனக்காகத்தான் என்று கூறியபடி கத்தார் நாட்டு கார் ஓட்டுனர், தான் ஓட்டிவந்த காரை அந்த இடத்தில் நிறுத்திவிட்டுச் சென்றார்”

புகார்கள் எழுந்தால், அதற்காகப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். புகாரில் சம்பந்தப்பட்டவர் வெளிநாட்டவர் என்றால் அவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். உள்ளூர் மக்கள் என்றால் வேலை இழக்கின்றனர்.

கத்தார் பிரஜையான அகமது ஜே.அப்துல்-ரஹ்மான், “எனது நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் பிரபல செய்திச் சானலான அல்-ஜசீராவில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்ய விண்ணப்பித்தேன். ஆனால், நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த வேலைக்கு இந்தியாவிலிருந்து ஒருவரைக் அழைத்து வந்திருக்கிறார்கள்” என்று கோபப்படுகிறார்.

“நான் இந்த நாட்டுப் பிரஜை. எனக்கு வேலை கொடுத்த பின்னரே அந்த வேலை வெளிநாட்டவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். இப்போது பாருங்கள்.. நான் வேலையற்ற நபராக இருக்கிறேன்” என்று, 2011 மாடல் மேர்சிடீஸ் பென்ஸ் செடான் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தபடி அவர் கூறினார்.

வைரங்கள் பதிக்கப்பட்ட அவரது கைக்கடிகாரமோ, விளக்கொளியில் ஜொலித்தது.


வி.வி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடுகவனிக்கப்பட்டு வரும் பெயர்.
» 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்
» கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்
» கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum