Latest topics
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!by ayyasamy ram Today at 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விகடன் மேடை - விஜய்
2 posters
Page 1 of 1
விகடன் மேடை - விஜய்
பெ.அருணா, திருப்பூர்.
'' 'விஜய் இளைஞர் காங்கிரஸில் சேர வயதுத் தகுதி இல்லை’ன்னு சொன்னாரே ராகுல் காந்தி. அவரைச் சந்தித்தபோது பதவி கேட்ட உங்கள் கோரிக்கையை நிராகரிக்கத்தான் அப்படிச் சொன்னாரா? அந்தச் சந்திப்பின் பின்னணியை இப்போதாவது சொல்லுங்களேன்?''
''சினிமா கிசுகிசு கேள்விப்பட்டு இருக்கேன், அனுபவிச்சு இருக்கேன். அரசியலில் கூடவா இப்படி வதந்தி பரப்புவாங்க?
இப்போ வரை அந்தச் சந்திப்பில் நாங்க என்ன பேசினோம்னு எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும். அவரை ஏதோ நான் பதவி கேட்டு சந்திச்சதா வெளியான செய்தி முழுக்கவே தப்பு. இப்போ விகடன் மேடை மூலமா அதை சந்தேகத்துக்கு இடம் இல்லாமத் தெளிவுபடுத்திக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்!
அந்தச் சந்திப்பில், ராகுல்... என் படங்கள், சினிமா உலகம், என் பெர்சனல் இன்ட்ரஸ்ட் பத்திப் பேசினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் என்ன தாக்கம் இருக்கும்னு ஆர்வமா விசாரிச்சார். அவரோட அரசியல் அணுகுமுறை, சுறுசுறுப்பு, இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் 'குட்வில் இமேஜ்’னு நான் பேசினேன். அவ்வளவுதான்.
இது தவிர, எந்தப் பதவியைப்பத்தியும் அவரும் நானும் பேசிக்கவே இல்லை. 'எனக்கு இதைச் செஞ்சு கொடுங்க... அதைச் செஞ்சு கொடுங்க’ன்னு கேட்டு எனக்குப் பழக்கம் இல்லீங்ணா!''
ஜி.குப்புசாமி, சங்கராபுரம்.
''இந்தத் தேர்தல் முடிவு மூலம், நீங்கள் புரிந்துகொண்டது என்ன?''
'' 'தெய்வம் நின்று கொல்லும்’கிறது பழமொழி. 'தெய்வம் இன்றே கொல்லும்’கிறது புதுமொழி. இது இந்தத் தேர்தல் உலகத்துக்கு உணர்த்திய உண்மை!''
எஸ்.பெரியசாமி, சென்னை-17.
''நாகையில் மீனவர்களுக்காக நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கித் திண்டாடிவிட்டீர்கள்... அந்த மாதிரியான சமயங்களில் ரசிகர்களின் அளவுக்கு அதிகமான ஆர்வம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமா?''
''என் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்ல கூடத்தான் கூட்டம் முண்டியடிக்கும். வியர்வையில் நனைஞ்சு, சட்டை கசங்கி, பர்ஸ் தொலைஞ்சுன்னு... எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் என் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பார்க்கிறாங்க. அந்தக் கஷ்டத்தை என் மேல வெச்சு இருக்கிற அன்பு காரணமாத்தானே சகிச்சுக்கிறாங்க. அதே அன்பு அவங்க மேல எனக்கும் இருக்கும்ல!
அவங்களுக்காக நான் அந்த சிரமத்தைக் கூடப் பொறுத்துக்க மாட்டேனா? என் மேல் எவ்வளவு அன்பு, பாசம் இருந்தா... என்னைப் பக்கத்துல பார்க்கணும்னு முண்டியடிச்சுட்டு வருவாங்க. அப்படி லட்சக்கணக்கான ரசிகர்களோட அன்பை சம்பாதிச்சது என் பாக்யம். மக்கள் அன்பைப் பெறத்தானே கஷ்டப்படுகிறேன். அதைச் சிரமமா நினைக்கலை... அது வரம்ணா!''
க.ஆதிகேசவன், திருவண்ணாமலை.
''அஜீத் பற்றி உங்க பெர்சனல் ஒப்பீனியன் என்ன?''
''அவரோட தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். எந்த விஷயத்தையும் 'ஜஸ்ட் லைக் தட்’ செஞ்சு முடிச்சிடுவாரு. என் படத்துல ஒரு பஞ்ச் வருமே... 'ஒரு தடவை முடிவெடுத்தா... அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’னு. அது அஜீத்துக்கும் பக்காவாப் பொருந்தும்!''
ச.ஐயப்பன், சென்னை-75.
''உங்க பையன் ஜேசன் சஞ்சய் என்ன பண்ணிட்டு இருக்கார். சீக்கிரமே அவரையும் சினிமாவில் பார்க்கலாமா?''
''தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்னு சொல்வாங்களே... அப்படி வீட்டுக்குள்ளேயே எனக்கு ஒரு தோழன் ஆயிட்டார் சஞ்சய். விறுவிறுன்னு என் தோள் உயரத்துக்கு வளர்ந்துட்டார். அப்பா - மகன்னு இல்லாம, ஒரு ஃப்ரெண்டோடு பேசுற மாதிரிதான் நானும் அவரும் பேசிப்போம். சஞ்சயோட குழந்தை முகம் கம்ப்ளீட்டா மாறிடுச்சு. 'நான் வளர்கிறேனே டாடி’ன்னு வளர்ந்துட்டார். இப்போ சாருக்குப் பிடிச்சது கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட்தான்! எதிர்காலத்தில் அவர் என்னவா வரணும்கிறது அவரோட விருப்பம். அதுக்கு ஒரு தந்தையா என்னால என்ன உதவ முடியுமோ... அதை மட்டும் பண்ணுவேன்!''
கு.ரத்தினம், ஆண்டிபட்டி.
''விஜயகாந்த்தின் வளர்ச்சி பற்றி?''
''அண்ணன் வளர்ந்தா... தம்பிக்கு சந்தோஷம்தானே!''
ஆர்.ராஜன், ஆரணி.
''விஜய் - விஜயகாந்த் ஒப்பிட முடியுமா?''
''இருவரும் என் தந்தையால் ஆசீர் வதிக்கப்பட்டவர்கள்!
ஒரு நல்ல ஆரம்பம், அடைய வேண்டிய இலக்கில் பாதியை எட்டினதுக்குச் சமம்னு சொல்வாங்க. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆரம்பம் ரொம்பவே நல்லா அமைஞ்சது!''
அப்துல் கபூர், நாகர்கோவில்.
''ஜெயலலிதா அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?''
''நான் மட்டும் இல்ல... ஒட்டுமொத்தத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறை வேற்றுவேன்னு அவர் ஒரே ஒரு உத்தரவாதம் மூலம் உறுதிப்படுத்திட்டாரே!
'தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமா மாற்றுவேன்’னு அவர் சொல்லி, அதைச் சாத்தியமாக்க முனைப் புடன் செயல்படுறார். கண்டிப்பா, அவரால் அதைச் சாதிக்க முடியும். சாதிச்சுக் காட்டுவார். அரசியல் அரங்கில் அவர் எப்பவுமே தமிழ் மக்களுக்கு நிழல் தரும் ஆலமரம்!''
கே.முத்து, செய்யாறு.
''ரஜினி - கமல் ஒப்பிடுங்கள்?''
''சிங்கம் - புலி... வேறென்ன சொல்ல!''
ஆர்.பாரி, செங்கல்பட்டு.
''சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுஇருக்கும் ரஜினி பற்றி..?''
''வீட்ல ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லாத மாதிரி ஒட்டுமொத்தத் திரையுலகமும் கவலையில் இருக்கோம். யாரைச் சந்தித்தாலும், பேச்சு ரஜினி சார்ல ஆரம்பிச்சு, ரஜினி சார்லதான் முடியுது.
பெர்சனலா நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஸ்க்ரீன்ல ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாத மாதிரி ஸீன் வந்தாலே, கத்திக் கூப்பாடு போடுற ஆளு நான். இப்போ நிஜமாவே அப்படி ஒரு சூழ்நிலையைத் தாங்கிக்கவே முடிய லைண்ணா. சூப்பர் ஸ்டார் ரொம்ப சீக்கிரமே ஹெல்த்தியா திரும்பி வந்திருவார். 'ராணா’ படத்தை ரசிகர்களோட ரசிகனா தியேட்டர்ல உக்காந்து நானும் பார்ப்பேன்!''
சி.கேசவன், மதுரை.
''உங்களுக்குப் பிடித்த மனிதர் யார்?''
''ண்ணா... 'கள்’ சேர்த்துக்கலாமா? மனிதர்'கள்’ணா!
காந்தி, தந்தை பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். இவங்களை எனக்கு மட்டுமா.... ஒவ்வொரு தமிழனுக்கும் பிடிக்கும்தானே!''
எல்.ராஜன், தஞ்சாவூர்.
''உங்களால் மறக்க முடியாத ரசிகர்..?''
''காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கார்த்திக்னு ஒருத்தர். பெங்களூர்ல இருந்து புறப்பட்டு, என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துட்டார். நேர்ல என்னைப் பார்த்ததும் முகத்துல அப்படி ஒரு பரவசம். 'இவ்வளவு தூரம் எப்படி கஷ்டப்பட்டு வந்தீங்க?’ன்னு நான் கேட்க, சைகையிலயே ஆர்வமா ஏதேதோ கதை கதையா சொன்னார். எனக்குக் கண் கலங்கிருச்சு. நான் அவருக்கு ஆறுதல் சொல்லப் போக, கடைசியில் அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்துத் தேத்தினார். ரொம்ப வெகுளி. அந்த மாதிரி ஒரு மனசு இருந்தா, உடலின் எந்த ஊனத்தையும் சமாளிச் சுடலாம்!''
எஸ்.எம்.ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.
''உங்க படம் ரிலீஸாகும் சமயங்களில் கண்டபடி உலவும் எஸ்.எம்.எஸ்-கள் உங்கள் மொபைலை ரீச் செய்திருக்கிறதா? உங்க ரியாக்ஷன் என்ன?''
விஷமம் பரப்புறது சிலருக்குச் சந்தோஷமா இருக்கும்போல! அதை நான்...
S - சிந்திப்பேன்.
M - மௌனமாகிடுவேன்.
S - சிரிப்பேன்.
ஆ.வி
'' 'விஜய் இளைஞர் காங்கிரஸில் சேர வயதுத் தகுதி இல்லை’ன்னு சொன்னாரே ராகுல் காந்தி. அவரைச் சந்தித்தபோது பதவி கேட்ட உங்கள் கோரிக்கையை நிராகரிக்கத்தான் அப்படிச் சொன்னாரா? அந்தச் சந்திப்பின் பின்னணியை இப்போதாவது சொல்லுங்களேன்?''
''சினிமா கிசுகிசு கேள்விப்பட்டு இருக்கேன், அனுபவிச்சு இருக்கேன். அரசியலில் கூடவா இப்படி வதந்தி பரப்புவாங்க?
இப்போ வரை அந்தச் சந்திப்பில் நாங்க என்ன பேசினோம்னு எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும். அவரை ஏதோ நான் பதவி கேட்டு சந்திச்சதா வெளியான செய்தி முழுக்கவே தப்பு. இப்போ விகடன் மேடை மூலமா அதை சந்தேகத்துக்கு இடம் இல்லாமத் தெளிவுபடுத்திக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்!
அந்தச் சந்திப்பில், ராகுல்... என் படங்கள், சினிமா உலகம், என் பெர்சனல் இன்ட்ரஸ்ட் பத்திப் பேசினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் என்ன தாக்கம் இருக்கும்னு ஆர்வமா விசாரிச்சார். அவரோட அரசியல் அணுகுமுறை, சுறுசுறுப்பு, இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் 'குட்வில் இமேஜ்’னு நான் பேசினேன். அவ்வளவுதான்.
இது தவிர, எந்தப் பதவியைப்பத்தியும் அவரும் நானும் பேசிக்கவே இல்லை. 'எனக்கு இதைச் செஞ்சு கொடுங்க... அதைச் செஞ்சு கொடுங்க’ன்னு கேட்டு எனக்குப் பழக்கம் இல்லீங்ணா!''
ஜி.குப்புசாமி, சங்கராபுரம்.
''இந்தத் தேர்தல் முடிவு மூலம், நீங்கள் புரிந்துகொண்டது என்ன?''
'' 'தெய்வம் நின்று கொல்லும்’கிறது பழமொழி. 'தெய்வம் இன்றே கொல்லும்’கிறது புதுமொழி. இது இந்தத் தேர்தல் உலகத்துக்கு உணர்த்திய உண்மை!''
எஸ்.பெரியசாமி, சென்னை-17.
''நாகையில் மீனவர்களுக்காக நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கித் திண்டாடிவிட்டீர்கள்... அந்த மாதிரியான சமயங்களில் ரசிகர்களின் அளவுக்கு அதிகமான ஆர்வம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமா?''
''என் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்ல கூடத்தான் கூட்டம் முண்டியடிக்கும். வியர்வையில் நனைஞ்சு, சட்டை கசங்கி, பர்ஸ் தொலைஞ்சுன்னு... எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் என் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பார்க்கிறாங்க. அந்தக் கஷ்டத்தை என் மேல வெச்சு இருக்கிற அன்பு காரணமாத்தானே சகிச்சுக்கிறாங்க. அதே அன்பு அவங்க மேல எனக்கும் இருக்கும்ல!
அவங்களுக்காக நான் அந்த சிரமத்தைக் கூடப் பொறுத்துக்க மாட்டேனா? என் மேல் எவ்வளவு அன்பு, பாசம் இருந்தா... என்னைப் பக்கத்துல பார்க்கணும்னு முண்டியடிச்சுட்டு வருவாங்க. அப்படி லட்சக்கணக்கான ரசிகர்களோட அன்பை சம்பாதிச்சது என் பாக்யம். மக்கள் அன்பைப் பெறத்தானே கஷ்டப்படுகிறேன். அதைச் சிரமமா நினைக்கலை... அது வரம்ணா!''
க.ஆதிகேசவன், திருவண்ணாமலை.
''அஜீத் பற்றி உங்க பெர்சனல் ஒப்பீனியன் என்ன?''
''அவரோட தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். எந்த விஷயத்தையும் 'ஜஸ்ட் லைக் தட்’ செஞ்சு முடிச்சிடுவாரு. என் படத்துல ஒரு பஞ்ச் வருமே... 'ஒரு தடவை முடிவெடுத்தா... அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’னு. அது அஜீத்துக்கும் பக்காவாப் பொருந்தும்!''
ச.ஐயப்பன், சென்னை-75.
''உங்க பையன் ஜேசன் சஞ்சய் என்ன பண்ணிட்டு இருக்கார். சீக்கிரமே அவரையும் சினிமாவில் பார்க்கலாமா?''
''தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்னு சொல்வாங்களே... அப்படி வீட்டுக்குள்ளேயே எனக்கு ஒரு தோழன் ஆயிட்டார் சஞ்சய். விறுவிறுன்னு என் தோள் உயரத்துக்கு வளர்ந்துட்டார். அப்பா - மகன்னு இல்லாம, ஒரு ஃப்ரெண்டோடு பேசுற மாதிரிதான் நானும் அவரும் பேசிப்போம். சஞ்சயோட குழந்தை முகம் கம்ப்ளீட்டா மாறிடுச்சு. 'நான் வளர்கிறேனே டாடி’ன்னு வளர்ந்துட்டார். இப்போ சாருக்குப் பிடிச்சது கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட்தான்! எதிர்காலத்தில் அவர் என்னவா வரணும்கிறது அவரோட விருப்பம். அதுக்கு ஒரு தந்தையா என்னால என்ன உதவ முடியுமோ... அதை மட்டும் பண்ணுவேன்!''
கு.ரத்தினம், ஆண்டிபட்டி.
''விஜயகாந்த்தின் வளர்ச்சி பற்றி?''
''அண்ணன் வளர்ந்தா... தம்பிக்கு சந்தோஷம்தானே!''
ஆர்.ராஜன், ஆரணி.
''விஜய் - விஜயகாந்த் ஒப்பிட முடியுமா?''
''இருவரும் என் தந்தையால் ஆசீர் வதிக்கப்பட்டவர்கள்!
ஒரு நல்ல ஆரம்பம், அடைய வேண்டிய இலக்கில் பாதியை எட்டினதுக்குச் சமம்னு சொல்வாங்க. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆரம்பம் ரொம்பவே நல்லா அமைஞ்சது!''
அப்துல் கபூர், நாகர்கோவில்.
''ஜெயலலிதா அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?''
''நான் மட்டும் இல்ல... ஒட்டுமொத்தத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறை வேற்றுவேன்னு அவர் ஒரே ஒரு உத்தரவாதம் மூலம் உறுதிப்படுத்திட்டாரே!
'தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமா மாற்றுவேன்’னு அவர் சொல்லி, அதைச் சாத்தியமாக்க முனைப் புடன் செயல்படுறார். கண்டிப்பா, அவரால் அதைச் சாதிக்க முடியும். சாதிச்சுக் காட்டுவார். அரசியல் அரங்கில் அவர் எப்பவுமே தமிழ் மக்களுக்கு நிழல் தரும் ஆலமரம்!''
கே.முத்து, செய்யாறு.
''ரஜினி - கமல் ஒப்பிடுங்கள்?''
''சிங்கம் - புலி... வேறென்ன சொல்ல!''
ஆர்.பாரி, செங்கல்பட்டு.
''சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுஇருக்கும் ரஜினி பற்றி..?''
''வீட்ல ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லாத மாதிரி ஒட்டுமொத்தத் திரையுலகமும் கவலையில் இருக்கோம். யாரைச் சந்தித்தாலும், பேச்சு ரஜினி சார்ல ஆரம்பிச்சு, ரஜினி சார்லதான் முடியுது.
பெர்சனலா நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஸ்க்ரீன்ல ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாத மாதிரி ஸீன் வந்தாலே, கத்திக் கூப்பாடு போடுற ஆளு நான். இப்போ நிஜமாவே அப்படி ஒரு சூழ்நிலையைத் தாங்கிக்கவே முடிய லைண்ணா. சூப்பர் ஸ்டார் ரொம்ப சீக்கிரமே ஹெல்த்தியா திரும்பி வந்திருவார். 'ராணா’ படத்தை ரசிகர்களோட ரசிகனா தியேட்டர்ல உக்காந்து நானும் பார்ப்பேன்!''
சி.கேசவன், மதுரை.
''உங்களுக்குப் பிடித்த மனிதர் யார்?''
''ண்ணா... 'கள்’ சேர்த்துக்கலாமா? மனிதர்'கள்’ணா!
காந்தி, தந்தை பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். இவங்களை எனக்கு மட்டுமா.... ஒவ்வொரு தமிழனுக்கும் பிடிக்கும்தானே!''
எல்.ராஜன், தஞ்சாவூர்.
''உங்களால் மறக்க முடியாத ரசிகர்..?''
''காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கார்த்திக்னு ஒருத்தர். பெங்களூர்ல இருந்து புறப்பட்டு, என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துட்டார். நேர்ல என்னைப் பார்த்ததும் முகத்துல அப்படி ஒரு பரவசம். 'இவ்வளவு தூரம் எப்படி கஷ்டப்பட்டு வந்தீங்க?’ன்னு நான் கேட்க, சைகையிலயே ஆர்வமா ஏதேதோ கதை கதையா சொன்னார். எனக்குக் கண் கலங்கிருச்சு. நான் அவருக்கு ஆறுதல் சொல்லப் போக, கடைசியில் அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்துத் தேத்தினார். ரொம்ப வெகுளி. அந்த மாதிரி ஒரு மனசு இருந்தா, உடலின் எந்த ஊனத்தையும் சமாளிச் சுடலாம்!''
எஸ்.எம்.ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.
''உங்க படம் ரிலீஸாகும் சமயங்களில் கண்டபடி உலவும் எஸ்.எம்.எஸ்-கள் உங்கள் மொபைலை ரீச் செய்திருக்கிறதா? உங்க ரியாக்ஷன் என்ன?''
விஷமம் பரப்புறது சிலருக்குச் சந்தோஷமா இருக்கும்போல! அதை நான்...
S - சிந்திப்பேன்.
M - மௌனமாகிடுவேன்.
S - சிரிப்பேன்.
ஆ.வி
Re: விகடன் மேடை - விஜய்
நல்லா கொடுக்கரார்ய்யா பேட்டி...
என்ன படம் தான் பத்து நாள தாண்ட மாட்டீங்கிது...
என்ன படம் தான் பத்து நாள தாண்ட மாட்டீங்கிது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» விகடன் மேடை - சந்தானம்
» 28-7-2015 - அவள் விகடன் + 22-7-2015- ஆனந்த விகடன் + 25-7-2015- டைம் பாஸ் விகடன்
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» ஜுனியர் விகடன் & நாணயம் விகடன்
» 28-7-2015 - அவள் விகடன் + 22-7-2015- ஆனந்த விகடன் + 25-7-2015- டைம் பாஸ் விகடன்
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» ஜுனியர் விகடன் & நாணயம் விகடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|