Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
+5
balakarthik
அப்துல்லாஹ்
பூஜிதா
ந.கார்த்தி
தாமு
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
விஜய் டிவி மியூசிக் அவார்ட்ஸ் என நிகழ்ச்சி நடத்தினார்கள். எல்லா பாடகர், பாடகியும் கூப்பிட்டு வந்த எல்லாருக்கும் ஏதாவது ஒரு கேட்டகரியில் விருது குடுத்தாங்க. இதில் கமலுக்கு "நடிகர்கள் பாடியதில் சிறந்த பாடல் விருது" என நீல வானம் பாட்டுக்காக விருது குடுக்க பட்டது. விருதை வழங்கிய யேசுதாஸ், விருது பெற்ற கமலிடம் ஒரே கேள்வி தான் கேட்டார்: "நீங்க முறைப்படி சங்கீதம் கத்துக்கிடீங்களா ?" இதுக்கு கமல் சொன்ன பதில் இருக்கே ..அடடா ! இதை யாராவது புரிஞ்சிக்கிட்டா அவங்களுக்கு அதுக்கே விருது குடுக்கலாம். அது எப்படி கமல் மட்டும் திடீர்னு கேள்வி கேட்டா கூட இப்படி தலையை & உடலை சுற்றி பதில் தர்றாரோ ! யேசுதாஸ் நம்ம கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு "சரி. நீங்க பாட்டு கத்துக்கிட்டீங்க. யாரிடம் கத்துக்கிட்டீங்க?" என்று கேட்டார். இதுக்கும் தலையை சுற்றி சொன்ன பதிலில் கமல் பால முரளி கிருஷ்ணாவிடம் பாட்டு கற்று கொண்டது தெரிந்தது. கமல் மைக் பிடித்தாலே நமக்கு சில நேரம் கிலியாகிடுது. சில நேரம் சிரிச்சு சிரிச்சு கண்ணில் தண்ணி வருது. நடத்துங்கண்ணா !
அம்மாவும் அமைச்சர்களும்
அம்மாவின் அமைச்சர்கள் சிலர் நமக்கு சுவாரஸ்யமான விஷயங்கள் தருகிறார்கள். மாதிரிக்கு சில :
உதய குமார் என்பவர் ஐ. டி துறைக்கு அமைச்சர். இவர் காலணிகள் அணிவதே இல்லை. காரணம் கேட்டால், " அம்மா இருக்கும் இடத்தில எப்படி செருப்பு போடுவது?" என்கிறார். எல்லா இடத்திற்கும் செருப்பு அணியாமலே செல்லும் இவர், அரசு நடத்தும் மீட்டிங்குகளில், பல உயர் அதிகாரிகள் பளபளக்கும் ஷூக்களுடன் இருக்க தான் மட்டும் செருப்பின்றி அமர்ந்து மீட்டிங் நடத்துகிறார். (கடைசியாக கிடைத்த தகவலின் படி அம்மா இவரை அவசியம் செருப்பு அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்)
செல்ல பாண்டியன் என்கிற தொழிலாளர் துறை அமைச்சர் கதை வேறு விதம். தனது பெண் கல்யாணத்திற்கே இவர் போகவில்லை. அம்மா நடத்துகிற மீட்டிங் தான் முக்கியம். பொண்ணை அப்புறம் பாத்துக்கலாம் " என்பது இவரது கருத்து.
நமக்கு இது மாதிரி சுவாரஸ்ய நியூஸ் இனி நிறைய கிடைக்க போகுது ..
இரு கேள்வி இரு பதில்
கேள்வி : தமிழக அரசிடம் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதிவர் பதில் : (பெயர் வேண்டாம் என சொல்லி விட்டு சொன்னது)
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்களுடைய முதல் ஏழு கையெழுத்தும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் குறிப்பாக முதியோருக்கு மாதாந்திரம் வழங்கப்படும் உதவித் தொகை ரூ. ஆயிரம் பலராலும் வரவேற்கபடுகிறது.
இனி, நாங்கள் தங்களிடமிருந்து உடனடியாக எதிர்ப்பார்ப்பது, தாங்கள்
தேர்தலில் சொன்ன இலவசத்தையல்ல. அதற்கு முன்பு.
பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூல் செய்வதையும், கட்டணக் கொள்ளையையும் கட்டுப்படுத்தவும். அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட நடவடிக்கையும்.
ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில வட்டியில்லாக் கடன் வழங்கவும். தடையில்லா மின்சாரம் கிடைப்பதோடு, தொழிற்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும்.
ரேஷன் கடைகளில் தரமானப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கவும். தாறுமாறாக ஏறும் விலைவாசியை சீர்ப்படுத்தவும்.
வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல், வாகனத்திருட்டு, சாலை விதி மீறல்களால் ஏற்படும் விபத்து போன்றவற்றை முற்றிலும் தடுக்கவும். அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி போன்ற சட்டவிரோத செயால்களில் ஈடுபடுவோரை ஒழிக்கவும்.
பூரண மதுவிலக்கு அல்லது விற்பனை நேரத்தைக் குறைக்கவும். விவசாயிகளுக்கு தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, பொருட்களை அரசே வாங்கி மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும்.
அரசு மருத்துவாமனைகளின் தரத்தை உயர்த்துவதோடு, கிராமப்புற மருத்துவனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அங்கேயே தாங்கி பணிபுரிய குடியிருப்புகள் ஏற்படுத்தவும். மேலும், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு மற்றும் தைராயிட போன்ற ் நோய்களுக்குரிய மாத்திரைகளை, மாதத்திற்கு ஒரு முறை வழங்கவும். அப்படி வழங்குவதால், அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்படப் போவதில்லை. அதே நேரம் நோயாளிகளுக்கு பொருளாதாரம் மற்றும் நேரம் மிச்சமாகும். இன்னும், சர்க்கரை வியாதிக்கு ஒருநாள், ரத்த அழுத்தத்திற்கு ஒருநாள், வலிப்பு நோய்க்கு ஒருநாள், என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இப்பொழுது பெரும் பகுதியினருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம், போன்றவை சேர்த்தேதான் வருகிறது. இந்நிலையில் இம்மாதிரி நோயாளிகளுக்கு ஒரே நாளில் மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும்.
அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும். அனைத்துக் கிராமங்களையும், நகரங்களுடன் இணைக்க மினி பஸ் வசதியை அதிகப்படுத்தவும்.
இவைகளையும், இன்னும்பிற மக்கள் நலத்திட்டங்களையும் செய்த பிறகு, இலவசத்தைத் தாருங்கள் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களில் ஒருவன்.
கேள்வி 2 : நமது தற்போதைய கல்வி முறை சரியானது தானா? இதில் அவசியம் செய்ய வேண்டிய மாறுதல்களாக நீங்கள் கருதுவது என்னென்ன?
பதில் : கார்த்திகை பாண்டியன்
ஒரு ஆசிரியராக நான் உணர்ந்த விஷயங்களின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன். முதலில் இப்போதுள்ள கல்வி முறையை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிகள் இருக்கும் உயர்நிலைக் கல்வி.
பள்ளிக் கல்வியில் என்ன செய்து வைக்கிறோம்? குழந்தைகளின் தகுதிக்கு மீறிய விஷயங்களை அவர்களுக்குள் திணிப்பதானதாகவே இன்றைய பள்ளிக் கல்வி இருக்கிறது. என்னுடைய கல்லூரியின் முதல் வருடத்தில்தான் நான் கணினி என்பதையே அறிந்தேன். ஆனால் இன்றைக்கு முதல் வகுப்பில் இருக்கும் மாணவனுக்கு கணினி பற்றி சொல்லித் தருகிறார்கள். வயதுக்கு மீறிய விஷயமாகவே இது எனக்குப் படுகிறது.இதேபோல புரிந்து படிக்காமல் பாடத்தை மனப்பாடம் செய்து தாளில் வாந்தி எடுக்க வைக்கும் தேர்வுமுறையும் மிகக் கேவலமானதே. அருகில் இருக்கும் ஆந்திராவில் பத்தாம் வகுப்பிலேயே அடுத்த உயர்கல்விக்கான தெரிவு முடிந்து மாணவர்களுக்கு சரியான பயிற்சி கொடுப்பார்களாம். அது போன்ற முறையை இங்கே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
அடுத்து கல்லூரிகள். நான் இருக்கும் துறை சார்ந்து பேச விரும்புகிறேன். பொறியியல் கல்லூரிகள் இன்றைக்கு கலைக் கல்லூரிகளக் காட்டிலும் அதிகமாக இருப்பது பெருங்கொடுமை.ஒரு பிசி போர்டைக் கொடுத்து இது எப்படி வேலை செய்கிறது எனக் கேட்டால் பதில் வருவது கிடையாது. வெறுமனே புத்தகத்தில் இருப்பதைப் படித்து பரீட்சை எழுதி வேலைக்கு வரும் மாணவர்களுக்கு நிஜத்தில் எதுவும் தெரிவதில்லை. செய்முறை என்கிற ஒரு விஷயம் ஒழுங்காக அமல்படுத்தப்படாத வரைக்கும் சரிப்பட்டு வராது. கோவை பி.எஸ்.ஜி யில் சாண்ட்விக் என்றொரு கோர்ஸ் உண்டு. காலையில் தியரி வகுப்புகளும் மதியத்துக்கு மேல் படித்த விஷயங்களை செய்முறையாக விளக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது போல எல்லாக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தினால் சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
ஐ. பி. எல் கார்னர்
ஐ. பி. எல் பைனல் சென்னை வென்றதில் மிக மகிழ்ச்சி. அதிக மகிழ்ச்சி பெங்களூரை தோற்கடித்து ஜெயித்தது. என்ன ஒன்று பைனல் சுவாரஸ்யம் இல்லாமல் மேட்ச் one sided ஆக இருந்தது. பழைய ஆஸ்திரேலியா அணி மட்டும் தான் ஒரு முறை வென்ற கோப்பையை மறுபடி தொடர்ந்து தக்க வைத்தது (அதற்கு முன்பு எண்பதுகளில் மேற்கிந்திய தீவுகள்). அந்த விதத்தில் சென்னை தனது டைட்டிலை தக்க வைத்து கொண்டது. இந்த முறை ஒரு மேட்சும் நேரில் பார்க்கலை. அதனால தான் ஜெயிச்சுதுங்குரீன்களா? போன முறை நேரில் பார்த்தேனே.. அப்போ கப் ஜெயிச்சுதே !!
கண்டனம்
அமெரிக்காவில் கிருத்திகா பிஸ்வாஸ் என்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த அவமானம் வருத்தப்பட வைக்கிறது. தனது ஆசிரியருக்கு அசிங்கமான எஸ். எம். எஸ் அனுப்பினார் என குற்றம் சாட்டி, கைது செய்து காவலில் மிக கடுமையாக நடத்தி இருக்கிறார்கள். குற்றங்களை இவர் மறுத்தார். பின் நிஜ குற்றவாளி யார் என தெரிந்ததும் அவரை வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து பிரச்னையை முடித்து விட்டனர். Discrimination அமெரிக்காவிலும் இருக்கு !! கிருத்திகா பிஸ்வாஸ் நடத்தப்பட்ட விதத்திற்கு பள்ளியோ, காவல் துறையோ ஒரு மன்னிப்பு கூட கேட்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடு திரும்பல்
அம்மாவும் அமைச்சர்களும்
அம்மாவின் அமைச்சர்கள் சிலர் நமக்கு சுவாரஸ்யமான விஷயங்கள் தருகிறார்கள். மாதிரிக்கு சில :
உதய குமார் என்பவர் ஐ. டி துறைக்கு அமைச்சர். இவர் காலணிகள் அணிவதே இல்லை. காரணம் கேட்டால், " அம்மா இருக்கும் இடத்தில எப்படி செருப்பு போடுவது?" என்கிறார். எல்லா இடத்திற்கும் செருப்பு அணியாமலே செல்லும் இவர், அரசு நடத்தும் மீட்டிங்குகளில், பல உயர் அதிகாரிகள் பளபளக்கும் ஷூக்களுடன் இருக்க தான் மட்டும் செருப்பின்றி அமர்ந்து மீட்டிங் நடத்துகிறார். (கடைசியாக கிடைத்த தகவலின் படி அம்மா இவரை அவசியம் செருப்பு அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்)
செல்ல பாண்டியன் என்கிற தொழிலாளர் துறை அமைச்சர் கதை வேறு விதம். தனது பெண் கல்யாணத்திற்கே இவர் போகவில்லை. அம்மா நடத்துகிற மீட்டிங் தான் முக்கியம். பொண்ணை அப்புறம் பாத்துக்கலாம் " என்பது இவரது கருத்து.
நமக்கு இது மாதிரி சுவாரஸ்ய நியூஸ் இனி நிறைய கிடைக்க போகுது ..
இரு கேள்வி இரு பதில்
கேள்வி : தமிழக அரசிடம் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதிவர் பதில் : (பெயர் வேண்டாம் என சொல்லி விட்டு சொன்னது)
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்களுடைய முதல் ஏழு கையெழுத்தும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் குறிப்பாக முதியோருக்கு மாதாந்திரம் வழங்கப்படும் உதவித் தொகை ரூ. ஆயிரம் பலராலும் வரவேற்கபடுகிறது.
இனி, நாங்கள் தங்களிடமிருந்து உடனடியாக எதிர்ப்பார்ப்பது, தாங்கள்
தேர்தலில் சொன்ன இலவசத்தையல்ல. அதற்கு முன்பு.
பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூல் செய்வதையும், கட்டணக் கொள்ளையையும் கட்டுப்படுத்தவும். அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட நடவடிக்கையும்.
ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில வட்டியில்லாக் கடன் வழங்கவும். தடையில்லா மின்சாரம் கிடைப்பதோடு, தொழிற்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும்.
ரேஷன் கடைகளில் தரமானப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கவும். தாறுமாறாக ஏறும் விலைவாசியை சீர்ப்படுத்தவும்.
வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல், வாகனத்திருட்டு, சாலை விதி மீறல்களால் ஏற்படும் விபத்து போன்றவற்றை முற்றிலும் தடுக்கவும். அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி போன்ற சட்டவிரோத செயால்களில் ஈடுபடுவோரை ஒழிக்கவும்.
பூரண மதுவிலக்கு அல்லது விற்பனை நேரத்தைக் குறைக்கவும். விவசாயிகளுக்கு தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, பொருட்களை அரசே வாங்கி மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும்.
அரசு மருத்துவாமனைகளின் தரத்தை உயர்த்துவதோடு, கிராமப்புற மருத்துவனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அங்கேயே தாங்கி பணிபுரிய குடியிருப்புகள் ஏற்படுத்தவும். மேலும், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலிப்பு மற்றும் தைராயிட போன்ற ் நோய்களுக்குரிய மாத்திரைகளை, மாதத்திற்கு ஒரு முறை வழங்கவும். அப்படி வழங்குவதால், அரசுக்கு பொருளாதார இழப்பு ஏற்படப் போவதில்லை. அதே நேரம் நோயாளிகளுக்கு பொருளாதாரம் மற்றும் நேரம் மிச்சமாகும். இன்னும், சர்க்கரை வியாதிக்கு ஒருநாள், ரத்த அழுத்தத்திற்கு ஒருநாள், வலிப்பு நோய்க்கு ஒருநாள், என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இப்பொழுது பெரும் பகுதியினருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம், போன்றவை சேர்த்தேதான் வருகிறது. இந்நிலையில் இம்மாதிரி நோயாளிகளுக்கு ஒரே நாளில் மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும்.
அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவும். அனைத்துக் கிராமங்களையும், நகரங்களுடன் இணைக்க மினி பஸ் வசதியை அதிகப்படுத்தவும்.
இவைகளையும், இன்னும்பிற மக்கள் நலத்திட்டங்களையும் செய்த பிறகு, இலவசத்தைத் தாருங்கள் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களில் ஒருவன்.
கேள்வி 2 : நமது தற்போதைய கல்வி முறை சரியானது தானா? இதில் அவசியம் செய்ய வேண்டிய மாறுதல்களாக நீங்கள் கருதுவது என்னென்ன?
பதில் : கார்த்திகை பாண்டியன்
ஒரு ஆசிரியராக நான் உணர்ந்த விஷயங்களின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன். முதலில் இப்போதுள்ள கல்வி முறையை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிகள் இருக்கும் உயர்நிலைக் கல்வி.
பள்ளிக் கல்வியில் என்ன செய்து வைக்கிறோம்? குழந்தைகளின் தகுதிக்கு மீறிய விஷயங்களை அவர்களுக்குள் திணிப்பதானதாகவே இன்றைய பள்ளிக் கல்வி இருக்கிறது. என்னுடைய கல்லூரியின் முதல் வருடத்தில்தான் நான் கணினி என்பதையே அறிந்தேன். ஆனால் இன்றைக்கு முதல் வகுப்பில் இருக்கும் மாணவனுக்கு கணினி பற்றி சொல்லித் தருகிறார்கள். வயதுக்கு மீறிய விஷயமாகவே இது எனக்குப் படுகிறது.இதேபோல புரிந்து படிக்காமல் பாடத்தை மனப்பாடம் செய்து தாளில் வாந்தி எடுக்க வைக்கும் தேர்வுமுறையும் மிகக் கேவலமானதே. அருகில் இருக்கும் ஆந்திராவில் பத்தாம் வகுப்பிலேயே அடுத்த உயர்கல்விக்கான தெரிவு முடிந்து மாணவர்களுக்கு சரியான பயிற்சி கொடுப்பார்களாம். அது போன்ற முறையை இங்கே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
அடுத்து கல்லூரிகள். நான் இருக்கும் துறை சார்ந்து பேச விரும்புகிறேன். பொறியியல் கல்லூரிகள் இன்றைக்கு கலைக் கல்லூரிகளக் காட்டிலும் அதிகமாக இருப்பது பெருங்கொடுமை.ஒரு பிசி போர்டைக் கொடுத்து இது எப்படி வேலை செய்கிறது எனக் கேட்டால் பதில் வருவது கிடையாது. வெறுமனே புத்தகத்தில் இருப்பதைப் படித்து பரீட்சை எழுதி வேலைக்கு வரும் மாணவர்களுக்கு நிஜத்தில் எதுவும் தெரிவதில்லை. செய்முறை என்கிற ஒரு விஷயம் ஒழுங்காக அமல்படுத்தப்படாத வரைக்கும் சரிப்பட்டு வராது. கோவை பி.எஸ்.ஜி யில் சாண்ட்விக் என்றொரு கோர்ஸ் உண்டு. காலையில் தியரி வகுப்புகளும் மதியத்துக்கு மேல் படித்த விஷயங்களை செய்முறையாக விளக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது போல எல்லாக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தினால் சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
ஐ. பி. எல் கார்னர்
ஐ. பி. எல் பைனல் சென்னை வென்றதில் மிக மகிழ்ச்சி. அதிக மகிழ்ச்சி பெங்களூரை தோற்கடித்து ஜெயித்தது. என்ன ஒன்று பைனல் சுவாரஸ்யம் இல்லாமல் மேட்ச் one sided ஆக இருந்தது. பழைய ஆஸ்திரேலியா அணி மட்டும் தான் ஒரு முறை வென்ற கோப்பையை மறுபடி தொடர்ந்து தக்க வைத்தது (அதற்கு முன்பு எண்பதுகளில் மேற்கிந்திய தீவுகள்). அந்த விதத்தில் சென்னை தனது டைட்டிலை தக்க வைத்து கொண்டது. இந்த முறை ஒரு மேட்சும் நேரில் பார்க்கலை. அதனால தான் ஜெயிச்சுதுங்குரீன்களா? போன முறை நேரில் பார்த்தேனே.. அப்போ கப் ஜெயிச்சுதே !!
கண்டனம்
அமெரிக்காவில் கிருத்திகா பிஸ்வாஸ் என்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த அவமானம் வருத்தப்பட வைக்கிறது. தனது ஆசிரியருக்கு அசிங்கமான எஸ். எம். எஸ் அனுப்பினார் என குற்றம் சாட்டி, கைது செய்து காவலில் மிக கடுமையாக நடத்தி இருக்கிறார்கள். குற்றங்களை இவர் மறுத்தார். பின் நிஜ குற்றவாளி யார் என தெரிந்ததும் அவரை வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து பிரச்னையை முடித்து விட்டனர். Discrimination அமெரிக்காவிலும் இருக்கு !! கிருத்திகா பிஸ்வாஸ் நடத்தப்பட்ட விதத்திற்கு பள்ளியோ, காவல் துறையோ ஒரு மன்னிப்பு கூட கேட்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடு திரும்பல்
Re: கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
அப்துல்லாஹ் wrote:
அண்ணே நீங்க கூட ஒரு கமல் தானே தினமும் ஒரு அவதார் எடுக்குரிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
balakarthik wrote:அப்துல்லாஹ் wrote:
அண்ணே நீங்க கூட ஒரு கமல் தானே தினமும் ஒரு அவதார் எடுக்குரிங்க
எல்லாம் ஓங்களா மாதிரி பெரிய மனுஷங்க முன்னாடி சின்னவயசாக் காட்டத்தான் இந்த அவதார் மத்தப் படி சுத்தி வளச்செல்லாம் கமல் மாதிரி பேச மாட்டேன்....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
மக்களுக்கு நல்லது நடந்தால் சரி!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
அப்துல்லாஹ் wrote:balakarthik wrote:அப்துல்லாஹ் wrote:
அண்ணே நீங்க கூட ஒரு கமல் தானே தினமும் ஒரு அவதார் எடுக்குரிங்க
எல்லாம் ஓங்களா மாதிரி பெரிய மனுஷங்க முன்னாடி சின்னவயசாக் காட்டத்தான் இந்த அவதார் மத்தப் படி சுத்தி வளச்செல்லாம் கமல் மாதிரி பேச மாட்டேன்....
அட இதுக்குக்கா இவ்வளவு சிரமப்படனும் சுலபமான வழி நான் சொல்லுறேன்
" துள்ளுவதோ இளமை - நீங்கள் துள்ளும் இளமயாக காட்சிதர
தேடுவதோ தனிமை - யாரும் இல்லாத தனியான இடத்தில் போயி
அள்ளுவதே திறமை - எதையும் அளவோட செய்யனும் இல்லேனா எல்லோருக்கும் தெரிஞ்சுபோயிடும்
அத்தனயும் புதுமை - இது ரொம்ப முக்கியம் வாங்கும்பொழுது எக்ஸ்பயரி டேட் பாத்துவாங்குங்க இல்லேனா இருக்குற நாலு முடியும் கொட்டிபோயிடும்"
இவ்வாறாக மாதத்திர்க்கு ஒருமுறை செய்துவந்தால் இந்த நாள் மட்டுமல்ல எல்லானாலுமே நீங்கள் இளமயாக காசித்தரலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர்கள்
balakarthik wrote:அப்துல்லாஹ் wrote:balakarthik wrote:அப்துல்லாஹ் wrote:
அண்ணே நீங்க கூட ஒரு கமல் தானே தினமும் ஒரு அவதார் எடுக்குரிங்க
எல்லாம் ஓங்களா மாதிரி பெரிய மனுஷங்க முன்னாடி சின்னவயசாக் காட்டத்தான் இந்த அவதார் மத்தப் படி சுத்தி வளச்செல்லாம் கமல் மாதிரி பேச மாட்டேன்....
அட இதுக்குக்கா இவ்வளவு சிரமப்படனும் சுலபமான வழி நான் சொல்லுறேன்
" துள்ளுவதோ இளமை - நீங்கள் துள்ளும் இளமயாக காட்சிதர
தேடுவதோ தனிமை - யாரும் இல்லாத தனியான இடத்தில் போயி
அள்ளுவதே திறமை - எதையும் அளவோட செய்யனும் இல்லேனா எல்லோருக்கும் தெரிஞ்சுபோயிடும்
அத்தனயும் புதுமை - இது ரொம்ப முக்கியம் வாங்கும்பொழுது எக்ஸ்பயரி டேட் பாத்துவாங்குங்க இல்லேனா இருக்குற நாலு முடியும் கொட்டிபோயிடும்"
இவ்வாறாக மாதத்திர்க்கு ஒருமுறை செய்துவந்தால் இந்த நாள் மட்டுமல்ல எல்லானாலுமே நீங்கள் இளமயாக காசித்தரலாம்
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கமலின் விருப்பம்
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» கமலின் கடிதம்.
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» கமலின் ஹாலிவுட் முயற்சி
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» கமலின் கடிதம்.
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» கமலின் ஹாலிவுட் முயற்சி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|