Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
2 posters
Page 1 of 1
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
நெஞ்சங்கனிந்தவளாம் நேரில்மலர் கொள்ளவென
கொஞ்சம்முயல அட கொடி இடையில் கைநழுவ
மஞ்சம் விரிவானும் மதியவளோ தூங்கையிலே
மிஞ்சும் மறை துகிலென் மேகம்விலக ஒளி
கொட்டிக்குளிராகும் குறுமணல்கொள் ஈரமுடன்
எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்
தொட்ட உடல்நொந்து தோன்றுவதாய் சிறுதேனீ
பட்ட தனால் சத்தமிட்டு பாதியிலே பாய்ந்தோட
மொட்டானஇதழ்முகிழ மொய்த்தனவோ எனவாகி
வட்டவிழிக்கருவண்டு வந்து குடித்திடத் தேன்
விட்டுப்பிரி யுமிதழ் வீழ்ந்திவைகள் கொள்ளமுதல்
எட்டுமோ என்றெட்ட இடையிலிவள் எதனாலோ
அஞ்சித்துணி யாது அவிழமலர் போர்த்தெடுத்த
மிஞ்சும் எழில்கண்டு மெல்லக் கைபறிக்கும்
விஞ்சும் மகிழ்வில்பூ வைத்தகை கரும்பாகி
பஞ்சென இதயமதில் பார் ரதியினவன் எய்தான்
இதற்குள் இரண்டு அர்த்தங்கள் காண முடிகிறதா?
ஒன்றுஇது..
மனம் மென்மையானவள் அவள், தானே பூக்கள் பறித்துக்கொள்ளச் சென்றாள்.
அவள் கொடிகளுக்கு இடையில் கையை நழுவவிட்டுப் பூக்கள் கொய்யுபோது
கட்டில் போன்ற வானத்தில் துயிலும் பெண்போன்ற நிலாவானது, அணிந்த
ஆடைபோன்ற மேகம் விலகும்போது ஒளியை வீசும்.
அந்த ஒளியானது நிலம் மீதுபடும் வேளையில் எப்படி குளிர்வும் அழகும் கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எட்டுமளவு தூரத்தில் இருந்த பூமரத்தின் (தரு - மரம்) (எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்) தேனைக்கொண்ட இதழ்கள் உள்ளிருந்து அவள் கைபட்ட
நோவினாலேயோ ஏதோ, ஒரு தேனீ சத்தமிட்டபடி வெளியே பாய்ந்தோடியது
அப்போது பக்கத்தில் பாதிமலர்ந்த ஒரு மொட்டை சுற்றி, பெண்களின் கண்கள் போன்ற
இரு வண்டுகள் வந்து தேனைஉண்ண முயலுகையில், அவற்றை முந்தி அந்த மலரைத்
தானெடுத்துவிட அவள் எண்ணினாலும், இடையில் அச்சத்தால் அந்த எண்ணத்தைக்
கைவிட்டவள் அது விரியும் அழகில் மனதைபறிகொடுத்தவளாக மீண்டும் அதை பறிக்க
கைகொண்டுபோக, கரும்புபோன்ற கையினில் மலர் எடுத்து கணைதொடுக்க ரதியின்
கணவன் மன்மதன் முயன்ற காட்சிபோல தோன்றியது
இப்போது ஒருமுறை கவிதையை படியுங்கள்
இது இரண்டாவது பொருள்: spoiler உள்ளே!...
இனிமீண்டும் கவிதையை காணவும்
கொஞ்சம்முயல அட கொடி இடையில் கைநழுவ
மஞ்சம் விரிவானும் மதியவளோ தூங்கையிலே
மிஞ்சும் மறை துகிலென் மேகம்விலக ஒளி
கொட்டிக்குளிராகும் குறுமணல்கொள் ஈரமுடன்
எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்
தொட்ட உடல்நொந்து தோன்றுவதாய் சிறுதேனீ
பட்ட தனால் சத்தமிட்டு பாதியிலே பாய்ந்தோட
மொட்டானஇதழ்முகிழ மொய்த்தனவோ எனவாகி
வட்டவிழிக்கருவண்டு வந்து குடித்திடத் தேன்
விட்டுப்பிரி யுமிதழ் வீழ்ந்திவைகள் கொள்ளமுதல்
எட்டுமோ என்றெட்ட இடையிலிவள் எதனாலோ
அஞ்சித்துணி யாது அவிழமலர் போர்த்தெடுத்த
மிஞ்சும் எழில்கண்டு மெல்லக் கைபறிக்கும்
விஞ்சும் மகிழ்வில்பூ வைத்தகை கரும்பாகி
பஞ்சென இதயமதில் பார் ரதியினவன் எய்தான்
இதற்குள் இரண்டு அர்த்தங்கள் காண முடிகிறதா?
ஒன்றுஇது..
மனம் மென்மையானவள் அவள், தானே பூக்கள் பறித்துக்கொள்ளச் சென்றாள்.
அவள் கொடிகளுக்கு இடையில் கையை நழுவவிட்டுப் பூக்கள் கொய்யுபோது
கட்டில் போன்ற வானத்தில் துயிலும் பெண்போன்ற நிலாவானது, அணிந்த
ஆடைபோன்ற மேகம் விலகும்போது ஒளியை வீசும்.
அந்த ஒளியானது நிலம் மீதுபடும் வேளையில் எப்படி குளிர்வும் அழகும் கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எட்டுமளவு தூரத்தில் இருந்த பூமரத்தின் (தரு - மரம்) (எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்) தேனைக்கொண்ட இதழ்கள் உள்ளிருந்து அவள் கைபட்ட
நோவினாலேயோ ஏதோ, ஒரு தேனீ சத்தமிட்டபடி வெளியே பாய்ந்தோடியது
அப்போது பக்கத்தில் பாதிமலர்ந்த ஒரு மொட்டை சுற்றி, பெண்களின் கண்கள் போன்ற
இரு வண்டுகள் வந்து தேனைஉண்ண முயலுகையில், அவற்றை முந்தி அந்த மலரைத்
தானெடுத்துவிட அவள் எண்ணினாலும், இடையில் அச்சத்தால் அந்த எண்ணத்தைக்
கைவிட்டவள் அது விரியும் அழகில் மனதைபறிகொடுத்தவளாக மீண்டும் அதை பறிக்க
கைகொண்டுபோக, கரும்புபோன்ற கையினில் மலர் எடுத்து கணைதொடுக்க ரதியின்
கணவன் மன்மதன் முயன்ற காட்சிபோல தோன்றியது
இப்போது ஒருமுறை கவிதையை படியுங்கள்
இது இரண்டாவது பொருள்: spoiler உள்ளே!...
- Spoiler:
- நெஞ்சில் கனிபோலும் இனிய வளங்களைக் கொண்டவளின் மலர்தேகத்தை கொள்ள
வென சற்று முயற்சித்து, அவள் கொடிபோன்ற இடையில் கையை மெதுவாக தொட
(அவள் அசைய) வானில் நிலவு தொங்கிநிற்கும்போது மறைத்தமேகம் விலகுவதுபோன்று
அவள் போர்வையும் விலக, மேனிஅழகு பெற்றது.மணல் போன்ற குளிருடைய ஈரமான
அவள் உதடுகளில் , அவள் இடையைத்தொடும்போது வேதனையுற்றது போல் மெல்லிய
சத்தமெழப் பாய்ந்தோட முயன்றாள்.
( தோன்றுவதாய் சிறுதேனீ -இது தோன்றுவதாய் சிறுதேன் நீ என்று வரும்)
அவள் உதடுகள் மலர் மொட்டு என்று எண்ணி இரு வண்டுகள் தேனுண்ண வந்து பக்கம்
இருப்பது போன்று அமைந்த விழிகளைக் கண்டு, அவை உண்ணமுதல் தான்
உண்ணுவோமென அவன்நினைத்து (எட்டுமோ) அவன் எட்டி அவளை தொட எதற்கோ
பயந்ததுபோல் மூடியதிரை துணி ஒதுங்க, போர்வை நீங்கிய அழகு மலரில் அவன்
வைத்த கை மன்மதனின் கரும்பு வில்போல இதயத்தில் மலர்க் கணைகளை எறிந்தது
இனிமீண்டும் கவிதையை காணவும்
இனிமீண்டும் கவிதையை காணவும்
Last edited by kirikasan on Tue May 31, 2011 10:56 pm; edited 1 time in total
Re: நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
முதலில் படித்தபோது கொஞ்சம் டென்சனாகிட்டேன் (ராத்திரி பாருங்க) அப்புறம் தான் நீங்க கொடுத்த விளக்கத்தை படித்தவுடன் புஸ்சுன்னு போச்சு
அருமை கிரி அண்ணா! பாராட்டுக்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
நன்றிகள்!
spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!
spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!
Re: நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
ஏண்ணே! ஏன்? இப்படி பீப்பிய ஏத்துறீங்கkirikasan wrote:நன்றிகள்!
spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
Re: நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
அசுரன் wrote:நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
தெரியும் அசுரன்! பெயர் அசுரன் என்று இருந்தால் மனம் குழந்தையாக இருக்கும்! தங்கள் கருத்தை 100% அப்போதே சரியாப்புரிந்து கொண்டுவிட்டேன். எனக்கு நானே அதைக் கூறிக்கொண்டேன் சற்று பலமாக....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
Re: நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
புரிதலுக்கு நன்றி அண்ணா!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
அசுரன் wrote:புரிதலுக்கு நன்றி அண்ணா!
நானே நான்என்னையும் யாரென்று கொஞ்சமுமறியேன்
ஏனோ புவிமீது இவ்வுடல் கொண்டிங்கு வந்தேன்
தீனோ நிறையுண்டு தேவைகள் கைக்கொண்டுவாழ
ஆனேனோ ஆயினும் அர்த்தம் என்ன அது புரியேன்
மீனாகி வாழலாம் நீரினில், கொப்பினில் தூங்கும்
தேனாகலாம், மனம் பூவாகலாம் இன்னும் தீயாய்
போனாலென்ன பெரும் பூமியில் காட்டுவிலங்காய்
தானாகலாம் தமிழ் ஆவதைத் தாங்காது தெய்வம்
இந்த உலகமே புரியாதவன். அதனால் கவிதையில் புலம்புபவன்#@
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏலம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்…!!
» நெஞ்சம் அழ.. நினைவு அழ.. (கவிதை)
» நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை)
» நேருவின் நெஞ்சம் கவர்ந்த கவிதை…
» சரஸ்வதி ஒரு தரம் சரஸ்வதி ரெண்டு தரம் சரஸ்வதி மூன்று தரம்
» நெஞ்சம் அழ.. நினைவு அழ.. (கவிதை)
» நெஞ்சம் கொண்ட வேதனை (கவிதை)
» நேருவின் நெஞ்சம் கவர்ந்த கவிதை…
» சரஸ்வதி ஒரு தரம் சரஸ்வதி ரெண்டு தரம் சரஸ்வதி மூன்று தரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|