ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் துணுக்குகள்

Go down

மொபைல் துணுக்குகள்  Empty மொபைல் துணுக்குகள்

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 3:37 pm

எச்.டி.சி.யின் ஜி.பி.எஸ். போன்

விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் பெற்ற எச்.டி.சி.
மொபைல் போன்கள் வரிசையில் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது
எச்.டி.சி. டி.ஒய்.டி.என். போன். இதில் போன் பயன்படுத்து பவரை வழி நடத்த
ஜி.பி.எஸ். சிஸ்டம் இணைக்கப் பட்டுள்ளது. 2.8 அங்குல வண்ணத்திரையுடன்
டைப்பிங் கீ போர்டும் இணைந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த கோணத்திலும்
இந்த போனின் திரையைத் திருப்பி வைத்துக் கொள்ள முடியும். இதனால் இமெயில்
செய்திகளை வசதியாக அமைக்கவும் படிக்கவும் முடியும். அது மட்டுமின்றி இந்த
வசதி கேம்ஸ் விளையாடுபவர்களுக்கும் உதவிடுகிறது.

இந்த போன் இன்டர்நெட் இணைப்பிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. நான்கு பேண்ட்
நெட்வொர்க் செயல்பாடு இருப்பதால் எந்த நாட்டின் போனுடன் தொடர்பு கொண்டு
எளிதாகச் செயல்பட முடிகிறது. 3.5 ஜி தொழில் நுட்பம் மற்றும் ஹை–பி
நெட்வொர்க் தொழில் நுட்பம் ஆகிய இரண்டும் இன்டர்நெட் தொடர்பை வேகமாகத்
தருகின்றன.

விண்டோஸ் மொபைல் சிஸ்டம் இருப்பதால் ஆபீஸ் தொகுப்பின் அனைத்து வசதிகளும்
இதில் தரப்பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட், பி.டி.எப். வியூவர்
என அனைத்து பிசினஸ் அப்ளிகேஷன்களும் எளிதாக இயக்கக் கிடைக்கின்றன. இதில்
பிசினஸ் கார்ட் ஸ்கேனரும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.
33,000.
3ஜி சோதனை இயக்கம்: பார்தி ஏர்டெல் சாதனை

உலகில் பல நாடுகளில் 3ஜி இயக்கத்தில் மொபைல் போன் பயன்பாடு இயங்கிக்
கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இந்த வசதி இதோ அதோ என்று இழுத்துக்
கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 3ஜி
இயக்கத்தை சோதனை முறையில் அனைத்து நிறுவன மொபைல் போன் வழியாக வெற்றிகரமாக
இயக்கியதாக அறிவித்துள்ளது. 3ஜி இயக்கத்திற்கான ஸ்பெக்ட்ரம் என்னும்
அலைவரிசை ஒதுக்கீடு விரைவில் ஏல முறையில் நடைபெறும் என அரசின் தொலை தொடர்பு
துறை அறிவித்துள்ளது. எனவே இதனைப் பெற பல நிறுவனங்கள் தங்களைத் தயார்
படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதில் பார்தி ஏர்டெல்
முந்திக் கொண்டுள்ளது.

மொபைல் போனில் இணைய இணைப்பு மற்றும் தகவல் இறக்கம் மிக வேகமாக நடைபெற 3ஜி
உதவும். வயர்லெஸ் இணைய இணைப்பும் மிக திறன் கொண்டுள்ளதாக இருக்கும்.
ஏற்கனவே செசைல்ஸில் இந்த இணைப்பை பார்தி ஏர்டெல் வழங்கி வருவதால்
இந்தியாவில் இதனை எளிதாக இந்நிறுவனம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
25 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட்

பிஎஸ்.என்.எல். நிறுவனம் மேலும் 25 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட்
இன்டர்நெட் இணைப்பைத் தர நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம்
மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இது போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நோக்கியா
சீமென்ஸ் 7 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பைத் தந்தது. அத்துடன்
20 மண்டலங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நகர இணைப்புகளையும் இதே
நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 34 லட்சம் பிராட்பேண்ட்
இணைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏறத்தாழ 17 லட்சம் இணைப்புகளை
பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. 25 ஆயிரம் கிராமங்களுக்கு இணைப்பினை
வழங்குவதில் பி.எஸ்.என்.எல். முழுமை யடையும் பட்சத்தில் கிராமங்களை
பிராட்பேண்ட் இணைப்பு மூலம் இணைப்பதில் பி.எஸ்.என்.எல். நிறுவனமே முதலிடம்
பெறும். நோக்கியா நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பம் குறைந்த செலவில் அதிக
திறன் கொண்ட இணைப்பை வழங்க உதவுவதாகவும் பி.எஸ்.என்.எல். பத்திரிக்கைக்
குறிப்பு கூறுகிறது

5.b . புளுடூத் என்ற பெயர் வந்தது எப்படி? 900 ஆண்டுகளில் ஹெரால்ட்
புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே
நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில்
அறிமுகப்படுத்தினார்.
தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.

(இன்றைய நார்வே நாட்டு ஸ்டாம்பில் இதன் படம் இடம் பெற்றுள்ளது) பின் 986ல்
தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில்
நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும்
பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர
காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு
புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும்
விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பேரட் டி.எப்.7700 டிஜிட்டல் போட்டோ பிரேம் வீடுகளை ஹை டெக்காக மாற்றும்
வழிகளில் தற்போது டிஜிட்டல் போட்டோ பிரேம்கள் ஒரு இடத்தைப் பிடித்துள்ளன.
அதனால் பல நிறுவனங்கள் இவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றன.
நம் நாட்டிலும் இவை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அண்மையில்
வந்துள்ள பேரட் டி.எப். 7700 தொழில் நுட்ப ரீதியில் இவ்வகையில் முதலில்
நிற்கிறது. இதில் இதற்கென ஒரு தொலைபேசி எண்ணும் சிம் கார்டும் இணைந்து
தரப்படுகிறது. இதனால் கேமரா இணைந்துள்ள மொபைல் போனில் இருந்து எந்த
இடத்தில் போட்டோ எடுத்தாலும் அதனை நேரடியாக டிஜிட்டல் போட்டோ பிரேமிற்கு
அனுப்ப முடிகிறது. இந்த வசதி இதுவரை இத்தகைய போட்டோ பிரேமில் இல்லாத
ஒன்றாகும்.

.மேலும் வழக்கம் போல மினி யு.எஸ்.பி.போர்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
மினி கார்டுகளில் பதிந்து எடுத்துச் செல்லும் போட்டோக்களை இந்த பிரேமிற்கு
மாற்றிக் கொள்ளலாம். கருப்பு லெதர் பிரேமில் 7 அங்குல டி.எப்.டி. திரை
பளிச்சென்று போட்டோக்களைக் காட்டுகிறது. இதன் திரை ஒளிரும் தன்மை 720 றூ
480 பிக்ஸெல்களாகும். இதில் பேக்லைட் அட்ஜஸ்ட்மென்ட் தரப்பட்டுள்ளது.
பிரைட்னெஸ் கண்ட்ரோல் படங்களின் தன்மைக்கேற்ப இயக்க உதவுகிறது. இதனுடைய
மெமரியில் 500 படங்கள் வரை சேமிக்கலாம். இதன் அளவு 193 றூ147றூ 21 மிமீ .
எடை 580 கிராம். டிஸ்பிளே டைமன்ஷன் 130 றூ 87 மிமீ. இரண்டு பேண்ட்
செயலாக்கத்தில் ஜி.பி.ஆர்.எஸ். இணைப்பு கிடைக்கிறது. இது இந்தியாவில்
விரைவில் விற்பனைக்கு வரும். அப்போது விலை தெரியவரும்.
. மீண்டும் 6300

நோக்கியா நிறுவனம் தன்னுடைய 6300 மொபைல் போனை மீண்டும் சில கூடுதல்
வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை 6300 ஐ எனப்
பெயரிட்டுள்ளது. இதில் வை– பி மற்றும் வி.ஓ.ஐ.பி. தொழில் நுட்பம்
இணைக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ அண்மையில் நோக்கியா வெளியிட்ட 6301 போலத்
தோன்றினாலும் முற்றிலும் வேறுபட்ட வடிவில் உள்ளது. இதன் கிராபைட் கலர்
மற்றவற்றிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. முந்தைய மாடலைப் போல
இதிலும் 2 அங்குல வண்ணத்திரை உள்ளது.
நெட் இணைப்பிற்கு புளுடூத் மற்றும் ஏ2டிபி வசதி தரப்பட்டுள்ளது. மினி
யு.எஸ்.பி., ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 2.5 எம்.எம். ஹெட் செட் சாக்கெட்
ஆகியவற் றுடன் கூடுதல் மெமரிக்கான எஸ்.டி. கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது.
இதன் சிறப்பான அம்சம் இதில் இணைக்கப்பட்டுள்ள நோக்கியா மேப்ஸ் தான். ஆனால்
இதில் ஜி.பி.எஸ். சிஸ்டம் பதியப்படவில்லை. ஆனால் ஜி.பி.ஆர்.எஸ். மற்றும்
எட்ஜ் கனெக்டிவிடி இணைப்பை எளிதாக்குகிறது. விரைவில் வர்த்தக ரீதியாக வர
இருக்கும் இந்த போன் ரூ.11,000 அளவில் விலை யிடப்படலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
12 கோடியே 50 லட்சம் மொபைல் தயாரித்த நோக்கியா இந்தியா

கடந்த இரண்டு ஆண்டுகள் இயக்கத்தில் நோக்கியாவின் சென்னை தொழிற்சாலை 12
கோடியே 50 லட்சம் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. தொடர்ந்து
பெருகி வரும் மொபைல் பயன் பாட்டின் தேவைகளை நிறைவு செய்திட மேலும் 5,000
பேரை வேலைக்கு அமர்த்திட திட்டமிடுகிறது. தற்போது 8,000 பேர் இங்கு பணி
புரிகின்றனர். ஏற்கனவே 21கோடி டாலர் முதலீடு செய்திட்ட நோக்கியா இந்த
ஆண்டில் மேலும் 7 கோடியே 50 லட்சம் டாலர் முதலீடு செய்திட
முடிவெடுத்துள்ளது. இத்துடன் நோக்கியாவின் மொத்த முதலீடு வரும் டிசம்பரில்
28.5 கோடி டாலராக இருக்கும். உற்பத்தி செலவு மற்றும் தரத்தில் மிகச் சிறந்த
ஒரு தொழிற்சாலையாக சென்னை தொழிற்சாலை இயங்குவதாக நோக்கியா அறிவித்துள்ளது.
நோக்கியாவிற்கு உலகெங்கும் 9 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மொபைல் துணுக்குகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum