Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
+9
கே. பாலா
திவ்யா
அருண்
balakarthik
பாலாஜி
ANTHAPPAARVAI
அப்துல்லாஹ்
ரபீக்
மகா பிரபு
13 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
First topic message reminder :
சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இவ்வேலையில் எனக்கு ஒரு சந்தேகம்.
என்னவென்றால், கலைஞரின் செம்மொழி பாடல் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படி என்றால் கலைஞர் பாடல் எழுத தகுதி அற்றவரா? அவர் திமுக தலைவர் என்பதை மறந்து விட்டு பதில் சொல்லுங்கள்.
சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இவ்வேலையில் எனக்கு ஒரு சந்தேகம்.
என்னவென்றால், கலைஞரின் செம்மொழி பாடல் பாடத்தில் இடம் பெற்றிருப்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். அப்படி என்றால் கலைஞர் பாடல் எழுத தகுதி அற்றவரா? அவர் திமுக தலைவர் என்பதை மறந்து விட்டு பதில் சொல்லுங்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
மூணு பக்கங்கள் பின்னூட்டங்கள் மொக்கையா ஓடிக்கொண்டிருக்கும் போது திடீருன்னு பாலாட்ட இருந்து வந்து விழுது பாருங்க அற்புதமான கருத்து. நல்லாருக்குbalakarthik wrote:gillipandian wrote:தகுதி இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் தன்னை பற்றி தானே உயர்த்தி பேசுவது தவறான ஒன்று.
கில்லி உனக்கொன்று தெரியுமா பெர்னாட்ஷா தனது மேடை பேசுக்கு குறிப்பு எழுத்தும்பொழுது சில இடங்களில் கைதட்டல் என்று எழுத்துவாராம் கேட்டால் இந்த இடத்தில் என்பேசுக்கு மக்கள் கைத்தட்டுவார்கள் என்று கூறுவாராம், அதுபோலவே மக்களும் அந்த இடத்தில் சரியாக கைத்தட்டுவார்கள், தன்னை பற்றி உயர்வாக கருதுவது தவறில்லை என்று நினைக்கிறேன் அதர்க்காக மற்றவரை மட்டமாக நினைப்பத்துத்தான் தவறு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
gillipandian wrote:தன்னை பற்றி முழுவதும் அறிந்தவர்கள் இவ்வாறு தன்னை பற்றி உயர்வாக பேசமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து
எல்லா மேதைகளுக்குமே கொஞ்சம் தலைக்கனம் இருக்கத்தான் செய்யும் , சுகிசிவம் கூறுவார் பாரதி தன்னை தானே மகாகவி என்று அழப்பாராம் தன்னால் கவி உலகத்திர்க்கே பெருமை என்று கூறுவாராம் ஆனால் அன்றாயா காலகட்டத்தில் பாரதியின் சமகாலத்தில் அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இன்றோ பாரதி காலங்களை வென்று மகாகவியாக அழியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ஆகவே தன்னை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களை விட தன் கருத்துக்களே முக்கியம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
அப்துல்லாஹ் wrote:மூணு பக்கங்கள் பின்னூட்டங்கள் மொக்கையா ஓடிக்கொண்டிருக்கும் போது திடீருன்னு பாலாட்ட இருந்து வந்து விழுது பாருங்க அற்புதமான கருத்து. நல்லாருக்கு
ஐயையோ அப்போ டோஸ் கொஞ்சம் அதிகம் ஆகிடிச்சோ திரும்பவும் பழய ரூட்டிலேயே போகவேண்டியத்துத்தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
balakarthik wrote:
................... தன்னை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களை விட தன் கருத்துக்களே முக்கியம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
சுகி சொல்றது கிடக்கட்டும் நீங்க என்ன சொல்றீங்க தலைவரே உங்களப் பத்தி...கொஞ்சம் பதியுங்கbalakarthik wrote:gillipandian wrote:தன்னை பற்றி முழுவதும் அறிந்தவர்கள் இவ்வாறு தன்னை பற்றி உயர்வாக பேசமாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து
எல்லா மேதைகளுக்குமே கொஞ்சம் தலைக்கனம் இருக்கத்தான் செய்யும் , சுகிசிவம் கூறுவார் பாரதி தன்னை தானே மகாகவி என்று அழப்பாராம் தன்னால் கவி உலகத்திர்க்கே பெருமை என்று கூறுவாராம் ஆனால் அன்றாயா காலகட்டத்தில் பாரதியின் சமகாலத்தில் அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இன்றோ பாரதி காலங்களை வென்று மகாகவியாக அழியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ஆகவே தன்னை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களை விட தன் கருத்துக்களே முக்கியம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள் - Page 5 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
தன்னை பற்றி தாழ்த்தி பேசும் ஆசிரியரை எந்த மாணவனும் மதிக்க மாட்டான். அவர் திறமையற்றவர் என்று ஒதுக்கி விடுவார்கள்.
பல இடங்களில் தற்பெருமை பேசுதல் அவசியம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
அனைவருடைய கருத்துக்களும் சிறப்பாக உள்ளது.
பல இடங்களில் தற்பெருமை பேசுதல் அவசியம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
அனைவருடைய கருத்துக்களும் சிறப்பாக உள்ளது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
நான் பத்தாம் வகுப்பு பயின்ற போது, தமிழ் பாடத்தில் உரைநடை பகுதியில் "புலித்தோல் போர்த்திய பசு" என்ற தலைப்பில் ஒரு பாடம் இருந்தது. இதை எழுதியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சுகுமார்- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
பராசக்தி ,மந்திரிக்குமாரி படங்களின் வசனங்களும் ,வாழ்க்கை எனும் ஓடம் பாடலுமே அவரின் தகுதிக்கு சான்று
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கலைஞர் தகுதியானவர் இல்லையா?- உங்கள் கருத்தை சொல்லுங்கள்
ஈகரை நண்பர்களுக்காக பராசக்தி வசனம் ,படித்து பின் அவரின் திறமையை தமிழ் புலமையை பற்றி சிந்திக்கலாம்
இப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சி (வசனம்) புகழ் பெற்றது. இவ்வசனம் பலரால் மேற்கோள் காட்டி பேசப்படுகிறது.
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?
என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்
ராம்
இப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சி (வசனம்) புகழ் பெற்றது. இவ்வசனம் பலரால் மேற்கோள் காட்டி பேசப்படுகிறது.
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?
என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விவாத களம் வாரிங்களா உங்கள் கருத்தை சொல்லுங்கள்
» ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
» ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
» உங்கள் மடிக்கணினியின் கீபோர்ட்டில் LED Signal இல்லையா?
» `பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள்
» ஜெயலலிதாவுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? கலைஞர்
» ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
» உங்கள் மடிக்கணினியின் கீபோர்ட்டில் LED Signal இல்லையா?
» `பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் சாப்பிடலாம்', இன்று தேசிய மருத்துவர் தினம் உங்கள் டாக்டருக்கு வாழ்த்து சொல்லுங்கள்
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|