Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!
Page 1 of 1
சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!
துக்ளக் அட்டைப்படங்களில் இரண்டு கழுதைகள் பேசிக் கொள்கிற மாதிரி வருபவை முத்திரை பதிப்பவை என்பது துக்ளக் இதழின் வாசகர்களுக்குத் தெரியும்! இந்த அட்டைப்படக் கார்டூனில் திமுகவின் தோல்விக்கான காரணங்களை திமுக தலைவரே கூட ஆராய விரும்பா விட்டாலும், சொல்கிறார்கள். விடுபட்டுப் போன, ஆனால் மிக முக்கியமான ஒரு காரணம், கேடி பிரதர்ஸ் என்று (இனிஷியலை வைத்து மட்டுமல்ல, செய்திருக்கிற உட்டாலக்கடி வேலைகளை வைத்தும் தான்!) அழைக்கப்படும் மாறன் சகோதரர்கள்!
நாலே வருடங்கள்! சரிவு கலைஞர் டீவீக்கு மட்டுமல்ல....இங்கே
சரிந்து விழுந்த செல்வாக்கை, கட்சியைத்தூக்கி நிறுத்த கருணா நிதியால் முடியுமா, ஸ்டாலினால் கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடியுமா என்பதெல்லாம் ஒன்பதுரூபாய் நோட்டு மாதிரித் தான்! செலாவணியானால் தான் உண்டு! கருணாநிதி பிறந்த நாள் வருகிற ஜூன் மாதம் மூன்றாம் தேதி வருவதை ஒட்டி, கட்சியை முடுக்கிவிட கோபாலபுரத்தில் இருந்து முயற்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஜெயலலிதா கூட ஜூன் மூன்றாம் தேதி, கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசாக சில அதிரடி அறிவிப்புக்களைத் தருவார் என்றும் சொல்கிறார்கள்!சன் குழுமத்துக்கு கொஞ்சம் விசேஷமான கவனிப்பு இருக்கும் என்றும் ஒரு தகவல். வீராப்பெல்லாம் ஒடுங்கி, தேர்தல் trend தெரிய ஆரம்பித்த உடனேயே சன் தொலைகாட்சி திடீர் நடுநிலைமை வகிக்க ஆரம்பித்திருப்பது. பார்க்க வடிவேலு காமெடி மாதிரியே இருக்கிறது!
மே முப்பதன்று, டில்லி உயர்நீதி மன்றத்தில் கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது, ஆனால் ஜாமீன் கிடைப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மாறாக,சிபிஐ இந்த மனுவின் மீது தன்னுடைய பதிலை சொல்வதோடு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது. மொரிஷியஸ் நாட்டுக்கு விசாரிக்கப் போன சிபிஐ உருப்படியான தகவலோடு திரும்பி இருக்கிறதா அல்லது எப்போதும் போல வெறும் கையை வீசிக் கொண்டுதான் திரும்பியிருக்கிறதா என்பதைக் கொஞ்சமாவது அன்றைக்குச் சொல்ல வேண்டுமே!
போதாக்குறைக்கு, மூன்றாவது, நான்காவது துணைக் குற்றப் பத்திரிகைகளில் இன்னும் கொஞ்சம் பெயர்களையும் சேர்த்து, திஹாருக்கு விருந்தாளிகளாக அனுப்புகிற வரை,இப்போதிருக்கும் நிலையில், கனிமொழி உட்பட 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியவர்கள் எவரும் ஜாமீனில் வெளிவருவது சாத்தியமில்லை என்று தான் தெரிகிறது. அதனால், குற்றப்பத்திரிகை மிகவும் வலுவாக இருக்கிறது என்றோ, விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுக் குற்றவாளிகள் அத்தனைபேரும் தண்டனை அனுபவிப்பார்கள் என்றோ முடிவுக்கு வந்தீர்களானால்,அதன் பொறுப்பு உங்களுடையது!
கனிமொழிக்கு ஆதரவாக அடுத்து திஹார் சிறைக்குள் யார் யார் போகப் போகிறார்கள் என்பது தான் இப்போதைய பரபரப்பு! தயாளு? தயாநிதி? அல்லது தயாநிதி காங்கிரசில் சேர்ந்து திமுகவின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்க்கிற மாதிரி இன்னொரு சுற்று ஆட்டத்தை,ஆரம்பிப்பாரா?
ஊகம் உங்களுடையது!
2005 இலிருந்தே தயாநிதியின் மந்திரி பதவியை வைத்து, சன்குழுமம் தன்னுடைய வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும், எவருடன் வேண்டுமானாலும் கூட்டு சேரும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்! மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டதருணத்தில் கலாநிதி மாறன் அழகிரியைக் குறிப்பிட்டே குற்றம் சாட்டியது அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடக் கூடியதுதானா?இப்போது திமுக தலைவர் குடும்பம் சந்தித்து வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் தயாநிதிதான் என்பதும் கூடக் கரைவேட்டிகளுக்குத் தெரிந்ததுதான்!
தயாநிதி மாறன் வியாழக்கிழமை சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்! குலாம் நபி ஆசாத்தும் கூட இருந்திருக்கிறார்! சோனியாவை சந்திப்பதற்கு முன்னால், செவ்வாய்க்கிழமை தயாநிதி மாறன் செய்திருக்கிற இன்னொரு ஆச்சரியப் படுத்துகிற வேலை, மு.க அழகிரியுடன் திஹார் சிறைக்குப்போய்க் கனிமொழியை சந்தித்தது தான்! 'இதயம் கனத்தது; கண்கள் பனித்தன' கதை வசனம் நினைவுக்கு வந்தாலும் சரி! ‘கூட இருந்து குழிபறிப்பது,'உடனிருந்தே கொல்லும் வியாதி' என்ற சொலவடைகள் நினைவுக்கு வந்தாலும் சரி! அது உங்கள் பாடு.
கோபாலபுரம் , சி ஐ டி நகர் இரண்டு குடும்பங்களும்,பெங்களூரில் இருந்து செல்வி உட்பட மிக ஒற்றுமையாக, கனிமொழிக்குப் பக்க பலமாகத் தங்கள் ஒற்றுமையை திஹார் சிறைக்குப்போய் சந்தித்துக் காண்பித்திருக்கிறார்கள். நவக்கிரகங்கள் மாதிரி எதிரும்புதிருமாய் நேற்றுவரை இருந்தவர்களைக் கனிமொழி கைது விவகாரம் ஒற்றுமைப் படுத்தியிருக்கிறதா? அல்லது, "இன்று நீ! நாளை நான்" "உன்னாலே நான்-- என்னாலே நீ கெட்டாய்!" ரகம் தானா?கொசுக்கடி தாங்காமல் கனி மொழி அவதிப்பட்டார் என்றெல்லாம் அனுதாபத்தை உச்சுக் கொட்டின ஊடகங்கள் கூட,இந்தக் குடும்ப ஒற்றுமை அதிசயத்தைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்கிற மாதிரி, இந்தத் திடீர் ஒற்றுமை எங்கே போய் எதிலே முடியும் என்பதை ஊகிக்க முடியாததுதான் காரணம் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்!
இவ்வளவு சொல்லிவிட்டு, காங்கிரஸ் சமாசாரத்தைக் கொஞ்சம் தொடவில்லையானால், கூட்டணி தர்மம் என்னாகிறது?
சுரேஷ் கல்மாதிக்குத் துணையாக சில அதிகாரிகள் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதோடு விவகாரம் முடிந்து விடவில்லை. பிரதமர் Shunglu Committee அறிக்கை மீது காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறார். டில்லி அரசு, அந்தக் கமிட்டியின் அறிக்கையை நிராகரித்து, தவறுகள் எதுவுமே நடக்கவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறது. சீக்கிரமே சுரேஷ் கல்மாடிக்குத் துணையாக, சில காங்கிரஸ் புள்ளிகளும் திஹாருக்குப் போக வேண்டியிருக்கும் என்று சில தகவல்கள் நமட்டுச் சிரிப்புடன் கசிய விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் மாட்டிக் கொண்டு உள்ளே போக வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில், திமுகவை மாட்டிவிட்டு, தங்கள் கட்சி அம்மணமாய்த்திரிவது ஜனங்களுடைய கண்ணுக்குத் தெரிய விடாமல் திசை திருப்புவது, காங்கிரஸ் கட்சிக்குக் கைவந்த கலைதான்! சௌகரியமும் கூட இல்லையா!!
கூட்டணி தர்மத்துக்கு எல்லோரும் ஒரு "ஓ " போடுங்க! வேறென்ன செய்வது?!
consenttobenothing
Similar topics
» கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!
» 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்
» கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி
» கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை
» கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்
» 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்
» கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி
» கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை
» கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|