புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி என்றொரு அபாயம்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 1:41 pm

First topic message reminder :

அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த தவறுகளில் ஒன்று நான் ரஜினி ரசிகையாய் இருந்தது. என்னமோ தெரியாது ரஜினி என்றால் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு. அவர் நடித்த எல்லாப் படங்களையும் பார்ப்பதும் குமுதம் ஆனந்தவிகடன், வண்ணத்திரை, முத்தாரம், ராணி என்று வார இதழ்களை ஊனமாக்கி அதிலிருந்து ரஜினி புகைப்படங்களை வெட்டி ஆல்பமாகத் தயாரித்து மகிழ்ந்த அந்தக்காலங்களை நினைத்தால் சிரிப்பாகவும் சில நேரத்தில் வெட்கமாகவும் கூட உள்ளது.


சிறுவயதில் படிப்பைத்தவிர, விளையாட்டைத் தவிர நான் அதிகம் செலவு செய்த நேரங்கள் ரஜினி ஆல்பம் தயாரிப்பதில்தான்.


ஜானி, தில்லுமுல்லு, ஆறிலிருந்து அறுபது வரை, நெற்றிக்கண், பொல்லாதவன், நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன்.. இப்படி அந்தக்காலத்தில் நடித்த ரஜினி படங்களை பார்த்து ரசித்ததுபோல் அல்ல சமீப வருடங்களில் உள்ள அவரின் படங்கள்.


எப்போது வெறுக்க ஆரம்பித்தேன் என்று நினைவில் இல்லை. அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டதினாலோ அல்லது வழுக்கையை மறைக்க விக் வைத்ததை அறிந்த பின்னோ, 60 வயது கடந்த பின்னும் 20 வயது பெண் அரைகுறை ஆடையுடன் தோன்ற அவளின் அங்கங்களை தொட்டுத் தடவி டூயட் பாடும் அந்தக் கண் றாவிக் காட்சிகளைப் பார்த்தபோதோ... ஒன்று பத்தாது என்று இரண்டுமூன்று நடிகைகளை ஒரே படத்தில் ஜோடியாக்கி அவர்களோடு ஆடவேண்டுமென்ற வக்ர புத்தியுள்ள ஆள் என்பதை அறிந்த போதோ அல்லது நரைத்த தாடியை மழிக்காமல் (shave ) அப்படியே விழாக்களில் பங்கெடுப்பதைப் பார்த்தபின்போ என்னமோ ரஜினியைக் கண்டால் ஒரு அறுவெறுப்பு தொடங்கியது...


அதுமட்டுமே அல்ல காரணம். மக்கள் (ரசிகர்கள் ) ரஜினிமேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் போல் அவருக்கு நம் மக்கள் மீது இல்லையென்றாலும் ஒரு துளியளவேனும் இல்லைஎன்பதை அறிந்தபின் பலமடங்கு வெறுக்கத் தோன்றியது.


எத்தனையோ நிகழ்ச்சிகள் எத்தனையோ துயரச் சம்பவங்கள் தமிழக மக்கள் சந்தித்திருக்கிறார்கள். கார்கில் போர் முதல் சுனாமி வரை. "அப்படியே அதிருதில்ல?" என்று வசனம் பேசியவர் மக்கள் துயரத்தைக் கேட்டு அதிர்ந்ததாக எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லை. சலனமே இல்லாமல் யார் எப்படிப் போனால் எனக்கென்ன வருடம் ஒரு படம் வெளியிட்டு கோடிகளைக் காணவேண்டும், கட் அவுட் கட்ட, பாலாபிஷேகம் 'செய்ய ரசிகன் வேண்டும் ஆனால் அவனுக்கு ஒரு துயரம் என்று வந்தால் "நான் ஒரு முறை சொன்னால் நூறுமுறை சொன்னா மாதிரி" என்று சொல்லும் ரஜினி ஒரு நூறு ரூபாயாவது மனம்வந்து - (மனமுவந்து அல்ல மனம் வந்து) எந்த ஒரு காரியத்திற்காவது கொடுக்கிறாரா என்றால் இல்லை. அரிதாரம் பூசி சினிமாவில் நடிப்பவர்கள் கொஞ்சம் தம்மை வளர்த்துவிட்ட மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக நிஜத்தில் நடித்திருந்தால் கூட பரவாயில்லை. இடர்கள் வரும்போது மௌன பூனையாகிவிடும் சுயனலவாதியாகத்தானே ரஜினி இருக்கிறார்.


சமூக சேவை என்ற ஒரு வார்த்தை கூட நிஜவாழ்க்கையில் இவர் வாயிலிருந்து உதிர்ந்ததில்லை என்றி நினைக்கின்றேன்.


அனால் இந்த சுயநலவாதி ரஜினி இன்று நிமோனியா பாதிப்பால்
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது "தமிழ்நாடே அதிருகிறது" என்பதுதான் வெட்கப்படவேண்டிய கட்டத்தில் ஒவ்வொரு தமிழனையும் நிறுத்தியிருக்கிறது.


ஒரு சக மனிதன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் அவர் நலமுடன் திரும்பி
வரவேண்டும் என்பது என் அவாவும்.கேள்விப்பட்டவுடன்ஒரு நிமிடம்
"நோயிலிருந்து மீண்டு வரவேண்டும்" என என் மனமும் வேண்டியதுதான்.
இது சாதாரண மனிதப பாங்கு.

ஆனால் இந்த முட்டாள் மகாஜனங்கள் தீக்குளித்து உயிர்விடுகிறான்,
அலகு குத்தி காவடி எடுக்கிறான்... சினிமத்துறையோ
கூட்டுப்பிரார்த்தனையாக 500 டைரக்டர் , ஆயிரக்கணக்காக மற்ற
சினிமாத்துறை ஊழியர்கள் என்று நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது .


நான் தமிழாள் என்று சொல்வதில் கூசிப்போகும்படியான சில விஷயங்கள் தமிழ்நாட்டில் நடப்பது இதுபோன்ற சில நிகழ்ச்சிக்கள் நடக்கும்போதுதான். வெளிநாட்டில் இருப்பதால்... நாம் பலநாட்டு மக்களையும் இந்தியாவின் பல்வேறு மாநில மக்களையும் சந்திக்கிறோம் அன்றாடம். அந்த வேளைகளில் அவர்கள் ஒரு நடிகனுக்காக உயிர் விடும் ரசிகன் உள்ள நாட்டின் தரம் இந்த அளவுதான் என வரையறுத்துப் பேசும்போது நம்மால் பதில் கொடுக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது. நல்ல படித்த அறிவுள்ள பெரிய பதவிகளில் இருக்கும் தமிழர்களும் இதில் அடக்கம். இந்தப் படித்த பாமரர்கள் எப்போது திருந்துவார்கள். சினிமா என்பது வெறும் பொழுது போக்கே. வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தத்தம் சூழ்நிலையை அனுசரித்து சினிமா பார்ப்பது நியாயம். அந்த சினிமா நடிகனை கடவுளாக தூக்கிவைத்து கொண்டாடும் அபத்தம் அபாயத்தில் தான் முடியும்.


நாட்டில் எத்தனையோ நிகழ்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடகங்களும் தன பங்கிற்கு ரஜினி ரஜினி ரஜினி என்று எல்லாச் சானல் களிலும் லைவ் டெலிகாஸ்டிங் பண்ணுவது போல... இட்லி சாப்பிட்டார் வடை சாப்பிட்டார்... தண்ணீர் குடித்தார் ... பல்விளக்கினார் கிரிகெட் பார்த்தார் கருணாநிதியை பார்கவில்லை என்று நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிரார்கள்.


தெரிந்தேதான் கேட்கிறேன், இந்த ரஜினிகாந்த் இல்லையென்றால் தமிழ்நாடு குடிமுழுகிப் போய்விடுமா என்ன?


இவர் நோயிலிருந்து மீண்டுவந்து தமிழக நலனிற்கு ஏதாவது செய்துவிடப்போகிறாரா என்ன?


குறைந்த பட்சம் அவர் ரசிகர்களுக்காவது இவரால் எந்த ஆதாயமும் இருக்கப்போகிறதா என்ன ?


கண்மூடித் தனமாக இருக்கும் அந்த அப்பாவி ரசிகர்களை இந்த ரஜினி மாயையிலிருந்து "அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்"


எப்படியோ ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி.


விரைவில் குணமடைந்து வீடு போய்ச் சேர எனது வாழ்த்துக்கள்



http://latharaniyinsorchithirangal.blogspot.com/2011/05/blog-post_25.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 4:35 pm

சுகுமார் wrote:
kitcha wrote:1996 தேர்தல் சமயத்தில் இவர் ஜெயலலிதாவை எதித்தார், அப்போது ஜெயலலிதாவினால் இவருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனை,அதனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றார். பின்னர் அதே ஜெயலலிதாவிற்கு இவர் எம்‌பி தேர்தலின் போது ஓட்டு போட்டார், அப்போது இவருக்கும் பாமக விற்கும் பிரச்சனை, திமுக வுடன் பாமக இருந்தது அதனால் அதிமுக விற்கு வாக்களித்தார்.பின்னர் திமுக இப்போ மீண்டும் அதிமுக, தன்னுடைய சொந்த காரணங்களுக்காக இவர் பேசிய பேச்சு ஏன் இந்த மக்களுக்கு புரியவில்லை.இப்படி மனிதர் அரசியலுக்கு வரவேண்டாம் வந்தாலும் ஆகப்போவது ஒண்ணுமில்லை.சிறந்த நடிகர் (நேரிலும், சினிமாவிலும் ), பிரார்த்தனை செய்யுங்கள், மற்றதெல்லாம் இறைவன் கையில்,அவருடைய படத்தில் அவரே சொன்ன ஒரு பன்ச் வசனம் ----------------------------------------------------------ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனால் கைவிட்டுவிடுவான் ----------------------------------------------------------------------அந்த ஆண்டவன் முடிவு செய்யட்டும் ரஜினி நல்லவரா இல்லை கெட்டவரா
அண்ணா எப்படிப்பட்ட நல்லவங்களா இருந்தாலும் மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம் தானே
ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 359383 ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 359383 ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 359383



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 28, 2011 4:41 pm

ஒரு பிரபலத்தைக் கேவலப்படுத்தி தனிப்புகழ் தேடிக்கொள்ள விரும்புவது ஒருவகை மனோவியாதி... எந்த தனிமனிதருக்கு ரஜினி கெடுதல் விளைவித்தார் என்று குறிப்பிட்டால் அது நியாயமானதாக இருக்கும்.. காழ்ப்புணர்ச்சியில் உடம்பெல்லாம் குஷ்டம் வந்த நிலை போன்று உணர்வது இயல்பு. அந்த நிலைதான் காண்கிறேன் இந்த கட்டுரையாளரிடம்..

வேறென்ன சொல்ல...? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Sat May 28, 2011 4:42 pm

கலைவேந்தன் wrote:ஒரு பிரபலத்தைக் கேவலப்படுத்தி தனிப்புகழ் தேடிக்கொள்ள விரும்புவது ஒருவகை மனோவியாதி... எந்த தனிமனிதருக்கு ரஜினி கெடுதல் விளைவித்தார் என்று குறிப்பிட்டால் அது நியாயமானதாக இருக்கும்.. காழ்ப்புணர்ச்சியில் உடம்பெல்லாம் குஷ்டம் வந்த நிலை போன்று உணர்வது இயல்பு. அந்த நிலைதான் காண்கிறேன் இந்த கட்டுரையாளரிடம்..

வேறென்ன சொல்ல...? ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 440806

என் கருதும் இது தான் ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 440806

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 28, 2011 4:48 pm

மதன் wrote:
கலைவேந்தன் wrote:ஒரு பிரபலத்தைக் கேவலப்படுத்தி தனிப்புகழ் தேடிக்கொள்ள விரும்புவது ஒருவகை மனோவியாதி... எந்த தனிமனிதருக்கு ரஜினி கெடுதல் விளைவித்தார் என்று குறிப்பிட்டால் அது நியாயமானதாக இருக்கும்.. காழ்ப்புணர்ச்சியில் உடம்பெல்லாம் குஷ்டம் வந்த நிலை போன்று உணர்வது இயல்பு. அந்த நிலைதான் காண்கிறேன் இந்த கட்டுரையாளரிடம்..

வேறென்ன சொல்ல...? ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 440806
என் கருதும் இது தான் ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 440806
ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 453187 என் கருத்தும் இதுவே...இதை சரியாக என்னால் சொல்ல இயலவில்லை...
உண்மையினை சொன்னீர்கள்....
நன்றி கலை மற்றும் மதன்.....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 28, 2011 5:02 pm

கலையின் கருத்தே என் கருத்தும்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 28, 2011 5:03 pm

ரொம்ப நேரமா யோசிச்சிப் பார்த்தேன் ஆனால், யாருக்குக் காழ்ப்புணர்ச்சி என்று ஒன்றுமே புரிய வில்லை....

யாராவது நன்கு கற்று அறிந்தவர்கள் விளக்கமாக சொல்லவும்!



ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 28, 2011 5:15 pm

உமா wrote:
மதன் wrote:
கலைவேந்தன் wrote:ஒரு பிரபலத்தைக் கேவலப்படுத்தி தனிப்புகழ் தேடிக்கொள்ள விரும்புவது ஒருவகை மனோவியாதி... எந்த தனிமனிதருக்கு ரஜினி கெடுதல் விளைவித்தார் என்று குறிப்பிட்டால் அது நியாயமானதாக இருக்கும்.. காழ்ப்புணர்ச்சியில் உடம்பெல்லாம் குஷ்டம் வந்த நிலை போன்று உணர்வது இயல்பு. அந்த நிலைதான் காண்கிறேன் இந்த கட்டுரையாளரிடம்..

வேறென்ன சொல்ல...? ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 440806
என் கருதும் இது தான் ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 440806
ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 453187 என் கருத்தும் இதுவே...இதை சரியாக என்னால் சொல்ல இயலவில்லை...
உண்மையினை சொன்னீர்கள்....
நன்றி கலை மற்றும் மதன்.....

பெரிய மனிதர்களில் சிலர் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டவேண்டும் என்பதின் நோக்கம் தான் என் பதிவு.எதையும் சுட்டிக்காட்டாமல் அவர்கள் செய்கின்ற செயல்களை ஆமோதிப்பது தனக்குத்தானே வந்த குஷ்டத்தை சொறிவது போன்றது.நானும் தீவிர ரஜினி ரசிகன் - 1996 பிறகு அவர் திமுக விற்கு ஆதரவாக இருந்தார், அப்போது உள்ளாட்சி தேர்தலில் என் பெரியப்பா சேர்மானக போட்டியிட்டார் நான் ரஜினிக்காக என் பெரியப்பவை எதிர்த்து செயல்பட்டேன்.அந்த அளவு ரஜினியின் மேல் ஒரு வெறி.பின்னர் அவர் அதிமுக பின் திமுக என்று மாறி மாறி வந்ததினால் அவரின் மேல் ஒரு வெறுப்பு என்போன்ற ரசிகர்களுக்கு உண்டாயிற்று, இப்போதும் அவர் உடல் நலம் சரி இல்லை என்று கவலைபடுகின்ற ரசிகர்களி நானும் ஒருவன்.

எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் -

ஆசிரியர் செய்தால் தப்பில்லை - ஆனால் மாணவன் செய்யக்கூடாது என்று .
அப்படித்தான் உள்ளது உங்கள் கருத்து - எது தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 5:28 pm

இதுவும் கூட ரஜினியின் புகழுக்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் இதைதவிர சொல்ல வேறெதுவும் இல்லை :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 28, 2011 5:30 pm

kitcha wrote:

பெரிய மனிதர்களில் சிலர் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டவேண்டும் என்பதின் நோக்கம் தான் என் பதிவு.எதையும் சுட்டிக்காட்டாமல் அவர்கள் செய்கின்ற செயல்களை ஆமோதிப்பது தனக்குத்தானே வந்த குஷ்டத்தை சொறிவது போன்றது.நானும் தீவிர ரஜினி ரசிகன் - 1996 பிறகு அவர் திமுக விற்கு ஆதரவாக இருந்தார், அப்போது உள்ளாட்சி தேர்தலில் என் பெரியப்பா சேர்மானக போட்டியிட்டார் நான் ரஜினிக்காக என் பெரியப்பவை எதிர்த்து செயல்பட்டேன்.அந்த அளவு ரஜினியின் மேல் ஒரு வெறி.பின்னர் அவர் அதிமுக பின் திமுக என்று மாறி மாறி வந்ததினால் அவரின் மேல் ஒரு வெறுப்பு என்போன்ற ரசிகர்களுக்கு உண்டாயிற்று, இப்போதும் அவர் உடல் நலம் சரி இல்லை என்று கவலைபடுகின்ற ரசிகர்களி நானும் ஒருவன்.

எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் -

ஆசிரியர் செய்தால் தப்பில்லை - ஆனால் மாணவன் செய்யக்கூடாது என்று .
அப்படித்தான் உள்ளது உங்கள் கருத்து - எது தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்

நீங்க அவர் தவறு செய்தார் என்று சுட்டி காட்டினீர்கள்..அதை நாங்க ஆமோதித்தால் "
எதையும் சுட்டிக்காட்டாமல் அவர்கள் செய்கின்ற செயல்களை ஆமோதிப்பது தனக்குத்தானே வந்த குஷ்டத்தை சொறிவது போன்றது" அல்லவா...உங்களுக்கு தவறு என்று பட்டது சொனீர்கள், எங்களுக்கு தவறாக தெரியவில்லை.. தி மு க விர்க்கு ஓட்டு போட்டால் அ தி மு க வில் மாற கூடாதா...சிரிப்பாக உள்ளது உங்கள் கூற்று...போன முறை வென்ற தி மு க இம்முறை தோல்வி பெற்றதன் காரணம் என்ன... மக்களுக்கு பிடிக்க வில்லை...அதர்க்காக மக்கள் அனைவரையும் வெறுத்து விட இயலுமா...
இது சாதாரண விஷயம்....இதர்க்காக தான் ரஜினியை வெறுக்கின்றோம் என்று சொல்லவது பெரிய முட்டாள் தனம்...
அவர் ஒரு நடிகர்...நடிகராக ரசித்தால் பிரச்சனை இல்லை,,, ஏன் தீவிரமாக ரசிப்பு என்ற பெயரில் தேவை இல்லாத வற்றை செய்ய வேண்டும்....
அன்று ரஜினியை ரசித்த நீங்கள் இன்று வெறுக்க வில்லையா...
அது போல் தான் அன்று தி மு க இன்று அவர் அ தி மு க...

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை என்றுமே வெறுப்பாகதான் இருக்கும்.......

அவர் ஒரு சாதாரண மனிதர்...தன்னை நேசிக்க சொல்லியும் வெறுக்க சொல்லியும் அவரா சொல்கிறார்...நீங்களே செய்து விட்டு இப்போது திட்டுவது என்ன நியாயம்...
பின்னூட்டங்க அதிகம் ஆனால் சொல்வது எல்லாம் உண்மை என்று அர்த்தம் இல்லை...
இது அனைவருக்குமே தான் கூறுகிறேன்,,,தவறு என்றாள் மன்னியுங்கள் என்று சொல்ல மாட்டேன்..
என் கருத்து சரியானதே என்று எனக்கு தெரியும்......




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 5:33 pm

உமா wrote:பின்னூட்டங்க அதிகம் ஆனால் சொல்வது எல்லாம் உண்மை என்று அர்த்தம் இல்லை...
இது அனைவருக்குமே தான் கூறுகிறேன்,,,தவறு என்றாள் மன்னியுங்கள் என்று சொல்ல மாட்டேன்..
என் கருத்து சரியானதே என்று எனக்கு தெரியும்......

உமா ஒய் டென்ஷன் பி ஹப்பீ நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று எங்களுக்கு தெரியாதா சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி என்றொரு அபாயம்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக