Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூர் அணி
4 posters
Page 1 of 1
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூர் அணி
ஐ.பி.எல்., பிளே ஆப் சுற்றில் சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் நாணய சூழற்சியை வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
முன்னதாக பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியிடம் தோல்வியடைந்தது. பிளே ஆப் சுற்றின் 2ஆவது போட்டியில் மும்பை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை எடுத்தது, 186 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி மே 28 ஆம் திகதி சென்னையில் நடைபெறுகிறவுள்ளது.
இந்த போட்டியில் நாணய சூழற்சியை வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
முன்னதாக பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியிடம் தோல்வியடைந்தது. பிளே ஆப் சுற்றின் 2ஆவது போட்டியில் மும்பை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை எடுத்தது, 186 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி மே 28 ஆம் திகதி சென்னையில் நடைபெறுகிறவுள்ளது.
Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூர் அணி
சென்னை அணிக்கு தான் கோப்பை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூர் அணி
எப்படியோ இன்றுடன் ஐ.பி.எல் தொடர் முடுஞ்சுது...
சென்னை அணி சொந்த மண்ணில் வெற்றி நடை போட வாழ்துக்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
சென்னை அணி சொந்த மண்ணில் வெற்றி நடை போட வாழ்துக்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூர் அணி
நிச்சயமாக அதில் ஐயமில்லைமகா பிரபு wrote:சென்னை அணிக்கு தான் கோப்பை.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மும்பையை வீழ்த்தியது பெங்களூர் : இன்று சென்னையுடன் இறுதி போட்டியில் மோதுகிறது (ஓர் சிறப்பு பார்வை)
2011 ஐபிஎல் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ளூர் நேரம் இரவு 8.00 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை - பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மீண்டும் மோதுகின்றன. இந்த இரு அணிகளின் பலம், பலவீனம் பற்றியும் நேற்றைய அரையிறுதி போட்டி நிலவரம் பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் பெங்களூர் அணி 43 ரன்களால் இலகுவெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கேய்ல், நினைத்தபடியே விளாசித்தள்ளினார். அவர் 47 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள், 9 பவுன்றிகள் அடங்கும். மறுமுனையில் அகர்வால் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுன்றிகள் அடங்கும்.
இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 10.4 ஓவர்களில் 113 ரன்களை அதிரடியாக எடுத்தனர். எனினும் அவர்கள் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய கோலி, போமெஸ்பாச், திவாரி ஆகியோர் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். வில்லியெர்ஸ் மட்டும் 15 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார். ஆரம்ப அதிரடியை பார்த்ததும் மொத்த ரன்கள் 200 ஐ தாண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இறுதிநேர மும்பையின் சிறப்பான பந்துவீச்சினால் 185 ரன்களுக்குள் மட்டுப்படுத்த முடிந்தது.
பந்துவீச்சில் முனாப் படேல் 2 விக்கெட்டுக்களையும் ஆஹ்மெட், பொலார்ட் தலா 1 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு களமிறங்கிய சச்சின் தலைமையிலான மும்பை அணி ஆரம்பத்திலேயே ப்ளிஷார்ட்டை இழந்தது. அவர் 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.டெண்டுல்கர் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுன்றிகள் அடங்கும்.
எனினும் களமிறங்கிய மற்றவர்கள் எவரும் பிரகாசிக்க தவறியதால், 20 ஓவர்களில் 142 ரன்களையே அவ் அணி பெற்றுக்கொண்டது. ரோஹித் ஷர்மா, ராயுடு, பொலார்ட் என மும்பையின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுக்களை வெட்டோரி கைப்பற்றினார்.
சஹீர் கான் 1 விக்கெட்டையும், அரவிந்த், சியாத் மொஹெம்ட் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். போட்டிநாயகனாக கிரிஸ் கேய்ல் தெரிவானர். இப்போட்டியில் வென்றதன் மூலம் பெங்களூர் அணி, இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
பரிசளிப்பு விழாவில் கருத்து தெரிவித்த பெங்களூர் அணியின் கேப்டன் வெட்டோரி, கிரிஸ் கேய்ல் தங்களுக்கு நல்லதொரு டானிக் மாதிரி. அவர் ஆரம்ப வீரராக களமிறங்கி கலக்க தொடங்கினால், எமக்கும் உற்சாகம் வந்துவிடும். ஆனால் எமது பந்துவீச்சாளர்களும் மிகத்திறமையானவர்கள். சஹீர் கான், அரவிந்த், சியாட் மொஹ்மட் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். நாளை சென்னையையும் கலங்கடிக்க செய்வோம் என நம்புகிறோம் என்றார்.
ஹர்பஜன் சிங், மாலிங்க ஆகியோர் பந்துவீசும் போது மட்டும் கொஞ்சம் டென்ஷனானேன். மற்றும்படி இன்றைய ஆட்டம் எனக்கு மறக்கமுடியாதது தான் என்றார் கிரிஸ் கேய்ல்.
இறுதிப்போட்டியில் மோதும் சென்னை : பெங்களூர் அணிகள் பற்றிய பார்வை
73 போட்டிகளை கடந்து இறுதிப்போட்டியில் காலடி எடுத்துவைத்துள்ளது ஐபிஎல் பட்டாளம்! இது ஐபிஎல் 2011 இன் 74 போட்டி. மூன்று நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் பலம்வாய்ந்த பெங்களூரை வீழ்த்தியே சென்னை இறுதிப்போட்டிக்கு நேரடி தகுதி பெற்றது. அந்த போட்டியில் கிரிஸ் கேய்லை 8 ரன்களுக்குள் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் அஷ்வின்.
ஆனால் கேய்லின் ஆட்டத்தை விராத் கோலி தொடர்ந்தார். அவர் 44 பந்துகளில் 70 ரன்கள் குவித்து மொத்த ஓட்டத்தை 175 ரன்கள் வரை கொண்டுவந்துவிட்டார்.
பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி சுரேஷ் ரைனாவின் அதிரடியால் 19.4 பந்துகளில், போட்டியை வெற்றிகொண்டது. இதற்கு பழிதீர்க்கும் எண்ணத்தில் பெங்களூர் மீண்டும் சென்னையை சந்திக்கிறது.
சென்னையை பொறுத்தவரை, தனது அணியில் இன்னுமொரு வீரரை இடம்மாற்றாது, தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்றுள்ளது. அந்தளவுக்கு அவர்களுடைய டீம் ஸ்பிரிட்.
அந்த அணியின் அல்பி மோர்கெல், வேய்ன் பிராவோ இருவரும் நல்ல ஆல்ரவுண்டர்கள், சென்னை கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விடயம் ஆரம்ப துடுப்பாட்டம் தான். முதல் 6 ஓவருக்குள் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தும் அனுபவம் சென்னை அணிக்கு என கூறப்படுகிறது. சிலவேளை குறைவான ஓட்டம் எடுக்கின்றனர். அல்லது நேரத்திற்கே விக்கெட்டை இழந்துவிடுகின்றனர்.
பெங்களூரின் இடைநிலை துடுப்பாட்ட வீரர்களிடமும் இப்பலவீனம் காணப்படுகிறது.
இப்போட்டியில் அனைவரது கவனமும் திரும்பியிருக்கும் இரு வீரர்கள் சஹீர் கானும், சுரேஷ் ரைனாவுமே. கடந்த 2010 ஐபிஎல் போட்டிகளில், இறுதிப்போட்டியில் மும்பை சென்னை அணிகள் மோதின. அப்போது மும்பைக்காக விளையாடிய சஹீர் கான், சுரேஷ் ரைனாவின் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். இதை வாய்ப்பாக கொண்டு விளாசிய சுரேஷ் ரைனா சென்னைக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த கோபம் சஹீர்கானிடம் இன்றுவரை இருக்கிறதாம்.
நாளை பந்துவீச்சில் அதை பழிதீர்பாரா?
சுரேஷ் ரைனா இதுவரை நடந்த ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் தனது மொத்த ரன்களாக 400 ஐ கடந்துள்ளார். மூன்று ஐபிஎல் போட்டிகளில் கூட வேறு எவரும் தொடர்ச்சியாக 400 ஐ கடக்கவில்லை.
பத்ரினாத், தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் பயன்படுத்தி நல்ல ஸ்கோர் எடுத்துவருகிறார்.
எம்.எஸ் தோனி : 2007 நடைபெற்ற உலக டுவெண்டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத்தந்தார். ஐபிஎல் 2010 இல் சென்னைக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். 2010 சாம்பியன் லீக் கிண்ணத்தையும், 2011 உலக கோப்பையும் பெற்றுத்தந்தார். இப்போது மீண்டும் சென்னைக்கு 2011 ஐபிஎல் கோப்பையை பெற்றுக்கொடுப்பாரா?
கிரிஸ் கேய்ல் : இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து தடவை மேன் ஆஃப் தி மேட்ச் பரிசை தட்டிச்சென்றுள்ளார். அவர் இம்முறை விளையாடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கையே 11 தான்.
பத்ரினாத் : இம்முறை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து தடவை ஐம்பது ரன்களை கடந்துள்ளார்.
இந்த ஜாம்பவான்கள் இறுதிப்போட்டியில் கலக்குவார்களா?, 2011 ஐபிஎல் கோப்பை யாருக்கு? உங்கள் ஊகம் என்ன?
தமிழ்மீடியா
நேற்று (வெள்ளிக்கிழமை) பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் பெங்களூர் அணி 43 ரன்களால் இலகுவெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கேய்ல், நினைத்தபடியே விளாசித்தள்ளினார். அவர் 47 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள், 9 பவுன்றிகள் அடங்கும். மறுமுனையில் அகர்வால் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுன்றிகள் அடங்கும்.
இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 10.4 ஓவர்களில் 113 ரன்களை அதிரடியாக எடுத்தனர். எனினும் அவர்கள் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய கோலி, போமெஸ்பாச், திவாரி ஆகியோர் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். வில்லியெர்ஸ் மட்டும் 15 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார். ஆரம்ப அதிரடியை பார்த்ததும் மொத்த ரன்கள் 200 ஐ தாண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இறுதிநேர மும்பையின் சிறப்பான பந்துவீச்சினால் 185 ரன்களுக்குள் மட்டுப்படுத்த முடிந்தது.
பந்துவீச்சில் முனாப் படேல் 2 விக்கெட்டுக்களையும் ஆஹ்மெட், பொலார்ட் தலா 1 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு களமிறங்கிய சச்சின் தலைமையிலான மும்பை அணி ஆரம்பத்திலேயே ப்ளிஷார்ட்டை இழந்தது. அவர் 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.டெண்டுல்கர் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுன்றிகள் அடங்கும்.
எனினும் களமிறங்கிய மற்றவர்கள் எவரும் பிரகாசிக்க தவறியதால், 20 ஓவர்களில் 142 ரன்களையே அவ் அணி பெற்றுக்கொண்டது. ரோஹித் ஷர்மா, ராயுடு, பொலார்ட் என மும்பையின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுக்களை வெட்டோரி கைப்பற்றினார்.
சஹீர் கான் 1 விக்கெட்டையும், அரவிந்த், சியாத் மொஹெம்ட் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். போட்டிநாயகனாக கிரிஸ் கேய்ல் தெரிவானர். இப்போட்டியில் வென்றதன் மூலம் பெங்களூர் அணி, இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
பரிசளிப்பு விழாவில் கருத்து தெரிவித்த பெங்களூர் அணியின் கேப்டன் வெட்டோரி, கிரிஸ் கேய்ல் தங்களுக்கு நல்லதொரு டானிக் மாதிரி. அவர் ஆரம்ப வீரராக களமிறங்கி கலக்க தொடங்கினால், எமக்கும் உற்சாகம் வந்துவிடும். ஆனால் எமது பந்துவீச்சாளர்களும் மிகத்திறமையானவர்கள். சஹீர் கான், அரவிந்த், சியாட் மொஹ்மட் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். நாளை சென்னையையும் கலங்கடிக்க செய்வோம் என நம்புகிறோம் என்றார்.
ஹர்பஜன் சிங், மாலிங்க ஆகியோர் பந்துவீசும் போது மட்டும் கொஞ்சம் டென்ஷனானேன். மற்றும்படி இன்றைய ஆட்டம் எனக்கு மறக்கமுடியாதது தான் என்றார் கிரிஸ் கேய்ல்.
இறுதிப்போட்டியில் மோதும் சென்னை : பெங்களூர் அணிகள் பற்றிய பார்வை
73 போட்டிகளை கடந்து இறுதிப்போட்டியில் காலடி எடுத்துவைத்துள்ளது ஐபிஎல் பட்டாளம்! இது ஐபிஎல் 2011 இன் 74 போட்டி. மூன்று நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் பலம்வாய்ந்த பெங்களூரை வீழ்த்தியே சென்னை இறுதிப்போட்டிக்கு நேரடி தகுதி பெற்றது. அந்த போட்டியில் கிரிஸ் கேய்லை 8 ரன்களுக்குள் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் அஷ்வின்.
ஆனால் கேய்லின் ஆட்டத்தை விராத் கோலி தொடர்ந்தார். அவர் 44 பந்துகளில் 70 ரன்கள் குவித்து மொத்த ஓட்டத்தை 175 ரன்கள் வரை கொண்டுவந்துவிட்டார்.
பதிலுக்கு களமிறங்கிய சென்னை அணி சுரேஷ் ரைனாவின் அதிரடியால் 19.4 பந்துகளில், போட்டியை வெற்றிகொண்டது. இதற்கு பழிதீர்க்கும் எண்ணத்தில் பெங்களூர் மீண்டும் சென்னையை சந்திக்கிறது.
சென்னையை பொறுத்தவரை, தனது அணியில் இன்னுமொரு வீரரை இடம்மாற்றாது, தொடர்ச்சியாக 6 போட்டிகளை வென்றுள்ளது. அந்தளவுக்கு அவர்களுடைய டீம் ஸ்பிரிட்.
அந்த அணியின் அல்பி மோர்கெல், வேய்ன் பிராவோ இருவரும் நல்ல ஆல்ரவுண்டர்கள், சென்னை கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விடயம் ஆரம்ப துடுப்பாட்டம் தான். முதல் 6 ஓவருக்குள் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தும் அனுபவம் சென்னை அணிக்கு என கூறப்படுகிறது. சிலவேளை குறைவான ஓட்டம் எடுக்கின்றனர். அல்லது நேரத்திற்கே விக்கெட்டை இழந்துவிடுகின்றனர்.
பெங்களூரின் இடைநிலை துடுப்பாட்ட வீரர்களிடமும் இப்பலவீனம் காணப்படுகிறது.
இப்போட்டியில் அனைவரது கவனமும் திரும்பியிருக்கும் இரு வீரர்கள் சஹீர் கானும், சுரேஷ் ரைனாவுமே. கடந்த 2010 ஐபிஎல் போட்டிகளில், இறுதிப்போட்டியில் மும்பை சென்னை அணிகள் மோதின. அப்போது மும்பைக்காக விளையாடிய சஹீர் கான், சுரேஷ் ரைனாவின் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டார். இதை வாய்ப்பாக கொண்டு விளாசிய சுரேஷ் ரைனா சென்னைக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த கோபம் சஹீர்கானிடம் இன்றுவரை இருக்கிறதாம்.
நாளை பந்துவீச்சில் அதை பழிதீர்பாரா?
சுரேஷ் ரைனா இதுவரை நடந்த ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் தனது மொத்த ரன்களாக 400 ஐ கடந்துள்ளார். மூன்று ஐபிஎல் போட்டிகளில் கூட வேறு எவரும் தொடர்ச்சியாக 400 ஐ கடக்கவில்லை.
பத்ரினாத், தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் பயன்படுத்தி நல்ல ஸ்கோர் எடுத்துவருகிறார்.
எம்.எஸ் தோனி : 2007 நடைபெற்ற உலக டுவெண்டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத்தந்தார். ஐபிஎல் 2010 இல் சென்னைக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். 2010 சாம்பியன் லீக் கிண்ணத்தையும், 2011 உலக கோப்பையும் பெற்றுத்தந்தார். இப்போது மீண்டும் சென்னைக்கு 2011 ஐபிஎல் கோப்பையை பெற்றுக்கொடுப்பாரா?
கிரிஸ் கேய்ல் : இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து தடவை மேன் ஆஃப் தி மேட்ச் பரிசை தட்டிச்சென்றுள்ளார். அவர் இம்முறை விளையாடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கையே 11 தான்.
பத்ரினாத் : இம்முறை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து தடவை ஐம்பது ரன்களை கடந்துள்ளார்.
இந்த ஜாம்பவான்கள் இறுதிப்போட்டியில் கலக்குவார்களா?, 2011 ஐபிஎல் கோப்பை யாருக்கு? உங்கள் ஊகம் என்ன?
தமிழ்மீடியா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூர் அணி
தோனியின் அதிஷ்டம் சென்னைக்கு கை கொடுக்கும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
» தெற்காசிய கால்பந்து போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி
» ஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து, பதக்கம் உறுதியானது
» 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி
» முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
» தெற்காசிய கால்பந்து போட்டி: இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி
» ஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து, பதக்கம் உறுதியானது
» 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி
» முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|