Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
+6
கே. பாலா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
JUJU
தாமு
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
First topic message reminder :
அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது.
முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
சமச்சீர் கல்வி சட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 2010-11ம கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் படித்து முடித்துள்ளனர்.
அரசின் கொள்கை முடிவின்படி 2011-12ம் ஆண்டு முதல் எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஏதுவாக ரூ.200 கோடி செலவில் பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.
கல்வியிலும் சமத்துவத்தை நிலைநாட்ட திமுக அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையை அதிமுக அரசு திடீரென்று கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவில் புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாகத் தயாரித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறைதானா?
சமச்சீர் கல்வித் திட்ட்த்தை நிறுத்தி வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாள்ரகள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக நீதியை நிலைநாட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தள்ளி வைத்திருப்பது கடும் விவாதத்தை எழுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சியும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவின் மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணமா?
அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்.
விழியே பேசு.
அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது.
முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
சமச்சீர் கல்வி சட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 2010-11ம கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் படித்து முடித்துள்ளனர்.
அரசின் கொள்கை முடிவின்படி 2011-12ம் ஆண்டு முதல் எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஏதுவாக ரூ.200 கோடி செலவில் பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.
கல்வியிலும் சமத்துவத்தை நிலைநாட்ட திமுக அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையை அதிமுக அரசு திடீரென்று கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவில் புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாகத் தயாரித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறைதானா?
சமச்சீர் கல்வித் திட்ட்த்தை நிறுத்தி வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாள்ரகள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக நீதியை நிலைநாட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தள்ளி வைத்திருப்பது கடும் விவாதத்தை எழுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சியும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவின் மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணமா?
அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்.
விழியே பேசு.
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
SK wrote:எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
கலைஞரின் குடும்ப அரசியலை விட, ஜெ வின் ஈகோ கொடுமையானது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
ஓட்ட போட்டீங்க இல்ல அனுபவி ராஜா அனுபவி .இப்படிதான் தமிழ் மக்கள் பாடனும்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
தமிழ்.வெப்துனியா.காம்: தமிழ்நாட்டில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்கியிருக்கிறார். அதற்கு, தரம் போதுமானதாக இல்லை என்று காரணம் சொல்கிறார். இதற்கு அரசியல் மட்டுமே காரணமா? ஜோதிட ரீதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில்தான் இவர் பொறுப்பேற்றிருக்கிறார்கள். சுவாதி நட்சத்திரம் இராகுவினுடைய நட்சத்திரம். ஏழரைச் சனியும், இராகு திசையும் இருந்து கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஏற்கனவே அவருடைய ஜாதகத்திலும் ஏழரைச் சனியும், இராகு திசையும் நடந்துக் கொண்டிருக்கிறது.
அதனால், எதை எடுத்தாலும் கொஞ்சம் சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் வரும். கொஞ்சம் எதிர்ப்பான முடிவுகள், ஏனென்றால் இராகு தலைகீழாக சுற்றக்கூடிய கிரகம். அவருக்கும் இராகு திசை நடக்கிறது, அவர் பொறுப்பேற்றதும் இராகு திசையில்தான். அதனால் இவர் எடுக்கும் முடிவு முன்னுப் பின் முரணாகத்தான் வரும். கூடவே ஏழரைச் சனி அவருடைய சிம்ம ராசியில் நடக்கிறது. டிசம்பர் வரைக்கும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டிவரும்.
அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து அவருடைய உடல் நலமும் பாதிக்கும். அதாவது அவருடைய மன வேகத்திற்கு ஈடிணையாக அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கும். அதனால் எல்லா வகையிலும் டிசம்பர் வரைக்கும் அவர் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். ஜனவரியில் இருந்து ஓரளவிற்கு அவருக்கு நன்மை தரக்கூடிய அமைப்பு உண்டு. இருந்தாலும், நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து அவருடைய ராசிக்குள்ளேயே செவ்வாய் வந்து உட்காரப் போகிறார். அதனால் அடுத்தடுத்து அவருக்கு உடல்நலக் குறைவுகள், பாதிப்புகள் என்று இருந்துகொண்டே இருக்கும்.
புதன்தான் கல்விக்குரிய கிரகம். வித்தை, ஞானம், கல்வி இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன். புதனுடைய வீடுகள் மிதுனமும், கன்னியும். இந்த புதனின் ஒரு வீடான கன்னியில்தான் சனி பகவான் உட்கார்ந்திருக்கிறார். சனி என்றைக்கு கல்விக்குரிய புதன் வீட்டில் வந்து நுழைந்தாரோ அதிலிருந்து மெட்ரிக் கல்வி, சமச்சீர் கல்வி பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. இந்தப் பிரச்சனைகள் டிசம்பர் வரைக்குமே இருக்கும். ஜோதிடப் பூர்வமாக பார்க்கும் போது, புதன் வீடுகளில் வந்து சனி பகவான் உட்காரும் போதெல்லாம் இந்த மாதிரியான பாதிப்புகளெல்லாம் ஏற்படும்.
சனிக்கு மந்தம் என்று ஒரு பெயர் உண்டு. தற்போது பள்ளிக் கூடங்களே மந்தமாக, தள்ளப்பட்டு தாமதமாகத் திறக்கப்படுகிறது பாருங்கள். இதெல்லாம் சனியினுடைய முழுமையான ஆதிக்கம்தான் காரணம். அதனால் டிசம்பர் வரைக்கும் கல்வித் துறையில் சலசலப்புகள், தீர்வு காண முடியாத நிலை, அதிருப்திகரமான நிலை போன்று தொடரும். அதனால் மெட்ரிக்குக்கும், பெற்றோருக்கும் இடையேயான பிரச்சனைகள், போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்த கல்வியாண்டில் வேண்டுமானால் இதற்கான நிரந்தரத் தீர்வுகள், முடிவுகள் ஜோதிடப்பூர்வமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
வெப்துனியா
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில்தான் இவர் பொறுப்பேற்றிருக்கிறார்கள். சுவாதி நட்சத்திரம் இராகுவினுடைய நட்சத்திரம். ஏழரைச் சனியும், இராகு திசையும் இருந்து கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஏற்கனவே அவருடைய ஜாதகத்திலும் ஏழரைச் சனியும், இராகு திசையும் நடந்துக் கொண்டிருக்கிறது.
அதனால், எதை எடுத்தாலும் கொஞ்சம் சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் வரும். கொஞ்சம் எதிர்ப்பான முடிவுகள், ஏனென்றால் இராகு தலைகீழாக சுற்றக்கூடிய கிரகம். அவருக்கும் இராகு திசை நடக்கிறது, அவர் பொறுப்பேற்றதும் இராகு திசையில்தான். அதனால் இவர் எடுக்கும் முடிவு முன்னுப் பின் முரணாகத்தான் வரும். கூடவே ஏழரைச் சனி அவருடைய சிம்ம ராசியில் நடக்கிறது. டிசம்பர் வரைக்கும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டிவரும்.
அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து அவருடைய உடல் நலமும் பாதிக்கும். அதாவது அவருடைய மன வேகத்திற்கு ஈடிணையாக அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கும். அதனால் எல்லா வகையிலும் டிசம்பர் வரைக்கும் அவர் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். ஜனவரியில் இருந்து ஓரளவிற்கு அவருக்கு நன்மை தரக்கூடிய அமைப்பு உண்டு. இருந்தாலும், நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து அவருடைய ராசிக்குள்ளேயே செவ்வாய் வந்து உட்காரப் போகிறார். அதனால் அடுத்தடுத்து அவருக்கு உடல்நலக் குறைவுகள், பாதிப்புகள் என்று இருந்துகொண்டே இருக்கும்.
புதன்தான் கல்விக்குரிய கிரகம். வித்தை, ஞானம், கல்வி இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன். புதனுடைய வீடுகள் மிதுனமும், கன்னியும். இந்த புதனின் ஒரு வீடான கன்னியில்தான் சனி பகவான் உட்கார்ந்திருக்கிறார். சனி என்றைக்கு கல்விக்குரிய புதன் வீட்டில் வந்து நுழைந்தாரோ அதிலிருந்து மெட்ரிக் கல்வி, சமச்சீர் கல்வி பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. இந்தப் பிரச்சனைகள் டிசம்பர் வரைக்குமே இருக்கும். ஜோதிடப் பூர்வமாக பார்க்கும் போது, புதன் வீடுகளில் வந்து சனி பகவான் உட்காரும் போதெல்லாம் இந்த மாதிரியான பாதிப்புகளெல்லாம் ஏற்படும்.
சனிக்கு மந்தம் என்று ஒரு பெயர் உண்டு. தற்போது பள்ளிக் கூடங்களே மந்தமாக, தள்ளப்பட்டு தாமதமாகத் திறக்கப்படுகிறது பாருங்கள். இதெல்லாம் சனியினுடைய முழுமையான ஆதிக்கம்தான் காரணம். அதனால் டிசம்பர் வரைக்கும் கல்வித் துறையில் சலசலப்புகள், தீர்வு காண முடியாத நிலை, அதிருப்திகரமான நிலை போன்று தொடரும். அதனால் மெட்ரிக்குக்கும், பெற்றோருக்கும் இடையேயான பிரச்சனைகள், போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்த கல்வியாண்டில் வேண்டுமானால் இதற்கான நிரந்தரத் தீர்வுகள், முடிவுகள் ஜோதிடப்பூர்வமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
வெப்துனியா
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி
» அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி
» "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."
» அம்ருதா வழக்கு ;ஜெ..,வின் உடலை எடுத்து டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது? - நீதிபதி கேள்வி
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி
» அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி
» "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."
» அம்ருதா வழக்கு ;ஜெ..,வின் உடலை எடுத்து டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது? - நீதிபதி கேள்வி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|