ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

+2
SK
தாமு
6 posters

Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by தாமு Fri May 27, 2011 2:44 pm

தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இதுவரை எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்காத அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திருச்சி மனோகரன் ஆகியோர் தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து 14-வது சட்டசபையின் சபாநாயகராக ஜெயக்குமார் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் அறிவித்தார். இதையடுத்து அவை முன்னவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஜெயக்குமாரை 9.36 மணி அளவில் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சபாநாயகராக பதவி ஏற்ற ஜெயக்குமார் வாய்ப்பு வழங்கிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், ஆதரவளித்த உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது. துணை சபாநாயகராக தனபால் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்படுவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். பின்னர் சபாநாயகர், துணை சபாநாயகரை பாராட்டி முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் உறுப்பினர்கள் பேசினார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

ஓ.பன்னீர்செல்வம் (அவை முன்னவர்):- தமிழக மக்களின் பேராதரவை பெற்று 3-வது முறையாக முதல்- அமைச்சர் அம்மா பொறுப்பு ஏற்று உள்ளார். வரலாற்று பெருமை மிக்க இந்த சபையின் தலைவராக தாங்களும், துணை சபாநாயகராக தனபாலும் அவையில் பதவி ஏற்கும் வாய்ப்பை அம்மா வழங்கி உள்ளார்.

பாராளுமன்ற சட்டமன்ற மரபை மதிக்கும் வகையில் இந்த மாமன்றத்தில் தலைவராகும் தகுதி உங்களுக்கு உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அணைவரையும் சமமாக நடத்தும் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நீங்கள் பணியாற்றி இந்த அவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விஜயகாந்த் (எதிர்கட்சி தலைவர்):- எந்தவித போட்டியும் இல்லாமல் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்தே சபாநாயகர் பதவிக்கு தாங்கள் பொருத்தமானவர் என்பது தெளிவாகிவிட்டது. சபாநாயகர் பட்டப்படிப்பும், சட்டமும் படித்தவர். ஆளும் கட்சியில் அமைச்சராகவும், எதிர்க்கட்சி வரிசையிலும் பணியாற்றி உள்ளார்.

எனவே ஆளும் கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கட்சியான எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். தங்களுக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பை வழங்கும். மக்களுடைய மிகப்பெரிய ஆதரவுடன் 3-வது முறையாக முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- 14-வது சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள். எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க்கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

5 விரல்கள் இருந்தாலும் அவைகள் ஒன்று சேர்ந்தால்தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இந்த பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் எத்தனையோ சபாநாயகர்கள் இருந்து இருக்கிறார்கள். என்றாலும் கிருஷ்ணாராவ், புலவர் கோவிந்தன், சி.பா.ஆதித்தனார், பழனிவேல் ராஜன் ஆகியோர் வரலாறு படைத்தனர். அதுபோல் நீங்களும் சிறப்பாக இடம்பெற வேண்டும். ஜனநாயக தேரை ஒன்று கூடி இழுக்க எங்களது ஒத்துழைப்பு இருக்கும். அவை சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு அளிப்போம்.

சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சவுந்திரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ) கோபிநாத் (காங்) குரு (பா.ம.க.) பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கதிரவன் (பார்வர்டு பிளாக்) மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள் சபாநாயகரை வாழ்த்தி பேசினார்கள்.

இறுதியில் சபாநாயகர் ஏற்புரை வழங்கி பேசினார்.

அவர் கூறியதாவது:- சான்றோர்கள் அமர்ந்த பெருமைமிக்க இந்த சபையில் என்னை சபாநாயகராக இருக்கும் வாய்ப்பை புரட்சி தலைவி அம்மா வழங்கியிருக்கிறார். நான் இந்த பொறுப்பை ஏற்பதற்கு முன்பே கட்சி பாகுபாடு இல்லாமல் ஒருநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றுடன் பெருமை சேர்க்கும் வகையில் சபையை நடத்துவேன். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மக்களுக்காக ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் கருத்துக்களை பாகுபாடு இல்லாமல் எடுத்துரைத்து எல்லோ ருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

கட்சி உறுப்பினர்கள் எண்ணிக் கையை கருத்தில் கொள் ளாமல் வாய்ப்பு வழங்கப்படும். புரட்சி தலைவியின் கீழ் நடைபெறும் இந்த ஆட்சியில் ஜனநாயக மரபுகள் காக்கப்படும். விவாதத்தில் பங்குபெற சமமான வாய்ப்பு கள் வழங்கப்படும். புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் ஒரு மகத்தான ஆட்சி மலர்ந்து உள்ளது. அதன் பெருமையை காக்கும் வகையில் நடுநிலையோடு செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



விழியே பேசு



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by SK Fri May 27, 2011 2:50 pm

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- 14-வது சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள். எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க்கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

5 விரல்கள் இருந்தாலும் அவைகள் ஒன்று சேர்ந்தால்தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இதை பார்க்கும்பொழுது எனக்கு சிரிப்பு வருகிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by தாமு Fri May 27, 2011 2:52 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by அருண் Fri May 27, 2011 4:40 pm

மக்களுக்கு நல்லது செய்தால் சரி தான்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by ந.கார்த்தி Fri May 27, 2011 5:26 pm

சிரி சிரி சிரி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by கலைவேந்தன் Fri May 27, 2011 6:09 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by SK Fri May 27, 2011 6:16 pm

இது தான் அரசியல் நாகரீகம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by T.N.Balasubramanian Fri May 27, 2011 10:27 pm

எதிர் பார்த்து காத்து இருந்த அரசியல் நாகரீகம் ,
சதிர் ஆட வந்ததோ தமிழகத்தில்!
எதிர் காலம் நன்றாய் இருக்கும் என ,
புதிர் போடவா வேண்டும் இனி ?
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by தாமு Sat May 28, 2011 5:18 am

T.N.Balasubramanian wrote:எதிர் பார்த்து காத்து இருந்த அரசியல் நாகரீகம் ,
சதிர் ஆட வந்ததோ தமிழகத்தில்!
எதிர் காலம் நன்றாய் இருக்கும் என ,
புதிர் போடவா வேண்டும் இனி ?
ரமணீயன்.

சூப்பருங்க ஜயா கலக்கிட்டீங்க :வணக்கம்:



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்  Empty Re: புதிய சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி
» இடைத் தேர்தலில் முதல் முறையாக டெபாசி்ட்டை தக்க வைத்த தேமுதிக- புதிய வரலாறு!!
» "சொந்தக் காசில் சூனியம் வைத்த' விஜயகாந்த்: தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு
» புதிய நிர்வாகிகள்: விஜயகாந்த் அறிவிப்பு
» ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum