ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!

5 posters

Go down

மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Empty மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!

Post by ரா.ரமேஷ்குமார் Fri 27 May 2011 - 10:15

கோவையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிலர் ஆடு, கோழி இறைச்சி, காய்கறி, பிரியாணி உள்ளிட்டவற்றைக்கூட மாமூலாக பெற்று வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடக்கிறது.

கோவையில் அரசு, போலீஸ் துறைகளில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளில், சிலரை தேர்வு செய்து சமீபத்தில் விருதும், பாராட்டும் வழங்கி கவுரவித்தது, ஓர் தன்னார்வ அமைப்பு. லஞ்சம் வாங்காமல் செயல்படுவது அதிகாரிகள், ஊழியர்களின் அடிப்படை ஒழுக்கம், கடமை சார்ந்தது என்ற நிலைமாறி, "இவர் லஞ்சம் வாங்காதவர்' என பாராட்டி, கவுரவிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அரசு மற்றும் போலீஸ் துறையில் லஞ்ச முறைகேடுகள் பெருகிவிட்டதே இதற்கு காரணம். அரசின் மற்ற துறைகளில் நடக்கும் ஊழல், பணமுறைகேடுகளை காட்டிலும், போலீஸ் துறையில் நடக்கும் பண முறைகேடுகளின் மொத்த மதிப்பு குறைவு என்ற போதிலும், லஞ்சத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, பதிவு செய்யாமல் இருக்க, ஒருவரை கைது செய்ய, கைது செய்யாமல் இருக்க, வழக்கில் இருந்து விடு விக்க என, அனைத்து வழிமுறைகளிலும் லஞ்சம் விளையாடுகிறது. இதுதவிர, போக்குவரத்து விதிமீறல்களில் பிடிபடும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் மறைக்கப்படுகிறது. சாலை ஆக்கிரமிப்பு தள்ளுவண்டிக் கடைக்காரர்களிடம், ரோந்து போலீசார் மாமூல் வசூலிப்பதும் நடக்கிறது; இவையெல்லாம், ஊரறிந்த ரகசியம். வெளியுலகுக்கு தெரியாமல் தரம் தாழ்ந்த செயல்களிலும் சில போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.

அய்யாவுக்கு ஆட்டுக்கறி: கோவை மாநகரின் கிழக்குப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன் சந்தேக வழக்கில் ஒருவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார். பிடிபட்டவர் ஆடு, கோழி இறைச்சி கறிக்கடைக்காரர் என்று தெரியவந்தது. அவரை விடுவித்த இன்ஸ்பெக்டர், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ ஆட்டுக்கறி, ஒரு கிலோ கோழிக்கறியை ஓசியாக வாங்குவதை மாமூலாக கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் உத்தரவுப்படி, பைக் ரோந்து போலீசார் கடைக்குச் சென்று இறைச்சியை வாங்கியபின், காந்திபுரம் போலீஸ் குடியிருப்பிலுள்ள இன்ஸ்பெக்டர் வீட்டில் "டெலிவரி' செய்கின்றனர். இப்போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட பணியோ, கோவை நகரில் செயின்பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து பிடிப்பது. இன்ஸ்பெக்டரின் முறைதவறிய செயல் தொடர்பாக போலீசாரில் சிலர் உயரதிகாரிகளுக்கு "பெட்டிஷன்' அனுப்பியதை தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

ஏ.சி.,க்கு காய்கறி மூட்டை: கோவை மாநகரில் பணியாற்றும் சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் ஒருவர், வாரம் ஒருமுறை கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று சில வியாபாரிகளின் உதவியுடன் மலிவான விலையில் சாக்கு மூட்டையில் காய்கறி வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த மூட்டையை பேக்கிங் செய்து, நெல்லையிலுள்ள தனது வீட்டுக்கு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் அனுப்புகிறார். காய்கறி மூட்டையை மார்க்கெட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ஏற்றிச் செல்வது போலீஸ் ஜீப்பில்; கொண்டு செல்பவர்கள் போலீசார்.

ஆபீசருக்கு பிரியாணி: கோவையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். குடிபோதையில் தாறுமாறாக கார் செல்வது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர், காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்தார். அவர் பிரியாணிக்கடை நடத்துவது தெரியவந்ததும் "விசிட்டிங் கார்டை' பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்த வாரத்திலிருந்து ஞாயிறு தோறும் தலா 500 ரூபாய் மதிப்பிலான ஆடு, கோழி, வான்கோழி பிரியாணி உணவு வகைகளை போலீசாரை அனுப்பி வாங்குவதாக மேலதிகாரிக்கு புகார் சென்றுள்ளது. மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக உளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு சில போலீசாரின் தவறான செயல்களால், ஒட்டுமொத்த போலீசுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது". லஞ்சம், மாமூல் உள்ளிட்ட பண முறைகேடுகளில் ஈடுபட கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது; அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்', என்றார்.

தினமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Empty Re: மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!

Post by கே. பாலா Fri 27 May 2011 - 11:11

புதிய ஆட்சி வந்தாலும் அவர்களின் "மாமூல்" நடவடிக்கையில் எந்த பாதிப்பும் இல்லை போலிருக்கே? ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Empty Re: மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!

Post by முரளிராஜா Fri 27 May 2011 - 14:14

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Empty Re: மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!

Post by கலைவேந்தன் Fri 27 May 2011 - 15:36

இதெல்லாம் ’மாமூலா’ நடப்பது தானே... இதுல என்ன அங்கலாய்ப்புன்னேன்...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Empty Re: மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!

Post by தாமு Fri 27 May 2011 - 15:53

என்ன கொடுமை சார் இது பைத்தியம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!! Empty Re: மாமூலாக ஆடு, கோழி, பிரியாணி!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum