ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

+3
கலைவேந்தன்
உதயசுதா
மஞ்சுபாஷிணி
7 posters

Go down

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Empty டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 11:59 am

ஜெயலலிதா முதலமைச்சரானால், அதிர்ச்சிகளுக்கும் ஆச்சர்யங்களுக்கும் சம பங்கு இருக்கும். இம்முறையும் அப்படியே!

'கானா’ கருப்பசாமி!
நான்காவது முறையாக வெற்றி பெற்ற கருப்பசாமிக்கு நிச்சயம் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பலரும் அனுமானித்தார்கள். யூகங்களைத் தவிடுபொடி ஆக்குவதுதானே ஜெ ஸ்டைல். இந்த முறை கருப்பசாமியைக் கால்நடைத் துறை அமைச்சர் ஆக்கினார். ''துறைரீதியான அத்தனை பிரச்னைகளையும் அறிஞ்ச ஆள்னா, அது கருப்பசாமிதான். பி.யூ.சி மட்டுமே படிச்ச கருப்பசாமி, பழைய எம்.ஜி.ஆர். பாடல்களை கானா ஸ்டைலில் பாடிக் கலக்குவார்.

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P22
ஆரம்பம்தொட்டே ள்ளூரில் விவசாயம் பண்ணி வரும் அவர், ஆடு மாடு மேய்ச்சப்பதான் பாட்டுப் பாடவே கத்துக்கிட்டார். அன்னிக்கு மாடு மேய்த்தவர் இன்னிக்குக் கால்நடைத் துறைக்கே மந்திரி ஆகிட்டார். அம்மா நிகழ்த்துற ஆச்சர் யங்களுக்கு அளவே இல்லை!'' என சிலிர்க் கிறார்கள் கருப்பசாமியின் நண்பர்கள்.

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்!
டந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சட்டரீதியான சிக்கலால் 'முதல்வர்’ பதவியில் அமர்த்திவைக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். புரோட்டாகால்படி முதல்வருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது நிதித் துறை. இந்த அருமை புரியாத ஆதரவாளர்கள் சிலர், ''என்னங்கண்ணே, பொதுப் பணித் துறை கிடைக்கும்னு பார்த்தால், இப்படிப் பண்ணிட்டாங் களே?'' என வருத்தம் காட்டி னார்கள். ''பெரியகுளம் டீக் கடை கல்லாவில் உட்கார்ந்து இருந்த என்னை தமிழ்நாட்டோட கல்லாவிலேயே அம்மா உட்காரவெச்சிருக்காங்க. விவரம் புரியாமப் பேசாதீங்க!'' எனச் சொன்னபோதே ஓ.பி-க்குக் கண் கலங்கிவிட்டது.

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P22a
நகரப் பொறுப்பில் இருந்தபோது பெரியகுளத்தில் டீக் கடை நடத்தி வந்தவர் பன்னீர்செல்வம். எம்.எல்.ஏ., அமைச்சர் என அவர் கிராஃப் ஏறியபோதும், டீக் கடை நிர்வாகம் தொடந்துகொண்டே இருந்தது. தம்பி மாஸ்டராக டீ ஆற்ற, கல்லா பெட்டியில் உட்கார்ந்து காசு எண்ணுவார் பன்னீர். முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டபோதும், ''டீக் கடையை நிறுத்திடாதீங்க. அதுதான் என்றைக்கும் நிலையானது!'' எனச் சொன்னார். தொகுதிப் பக்கம் வரும்போது பழசை மறக்காதவராக அந்த டீக் கடையின் கல்லாப் பெட்டியில் அமர்ந்து, ஏரியாவாசிகளிடம் பேசிச் சிரிப்பார் பன்னீர். அம்மாவின் அருகில் அவர் பவ்யமாக நிற்கும் படம் அந்த டீக் கடையில் பிரதானமாக இருக்கும். அந்தப் பவ்யம்தான் டீக் கடை கல்லாவில் இருந்து அவரை இந்த உயரத்துக்கு ஏற்றி இருக்கிறது!

தழுதழுத்த தாம்பரம் சின்னையா!

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P22b
பிற்பட்டோர் நலத் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்ட தாம்பரம் சின்னையாவுக்கு பலரிடம் இருந்தும் வாழ்த்து மழை. 'முதல் தடவை ஜெயிச்சே மந்திரி ஆகிட்டீங்க’ என பலரும் வாழ்த்த, ''அது என் பெயரா இருக்காதுப்பா!'' என நம்ப மறுத்தார் சின்னையா. அவர் பெயர்தான் என்பது உறுதியாக, சின்னையாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ''அமைச்சர் ஆனதற்கு சந்தோஷப்படாமல் மயக்கம் போடுறீங்களே?'' என சிலர் கேட்க, ''எம்.எல்.ஏ. சீட் கிடைச்சப்பவே, மயங்கி விழுந்த ஆள்யா நான். நேர்காணலுக்கே கூப்பிடாமல், அம்மா எனக்கு சீட் அறிவிச்சாங்க. இப்போ அதே மாதிரி, அமைச்சர் பதவியும் கொடுத்துஇருக்காங்க'' என்றார் சின்னையா. தகரக் கூரையும் தட்டுமுட்டுச் சாமான்களுமாகக் கிடக்கும் சாதாரண வீட்டில்தான் சின்னையா வசிக்கிறார். ''இந்த ஆறு சென்ட் இடத்தில் என்னோடு பிறந்த ஒன்பது பேருக்குப் பங்கு இருக்கு சார்'' என்று தழுதழுக்கிறார் மாண்புமிகு பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் தாம்பரம் சின்னையா!

பாதுகாப்புக்காகப் பதவி!
டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P22cபுவனகிரி தொகுதியில் ஜெயித்த செல்வி ராமஜெயத்துக்கு சமூக நலத் துறையை ஒதுக்கி இருக்கிறார் ஜெ. சில வருடங்களுக்கு முன் செல்வியின் கணவர் ராமஜெயத்தை, மர்ம ஆசாமிகள் சிலர் வெட்டிக் கொன்றார்கள். கண்ணீரோடு கார்டனுக்கு வந்த செல்வி, ''அவர் இல்லாமல் வாழப் பயமா இருக்கும்மா!'' எனக் கண்ணீர் சிந்தி இருக்கிறார். 'அவருக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும்’ என எண்ணித் தான் எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார் ஜெ. அமைச்சரவைப் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் செல்வி ராமஜெயம் பெயரும் இடம்பெற, அவர் அதிர்ச்சியில் கதறி அழாத குறை தான். ''ஆறு அக்கா தங்கைகளோடு பிறந்தவள் நான். பாதுகாப்பு கேட்டுத்தான் அம்மாகிட்ட போனேன். சைரன் வெச்ச காரும் இத்தனை போலீஸும் கொடுப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லை!'' என வாழ்த்துச் சொல்ல வருபவர்களிடம் எல்லாம் கண்ணீர் உகுக்கிறார் செல்வி. இவருடைய கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு!

வீம்புக்குக் கிடைத்த விருது!
டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P23c'36 வயதே ஆன செந்தில் பாலாஜிக்கு எப்படிப் போக்குவரத்துத் துறை கொடுத்தாங்க?’ என்கிற ஆச்சர்யம் அ.தி.மு.க-வுக்குள்ளேயே இன்னமும் அடங்கவில்லை. அ.தி.மு.க. மண்டல வாரியாக நடத்திய கூட்டங்களுக்கு அதிக ஆட்களைத் திரட்டி வந்த மாவட்டச் செயலாளர் கரூர் செந்தில் பாலாஜிதானாம். கோவைக் கூட்டத்துக்கு 180 பஸ்களில் ஆட்களைத் திரட்டியவர், திருச்சிக் கூட்டத் துக்கு அதை விஞ்சுகிற அளவுக்கு அதிகமான பஸ்களைத் திரட்டும் முனைப்பில் இருக்க, அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அதற்குத் தடை போட்டார். தனியார் பேருந்து முதலாளிகளை மிரட்டி, ''பாலாஜிக்கு ஒரு பஸ்கூட அனுப்பக் கூடாது'' என்றார். களத்தில் குதித்த பாலாஜி, 800 லாரி, டிராக்டர், மினி வேன்களில் கூட்டத்தைத் திரட்டிப்போனார். இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கார்டனுக்கு புகார் அனுப்பினார்கள். விவகாரத்தை விசாரித்தபோதுதான் பாலாஜியின் துடிப்பு தெரிய வந்தது. விளைவு, இப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

'கடன்’ கொடுத்த வருவாய்த் துறை!
டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P23d''அம்மா, எனக்கு சீட் வேணாம். எனக்கு ஒரே ஒரு பையன். அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். நல்லா வாழ்ந்தவன். எல்லாம் நொடிச்சுப்போய், இப்போ ரெண்டே கால் கோடி ரூபாய் கடன்ல இருக்கேன். இனி, விற்க எதுவுமே இல்லம்மா... நீங்க யாரை நிக்கவெச்சாலும் அவங்களுக்காக வேலை பார்க்குறேன்!'' நேர்காணலுக்காக அழைக்கப்பட்டபோது நாமக்கல் மாவட்டச் செயலாளர் தங்கமணி இதைத்தான் சொன்னார். இந்த வார்த்தைகள் ஜெ-யின் மனதைக் கரைக்க, தங்கமணிக்கே சீட் கிடைத்தது. ''பிசினஸ்ல லாப நஷ்டம் சகஜம். ஆனா, அதில் உங்களுக்கு நிறைய அனுபவம் கிடைச்சிருக்கும். அதைச் சரியா பயன்படுத்தி, துறையைக் கவனிச்சுக்கங்க!'' என்று தங்கமணிக்கு வருவாய்த் துறையை வழங்கினார் ஜெ!

வார்த்தைகளுக்குக் கிடைத்த வாய்ப்பு!
டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P23டந்த தேர்தலில் குளத்தூர் தனித் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த சுப்ரமணியனுக்கு இந்த முறை சீட் இல்லை. காரணம், குளத்தூர் தொகுதி நீக்கப்பட்டு, விராலிமலை என்கிற பொதுத் தொகுதி உருவாகிவிட்டது. ஆனாலும், அசராத சுப்ரமணியன் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதிக்கு வாய்ப்புக் கேட்டு ஜெயலலிதாவைச் சந்தித்தார். ''உள்ளூர் வேட்பாளர்களே தடுமாறும்போது, அடுத்த தொகுதிக்குப் போய் நீங்கள் எப்படி ஜெயிக்க முடியும்?'' எனக் கேட்டார் ஜெ. ''ஆதிதிராவிட மக்களைப் பொறுத்தமட்டில் யார் வேட்பாளர் என்று பார்க்க மாட்டார்கள் அம்மா. தனித் தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் யார் நின்றாலும், அம்மாவின் ஆளாகத்தான் பார்ப்பார்கள். அதனால், தமிழகத்தில் எந்தத் தனித் தொகுதியிலும் என்னை நிறுத்துங்கள். நிச்சயம் ஜெயிப்பேன்!'' எனச் சொன்னார் சுப்ரமணியன். கந்தர்வக்கோட்டை தொகுதியில் சீட் வாங்கி, ஜெயித்தவருக்கு ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. புதுக்கோட்டையில் சொந்த வீடு இல்லாத சுப்ரமணியன், ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு இருக்கிறார். அமைச்சர் பதவி அறிவிக்கப்பட்ட நாளில் பாதுகாப்புக்காக அவருடைய வீட்டைத் தேடி போலீஸ் அலைந்தது பரிதாபக் கதை!

புகார் புள்ளியின் கையில் பொறுப்பு!
டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P23a'தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுடன் நெருக்கமாக இருக்கிறார்!’ என அக்ரி கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி அடிக்கடி கார்டனுக்குப் புகார் மழை. ஆனாலும், அக்ரிக்கு ஸீட் கொடுத்தார் ஜெ. ஜெயித்த உடன் எ.வ.வேலு வகித்த உணவுத் துறையையே அக்ரிக்குக் கொடுத்தார் ஜெ. கூடவே, எ.வ.வேலு துறைரீதியாகச் செய்த மோசடிகள் குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பும் அக்ரி வசம்! 'எ.வ.வேலுவுடன் நெருக்கம் இல்லை!’ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போதே கிளறல் வேலைகளைத் தொடங்கிவிட்டார் அக்ரி!
இவர்கள் தவிர, இன்னும் சிலர் அமைச்சர்கள் ஆனதிலும் 'அம்மா’ பாணி அசத்தல்!
ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த கே.வி.ராமலிங்கத்தை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடச் சொல்லி, இப்போது அமைச்சராகவும் உயர்த்தி இருக்கிறார் ஜெ. ''பொதுப் பணித் துறையை நீங்கள்தான் பார்க்கப் போறீங்க...'' என ஜெ. சொல்ல, ''அவ்வளவு முக்கியமான துறையை நிர்வகிக்கிற அளவுக்கு எனக்கு ஏதும் விவரம் தெரியாதும்மா'' என்று சொல்லி இருக்கிறார் ராமலிங்கம். ''வருமானம் கொழிக்கும் பொதுப் பணித் துறைக்கு எல்லா விவரங்களையும் அறிந்தவர்களைத்தான் நியமிக்கக் கூடாது'' என சிரித்துக்கொண்டே சொன்னாராம் ஜெ. ஆரம்பத்தில் காய்கறி வியாபாரம் செய்த மரியம் பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறை, சட்டமன்றத்தில் ஒரே ஒரு தடவை கல்விக் கொள்கை குறித்து அற்புதமாகப் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனுக்கு உயர் கல்வித் துறை, கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தைத் 'தீப்பெட்டித் திட்டம்’ எனக் கிண்டல் அடித்த காரணத்துக்காகவே ஒரத்தநாடு வைத்திலிங்கத்துக்கு வீட்டு வசதித் துறை என அறிவித்து, வழக்கமான விசித்திரங்களை ஜெகஜோதியாக அரங்கேற்றி இருக்கிறார் ஜெ!

பரிதாப பச்சைமால்!

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) P23e
ச்சைமால், வனத் துறை அமைச்சர் ஆனது தனிக் கதை. சில வருடங்களுக்கு முன் திடீரென ஒருநாள் கார்டனுக்குப் போகிறார் பச்சைமால். அப்போது அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. ''அம்மா, நம்ம கட்சி நல்லபடி வளரணும்னா, எங்க மாவட்டத்துக்கு நீலத்தங்கம் என்பவரை மாவட்டச் செயலாளராப் போடுங்க!'' என்றார் கிடைத்த சந்தர்ப்பத்தில். நீலத்தங்கம் என்பவரின் சாதனைகளையும் பட்டியல் போட்டார். அனைத்தையும் கேட்ட ஜெயலலிதா, ''நீங்கதான் இனி மாவட்டச் செயலாளர்!'' என அறிவித்தார். ''அம்மா, என்கிட்ட சைக்கிள்கூட இல்லம்மா. பெரிய பதவி எல்லாம் எனக்கு வேணாம்மா'' எனக் கண்ணில் நீர் வைத்துக்கொண்டு கதறினார் பச்சைமால். உடனே, அவருக்கு ஒரு டாடா சுமோ வழங்கினார் ஜெ. 'அம்மாவே தெய்வம்’ என்கிற வாசகத்தோடு சுற்றுகிறது அந்த சுமோ.
இந்தத் தேர்தலில், ''அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்த தளவாய் சுந்தரம்தான்மா சரிப்படுவார். அவருக்கே சீட் கொடுத்துடுங்க'' என்றார் பச்சைமால். சிரித்தபடியே ஜெ. சீட் அறிவித்தது பச்சைமாலுக்கு. ''சுரேஷ்ராஜனை என்னால் ஜெயிக்க முடியாதும்மா. அவ்வளவு பணம் என்கிட்ட இல்லை'' என்று தயங்கி நின்றார். உதவிகளுக்கு வழி செய்து கொடுத்த ஜெ. 'ஜெயிச்சால் அமைச்சர் பதவி'' என்கிற உத்தரவாதமும் அப்போதே அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது தம்மத்துக்கோணம் கிராமத்தில் உள்ள தனது ஓட்டு வீட்டில் பாதுகாப்புக்கு நின்றுகொண்டு இருக்கும் போலீஸைக் கூச்சத்தோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார் பச்சைமால்!

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Empty Re: டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Post by உதயசுதா Thu May 26, 2011 12:06 pm

படிக்க படிக்க ஆச்சரியமா இருக்கு. போக போக தான் தெரியும் எதுக்காக அந்தம்மா இப்படியெல்லாம் காய் நகர்த்தி இருக்காங்கன்னு


டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Uடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Dடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Aடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Yடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Aடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Sடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Uடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Dடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Hடீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Empty Re: டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Post by கலைவேந்தன் Thu May 26, 2011 1:12 pm

வியப்பான செய்திகள்.. பகிர்ந்தமைக்கு நன்றி மஞ்சு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Empty Re: டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Post by ரபீக் Thu May 26, 2011 1:13 pm

உதயசுதா wrote:படிக்க படிக்க ஆச்சரியமா இருக்கு. போக போக தான் தெரியும் எதுக்காக அந்தம்மா இப்படியெல்லாம் காய் நகர்த்தி இருக்காங்கன்னு

எல்லாம் காய்கறி வியாபாரம் செய்யத்தான் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Empty Re: டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Post by கே. பாலா Thu May 26, 2011 1:21 pm

அருமையிருக்கு பகிர்விற்கு நன்றிகள் மஞ்சு! நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Empty Re: டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Post by சிவா Thu May 26, 2011 1:35 pm

அமைச்சர்களின் வரலாறு படிக்க சுவாரஸ்யமாகத்தான் உள்ளது. ஆனால் இவர்களெல்லாம் அமைச்சர் ஆனதால் நாளை தமிழ்கத்தின் வரலாறு எப்படி ஆகப்போகிறதோ என்ற கவலை ஏற்பட்டுவிட்டது எனக்கு! டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) 440806


டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Empty Re: டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Post by தாமு Thu May 26, 2011 1:51 pm

இப்படி பட்டவங்க தான் மக்கள் கிஷ்டம் புரியும் என்று நினித்தாங்களோ என்னவோ ஒன்னும் புரியல


பொறுத்து இருந்து பார்ப்போம் ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்) Empty Re: டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உ‌ங்க‌ள் வீட்டில் யார் நிதி அமைச்சர்?
» வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி!
» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
» பொது பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
» முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum