புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
68 Posts - 41%
heezulia
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
1 Post - 1%
prajai
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எலிகளின் தந்திரம்! Poll_c10எலிகளின் தந்திரம்! Poll_m10எலிகளின் தந்திரம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலிகளின் தந்திரம்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 8:06 am

எலிகளின் தந்திரம்! Ratsஒரு காட்டில் ஒரு குள்ள ஓநாய் வாழ்ந்து வந்தது. அது உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அதனுடைய கொடூரத்தினால் மற்ற விலங்குகளை மிகவும் பயமுறுத்தி வைத்திருந்தது. குறிப்பாக சுண்டெலிகளைக் கண்டால் அதற்கு சுத்தமாய்ப் பிடிக்காது. அவற்றை விரட்டி விரட்டித் துன்புறுத்துவதில் அந்த ஓநாய்க்கு அளவிலா திருப்தி.
ஒரு நாள் சுண்டெலிகள் பைகளையும் கயிறுகளையும் எடுத்துக் கொண்டு கூட்டமாக ஒரு மரத்தை நோக்கி வெகு விரைவாய் ஓடியதைக் கண்ட ஓநாய் விஷயம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் அவற்றைப் பின் தொடர்ந்தது. மரத்தை அடைந்த எலிகள், “பையின் வாயில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டுங்கள். கயிற்றின் அடுத்த முனையை மரக்கிளையின் மேல் எறியுங்கள்.
ம்ம்…. சீக்கிரம் ஆகட்டும்” என்று ஒருவரை ஒருவர் விரட்டிக் கொண்டு அவசரகதியில் இயங்கின. ஒன்றும் புரியாத ஓநாய், “உதவாக்கரைகளே, இன்றைக்கு என்ன மடத்தம் செய்யப் போகிறீர்கள்? எதற்கு இந்தப் பைகளும் கயிறுகளும்?” என்றது ஏளனமாய்.
எலிகள் பதிலொன்றும் சொல்லாமல் தம் வேலையில் கவனமாக இருந்ததைக் கண்ட ஓநாய், தன் கூர்மையான பற்களைக் கடித்து, “இப்போது பதில் சொல்லாவிட்டால், நீங்கள் அத்தனை பேரும் ரணப்பட்டுப் போய்விடுவீர்கள்” என்று பயமுறுத்தியது. பயந்து நடுங்கிய எலிகள், “பெரிய பெரிய ஆலங்கட்டிகளோடு புயல் வரப் போகிறதல்லவா? அதிலிருந்து தப்பிப்பதற்காக நாங்கள் இந்தப் பைகளில் புகுந்து கொண்டு கயிற்றின் மறுமுனையை இழுத்து மரத்தின் கிளைகளில் மறைந்து கொள்ளப்போகிறோம்” என்று விளக்கின.
“என்ன? ஆலங்கட்டி மழை வரப்போகிறதா?” என்று அதிர்ந்த ஓநாய், “நானும் மரக்கிளையில் ஒளிந்து கொள்ள வேண்டும். எனக்கும் ஒரு பையும் கயிறும் கொண்டு வாருங்கள்” என்று கட்டளை இட்டது.”உன் உருவத்திற்கேற்ற பை எங்களிடம் இல்லை” என்று பரிதாபமாகச் சொல்லின சுண்டெலிகள் “சரி, நான் போய் என் உருவத்திற் கேற்ற பையையும் கயிறையும் எடுத்து வருகிறேன். அதுவரை எனக்காகக் காத்திருங்கள்.”
என்று கூறிவிட்டு வேகமாகக் கிளம்பியது ஓநாய் “ஏற்கெனெவே புயல் சின்னம் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னும் தாமதித்தால் நாங்கள் ஆலங்கட்டி மழையில் மாட்டி உயிரிழப்போம். அதனால் நாங்கள் இப்போதே பைகளில் ஏறிக் கொண்டு மரக் கிளைகளில் ஒளிந்து கொள்கிறோம். நீ வந்ததும் கயிறை நீயே இழுத்துக் கொண்டு மரக்கிளைக்கு வந்துவிடு” என்றன எலிகள்.
அதைக் கேட்டுக் கோபம் கொண்ட ஓநாய், “என்ன விளையாடுகிறீர்களா? என் எடைக்கு நான் மட்டும் எப்படி கயிறை இழுத்து என்னை மேலே தூக்க முடியும்? நீங்களெல்லோரும் கீழிருந்து கயிறை இழுத்து என்னை மேலேற்றிவிட்டுப் பின்பு மேலேறி வாருங்கள். இல்லையேல், உங்களனைவரையும் ஒழித்துக் கட்டிவிடுவேன்” என்று மிரட்டியது. அரண்டு போனதாக நடித்த எலிகள், ஒநாய் பை எடுத்து வர அகன்றதும், விழுந்து விழுந்து சிரித்தன. ஓநாய் தங்களின் தந்திரம் புரியாமல் தங்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதை எண்ணி கைகொட்டி நகைத்தன.
தன் உருவத்திற்கேற்ற பெரிய பையையும் கயிறையும் எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் திரும்பிய ஓநாய், காலத்தைக் கடத்தாமல், பையினுள் ஏறி அமர்ந்து கொண்டது. சிறிய கல்லொன்றை எடுத்து ஓநாய் அமர்ந்திருந்த பையின் மேல் எறிந்தது ஒரு சுண்டெலி. “ஐயோ… வலிக்கிறதே! ஆலங்கட்டி மழை ஆரம்பமாகிவிட்டது போலும். ஆகட்டும், கயிறை இழுத்து என்னை உடனே மேலே ஏற்றுங்கள்” என்று எலிகளைப் பார்த்துக் கட்டளை இட்டது ஓநாய். எலிகளும் அவ்வாறே செய்தன.
மரத்தின் கிளையிலிருந்து தொங்கிய பையில் ஓநாய் ஒளிந்திருக்க, கீழிருந்து பெரிய பெரிய கற்களை எடுத்து பையின் மேல் எறிந்தன எலிகள் “ஆ… ஐயோ… என் தலை, என் கை… என் வயிறு….வலிக்கிறதே! இப்போது என் முதுகில் விழுகிறதே! இந்த ஆலங்கட்டி மழை இவ்வளவு பொல்லாததாய் இருக்கிறதே!” என்று கதறியது ஓநாய்.
தங்கள் ஆசை தீர கல்லெறிந்த பின், மெதுவாக பையை கீழே இறக்கின சுண்டெலிகள். பையிலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் இறங்கிய ஓநாய், தரையில் மழை பெய்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததைக் கண்டு திகைத்தது. இறைந்து கிடந்த கற்களும், எலிகளின் முகத்திலிருந்த எள்ளலும் ஓநாய்க்கு நடந்ததை உணர்த்த, அவேசமடைந்த ஓநாய், “”உங்களை என்ன செய்கிறேன், பாருங்கள்” என்று அவற்றின் மேல் பாய முற்பட்டது.
ஏற்கெனவே ரணமாக இருந்த உடல் அதன் ஆத்திரத்திற்கு ஒத்துழைக்காமல் போக ‘சொத்’ என கீழே விழுந்தது ஓநாய். ஓநாயின் மேல் ஏறிக் குதித்த எலிகள், “இன்றைக்கு உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நடக்கும் போது பார்த்துக் கொள்வோம்” என்று கூறிவிட்டு வளைகளில் சென்று மறைந்தன.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 20, 2011 8:33 am

யானைக்கும் அடி சறுக்கும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 20, 2011 10:52 am

சிங்கம் சிதைஞ்சு போனா சில்வண்டுகள் கைகொட்டுமாம்... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 7:29 pm

அருமையான கதை......

அன்பு நன்றிகள் தாமு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எலிகளின் தந்திரம்! 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Apr 25, 2011 9:24 pm

மகிழ்ச்சி



எலிகளின் தந்திரம்! Pஎலிகளின் தந்திரம்! Oஎலிகளின் தந்திரம்! Sஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Tஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Vஎலிகளின் தந்திரம்! Eஎலிகளின் தந்திரம்! Emptyஎலிகளின் தந்திரம்! Kஎலிகளின் தந்திரம்! Aஎலிகளின் தந்திரம்! Rஎலிகளின் தந்திரம்! Tஎலிகளின் தந்திரம்! Hஎலிகளின் தந்திரம்! Iஎலிகளின் தந்திரம்! Cஎலிகளின் தந்திரம்! K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக