Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!
+9
krishnaamma
உமா
SK
மகா பிரபு
ந.கார்த்தி
தாமு
positivekarthick
கலைவேந்தன்
realvampire
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!
திகார்
சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி,
தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம்
அளிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன்
நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள். பிளாக்கில் நுழைந்த உடனே
சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள்.
அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில்
இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயிலிலோ,
விமானத்திலோ, இல்லை சிறை என்றாலும் அவர்களுக்கு முதல் வகுப்புதான். முன்னர்
ஒரு முறை சிக்கன நடவடிக்கை என்ற நாடகத்திற்காக அமைச்சர்களெல்லாம் விமானப்
பயணத்தில் முதல் வகுப்பை தவிர்ப்பார்கள் என்று அறிவித்தது போல சிறையிலும்
சிக்கன நடவடிக்கைக்காக முதல் வகுப்பு இல்லை என்று அறிவித்தால் வரும்
அரசியல்வாதி, அதிகாரி, முதலாளிகளுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று
புரியவைக்க முடியும்.
கனிமொழி கைதை வைத்து தி.மு.கவை எதிர்க்கும் பலரும் மிகப்பெரும் சாதனையை
அடைந்து விட்டது போல துள்ளிக் குதிக்கிறார்கள். ஈழ ஆதரவாளர்கள்
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக கருணாநிதியை
பழிவாங்கிவிட்டதாக திருப்தி அடைகிறார்கள். இந்த சந்தோஷக்காரர்களுக்கு
அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பதோடு, அவர்கள் கொண்டிருக்கும்
ஈழம், தி.மு.க எதிர்ப்பு குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களை அணிதிரட்டி தீர்க்க வேண்டிய பொறுமை
வழிமுறைகளெல்லாம் இவர்களுக்கில்லை. ஏதாவது குறுக்கு வழியில் நடக்கும்
நிகழ்வுகளை வைத்தே தீர்த்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரிக்கப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டு விசராணைக் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே
ராசா, அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் மத்திய
அரசின் திட்டப்படி நடந்தவையல்ல. சில தற்செயலான நிகழ்வுகள் சேர்ந்து இந்த
ஊழல் விவகாரத்தை இப்போதுள்ளபடி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதை ஏன்
குறிப்பிடுகிறோம் என்றால் இந்த விவாகாரத்தை தோண்ட தோண்ட அது ஊழலின் ஊற்று
மூலமான முதலாளிகளை நோக்கி பாயும். அதனால் இந்த விவகாரத்தில் இத்தோடு
விட்டுவிட்டு எப்படி கழண்டு கொள்ளலாம் என்பதே காங்கிரசு கும்பலின் கணக்கு.
இந்த பிரச்சினை தி.மு.கவிற்கும் தெரியும். மற்றவர்களெல்லாம் இதை வைத்து
காங்கிரசு தி.மு.க பிளவு என்று சித்தரிக்க முயலும்போதெல்லாம் சில
அப்பாவிகள் அப்படி நடக்குமென்று மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள். ஆனால்
தி.மு.கவோ என்ன நடந்தாலும் காங்கிரசை விட்டுப் போகமாட்டோம் என்று
பெவிக்கால் போல ஒட்டிக்கொண்டிருப்பதை இவர்கள் அறியவில்லை.
மன்மோகன் அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவு விருந்துக்கு கூட டி.ஆர் பாலு
மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த விருந்தில் ஊழலை ஒழிக்கப்
போவதாக மன்மோகனும், சோனியாவும் பேசியது நல்ல தமாஷ். ஆதர்ஷ் ஊழல்,
காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காங்கிரசு கூட்டணி அரசின்
ஊழல்களெல்லாம் வரிசையாக அணிவகுக்க அந்த அணிவகுப்பின் மரியாதை
ஏற்பவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம்.
எனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்குமேல் சூடு பிடிக்காமல் பார்த்துக்
கொள்வது எப்படி என்பதே அவர்களது பிரச்சினை. அப்படித் தடுக்க முடியாவிட்டால்
பல தலைகளோடு, பல அடிப்படை நிலைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே இந்த
விளையாட்டை பாதுகாப்பாக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை நாம்
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனாலும் ராஜாத்தி அம்மாள் தனது மகள் சிறையில் சென்றது குறித்து கதறி
அழுதாராம். கருணாநிதியும் தள்ளாத வயதில் டெல்லி சென்று சந்திக்கிறாராம்.
கனிமொழி கைதுக்காக டெல்லி சென்றதைக் கூட அவர் கூடவே ராசா, சரத்குமாரையும்
பார்ப்பதற்காக செல்வதாக குறிப்பிட்டார். ராசா சிறைக்கு போய் இத்தனை
நாளாகிறது. அப்போது தோன்றாத பாசம் இப்போது தோன்றிருப்பதாக கூறுவது நல்ல
காமெடி.
கருணாநிதிக்கு இரண்டு குடும்பங்கள், எண்ணிறந்த வாரிசுகள், தி.மு.கவின்
படுதோல்வி, பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் இன்னபிற பிரச்சனைகளோடு
கனிமொழி கைதும் சேர்ந்துவிட்டது. தயாளு அம்மாளின் வாரிசுகள் சம்பாதித்ததோடு
பிடிபடவில்லை என்பதும் ராசாத்தி அம்மாளின் வாரிசு மட்டும் பிடிபட்டது
என்றும் குடும்ப பூசல்கள். இதையெல்லாம் பார்த்தால் தமிழக மக்கள்
அளித்திருக்கும் ஓய்வு என்பது கருணாநிதிக்கு அமைதியாக இருக்காது என்று
தெரிகிறது.
இதில் கனிமொழி இரண்டு கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டி.வியில்
வலியுறுத்தி சேர்த்தது நான்தான் என்று வேறு உடன்பிறப்புக்கு கடிதம்
எழுதுகிறார். ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவன் என்று நிரூபணம் ஆகிய
நிலையிலும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் எளிமை, அர்ப்பணிப்பு, தியாகம்
நிறைந்த ஒழுக்கசீலர்களாக வெட்கம் கெட்டு சித்தரிப்பதற்கு அவர் கூச்சமே
படவில்லை. தி.மு.கவின் இன்றைய பிழைப்புவாதத்தில் இத்தகைய அற உணர்ச்சிகளை
எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போலத்தான்.
கருணாநிதியும், அவரது கட்சியும் கார்ப்பரேட் நலன் விரும்பும் சக்திகள்
என்றாகிவிட்ட நிலையிலும் வட இந்திய ஊடகங்கள் தமது தமிழின விரோத வெறுப்பை
கைவிடவில்லை. கனிமொழியின் கைதை காட்டிய, விவாதித்த வட இந்திய ஊடகங்கள்
எல்லாம் அதை ஜன்மவிரோதத்தோடு சித்தரித்தன. தற்போது இலங்கையின் கஸ்டடியில்
இருக்கும் கே.பியை வைத்து தி.மு.வின் பிராமண எதிர்ப்பு கொள்கையே ராஜிவ்
காந்தியின் மரணத்திற்கு காரணம் என்ற காமடியையெல்லாம் ஒளிபரப்புகின்றன.
கருணாநிதியே தான் பழை ஆள் இல்லை என்று கதறி அழுதாலும் இவர்கள் மன்னிப்பதாக
இல்லை. திராவிட இயக்கத்தின் மீதான வன்மத்தை அவர்கள் எப்போதும்
கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி,
தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம்
அளிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன்
நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள். பிளாக்கில் நுழைந்த உடனே
சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள்.
அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில்
இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயிலிலோ,
விமானத்திலோ, இல்லை சிறை என்றாலும் அவர்களுக்கு முதல் வகுப்புதான். முன்னர்
ஒரு முறை சிக்கன நடவடிக்கை என்ற நாடகத்திற்காக அமைச்சர்களெல்லாம் விமானப்
பயணத்தில் முதல் வகுப்பை தவிர்ப்பார்கள் என்று அறிவித்தது போல சிறையிலும்
சிக்கன நடவடிக்கைக்காக முதல் வகுப்பு இல்லை என்று அறிவித்தால் வரும்
அரசியல்வாதி, அதிகாரி, முதலாளிகளுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று
புரியவைக்க முடியும்.
கனிமொழி கைதை வைத்து தி.மு.கவை எதிர்க்கும் பலரும் மிகப்பெரும் சாதனையை
அடைந்து விட்டது போல துள்ளிக் குதிக்கிறார்கள். ஈழ ஆதரவாளர்கள்
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக கருணாநிதியை
பழிவாங்கிவிட்டதாக திருப்தி அடைகிறார்கள். இந்த சந்தோஷக்காரர்களுக்கு
அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பதோடு, அவர்கள் கொண்டிருக்கும்
ஈழம், தி.மு.க எதிர்ப்பு குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களை அணிதிரட்டி தீர்க்க வேண்டிய பொறுமை
வழிமுறைகளெல்லாம் இவர்களுக்கில்லை. ஏதாவது குறுக்கு வழியில் நடக்கும்
நிகழ்வுகளை வைத்தே தீர்த்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரிக்கப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டு விசராணைக் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே
ராசா, அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் மத்திய
அரசின் திட்டப்படி நடந்தவையல்ல. சில தற்செயலான நிகழ்வுகள் சேர்ந்து இந்த
ஊழல் விவகாரத்தை இப்போதுள்ளபடி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதை ஏன்
குறிப்பிடுகிறோம் என்றால் இந்த விவாகாரத்தை தோண்ட தோண்ட அது ஊழலின் ஊற்று
மூலமான முதலாளிகளை நோக்கி பாயும். அதனால் இந்த விவகாரத்தில் இத்தோடு
விட்டுவிட்டு எப்படி கழண்டு கொள்ளலாம் என்பதே காங்கிரசு கும்பலின் கணக்கு.
இந்த பிரச்சினை தி.மு.கவிற்கும் தெரியும். மற்றவர்களெல்லாம் இதை வைத்து
காங்கிரசு தி.மு.க பிளவு என்று சித்தரிக்க முயலும்போதெல்லாம் சில
அப்பாவிகள் அப்படி நடக்குமென்று மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள். ஆனால்
தி.மு.கவோ என்ன நடந்தாலும் காங்கிரசை விட்டுப் போகமாட்டோம் என்று
பெவிக்கால் போல ஒட்டிக்கொண்டிருப்பதை இவர்கள் அறியவில்லை.
மன்மோகன் அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவு விருந்துக்கு கூட டி.ஆர் பாலு
மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த விருந்தில் ஊழலை ஒழிக்கப்
போவதாக மன்மோகனும், சோனியாவும் பேசியது நல்ல தமாஷ். ஆதர்ஷ் ஊழல்,
காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காங்கிரசு கூட்டணி அரசின்
ஊழல்களெல்லாம் வரிசையாக அணிவகுக்க அந்த அணிவகுப்பின் மரியாதை
ஏற்பவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம்.
எனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்குமேல் சூடு பிடிக்காமல் பார்த்துக்
கொள்வது எப்படி என்பதே அவர்களது பிரச்சினை. அப்படித் தடுக்க முடியாவிட்டால்
பல தலைகளோடு, பல அடிப்படை நிலைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே இந்த
விளையாட்டை பாதுகாப்பாக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை நாம்
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனாலும் ராஜாத்தி அம்மாள் தனது மகள் சிறையில் சென்றது குறித்து கதறி
அழுதாராம். கருணாநிதியும் தள்ளாத வயதில் டெல்லி சென்று சந்திக்கிறாராம்.
கனிமொழி கைதுக்காக டெல்லி சென்றதைக் கூட அவர் கூடவே ராசா, சரத்குமாரையும்
பார்ப்பதற்காக செல்வதாக குறிப்பிட்டார். ராசா சிறைக்கு போய் இத்தனை
நாளாகிறது. அப்போது தோன்றாத பாசம் இப்போது தோன்றிருப்பதாக கூறுவது நல்ல
காமெடி.
கருணாநிதிக்கு இரண்டு குடும்பங்கள், எண்ணிறந்த வாரிசுகள், தி.மு.கவின்
படுதோல்வி, பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் இன்னபிற பிரச்சனைகளோடு
கனிமொழி கைதும் சேர்ந்துவிட்டது. தயாளு அம்மாளின் வாரிசுகள் சம்பாதித்ததோடு
பிடிபடவில்லை என்பதும் ராசாத்தி அம்மாளின் வாரிசு மட்டும் பிடிபட்டது
என்றும் குடும்ப பூசல்கள். இதையெல்லாம் பார்த்தால் தமிழக மக்கள்
அளித்திருக்கும் ஓய்வு என்பது கருணாநிதிக்கு அமைதியாக இருக்காது என்று
தெரிகிறது.
இதில் கனிமொழி இரண்டு கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டி.வியில்
வலியுறுத்தி சேர்த்தது நான்தான் என்று வேறு உடன்பிறப்புக்கு கடிதம்
எழுதுகிறார். ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவன் என்று நிரூபணம் ஆகிய
நிலையிலும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் எளிமை, அர்ப்பணிப்பு, தியாகம்
நிறைந்த ஒழுக்கசீலர்களாக வெட்கம் கெட்டு சித்தரிப்பதற்கு அவர் கூச்சமே
படவில்லை. தி.மு.கவின் இன்றைய பிழைப்புவாதத்தில் இத்தகைய அற உணர்ச்சிகளை
எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போலத்தான்.
கருணாநிதியும், அவரது கட்சியும் கார்ப்பரேட் நலன் விரும்பும் சக்திகள்
என்றாகிவிட்ட நிலையிலும் வட இந்திய ஊடகங்கள் தமது தமிழின விரோத வெறுப்பை
கைவிடவில்லை. கனிமொழியின் கைதை காட்டிய, விவாதித்த வட இந்திய ஊடகங்கள்
எல்லாம் அதை ஜன்மவிரோதத்தோடு சித்தரித்தன. தற்போது இலங்கையின் கஸ்டடியில்
இருக்கும் கே.பியை வைத்து தி.மு.வின் பிராமண எதிர்ப்பு கொள்கையே ராஜிவ்
காந்தியின் மரணத்திற்கு காரணம் என்ற காமடியையெல்லாம் ஒளிபரப்புகின்றன.
கருணாநிதியே தான் பழை ஆள் இல்லை என்று கதறி அழுதாலும் இவர்கள் மன்னிப்பதாக
இல்லை. திராவிட இயக்கத்தின் மீதான வன்மத்தை அவர்கள் எப்போதும்
கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Re: திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சி களும், துயரங்களும்’!!
இந்த மாதிரி செய்திகளை வெளியிட்டே அவளை பாப்புலர் ஆக்குறாங்க...பெரிய சுதந்திர போராட்ட தியாகி அவ,,, ச்சே....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» துயரங்களும் தூண்களாகுமே !
» எனக்கும் சோகங்களும் துயரங்களும் இருக்கின்றன!
» தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!
» செர்பியாவில் கனிமொழி
» துயரங்களும் தூண்களாகுமே !
» எனக்கும் சோகங்களும் துயரங்களும் இருக்கின்றன!
» தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!
» செர்பியாவில் கனிமொழி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|