புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
65 Posts - 63%
heezulia
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
1 Post - 1%
viyasan
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
257 Posts - 44%
heezulia
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
17 Posts - 3%
prajai
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 24, 2011 5:37 pm



காதெல்லாம் இனிக்கும் உங்கள் கரவொலிக்கு மகிழ்ச்சி
தன்னை நோக்கி வீசப்படும் வெள்ளிக் காசுகளைவிட
கரவோசையைத்தான் ஒரு கவிஞன் நேசிப்பான்
கரசேவை செய்ய வந்தவர்களே......., மகிழ்ச்சி!
கல் இல்லாத கரசேவை கவியரங்கில் மட்டும்தான்

நீங்கள், இவர்கள், நான், நாம் எல்லாம் மகிழப்பிறந்தவர்கள்
நிலவின் ஒளியை குடிக்கப் பிறந்தவர்கள்
நீலவான் வெளியை இழுக்கப் பிறந்தவர்கள்
பூமியை வியந்து புகழப் பிறந்தவர்கள்
மரிக்கும் வரைக்கும் மகிழப் பிறந்தவர்கள் - காரணம்
ஓர் ஆணின், பெண்ணின் மகிழ்ச்சியில் பிறந்தவர்கள்

கனி உண்ண வந்த பறவைகள் நாம் - வெறும்
மரம்கொத்தி கொத்தியா மரித்துப்போவது
இந்தப் பூமியென்ன மண்ணின் திரடசியா
மகிழ்ச்சியின் திரட்சி
மகிழ்ச்சி இல்லையேல் அலைகள் கொண்டு
ஜலதரங்கம் பாடுமா கடல்
இடிகள் கொண்டு தம்பட்டம் தட்டுமா வானம்
வீட்டுக்குத் திரும்பிவருமா வெளியூர் போன காற்று

உதிர்ந்து உதிர்ந்து இலைகள் உதிர்ந்து
நலிந்து நலிந்து வெயிலில் நலிந்து
மெலிந்து மெலிந்து கிளைகள் மெலிந்து
அளந்து அளந்து கொழுந்து எழுந்து
வளர்ந்து வளர்ந்து அரும்பு வளர்ந்து
மலர்ந்து மலர்ந்து மடல்கள் மலர்ந்து
சித்திரை மாதம் தாவர வர்க்கம்
முத்திரை காட்டி முகிழ்ப்பது எல்லாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஐந்தே புலன்கள் ஆயினும் என்ன
ஒவ்வொர் புலனின் வாசல் வழியே
ஆயிரம் லட்சம் கோடி மகிழ்ச்சி
பூமியைச் சுற்றும் கடலைப் போல
சுற்றிச் சுற்றிச் சுற்றி மகிழ்ச்சி
அதை அறிந்துகொண்டவன் ஞானியாகிறான்
அனுபவிப்பவன் கலைஞன் ஆகின்றான்

கண்ணுக்கு மகிழ்ச்சி எது?
விடிகாலைச் சோலை..? இல்லை
வெற்றிலை போட்ட வானம்..? இல்லை
தூங்கும் குழந்தையின் தூங்காத புன்னகை..? 'ஊகும்";
கண்ணுக்கு மகிழ்ச்சி.. .. ஆனந்தக் கண்ணீர்

காதுக்கு மகிழ்ச்சி எது?
மழைபாடும் சங்கீதம்..? இல்லை
மைத்துனியின் கொலுசோசை..? இல்லை
காதுக்கு மகிழ்ச்சி.. .. வேலைக்குச் சென்று
வீடுவந்து அமர்கையில் மடிமீதேறி
குழந்தைபேசும் மழலைத் தமிழ்

வாய்க்கு மகிழ்ச்சி எது?
புதுமனைவியின் முதல் சமையல்..? இல்லை
முதல் காப்பியின் இளம் கசப்பு..? இல்லை
முரட்டு இருட்டில் திருட்டு முத்தம்..? இல்லை
வாய்க்கு மகிழ்ச்சி.. ..தப்பின்றி உச்சரிக்கும் தாய்மொழி

உடலுக்கு மகிழ்ச்சி தகிக்கும் காய்ச்சலில் தாயின் ஸ்பரிசம்
நாசிக்கு மகிழ்ச்சி நேசிக்கும் பெண்ணின் குழல்கொண்ட பூக்கள்
மண்ணுக்கு மகிழ்ச்சி மழையூட்டும் வாசம்
பெண்ணுக்கு மகிழ்ச்சி மதிக்கின்ற நேசம்
வார்த்தைக்கு மகிழ்ச்சி காலத்தால் உதிராத கவிதைக்குள் நிற்பது
வாஜ்பாய்க்கு மகிழ்ச்சி.. ..?
சாதுக்கள் எப்போதும் சாதுவாய் இருப்பது..!

மகிழ்ச்சி என்பது வேறொன்றும் இல்லை.. மனசின் கொள்ளளவு..!
மழைகொண்டு வருகிறது சமதர்ம மேகம்
குவளையில் பிடித்தால் ஒருவேளை மகிழ்ச்சி
குடத்தில் பிடித்தால் ஒருநாள் மகிழ்ச்சி
குளத்தில் பிடித்தால்.. வருடமெல்லாம் மகிழ்ச்சி
எது உன் மனசு..?
குவளையா? குடமா? குளமா? இல்லை.. குழப்பமா..?

குழந்தைபோல் மனம் இருந்தால் குழப்பமே இல்லை
உன்னை சண்டையிட்டு, மண்டியிட்டு கேட்கிறேன் காலமே...
உன் எலும்புகளுக்கும், திசுக்களுக்கும் வயசாகட்டும்
மனசுமட்டும் எப்போதும் குழந்தையாய் இருக்கட்டும்..!

குழந்தையாய் இருப்பது எத்தனை வசதி
கூப்பிட்ட குரலுக்கு நிலா வரலாம்
பல் இல்லாத வாயில் நட்சத்திரம் மெல்லலாம்
தொட்டிலில் கிடந்தாலும் தொட்டியில் கிடந்தாலும்
அழுகை கேட்டதும் ஆள் ஓடி வரலாம்
தனக்கு வந்த காதல் கடிதங்களில் கூட
தப்புக்களை மன்னிக்காத தமிழாசிரியர்
மன்னித்து மகிழ்வது மழலையிடம் மட்டும்தான்..

ஒரு சந்தேகம் எனக்கு.. ..!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றார் - ஒன்றா..?
இன்று உள்ள சூழலில் ஒப்பிடுதல் நன்றா..?
குழந்தைகள் மணல் வீடு கட்டியதுண்டே தவிர
சர்ச்சைக்குரிய இடத்தில் மதவீடு கட்டியதுண்டா?
கருத்துச் சுளை போன்ற குழந்தையொன்றை நிறுத்திக் கேட்டேன்
உன் மதம் என்ன குழந்தாய்..? தெரியாது
உன் ஜாதி ஏதும் சொல்லாய் பிள்ளாய்? தெரியலையே..
தப்புத்தப்பாய் பேசும்போது சரியாய் பேசிய மனிதன்
சரியாய் பேச தெரிந்த பிறகு தப்புத்தப்பாய் பேசுகிறான்
பிறை நிலாவுக்கு கறையில்லை எல்லாம் வளர்ந்த பிறகுதான்
குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை எல்லாம் நிமிர்ந்த பிறகுதான்

அறிவூட்டும் ஆசான்களே.. ..
குழந்தைகளை குழந்தைகளாய் இருக்கவிடுங்கள்
வந்தவன் போனவன் வைக்கோல் திணிக்க
பிள்ளையின் மூளையென்ன.. முச்சந்தித் தொட்டியா..?
பட்டாம்பூச்சி பிடிக்கவிடாத பாடத்திட்டம் எதற்கு?
பணக்கார மணமகளாய் இருக்கலாம்
முத்தமிட இடமில்லாமல் மொத்த நகை எதற்கு?
கனவுகாணவிடாத கணிதம்
இரசனை குறைக்கம் இரசாயனம்
சிறகு விற்ற காசில் சிலுவைகள்.. ..ஐயகோ..
வண்டலூரில் இருந்தாலும் தப்பித்திருக்கலாம்
வண்டலூரைவிட வகுப்பறை கொடியது

அதோ..
பெற்றுப்போட்ட பெருமாக்களே..!
10 வயதுவரை குழந்தைகளுக்கு நீங்கள் வேலைக்காரர்கள்
15 வயதுவரை உங்களுக்கு வேலைக்காரர்கள்
16 வயதுமுதல் பாகம் பிரிக்கும்வரை தோழர்கள்
பிறகு தூரத்து உறவினர்கள்

இளைஞர்களே..! உங்களை நம்புங்கள்
உங்கள் கால்கள் சிறகுகள், கண்கள் சூரிய சந்திரர்கள்
அதிஸ்டத்தை நம்பாதீர்கள் அது சீட்டில் கட்டிய பணம்
வந்தாலும் வரலாம்.. வராமலும் போகலாம்..
இங்கேதான் வாழ்க்கை, தற்கொலை
இரண்டுமே கடினம்.. கொலை சுலபம்
போட்டி உலகம் இது போராடு
நீயென்ன அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயா?
நாளும் நாளும் ஏன் நம்பிக்கை குறைகிறாய்
நீ முலிகையாய் இரு....
எங்கிருந்தோ காதல் வரும் உள்ளிருந்து குயில் கூவும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் விளங்கும் இளமையில்...

ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம்
ஆண்! அரசனாய் வந்து அடிமையாகிறவன்
பெண்! அடிமையாய் வந்து அரசியாகிறவள்
ஆண் பெண்ணின் பூரணம்..
பெண் ஆணின் பூரணம் - காரணம்
குறையும் குறையும் சேரணும்

திருமணம் என்பது இந்தியா மாதிரி
வேற்றுமையில் ஒற்றுமை முரண்பாடுகளில் உடன்பாடு
இருளை ஒளியை சேர்க்க முடியாத இயற்கை
கிழக்கை மேற்கை சேர்க்க முடியாத இயற்கை
சொர்க்கம் நரகம் சேர்க்க முடியாத இயற்கை
ஆணையும் பெண்ணையும் சேர்த்தே விட்டது
ஆணும் பெண்ணும் சேருவது இயற்கை
அழுகை, கண்ணீர், வலிகள் செயற்கை

இளமையில் அன்புசெய் அது முதுமைக்கு மூலதனம்
இளமையில் உழைப்பு முதுமையில் அறுவடை
முதியோர் மீது பாசம் எனக்கு...
அந்த வாழ்வின் வஞ்சிகளைக்
கண்டால் வணங்கத்தோன்றும் எனக்கு
ஒவ்வொரு பழமும் ஞானப்பழம்
நரை! மனிதக் குதிரை மூச்சிரைக்க மூச்சிரைக்க ஓடிவந்த நுரை
சுருக்கங்கள்! காலக் கவிஞன் எழுதி முடித்த
ஞானக் கவிதையின் கிறுக்கல்கள்
தலையாட்டம்! வரமாட்டேன்.. வரமாட்டேன்..
காலனுக்கு எதிரான அகிம்சை ஆர்ப்பாட்டம்

இளைஞர்களே..!
முதியவர்களை மட்டும் அழவிடாதீர்கள்
முதியவர்கள் அழுகின்ற தேசத்தில் மேகங்கள் அழுவதில்லை
ஒரு முதியவர் சொல்லும் மொழி வைரத்தைவிட மேலானது
முதியவர் சிந்தும் கண்ணீர் சூரியனைவிட சூடானது
வாழ்க்கை ஒரு நெல்லிக்காய்.. மேல்தோல் கசப்பு
ஆழம் ஆழம் போனால் உள்ளே உறங்கும் இத்துணுண்டு இனிப்பு
இனிப்பு வேண்டுமா..? கசப்பை விழுங்கு..!

எங்கள் பிராத்தனை எல்லாம் இதுதான்..
மண்ணகம் எல்லாம் மகிழ்ச்சியில் நிற்க
ஓரறி உயிரோ, ஆறறி உயிரோ
எல்லா உயிர்களும் இன்பம் எய்துக
சமுத்திர மேகம் மேலே எழுந்து
சமத்துவ மழையை தரையில் எறிக
நிலமோ கடலோ சிந்திவிடாமல்
உலக உருண்டை ஒழுங்காய்ச் சுற்றுக
இரங்கல் தீர்மானம் ஏதுமின்றி
நாடாளுமன்றம் நன்கு கூடுக
பள்ளிவாசலின் சாளரத்திலும்
பழைய கோவிலின் கோபுரத்திலும்
புறாக்கள் கட்டிய கூடுகள் வாழ்க
எங்கள் கவிதை கேட்போர் யாவரும்
இரயிலோ, மெயிலோ எதில் சென்றாலும்
வீடுதிரும்பி வீடுபேறடைக....... மகிழ்ச்சி....!!!!

கவிப்பேரரசு வைரமுத்து



மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 6:14 pm

சூப்பருங்க நல்ல கவிதை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக