புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி எல்லாமே நீயல்லவோ
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!
காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.
பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!
'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!
என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!
பிணம் தின்னிக் கழுகுகள்!
புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?
மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!
ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!
லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.
இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!
மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!
அறை திறந்தே இருந்தது!
உள்ளே அவளும் இருந்தாள்!
அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!
காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.
எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!
அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!
அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.
'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.
கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!
கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!
இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!
சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!
ஆனால், இன்று என்ன ஆயிற்று?
பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!
செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.
"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.
படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?
ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!
அல்லது...
"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"
அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...
"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.
வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"
"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."
"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!
"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."
"ஐயோ!"
சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.
வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?
"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."
"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!
காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.
பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!
'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!
என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!
பிணம் தின்னிக் கழுகுகள்!
புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?
மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!
ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!
லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.
இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!
மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!
அறை திறந்தே இருந்தது!
உள்ளே அவளும் இருந்தாள்!
அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!
காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.
எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!
அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!
அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.
'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.
கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!
கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!
இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!
சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!
ஆனால், இன்று என்ன ஆயிற்று?
பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!
செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.
"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.
படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?
ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!
அல்லது...
"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"
அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...
"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.
வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"
"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."
"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!
"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."
"ஐயோ!"
சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.
வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?
"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."
"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அவன் கொதி நிலைக்குப் போய்விட்டான் போலும்! "ஏய்! ஓர் அடி முன்னே எடுத்து வைத்தாலும், அப்புறம் உன்னை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..."
தீபன் ஆத்திரத்துடன் கத்திக் கொண்டிருக்கும் போதே, "என்ன இங்கே சத்தம்?" என்ற மீனாட்சியின் குரல் கேட்க, அதைத் தொடர்ந்து, அவளும் வெளியே வந்தாள்!
சந்தனாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, "வாம்மா! இன்று சீக்கிரமே வந்துவிட்டாய் போல!" என்று கனிவோடு வரவேற்றாள்.
பதிலுக்கு முறுவலித்து, "இன்னும் ஐந்து நிமிஷம் முன்னாலேயே உள்ளே வந்திருப்பேன், ஆன்ட்டி! ஆனால், உங்கள் பிள்ளைக்குத்தான் ஏதோ பிரச்சினை!" என்று கிண்டலாக, மீனாட்சியுடைய மகனைக் கண்ணால் காட்டினாள் சின்னவள்!
ஆத்திரத்துடன் அன்னையை நெருங்கினான் தீபன். "அம்மா, இவளை நம்பாதீர்கள். பாருங்கள், இங்கே ஏதாவது செய்தி கிடைக்கும் என்று, உங்களோடு ஒட்டிப் பழகிக் கொண்டு, உங்கள் வீட்டிலேயே, குடி வந்து விட்டாள், இவள்! என்ன கதை சொன்னாளோ, நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்! முதலில் இவளை வெளியேற்றுங்கள்!"
"சேச்சே, நிறுத்துப்பா! என்ன பேச்சு இது, தீபன்? நீ சொல்லுகிற மாதிரி எதுவும் இல்லை! எனக்குச் சந்தனாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்..." என்ற தாயைக் குறுக்கிட்டு, "என்னம்மா தெரியும்? இவளை முதல் தடவையாக இப்போதுதான் பார்க்கிறேன்! அதற்குள், இவளுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது. நான் யார் என்று தெரிந்திருக்கிறது! எப்படி முடியும்? என் வார்த்தைக்கு மாறாக, நீங்களாக என்னைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டீர்கள்! என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகே இங்கே வந்திருக்கிறாள் என்று, இதிலிருந்தே தெரிந்து விடவில்லையா?" என்று வாதாடினான்.
மீனாட்சியிடம் பேசிய பிறகு, சிரித்த முகமாக வீட்டு வாயிலின் படிகளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்த சந்தனா, வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.
தன்னைப் பற்றிப் பேசக்கூடாது என்று, இவன் தான் தாயிடம் சொல்லி வைத்திருக்கிறானா?
ஒரே மகன் என்றாலும், அந்த மகன், அவனுடைய குடும்பத்தார் ஒருவரின் புகைப்படத்தைக் கூட, அந்த வீட்டில் பார்த்திராதது நினைவு வந்தது, இன்னமும் அவளது ஆச்சரியத்தை அதிகரித்தது!
இந்தத் தீபன் தான் தடுத்திருக்க வேண்டும்!
இவனைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்று ரகசியம் காக்கும் அளவுக்கு, இவன் அப்படியென்ன கொம்பன்? அல்லது குற்றவாளியா?
அதனால் தான், பர்சில் இருந்த படங்களை, மீனாட்சி ஆன்ட்டி, அவ்வளவு முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும்.
ஆனால் எதற்காக?
"சும்மா, அதையே சொல்லிக் கொண்டிராதே, தீபன். நான் தான் ஒரு தரம், பேச்சு வாக்கில், என் மகன் என்று, உன் பெயரைச் சந்தனாவிடம் சொல்லி விட்டேன்! அது, நீதான் என்று எப்படித் தெரியும் என்று, அடுத்த கேள்வி கேட்காதே! இந்த வீட்டில் நின்று, இந்தக் கத்துக் கத்துகிறவன் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று, ஒரு முட்டாள் கூடப் புரிந்து கொள்வாள்" என்று சற்றே அலுத்த குரலில் கூறிய மீனாட்சி, சந்தனாவிடம் திரும்பி, "நீ உள்ளே போம்மா! இன்றைய சிற்றுண்டி, உனக்குப் பிடித்த குழிப் பணியாரம். இதோ, இவனுக்கும் அது பிடிக்குமே என்று செய்யச் சொன்னேன்! போய், முகம் கழுவிவிட்டுச் சாப்பிடு" என்று கூறவும், அதற்கு மேல் அங்கே நில்லாமல், சின்னவள் உள்ளே சென்றாள்.
மாடியில் வாயிற்புறத்தை நோக்கிய அறை அவளுக்குத் தரப்பட்டிருப்பது! எனவே தொடர்ந்து தாயும் மகனும் பேசியது, அறைக்குள் சென்ற பிறகு, அவள் விரும்பாவிட்டாலும் அவளது காதுகளில் தெளிவாக விழுந்தது!
"உங்களுக்கு உலகம் தெரியாது, அம்மா! இவளை, இங்கே இருக்க விடுவது, நல்லதில்லை!" என்றான் மகன்.
"எனக்கு உலகம் தெரியாதா? அப்படி உலகம் தெரியாத அம்மா எப்படியோ போகட்டும் என்று தானே, இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருந்துவிட்டாய்! சரி. அது உன் வாழ்வு, உன் விருப்பம்! சந்தனாவுக்கு என்று, இங்கே, இப்போது யாரும் இல்லை! அவள் வீட்டில், திருட்டு வேறு நடந்து, தவித்துக் கொண்டு நின்றாள் பாவம்! எனக்கும், இந்தத் தனிமை, தாங்க முடியாத பாரமாகி விட்டது! அதனால், எனக்குத் துணையாக, அவளை, நான் தான் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்! இரு மாதங்களாக, எனக்கு அவள் தான் ஒரே துணை! இனி, நீ கிளம்பிய பிறகும், அவள் தான் துணையாக இருக்கப் போகிறாள்!" என்றாள் மீனாட்சி அம்மா சற்று அழுத்தமான குரலில்!
"அது, தேவையில்லை, அம்மா! இதை இப்போதைக்கு மனதோடு வைத்துக் கொள்ளுங்கள்! இந்த முறை, என் மனதில் வேறு கருத்து இருக்கிறது! இனி, இங்கேயே இருந்து விடலாமா என்ற எண்ணத்தில் தான், இப்போது வந்ததே!"
நம்பாமல், 'உச்'சுக் கொட்டினாள் அன்னை!
"கடந்த இரண்டு முறை வந்த போதும் கூட, நீ இப்படித் தான் ஏதோ சொன்னாய்! ஆனால், உன் ஏஜெண்ட் தான், உனக்கு நன்றாக அமெரிக்க மோகத்தை ஏற்றி வைத்திருக்கிறாளே! சுயநலம் பிடித்தவள்! இரண்டே நாளில், ஏதாவது சாக்கிட்டு, அவள் ஒரு போன் பண்ணிக் கூப்பிட்டாள் என்றால், குடிகாரன் பேச்சு மாதிரி, எல்லாம் அத்தோடு சரி! உடனே, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவாய்!..."
"இல்லைம்மா! இந்தத் தடவை மித்ராவுக்காகவேனும்..."
"மித்ராவைக் காட்டி, என்னை மடக்கப் பார்க்காதே! முதலில் ஒரு மாதமேனும் இருந்து காட்டு! அப்புறமாக, உன்னை நம்புகிறேன்! ஆனால், சந்தனா விஷயத்தில் தலையிடாதே! அவளை, நான் தான் கட்டாயப்படுத்தி, இங்கே கூட்டி வந்தேன்! அவள் இங்கே தான் இருப்பாள். அவளைப் போகச் சொல்ல முடியாது!" என்றாள் தாயார் உறுதியான குரலில்!
"என்னவோ, எனக்குப் பிடிக்கவில்லை! எதற்கும், நான் இங்கே தங்க நினைப்பது பற்றி, அந்தப் பெண்ணிடம் வாய் விட்டு விடாதீர்கள்! அப்புறம், அவள் ஏதாவது பத்திரிகைக்குச் செய்தி கொடுத்து, ஒரே களேபரம் ஆகிவிடப் போகிறது!" என்று, தாயை எச்சரித்தான் தீபன்.
"ஆமாம், நீயும், உன் பத்திரிகையும்! யார் யாரோ, எது எதற்கோ பயப்படுகிறார்கள்! உனக்கு, இது ஒரு ஃபோபியா!" என்றாள் தாயார் சற்று அலட்சியமாகவே!
"இந்த மீடியாக்காரர்கள், செய்திக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது! டயானாவின் மரணம் எப்படி நடந்தது, நினைத்துப் பாருங்கள்! அந்தப் பெண்ணின் வீட்டில் நடந்த திருட்டே, அவள் நம் வீட்டில் நுழைவதற்கான நாடகம் என்பது தான் என் கருத்து! ஆராய்ந்து பார்த்தால், அதுதான் உண்மையாகவும் இருக்கும்!" என்றான் மகன்.
என்ன உளறல் இது என்ன சந்தனா யோசிக்கையிலேயே, "முழுப் பைத்தியமாக மாறுமுன், உன் ஃபோபியாவுக்கு ஏதாவது சிகிச்சை செய்!" என்று மீனாட்சி எரிச்சலாகக் கூறிய விதத்தில், அவளுக்குச் சிரிப்பு வர, அந்த சிரிப்புடனேயே திரையை ஒதுக்கிக் கொண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்!
தாயும் மகனும், அதே இடத்தில், வீட்டின் முன்புறத் தோட்டத்தில் தான் நின்றனர்.
தீபனின் எரிச்சல் மிகுந்த முகம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது!
அதே நேரத்தில், ஜன்னல் திரையின் அசைவை உணர்ந்து விழி உயர்த்தி நோக்கிய தீபனின் பார்வையில், அவளது சிரித்த முகம் பட்டுவிட, அவனது கண்கள் கனலை உமிழ்ந்தன.
எரித்து விடுவான் போல, எவ்வளவு கோபம்!
துணி கொண்டு துடைத்தாற் போல அவளது சிரிப்பு தானாக மறைய, உள்ளூர வாட்டத்துடன், சந்தனா உள்ளே திரும்பினாள்.
மீனாட்சி அம்மாவுடைய மகனுக்கு, அவளிடம் ஏன் அவ்வளவு வெறுப்பு?
காரணம் எதுவாக இருந்தாலும், அவனது வெறுப்பு அவளை மிகவும் பாதித்தது என்பது மட்டும் நிஜம்!
தீபன் ஆத்திரத்துடன் கத்திக் கொண்டிருக்கும் போதே, "என்ன இங்கே சத்தம்?" என்ற மீனாட்சியின் குரல் கேட்க, அதைத் தொடர்ந்து, அவளும் வெளியே வந்தாள்!
சந்தனாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, "வாம்மா! இன்று சீக்கிரமே வந்துவிட்டாய் போல!" என்று கனிவோடு வரவேற்றாள்.
பதிலுக்கு முறுவலித்து, "இன்னும் ஐந்து நிமிஷம் முன்னாலேயே உள்ளே வந்திருப்பேன், ஆன்ட்டி! ஆனால், உங்கள் பிள்ளைக்குத்தான் ஏதோ பிரச்சினை!" என்று கிண்டலாக, மீனாட்சியுடைய மகனைக் கண்ணால் காட்டினாள் சின்னவள்!
ஆத்திரத்துடன் அன்னையை நெருங்கினான் தீபன். "அம்மா, இவளை நம்பாதீர்கள். பாருங்கள், இங்கே ஏதாவது செய்தி கிடைக்கும் என்று, உங்களோடு ஒட்டிப் பழகிக் கொண்டு, உங்கள் வீட்டிலேயே, குடி வந்து விட்டாள், இவள்! என்ன கதை சொன்னாளோ, நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்! முதலில் இவளை வெளியேற்றுங்கள்!"
"சேச்சே, நிறுத்துப்பா! என்ன பேச்சு இது, தீபன்? நீ சொல்லுகிற மாதிரி எதுவும் இல்லை! எனக்குச் சந்தனாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்..." என்ற தாயைக் குறுக்கிட்டு, "என்னம்மா தெரியும்? இவளை முதல் தடவையாக இப்போதுதான் பார்க்கிறேன்! அதற்குள், இவளுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது. நான் யார் என்று தெரிந்திருக்கிறது! எப்படி முடியும்? என் வார்த்தைக்கு மாறாக, நீங்களாக என்னைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டீர்கள்! என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகே இங்கே வந்திருக்கிறாள் என்று, இதிலிருந்தே தெரிந்து விடவில்லையா?" என்று வாதாடினான்.
மீனாட்சியிடம் பேசிய பிறகு, சிரித்த முகமாக வீட்டு வாயிலின் படிகளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்த சந்தனா, வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.
தன்னைப் பற்றிப் பேசக்கூடாது என்று, இவன் தான் தாயிடம் சொல்லி வைத்திருக்கிறானா?
ஒரே மகன் என்றாலும், அந்த மகன், அவனுடைய குடும்பத்தார் ஒருவரின் புகைப்படத்தைக் கூட, அந்த வீட்டில் பார்த்திராதது நினைவு வந்தது, இன்னமும் அவளது ஆச்சரியத்தை அதிகரித்தது!
இந்தத் தீபன் தான் தடுத்திருக்க வேண்டும்!
இவனைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்று ரகசியம் காக்கும் அளவுக்கு, இவன் அப்படியென்ன கொம்பன்? அல்லது குற்றவாளியா?
அதனால் தான், பர்சில் இருந்த படங்களை, மீனாட்சி ஆன்ட்டி, அவ்வளவு முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும்.
ஆனால் எதற்காக?
"சும்மா, அதையே சொல்லிக் கொண்டிராதே, தீபன். நான் தான் ஒரு தரம், பேச்சு வாக்கில், என் மகன் என்று, உன் பெயரைச் சந்தனாவிடம் சொல்லி விட்டேன்! அது, நீதான் என்று எப்படித் தெரியும் என்று, அடுத்த கேள்வி கேட்காதே! இந்த வீட்டில் நின்று, இந்தக் கத்துக் கத்துகிறவன் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று, ஒரு முட்டாள் கூடப் புரிந்து கொள்வாள்" என்று சற்றே அலுத்த குரலில் கூறிய மீனாட்சி, சந்தனாவிடம் திரும்பி, "நீ உள்ளே போம்மா! இன்றைய சிற்றுண்டி, உனக்குப் பிடித்த குழிப் பணியாரம். இதோ, இவனுக்கும் அது பிடிக்குமே என்று செய்யச் சொன்னேன்! போய், முகம் கழுவிவிட்டுச் சாப்பிடு" என்று கூறவும், அதற்கு மேல் அங்கே நில்லாமல், சின்னவள் உள்ளே சென்றாள்.
மாடியில் வாயிற்புறத்தை நோக்கிய அறை அவளுக்குத் தரப்பட்டிருப்பது! எனவே தொடர்ந்து தாயும் மகனும் பேசியது, அறைக்குள் சென்ற பிறகு, அவள் விரும்பாவிட்டாலும் அவளது காதுகளில் தெளிவாக விழுந்தது!
"உங்களுக்கு உலகம் தெரியாது, அம்மா! இவளை, இங்கே இருக்க விடுவது, நல்லதில்லை!" என்றான் மகன்.
"எனக்கு உலகம் தெரியாதா? அப்படி உலகம் தெரியாத அம்மா எப்படியோ போகட்டும் என்று தானே, இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருந்துவிட்டாய்! சரி. அது உன் வாழ்வு, உன் விருப்பம்! சந்தனாவுக்கு என்று, இங்கே, இப்போது யாரும் இல்லை! அவள் வீட்டில், திருட்டு வேறு நடந்து, தவித்துக் கொண்டு நின்றாள் பாவம்! எனக்கும், இந்தத் தனிமை, தாங்க முடியாத பாரமாகி விட்டது! அதனால், எனக்குத் துணையாக, அவளை, நான் தான் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்! இரு மாதங்களாக, எனக்கு அவள் தான் ஒரே துணை! இனி, நீ கிளம்பிய பிறகும், அவள் தான் துணையாக இருக்கப் போகிறாள்!" என்றாள் மீனாட்சி அம்மா சற்று அழுத்தமான குரலில்!
"அது, தேவையில்லை, அம்மா! இதை இப்போதைக்கு மனதோடு வைத்துக் கொள்ளுங்கள்! இந்த முறை, என் மனதில் வேறு கருத்து இருக்கிறது! இனி, இங்கேயே இருந்து விடலாமா என்ற எண்ணத்தில் தான், இப்போது வந்ததே!"
நம்பாமல், 'உச்'சுக் கொட்டினாள் அன்னை!
"கடந்த இரண்டு முறை வந்த போதும் கூட, நீ இப்படித் தான் ஏதோ சொன்னாய்! ஆனால், உன் ஏஜெண்ட் தான், உனக்கு நன்றாக அமெரிக்க மோகத்தை ஏற்றி வைத்திருக்கிறாளே! சுயநலம் பிடித்தவள்! இரண்டே நாளில், ஏதாவது சாக்கிட்டு, அவள் ஒரு போன் பண்ணிக் கூப்பிட்டாள் என்றால், குடிகாரன் பேச்சு மாதிரி, எல்லாம் அத்தோடு சரி! உடனே, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவாய்!..."
"இல்லைம்மா! இந்தத் தடவை மித்ராவுக்காகவேனும்..."
"மித்ராவைக் காட்டி, என்னை மடக்கப் பார்க்காதே! முதலில் ஒரு மாதமேனும் இருந்து காட்டு! அப்புறமாக, உன்னை நம்புகிறேன்! ஆனால், சந்தனா விஷயத்தில் தலையிடாதே! அவளை, நான் தான் கட்டாயப்படுத்தி, இங்கே கூட்டி வந்தேன்! அவள் இங்கே தான் இருப்பாள். அவளைப் போகச் சொல்ல முடியாது!" என்றாள் தாயார் உறுதியான குரலில்!
"என்னவோ, எனக்குப் பிடிக்கவில்லை! எதற்கும், நான் இங்கே தங்க நினைப்பது பற்றி, அந்தப் பெண்ணிடம் வாய் விட்டு விடாதீர்கள்! அப்புறம், அவள் ஏதாவது பத்திரிகைக்குச் செய்தி கொடுத்து, ஒரே களேபரம் ஆகிவிடப் போகிறது!" என்று, தாயை எச்சரித்தான் தீபன்.
"ஆமாம், நீயும், உன் பத்திரிகையும்! யார் யாரோ, எது எதற்கோ பயப்படுகிறார்கள்! உனக்கு, இது ஒரு ஃபோபியா!" என்றாள் தாயார் சற்று அலட்சியமாகவே!
"இந்த மீடியாக்காரர்கள், செய்திக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது! டயானாவின் மரணம் எப்படி நடந்தது, நினைத்துப் பாருங்கள்! அந்தப் பெண்ணின் வீட்டில் நடந்த திருட்டே, அவள் நம் வீட்டில் நுழைவதற்கான நாடகம் என்பது தான் என் கருத்து! ஆராய்ந்து பார்த்தால், அதுதான் உண்மையாகவும் இருக்கும்!" என்றான் மகன்.
என்ன உளறல் இது என்ன சந்தனா யோசிக்கையிலேயே, "முழுப் பைத்தியமாக மாறுமுன், உன் ஃபோபியாவுக்கு ஏதாவது சிகிச்சை செய்!" என்று மீனாட்சி எரிச்சலாகக் கூறிய விதத்தில், அவளுக்குச் சிரிப்பு வர, அந்த சிரிப்புடனேயே திரையை ஒதுக்கிக் கொண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்!
தாயும் மகனும், அதே இடத்தில், வீட்டின் முன்புறத் தோட்டத்தில் தான் நின்றனர்.
தீபனின் எரிச்சல் மிகுந்த முகம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது!
அதே நேரத்தில், ஜன்னல் திரையின் அசைவை உணர்ந்து விழி உயர்த்தி நோக்கிய தீபனின் பார்வையில், அவளது சிரித்த முகம் பட்டுவிட, அவனது கண்கள் கனலை உமிழ்ந்தன.
எரித்து விடுவான் போல, எவ்வளவு கோபம்!
துணி கொண்டு துடைத்தாற் போல அவளது சிரிப்பு தானாக மறைய, உள்ளூர வாட்டத்துடன், சந்தனா உள்ளே திரும்பினாள்.
மீனாட்சி அம்மாவுடைய மகனுக்கு, அவளிடம் ஏன் அவ்வளவு வெறுப்பு?
காரணம் எதுவாக இருந்தாலும், அவனது வெறுப்பு அவளை மிகவும் பாதித்தது என்பது மட்டும் நிஜம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனாட்சி அம்மா மிகவும் நல்லவள்! பல தரும காரியங்களில் ஈடுபட்டிருந்தாள்.
நூறு சதவீதம் ஆரோக்கியமான உடல்நிலை கிடையாது!
ஆனாலும், அதற்காக, முகத்தை சீர்யசாக வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்.
கேலியும் சிரிப்புமாக, மிகவும் சந்தோஷமான மனோ பாவம் உடையவள்!
அதனாலேயே சந்தனாவுக்கும், அவளை மிகவும் பிடித்துப் போய், வேற்று வீடு என்கிற எண்ணமே இல்லாமல், சந்தனா அந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள்!
தந்தையைப் பற்றிக் கூடப் பல சந்தோஷமான சம்பவங்களை, அவ்வப்போது பெருமையாகவும், சிறு ஏக்கங்களுடனும் மீனாட்சி அம்மாளிடம் பேசி, அவளால் ஆறுதல் அடைய முடிந்திருக்கிறது!
இப்போது, மகன் வரவினால், அந்த நிலை மாறிவிடும் போல இருக்கிறதே என்று சந்தனா வருத்தத்துடன் நினைத்தாள்.
அண்ணன் வரும் வரை, பாதுகாப்பாக இங்கேயே இருப்பது, அவன் வந்த பின்னும் அந்தப் பக்கத்திலேயே வீடு பார்த்து வசிப்பது என்று எண்ணியதெல்லாம், தலைகீழாக மாறியது.
அந்த வீட்டில் தீபனுக்கு எந்த அளவு அதிகாரம் உண்டோ, சந்தனாவுக்குத் தெரியாது! ஆனால், ஒரு மகனின் உரிமை, மற்ற எதையும் விட அதிகம் தானே?
வீட்டு அம்மாவுடைய மகனுக்கு அடியோடு பிடிக்காத போது, அந்த வீட்டில் தொடர்ந்து தங்க, அவளுக்கும் விருப்பம் இருக்கவில்லை!
அதுவும், அவன் தாயுடன் தொடர்ந்து தங்கும் விருப்பத்துடன் வந்திருந்தால், அவனது விருப்பத்துக்குத்தான் முதல் உரிமை கொடுக்க வேண்டும்! பானகத் துரும்பு மாதிரி, அவன் முகம் சுளிக்க, அவள் அங்கே இருப்பது சரியல்ல!
இந்தப் பிரச்சினைக்குச் சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவாறே, மெல்லக் கீழே இறங்கிச் சென்றாள் சந்தனா.
படிகள் ஹால் பகுதிக்குத் திரும்பும் போதே, யாரோ தன்னைக் கவனிப்பது போன்ற உணர்வு சந்தனாவுக்கு.
தீபனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, சோஃபாக்கள் போடப்பட்டிருந்த பக்கம் பாராமலே, உட்புறம் திரும்பியவளின் பார்வை வட்டத்தில், அவனது நெடிய உருவம் போல எதுவும் தெரியாது போகவும், விழி திருப்பிப் பார்த்தாள் அவள்.
அந்தப் பெரிய சோஃபாவுக்குள் புதைந்து விடுவாள் போல, ஒரு சிறுமி!
அவளது நாலைந்து வயதுக்குரிய ஆரோக்கியமோ, துறுதுறுப்போ தெரியவில்லை!
ஒரு துணிப் பொம்மையை அணைத்தபடி, தன் நீல நிறக் கண்களால், சந்தனாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்கள் அன்னியமாய் நீல நிறமாக இருந்த போதும், அறிமுகமான ஏதோ அவளிடம் இருப்பதாகத் தோன்ற சந்தனா அவளைப் பார்த்துப் புன்னகை செய்து, "ஹல்லோ?" என்றாள்.
பள்ளியில் புது மாணவிகளிடம் பேசி, இளக வைத்துப் பழக்கம் தானே?
ஆனால், இந்தச் சிறுமியின் பாணி வேறு மாதிரி இருந்தது! சந்தனாவை ஒரு தரம் சந்தேகமாக நோக்கிவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டாள் அவள்.
ஆனால், அந்த சந்தேகமான பார்வையே, அவள் யாரென்று சந்தனாவுக்குக் காட்டிக் கொடுத்தது! அறிமுகமான சாயலும் புரிந்தது!
இவள் தீபனுடைய மகள்! மீனாட்சி ஆன்ட்டியுடைய பேத்தி!
தந்தையின் அதே சந்தேகத்தைச் சிறுமியின் கண்களில் பார்த்ததும், சந்தனாவின் முடிவு இன்னமும் வலுப்பெற்றது!
அவனுக்கு, இவள் ஒரு மகள் தானா? வேறு பிள்ளைகளும் இருக்கிறார்களா? மனைவி?
யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?
சாப்பாட்டு அறைக்குள் சென்று, மீனாட்சி அம்மாள் சொன்னதற்காக, இரண்டு பணியாரங்களைக் கொறித்து விட்டு, பரீட்சை நோட்டுகள் திருத்தும் வேலை இருப்பதாகச் சொல்லிக் கையில் காபியை வாங்கிக் கொண்டு சந்தனா மீண்டும் அவளது அறைக்குத் திரும்பும் வரை, வேறு யாரும் அவள் கண்ணில் படவில்லை!
ஆனால், அதற்குள் வேறு யாரும் குறுக்கிடாத அந்தத் தனிமையில், "சந்தனாம்மா, தீபன் என்ன சொன்னாலும், அதைப் பெரிதாக நினைக்காதே! இந்த நாட்டுப் புத்தியும், அந்த நாட்டுப் பழக்கமுமாக, அவனுக்குள் ஒரே குழப்பம்! அதில், யாரைப் பார்த்தாலும், சந்தேகம்! அவன் மனைவி பிரிந்துவிட்ட விவகாரம் விஷயத்தை... விஷத்தை என்று தான் சொல்ல வேண்டும்... அதை ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிறது! இந்தக் குழப்பத்தில் அவன் ஏதாவது உளறினால், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதேம்மா! எனக்காக, இங்கே இருந்து விடும்மா! ப்ளீஸ்!" என்று மீனாட்சி, மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள்.
அப்படியே, வீட்டின் முன்புறமாக, அதட்டலாக மகனின் குரல் கேட்கவும், "அங்கேயே யாரைப் பார்த்துக் கத்துகிறானோ..." என்றவாறு அவசரமாக எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றாள்!
தீபனோடு வேறு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று மீனாட்சி சொல்லவே இல்லை!
அப்படியே யார் யார் வந்திருந்த போதும், ஆன்ட்டி அறிமுகம் செய்து வைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு, சந்தனா அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரவு உணவை மீனாட்சியுடனே சேர்ந்து உண்பது, அங்கே வந்த பின் அவளது வழக்கம்!
இருவரும் அன்றைய நிகழ்வுகள் பற்றிக் கலகலப்பாகப் பேசியபடி, உண்ணும் அந்த நேரத்தைச் சந்தனா ஆவலாக எதிர்பார்ப்பாள்!
ஆனால், இன்று தயக்கமாக இருந்தது!
சாப்பாட்டு மேஜையில் அவளை வீட்டை விட்டு வெளியேற்றச் சொன்ன மகனும் இருப்பானே!
தந்தையின் மனதைப் பிரதிபலிக்கும், அவனுடைய மகளும் கூட இருக்கலாம்!
இவர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்பது, எவ்வளவு சங்கடமாக இருக்கும்!
சங்கடம் அவளுக்கு மட்டுமல்ல!
மகனை எதிர்த்துப் பிடிவாதமாக அவளை வீட்டில் இருக்கச் சொன்ன மீனாட்சி அம்மாவுக்கும், கஷ்டம்தான்!
பசியில்லை என்று, பேசாமல் அறையில் இருந்து விடலாமா என்று கூட, ஒரு தரம் அவளுக்குத் தோன்றியது!
ஆனால், இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று யோசித்து, அறையில் கொஞ்சம் பிஸ்கட்டுகளைக் கூடச் சந்தனா வாங்கி வைத்திருக்கவில்லை!
பட்டினியும், அதன் விளைவாகச் சரியாகத் தூங்காமலும் இருந்துவிட்டு நாளைக்குப் பள்ளிக்குப் போனால், வாங்குகிற சம்பளத்துக்கு நியாயமாகப் பள்ளியில் உருப்படியாக என்ன வேலை செய்ய முடியும்?
அது மட்டுமல்ல!
மீனாட்சி ஆன்ட்டி முட்டாள் அல்ல!
எதற்காகப் பசியில்லை என்கிறாள் என்று புரிந்து, நிச்சயமாக வருத்தப்படுவாள்.
பட்டினியாக இருக்க விடவும் மாட்டாள்! அந்தப் பெரியவள் வந்து, அவளை வருந்தி அழைத்துச் சாப்பிட வைத்து, அதெல்லாம் வேறு ஆன்ட்டிக்குக் கஷ்டம்!
அத்தனையையும் யோசிக்கையில், கௌரவம் பாராமல், பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு போய், இரண்டு வாய் எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடுவது மேல் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!
ஒரு வேளை, தீபனே, அவனுடைய அன்னைக்காகச் சற்று இளகி, நல்லபடியாக நடந்துகொள்ளலாம்!
நல்லதே நினைக்கலாமே என்று எண்ணினால் கூட, அவளுக்கு அதில் நம்பிக்கை வர மறுத்தது! அவளது ஜன்னலை நிமிர்ந்து பார்த்த அவனது கோப முகம், அவ்வளவு எளிதாக மாறக் கூடியது அல்ல!
ஆனால், சந்தனா அஞ்சிய மாதிரி, அசம்பாவிதமாக, அவளை வாயிலில் வைத்து விரட்டியது போல, உணவருந்தும் போது, நிகழவில்லை! 'டேபிள் மானர்ஸ்' என்பார்களே, அது போல சாப்பிடுகையில் தீபன் உணவு வேலை நாகரிகம் கடைப்பிடித்தான் போலும்! சந்தனாவிடம் தனியாக எதுவும் பேசவில்லை என்றாலும், கடுகடுக்கவும் இல்லை!
அவன் தாயிடம் 'சுகம்' மருத்துவமனையைப் பற்றிய சில விவரங்களைக் கேட்டான்.
ஆனால் அப்படி அவன் விசாரித்தது, வெறும் உரையாடலுக்காக மட்டுமாகக் கேட்டது போலத் தோன்றாதது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பல ஆண்டுகளாக எட்டிக் கூடப் பாராத, என்னவென்று கேட்டுக் கூட இராத தொழில் மீது, அவனுக்கு எப்படி அக்கறை இருக்க முடியும்?
மீனாட்சி அம்மாவுக்கும் அதே ஆச்சரியம் இருந்ததோ என்னவோ, முதலில் சற்று விட்டேற்றியாகவே பதில் சொன்னவள், தொடர்ந்து மகனின் கேள்விகளில் வியப்பும், திருப்தியும் அடைந்து, விவரமாகவே விடை கூறலானாள்!
தொடர்ந்து, தாயும் மகனுமாக, மருத்துவமனை, அதில் புதிதாகத் தொடங்கி இருக்கும் சில துறைகள், அவற்றின் வேலை முறைகள் பற்றி, அலசி ஆராயத் தொடங்கினார்கள்.
விஷயம் எதுவும் புரியாததால், இந்த உரையாடல் போரடித்த போதும், ஒரு வகையில், சந்தனாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது! அவள் காரணமாகப் பிள்ளைக்கும் தாய்க்கும் இடையே, மனவேறுபாடு வந்து விடவில்லை! நல்லபடியாகப் பேசுகிற நிலையில் தான் இருக்கிறார்கள்! பெரு நிம்மதி!
ஆனால், இந்த நிம்மதி நிலைக்க வேண்டுமானால், ஆன்ட்டியின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது! அதை மீறி, அவளது திட்டத்தைச் செயல்படுத்தியே தீர வேண்டும்!
அதன் முதல்படியாக, மாலையில் மீனாட்சி அம்மா மருத்துவமனைக்கு வருவதாகத் திட்டம் இருக்கிறதா என்று விசாரித்தாள்.
மீனாட்சி விவரம் கேட்டதற்கு, "ஒரு சின்ன வேலை! கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது! ஆனால், டெஸ்ட் நோட்டுகள் திருத்த வேண்டும். வெளியே போவதால், திரும்பி வருவதற்கு, வேனைப் பிடிக்க முடியாது! நீங்கள் வருவது தெரிந்தால், மருத்துவமனையில் வைத்து விட்டு என் வேலையைப் பார்க்கப் போவேன்! நீங்கள் வரும்போது, கொண்டு வந்துவிடலாம்! எனக்குச் சுமை மிச்சம்!" என்றாள் சின்னவள்!
"கொண்டு வந்துவிடலாம்! ஆனால், அவ்வ்...வ்ளோ நோட்டுத் திருத்துவாயே! நோட்டிகளின் பளு தாங்காமல், டயர் வெடித்துவிட்டால், என்ன செய்வது? அதுதான் கவலையாக இருக்கிறது!" என்றாள் மீனாட்சி சோகமாக!
"அதெல்லாம் வெடிக்காது, ஆன்ட்டி! குறைந்தது நூறு கிலோ கனத்தில், நான் உங்களோடு வரும்போதே வெடிக்காத டயர், வெறும் இந்த மூன்று கிலோ சுமையில் தானா வெடிக்கப் போகிறது? நடக்கவே நடக்காது! பயமே படாதீர்கள்!" என்று சிரித்தாள் சந்தனா.
வழக்கமாக, மீனாட்சியும் அவளும் பேசிக் கொள்கிற தினுசில்தான்!
ஆனால், "நூறு கிலோவா? சேச்சே! அவ்வளவு மோசமாகக் கற்பனை கூடப் பண்ண முடியாது!" என்று விட்டு, அவளை ஏற இறங்க அளவிடுபவன் போலப் பார்த்து, "மிஞ்சி மிஞ்சி அறுபது கிலோ சொல்லலாம்! அதுவும் உயரத்தைக் கொண்டுதான்!" என்று தீபன் கூறவும், பிரமிப்பை மீறிக் கொண்டு, அவனது அளவிடும் பார்வையில், சந்தனாவின் உடல் சிலிர்த்தது.
ஆனால் உடனேயே, "புதிதாகத்தானே, இந்த வேலையில் சேர்ந்திருப்பாய், அதற்குள் டெஸ்ட் வைப்பதையெல்லாம் உன் பொறுப்பில் விடுகிறார்களா?" என்று அவன் சந்தேகத்துடன் கேட்கவும் அவளுக்கு எரிச்சல் வந்தது!
இவன் புத்தி என்ன மாதிரியெல்லாம் வேலை செய்கிறது!
இவனைப் பற்றித் துப்பறிந்து, ஏதோ பத்திரிகை, டீவிக்கு விவரம் கொடுப்பதற்காக, அவள் இந்த வேலையில் சேர்ந்து, அவன் தாயின் கவனத்தைக் கவர்ந்து இந்த வீட்டிற்குள் புகுந்திருக்கிறாளாம்!
"நான் சென்ற ஆண்டிலிருந்தே வேலை பார்க்கிறேன்!" என்று ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள் அவள்!
அயராமல், "ஓ அப்போதே, இதற்காகத் தொடங்கிவிட்டாயா?" என்று தீபன் கேட்கவும், அவள் தான் அயர்ந்து, வாயடைத்துப் போனாள்!
மீனாட்சி ஆன்ட்டி சொன்ன மாதிரி, இவனுக்குப் பைத்தியம் தான் பிடிக்கப் போகிறது!
பெரியவளின் கண்களிலும் ஒருவிதச் சலிப்பைக் காணவும், சட்டென விழி தாழ்த்தித் தட்டில் பார்வையைப் பதித்தாள் சந்தனா.
ஆனால், திருத்த வேண்டிய நோட்டுப் புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி, 'சுகம்' மருத்துவமனையில் கொடுத்து விட்டு, அண்ணன் இடம் பார்த்து வைத்திருந்த விடுதிக்குப் போய்க் கேட்டால், அங்கே இடமே இல்லை என்றார்கள்!
"எங்கள் இடத்துக்குப் போட்டி அதிகம்மா! அப்போதே, உங்கள் அண்ணன் பெரிய சிபாரிசோடு வந்ததால், இடம் கொடுத்தோம்! நீங்கள் தான் வரவே இல்லையே! அப்போதே, அந்த இடத்துக்கு வேறு ஆள் வந்துவிட்டது! இனி, இப்போதைக்கு, இங்கே இடம் கிடையாது!" என்றார்கள் கண்டிப்பாகவே!
அதை மட்டுமே நம்பிச் செல்லவில்லை அவள்!
உடன் வேலை செய்வோர், இன்னும் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சென்று, வேறு சில இடங்களில் விசாரித்ததிலும், அவளுக்குத் தோல்விதான் கிடைத்தது!
இல்லை, இல்லை என்று கேட்கக் கேட்க, அவளுக்குத் தன் மீதே ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது!
தும்பை விட்டு வாலைப் பிடிக்க ஓடுகிற கதையாக அண்ணன் அலைந்து திரிந்து ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தை அலட்சியமாக விட்டுத் தொலைத்து விட்டு, இப்போது இப்படி அலைகிறாளே!
எவனோ ஒரு மடத் திருடன் உருப்படியாய் ஒன்றும் இல்லாத வீட்டுக்குத் திருட வந்தான் என்றால், அவன் மீண்டும் வருவானோ என்று பயப்படுகிறவள், அவனை விடவும் எவ்வளவு பெரிய மடச்சி!
அப்படிப் பயந்து, அடுத்தவர் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு, இடம் கொடுத்த நல்ல பெண்மணிக்கு, இப்போது எவ்வளவு தொல்லை!
தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி, அவள் சோர்வுடன் வீடு திரும்பினால், கண்ணில் ஆவல் மின்ன, அவளைத் தேடி வந்தாள், தீபனுடைய மகள் மித்ரா!
பிரியமாக அழைத்த போது முகத்தைத் திருப்பிக் கொண்ட மித்ராவிடம், நட்பு, பாசம், பிரியம் என்று சந்தனா பெரிதாக எதையும் எதிர்பார்த்து விடவில்லை!
முக்கியமான காரணம், அவள் தீபனுடைய மகள்!
தன் மனதில் இருக்கும் விஷத்தில், எத்தனை சதவீதத்தை, மகள் மனதிலும் அவன் புகுத்தி வைத்திருக்கிறானோ!
நூறு சதவீதம் ஆரோக்கியமான உடல்நிலை கிடையாது!
ஆனாலும், அதற்காக, முகத்தை சீர்யசாக வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்.
கேலியும் சிரிப்புமாக, மிகவும் சந்தோஷமான மனோ பாவம் உடையவள்!
அதனாலேயே சந்தனாவுக்கும், அவளை மிகவும் பிடித்துப் போய், வேற்று வீடு என்கிற எண்ணமே இல்லாமல், சந்தனா அந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள்!
தந்தையைப் பற்றிக் கூடப் பல சந்தோஷமான சம்பவங்களை, அவ்வப்போது பெருமையாகவும், சிறு ஏக்கங்களுடனும் மீனாட்சி அம்மாளிடம் பேசி, அவளால் ஆறுதல் அடைய முடிந்திருக்கிறது!
இப்போது, மகன் வரவினால், அந்த நிலை மாறிவிடும் போல இருக்கிறதே என்று சந்தனா வருத்தத்துடன் நினைத்தாள்.
அண்ணன் வரும் வரை, பாதுகாப்பாக இங்கேயே இருப்பது, அவன் வந்த பின்னும் அந்தப் பக்கத்திலேயே வீடு பார்த்து வசிப்பது என்று எண்ணியதெல்லாம், தலைகீழாக மாறியது.
அந்த வீட்டில் தீபனுக்கு எந்த அளவு அதிகாரம் உண்டோ, சந்தனாவுக்குத் தெரியாது! ஆனால், ஒரு மகனின் உரிமை, மற்ற எதையும் விட அதிகம் தானே?
வீட்டு அம்மாவுடைய மகனுக்கு அடியோடு பிடிக்காத போது, அந்த வீட்டில் தொடர்ந்து தங்க, அவளுக்கும் விருப்பம் இருக்கவில்லை!
அதுவும், அவன் தாயுடன் தொடர்ந்து தங்கும் விருப்பத்துடன் வந்திருந்தால், அவனது விருப்பத்துக்குத்தான் முதல் உரிமை கொடுக்க வேண்டும்! பானகத் துரும்பு மாதிரி, அவன் முகம் சுளிக்க, அவள் அங்கே இருப்பது சரியல்ல!
இந்தப் பிரச்சினைக்குச் சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவாறே, மெல்லக் கீழே இறங்கிச் சென்றாள் சந்தனா.
படிகள் ஹால் பகுதிக்குத் திரும்பும் போதே, யாரோ தன்னைக் கவனிப்பது போன்ற உணர்வு சந்தனாவுக்கு.
தீபனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, சோஃபாக்கள் போடப்பட்டிருந்த பக்கம் பாராமலே, உட்புறம் திரும்பியவளின் பார்வை வட்டத்தில், அவனது நெடிய உருவம் போல எதுவும் தெரியாது போகவும், விழி திருப்பிப் பார்த்தாள் அவள்.
அந்தப் பெரிய சோஃபாவுக்குள் புதைந்து விடுவாள் போல, ஒரு சிறுமி!
அவளது நாலைந்து வயதுக்குரிய ஆரோக்கியமோ, துறுதுறுப்போ தெரியவில்லை!
ஒரு துணிப் பொம்மையை அணைத்தபடி, தன் நீல நிறக் கண்களால், சந்தனாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்கள் அன்னியமாய் நீல நிறமாக இருந்த போதும், அறிமுகமான ஏதோ அவளிடம் இருப்பதாகத் தோன்ற சந்தனா அவளைப் பார்த்துப் புன்னகை செய்து, "ஹல்லோ?" என்றாள்.
பள்ளியில் புது மாணவிகளிடம் பேசி, இளக வைத்துப் பழக்கம் தானே?
ஆனால், இந்தச் சிறுமியின் பாணி வேறு மாதிரி இருந்தது! சந்தனாவை ஒரு தரம் சந்தேகமாக நோக்கிவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டாள் அவள்.
ஆனால், அந்த சந்தேகமான பார்வையே, அவள் யாரென்று சந்தனாவுக்குக் காட்டிக் கொடுத்தது! அறிமுகமான சாயலும் புரிந்தது!
இவள் தீபனுடைய மகள்! மீனாட்சி ஆன்ட்டியுடைய பேத்தி!
தந்தையின் அதே சந்தேகத்தைச் சிறுமியின் கண்களில் பார்த்ததும், சந்தனாவின் முடிவு இன்னமும் வலுப்பெற்றது!
அவனுக்கு, இவள் ஒரு மகள் தானா? வேறு பிள்ளைகளும் இருக்கிறார்களா? மனைவி?
யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?
சாப்பாட்டு அறைக்குள் சென்று, மீனாட்சி அம்மாள் சொன்னதற்காக, இரண்டு பணியாரங்களைக் கொறித்து விட்டு, பரீட்சை நோட்டுகள் திருத்தும் வேலை இருப்பதாகச் சொல்லிக் கையில் காபியை வாங்கிக் கொண்டு சந்தனா மீண்டும் அவளது அறைக்குத் திரும்பும் வரை, வேறு யாரும் அவள் கண்ணில் படவில்லை!
ஆனால், அதற்குள் வேறு யாரும் குறுக்கிடாத அந்தத் தனிமையில், "சந்தனாம்மா, தீபன் என்ன சொன்னாலும், அதைப் பெரிதாக நினைக்காதே! இந்த நாட்டுப் புத்தியும், அந்த நாட்டுப் பழக்கமுமாக, அவனுக்குள் ஒரே குழப்பம்! அதில், யாரைப் பார்த்தாலும், சந்தேகம்! அவன் மனைவி பிரிந்துவிட்ட விவகாரம் விஷயத்தை... விஷத்தை என்று தான் சொல்ல வேண்டும்... அதை ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிறது! இந்தக் குழப்பத்தில் அவன் ஏதாவது உளறினால், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதேம்மா! எனக்காக, இங்கே இருந்து விடும்மா! ப்ளீஸ்!" என்று மீனாட்சி, மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள்.
அப்படியே, வீட்டின் முன்புறமாக, அதட்டலாக மகனின் குரல் கேட்கவும், "அங்கேயே யாரைப் பார்த்துக் கத்துகிறானோ..." என்றவாறு அவசரமாக எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றாள்!
தீபனோடு வேறு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று மீனாட்சி சொல்லவே இல்லை!
அப்படியே யார் யார் வந்திருந்த போதும், ஆன்ட்டி அறிமுகம் செய்து வைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு, சந்தனா அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரவு உணவை மீனாட்சியுடனே சேர்ந்து உண்பது, அங்கே வந்த பின் அவளது வழக்கம்!
இருவரும் அன்றைய நிகழ்வுகள் பற்றிக் கலகலப்பாகப் பேசியபடி, உண்ணும் அந்த நேரத்தைச் சந்தனா ஆவலாக எதிர்பார்ப்பாள்!
ஆனால், இன்று தயக்கமாக இருந்தது!
சாப்பாட்டு மேஜையில் அவளை வீட்டை விட்டு வெளியேற்றச் சொன்ன மகனும் இருப்பானே!
தந்தையின் மனதைப் பிரதிபலிக்கும், அவனுடைய மகளும் கூட இருக்கலாம்!
இவர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்பது, எவ்வளவு சங்கடமாக இருக்கும்!
சங்கடம் அவளுக்கு மட்டுமல்ல!
மகனை எதிர்த்துப் பிடிவாதமாக அவளை வீட்டில் இருக்கச் சொன்ன மீனாட்சி அம்மாவுக்கும், கஷ்டம்தான்!
பசியில்லை என்று, பேசாமல் அறையில் இருந்து விடலாமா என்று கூட, ஒரு தரம் அவளுக்குத் தோன்றியது!
ஆனால், இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று யோசித்து, அறையில் கொஞ்சம் பிஸ்கட்டுகளைக் கூடச் சந்தனா வாங்கி வைத்திருக்கவில்லை!
பட்டினியும், அதன் விளைவாகச் சரியாகத் தூங்காமலும் இருந்துவிட்டு நாளைக்குப் பள்ளிக்குப் போனால், வாங்குகிற சம்பளத்துக்கு நியாயமாகப் பள்ளியில் உருப்படியாக என்ன வேலை செய்ய முடியும்?
அது மட்டுமல்ல!
மீனாட்சி ஆன்ட்டி முட்டாள் அல்ல!
எதற்காகப் பசியில்லை என்கிறாள் என்று புரிந்து, நிச்சயமாக வருத்தப்படுவாள்.
பட்டினியாக இருக்க விடவும் மாட்டாள்! அந்தப் பெரியவள் வந்து, அவளை வருந்தி அழைத்துச் சாப்பிட வைத்து, அதெல்லாம் வேறு ஆன்ட்டிக்குக் கஷ்டம்!
அத்தனையையும் யோசிக்கையில், கௌரவம் பாராமல், பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு போய், இரண்டு வாய் எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடுவது மேல் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!
ஒரு வேளை, தீபனே, அவனுடைய அன்னைக்காகச் சற்று இளகி, நல்லபடியாக நடந்துகொள்ளலாம்!
நல்லதே நினைக்கலாமே என்று எண்ணினால் கூட, அவளுக்கு அதில் நம்பிக்கை வர மறுத்தது! அவளது ஜன்னலை நிமிர்ந்து பார்த்த அவனது கோப முகம், அவ்வளவு எளிதாக மாறக் கூடியது அல்ல!
ஆனால், சந்தனா அஞ்சிய மாதிரி, அசம்பாவிதமாக, அவளை வாயிலில் வைத்து விரட்டியது போல, உணவருந்தும் போது, நிகழவில்லை! 'டேபிள் மானர்ஸ்' என்பார்களே, அது போல சாப்பிடுகையில் தீபன் உணவு வேலை நாகரிகம் கடைப்பிடித்தான் போலும்! சந்தனாவிடம் தனியாக எதுவும் பேசவில்லை என்றாலும், கடுகடுக்கவும் இல்லை!
அவன் தாயிடம் 'சுகம்' மருத்துவமனையைப் பற்றிய சில விவரங்களைக் கேட்டான்.
ஆனால் அப்படி அவன் விசாரித்தது, வெறும் உரையாடலுக்காக மட்டுமாகக் கேட்டது போலத் தோன்றாதது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பல ஆண்டுகளாக எட்டிக் கூடப் பாராத, என்னவென்று கேட்டுக் கூட இராத தொழில் மீது, அவனுக்கு எப்படி அக்கறை இருக்க முடியும்?
மீனாட்சி அம்மாவுக்கும் அதே ஆச்சரியம் இருந்ததோ என்னவோ, முதலில் சற்று விட்டேற்றியாகவே பதில் சொன்னவள், தொடர்ந்து மகனின் கேள்விகளில் வியப்பும், திருப்தியும் அடைந்து, விவரமாகவே விடை கூறலானாள்!
தொடர்ந்து, தாயும் மகனுமாக, மருத்துவமனை, அதில் புதிதாகத் தொடங்கி இருக்கும் சில துறைகள், அவற்றின் வேலை முறைகள் பற்றி, அலசி ஆராயத் தொடங்கினார்கள்.
விஷயம் எதுவும் புரியாததால், இந்த உரையாடல் போரடித்த போதும், ஒரு வகையில், சந்தனாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது! அவள் காரணமாகப் பிள்ளைக்கும் தாய்க்கும் இடையே, மனவேறுபாடு வந்து விடவில்லை! நல்லபடியாகப் பேசுகிற நிலையில் தான் இருக்கிறார்கள்! பெரு நிம்மதி!
ஆனால், இந்த நிம்மதி நிலைக்க வேண்டுமானால், ஆன்ட்டியின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது! அதை மீறி, அவளது திட்டத்தைச் செயல்படுத்தியே தீர வேண்டும்!
அதன் முதல்படியாக, மாலையில் மீனாட்சி அம்மா மருத்துவமனைக்கு வருவதாகத் திட்டம் இருக்கிறதா என்று விசாரித்தாள்.
மீனாட்சி விவரம் கேட்டதற்கு, "ஒரு சின்ன வேலை! கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது! ஆனால், டெஸ்ட் நோட்டுகள் திருத்த வேண்டும். வெளியே போவதால், திரும்பி வருவதற்கு, வேனைப் பிடிக்க முடியாது! நீங்கள் வருவது தெரிந்தால், மருத்துவமனையில் வைத்து விட்டு என் வேலையைப் பார்க்கப் போவேன்! நீங்கள் வரும்போது, கொண்டு வந்துவிடலாம்! எனக்குச் சுமை மிச்சம்!" என்றாள் சின்னவள்!
"கொண்டு வந்துவிடலாம்! ஆனால், அவ்வ்...வ்ளோ நோட்டுத் திருத்துவாயே! நோட்டிகளின் பளு தாங்காமல், டயர் வெடித்துவிட்டால், என்ன செய்வது? அதுதான் கவலையாக இருக்கிறது!" என்றாள் மீனாட்சி சோகமாக!
"அதெல்லாம் வெடிக்காது, ஆன்ட்டி! குறைந்தது நூறு கிலோ கனத்தில், நான் உங்களோடு வரும்போதே வெடிக்காத டயர், வெறும் இந்த மூன்று கிலோ சுமையில் தானா வெடிக்கப் போகிறது? நடக்கவே நடக்காது! பயமே படாதீர்கள்!" என்று சிரித்தாள் சந்தனா.
வழக்கமாக, மீனாட்சியும் அவளும் பேசிக் கொள்கிற தினுசில்தான்!
ஆனால், "நூறு கிலோவா? சேச்சே! அவ்வளவு மோசமாகக் கற்பனை கூடப் பண்ண முடியாது!" என்று விட்டு, அவளை ஏற இறங்க அளவிடுபவன் போலப் பார்த்து, "மிஞ்சி மிஞ்சி அறுபது கிலோ சொல்லலாம்! அதுவும் உயரத்தைக் கொண்டுதான்!" என்று தீபன் கூறவும், பிரமிப்பை மீறிக் கொண்டு, அவனது அளவிடும் பார்வையில், சந்தனாவின் உடல் சிலிர்த்தது.
ஆனால் உடனேயே, "புதிதாகத்தானே, இந்த வேலையில் சேர்ந்திருப்பாய், அதற்குள் டெஸ்ட் வைப்பதையெல்லாம் உன் பொறுப்பில் விடுகிறார்களா?" என்று அவன் சந்தேகத்துடன் கேட்கவும் அவளுக்கு எரிச்சல் வந்தது!
இவன் புத்தி என்ன மாதிரியெல்லாம் வேலை செய்கிறது!
இவனைப் பற்றித் துப்பறிந்து, ஏதோ பத்திரிகை, டீவிக்கு விவரம் கொடுப்பதற்காக, அவள் இந்த வேலையில் சேர்ந்து, அவன் தாயின் கவனத்தைக் கவர்ந்து இந்த வீட்டிற்குள் புகுந்திருக்கிறாளாம்!
"நான் சென்ற ஆண்டிலிருந்தே வேலை பார்க்கிறேன்!" என்று ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள் அவள்!
அயராமல், "ஓ அப்போதே, இதற்காகத் தொடங்கிவிட்டாயா?" என்று தீபன் கேட்கவும், அவள் தான் அயர்ந்து, வாயடைத்துப் போனாள்!
மீனாட்சி ஆன்ட்டி சொன்ன மாதிரி, இவனுக்குப் பைத்தியம் தான் பிடிக்கப் போகிறது!
பெரியவளின் கண்களிலும் ஒருவிதச் சலிப்பைக் காணவும், சட்டென விழி தாழ்த்தித் தட்டில் பார்வையைப் பதித்தாள் சந்தனா.
ஆனால், திருத்த வேண்டிய நோட்டுப் புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி, 'சுகம்' மருத்துவமனையில் கொடுத்து விட்டு, அண்ணன் இடம் பார்த்து வைத்திருந்த விடுதிக்குப் போய்க் கேட்டால், அங்கே இடமே இல்லை என்றார்கள்!
"எங்கள் இடத்துக்குப் போட்டி அதிகம்மா! அப்போதே, உங்கள் அண்ணன் பெரிய சிபாரிசோடு வந்ததால், இடம் கொடுத்தோம்! நீங்கள் தான் வரவே இல்லையே! அப்போதே, அந்த இடத்துக்கு வேறு ஆள் வந்துவிட்டது! இனி, இப்போதைக்கு, இங்கே இடம் கிடையாது!" என்றார்கள் கண்டிப்பாகவே!
அதை மட்டுமே நம்பிச் செல்லவில்லை அவள்!
உடன் வேலை செய்வோர், இன்னும் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சென்று, வேறு சில இடங்களில் விசாரித்ததிலும், அவளுக்குத் தோல்விதான் கிடைத்தது!
இல்லை, இல்லை என்று கேட்கக் கேட்க, அவளுக்குத் தன் மீதே ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது!
தும்பை விட்டு வாலைப் பிடிக்க ஓடுகிற கதையாக அண்ணன் அலைந்து திரிந்து ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தை அலட்சியமாக விட்டுத் தொலைத்து விட்டு, இப்போது இப்படி அலைகிறாளே!
எவனோ ஒரு மடத் திருடன் உருப்படியாய் ஒன்றும் இல்லாத வீட்டுக்குத் திருட வந்தான் என்றால், அவன் மீண்டும் வருவானோ என்று பயப்படுகிறவள், அவனை விடவும் எவ்வளவு பெரிய மடச்சி!
அப்படிப் பயந்து, அடுத்தவர் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு, இடம் கொடுத்த நல்ல பெண்மணிக்கு, இப்போது எவ்வளவு தொல்லை!
தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி, அவள் சோர்வுடன் வீடு திரும்பினால், கண்ணில் ஆவல் மின்ன, அவளைத் தேடி வந்தாள், தீபனுடைய மகள் மித்ரா!
பிரியமாக அழைத்த போது முகத்தைத் திருப்பிக் கொண்ட மித்ராவிடம், நட்பு, பாசம், பிரியம் என்று சந்தனா பெரிதாக எதையும் எதிர்பார்த்து விடவில்லை!
முக்கியமான காரணம், அவள் தீபனுடைய மகள்!
தன் மனதில் இருக்கும் விஷத்தில், எத்தனை சதவீதத்தை, மகள் மனதிலும் அவன் புகுத்தி வைத்திருக்கிறானோ!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சின்னப் பெண்! உடனடியாகப் புதியவளான சந்தனாவிடம் சிரிக்க வேண்டும் என்றோ, அவளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாதுதான்!
ஆனால், அப்படித் தயங்குகிற குழந்தைகள் வெட்கப்படுவார்கள்... அல்லது பயத்துடன் பார்ப்பார்கள்!
இரண்டும் இல்லாமல், குழந்தை முகம் திரும்பியதே விசித்திரம் தான்! கூடவே, அந்த சந்தேகமான பார்வை வேறு!
அதிலும், உணவருந்தும் போது, சந்தனாவை மித்ரா கண்டு கொள்ளவே இல்லை எனவும், தந்தையின் வெறுப்பு, சிறுமியின் மனதிலும் ஏறியிருப்பதாகவே, அவள் எண்ணியிருந்தாள்!
ஒரு சின்னக் குழந்தையின் மனதைக் கெடுத்து வைத்திருக்கிறானே என்று உள்ளூர, வருத்தமும் இருந்தது!
ஆனால், மித்ராவே அவளைத் தேடி வரவும், ஆச்சரியத்தோடு, சந்தனாவுக்குச் சந்தோஷமும் உண்டாயிற்று!
வீடு வரும் போது இருந்த சோர்வு மறைந்துவிட, முறுவலோடு அவளை வரவேற்றாள்.
மித்ராவின் மனதில் மிச்சமிருந்த தயக்கத்தை நீக்கும் முயற்சியாக, "உன் பாப்பா ரொம்ப அழகாக இருக்கிறாளே! இவள் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் விசாரித்தாள்.
சந்தனா நினைத்தபடியே, மித்ராவின் முகம் மலர்ந்தது! "பாப்பா பெயர் ஜேடி!" என்று சந்தோஷமாகச் சொன்னவள், சந்தனாவை ஆச்சரியமாகப் பார்த்து, "உனக்கு இங்கிலீஷ் தெரிகிறதே! சமையல் லேடி, தோட்டக்காரன் ஒருத்தருக்கும் தெரியலை! கிராண்ட்மா மட்டும் பேசுது! அதுவும், கோயிலுக்குப் போயிருக்குது! அப்பாவும் வேலை செய்கிறப்போ, வேறே யார்கிட்டேயும் பேச முடியலை! ஒரே போர்!" என்று மனதில் உள்ளதைக் கொட்டினாள்.
பாவம்! தனிமையில் போரடித்துப் போயிருக்கிறாள்.
இன்று, ஆன்ட்டி கோயிலுக்குப் போகிற நாள்!
தந்தையும், ஏதோ வேலை செய்யப் போய்விடவே, இவளோடு பேச ஆள் இல்லை!
பாட்டியோடு கோயிலுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அங்கே யாரும் துப்புத் துலக்க வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், தந்தை அனுமதித்திருக்க மாட்டான்!
என்ன பயம்?
அப்படி என்ன பெரிய மனிதன்... அல்லது, குற்றவாளியேதானா?
சேச்சே! அப்படியெல்லாம் இராது! மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன், கிரிமினலாக இருக்க முடியாது!
தலையை உலுக்கி விட்டுக் கொண்டு, சிறுமியோடு உரையாட முயன்ற சந்தனா திகைத்தாள்!
அங்கே வீட்டில் என்ன செய்வாய்? எப்படிப் பொழுதைப் போக்குவாய் என்று, புதிதாக அறிமுகமான ஒரு சிறுமியிடம் கேட்கும் எந்தக் கேள்வியை மித்ராவிடம் கேட்டாலும், அவளுடைய தந்தை குற்றம் சாட்டியது போல, அவளைப் பற்றித் துப்புத் துலக்குவதாகவே அமைந்தது!
ஆனால், அவளைப் பற்றி எதுவும் தெரியாமல், அவளோடு இணைந்து பேசுவது எப்படி?
யோசித்து விட்டு, "அங்கே உனக்குப் பிடித்த மாதிரி, டீவி நிகழ்ச்சிகள் நிறைய உண்டா? என்று வினவினாள்.
அப்பாடா! குடைவது போல இல்லாத ஒரு கேள்வியைக் கண்டு பிடித்துவிட்டாள்!
தோள் வரை கிடந்த, அடர்ந்த கூந்தல் துள்ளிவிழ, "ஆமாம்! ஆனால் எனக்கு என் கம்ப்யூட்டரில் சிடி போட்டுப் பார்ப்பதுதான் ரொம்பப் பிடிக்கும்!" என்று மித்ரா உற்சாகத்துடன் பதில் சொன்னது மிக அழகாக இருந்தது!
அவளை அள்ளி அணைக்கும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஹாரிபாட்டர் பார்ப்பாயா? ஹாரிபாட்டரில் எது ரொம்பப் பிடிக்கும்?" என்று மேலே விசாரித்தாள் சந்தனா.
"பறக்கும் கார் வருமே! அதுதான் ரொம்ம்...பப் பிடிக்கும்!"
"அப்புறம்?"
"நார்னியா... அது கூட மாஜிக்தான்! அப்புறம் 'டிஜிமோன்'... டிஜிமோன் தெரியுமா?"
நல்லவேளையாக, அந்த ஜப்பானியக் கார்ட்டூன் பற்றி சந்தனா அறிந்து வைத்திருந்தது, மித்ராவின் மனதில், சந்தனாவிடம் மதிப்பை ஏற்படுத்தியது!
இன்னும் பல்வேறு டீவி நிகழ்ச்சிகள், அவற்றுள் நான்சிக்குப் பிடித்தது, மிச்சிக்குப் பிடித்தது என்று இருவரும் அரட்டையில் ஈடுபட்டனர்!
இடையே எப்படியோ மித்ரா, சந்தனாவின் மடிக்கு வந்து சேர்ந்திருந்தாள்!
"மிச்சி வீட்டிலே பகல்லே யாரும் கிடையாதா? அவன் பெரியவர்களோட..." என்று சந்தோஷமாக அளந்து கொண்டிருந்த சிறுமியின் குரல் சட்டென நின்று விட, அவசரமாகச் சந்தனாவின் மடியிலிருந்து குதித்துக் கீழிறங்கினாள் அவள்!
"மித்ரா!" என்ற அதட்டலும், மாடிப்படியில் கேட்ட அழுத்தமான காலடிச் சத்தமும் காரணத்தை விளக்கிவிட, அதுவரை மறக்கப்பட்டுப் பக்கத்தில் கிடந்த பொம்மையைத் தூக்கிச் சிறுமியின் கையில் கொடுத்தாள் சந்தனா.
அவசரத்தில் தடுமாறிப் பொம்மையைத் தவற விட்டு, மீண்டும் எடுத்துக் கொண்டு அவள் விரைகையில், அவளுடைய தந்தை அங்கேயே வந்துவிட்டான்!
"இங்கே என்ன வேலை உனக்கு?" என்று அவன் அதட்டிய போது, சந்தனாவுக்கே திக்கென்றது!
அச்சத்தில் கண்கள் விரிய விழித்த மித்ரா, சட்டென, சந்தனாவைக் கை காட்டினாள்!
"இ...இந்த ஆன்ட்டிதான்... ஆன்ட்டிதான் வா வா என்று, என்னைக் கூப்பிட்டு..." என்று குரல் நடுங்கக் கூறினாள்.
ஒரு கணம் பிரமித்த போதும், சந்தனாவுக்கு உடனே விஷயம் புரிந்தது!
தந்தையின் கோபத்துக்கு அஞ்சிய சிறுமி, தான் தப்பிப்பதற்காகப் பொய் சொல்லியேனும், அதைத் திசை திருப்பப் பார்க்கிறாள்!
சந்தனாவின் திசைக்கு!
ஆனால், 'சும்மா ஆடுகிற ஒன்று, கொட்டுக் கண்டால்...' என்று சொல்வார்களே என்று எண்ணியவாறே சின்னவளைப் பார்த்தாள் சந்தனா.
மித்ராவின் பெரிய விழிகளில் கலக்கத்தைக் காணவும், சட்டென சுதாரித்து, "ஆமாம் மிஸ்டர் தீபன், உடன் விளையாட யாரும் இல்லாமல், குழந்தை கீழே போரடித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். அதனால் தான் கொஞ்சம் விளையாட்டுக் காட்டலாம் என்று கூட்டி வந்தேன்!" என்று பழியைத் தன் பேரிலேயே போட்டுக் கொண்டாள்!
மித்ராவின் பெரிய கண்கள் மீண்டும் விரிந்து, இப்போது தந்தையையும், சந்தனாவையும் மாறி மாறிப் பார்த்தன.
மித்ராவை விடப் பெரியவர்கள் என்றாலும், வகுப்புப் பிள்ளைகளோடு நன்றாகவே பழகும் வழக்கத்தால், அவளது மனதில் இருப்பதைச் சந்தனாவால் ஊகிக்க முடிந்தது!
சந்தனா காட்டிக் கொடுக்காததால், அவளைப் பற்றி நன்றியுணர்ச்சி! அவளைப் பொய்யாக மாட்டி வைத்த கூச்சம்!
கூடவே தந்தை இதை நம்புவானோ, மாட்டானோ என்ற கலக்கம்!
தீபனோ, "அடடா! என்ன இரக்க குணம்! அப்படியே தெருவில் இறங்கிப் போய், அங்கே பிச்சையெடுத்துத் திரிகிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதுதானே?" என்றான் இளக்காரமாக!
பழமொழி ரொம்பவே சரிதான்! ஓர் இணுக்குக் கிடைத்ததும், எவ்வளவு அவமதிப்பாகப் பேசுகிறான்! மித்ராவைக் காட்டிக் கொடுக்காமல், இவனை உணர வைப்பது எப்படி என்று சந்தனா யோசிக்கையிலேயே, அவன் தொடர்ந்தான்.
"குழந்தைக்குப் போரடிக்கிறதே என்று இந்தம்மா விளையாட்டுக் காட்டினாளாமே! யாரிடம் இந்தக் கதை! தனியே இருந்த பிள்ளையை, யாரும் அறியாமல் பிடித்து வந்து, என்னைப் பற்றித் தூண்டித் துருவி, விசாரித்துக் கொண்டிருக்கிறாய்! இப்போது, கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன் என்பதால், இந்தக் கதை விடுகிறாய்! இந்த மாதிரிப் புளுகு மூட்டைகளை நம்புவதற்கு, நான் ஆளல்ல! அதை முதலில் தெரிந்து கொள்!" என்றான் கடுமையான குரலில்!
சந்தனாவுக்கும் சீற்றம் மிகுந்துவிட, "அப்படி எதை விசாரித்து அறிந்து விடுவேன் என்று இந்தப் பயம்? அங்கே யுஎஸ்சில் அடுக்கடுக்காய்ச் செய்துவிட்டு வந்த கொலைகளைப் பற்றியா? அல்லது, கொள்ளைகள் பற்றியா? எதற்காக இப்படிப் பயந்து நடுங்குகிறீர்கள்?" என்று ஆத்திரத்துடன் கேட்டு விட்டாள்.
ஒரு கணம் திகைத்துப் பேச்சிழந்து நின்ற தீபன், சட்டெனத் தலையைப் பின்னே தள்ளி, வாய்விட்டு நகைத்தான்!
மண்ணைத் தின்ற கண்ணனின் வாய்க்குள் உலகத்தைப் பார்த்த யாசோதைக்குக் கூட, இவ்வளவு பிரமிப்பு ஏற்பட்டிராது!
வரிசைப் பற்கள் பளிச்சிட, கனைப்போ காட்டுத்தனமோ இல்லாமல், இவனுக்குப் போய், இப்படி ஒரு சிரிப்பா?...
சந்தனா வியந்து நிற்க, மித்ரா மகிழ்ச்சியோடு கையைக் கொட்டிக் குதித்தாள்.
"ஹைய்யா! அப்பா சிரிச்சாச்சுது! அப்பாவுக்குக் கோபம் போயாச்சுது!"
'அப்பா' வை மட்டும் தமிழில் சொல்லி அவள் குதித்தது, சந்தனாவிடமும் புன்னகையை வரவழைத்தது!
அவன் சிரிப்பு மறைய, சந்தனாவைக் கூர்ந்து ஆராய்ந்தான்.
அதன் பின் "நடிப்பு பிரமாதம்!" என்றான்.
"என்ன நடிப்பு?" என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டாள் சந்தனா.
பெரியவர்களின் குரல் மாறுபடுவதைக் கவனித்த மித்ரா, அவர்கள் இருவரும் வெட்டுவது போலப் பார்த்து நின்ற அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்!
"என்ன நடிப்பா? அது தெரியாமலா நிஜம்போல, அப்படி நடித்தாய்? அடேயப்பா! ஊகூம்! இவ்வளவு கெட்டிக்கார நடிகையை வீட்டில் வைத்துக் கொண்டு, என்னால் நிம்மதியாக இருக்கவே முடியாது! அதனால், சீக்கிரமே வேறு இடம் பார்த்துக் கொண்டு, இங்கிருந்து போய்விடு தாயே!" என்றான் தீபன்!
வேறு இடம் பார்ப்பதா?
அன்று அடைந்த தோல்விகள் சந்தனாவின் மனதில் பவனி வந்தன!
இவன் வேறு, சும்மாச் சும்மா போ போ என்று கொண்டு!
அப்படிச் சொல்வதைக் கேட்க நேரும் போது, அடுத்தவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று யோசிக்கவே தோன்றாதா?
வருத்தத்தை மறைத்து, எரிச்சலைக் காட்டி, "அதை என்னை இங்கே அன்போடு அழைத்து வந்த உங்கள் அம்மா சொல்லட்டும் போய்விடுகிறேன்!" என்றாள் அலட்சியமாக!
தீபனின் முகம் கன்றியது!
அவனுடைய அம்மாவாவது இவளைப் போகச் சொல்வதாவது! நடக்கிற காரியமா?
"அம்மாவைத்தான் நன்றாக மயக்கி வைத்திருக்கிறாயே!" என்றான் அவன் கைத்த குரலில்.
"ஆமாம்! மீனாட்சி ஆன்ட்டி பச்சைக் குழந்தை! சாக்லேட்டைக் கொடுத்து மயக்கி விட்டேன்!" என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் சந்தனா.
"என்னது?"
நிமிர்ந்து, "இது ஆன்ட்டி எனக்குக் கொடுத்திருக்கும் அறை! இங்கிருந்து நீங்கள் வெளியே போனால், நான் என் வேலையைப் பார்க்க வசதியாக இருக்கும்!" என்றவள், அவன் இளக்காரமாக ஏதோ சொல்ல வாய் திறக்கவும், அவசரமாக, "இந்த வேலையை!" என்று, அருகில் அரை மீட்டர் உயரத்துக்குக் கட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளி நோட்டுப் புத்தகங்களைக் காட்டினாள்!
கட்டின் மேலே இருந்த காகிதத்தில் 'ஐந்தாம் வகுப்பு, மாதத் தேர்வுப் புத்தகம், தமிழ்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததை, அவன் உற்றுக் கவனிப்பதைக் கண்டதும், அவளுக்குச் சுருசுருவென்று, உள்ளே புகைந்தது!
எதிலும் சந்தேகமா? விட்டால், மேலே இருக்கும் காகிதத்தை எடுத்துவிட்டுக் கட்டில் இருக்கும் ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தையும் சோதிப்பான் போல!
"நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், நான் மனச்சாட்சிப்படி வேலை செய்கிறவள்! இந்தக் காலத்தில், தமிழ் நோட்டுகளைச் சரியாகத் திருத்த, நேரம் அதிகம் பிடிக்கும்! அதனால், தயவு பண்ணிச் சற்று சீக்கிரமாக இடத்தைக் காலி செய்தீர்கள் என்றால், நான் வேலையைத் தொடங்க வசதியாக இருக்கும்!" என்றாள் குரலில் சிறு எள்ளலை விரவி!
ஆனால், "சற்று முன், என் மகளை ஏமாற்றிக் குல்லாப் போட்டுக் கொண்டிருந்த போது, இந்த மனசாட்சி எங்கே...கொஞ்சம் ஓய்வெடுக்கப் போயிருந்தது போல!" என்று தீபன் அவளது குரலிலேயே திருப்பிக் கொடுக்கவும், அவளுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது!
ஆனால், இவன் கூடச் சேர்ந்து சிரிக்கிறவன் இல்லையே!
அல்லது சிரிப்பானோ?
இப்படித்தான் என்று நம்ப முடியாத பிறவி! எதற்கு வம்பு?
முகம் மாறாமல் காத்து, "என்ன செய்வது? சில பேரின் சகவாசத்தில், உலகமே மறந்து போகிறது! வேறு சில பேரைப் பார்க்கிற போது தானே, கஷ்டமான கடமைகள், அவசரமாக நினைவு வருகின்றன!" என்றாள் நக்கலாக அவள்.
இப்போது, அவளைக் கூர்ந்து நோக்கினான் தீபன்.
பிறகு, "கவனி! என் பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு! அளவு மீறி, அதைச் சோதிக்காமல் இருப்பது, உனக்கு நல்லது!" என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து சென்றான்.
ஆனால், அப்படித் தயங்குகிற குழந்தைகள் வெட்கப்படுவார்கள்... அல்லது பயத்துடன் பார்ப்பார்கள்!
இரண்டும் இல்லாமல், குழந்தை முகம் திரும்பியதே விசித்திரம் தான்! கூடவே, அந்த சந்தேகமான பார்வை வேறு!
அதிலும், உணவருந்தும் போது, சந்தனாவை மித்ரா கண்டு கொள்ளவே இல்லை எனவும், தந்தையின் வெறுப்பு, சிறுமியின் மனதிலும் ஏறியிருப்பதாகவே, அவள் எண்ணியிருந்தாள்!
ஒரு சின்னக் குழந்தையின் மனதைக் கெடுத்து வைத்திருக்கிறானே என்று உள்ளூர, வருத்தமும் இருந்தது!
ஆனால், மித்ராவே அவளைத் தேடி வரவும், ஆச்சரியத்தோடு, சந்தனாவுக்குச் சந்தோஷமும் உண்டாயிற்று!
வீடு வரும் போது இருந்த சோர்வு மறைந்துவிட, முறுவலோடு அவளை வரவேற்றாள்.
மித்ராவின் மனதில் மிச்சமிருந்த தயக்கத்தை நீக்கும் முயற்சியாக, "உன் பாப்பா ரொம்ப அழகாக இருக்கிறாளே! இவள் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் விசாரித்தாள்.
சந்தனா நினைத்தபடியே, மித்ராவின் முகம் மலர்ந்தது! "பாப்பா பெயர் ஜேடி!" என்று சந்தோஷமாகச் சொன்னவள், சந்தனாவை ஆச்சரியமாகப் பார்த்து, "உனக்கு இங்கிலீஷ் தெரிகிறதே! சமையல் லேடி, தோட்டக்காரன் ஒருத்தருக்கும் தெரியலை! கிராண்ட்மா மட்டும் பேசுது! அதுவும், கோயிலுக்குப் போயிருக்குது! அப்பாவும் வேலை செய்கிறப்போ, வேறே யார்கிட்டேயும் பேச முடியலை! ஒரே போர்!" என்று மனதில் உள்ளதைக் கொட்டினாள்.
பாவம்! தனிமையில் போரடித்துப் போயிருக்கிறாள்.
இன்று, ஆன்ட்டி கோயிலுக்குப் போகிற நாள்!
தந்தையும், ஏதோ வேலை செய்யப் போய்விடவே, இவளோடு பேச ஆள் இல்லை!
பாட்டியோடு கோயிலுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அங்கே யாரும் துப்புத் துலக்க வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், தந்தை அனுமதித்திருக்க மாட்டான்!
என்ன பயம்?
அப்படி என்ன பெரிய மனிதன்... அல்லது, குற்றவாளியேதானா?
சேச்சே! அப்படியெல்லாம் இராது! மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன், கிரிமினலாக இருக்க முடியாது!
தலையை உலுக்கி விட்டுக் கொண்டு, சிறுமியோடு உரையாட முயன்ற சந்தனா திகைத்தாள்!
அங்கே வீட்டில் என்ன செய்வாய்? எப்படிப் பொழுதைப் போக்குவாய் என்று, புதிதாக அறிமுகமான ஒரு சிறுமியிடம் கேட்கும் எந்தக் கேள்வியை மித்ராவிடம் கேட்டாலும், அவளுடைய தந்தை குற்றம் சாட்டியது போல, அவளைப் பற்றித் துப்புத் துலக்குவதாகவே அமைந்தது!
ஆனால், அவளைப் பற்றி எதுவும் தெரியாமல், அவளோடு இணைந்து பேசுவது எப்படி?
யோசித்து விட்டு, "அங்கே உனக்குப் பிடித்த மாதிரி, டீவி நிகழ்ச்சிகள் நிறைய உண்டா? என்று வினவினாள்.
அப்பாடா! குடைவது போல இல்லாத ஒரு கேள்வியைக் கண்டு பிடித்துவிட்டாள்!
தோள் வரை கிடந்த, அடர்ந்த கூந்தல் துள்ளிவிழ, "ஆமாம்! ஆனால் எனக்கு என் கம்ப்யூட்டரில் சிடி போட்டுப் பார்ப்பதுதான் ரொம்பப் பிடிக்கும்!" என்று மித்ரா உற்சாகத்துடன் பதில் சொன்னது மிக அழகாக இருந்தது!
அவளை அள்ளி அணைக்கும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஹாரிபாட்டர் பார்ப்பாயா? ஹாரிபாட்டரில் எது ரொம்பப் பிடிக்கும்?" என்று மேலே விசாரித்தாள் சந்தனா.
"பறக்கும் கார் வருமே! அதுதான் ரொம்ம்...பப் பிடிக்கும்!"
"அப்புறம்?"
"நார்னியா... அது கூட மாஜிக்தான்! அப்புறம் 'டிஜிமோன்'... டிஜிமோன் தெரியுமா?"
நல்லவேளையாக, அந்த ஜப்பானியக் கார்ட்டூன் பற்றி சந்தனா அறிந்து வைத்திருந்தது, மித்ராவின் மனதில், சந்தனாவிடம் மதிப்பை ஏற்படுத்தியது!
இன்னும் பல்வேறு டீவி நிகழ்ச்சிகள், அவற்றுள் நான்சிக்குப் பிடித்தது, மிச்சிக்குப் பிடித்தது என்று இருவரும் அரட்டையில் ஈடுபட்டனர்!
இடையே எப்படியோ மித்ரா, சந்தனாவின் மடிக்கு வந்து சேர்ந்திருந்தாள்!
"மிச்சி வீட்டிலே பகல்லே யாரும் கிடையாதா? அவன் பெரியவர்களோட..." என்று சந்தோஷமாக அளந்து கொண்டிருந்த சிறுமியின் குரல் சட்டென நின்று விட, அவசரமாகச் சந்தனாவின் மடியிலிருந்து குதித்துக் கீழிறங்கினாள் அவள்!
"மித்ரா!" என்ற அதட்டலும், மாடிப்படியில் கேட்ட அழுத்தமான காலடிச் சத்தமும் காரணத்தை விளக்கிவிட, அதுவரை மறக்கப்பட்டுப் பக்கத்தில் கிடந்த பொம்மையைத் தூக்கிச் சிறுமியின் கையில் கொடுத்தாள் சந்தனா.
அவசரத்தில் தடுமாறிப் பொம்மையைத் தவற விட்டு, மீண்டும் எடுத்துக் கொண்டு அவள் விரைகையில், அவளுடைய தந்தை அங்கேயே வந்துவிட்டான்!
"இங்கே என்ன வேலை உனக்கு?" என்று அவன் அதட்டிய போது, சந்தனாவுக்கே திக்கென்றது!
அச்சத்தில் கண்கள் விரிய விழித்த மித்ரா, சட்டென, சந்தனாவைக் கை காட்டினாள்!
"இ...இந்த ஆன்ட்டிதான்... ஆன்ட்டிதான் வா வா என்று, என்னைக் கூப்பிட்டு..." என்று குரல் நடுங்கக் கூறினாள்.
ஒரு கணம் பிரமித்த போதும், சந்தனாவுக்கு உடனே விஷயம் புரிந்தது!
தந்தையின் கோபத்துக்கு அஞ்சிய சிறுமி, தான் தப்பிப்பதற்காகப் பொய் சொல்லியேனும், அதைத் திசை திருப்பப் பார்க்கிறாள்!
சந்தனாவின் திசைக்கு!
ஆனால், 'சும்மா ஆடுகிற ஒன்று, கொட்டுக் கண்டால்...' என்று சொல்வார்களே என்று எண்ணியவாறே சின்னவளைப் பார்த்தாள் சந்தனா.
மித்ராவின் பெரிய விழிகளில் கலக்கத்தைக் காணவும், சட்டென சுதாரித்து, "ஆமாம் மிஸ்டர் தீபன், உடன் விளையாட யாரும் இல்லாமல், குழந்தை கீழே போரடித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். அதனால் தான் கொஞ்சம் விளையாட்டுக் காட்டலாம் என்று கூட்டி வந்தேன்!" என்று பழியைத் தன் பேரிலேயே போட்டுக் கொண்டாள்!
மித்ராவின் பெரிய கண்கள் மீண்டும் விரிந்து, இப்போது தந்தையையும், சந்தனாவையும் மாறி மாறிப் பார்த்தன.
மித்ராவை விடப் பெரியவர்கள் என்றாலும், வகுப்புப் பிள்ளைகளோடு நன்றாகவே பழகும் வழக்கத்தால், அவளது மனதில் இருப்பதைச் சந்தனாவால் ஊகிக்க முடிந்தது!
சந்தனா காட்டிக் கொடுக்காததால், அவளைப் பற்றி நன்றியுணர்ச்சி! அவளைப் பொய்யாக மாட்டி வைத்த கூச்சம்!
கூடவே தந்தை இதை நம்புவானோ, மாட்டானோ என்ற கலக்கம்!
தீபனோ, "அடடா! என்ன இரக்க குணம்! அப்படியே தெருவில் இறங்கிப் போய், அங்கே பிச்சையெடுத்துத் திரிகிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதுதானே?" என்றான் இளக்காரமாக!
பழமொழி ரொம்பவே சரிதான்! ஓர் இணுக்குக் கிடைத்ததும், எவ்வளவு அவமதிப்பாகப் பேசுகிறான்! மித்ராவைக் காட்டிக் கொடுக்காமல், இவனை உணர வைப்பது எப்படி என்று சந்தனா யோசிக்கையிலேயே, அவன் தொடர்ந்தான்.
"குழந்தைக்குப் போரடிக்கிறதே என்று இந்தம்மா விளையாட்டுக் காட்டினாளாமே! யாரிடம் இந்தக் கதை! தனியே இருந்த பிள்ளையை, யாரும் அறியாமல் பிடித்து வந்து, என்னைப் பற்றித் தூண்டித் துருவி, விசாரித்துக் கொண்டிருக்கிறாய்! இப்போது, கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன் என்பதால், இந்தக் கதை விடுகிறாய்! இந்த மாதிரிப் புளுகு மூட்டைகளை நம்புவதற்கு, நான் ஆளல்ல! அதை முதலில் தெரிந்து கொள்!" என்றான் கடுமையான குரலில்!
சந்தனாவுக்கும் சீற்றம் மிகுந்துவிட, "அப்படி எதை விசாரித்து அறிந்து விடுவேன் என்று இந்தப் பயம்? அங்கே யுஎஸ்சில் அடுக்கடுக்காய்ச் செய்துவிட்டு வந்த கொலைகளைப் பற்றியா? அல்லது, கொள்ளைகள் பற்றியா? எதற்காக இப்படிப் பயந்து நடுங்குகிறீர்கள்?" என்று ஆத்திரத்துடன் கேட்டு விட்டாள்.
ஒரு கணம் திகைத்துப் பேச்சிழந்து நின்ற தீபன், சட்டெனத் தலையைப் பின்னே தள்ளி, வாய்விட்டு நகைத்தான்!
மண்ணைத் தின்ற கண்ணனின் வாய்க்குள் உலகத்தைப் பார்த்த யாசோதைக்குக் கூட, இவ்வளவு பிரமிப்பு ஏற்பட்டிராது!
வரிசைப் பற்கள் பளிச்சிட, கனைப்போ காட்டுத்தனமோ இல்லாமல், இவனுக்குப் போய், இப்படி ஒரு சிரிப்பா?...
சந்தனா வியந்து நிற்க, மித்ரா மகிழ்ச்சியோடு கையைக் கொட்டிக் குதித்தாள்.
"ஹைய்யா! அப்பா சிரிச்சாச்சுது! அப்பாவுக்குக் கோபம் போயாச்சுது!"
'அப்பா' வை மட்டும் தமிழில் சொல்லி அவள் குதித்தது, சந்தனாவிடமும் புன்னகையை வரவழைத்தது!
அவன் சிரிப்பு மறைய, சந்தனாவைக் கூர்ந்து ஆராய்ந்தான்.
அதன் பின் "நடிப்பு பிரமாதம்!" என்றான்.
"என்ன நடிப்பு?" என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டாள் சந்தனா.
பெரியவர்களின் குரல் மாறுபடுவதைக் கவனித்த மித்ரா, அவர்கள் இருவரும் வெட்டுவது போலப் பார்த்து நின்ற அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்!
"என்ன நடிப்பா? அது தெரியாமலா நிஜம்போல, அப்படி நடித்தாய்? அடேயப்பா! ஊகூம்! இவ்வளவு கெட்டிக்கார நடிகையை வீட்டில் வைத்துக் கொண்டு, என்னால் நிம்மதியாக இருக்கவே முடியாது! அதனால், சீக்கிரமே வேறு இடம் பார்த்துக் கொண்டு, இங்கிருந்து போய்விடு தாயே!" என்றான் தீபன்!
வேறு இடம் பார்ப்பதா?
அன்று அடைந்த தோல்விகள் சந்தனாவின் மனதில் பவனி வந்தன!
இவன் வேறு, சும்மாச் சும்மா போ போ என்று கொண்டு!
அப்படிச் சொல்வதைக் கேட்க நேரும் போது, அடுத்தவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று யோசிக்கவே தோன்றாதா?
வருத்தத்தை மறைத்து, எரிச்சலைக் காட்டி, "அதை என்னை இங்கே அன்போடு அழைத்து வந்த உங்கள் அம்மா சொல்லட்டும் போய்விடுகிறேன்!" என்றாள் அலட்சியமாக!
தீபனின் முகம் கன்றியது!
அவனுடைய அம்மாவாவது இவளைப் போகச் சொல்வதாவது! நடக்கிற காரியமா?
"அம்மாவைத்தான் நன்றாக மயக்கி வைத்திருக்கிறாயே!" என்றான் அவன் கைத்த குரலில்.
"ஆமாம்! மீனாட்சி ஆன்ட்டி பச்சைக் குழந்தை! சாக்லேட்டைக் கொடுத்து மயக்கி விட்டேன்!" என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் சந்தனா.
"என்னது?"
நிமிர்ந்து, "இது ஆன்ட்டி எனக்குக் கொடுத்திருக்கும் அறை! இங்கிருந்து நீங்கள் வெளியே போனால், நான் என் வேலையைப் பார்க்க வசதியாக இருக்கும்!" என்றவள், அவன் இளக்காரமாக ஏதோ சொல்ல வாய் திறக்கவும், அவசரமாக, "இந்த வேலையை!" என்று, அருகில் அரை மீட்டர் உயரத்துக்குக் கட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளி நோட்டுப் புத்தகங்களைக் காட்டினாள்!
கட்டின் மேலே இருந்த காகிதத்தில் 'ஐந்தாம் வகுப்பு, மாதத் தேர்வுப் புத்தகம், தமிழ்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததை, அவன் உற்றுக் கவனிப்பதைக் கண்டதும், அவளுக்குச் சுருசுருவென்று, உள்ளே புகைந்தது!
எதிலும் சந்தேகமா? விட்டால், மேலே இருக்கும் காகிதத்தை எடுத்துவிட்டுக் கட்டில் இருக்கும் ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தையும் சோதிப்பான் போல!
"நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், நான் மனச்சாட்சிப்படி வேலை செய்கிறவள்! இந்தக் காலத்தில், தமிழ் நோட்டுகளைச் சரியாகத் திருத்த, நேரம் அதிகம் பிடிக்கும்! அதனால், தயவு பண்ணிச் சற்று சீக்கிரமாக இடத்தைக் காலி செய்தீர்கள் என்றால், நான் வேலையைத் தொடங்க வசதியாக இருக்கும்!" என்றாள் குரலில் சிறு எள்ளலை விரவி!
ஆனால், "சற்று முன், என் மகளை ஏமாற்றிக் குல்லாப் போட்டுக் கொண்டிருந்த போது, இந்த மனசாட்சி எங்கே...கொஞ்சம் ஓய்வெடுக்கப் போயிருந்தது போல!" என்று தீபன் அவளது குரலிலேயே திருப்பிக் கொடுக்கவும், அவளுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது!
ஆனால், இவன் கூடச் சேர்ந்து சிரிக்கிறவன் இல்லையே!
அல்லது சிரிப்பானோ?
இப்படித்தான் என்று நம்ப முடியாத பிறவி! எதற்கு வம்பு?
முகம் மாறாமல் காத்து, "என்ன செய்வது? சில பேரின் சகவாசத்தில், உலகமே மறந்து போகிறது! வேறு சில பேரைப் பார்க்கிற போது தானே, கஷ்டமான கடமைகள், அவசரமாக நினைவு வருகின்றன!" என்றாள் நக்கலாக அவள்.
இப்போது, அவளைக் கூர்ந்து நோக்கினான் தீபன்.
பிறகு, "கவனி! என் பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு! அளவு மீறி, அதைச் சோதிக்காமல் இருப்பது, உனக்கு நல்லது!" என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து சென்றான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சந்தனா ஓரளவு எதிர்பார்த்தது போலவே, விரைவிலேயே ஒரு நாள், அவளுடைய தந்தை வேலையென்று அவனது அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டிருந்த நேரத்தில், மித்ரா அவளைத் தேடி வந்து நன்றி தெரிவித்தாள்.
"அன்றைக்கு அப்பாவுக்குக் கோபம் என்றதும் ரொம்பப் பயந்துவிட்டேன், ஆன்ட்டி! பெரியவர்கள் யார் கிட்டேயும், நான் பேசினால் அப்பாவுக்குப் பிடிக்காது! ஒரு தரம் போனிலே பேசினதுக்கே, அப்பா போனையே உடைச்சிட்டார்! இப்போ, போன் இல்லையே, என்னையே உடைச்சிடுவாரோன்னு பயமாய் இருந்தது..."
முகத்தில் பாவனை காட்டி அவள் பேசிய தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!
அதைக் காட்டிக் கொள்ளாமல், "அதனாலே, ஆன்ட்டியை உடைத்தால் பரவாயில்லை என்று, என் தலையில் பழியைப் போட்டுவிட்டாயாக்கும்!" என்றாள் கிண்டலாக.
ஒரு கணம் பேந்த விழித்துவிட்டு, "நீ பெரிய ஆள் இல்லையா? பெரியவர்களை உடைக்கவே முடியாது, அடித்தாலும் திருப்பி அடிப்பாங்களோன்னு பயந்து, அடிக்க மாட்டாங்கன்னு, மிச்சி சொன்னானே! அதனாலேதான், அப்படிச் சொன்னேன்!" என்றவள் சந்தனாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "உன்னை உடைக்கலை! ஆனால், அப்பா உன்னை அடித்தாரா?" என்று கண்கள் விரியக் கவலையுடன் கேட்டாள் குழந்தை.
இல்லை என்பது போலத் தலையசைத்தவளுக்கு, சின்னப் பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. காரணகாரியம் கண்டுபிடித்து, இப்படித்தான் என்று முடிவு வேறு!
ஆனால், கோபத்தில் போனை உடைப்பது என்றால்?
யார் மீதோ உள்ள கோபத்துக்கு போன் பலியாகியிருக்க வேண்டும்!
யார் மீது? என்ன கோபம்?
அர்த்தமற்று, அவளிடம் ஆத்திரப்படுகிறானே, அது போலத்தானா?
அல்லது, அதற்கு அர்த்தம் இருக்கிறதா?
தீபனின் திருமணமும், மனைவியின் பிரிவும், பத்திரிகையாளர்களால், பெரிய பிரச்சினை ஆகியிருக்குமா?
அவனுடைய மனைவியின் பிரிவு பற்றி, ஒரே ஒருதரம் குறிப்பிட்டது தவிர, மீனாட்சி ஆன்ட்டியும், மகனின் வாழ்வு பற்றி எதுவும் சொன்னது இல்லை!
தன்னைப் பற்றி எதுவும், யாரிடமும் சொல்லக் கூடாது என்ற மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார் என்பது, சந்தனாவின் ஊகம்!
மனதை மறையாது அவளிடம் பேசும் ஆன்ட்டியே சொல்லாத போது, அதைத் துருவிக் கேட்டு, அவருக்குத் தருமசங்கடத்தை ஏற்படுத்தச் சின்னவளுக்கும் விருப்பம் இல்லை!
அத்தோடு, மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் என்பது தவிர, தீபனுக்கும் அவளுக்கும் என்ன இருக்கிறது?
ஆன்ட்டியே சொல்லுகிற மாதிரி, அவனது பணி பற்றிய அழைப்பு வந்ததும், திரும்பவும் யுஎஸ்சுக்கு ஓடப் போகிறான் என்பதும் நிச்சயம்! அப்படித் திட்டம் இல்லையென்றால் தான், மருத்துவமனை நிர்வாகத்தை தாய்க்கு உதவியாக நேரில் போய்ப் பார்த்திருப்பானே!
அவன் இங்கே தங்கப் போவதில்லை என்பதற்கு, இது ஒன்றே, நிச்சயமாக சான்று!
அப்படியே, இந்தியாவிலேயே அவன் இருப்பதானாலுமே, இங்கே உள்ள கோடிக் கணக்கான மனிதர்களில், அவனும் ஒருவனாக இருக்கப் போகிறான்!
அவனைப் பற்றி யோசித்து, மனதைக் குழப்பிக் கொள்ளுவானேன்?
அதை விடவும், நல்ல தங்குமிடம் ஒன்றைக் கண்டு பிடித்துப் போய்விட்டால், தீபனுக்கும் அவளுக்கும் தொடர்பே இருக்கப் போவதில்லை!
முதலில் அதைத்தான் பார்க்க வேண்டும்!
சந்தனா யோசித்து ஒரு முடிவுக்கு வருகையில், "என் மேலே கோபமா ஆன்ட்டி?" என்று கேட்டது ஒரு சின்னக் குரல்!
திகைப்புற்றுப் பார்த்தால், தன் பொம்மையை இறுகக் கட்டி அணைத்தபடி, அவள் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சிறுமி!
பொம்மையை அவள் அணைத்திருந்த விதம், சந்தனாவை ஒரு மாதிரித் தாக்கியது!
ஏதோ, தனக்கு வேறு துணையே இல்லாத மாதிரி...
இவளை என்ன செய்வது?
சட்டென மனம் உருக, அவளை அருகிழுத்து, "அப்படி யார் சொன்னது? மித்ராக் குட்டிகிட்டே கூட யாருக்காவது கோபம் வருமா என்ன? மித்ரா என்றாலே என்ன அர்த்தம் தெரியுமா? சினேகிதி! உலகத்தில் எல்லோருமே, உன்னிடம் நட்பாகத்தான் இருப்பார்கள்! அதாவது, நீ எனக்கு சினேகிதி. நான் உனக்குச் சினேகிதி!" என்றுரைத்து, சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சந்தனா!
சிறுமியும் சந்தோஷமாகப் பதிலுக்கு அவளை முத்தமிட, அவர்களுக்கிடையே, ஒரு ரகசிய ஒப்பந்தம் அமுலாகத் தொடங்கிற்று!
அன்றிலிருந்து சந்தனா வீட்டில் இருக்கும் சமயங்களில் தீபன் வேலை என்று அவனது அறைக்குள் புகுந்துவிட்டான் என்றால், மித்ரா விழுந்தடித்துக் கொண்டு, சந்தனாவிடம் ஓடி வந்து விடுவாள்.
அது, இது என்று சிறுமி ஏதாவது தன் யுஎஸ் தோழர்கள், அவர்களோடு சேர்ந்து விளையாடும் இடம், அங்கே இருக்கும் விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் பற்றிச் சொல்லுவாள்.
பொறுமையாகக் கேட்பதோடு, இங்குள்ளது பற்றி சந்தனா சொல்லுவாள்.
படக்கதைப் புத்தகங்களை வாங்கி வந்து, இதிகாசக் கதைகளைக் கற்றுக் கொடுத்தாள். அவளுடைய தந்தை செய்தது!
கிரேயான், க்ளே வாங்கி வந்து கொடுக்கவே, படங்கள் வரைவதும், உருவங்கள் செய்வதும், உற்சாகமான பொழுது போக்காயிற்று!
முதலில், மீனாட்சி அம்மாள் சத்தம் கேட்டாலும் மித்ரா ஓடி விடுவாள்.
ஆனால், விரைவிலேயே பாட்டி தன் பக்கம் என்று தெரிந்து விடவும், அவ்வப்போது, அவளையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டாள் பேத்தி!
ஆனால் எல்லாமே, எப்போதுமே வெகு சுமுகமாகவே இருந்தது என்று சொல்ல முடியாது!
பெரும்பாலும் தனித்திருந்து வளர்ந்தவள் என்பதால், சில பிடிவாதங்கள், முசுட்டுத்தனம், காட்டுக் கத்தல் எல்லாம் மித்ராவுக்கும் இருக்கவே செய்தது!
இவள் நம்மிடம் பிரியமாக இருக்கிறாளே, இன்னும் எவ்வளவு சலுகை எடுத்துக் கொள்ளலாம் என்று, குழந்தைகளுக்கே உரிய முறையிலும், மித்ரா நடந்துகொள்ளத்தான் செய்தாள்.
ஆனால், பள்ளி ஆசிரியை என்கிற முறையில், இந்த மாதிரிப் பிள்ளைகளையும் சமாளித்துப் பழகியிருந்ததால், மித்ராவைச் சமாளிப்பதும், சந்தனாவுக்குக் கடினமாக இருக்கவில்லை!
மீனாட்சிக்குச் சந்தனாவிடம் நம்பிக்கை இருந்ததால் இதில் தலையிடுவது இல்லை!
"அன்றைக்கு அப்பாவுக்குக் கோபம் என்றதும் ரொம்பப் பயந்துவிட்டேன், ஆன்ட்டி! பெரியவர்கள் யார் கிட்டேயும், நான் பேசினால் அப்பாவுக்குப் பிடிக்காது! ஒரு தரம் போனிலே பேசினதுக்கே, அப்பா போனையே உடைச்சிட்டார்! இப்போ, போன் இல்லையே, என்னையே உடைச்சிடுவாரோன்னு பயமாய் இருந்தது..."
முகத்தில் பாவனை காட்டி அவள் பேசிய தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!
அதைக் காட்டிக் கொள்ளாமல், "அதனாலே, ஆன்ட்டியை உடைத்தால் பரவாயில்லை என்று, என் தலையில் பழியைப் போட்டுவிட்டாயாக்கும்!" என்றாள் கிண்டலாக.
ஒரு கணம் பேந்த விழித்துவிட்டு, "நீ பெரிய ஆள் இல்லையா? பெரியவர்களை உடைக்கவே முடியாது, அடித்தாலும் திருப்பி அடிப்பாங்களோன்னு பயந்து, அடிக்க மாட்டாங்கன்னு, மிச்சி சொன்னானே! அதனாலேதான், அப்படிச் சொன்னேன்!" என்றவள் சந்தனாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "உன்னை உடைக்கலை! ஆனால், அப்பா உன்னை அடித்தாரா?" என்று கண்கள் விரியக் கவலையுடன் கேட்டாள் குழந்தை.
இல்லை என்பது போலத் தலையசைத்தவளுக்கு, சின்னப் பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. காரணகாரியம் கண்டுபிடித்து, இப்படித்தான் என்று முடிவு வேறு!
ஆனால், கோபத்தில் போனை உடைப்பது என்றால்?
யார் மீதோ உள்ள கோபத்துக்கு போன் பலியாகியிருக்க வேண்டும்!
யார் மீது? என்ன கோபம்?
அர்த்தமற்று, அவளிடம் ஆத்திரப்படுகிறானே, அது போலத்தானா?
அல்லது, அதற்கு அர்த்தம் இருக்கிறதா?
தீபனின் திருமணமும், மனைவியின் பிரிவும், பத்திரிகையாளர்களால், பெரிய பிரச்சினை ஆகியிருக்குமா?
அவனுடைய மனைவியின் பிரிவு பற்றி, ஒரே ஒருதரம் குறிப்பிட்டது தவிர, மீனாட்சி ஆன்ட்டியும், மகனின் வாழ்வு பற்றி எதுவும் சொன்னது இல்லை!
தன்னைப் பற்றி எதுவும், யாரிடமும் சொல்லக் கூடாது என்ற மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார் என்பது, சந்தனாவின் ஊகம்!
மனதை மறையாது அவளிடம் பேசும் ஆன்ட்டியே சொல்லாத போது, அதைத் துருவிக் கேட்டு, அவருக்குத் தருமசங்கடத்தை ஏற்படுத்தச் சின்னவளுக்கும் விருப்பம் இல்லை!
அத்தோடு, மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் என்பது தவிர, தீபனுக்கும் அவளுக்கும் என்ன இருக்கிறது?
ஆன்ட்டியே சொல்லுகிற மாதிரி, அவனது பணி பற்றிய அழைப்பு வந்ததும், திரும்பவும் யுஎஸ்சுக்கு ஓடப் போகிறான் என்பதும் நிச்சயம்! அப்படித் திட்டம் இல்லையென்றால் தான், மருத்துவமனை நிர்வாகத்தை தாய்க்கு உதவியாக நேரில் போய்ப் பார்த்திருப்பானே!
அவன் இங்கே தங்கப் போவதில்லை என்பதற்கு, இது ஒன்றே, நிச்சயமாக சான்று!
அப்படியே, இந்தியாவிலேயே அவன் இருப்பதானாலுமே, இங்கே உள்ள கோடிக் கணக்கான மனிதர்களில், அவனும் ஒருவனாக இருக்கப் போகிறான்!
அவனைப் பற்றி யோசித்து, மனதைக் குழப்பிக் கொள்ளுவானேன்?
அதை விடவும், நல்ல தங்குமிடம் ஒன்றைக் கண்டு பிடித்துப் போய்விட்டால், தீபனுக்கும் அவளுக்கும் தொடர்பே இருக்கப் போவதில்லை!
முதலில் அதைத்தான் பார்க்க வேண்டும்!
சந்தனா யோசித்து ஒரு முடிவுக்கு வருகையில், "என் மேலே கோபமா ஆன்ட்டி?" என்று கேட்டது ஒரு சின்னக் குரல்!
திகைப்புற்றுப் பார்த்தால், தன் பொம்மையை இறுகக் கட்டி அணைத்தபடி, அவள் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சிறுமி!
பொம்மையை அவள் அணைத்திருந்த விதம், சந்தனாவை ஒரு மாதிரித் தாக்கியது!
ஏதோ, தனக்கு வேறு துணையே இல்லாத மாதிரி...
இவளை என்ன செய்வது?
சட்டென மனம் உருக, அவளை அருகிழுத்து, "அப்படி யார் சொன்னது? மித்ராக் குட்டிகிட்டே கூட யாருக்காவது கோபம் வருமா என்ன? மித்ரா என்றாலே என்ன அர்த்தம் தெரியுமா? சினேகிதி! உலகத்தில் எல்லோருமே, உன்னிடம் நட்பாகத்தான் இருப்பார்கள்! அதாவது, நீ எனக்கு சினேகிதி. நான் உனக்குச் சினேகிதி!" என்றுரைத்து, சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சந்தனா!
சிறுமியும் சந்தோஷமாகப் பதிலுக்கு அவளை முத்தமிட, அவர்களுக்கிடையே, ஒரு ரகசிய ஒப்பந்தம் அமுலாகத் தொடங்கிற்று!
அன்றிலிருந்து சந்தனா வீட்டில் இருக்கும் சமயங்களில் தீபன் வேலை என்று அவனது அறைக்குள் புகுந்துவிட்டான் என்றால், மித்ரா விழுந்தடித்துக் கொண்டு, சந்தனாவிடம் ஓடி வந்து விடுவாள்.
அது, இது என்று சிறுமி ஏதாவது தன் யுஎஸ் தோழர்கள், அவர்களோடு சேர்ந்து விளையாடும் இடம், அங்கே இருக்கும் விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் பற்றிச் சொல்லுவாள்.
பொறுமையாகக் கேட்பதோடு, இங்குள்ளது பற்றி சந்தனா சொல்லுவாள்.
படக்கதைப் புத்தகங்களை வாங்கி வந்து, இதிகாசக் கதைகளைக் கற்றுக் கொடுத்தாள். அவளுடைய தந்தை செய்தது!
கிரேயான், க்ளே வாங்கி வந்து கொடுக்கவே, படங்கள் வரைவதும், உருவங்கள் செய்வதும், உற்சாகமான பொழுது போக்காயிற்று!
முதலில், மீனாட்சி அம்மாள் சத்தம் கேட்டாலும் மித்ரா ஓடி விடுவாள்.
ஆனால், விரைவிலேயே பாட்டி தன் பக்கம் என்று தெரிந்து விடவும், அவ்வப்போது, அவளையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டாள் பேத்தி!
ஆனால் எல்லாமே, எப்போதுமே வெகு சுமுகமாகவே இருந்தது என்று சொல்ல முடியாது!
பெரும்பாலும் தனித்திருந்து வளர்ந்தவள் என்பதால், சில பிடிவாதங்கள், முசுட்டுத்தனம், காட்டுக் கத்தல் எல்லாம் மித்ராவுக்கும் இருக்கவே செய்தது!
இவள் நம்மிடம் பிரியமாக இருக்கிறாளே, இன்னும் எவ்வளவு சலுகை எடுத்துக் கொள்ளலாம் என்று, குழந்தைகளுக்கே உரிய முறையிலும், மித்ரா நடந்துகொள்ளத்தான் செய்தாள்.
ஆனால், பள்ளி ஆசிரியை என்கிற முறையில், இந்த மாதிரிப் பிள்ளைகளையும் சமாளித்துப் பழகியிருந்ததால், மித்ராவைச் சமாளிப்பதும், சந்தனாவுக்குக் கடினமாக இருக்கவில்லை!
மீனாட்சிக்குச் சந்தனாவிடம் நம்பிக்கை இருந்ததால் இதில் தலையிடுவது இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தீபன், அவனது கம்ப்யூட்டர் வேலையில் முழுகிவிட்டால், அவனை வெளியே பார்க்கவே முடியாது என்பதால், அவனது தலையீடும் இராது போகவே, கண்டிப்பும் கனிவுமாகச் சந்தனா, மித்ராவைக் கவனித்ததில், சிறுமியின் உடலும் தேறலாயிற்று!
அத்தோடு, ஒரே வீட்டில் இருக்கையில், ஒருவரோடு ஒருவர் பேசாமலே இருப்பது கடினம் என்று தீபனுக்குமே புரிந்திருந்ததால், சில பொதுவான நேரத்துக்கு உரையாடல்களை, அவனும் தடுக்க முயன்றதில்லை.
அதனால், தீபன் முன்னிலையிலும் கூட, ஒரேயடியாக அன்னியமாகக் காட்டிக் கொள்ளாமல், ஓரளவுக்குச் சந்தனாவும் மித்ராவும் சாதாரணமாகப் பேச முடிந்தது! ஆனால், அவன் அறியாமல் அறைக்குள் கொட்டமடிப்பதை மட்டும் இருவருமே அவன் அறியக் காட்டிக் கொள்வதில்லை!
அன்று இரு பெண்களும் மட்டுமாகச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம்!
தீபன் வேலையிலிருந்து வெளியே வரவில்லை!
மீனாட்சி, மருத்துவமனை வேலையாகச் சென்றவள், இன்னமும் திரும்பியிருக்கவில்லை!
அன்றையச் சிற்றுண்டி, புட்டு!
பொதுவாக இங்குள்ள சிற்றுண்டி வகைகளை பிடிக்காவிட்டால், ரொட்டியில் வெண்ணை, ஜாம் தடவிக் கொடுத்துவிட்டால், மித்ரா சந்தோஷமாகச் சாப்பிட்டு விடுவாள்.
அவளே, இப்படிச் சாப்பிடு நன்றாக இருக்கும் என்று சந்தனா சொன்னால், அவளிடமிருந்து வாங்கி ருசி பார்த்துவிட்டு, உரிய அளவு உண்ணவும் பழகி இருந்தாள்.
ஆனால், அன்றைக்கு என்னவோ, தனக்கு எதுவும் வேண்டாம், ஃபிரிஜ்ஜில் இருக்கும் சாக்லேட்டுகள் அத்தனையும் வேண்டும். பார்க்கவே நன்றாக இல்லாத புட்டுக்குப் பதிலாகச் சாக்லேட்டைத்தான் சாப்பிடப் போகிறேன் என்று அடம் பிடித்தாள் மித்ரா!
தானாகச் சொல்லிப் பார்த்துவிட்டு, சமையல்காரம்மா, சந்தனாவிடம் முறையிட்டாள்.
சந்தனா மென்மையாகச் சொல்லச் சொல்ல, மித்ராவின் பிடிவாதம் அதிகம் ஆயிற்று!
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, "இந்தப் புட்டைத் தான் சாப்பிட வேண்டும்! பிடிக்காவிட்டால், ரொட்டி, சாக்லேட் கிடையவே கிடையாது!" என்று சாவி கொண்டு பூட்டக் கூடிய, அந்தப் பழைய காலத்து ஃப்ரிஜ்ஜைப் பூட்டிச் சாவியைச் சமையல்காரம்மாவிடம் சந்தனா கொடுத்துவிட, மித்ரா அழத் தொடங்கினாள்!
"ஷ்! என்ன மித்ரா..." என்று சந்தனா அவளை அமைதிப் படுத்த முயலுகையில், "அவள் கேட்பதைக் கொடுத்துவிட வேண்டியதுதானே?" என்று தீபனின் குரல் கேட்கவும், திகைப்பில் சந்தனா துள்ளிக் குதிக்காத குறை எனலாம்!
தந்தையைக் கண்டதும், மித்ரா சலுகையாக, இன்னும் அழுதாள்.
"எலிசா ஆன்ட்டி, எனக்கு எவ்வளவு சாக்லேட் கேட்டாலும் கொடுப்பாளே! சந்தனாவையும் கொடுக்கச் சொல்லு!" என்று அழுதாள் சிறுமி!
சந்தனா முகத்தில் ஐயம் தெரிந்ததோ, என்னவோ, "உடனே, தப்பாக நினைக்க வேண்டாம்! எலிசா என் ஏஜண்ட்! என்னை விடப் பத்து வயது பெரியவளும் கூட!" என்று எரிச்சலுடன் மொழிந்தான் தீபன்!
அத்தோடு நிறுத்தாமல், "பெரிய ஒழுக்க சிகரம்! தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே, மோசம் என்று எண்ணிக் கொள்வது! அல்லது, தன்னைப் போல என்றோ, என்னவோ?" அவள் காதுகளில் விழுமாறு, தெளிவாகவே முணுமுணுத்தான்!
ஆத்திரமுற்று, "சாக்லேட்டை அள்ளி அள்ளிக் கொடுப்பாளாமா? அப்படியானால், ஆன்ட்டி அன்று சொன்னது போல, அவள் உங்களைக் கெடுப்பதோடு நில்லாமல், மித்ராவையும் கெடுக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று சுள்ளெனச் சொல்லிவிட்டாள் சந்தனாவும்!
"ஏய், ஜாக்கிரதையாகப் பேசு! மித்ராவுக்கு விபத்து நடந்த போது, உடனே வந்து செயல்பட்டு, அவளது உயிரைக் காப்பாற்றியது, எலிசாதான்! அவளுக்கு இல்லாத அக்கறையும் அன்பும், உனக்கு இருக்க வாய்ப்பில்லை! வெறும் பந்தாக் காட்ட வேண்டாம்!" என்று கோபத்துடன் தூக்கி எறிந்து பேசினான் அவன்!
உண்மையான அக்கறையை, அவன் அலட்சியமாகப் பேசியது எரிச்சலூட்ட, "அப்படி அவள் வந்து காப்பாற்றுகிற நிலையில் மகளை விட்டுவிட்டு, நீங்கள் அப்படி என்ன வெட்டி முறித்துக் கொண்டு இருந்தீர்களாம்?" என்று குத்தலாகக் கேட்டு, அவனை மட்டம் தட்டினாள் அவள்.
அவள் மட்டந் தட்டத்தான் சொன்னாள்! ஆனால், உண்மை சுடும் அல்லவா?
சூடு தாங்காமல், அவளிடம் தப்புத் தேடினான் தீபன்.
"அப்படியானால், அதைத் தெரிந்து கொள்ளத்தான், இத்தனை முயற்சியுமா? என்னவோ, வேலை அது, இது என்று நிஜம் போல அளந்தாயே!" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன் விஷயம் மறக்கப்பட்டு விடப் போகிறதே என்று எண்ணிய மித்ரா "சாக்லேட், சாக்லேட்!" என்று, காலை உதைத்துக் கத்தினாள்!
"அதைக் கொடுத்துதான் தொலையேன்!" என்றான் அவன் எரிச்சலுடன்.
"நல்ல பொறுப்புள்ள தந்தை! இப்படி யாருக்குக் கிடைப்பார்!" என்று ஏளனமாகச் சிலாகித்துவிட்டு, மித்ராவிடம் திரும்பினாள்.
தீபன் ஆத்திரத்துடன் முறைத்ததை, அவள் கண்டுகொள்ளவே இல்லை!
அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியவள், பள்ளி அனுபவம் கைகொடுக்க, கண்டிப்பான குரலில், "மித்ராம்மா, நீ எவ்வளவோ நல்ல பெண் என்று நினைத்தேன்! இப்படிக் காலை உதைத்துக் கத்துவது, நல்ல பெண்கள் செய்வதா? சொல்லு!" என்று அதட்டிக் கேட்டாள்.
"அது..." என்று ஒரு கணம் தடுமாறிவிட்டு, "ஆனால், நீ சாக்லேட் தரமாட்டேன் என்கிறாயே!" என்று காரணம் சொன்னாள் சிறுமி!
"எப்படித் தருவது? நீ நல்ல பெண்ணாக இருந்தால், அதற்குப் பரிசாகச் சாக்லேட் மாதிரி இனிப்புகளைத் தரலாம்! ஆனால், ஒழுங்காகச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது, எப்படிப் பரிசு கொடுப்பது? அதற்கும் மேலாக, இப்போது மோசமாக வேறு நடக்கிறாயே! இந்த வீட்டில் வேறு யாரும் சாக்லேட் சாப்பிடுவதில்லை! மித்ரா நல்ல பெண். அவளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டே இருக்கலாம் என்று நல்ல நல்ல சாக்லேட் எல்லாம் வாங்கி வைத்தால், அதை உனக்குக் கொடுக்க விடாமல், நீயே பண்ணுகிறாயே!"
சற்று விழித்து விட்டு, "ஆனால், எனக்குச் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதே!" என்றாள் சிறுமி.
"சாப்பிடு! முதலில் இந்தச் சிற்றுண்டி எவ்வளவு ருசி தெரியுமா? புட்டரிசி என்று இதற்கென்றே தனியாக உள்ள புட்டரிசி என்ற ஒரு தினுசு அரிசியில் மாவு செய்து, தேங்காய்ப் பூ, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய், இனிப்பு எல்லாம் போட்டு, மிகவும் நன்...றாக இருக்கிறது! இந்தப் பலகாரத்தில், நீ இவ்...வளவு வளருவதற்கு வேண்டிய எத்தனை சத்துக்கள் இருக்கிறது, தெரியுமா? இதெல்லாம் சாப்பிட்டால், சீக்கிரமே... உன் அப்பா மாதிரி, உயரமாக வளர்ந்து விடலாமே! சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டு, சாக்லேட்டை வாங்கிக் கொள்! வா! சீக்கிரம்!" என்று, சந்தனா நிறைய ஆசை காட்டவும், மித்ரா யோசித்தாள்.
அவளும் வெறும் அழும்பு பிடிக்கும் பெண் அல்ல என்பதால், "அப்படியானால், சாப்பிட்டதும் சாக்லேட் தரணும்!" என்ற நிபந்தனையோடு புட்டை உண்ண வந்தாள்.
"மித்திக் குட்டி நல்ல பெண் என்பதுதான் எனக்குத் தெரியுமே!" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, "கட்டாயம் தருவேன்! ஆனால், இன்னொரு தடவை இப்படிக் காலை உதைத்து அசிங்கமாகக் கத்தினால் அப்புறம், இரண்டு நாட்களுக்குச் சாக்லேட்டே கிடையாது!" என்று அதையும் பிள்ளை மனதில் பதிய வைத்தாள் சந்தனா!
கிண்ணத்தில் தனக்கென்று கொஞ்சம் புட்டை எடுத்து வைத்த தீபன், கீழ்க் கண்ணால் அவர்கள் இருவரையும் ஒரு தரம் பார்த்து விட்டுக் கிண்ணத்துடன் அங்கிருந்து அகன்றான்!
அத்தோடு, ஒரே வீட்டில் இருக்கையில், ஒருவரோடு ஒருவர் பேசாமலே இருப்பது கடினம் என்று தீபனுக்குமே புரிந்திருந்ததால், சில பொதுவான நேரத்துக்கு உரையாடல்களை, அவனும் தடுக்க முயன்றதில்லை.
அதனால், தீபன் முன்னிலையிலும் கூட, ஒரேயடியாக அன்னியமாகக் காட்டிக் கொள்ளாமல், ஓரளவுக்குச் சந்தனாவும் மித்ராவும் சாதாரணமாகப் பேச முடிந்தது! ஆனால், அவன் அறியாமல் அறைக்குள் கொட்டமடிப்பதை மட்டும் இருவருமே அவன் அறியக் காட்டிக் கொள்வதில்லை!
அன்று இரு பெண்களும் மட்டுமாகச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம்!
தீபன் வேலையிலிருந்து வெளியே வரவில்லை!
மீனாட்சி, மருத்துவமனை வேலையாகச் சென்றவள், இன்னமும் திரும்பியிருக்கவில்லை!
அன்றையச் சிற்றுண்டி, புட்டு!
பொதுவாக இங்குள்ள சிற்றுண்டி வகைகளை பிடிக்காவிட்டால், ரொட்டியில் வெண்ணை, ஜாம் தடவிக் கொடுத்துவிட்டால், மித்ரா சந்தோஷமாகச் சாப்பிட்டு விடுவாள்.
அவளே, இப்படிச் சாப்பிடு நன்றாக இருக்கும் என்று சந்தனா சொன்னால், அவளிடமிருந்து வாங்கி ருசி பார்த்துவிட்டு, உரிய அளவு உண்ணவும் பழகி இருந்தாள்.
ஆனால், அன்றைக்கு என்னவோ, தனக்கு எதுவும் வேண்டாம், ஃபிரிஜ்ஜில் இருக்கும் சாக்லேட்டுகள் அத்தனையும் வேண்டும். பார்க்கவே நன்றாக இல்லாத புட்டுக்குப் பதிலாகச் சாக்லேட்டைத்தான் சாப்பிடப் போகிறேன் என்று அடம் பிடித்தாள் மித்ரா!
தானாகச் சொல்லிப் பார்த்துவிட்டு, சமையல்காரம்மா, சந்தனாவிடம் முறையிட்டாள்.
சந்தனா மென்மையாகச் சொல்லச் சொல்ல, மித்ராவின் பிடிவாதம் அதிகம் ஆயிற்று!
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, "இந்தப் புட்டைத் தான் சாப்பிட வேண்டும்! பிடிக்காவிட்டால், ரொட்டி, சாக்லேட் கிடையவே கிடையாது!" என்று சாவி கொண்டு பூட்டக் கூடிய, அந்தப் பழைய காலத்து ஃப்ரிஜ்ஜைப் பூட்டிச் சாவியைச் சமையல்காரம்மாவிடம் சந்தனா கொடுத்துவிட, மித்ரா அழத் தொடங்கினாள்!
"ஷ்! என்ன மித்ரா..." என்று சந்தனா அவளை அமைதிப் படுத்த முயலுகையில், "அவள் கேட்பதைக் கொடுத்துவிட வேண்டியதுதானே?" என்று தீபனின் குரல் கேட்கவும், திகைப்பில் சந்தனா துள்ளிக் குதிக்காத குறை எனலாம்!
தந்தையைக் கண்டதும், மித்ரா சலுகையாக, இன்னும் அழுதாள்.
"எலிசா ஆன்ட்டி, எனக்கு எவ்வளவு சாக்லேட் கேட்டாலும் கொடுப்பாளே! சந்தனாவையும் கொடுக்கச் சொல்லு!" என்று அழுதாள் சிறுமி!
சந்தனா முகத்தில் ஐயம் தெரிந்ததோ, என்னவோ, "உடனே, தப்பாக நினைக்க வேண்டாம்! எலிசா என் ஏஜண்ட்! என்னை விடப் பத்து வயது பெரியவளும் கூட!" என்று எரிச்சலுடன் மொழிந்தான் தீபன்!
அத்தோடு நிறுத்தாமல், "பெரிய ஒழுக்க சிகரம்! தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே, மோசம் என்று எண்ணிக் கொள்வது! அல்லது, தன்னைப் போல என்றோ, என்னவோ?" அவள் காதுகளில் விழுமாறு, தெளிவாகவே முணுமுணுத்தான்!
ஆத்திரமுற்று, "சாக்லேட்டை அள்ளி அள்ளிக் கொடுப்பாளாமா? அப்படியானால், ஆன்ட்டி அன்று சொன்னது போல, அவள் உங்களைக் கெடுப்பதோடு நில்லாமல், மித்ராவையும் கெடுக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று சுள்ளெனச் சொல்லிவிட்டாள் சந்தனாவும்!
"ஏய், ஜாக்கிரதையாகப் பேசு! மித்ராவுக்கு விபத்து நடந்த போது, உடனே வந்து செயல்பட்டு, அவளது உயிரைக் காப்பாற்றியது, எலிசாதான்! அவளுக்கு இல்லாத அக்கறையும் அன்பும், உனக்கு இருக்க வாய்ப்பில்லை! வெறும் பந்தாக் காட்ட வேண்டாம்!" என்று கோபத்துடன் தூக்கி எறிந்து பேசினான் அவன்!
உண்மையான அக்கறையை, அவன் அலட்சியமாகப் பேசியது எரிச்சலூட்ட, "அப்படி அவள் வந்து காப்பாற்றுகிற நிலையில் மகளை விட்டுவிட்டு, நீங்கள் அப்படி என்ன வெட்டி முறித்துக் கொண்டு இருந்தீர்களாம்?" என்று குத்தலாகக் கேட்டு, அவனை மட்டம் தட்டினாள் அவள்.
அவள் மட்டந் தட்டத்தான் சொன்னாள்! ஆனால், உண்மை சுடும் அல்லவா?
சூடு தாங்காமல், அவளிடம் தப்புத் தேடினான் தீபன்.
"அப்படியானால், அதைத் தெரிந்து கொள்ளத்தான், இத்தனை முயற்சியுமா? என்னவோ, வேலை அது, இது என்று நிஜம் போல அளந்தாயே!" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன் விஷயம் மறக்கப்பட்டு விடப் போகிறதே என்று எண்ணிய மித்ரா "சாக்லேட், சாக்லேட்!" என்று, காலை உதைத்துக் கத்தினாள்!
"அதைக் கொடுத்துதான் தொலையேன்!" என்றான் அவன் எரிச்சலுடன்.
"நல்ல பொறுப்புள்ள தந்தை! இப்படி யாருக்குக் கிடைப்பார்!" என்று ஏளனமாகச் சிலாகித்துவிட்டு, மித்ராவிடம் திரும்பினாள்.
தீபன் ஆத்திரத்துடன் முறைத்ததை, அவள் கண்டுகொள்ளவே இல்லை!
அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியவள், பள்ளி அனுபவம் கைகொடுக்க, கண்டிப்பான குரலில், "மித்ராம்மா, நீ எவ்வளவோ நல்ல பெண் என்று நினைத்தேன்! இப்படிக் காலை உதைத்துக் கத்துவது, நல்ல பெண்கள் செய்வதா? சொல்லு!" என்று அதட்டிக் கேட்டாள்.
"அது..." என்று ஒரு கணம் தடுமாறிவிட்டு, "ஆனால், நீ சாக்லேட் தரமாட்டேன் என்கிறாயே!" என்று காரணம் சொன்னாள் சிறுமி!
"எப்படித் தருவது? நீ நல்ல பெண்ணாக இருந்தால், அதற்குப் பரிசாகச் சாக்லேட் மாதிரி இனிப்புகளைத் தரலாம்! ஆனால், ஒழுங்காகச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது, எப்படிப் பரிசு கொடுப்பது? அதற்கும் மேலாக, இப்போது மோசமாக வேறு நடக்கிறாயே! இந்த வீட்டில் வேறு யாரும் சாக்லேட் சாப்பிடுவதில்லை! மித்ரா நல்ல பெண். அவளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டே இருக்கலாம் என்று நல்ல நல்ல சாக்லேட் எல்லாம் வாங்கி வைத்தால், அதை உனக்குக் கொடுக்க விடாமல், நீயே பண்ணுகிறாயே!"
சற்று விழித்து விட்டு, "ஆனால், எனக்குச் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதே!" என்றாள் சிறுமி.
"சாப்பிடு! முதலில் இந்தச் சிற்றுண்டி எவ்வளவு ருசி தெரியுமா? புட்டரிசி என்று இதற்கென்றே தனியாக உள்ள புட்டரிசி என்ற ஒரு தினுசு அரிசியில் மாவு செய்து, தேங்காய்ப் பூ, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய், இனிப்பு எல்லாம் போட்டு, மிகவும் நன்...றாக இருக்கிறது! இந்தப் பலகாரத்தில், நீ இவ்...வளவு வளருவதற்கு வேண்டிய எத்தனை சத்துக்கள் இருக்கிறது, தெரியுமா? இதெல்லாம் சாப்பிட்டால், சீக்கிரமே... உன் அப்பா மாதிரி, உயரமாக வளர்ந்து விடலாமே! சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டு, சாக்லேட்டை வாங்கிக் கொள்! வா! சீக்கிரம்!" என்று, சந்தனா நிறைய ஆசை காட்டவும், மித்ரா யோசித்தாள்.
அவளும் வெறும் அழும்பு பிடிக்கும் பெண் அல்ல என்பதால், "அப்படியானால், சாப்பிட்டதும் சாக்லேட் தரணும்!" என்ற நிபந்தனையோடு புட்டை உண்ண வந்தாள்.
"மித்திக் குட்டி நல்ல பெண் என்பதுதான் எனக்குத் தெரியுமே!" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, "கட்டாயம் தருவேன்! ஆனால், இன்னொரு தடவை இப்படிக் காலை உதைத்து அசிங்கமாகக் கத்தினால் அப்புறம், இரண்டு நாட்களுக்குச் சாக்லேட்டே கிடையாது!" என்று அதையும் பிள்ளை மனதில் பதிய வைத்தாள் சந்தனா!
கிண்ணத்தில் தனக்கென்று கொஞ்சம் புட்டை எடுத்து வைத்த தீபன், கீழ்க் கண்ணால் அவர்கள் இருவரையும் ஒரு தரம் பார்த்து விட்டுக் கிண்ணத்துடன் அங்கிருந்து அகன்றான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தீபனின் பார்வையைச் சந்தனா பெரிதாக நினைக்கவில்லை!
அவனைப் பொறுத்தவரையில், சந்தனா கெட்டவள்! அவனைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து, அதாவது அவனைப் பற்றிய மோசமான விவரங்களைக் கண்டறிந்து, ஏதோ அமெரிக்கப் பத்திரிகைக்கு அனுப்புவதற்காகவே, வேறு ஏதோ காரணத்தைக் காட்டி அவனுடைய அன்னையை ஏமாற்றி, இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள்!
யார் என்ன சொன்னாலும், இந்த எண்ணத்தை அவன் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை!
போகட்டும்! அவனது கருத்து அவனோடு என்று சந்தனாவும் அதைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டாள்!
எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை அவனாக ஏற்படுத்தியதோடு, அதையே குரங்குப் பிடியாக ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தால், அதைப் பற்றி நினைப்பதே, நேர விரயம் தானே?
தன்னை ஒருவர் தப்பாக நினைப்பது, அதுவும் மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் அப்படி எண்ணுவது அவளுக்கு வருத்தம் தான்!
ஆனால், ஆன்ட்டியின் அபிப்பிராயப்படியே, தீபன் இன்னும் சில நாட்களில், தன் மாபெரும் சொர்க்கம் அமெரிக்காவுக்குப் பறந்துவிடப் போகிறான்! அங்கே போய், அவன் என்ன நினைத்தாலும், அது அவளைப் பாதிக்கப் போவது இல்லையே!
இங்கேயே, அப்படித்தான், பாதிப்பின்றி தான் இருக்க வேண்டும்! ஆனால், ஏனோ அவளால் ஒரேயடியாக அப்படி அலட்சியப் படுத்த முடியவில்லை!
அதனாலேயே ஒருவேளை, அவன் இங்கேயே இருந்து விடக் கூடுமோ என்ற எண்ணத்தில், தங்குவதற்கான இடத்துக்காக, நல்ல விடுதி ஒன்றைத் தேடிக் கொண்டேதான் இருந்தாள்!
ஆனால் மித்ரா?
அவளைப் பற்றிய கவலை, சந்தனாவுக்கு இருந்தது!
தந்தை சங்கமித்ரனின் பெயரில் பாதியை மகளுக்கு வைத்ததோடு மகள், தந்தை இருவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டதாகத் தீபன் எண்ணுகிறான் என்பது, சந்தனாவின் அபிப்பிராயம்!
மற்றபடி, தந்தை விட்டுச் சென்ற தொழிலையும் அவன் பார்க்கவில்லை!
பெற்ற மகளுக்கு வேண்டியதையும் செய்யவில்லை!
இந்த வயதில் அவள் அங்கே தனிக் குழந்தையாக வளர்வது போலத்தானே தெரிகிறது!
எப்போதோ ஒரு முறை சந்திக்கும் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் தவிர, அங்கே மித்ரா தனிமைச் சிறையில் தான் இருந்திருக்கிறாள்!
அவனுக்குப் பிடிக்காதுதான்! ஆனாலும், குழந்தையின் தனிமை ஏக்கம் பற்றித் தீபன் கிளம்பும் முன், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று, சந்தனா தீர்மானித்திருந்தாள்!
மித்ராவிடம் இருந்த பரிதாபத்தினாலேயே அவளுடைய தந்தைக்கு மறைத்து, அவளுடன் நெருங்கிப் பழக, சந்தனாவுக்குத் தயக்கமே வரவில்லை!
இங்கே இருக்கும் வரையேனும், மித்ராவுக்கு ஒரு துணை இருக்கட்டுமே!
இந்த எண்ணத்தினால், தீபன் அறியாமல், மித்ரா அவளது அறைக்கு வருவதும், பேசிப் பழகுவதும், தொடர்ந்து நடந்தது!
தீபன் அறியாமல் இது நடப்பதாகத்தான் சந்தனா நினைத்திருந்தாள்!
ஆனால், சில நாட்கள் கழித்து, ஒரு விடுமுறை தினத்தன்று, மீனாட்சியும், மித்ராவும் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்த பிறகு, அவளது அறைக் கதவைத் தட்டி, அறைக்குள் வந்த தீபன் வேறு சொன்னான்!
அந்த நேரத்தில், அவனை, அதுவும் அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றவளின் தோளைப் பற்றி நகர்த்திவிட்டு, அறையினுள் வந்து, தன் மகள், சந்தனாவின் அறைக்கு அடிக்கடி வருவது, தனக்குத் தெரியும் என்றவன், "நீ எதற்காக என் மகளுக்கு இப்படி வலை விரிக்கிறாய் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்" என்றும் சேர்த்துச் சொன்னான்!
வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா என்ன, மீனா? என்ன உளறல் என்று தோன்றியது சந்தனாவுக்கு! அத்தோடு, எப்போது பார்த்தாலும், ஏதாவது இல்லாத பொல்லாத குறை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று அவளுக்குக் கோபமும் வந்திருந்தது!
"வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா மீனோ, மானோ அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! ஆனால், உங்களுக்கு என்னவோ தெரியும் என்றீர்களே, அது என்னது, என் மனதுக்குள்ளே எனக்கே தெரியாமல் ஒளித்து வைத்திருந்தது, நீங்கள் கண்டுபிடித்துவிட்ட சிதம்பர ரகசியம்?" என்றாள் கிண்டலாக. "சொன்னால், அய்யோ பாவம், எதையும் அறியாத நானுமே அதைத் தெரிந்து கொள்ளுவேனே!"
"ஓகோ! இப்படி ஏளனமாகப் பேசினால், உண்மை, பொய்யாகிவிடும் என்கிற எண்ணமா?"
"அந்த உண்மை எது என்று சொன்னால் தானே, அது உண்மையா, பொய்யா என்பது தெரியும்?" என்று, மீண்டும் மட்டம் தட்டும் குரலிலேயே கேட்டாள் சந்தனா!
நல்லவேளை, ஆன்ட்டி இங்கே இல்லை! அவர்கள் எதிரில், அவர்களுடைய மகனை இப்படி மட்டம் தட்ட மனம் வராது!
"எது உண்மை என்று எனக்குத் தெரியும்! உன் சர்டிஃபிகேட் அவசியம் இல்லை!" என்றான் அவன் உதாசீனமாக.
"சந்தோஷம்! ஆனால், உண்மை உண்மை என்கிறீர்களே, அந்த உண்மை என்னவென்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே! உண்மை சொல்வது, உங்களுக்கு அவ்வளவு கடினமா?"
இது நிஜமாகவே, நன்றாகத் தைக்கும் என்று எண்ணுகையில், சந்தனாவுக்கு உற்சாகமாகக் கூட இருந்தது!
தானுண்டு, தன் வேலையுண்டு என்று சும்மா இருக்கிறவளை, எத்தனை முறை இப்படி வலிக்கப் பேசியிருப்பான்! இப்போது, அவன் முறை! படட்டுமே என்று எண்ணும்போதே, இதற்காக வேறு தன் மீது ஆத்திரப்படுவானே என்று, அவளுக்குப் பெருமூச்சும் வந்தது!
"என்ன? கிண்டலாகப் பேசினால், சமாளித்து விடலாம் என்று எண்ணமா?"
"நீங்கள் தான், என்னவென்று சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே!"
"சொல்லாமலேதான், தெரியுமே என்று நினைத்தேன்! காது குளிரக் கேட்கத்தான் ஆசை என்றால், இதோ சொல்கிறேன், கேட்டுக்கொள்! அம்மாவை ஏமாற்றி, இந்த வீட்டுக்குள் வந்தாய்! அடுத்துச் சின்ன குழந்தையை மயக்கி, அவள் மூலமாக, என்னையும் வளைத்துப் போட்டு விடலாம் என்பது உன் திட்டம்...!"
சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை!
வந்ததில் இருந்து, அவளிடம் கடுமையாக மட்டும் தான் பேசியிருக்கிறான்! நல்ல வார்த்தையே.. நல்ல வார்த்தை இருக்கட்டும், மனிதனுக்கு மனிதன் காட்டும் சுமுகம் கூடக் கிடையாது. இருந்திருந்து, இவனை வளைத்துப் போடுவதா?
எதற்கு?
அருகில் இருந்து கொத்திப் பிடுங்கிக் கொண்டே இருப்பதற்கா?
என்ன மடத்தனம்!
அவனிடமே கேட்டாள், "அப்படி உங்களை எதற்காக சார், நான் வளைத்துப் போட்டாக வேண்டும்?" என்று, புருவம் உயர்த்தி விசாரித்தாள் அவள்.
எதையோ சொல்ல வாயெடுத்துவிட்டு, அவளை ஊடுருவுவது போலப் பார்த்தான் தீபன்.
பிறகு, "எத்தனையோ காரணங்கள்! முக்கியமாக யுஎஸ் மோகம்! அதுதானே, உங்களுக்கெல்லாம் தலையாய குறிக்கோள்! அதை அடைவதற்குத்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாமே!" என்றான் ஏளனமாக.
"இதை, நீங்கள் சொல்லுகிறீர்களா? தன் முதுகு தனக்குத் தெரியாது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்! என்னவோ படிக்கப் போய், அந்த நாட்டிலேயே ஐக்கியமானவர்!..."
மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நான் உன்னைப் பற்றிச் சொன்னேன்! அதற்குப் பதில் சொல்!" என்றான் அவன்.
"தாராளமாகச் சொல்லுகிறேன்!" என்று நிமிர்ந்தாள் சந்தனா. "யுஎஸ் ஒன்றும், யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத பூலோக சொர்க்கம் அல்ல. அதை அடைவதற்காக என்னத் தியாகம் வேண்டுமானாலும் செய்வதற்கு! இப்போது, என் அண்ணனே அங்கேதான் இருக்கிறான்...!"
"யாரை மோப்பம் பிடிக்க?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் தீபன்!
எரிச்சலுற்று "சே!" என்றாள் சந்தனா.
"எப்போது பார்த்தாலும், இதே பேச்சா? என் அண்ணனை, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அங்கே அனுப்பியிருக்கிறார்கள்! எனக்காகவே, அண்ணன் திரும்பி வந்து விடுவதாக இருக்கிறான். அவனே இங்கே திரும்பி வந்துவிடும் போது, நான் எதற்காக அங்கே போக ஆசைப்பட வேண்டும்?"
"இதை, நம்பச் சொல்லுகிறாயா?" என்றான் அவன் பதிலுக்கு.
இதைவிட, நம்ப மாட்டேன் என்று நேராகவே சொல்லியிருக்கலாம்!
அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் சந்தனா.
அவனைப் பொறுத்தவரையில், சந்தனா கெட்டவள்! அவனைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து, அதாவது அவனைப் பற்றிய மோசமான விவரங்களைக் கண்டறிந்து, ஏதோ அமெரிக்கப் பத்திரிகைக்கு அனுப்புவதற்காகவே, வேறு ஏதோ காரணத்தைக் காட்டி அவனுடைய அன்னையை ஏமாற்றி, இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள்!
யார் என்ன சொன்னாலும், இந்த எண்ணத்தை அவன் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை!
போகட்டும்! அவனது கருத்து அவனோடு என்று சந்தனாவும் அதைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டாள்!
எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை அவனாக ஏற்படுத்தியதோடு, அதையே குரங்குப் பிடியாக ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தால், அதைப் பற்றி நினைப்பதே, நேர விரயம் தானே?
தன்னை ஒருவர் தப்பாக நினைப்பது, அதுவும் மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் அப்படி எண்ணுவது அவளுக்கு வருத்தம் தான்!
ஆனால், ஆன்ட்டியின் அபிப்பிராயப்படியே, தீபன் இன்னும் சில நாட்களில், தன் மாபெரும் சொர்க்கம் அமெரிக்காவுக்குப் பறந்துவிடப் போகிறான்! அங்கே போய், அவன் என்ன நினைத்தாலும், அது அவளைப் பாதிக்கப் போவது இல்லையே!
இங்கேயே, அப்படித்தான், பாதிப்பின்றி தான் இருக்க வேண்டும்! ஆனால், ஏனோ அவளால் ஒரேயடியாக அப்படி அலட்சியப் படுத்த முடியவில்லை!
அதனாலேயே ஒருவேளை, அவன் இங்கேயே இருந்து விடக் கூடுமோ என்ற எண்ணத்தில், தங்குவதற்கான இடத்துக்காக, நல்ல விடுதி ஒன்றைத் தேடிக் கொண்டேதான் இருந்தாள்!
ஆனால் மித்ரா?
அவளைப் பற்றிய கவலை, சந்தனாவுக்கு இருந்தது!
தந்தை சங்கமித்ரனின் பெயரில் பாதியை மகளுக்கு வைத்ததோடு மகள், தந்தை இருவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டதாகத் தீபன் எண்ணுகிறான் என்பது, சந்தனாவின் அபிப்பிராயம்!
மற்றபடி, தந்தை விட்டுச் சென்ற தொழிலையும் அவன் பார்க்கவில்லை!
பெற்ற மகளுக்கு வேண்டியதையும் செய்யவில்லை!
இந்த வயதில் அவள் அங்கே தனிக் குழந்தையாக வளர்வது போலத்தானே தெரிகிறது!
எப்போதோ ஒரு முறை சந்திக்கும் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் தவிர, அங்கே மித்ரா தனிமைச் சிறையில் தான் இருந்திருக்கிறாள்!
அவனுக்குப் பிடிக்காதுதான்! ஆனாலும், குழந்தையின் தனிமை ஏக்கம் பற்றித் தீபன் கிளம்பும் முன், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று, சந்தனா தீர்மானித்திருந்தாள்!
மித்ராவிடம் இருந்த பரிதாபத்தினாலேயே அவளுடைய தந்தைக்கு மறைத்து, அவளுடன் நெருங்கிப் பழக, சந்தனாவுக்குத் தயக்கமே வரவில்லை!
இங்கே இருக்கும் வரையேனும், மித்ராவுக்கு ஒரு துணை இருக்கட்டுமே!
இந்த எண்ணத்தினால், தீபன் அறியாமல், மித்ரா அவளது அறைக்கு வருவதும், பேசிப் பழகுவதும், தொடர்ந்து நடந்தது!
தீபன் அறியாமல் இது நடப்பதாகத்தான் சந்தனா நினைத்திருந்தாள்!
ஆனால், சில நாட்கள் கழித்து, ஒரு விடுமுறை தினத்தன்று, மீனாட்சியும், மித்ராவும் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்த பிறகு, அவளது அறைக் கதவைத் தட்டி, அறைக்குள் வந்த தீபன் வேறு சொன்னான்!
அந்த நேரத்தில், அவனை, அதுவும் அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றவளின் தோளைப் பற்றி நகர்த்திவிட்டு, அறையினுள் வந்து, தன் மகள், சந்தனாவின் அறைக்கு அடிக்கடி வருவது, தனக்குத் தெரியும் என்றவன், "நீ எதற்காக என் மகளுக்கு இப்படி வலை விரிக்கிறாய் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்" என்றும் சேர்த்துச் சொன்னான்!
வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா என்ன, மீனா? என்ன உளறல் என்று தோன்றியது சந்தனாவுக்கு! அத்தோடு, எப்போது பார்த்தாலும், ஏதாவது இல்லாத பொல்லாத குறை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று அவளுக்குக் கோபமும் வந்திருந்தது!
"வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா மீனோ, மானோ அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! ஆனால், உங்களுக்கு என்னவோ தெரியும் என்றீர்களே, அது என்னது, என் மனதுக்குள்ளே எனக்கே தெரியாமல் ஒளித்து வைத்திருந்தது, நீங்கள் கண்டுபிடித்துவிட்ட சிதம்பர ரகசியம்?" என்றாள் கிண்டலாக. "சொன்னால், அய்யோ பாவம், எதையும் அறியாத நானுமே அதைத் தெரிந்து கொள்ளுவேனே!"
"ஓகோ! இப்படி ஏளனமாகப் பேசினால், உண்மை, பொய்யாகிவிடும் என்கிற எண்ணமா?"
"அந்த உண்மை எது என்று சொன்னால் தானே, அது உண்மையா, பொய்யா என்பது தெரியும்?" என்று, மீண்டும் மட்டம் தட்டும் குரலிலேயே கேட்டாள் சந்தனா!
நல்லவேளை, ஆன்ட்டி இங்கே இல்லை! அவர்கள் எதிரில், அவர்களுடைய மகனை இப்படி மட்டம் தட்ட மனம் வராது!
"எது உண்மை என்று எனக்குத் தெரியும்! உன் சர்டிஃபிகேட் அவசியம் இல்லை!" என்றான் அவன் உதாசீனமாக.
"சந்தோஷம்! ஆனால், உண்மை உண்மை என்கிறீர்களே, அந்த உண்மை என்னவென்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே! உண்மை சொல்வது, உங்களுக்கு அவ்வளவு கடினமா?"
இது நிஜமாகவே, நன்றாகத் தைக்கும் என்று எண்ணுகையில், சந்தனாவுக்கு உற்சாகமாகக் கூட இருந்தது!
தானுண்டு, தன் வேலையுண்டு என்று சும்மா இருக்கிறவளை, எத்தனை முறை இப்படி வலிக்கப் பேசியிருப்பான்! இப்போது, அவன் முறை! படட்டுமே என்று எண்ணும்போதே, இதற்காக வேறு தன் மீது ஆத்திரப்படுவானே என்று, அவளுக்குப் பெருமூச்சும் வந்தது!
"என்ன? கிண்டலாகப் பேசினால், சமாளித்து விடலாம் என்று எண்ணமா?"
"நீங்கள் தான், என்னவென்று சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே!"
"சொல்லாமலேதான், தெரியுமே என்று நினைத்தேன்! காது குளிரக் கேட்கத்தான் ஆசை என்றால், இதோ சொல்கிறேன், கேட்டுக்கொள்! அம்மாவை ஏமாற்றி, இந்த வீட்டுக்குள் வந்தாய்! அடுத்துச் சின்ன குழந்தையை மயக்கி, அவள் மூலமாக, என்னையும் வளைத்துப் போட்டு விடலாம் என்பது உன் திட்டம்...!"
சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை!
வந்ததில் இருந்து, அவளிடம் கடுமையாக மட்டும் தான் பேசியிருக்கிறான்! நல்ல வார்த்தையே.. நல்ல வார்த்தை இருக்கட்டும், மனிதனுக்கு மனிதன் காட்டும் சுமுகம் கூடக் கிடையாது. இருந்திருந்து, இவனை வளைத்துப் போடுவதா?
எதற்கு?
அருகில் இருந்து கொத்திப் பிடுங்கிக் கொண்டே இருப்பதற்கா?
என்ன மடத்தனம்!
அவனிடமே கேட்டாள், "அப்படி உங்களை எதற்காக சார், நான் வளைத்துப் போட்டாக வேண்டும்?" என்று, புருவம் உயர்த்தி விசாரித்தாள் அவள்.
எதையோ சொல்ல வாயெடுத்துவிட்டு, அவளை ஊடுருவுவது போலப் பார்த்தான் தீபன்.
பிறகு, "எத்தனையோ காரணங்கள்! முக்கியமாக யுஎஸ் மோகம்! அதுதானே, உங்களுக்கெல்லாம் தலையாய குறிக்கோள்! அதை அடைவதற்குத்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாமே!" என்றான் ஏளனமாக.
"இதை, நீங்கள் சொல்லுகிறீர்களா? தன் முதுகு தனக்குத் தெரியாது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்! என்னவோ படிக்கப் போய், அந்த நாட்டிலேயே ஐக்கியமானவர்!..."
மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நான் உன்னைப் பற்றிச் சொன்னேன்! அதற்குப் பதில் சொல்!" என்றான் அவன்.
"தாராளமாகச் சொல்லுகிறேன்!" என்று நிமிர்ந்தாள் சந்தனா. "யுஎஸ் ஒன்றும், யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத பூலோக சொர்க்கம் அல்ல. அதை அடைவதற்காக என்னத் தியாகம் வேண்டுமானாலும் செய்வதற்கு! இப்போது, என் அண்ணனே அங்கேதான் இருக்கிறான்...!"
"யாரை மோப்பம் பிடிக்க?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் தீபன்!
எரிச்சலுற்று "சே!" என்றாள் சந்தனா.
"எப்போது பார்த்தாலும், இதே பேச்சா? என் அண்ணனை, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அங்கே அனுப்பியிருக்கிறார்கள்! எனக்காகவே, அண்ணன் திரும்பி வந்து விடுவதாக இருக்கிறான். அவனே இங்கே திரும்பி வந்துவிடும் போது, நான் எதற்காக அங்கே போக ஆசைப்பட வேண்டும்?"
"இதை, நம்பச் சொல்லுகிறாயா?" என்றான் அவன் பதிலுக்கு.
இதைவிட, நம்ப மாட்டேன் என்று நேராகவே சொல்லியிருக்கலாம்!
அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் சந்தனா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
"நான் நிஜத்தைச் சொன்னேன்! நம்புவதும், நம்பாததும், உங்கள் விருப்பம்! குதிரையைத் தண்ணீரிடம் கொண்டு போய் நிறுத்தத்தான் முடியும்! குடிக்க வைக்க முடியுமா? அது போலத்தான் இதுவும்! சொல்ல மட்டும் தான் முடியும்! ஆனால் ஒன்று! உங்களைப் போல, உண்மை சொல்லுவது, எனக்குக் கடினம் அல்ல!" என்றாள் அவள்.
சற்று அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றத்தான் செய்தது!
ஆனால், அவனுக்கு இது அவசியம்! எப்போதோ செய்திருக்க வேண்டியது என்றும் தோன்றிவிட, சற்று அலட்சிய பாவனையுடனேயே நின்றாள்.
மறுபடியும் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு, "ஆசிரியர் மகள் என்றாயில்லையா? அதற்கு ஏற்பப் பிரமாதமாகப் பேசுகிறாய்! அந்த வகையில், உன்னைப் பாராட்டத்தான் வேண்டும்! ஆனால், உன் நோக்கம் எனக்குத் தெரியும்!" என்று தீபன் கூறவும், சந்தனாவின் மனம் சோர்ந்தது!
இவனிடம் பேசியது எல்லாம் வீண்!
விடையை வைத்துக் கொண்டு கணக்கு எழுதுவது போல, இவன் முடிவு செய்துவிட்டு, அதற்காக ஆதாரங்களைச் சேகரிக்கிறான். அவள் என்ன சொன்னாலும், செய்தாலும், அவன் விரும்பிய விதமாகத்தான், அதைச் சித்தரிக்கப் போகிறான்!
எனவே, இவனிடம் என்ன சொன்னாலும், எந்தப் பயனும் இராது!
எப்போதும் இப்படித்தானே, போகிறான் என்று அலட்சியப்படுத்த முடியாமல் உள்ளே வலித்தது!
ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாமல், தலையைத் திருப்பிக் கொண்டு, "தெரிந்து விட்டதல்லவா? ரொம்பவும் சந்தோஷம். இனி வெளியே போங்கள்!' என்று அசட்டை காட்ட முயன்றாள் அவள்.
"போவதா? உன் நோக்கம் தெரிந்து விட்ட பிறகும், அதற்கு வேண்டியதைச் செய்யாமல் வெளியே போனேன் என்றால் என்னைப் பற்றி என்ன நினைப்பாய்?" என்றதோடு, கதவைத் தாளிட்டான் அவன்!
"என்ன..." என்று அவள் திகைப்புற்றுத் திரும்பவும், "திருமணத்துக்கு மட்டும் ஆசைப்படாதே! ஒரு சூடு எனக்குப் போதும்! ஆனால், மற்றபடி உனக்கு ஏமாற்றம் இராது! பண விஷயத்தில், நான் எப்போதுமே தாராளமாகத்தான் இருப்பேன்!" என்றபடி, அவளைப் பற்றி அணைத்தான் தீபன்!
தீபன் இப்படிச் செய்யக்கூடும் என்ற எண்ணம் சற்றும் இல்லாததாலோ என்னவோ, சந்தனா சில வினாடி நேரம் செயலற்றுப் போனாள்!
ஆனால், அதைச் சம்மதமாக எண்ணி, அவன் செயல்பட்ட விதத்தில் வெகுண்டு, இரு மடங்கு பலத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டு, அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
சற்றுத் தடுமாறியபோதும், இலகுவாகவே சமாளித்துக் கொண்டு, "ரொம்பவும் பிகு பண்ண வேண்டாம், சந்தனா!" என்றான் தீபன்! "அப்புறம், அதை நிஜம் என்று நான் நம்பிவிட்டால், உனக்குத்தான் நஷ்டம்!"
என்ன மனிதன் இவன்...?
நிஜத்தை, நிஜம் என்று நம்பிவிட்டால் என்கிறான்!
உண்மை, பொய் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத...
ஒரு கணம் தயங்கிய போதும், 'அடிமுட்டாள்' என்று வாக்கியத்தை, மனது முடிக்கத்தான் செய்தது!
பட்டப் பகலில்! அவனுடைய தாய் வீட்டில்! அந்தத் தாயும், அந்த வீட்டிலேயே இருக்கையில்!
இதிலெல்லாம் நீக்குப் போக்காக இருக்கிற நாட்டில் இப்போது வாழ்ந்தாலும், இவன் பிறந்து வளர்ந்தது, இங்கே தானே?
அப்படியென்ன ஒரு வெறி, அவளை நம்பவே கூடாது என்று?
ஏன் இப்படி?
ஏன், எப்படி என்று யோசிக்கிற நிலையெல்லாம் முடிந்து போயிற்று!
என்னதான் வெறி என்றாலும், கடைசி எல்லையையும், தீபன் தாண்டிவிட்டான்.
இனி...
எஃகு நாணின் விறைப்புடன் நிமிர்ந்து நின்று, கை நீட்டிக் கதவைக் காட்டினாள் சந்தனா. "போங்கள் வெளியே!"
"சந்தனா..."
"உடனே வெளியே போங்கள்! அல்லது... மூன்றாம் அறையில் உங்கள் அம்மா தூங்கிக் கொண்டு இருப்பது, உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்! இந்தப் பிற்பகல் தூக்கம், திடுமெனக் கலைந்து, பதற்றத்துடன் எழுவது, ஆன்ட்டியின் உடல் நிலைக்கு நல்லதல்ல என்பதும் தான்! இதற்கு மேல், நீங்கள் இங்கே நின்றால், அப்படி அவர்கள் விழித்தெழும்படியாக, நான் கத்திக் கூச்சலிட வேண்டியிருக்கும்! அதற்கு, ஒரு கணம் கூடத் தயங்க மாட்டேன். அதனால்... ம்! கெட் அவுட்!" என்றாள் உறுதியான குரலில், அழுத்தம் திருத்தமாகச் சந்தனா!
ஒரு வினாடி, அவள் முகத்தில் எதையோ தேடுவான் போலப் பார்த்தான் அவன்.
கருங்கல் சிலை மாதிரி, கதவைக் காட்டிய கை கூட இறங்காமல், அவள் அப்படியே நிற்கவும், சட்டெனத் திரும்பி வெளியே சென்றான்.
மாடிப் படிகளில், அவனது காலடியோசை தேய்ந்து மறையும் மட்டும், சந்தனா நின்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை!
அப்புறம் கூட, சில பல நிமிஷங்கள் அவளிடம் அசைவே இல்லைதான்.
அறை ஜன்னலின் அருகருகாகப் பறந்து சென்ற, அந்த விட்டு மாமரக் கிளியின் கீச்சிடல் மட்டும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வரவில்லை என்றால், இன்னும் எவ்வளவு நேரம், அப்படியே நின்றிருப்பாளோ!
பசிய நிறத்தில் அம்புகளாய் வானத்தில் பாயும், அந்தக் கிளிகளை, ஆன்ட்டியும், அவளும் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பார்கள்!
ஆனால், இனி, அது முடியாது!
ஒரு போதும்!
சட்டென சுற்றுப் புறம் புரிந்தவள் போன்று, சந்தனா ஓடிச் சென்று கதவைச் சாத்தி, உட்புறம் தாளிட்டாள்.
இந்தத் தாளிடலை, அந்த வீட்டில், அவள் முக்கியமாக நினைத்தது கிடையாது!
அதுவரை!
ஆனால், இனி இது முடியாது!
அந்தத் தேவையோடு, அவள் அங்கே இருப்பதே கூடாதே!
இருந்தால், அவளது மறுப்பு வெறும் பிகுதான் என்று, அவன் நிச்சயமாக நினைப்பான்!
அப்புறம்... சே!
தலைமை ஆசிரியருடைய மகள் என்பதாலோ, என்னவோ, சந்தனாவுக்கு, இந்த மாதிரியான அவமதிப்புகள் நேர்ந்ததே இல்லை எனலாம்!
எப்போதுமே மதிப்பும், மரியாதையும் தான்! பண்பும், பிரியமும் தான்!
எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வைத்து, இன்று...
சேசே! அதைப் பற்றி நினைக்கக் கூடாது! இனி என்ன செய்வது என்று மட்டும் தான்...
'விண் விண்' என்று தெறித்த தலையைப் பிடித்தபடி, சந்தனா யோசிக்க முயன்றாள்.
எப்படியும், இந்த வீட்டை விட்டுப் போயாக வேண்டும்! எங்கே, எப்படி என்று மட்டும் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்!
சிரமப்பட்டு, வலியை ஒதுக்கி யோசித்ததில், உடனடித் தீர்வுக்கு, ஒரே ஒரு வழி அவளுக்குத் தென்பட்டது!
சற்று அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றத்தான் செய்தது!
ஆனால், அவனுக்கு இது அவசியம்! எப்போதோ செய்திருக்க வேண்டியது என்றும் தோன்றிவிட, சற்று அலட்சிய பாவனையுடனேயே நின்றாள்.
மறுபடியும் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு, "ஆசிரியர் மகள் என்றாயில்லையா? அதற்கு ஏற்பப் பிரமாதமாகப் பேசுகிறாய்! அந்த வகையில், உன்னைப் பாராட்டத்தான் வேண்டும்! ஆனால், உன் நோக்கம் எனக்குத் தெரியும்!" என்று தீபன் கூறவும், சந்தனாவின் மனம் சோர்ந்தது!
இவனிடம் பேசியது எல்லாம் வீண்!
விடையை வைத்துக் கொண்டு கணக்கு எழுதுவது போல, இவன் முடிவு செய்துவிட்டு, அதற்காக ஆதாரங்களைச் சேகரிக்கிறான். அவள் என்ன சொன்னாலும், செய்தாலும், அவன் விரும்பிய விதமாகத்தான், அதைச் சித்தரிக்கப் போகிறான்!
எனவே, இவனிடம் என்ன சொன்னாலும், எந்தப் பயனும் இராது!
எப்போதும் இப்படித்தானே, போகிறான் என்று அலட்சியப்படுத்த முடியாமல் உள்ளே வலித்தது!
ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாமல், தலையைத் திருப்பிக் கொண்டு, "தெரிந்து விட்டதல்லவா? ரொம்பவும் சந்தோஷம். இனி வெளியே போங்கள்!' என்று அசட்டை காட்ட முயன்றாள் அவள்.
"போவதா? உன் நோக்கம் தெரிந்து விட்ட பிறகும், அதற்கு வேண்டியதைச் செய்யாமல் வெளியே போனேன் என்றால் என்னைப் பற்றி என்ன நினைப்பாய்?" என்றதோடு, கதவைத் தாளிட்டான் அவன்!
"என்ன..." என்று அவள் திகைப்புற்றுத் திரும்பவும், "திருமணத்துக்கு மட்டும் ஆசைப்படாதே! ஒரு சூடு எனக்குப் போதும்! ஆனால், மற்றபடி உனக்கு ஏமாற்றம் இராது! பண விஷயத்தில், நான் எப்போதுமே தாராளமாகத்தான் இருப்பேன்!" என்றபடி, அவளைப் பற்றி அணைத்தான் தீபன்!
தீபன் இப்படிச் செய்யக்கூடும் என்ற எண்ணம் சற்றும் இல்லாததாலோ என்னவோ, சந்தனா சில வினாடி நேரம் செயலற்றுப் போனாள்!
ஆனால், அதைச் சம்மதமாக எண்ணி, அவன் செயல்பட்ட விதத்தில் வெகுண்டு, இரு மடங்கு பலத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டு, அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
சற்றுத் தடுமாறியபோதும், இலகுவாகவே சமாளித்துக் கொண்டு, "ரொம்பவும் பிகு பண்ண வேண்டாம், சந்தனா!" என்றான் தீபன்! "அப்புறம், அதை நிஜம் என்று நான் நம்பிவிட்டால், உனக்குத்தான் நஷ்டம்!"
என்ன மனிதன் இவன்...?
நிஜத்தை, நிஜம் என்று நம்பிவிட்டால் என்கிறான்!
உண்மை, பொய் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத...
ஒரு கணம் தயங்கிய போதும், 'அடிமுட்டாள்' என்று வாக்கியத்தை, மனது முடிக்கத்தான் செய்தது!
பட்டப் பகலில்! அவனுடைய தாய் வீட்டில்! அந்தத் தாயும், அந்த வீட்டிலேயே இருக்கையில்!
இதிலெல்லாம் நீக்குப் போக்காக இருக்கிற நாட்டில் இப்போது வாழ்ந்தாலும், இவன் பிறந்து வளர்ந்தது, இங்கே தானே?
அப்படியென்ன ஒரு வெறி, அவளை நம்பவே கூடாது என்று?
ஏன் இப்படி?
ஏன், எப்படி என்று யோசிக்கிற நிலையெல்லாம் முடிந்து போயிற்று!
என்னதான் வெறி என்றாலும், கடைசி எல்லையையும், தீபன் தாண்டிவிட்டான்.
இனி...
எஃகு நாணின் விறைப்புடன் நிமிர்ந்து நின்று, கை நீட்டிக் கதவைக் காட்டினாள் சந்தனா. "போங்கள் வெளியே!"
"சந்தனா..."
"உடனே வெளியே போங்கள்! அல்லது... மூன்றாம் அறையில் உங்கள் அம்மா தூங்கிக் கொண்டு இருப்பது, உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்! இந்தப் பிற்பகல் தூக்கம், திடுமெனக் கலைந்து, பதற்றத்துடன் எழுவது, ஆன்ட்டியின் உடல் நிலைக்கு நல்லதல்ல என்பதும் தான்! இதற்கு மேல், நீங்கள் இங்கே நின்றால், அப்படி அவர்கள் விழித்தெழும்படியாக, நான் கத்திக் கூச்சலிட வேண்டியிருக்கும்! அதற்கு, ஒரு கணம் கூடத் தயங்க மாட்டேன். அதனால்... ம்! கெட் அவுட்!" என்றாள் உறுதியான குரலில், அழுத்தம் திருத்தமாகச் சந்தனா!
ஒரு வினாடி, அவள் முகத்தில் எதையோ தேடுவான் போலப் பார்த்தான் அவன்.
கருங்கல் சிலை மாதிரி, கதவைக் காட்டிய கை கூட இறங்காமல், அவள் அப்படியே நிற்கவும், சட்டெனத் திரும்பி வெளியே சென்றான்.
மாடிப் படிகளில், அவனது காலடியோசை தேய்ந்து மறையும் மட்டும், சந்தனா நின்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை!
அப்புறம் கூட, சில பல நிமிஷங்கள் அவளிடம் அசைவே இல்லைதான்.
அறை ஜன்னலின் அருகருகாகப் பறந்து சென்ற, அந்த விட்டு மாமரக் கிளியின் கீச்சிடல் மட்டும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வரவில்லை என்றால், இன்னும் எவ்வளவு நேரம், அப்படியே நின்றிருப்பாளோ!
பசிய நிறத்தில் அம்புகளாய் வானத்தில் பாயும், அந்தக் கிளிகளை, ஆன்ட்டியும், அவளும் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பார்கள்!
ஆனால், இனி, அது முடியாது!
ஒரு போதும்!
சட்டென சுற்றுப் புறம் புரிந்தவள் போன்று, சந்தனா ஓடிச் சென்று கதவைச் சாத்தி, உட்புறம் தாளிட்டாள்.
இந்தத் தாளிடலை, அந்த வீட்டில், அவள் முக்கியமாக நினைத்தது கிடையாது!
அதுவரை!
ஆனால், இனி இது முடியாது!
அந்தத் தேவையோடு, அவள் அங்கே இருப்பதே கூடாதே!
இருந்தால், அவளது மறுப்பு வெறும் பிகுதான் என்று, அவன் நிச்சயமாக நினைப்பான்!
அப்புறம்... சே!
தலைமை ஆசிரியருடைய மகள் என்பதாலோ, என்னவோ, சந்தனாவுக்கு, இந்த மாதிரியான அவமதிப்புகள் நேர்ந்ததே இல்லை எனலாம்!
எப்போதுமே மதிப்பும், மரியாதையும் தான்! பண்பும், பிரியமும் தான்!
எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வைத்து, இன்று...
சேசே! அதைப் பற்றி நினைக்கக் கூடாது! இனி என்ன செய்வது என்று மட்டும் தான்...
'விண் விண்' என்று தெறித்த தலையைப் பிடித்தபடி, சந்தனா யோசிக்க முயன்றாள்.
எப்படியும், இந்த வீட்டை விட்டுப் போயாக வேண்டும்! எங்கே, எப்படி என்று மட்டும் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்!
சிரமப்பட்டு, வலியை ஒதுக்கி யோசித்ததில், உடனடித் தீர்வுக்கு, ஒரே ஒரு வழி அவளுக்குத் தென்பட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்றைய மதியத் தூக்கம் முடிந்து, மாலைக் காபிக்காக மீனாட்சி அம்மாள் கீழே வந்து உட்கார்ந்த போது, மகன் தீபனும் உடன் வந்து அமர்ந்தான்.
எப்போதேனும் வேலை இல்லாத சமயங்களில், அவன் அப்படி வருவது உண்டுதான் என்பதால், மீனாட்சிக்கு அதில் அதிசயம் ஏதும் தோன்றவில்லை!
ஆனால், "சந்தனாவுடைய அண்ணன் எங்கேம்மா இருக்கிறார்?" என்று கேட்டது ஆச்சரியமாகத்தான் இருந்தது!
சந்தனாவின் பெயரைக் கேட்டாலே, எண்ணெயில் விழுந்த அப்பமாகக் குதிக்கிறவன், அவளுடைய உறவைப் பற்றியெல்லாம் விசாரிக்கிறானே!
வியப்புடன் நோக்கி, "ஏன் கேட்கிறாய்?" என்று பதில் கேள்வி கேட்டாள் அன்னை!
"என்னம்மா நீங்கள்? அதிகப் பழக்கம் இல்லாத பெண்! அவளை வீட்டுக்குக் கூட்டி வந்து வைத்திருக்கிறீர்கள்! அவளுடைய உற்றம், சுற்றம் எப்படி, எங்கே என்று விசாரிக்கக் கூடாதா?" என்று குறையோடு கேட்டான் மகன்.
பழக்கம் இல்லாத ஒருத்தியைத் திருமணமே செய்தவன், என்னைக் கேட்கிறாயா என்று எழுந்த கேள்வியை உள்ளேயே அடக்கினாள் அன்னை!
அவனே, அதில் நொந்துவிட்டவன்! அதை, இப்போது குத்திக் கிளறுவதில் என்ன லாபம்?
ஒருவேளை, அவளை வைத்து எடை போடுவதால் தான், சந்தனாவிடம், இப்படிக் காய்கிறானா?
அத்தோடு, இந்தப் பத்திரிகைப் பிரச்சினை வேறு!
மகனை நியாயப் படுத்துகிறோம் என்று உணர்ந்து, அந்த வகை எண்ண ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக் கொண்டு, அவன் கேட்ட விவரங்கள் அனைத்தையுமே தாயார் தெரிவித்தாள்.
"தாய் இல்லாததால், உறவுகள் பழக்கம் ரொம்பவே விட்டுப் போயிற்று போல! ஆனால், அண்ணன் தங்கைக்குள் பாசம் அதிகம்! தந்தை இறந்த பிறகு, தங்கையைத் தனியாக இங்கே விட்டுவிட்டு, யுஎஸ் போகவே அவனுக்கு மனமில்லை. ஆனால், போக மறுத்தால், தந்தை இவ்வளவு காலம் சேர்த்து வைத்தது அனைத்தையுமே கட்ட வேண்டிய நிலைமையாம்! அதனால் சந்தனா தான், அண்ணனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாள்! மொத்தத்தில், ஆறு மாத வேலை என்றாலும், முடிந்தவரை, அதைச் சீக்கிரமே முடித்துவிட்டுத் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறானாம்!"
எல்லாமே, சந்தனாவாகச் சொன்னவையாகத்தான் இருக்கிறது!
"அந்த அண்ணனின் முகவரி உங்களிடம் இருக்கிறதாம்மா?"
திரும்பி மகன் முகத்தைப் பார்த்தாள் பெற்றவள். "என்னடாப்பா சந்தேகமா? பூபாலன் வந்துவிட்டால், சந்தனாவைக் கூட்டிப் போய்விடுவானே, அவளைப் பிரிய நேருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! நீயானால்..."
"ஐயோ, என்னம்மா நீங்கள்! ஓர் அன்னியப் பெண்! நம் பொறுப்பில் இருக்கிறாள்! ஏதோ ஓர் அவசரம் என்றால், ஒரு காய்ச்சல் என்றால் கூடத் தகவல் தெரிவிக்கவேனும், அவளுடைய உறவினர் முகவரி வேண்டாமா? அதற்காகக் கேட்டால், என்னென்னமோ சொல்லுகிறீர்களே!
"அவள் இங்கே என்னோடு தங்க வந்தபோது, தங்கை தனியே தவிக்க நேராமல், உடன் வைத்திருப்பதற்காக நன்றி தெரிவித்து, அந்தப் பையன் யுஎஸ்சில் இருந்து ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனது விலாசம் முழுதாக இருக்கிறது! பாவம்! தாயில்லாவிட்டாலும், பெரியவர், பிள்ளைகளைப் பண்போடு வளர்த்திருக்கிறார்!"
"அந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்!" என்று தீபன் கேட்கவும், "கேட்பாய் என்று நினைத்தேன்!" என்றாள் தாய் ஒரு மாதிரிக் குரலில்! "நல்ல மனிதர்களைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சந்தேகப்படுகிறாயே!" என்று சற்று வருத்தமும் பட்டாள்!
இப்போது, மகன் தன்னை மறைக்க முயற்சிக்கவில்லை! "என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தாலும், போதாது என்று தான் சொல்வேன், அம்மா! அத்தோடு, எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவரை, நம்பாமல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஏமாற்றத்துக்கு இடமிராது! அந்த முகவரியைத் தருகிறீர்களா?"
யாரை நம்பலாம் என்று கூட அறிந்து கொள்ளத் தெரியாமல், இவன், அங்கே என்ன தான் வாழ்க்கை நடத்துகிறானோ என்று உள்ளூர அலுத்தபடி, "தாராளமாகத் தருகிறேன்! அவர்கள் யாருமே, தங்கள் முகவரியையோ, டெலிபோன் எண்ணையோ யாருக்கும் தரக்கூடாது என்று சொன்னதே இல்லை!" என்று மகனுக்கு ஒரு சிறு குட்டுக் கொடுத்துவிட்டு, பூபாலனின் முகவரியை எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள் அன்னை!
தாயின் செல்லை வாங்கி, எலிசாவோடு தொடர்பு கொண்டு, பூபாலனின் முகவரியை அவளிடம் சொன்னான் தீபன்.
"இந்த முகவரி சரிதானா என்று செக் பண்ண வேண்டும், எலிசா!" என்றான்.
எதிர் முனையில் அவள் ஏதோ கேட்கவும், "என் அம்மா மிகவும் பிரியம் வைத்திருக்கும் பெண்ணுடைய அண்ணன்! அம்மா ஏமாந்துவிடக் கூடாதே என்று தான்! என்னது? நான் வருவதா? பா...ர்க்கலாம்! கொஞ்ச நாள் ஆகட்டும்! அதன் பிறகு சொல்கிறேன்! வைத்துவிடு...பை!" என்று செல்லை அணைத்தான் தீபன்!
"என்ன? கூப்பிடத் தொடங்கிவிட்டாளா? என்றைக்கு டிக்கெட் எடுக்கப் போகிறாய்?" என்று மீனாட்சி எரிச்சலோடு கேட்க, "இப்போதைக்கு இல்லைம்மா! நிஜம்!" என்று அழுத்திச் சொன்னான் அவன்.
தன் பொம்மையோடு வந்து, "பசி!" என்றாள் மித்ரா. "இன்றைக்கு ஏன் கிராண்ட்மா, சந்தனா சிற்றுண்டி சாப்பிட வரவில்லை? என்னை மட்டும், கட்டாயம் சாப்பிடணும் என்பாளே?" என்று, சந்தனாவைத் தேடினாள்.
"ஆமாம், அவள் ஏன் இன்னும் வரவில்லை?" என்றாள் மீனாட்சியும்!
சமயத்தில் சமையல்காரம்மாவும் வந்து, "அவங்க அறைக் கதவு சாத்திருக்கம்மா! நானும், கூப்பிட்டுப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்! சந்தனாப் பொண்ணு, பதிலே சொல்லவில்லை! பாத்ரூமிலே இருக்கிறாளோ என்று வந்துவிட்டேன்!" என்றாள்.
ஆட்டம் காட்டுகிறாளா, அல்லது அவனைச் சந்திக்கக் கூடாது என்று எண்ணுகிறாளா?
எதுவானாலும் வயிறு காய்ந்தால், தானாக வருவாள் என்று நினைத்த தீபன், "ஏதாவது முக்கியமாக முடிக்க வேண்டிய வேலையாக இருக்கும், அம்மா! நோட்டுத் திருத்துவது, பாடம் தயார் பண்ணுவது என்று நீங்கள் தான் கடமை, கண்ணியத்தோடு வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே! ஆனால், அப்படி ஒன்றும், ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யமாட்டாள் என்று நினைக்கிறேன்! பசித்தால், தானாக வந்து சாப்பிடுவாள், நீங்கள் முதலில் சாப்பிட வாருங்கள்!" என்று, தாயையும் மகளையும் உண்ண அழைத்துப் போனான்.
மகனோடு பேசிக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் அவனோடு உணவருந்தச் சென்றாலும், உள்ளூர ஏதோ நெருட சந்தனாவை அழைத்து வருமாறு, சமையல்காரம்மாவை மீண்டும் அனுப்பி வைத்தாள் மீனாட்சி.
மீண்டும் பதில் இல்லை என்றானதும், சந்தனா யாரையும் அலட்சியம் செய்கிற பெண் இல்லையே என்று எண்ணி சமையல்காரி, என்னவோ என்று, சட்டெனப் பதறிப் போனாள்.
கீழே விழுந்து, கிழுந்து அடி ஏதும் பட்டிருந்தால்?
கதவுக் குமிழைத் திருகினால், கதவு உடனே திறந்து கொண்டது! உட்புறம் தாளிடவே இல்லை!
அறையின் உள்ளேயோ, குளியல் அறையிலோ சந்தனா இல்லை என்றானதும், சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு, படுக்கையை ஒட்டியிருந்த முக்காலி மீது மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதம் கண்ணில் பட்டது!
எப்போதேனும் வேலை இல்லாத சமயங்களில், அவன் அப்படி வருவது உண்டுதான் என்பதால், மீனாட்சிக்கு அதில் அதிசயம் ஏதும் தோன்றவில்லை!
ஆனால், "சந்தனாவுடைய அண்ணன் எங்கேம்மா இருக்கிறார்?" என்று கேட்டது ஆச்சரியமாகத்தான் இருந்தது!
சந்தனாவின் பெயரைக் கேட்டாலே, எண்ணெயில் விழுந்த அப்பமாகக் குதிக்கிறவன், அவளுடைய உறவைப் பற்றியெல்லாம் விசாரிக்கிறானே!
வியப்புடன் நோக்கி, "ஏன் கேட்கிறாய்?" என்று பதில் கேள்வி கேட்டாள் அன்னை!
"என்னம்மா நீங்கள்? அதிகப் பழக்கம் இல்லாத பெண்! அவளை வீட்டுக்குக் கூட்டி வந்து வைத்திருக்கிறீர்கள்! அவளுடைய உற்றம், சுற்றம் எப்படி, எங்கே என்று விசாரிக்கக் கூடாதா?" என்று குறையோடு கேட்டான் மகன்.
பழக்கம் இல்லாத ஒருத்தியைத் திருமணமே செய்தவன், என்னைக் கேட்கிறாயா என்று எழுந்த கேள்வியை உள்ளேயே அடக்கினாள் அன்னை!
அவனே, அதில் நொந்துவிட்டவன்! அதை, இப்போது குத்திக் கிளறுவதில் என்ன லாபம்?
ஒருவேளை, அவளை வைத்து எடை போடுவதால் தான், சந்தனாவிடம், இப்படிக் காய்கிறானா?
அத்தோடு, இந்தப் பத்திரிகைப் பிரச்சினை வேறு!
மகனை நியாயப் படுத்துகிறோம் என்று உணர்ந்து, அந்த வகை எண்ண ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக் கொண்டு, அவன் கேட்ட விவரங்கள் அனைத்தையுமே தாயார் தெரிவித்தாள்.
"தாய் இல்லாததால், உறவுகள் பழக்கம் ரொம்பவே விட்டுப் போயிற்று போல! ஆனால், அண்ணன் தங்கைக்குள் பாசம் அதிகம்! தந்தை இறந்த பிறகு, தங்கையைத் தனியாக இங்கே விட்டுவிட்டு, யுஎஸ் போகவே அவனுக்கு மனமில்லை. ஆனால், போக மறுத்தால், தந்தை இவ்வளவு காலம் சேர்த்து வைத்தது அனைத்தையுமே கட்ட வேண்டிய நிலைமையாம்! அதனால் சந்தனா தான், அண்ணனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாள்! மொத்தத்தில், ஆறு மாத வேலை என்றாலும், முடிந்தவரை, அதைச் சீக்கிரமே முடித்துவிட்டுத் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறானாம்!"
எல்லாமே, சந்தனாவாகச் சொன்னவையாகத்தான் இருக்கிறது!
"அந்த அண்ணனின் முகவரி உங்களிடம் இருக்கிறதாம்மா?"
திரும்பி மகன் முகத்தைப் பார்த்தாள் பெற்றவள். "என்னடாப்பா சந்தேகமா? பூபாலன் வந்துவிட்டால், சந்தனாவைக் கூட்டிப் போய்விடுவானே, அவளைப் பிரிய நேருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! நீயானால்..."
"ஐயோ, என்னம்மா நீங்கள்! ஓர் அன்னியப் பெண்! நம் பொறுப்பில் இருக்கிறாள்! ஏதோ ஓர் அவசரம் என்றால், ஒரு காய்ச்சல் என்றால் கூடத் தகவல் தெரிவிக்கவேனும், அவளுடைய உறவினர் முகவரி வேண்டாமா? அதற்காகக் கேட்டால், என்னென்னமோ சொல்லுகிறீர்களே!
"அவள் இங்கே என்னோடு தங்க வந்தபோது, தங்கை தனியே தவிக்க நேராமல், உடன் வைத்திருப்பதற்காக நன்றி தெரிவித்து, அந்தப் பையன் யுஎஸ்சில் இருந்து ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனது விலாசம் முழுதாக இருக்கிறது! பாவம்! தாயில்லாவிட்டாலும், பெரியவர், பிள்ளைகளைப் பண்போடு வளர்த்திருக்கிறார்!"
"அந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்!" என்று தீபன் கேட்கவும், "கேட்பாய் என்று நினைத்தேன்!" என்றாள் தாய் ஒரு மாதிரிக் குரலில்! "நல்ல மனிதர்களைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சந்தேகப்படுகிறாயே!" என்று சற்று வருத்தமும் பட்டாள்!
இப்போது, மகன் தன்னை மறைக்க முயற்சிக்கவில்லை! "என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தாலும், போதாது என்று தான் சொல்வேன், அம்மா! அத்தோடு, எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவரை, நம்பாமல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஏமாற்றத்துக்கு இடமிராது! அந்த முகவரியைத் தருகிறீர்களா?"
யாரை நம்பலாம் என்று கூட அறிந்து கொள்ளத் தெரியாமல், இவன், அங்கே என்ன தான் வாழ்க்கை நடத்துகிறானோ என்று உள்ளூர அலுத்தபடி, "தாராளமாகத் தருகிறேன்! அவர்கள் யாருமே, தங்கள் முகவரியையோ, டெலிபோன் எண்ணையோ யாருக்கும் தரக்கூடாது என்று சொன்னதே இல்லை!" என்று மகனுக்கு ஒரு சிறு குட்டுக் கொடுத்துவிட்டு, பூபாலனின் முகவரியை எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள் அன்னை!
தாயின் செல்லை வாங்கி, எலிசாவோடு தொடர்பு கொண்டு, பூபாலனின் முகவரியை அவளிடம் சொன்னான் தீபன்.
"இந்த முகவரி சரிதானா என்று செக் பண்ண வேண்டும், எலிசா!" என்றான்.
எதிர் முனையில் அவள் ஏதோ கேட்கவும், "என் அம்மா மிகவும் பிரியம் வைத்திருக்கும் பெண்ணுடைய அண்ணன்! அம்மா ஏமாந்துவிடக் கூடாதே என்று தான்! என்னது? நான் வருவதா? பா...ர்க்கலாம்! கொஞ்ச நாள் ஆகட்டும்! அதன் பிறகு சொல்கிறேன்! வைத்துவிடு...பை!" என்று செல்லை அணைத்தான் தீபன்!
"என்ன? கூப்பிடத் தொடங்கிவிட்டாளா? என்றைக்கு டிக்கெட் எடுக்கப் போகிறாய்?" என்று மீனாட்சி எரிச்சலோடு கேட்க, "இப்போதைக்கு இல்லைம்மா! நிஜம்!" என்று அழுத்திச் சொன்னான் அவன்.
தன் பொம்மையோடு வந்து, "பசி!" என்றாள் மித்ரா. "இன்றைக்கு ஏன் கிராண்ட்மா, சந்தனா சிற்றுண்டி சாப்பிட வரவில்லை? என்னை மட்டும், கட்டாயம் சாப்பிடணும் என்பாளே?" என்று, சந்தனாவைத் தேடினாள்.
"ஆமாம், அவள் ஏன் இன்னும் வரவில்லை?" என்றாள் மீனாட்சியும்!
சமயத்தில் சமையல்காரம்மாவும் வந்து, "அவங்க அறைக் கதவு சாத்திருக்கம்மா! நானும், கூப்பிட்டுப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்! சந்தனாப் பொண்ணு, பதிலே சொல்லவில்லை! பாத்ரூமிலே இருக்கிறாளோ என்று வந்துவிட்டேன்!" என்றாள்.
ஆட்டம் காட்டுகிறாளா, அல்லது அவனைச் சந்திக்கக் கூடாது என்று எண்ணுகிறாளா?
எதுவானாலும் வயிறு காய்ந்தால், தானாக வருவாள் என்று நினைத்த தீபன், "ஏதாவது முக்கியமாக முடிக்க வேண்டிய வேலையாக இருக்கும், அம்மா! நோட்டுத் திருத்துவது, பாடம் தயார் பண்ணுவது என்று நீங்கள் தான் கடமை, கண்ணியத்தோடு வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே! ஆனால், அப்படி ஒன்றும், ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யமாட்டாள் என்று நினைக்கிறேன்! பசித்தால், தானாக வந்து சாப்பிடுவாள், நீங்கள் முதலில் சாப்பிட வாருங்கள்!" என்று, தாயையும் மகளையும் உண்ண அழைத்துப் போனான்.
மகனோடு பேசிக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் அவனோடு உணவருந்தச் சென்றாலும், உள்ளூர ஏதோ நெருட சந்தனாவை அழைத்து வருமாறு, சமையல்காரம்மாவை மீண்டும் அனுப்பி வைத்தாள் மீனாட்சி.
மீண்டும் பதில் இல்லை என்றானதும், சந்தனா யாரையும் அலட்சியம் செய்கிற பெண் இல்லையே என்று எண்ணி சமையல்காரி, என்னவோ என்று, சட்டெனப் பதறிப் போனாள்.
கீழே விழுந்து, கிழுந்து அடி ஏதும் பட்டிருந்தால்?
கதவுக் குமிழைத் திருகினால், கதவு உடனே திறந்து கொண்டது! உட்புறம் தாளிடவே இல்லை!
அறையின் உள்ளேயோ, குளியல் அறையிலோ சந்தனா இல்லை என்றானதும், சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு, படுக்கையை ஒட்டியிருந்த முக்காலி மீது மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதம் கண்ணில் பட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதைப் பிரித்துப் படிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று உணர்ந்து, கடிதத்தை அப்படியே எடுத்துப் போய், மீனாட்சியிடம் கொடுத்தாள்.
"அறையில் சந்தனா இல்லையம்மா! இந்தக் கடிதாசி மட்டும் முக்காலி மேலே இருந்தது!"
ராட்சசி! எல்லாவற்றையும் எழுதியிருப்பாளோ என்று, சட்டென தீபனின் முகம் கன்றிவிட்டது!
அன்னையின் ஒழுக்க விதிகளே வேறாயிற்றே!
"என்னது?" என்று பதட்டத்துடன் மீனாட்சி கடிதத்தைப் பிரிக்கையிலேயே, "நான் படிக்கிறேன் அம்மா! நீங்கள் அமைதியாக இருங்கள்!" என்று பிடுங்காத குறையாகக் கடிதத்தை வாங்கிப் பார்த்தவனுக்கு, அப்பாடி என்றிருந்தது!
சந்தனாவின் சுருக்கமான கடிதத்தில், அவனது பெயரே இல்லை!
அவளுக்குத் தங்குவதற்கு, ஒரு நல்ல் விடுதியில் இடம் கிடைத்துவிட்டது! இன்றே வந்தால் தான், இடம் உறுதி என்பதால், ஒரே செடி மாற்றுடையோடு போவதாகவும், பிறகு வந்து மற்றவைகளை எடுத்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.
"உங்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்புவதுதான் சரியான முறை, ஆன்ட்டி! ஆனால், என் மீதுள்ள அன்பினால், தடுக்கப் பார்ப்பீர்கள்! உங்களை மீறிச் செல்ல நேருமே என்றுதான், இப்படிக் கிளம்புகிறேன், ஆன்ட்டி! நீங்கள் எனக்குச் செய்திருக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றி!" என்றவள், அந்த வீட்டில் இருக்கையில் தன் மீது அன்பு காட்டிய சமையல்காரம்மா, ராசையா, பணிப்பெண் எல்லோருக்குமே நன்றி தெரிவித்ததோடு, 'மித்திக் குட்டிக்கு அன்பைச் சொல்லவும்' என்று முடித்திருந்தாள்!
கடிதத்தை உரக்கப் படித்து முடித்த போது, அவனது பெயர் விடுபட்டிருந்ததே, இப்போது முகத்தில் அறைந்தது போலத் தீபனுக்குத் தோன்றியது!
அவனால் தான் போயிருக்கிறாள் என்று காட்டியிருக்கிறாள்!
அவளது இந்தியப் பண்பாட்டுக்கு, அவனது செயலைச் சாதாரணமாக எடுத்து, உரிய மதிப்புக் கொடுத்து, ஒன்றுமில்லை என்று விட்டுவிடத் தெரியவில்லை!
அப்படி, அவன் என்ன முரட்டுபலம் காட்டி, அவளை பலாத்காரமா பண்ணிவிடப் போகிறான்? முட்டாள், என்று எண்ணியவனுக்குத் தாயின் முகத்தில் வருத்தத்தைப் பார்க்கையில், சந்தனா மீது கோபமும் வந்தது!
ஏதோ, சரியாக இதே சமயத்தில், அவளுக்கு ஒரு விடுதியில் இடம் கிடைத்திருக்கிறது! இல்லாவிட்டால் முழுங்கிக் கொண்டு சும்மாதானே இருந்திருப்பாள்! இப்போதும், அப்படியே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே என்று எரிச்சலுடன் நினைத்தான்!
அழத் தயாராக இருந்த மகளையும், முகம் வாடியிருந்த தாயையும் சமாதானம் செய்து, வேடிக்கையும் விளையாட்டுமாகப் பேசி உற்சாகப் படுத்துவதிலேயே, அன்றைய மாலை முழுவதையும் தீபன் செலவிட நேர்ந்தது!
அப்போதும், அதில் முழு வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாத நிலைதான்!
இபப்டி வீட்டை விட்டுப் போவாள் என்று தெரிந்திருந்தால் எப்போதும் போல ஒதுங்கியே இருந்திருப்பான்!
சந்தனா, இவ்வளவு அழகாக இல்லாமல் இருந்து தொலைந்திருந்தாலும், இந்தப் பிரச்சினை நேர்ந்திராது!
பளிச்சென்று கண்ணைக் கவர்கிற அழகோடு, வீட்டில் ஒருத்தி வளைய வந்தால், ஓரிரு சமயம் இப்படியும் நடக்கக்கூடும் தானே?
இதற்குப் போய், இப்படி வீட்டை விட்டே வெளியேறி விட்டால், எத்தனை பேருக்கு மனது கஷ்டப்படும் என்று யோசிக்க வேண்டாமா என்று, சந்தனா மீதே எரிச்சல் பட்டான் தீபன்!
இந்த அழகில் அவள் ரொம்பத்தான் பாசம் உள்ள பெண் என்று உருகுகிறார்கள், இந்த அம்மா! அப்படிப் பாசம் இருக்கிறவள் என்றால், தன் பிரிவால் ஒரு முதியவளும் குழந்தையும் பாதிக்கப் படுவார்களே என்று, வீட்டை விட்டு வெளியேறு முன் யோசித்திருக்க மாட்டாளா என்ன?
என்னதான் முயன்றும், வீடு களையிழந்து தெரிந்தது!
மித்ரா, தன் பழைய வழக்கப்படி, பொம்மையை அணைத்துப் பிடித்தபடி, ஒரு சோபா மூலையில் முடங்கி விட்டாள்.
மீனாட்சி அம்மாள், மருத்துவமனைக் கணக்குகளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தவள், கண்ணாடி கூடப் போடாமல், விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்!
ஹால் டீவி ஓடிக் கொண்டிருந்தபோதும், அதைப் பார்ப்பார் இல்லாமல், சமையல்காரம்மா கூடத் தலையைப் பிடித்துக் கொண்டு கண் மூடிக் கால் நீட்டி அமர்ந்திருந்தாள்!
தன் எழுத்து வேலையைத் தொடங்கிய தீபன், அதில் மனம் ஒன்றாமல் எழுந்து வெளியே வந்தபோது, கண்ட காட்சி இதுதான்!
என்ன இது?
எவளோ ஒருத்தி, ரத்த சம்பந்தமே இல்லாதவள், சில மாதங்கள் இருந்துவிட்டு, அவளுடைய அண்ணன் வந்ததும் அவனோடு இந்த வீட்டை விட்டுப் போய்விடப் போகிறவள்! அவள் இல்லை என்பதற்காக, எல்லோரும் ஏதோ வீடு மாதிரித் துக்கம் காக்கிறார்கள்!
இத்தனைக்கும், சந்தனா நல்லவளா, கெட்டவளா என்பது கூட, இன்னமும் நிச்சயமில்லை!
எரிச்சலோடு நடந்து போய், டீவியை ஆஃப் செய்தான் தீபன்!
என்ன என்பது போல, வெறுமனே அவனைப் பார்த்தாள் அவளுடைய அன்னை!
தூக்கம் கலைந்த மாதிரி, வாரிச் சுருட்டி எழுந்து, "நேரமாகிவிட்டதா, தம்பி? டிபன் எடுத்து வைக்கட்டுமா?" என்று வினவிய சமையல்காரம்மா, ஹாலின் பழைய காலத்துக் கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.
"இன்னும் நேரமாகவில்லையே! தம்பிக்குப் பசித்து விட்டதா? பலகாரமே வைத்து விடட்டுமா, அல்லது, கொறிக்கிற மாதிரி ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று மீண்டும் கேட்டாள்.
"ஒன்றும் வேண்டாம்! ஆனால், நீங்கள் எல்லோரும், ஏன் இப்படி ஒரேயடியாக டல்லடிக்கிறீர்கள்? அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, சாதாரணமாக இருங்களேன்!" என்றான் அவன் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்!
'உச்சு'க் கொட்டினாள் மீனாட்சி அம்மாள்.
"என்னவோ, சந்தனா இங்கே இருந்தால், பள்ளியில் நடந்தது, பேப்பரில் வந்தது என்று ஏதாவது சொல்லுவாள்! நாம் சொல்லுவதையும் கேட்பாளா, அவள் இல்லாதது, கையொடிந்த மாதிரி, வேலையே ஓட மாட்டேன் என்கிறது! நாலைந்து நாட்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! போகட்டும் போ! நாங்கள் எப்படியோ சமாளிக்கிறோம்! நீ போய், உன் வேலையைக் கவனி!" என்று தாயார் சொல்லவும் தான், தீபனுக்குச் சுரீலென உறைத்தது!
அவனும் வேலை ஓடாமல் தான் எழுந்து வந்தான்!
அப்படியானால், அவனும், சந்தனா வீட்டில் இல்லாததை உணர்கிறானா?
எப்படி?
நம்ப முடியவில்லை அவனால்!
"அறையில் சந்தனா இல்லையம்மா! இந்தக் கடிதாசி மட்டும் முக்காலி மேலே இருந்தது!"
ராட்சசி! எல்லாவற்றையும் எழுதியிருப்பாளோ என்று, சட்டென தீபனின் முகம் கன்றிவிட்டது!
அன்னையின் ஒழுக்க விதிகளே வேறாயிற்றே!
"என்னது?" என்று பதட்டத்துடன் மீனாட்சி கடிதத்தைப் பிரிக்கையிலேயே, "நான் படிக்கிறேன் அம்மா! நீங்கள் அமைதியாக இருங்கள்!" என்று பிடுங்காத குறையாகக் கடிதத்தை வாங்கிப் பார்த்தவனுக்கு, அப்பாடி என்றிருந்தது!
சந்தனாவின் சுருக்கமான கடிதத்தில், அவனது பெயரே இல்லை!
அவளுக்குத் தங்குவதற்கு, ஒரு நல்ல் விடுதியில் இடம் கிடைத்துவிட்டது! இன்றே வந்தால் தான், இடம் உறுதி என்பதால், ஒரே செடி மாற்றுடையோடு போவதாகவும், பிறகு வந்து மற்றவைகளை எடுத்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.
"உங்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்புவதுதான் சரியான முறை, ஆன்ட்டி! ஆனால், என் மீதுள்ள அன்பினால், தடுக்கப் பார்ப்பீர்கள்! உங்களை மீறிச் செல்ல நேருமே என்றுதான், இப்படிக் கிளம்புகிறேன், ஆன்ட்டி! நீங்கள் எனக்குச் செய்திருக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றி!" என்றவள், அந்த வீட்டில் இருக்கையில் தன் மீது அன்பு காட்டிய சமையல்காரம்மா, ராசையா, பணிப்பெண் எல்லோருக்குமே நன்றி தெரிவித்ததோடு, 'மித்திக் குட்டிக்கு அன்பைச் சொல்லவும்' என்று முடித்திருந்தாள்!
கடிதத்தை உரக்கப் படித்து முடித்த போது, அவனது பெயர் விடுபட்டிருந்ததே, இப்போது முகத்தில் அறைந்தது போலத் தீபனுக்குத் தோன்றியது!
அவனால் தான் போயிருக்கிறாள் என்று காட்டியிருக்கிறாள்!
அவளது இந்தியப் பண்பாட்டுக்கு, அவனது செயலைச் சாதாரணமாக எடுத்து, உரிய மதிப்புக் கொடுத்து, ஒன்றுமில்லை என்று விட்டுவிடத் தெரியவில்லை!
அப்படி, அவன் என்ன முரட்டுபலம் காட்டி, அவளை பலாத்காரமா பண்ணிவிடப் போகிறான்? முட்டாள், என்று எண்ணியவனுக்குத் தாயின் முகத்தில் வருத்தத்தைப் பார்க்கையில், சந்தனா மீது கோபமும் வந்தது!
ஏதோ, சரியாக இதே சமயத்தில், அவளுக்கு ஒரு விடுதியில் இடம் கிடைத்திருக்கிறது! இல்லாவிட்டால் முழுங்கிக் கொண்டு சும்மாதானே இருந்திருப்பாள்! இப்போதும், அப்படியே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே என்று எரிச்சலுடன் நினைத்தான்!
அழத் தயாராக இருந்த மகளையும், முகம் வாடியிருந்த தாயையும் சமாதானம் செய்து, வேடிக்கையும் விளையாட்டுமாகப் பேசி உற்சாகப் படுத்துவதிலேயே, அன்றைய மாலை முழுவதையும் தீபன் செலவிட நேர்ந்தது!
அப்போதும், அதில் முழு வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாத நிலைதான்!
இபப்டி வீட்டை விட்டுப் போவாள் என்று தெரிந்திருந்தால் எப்போதும் போல ஒதுங்கியே இருந்திருப்பான்!
சந்தனா, இவ்வளவு அழகாக இல்லாமல் இருந்து தொலைந்திருந்தாலும், இந்தப் பிரச்சினை நேர்ந்திராது!
பளிச்சென்று கண்ணைக் கவர்கிற அழகோடு, வீட்டில் ஒருத்தி வளைய வந்தால், ஓரிரு சமயம் இப்படியும் நடக்கக்கூடும் தானே?
இதற்குப் போய், இப்படி வீட்டை விட்டே வெளியேறி விட்டால், எத்தனை பேருக்கு மனது கஷ்டப்படும் என்று யோசிக்க வேண்டாமா என்று, சந்தனா மீதே எரிச்சல் பட்டான் தீபன்!
இந்த அழகில் அவள் ரொம்பத்தான் பாசம் உள்ள பெண் என்று உருகுகிறார்கள், இந்த அம்மா! அப்படிப் பாசம் இருக்கிறவள் என்றால், தன் பிரிவால் ஒரு முதியவளும் குழந்தையும் பாதிக்கப் படுவார்களே என்று, வீட்டை விட்டு வெளியேறு முன் யோசித்திருக்க மாட்டாளா என்ன?
என்னதான் முயன்றும், வீடு களையிழந்து தெரிந்தது!
மித்ரா, தன் பழைய வழக்கப்படி, பொம்மையை அணைத்துப் பிடித்தபடி, ஒரு சோபா மூலையில் முடங்கி விட்டாள்.
மீனாட்சி அம்மாள், மருத்துவமனைக் கணக்குகளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தவள், கண்ணாடி கூடப் போடாமல், விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்!
ஹால் டீவி ஓடிக் கொண்டிருந்தபோதும், அதைப் பார்ப்பார் இல்லாமல், சமையல்காரம்மா கூடத் தலையைப் பிடித்துக் கொண்டு கண் மூடிக் கால் நீட்டி அமர்ந்திருந்தாள்!
தன் எழுத்து வேலையைத் தொடங்கிய தீபன், அதில் மனம் ஒன்றாமல் எழுந்து வெளியே வந்தபோது, கண்ட காட்சி இதுதான்!
என்ன இது?
எவளோ ஒருத்தி, ரத்த சம்பந்தமே இல்லாதவள், சில மாதங்கள் இருந்துவிட்டு, அவளுடைய அண்ணன் வந்ததும் அவனோடு இந்த வீட்டை விட்டுப் போய்விடப் போகிறவள்! அவள் இல்லை என்பதற்காக, எல்லோரும் ஏதோ வீடு மாதிரித் துக்கம் காக்கிறார்கள்!
இத்தனைக்கும், சந்தனா நல்லவளா, கெட்டவளா என்பது கூட, இன்னமும் நிச்சயமில்லை!
எரிச்சலோடு நடந்து போய், டீவியை ஆஃப் செய்தான் தீபன்!
என்ன என்பது போல, வெறுமனே அவனைப் பார்த்தாள் அவளுடைய அன்னை!
தூக்கம் கலைந்த மாதிரி, வாரிச் சுருட்டி எழுந்து, "நேரமாகிவிட்டதா, தம்பி? டிபன் எடுத்து வைக்கட்டுமா?" என்று வினவிய சமையல்காரம்மா, ஹாலின் பழைய காலத்துக் கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.
"இன்னும் நேரமாகவில்லையே! தம்பிக்குப் பசித்து விட்டதா? பலகாரமே வைத்து விடட்டுமா, அல்லது, கொறிக்கிற மாதிரி ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று மீண்டும் கேட்டாள்.
"ஒன்றும் வேண்டாம்! ஆனால், நீங்கள் எல்லோரும், ஏன் இப்படி ஒரேயடியாக டல்லடிக்கிறீர்கள்? அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, சாதாரணமாக இருங்களேன்!" என்றான் அவன் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்!
'உச்சு'க் கொட்டினாள் மீனாட்சி அம்மாள்.
"என்னவோ, சந்தனா இங்கே இருந்தால், பள்ளியில் நடந்தது, பேப்பரில் வந்தது என்று ஏதாவது சொல்லுவாள்! நாம் சொல்லுவதையும் கேட்பாளா, அவள் இல்லாதது, கையொடிந்த மாதிரி, வேலையே ஓட மாட்டேன் என்கிறது! நாலைந்து நாட்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! போகட்டும் போ! நாங்கள் எப்படியோ சமாளிக்கிறோம்! நீ போய், உன் வேலையைக் கவனி!" என்று தாயார் சொல்லவும் தான், தீபனுக்குச் சுரீலென உறைத்தது!
அவனும் வேலை ஓடாமல் தான் எழுந்து வந்தான்!
அப்படியானால், அவனும், சந்தனா வீட்டில் இல்லாததை உணர்கிறானா?
எப்படி?
நம்ப முடியவில்லை அவனால்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சந்தனா வீட்டை விட்டுப் போனதற்கும், அவனுக்கு வேலையில் மனம் ஈடுபடாததற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்கக் கூடும் என்று, தீபனால் மெய்யாகவே நம்ப முடியவில்லை!
அவனுடைய மனைவி, அவனுடைய குழந்தையைப் பெற்றவள் பிரிந்து போன போது கூட, அவனது வேலைக்கு எந்த விதமான தடையும் நேரவே இல்லை!
அவளுக்கு விமான நிலையத்துக்குப் போவதற்குக் கார் அனுப்பும்படி எலிசாவிடம் சொல்லிவிட்டு, எழுதிக் கொண்டிருந்த காட்சியை முழுதாக முடித்து விட்டுத்தானே, அறைக்குள் இருந்து அவன் வெளியே வந்ததே!
வந்து, பத்திரிகைகளுக்குப் பேட்டி, போஸ் எல்லாம் கொடுத்து, "ஓர் அத்தியாயம் முடிந்தது" என்று சொன்னது எல்லாமே, அவனுக்கு நன்றாகவே நினைவிருக்கிறதே!
இரவில் 'காஸ்டிங்' டைரக்டரோடு டின்னர் பேச்சு கூட!
எதிலுமே, அவனுக்கு எந்தத் தடையும் நேரவே இல்லை!
மனைவியே அப்படி என்றால், யாரோ ஒருத்தியான சந்தனா இல்லாதது அவனைப் பாதித்திருக்க வாய்ப்பில்லை!
ஆனால், தன்னால் தான், அந்த முட்டாள் பெண் வீட்டை விட்டுப் போனாளோ என்ற குற்ற உணர்ச்சி... ஒரு வேளை, அது காரணமாக இருந்திருக்கலாம்!
சொல்லப் போனால், சந்தனா வீட்டை விட்டு வெளியேறியதால், ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகி விட்டதில், அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்.
சந்தனா பத்திரிகைக்காரி அல்ல என்ற முக்கியமான விஷயம்!
அவனைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக வந்தவள் அவள் என்றால், இப்படி இடையில் வீட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டாள்.
செய்தி கிடைக்கும் வரை, உடும்பாய் ஒட்டிக் கொண்டு, அங்கேயே இருந்திருப்பாள்.
அந்த வகையில், அவனது சந்தேகம் நிவர்த்தியாகி, அங்கங்கே வீட்டில் அவளைப் பார்க்கும் போது, என்ன குறிப்பு எடுக்கிறாளோ என்ற எரிச்சல் இல்லாமல் இருக்க முடிவது, அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்!
மாரீட்டா பிரிந்து போனதும் நிம்மதியாக இருந்த மாதிரி!
ஆனால், அப்போது போல, இப்போது ஏன் எழுத முடியவில்லை?
ஒரு வேளை, தாய், மகள் இருவரின் வாடிய முகங்களும் அவனது எழுத்தைக் கெடுத்தனவோ என்று எண்ணி முடிக்கப் பார்த்தால், அந்த எண்ணத்திலும் ஒரு பெரிய பிழை இருந்தது!
வேலை ஓடாமல் அறையை விட்டு வெளியே வந்த பிறகுதான், வீட்டினரின் வாடிய முகங்களை அவன் பார்த்ததே! எனவே, அவனது வேலை கெட்டுப் போனதற்கு, அதைக் காரணம் காட்ட, அடியோடு முடியாது!
பின்னே?
காரணம் கண்டுபிடிக்க முடியாததால், எரிச்சல் இன்னமும் அதிகமாக, அதை யாருக்கும் காட்ட மனமற்று, தீபன் மீண்டும் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.
குறைந்த பட்சமாய் வெளியே இருந்தவர்களாவது, அவன் மும்முரமாய் வேலை செய்வதாக நினைக்கட்டுமே!
சந்தனா சென்றது, அவனைப் பாதிக்கவில்லை என்றும்!
இரவு உணவும் ஏனோ தானோ என்று, எப்படியோ முடிந்தது!
"எந்த விடுதி? அது எங்கே இருக்கிறது என்று, சந்தனா ஒன்றுமே குறிப்பிடவில்லையே! என்ன, இப்படி செய்து விட்டாள்! எதற்காக என்று, உனக்கு ஏதாவது புரிகிறதா, தீபு?" என்று வருத்தத்துடன் மீனாட்சி அம்மாள் முனகவும், தீபன் பொறுமை இழந்தான்.
"என்னைக் கேட்கிறீர்கள்! இத்தனை நாளும், அவளைக் கொஞ்சிக் குலவிக் கொண்டு இருந்தது நீங்கள் தான்! உங்களையே மதிக்காமல் கிளம்பிவிட்டாள்! போகிறாள் என்று அவளை மறக்க முயற்சிப்பீர்களா, அதை விட்டு... விடுங்கள், அம்மா!" என்றான் அவன்.
"அதில்லைப்பா! என்னவோ, இது அவள் குணத்தோடு ஒத்துப் போகவில்லை!... சரி சரி, விடு. உனக்குத்தான் அவளை எப்போதுமே பிடிக்காதே!"
"கிராண்ட்மா, எனக்கு சந்தனா ஆன்ட்டி பிடிக்கும்!" என்றாள் மித்ரா கண்ணீருடன். "இப்போது யார் எனக்கு கதை சொல்வது?" என்று அழுதபடியே பாட்டியிடம் சென்று, அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள் சிறுமி!
பாட்டியும் பேத்தியும் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து, செய்கையற்று நின்றான் தீபன்.
அந்த வேளையில், பக்கக் கதவைக் கைவிட்டு திறந்து கொண்டு வந்த ராசையா, பின்புறமாய்ச் சாப்பிட போகாமல், வீட்டினுள் குடும்பத்தார் அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்தான்.
அவனைப் பார்த்ததும், "என்ன ராசையா, உன் தங்கை குடும்பத்தை வழியனுப்பி விட்டாய் அல்லவா? ரயில் சரியான நேரத்துக்குக் கிளம்பியதா?" என்று, அவனிடம் பொதுவாக விசாரித்தாள் மீனாட்சி.
கிராமத்துப் பக்கம் போக முடிவு செய்து கிளம்பிய தங்கை குடும்பத்தை ரயிலேற்றி விடுவதற்காக, ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தான் அவன்.
திரும்பி வந்துவிட்டதைத் தன்னிடம் சொல்லவே, அவன் அங்கே வந்திருப்பதாக எண்ணிய மீனாட்சி, அதற்குத்தக பணியாளரிடம் விசாரித்தாள்.
"ஆமாம்மா, பிள்ளை குட்டியோட, மூட்டை முடிச்சு எல்லாம் ஏற்றி அனுப்பி விட்டேம்மா! ஆனா... நான் சொல்ல வந்தது, வேறேம்மா! அங்கே..." என்று குழப்பத்துடன் இழுத்தான் அவன்.
"அங்கே என்ன?"
"அங்கே... நம்ப சந்தனாம்மா வீட்டிலே இல்... வந்து, சந்தனாம்மா, எங்கயாச்சும் வெளியூரு போறாங்களாம்மா?" என்று அவன் கேட்கவும், எல்லோருமே ஷாக் அடித்தது போலத் திகைப்புடன் அவனைப் பார்த்தனர்!
இரண்டெட்டில் அவன் அருகே வந்து, "சந்தனாவை அங்கே பார்த்தாயா?" என்று ராசையாவின் தோளைப் பற்றிக் கேட்டான் தீபன்!
"விடுதிக்குப் போனவள், ரயில் நிலையத்திலா? அதுவும் இந்த நேரத்தில் எப்படி? நீ சரியாகத்தான் பார்த்தாயா, ராசையா?" என்று கேட்டாள் வீட்டுத் தலைவி.
"சொல்லு! நீ, சந்தனாவைத்தான் பார்த்தாயா?" என்று மறுபடியும் கேட்டான் தீபன்.
"ஆமாங்கய்யா! அவங்க மாதிரியேதான் இருந்தது! ஆனா, ரயிலுக்கு வெளியிலே நிக்கலை! ராவு ரயிலுக்குக் காத்திருப்பாங்களே, அந்த ரூம்புக்குள்ளார ஒரு மாதிரித் தலையைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க! நம்ப அம்மா, எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்களே, அப்படி இல்லையேன்னு, எனக்கு சந்தேகமாப் போயிட்டுதும்மா. முக்காடும் போட்டிருக்க மாட்டாங்களே! சரி பொம்பளைங்க உட்கார்ந்திருக்கிற ரூம்பு! ஆள் அம்பு சரியாத் தெரியாம, உள்ளே போனா வம்பாப் போகுமோன்னு பயந்து விட்டேன்! அம்மா, வீட்டிலே இருக்கிறாங்களா இல்லியா?" என்று கவலையுடன் விசாரித்தான் வேலையாள்.
"என்னவோ நடந்திருக்கின்றது..." என்று மீனாட்சி சந்தேகமாகக் குழம்புகையில், தீபனுக்கு விஷயம் புரிந்து போயிற்று!
ஏனெனில் தொடங்கி வைத்தவன் அவன் அல்லவா?
இப்போது, அவனுக்கு இரண்டு பொறுப்புகள்!
சந்தனாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வருவதோடு, நடந்தது எதுவும் அன்னையின் காதுக்குப் போய் விடாமல் சமாளிப்பதும்!
"ஏன் தீபு, நீ சந்தனாவை ஏதேனும் சொன்னாயா?" என்று பெற்றவள் திடுமென, அவனை நேரடியாகக் கேட்கவும், ஒரு கணம் தீபன் தடுமாறிப் போனான்.
"என்னம்மா நீங்கள்? இப்படி கேட்கிறீர்கள்!" என்று சும்மா சமாளிக்க முயன்றான்.
"பின்னே? இங்கே அவளிடம் ஏதாவது தகராறு பண்ணுகிற ஒரே ஆள் நீதானே?"
அவனுடைய மனைவி, அவனுடைய குழந்தையைப் பெற்றவள் பிரிந்து போன போது கூட, அவனது வேலைக்கு எந்த விதமான தடையும் நேரவே இல்லை!
அவளுக்கு விமான நிலையத்துக்குப் போவதற்குக் கார் அனுப்பும்படி எலிசாவிடம் சொல்லிவிட்டு, எழுதிக் கொண்டிருந்த காட்சியை முழுதாக முடித்து விட்டுத்தானே, அறைக்குள் இருந்து அவன் வெளியே வந்ததே!
வந்து, பத்திரிகைகளுக்குப் பேட்டி, போஸ் எல்லாம் கொடுத்து, "ஓர் அத்தியாயம் முடிந்தது" என்று சொன்னது எல்லாமே, அவனுக்கு நன்றாகவே நினைவிருக்கிறதே!
இரவில் 'காஸ்டிங்' டைரக்டரோடு டின்னர் பேச்சு கூட!
எதிலுமே, அவனுக்கு எந்தத் தடையும் நேரவே இல்லை!
மனைவியே அப்படி என்றால், யாரோ ஒருத்தியான சந்தனா இல்லாதது அவனைப் பாதித்திருக்க வாய்ப்பில்லை!
ஆனால், தன்னால் தான், அந்த முட்டாள் பெண் வீட்டை விட்டுப் போனாளோ என்ற குற்ற உணர்ச்சி... ஒரு வேளை, அது காரணமாக இருந்திருக்கலாம்!
சொல்லப் போனால், சந்தனா வீட்டை விட்டு வெளியேறியதால், ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகி விட்டதில், அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்.
சந்தனா பத்திரிகைக்காரி அல்ல என்ற முக்கியமான விஷயம்!
அவனைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக வந்தவள் அவள் என்றால், இப்படி இடையில் வீட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டாள்.
செய்தி கிடைக்கும் வரை, உடும்பாய் ஒட்டிக் கொண்டு, அங்கேயே இருந்திருப்பாள்.
அந்த வகையில், அவனது சந்தேகம் நிவர்த்தியாகி, அங்கங்கே வீட்டில் அவளைப் பார்க்கும் போது, என்ன குறிப்பு எடுக்கிறாளோ என்ற எரிச்சல் இல்லாமல் இருக்க முடிவது, அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்!
மாரீட்டா பிரிந்து போனதும் நிம்மதியாக இருந்த மாதிரி!
ஆனால், அப்போது போல, இப்போது ஏன் எழுத முடியவில்லை?
ஒரு வேளை, தாய், மகள் இருவரின் வாடிய முகங்களும் அவனது எழுத்தைக் கெடுத்தனவோ என்று எண்ணி முடிக்கப் பார்த்தால், அந்த எண்ணத்திலும் ஒரு பெரிய பிழை இருந்தது!
வேலை ஓடாமல் அறையை விட்டு வெளியே வந்த பிறகுதான், வீட்டினரின் வாடிய முகங்களை அவன் பார்த்ததே! எனவே, அவனது வேலை கெட்டுப் போனதற்கு, அதைக் காரணம் காட்ட, அடியோடு முடியாது!
பின்னே?
காரணம் கண்டுபிடிக்க முடியாததால், எரிச்சல் இன்னமும் அதிகமாக, அதை யாருக்கும் காட்ட மனமற்று, தீபன் மீண்டும் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.
குறைந்த பட்சமாய் வெளியே இருந்தவர்களாவது, அவன் மும்முரமாய் வேலை செய்வதாக நினைக்கட்டுமே!
சந்தனா சென்றது, அவனைப் பாதிக்கவில்லை என்றும்!
இரவு உணவும் ஏனோ தானோ என்று, எப்படியோ முடிந்தது!
"எந்த விடுதி? அது எங்கே இருக்கிறது என்று, சந்தனா ஒன்றுமே குறிப்பிடவில்லையே! என்ன, இப்படி செய்து விட்டாள்! எதற்காக என்று, உனக்கு ஏதாவது புரிகிறதா, தீபு?" என்று வருத்தத்துடன் மீனாட்சி அம்மாள் முனகவும், தீபன் பொறுமை இழந்தான்.
"என்னைக் கேட்கிறீர்கள்! இத்தனை நாளும், அவளைக் கொஞ்சிக் குலவிக் கொண்டு இருந்தது நீங்கள் தான்! உங்களையே மதிக்காமல் கிளம்பிவிட்டாள்! போகிறாள் என்று அவளை மறக்க முயற்சிப்பீர்களா, அதை விட்டு... விடுங்கள், அம்மா!" என்றான் அவன்.
"அதில்லைப்பா! என்னவோ, இது அவள் குணத்தோடு ஒத்துப் போகவில்லை!... சரி சரி, விடு. உனக்குத்தான் அவளை எப்போதுமே பிடிக்காதே!"
"கிராண்ட்மா, எனக்கு சந்தனா ஆன்ட்டி பிடிக்கும்!" என்றாள் மித்ரா கண்ணீருடன். "இப்போது யார் எனக்கு கதை சொல்வது?" என்று அழுதபடியே பாட்டியிடம் சென்று, அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள் சிறுமி!
பாட்டியும் பேத்தியும் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து, செய்கையற்று நின்றான் தீபன்.
அந்த வேளையில், பக்கக் கதவைக் கைவிட்டு திறந்து கொண்டு வந்த ராசையா, பின்புறமாய்ச் சாப்பிட போகாமல், வீட்டினுள் குடும்பத்தார் அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்தான்.
அவனைப் பார்த்ததும், "என்ன ராசையா, உன் தங்கை குடும்பத்தை வழியனுப்பி விட்டாய் அல்லவா? ரயில் சரியான நேரத்துக்குக் கிளம்பியதா?" என்று, அவனிடம் பொதுவாக விசாரித்தாள் மீனாட்சி.
கிராமத்துப் பக்கம் போக முடிவு செய்து கிளம்பிய தங்கை குடும்பத்தை ரயிலேற்றி விடுவதற்காக, ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தான் அவன்.
திரும்பி வந்துவிட்டதைத் தன்னிடம் சொல்லவே, அவன் அங்கே வந்திருப்பதாக எண்ணிய மீனாட்சி, அதற்குத்தக பணியாளரிடம் விசாரித்தாள்.
"ஆமாம்மா, பிள்ளை குட்டியோட, மூட்டை முடிச்சு எல்லாம் ஏற்றி அனுப்பி விட்டேம்மா! ஆனா... நான் சொல்ல வந்தது, வேறேம்மா! அங்கே..." என்று குழப்பத்துடன் இழுத்தான் அவன்.
"அங்கே என்ன?"
"அங்கே... நம்ப சந்தனாம்மா வீட்டிலே இல்... வந்து, சந்தனாம்மா, எங்கயாச்சும் வெளியூரு போறாங்களாம்மா?" என்று அவன் கேட்கவும், எல்லோருமே ஷாக் அடித்தது போலத் திகைப்புடன் அவனைப் பார்த்தனர்!
இரண்டெட்டில் அவன் அருகே வந்து, "சந்தனாவை அங்கே பார்த்தாயா?" என்று ராசையாவின் தோளைப் பற்றிக் கேட்டான் தீபன்!
"விடுதிக்குப் போனவள், ரயில் நிலையத்திலா? அதுவும் இந்த நேரத்தில் எப்படி? நீ சரியாகத்தான் பார்த்தாயா, ராசையா?" என்று கேட்டாள் வீட்டுத் தலைவி.
"சொல்லு! நீ, சந்தனாவைத்தான் பார்த்தாயா?" என்று மறுபடியும் கேட்டான் தீபன்.
"ஆமாங்கய்யா! அவங்க மாதிரியேதான் இருந்தது! ஆனா, ரயிலுக்கு வெளியிலே நிக்கலை! ராவு ரயிலுக்குக் காத்திருப்பாங்களே, அந்த ரூம்புக்குள்ளார ஒரு மாதிரித் தலையைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க! நம்ப அம்மா, எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்களே, அப்படி இல்லையேன்னு, எனக்கு சந்தேகமாப் போயிட்டுதும்மா. முக்காடும் போட்டிருக்க மாட்டாங்களே! சரி பொம்பளைங்க உட்கார்ந்திருக்கிற ரூம்பு! ஆள் அம்பு சரியாத் தெரியாம, உள்ளே போனா வம்பாப் போகுமோன்னு பயந்து விட்டேன்! அம்மா, வீட்டிலே இருக்கிறாங்களா இல்லியா?" என்று கவலையுடன் விசாரித்தான் வேலையாள்.
"என்னவோ நடந்திருக்கின்றது..." என்று மீனாட்சி சந்தேகமாகக் குழம்புகையில், தீபனுக்கு விஷயம் புரிந்து போயிற்று!
ஏனெனில் தொடங்கி வைத்தவன் அவன் அல்லவா?
இப்போது, அவனுக்கு இரண்டு பொறுப்புகள்!
சந்தனாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வருவதோடு, நடந்தது எதுவும் அன்னையின் காதுக்குப் போய் விடாமல் சமாளிப்பதும்!
"ஏன் தீபு, நீ சந்தனாவை ஏதேனும் சொன்னாயா?" என்று பெற்றவள் திடுமென, அவனை நேரடியாகக் கேட்கவும், ஒரு கணம் தீபன் தடுமாறிப் போனான்.
"என்னம்மா நீங்கள்? இப்படி கேட்கிறீர்கள்!" என்று சும்மா சமாளிக்க முயன்றான்.
"பின்னே? இங்கே அவளிடம் ஏதாவது தகராறு பண்ணுகிற ஒரே ஆள் நீதானே?"
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|