Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கும் இமை நானுனக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
காக்கும் இமை நானுனக்கு
First topic message reminder :
எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.
'உன்னதம்.'
இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.
அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?
படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.
எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.
தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.
தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.
துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.
அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.
அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.
அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?
யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!
அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.
இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.
எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.
குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.
தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.
விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.
அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.
புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.
"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.
"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.
இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.
வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.
தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.
ஆனால், யாரிடம் முறையிடுவது?
அவளுக்கும் அலுத்து விட்டது.
எப்படியோ போகிறார்கள்.
இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.
இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.
அப்புறமென்ன?
விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.
"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.
ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.
ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!
கொஞ்சமென்ன? ரொம்பவே.
எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?
விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!
அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...
ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?
எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!
நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.
அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.
அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.
அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.
பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?
இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?
ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!
நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.
தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.
அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!
ஆனால் அதற்காகத் திருடலாமா?
அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!
இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.
நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.
இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.
அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.
ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.
ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?
எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.
"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.
இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.
இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.
அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.
உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.
"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.
மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.
"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.
பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.
அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.
இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?
மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?
அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.
ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?
ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?
கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?
அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!
மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.
"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.
"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."
மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.
அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.
வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.
"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.
சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.
மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.
திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.
எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.
'உன்னதம்.'
இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.
அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?
படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.
எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.
தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.
தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.
துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.
அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.
அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.
அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?
யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!
அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.
இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.
எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.
குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.
தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.
விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.
அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.
புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.
"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.
"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.
இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.
வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.
தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.
ஆனால், யாரிடம் முறையிடுவது?
அவளுக்கும் அலுத்து விட்டது.
எப்படியோ போகிறார்கள்.
இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.
இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.
அப்புறமென்ன?
விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.
"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.
ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.
ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!
கொஞ்சமென்ன? ரொம்பவே.
எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?
விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!
அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...
ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?
எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!
நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.
அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.
அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.
அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.
பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?
இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?
ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!
நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.
தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.
அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!
ஆனால் அதற்காகத் திருடலாமா?
அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!
இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.
நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.
இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.
அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.
ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.
ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?
எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.
"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.
இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.
இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.
அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.
உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.
"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.
மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.
"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.
பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.
அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.
இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?
மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?
அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.
ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?
ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?
கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?
அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!
மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.
"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.
"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."
மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.
அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.
வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.
"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.
சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.
மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.
திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
தனியே கடைக்குச் செல்ல, நளினி பிடிவாதமாக முடிவெடுத்ததின் இன்னொரு காரணம், புவனேந்திரன் ஊரில் இல்லாதது.
இருவருக்கும் அறிமுகமாகி இந்தச் சில மாதங்களில், அவன் சொல்லாமலும், எங்கே என்ன காரியம் என்று விவரம் சொல்லாமலும், குறைந்தது ஐந்து முறையேனும் புவனேந்திரன் வெளியூர் சென்றிருப்பான். திரும்பி வந்த பிறகும், அது பற்றி அவன் பேசுவதில்லை.
திருமணம் நிச்சயம் ஆன பிறகும், அவன் அப்படிச் சென்றது, அவளுக்கு வருத்தத்தோடு சற்றுக் கோபமாகவும் இருந்தது.
புவனேந்திரனின் கடந்த காலம் அவளுக்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலம்? அதிலிருந்து அவன் அவளை எப்படி ஒதுக்கலாம்?
அவளுக்கு மட்டும் அத்தனை கட்டுப்பாடுகள், காவலர்களின் கண்காணிப்பா?
எவ்வளவோ ஆத்திரம் வந்த போதும், அவன் சிரிப்பும் விளையாட்டுமாகப் பேசத் தொடங்கியதும், பதிலுக்கு, அவனைப் போலவே பேசத் தோன்றியதே தவிர, கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள அவளுக்கு வரவே இல்லை.
அன்று அவனிடம் பேச வேண்டும் போல, நளினிக்கு ரொம்பவும் ஆவலாக இருந்தது.
ஒரு கருநீல வண்ணச் சுரிதார் செட்டுக்கு, வண்ணக் கல்லாலேயே வட்ட வட்டமாய் அங்கங்கே பூவேலை செய்து முடித்திருந்தாள். அணிந்து பார்க்கும் போது மிக அழகாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை புவனனோடு கலந்து கொள்ள, அவள் மிகவும் விரும்பினாள்.
அதற்காக, அவனை செல்லில் பிடிக்கலாம் என்று பார்த்தால், செல்லை அணைத்து வைத்திருந்தான். ஃபோன் செய்து பார்த்தபோதுதான், அவளிடம் சொல்லாமலே, புவனேந்திரன் வெளியூர் சென்றிருந்தது, அவளுக்குத் தெரிய வந்தது.
மீண்டுமா என்று எண்ணியவளுக்கு, முகம் கறுத்துச் சிறுத்துப் போயிற்று.
அவள் மட்டும், அவளது ஒவ்வொரு கணத்துக்கும், பாதுகாவல் என்ற பெயரில், அவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அவன் விருப்பம் போலச் சுற்றுவானா?
குறைந்த பட்சமாய், வெளியூர் போகிறேன் என்று கூடவா சொல்லக் கூடாது?
அதையெல்லாம் அறியும் உரிமை உனக்குக் கிடையாது என்று வாய் வார்த்தையாகச் சொல்லாமல், செயலில் செய்து காட்டி, அதற்கு அவளைப் பழக்குகிறானா? இன்னொருவர் மூலம் அறிய நேரும் போது, இன்றைய நிலையில், அவளுக்கு அது எவ்வளவு பெரிய அவமானம் என்று கூடவா யோசிக்கக் கூடாது?
இதையெல்லாம் ஏற்று வாழ்வதற்கு அவள் ஒன்றும் முதுகெலும்பே இல்லாத புழு அல்லவே!
அல்லது, அவனது பணத்துக்காக அவள் எதையும் பொறுத்துப் போவாள் என்று எண்ணினானா?
அப்படி மட்டும் எண்ணியிருந்தான் என்றால், அவனுக்கு விரைவிலேயே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது நிச்சயம்.
இது பற்றிக் கட்டாயமாகப் புவனனிடம் பேசியாக வேண்டும் என்று எண்ணியவளுக்குத் தனக்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களை உதறி விட்டுத் தனியே கடைக்குச் சென்றாக வேண்டும் என்பதும் உள்ளூர உறுதியாயிற்று.
புவனனிடம் ஊதியம் பெறுகிறவர்களிடம் தன் அதிகாரம் செல்லாது என்பதால், அவர்களை ஏமாற்றிச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாள். தவிர, மற்ற யாரிடமும், புவனனிடம் கூடத் தான் தனியே செல்வதை மறைக்க அவள் எண்ணவில்லை.
அவளிடம் தெரிவியாமல் அவன் வெளியூருக்கே சென்று வரும் போது, அவள் உள்ளூரில் ஒரு கடைக்குச் செல்வதில் என்னவென்று தப்புக் காண முடியும்?
இப்படித்தான் நளினி நினைத்தாள்.
ஆனால்...
சக்திவேலுக்கும், அவனுடைய கூட்டாளிக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது, நளினிக்கு அப்படி ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.
காவலர்கள் இருவரும் இருப்பது, பெரும்பாலும் முன் வராண்டாவில் தான். நளினியும், புவனேந்திரனும் உட்கார்ந்து வேலை செய்த இடம்.
வாயில் வழியே, உள்ளே, வெளியே யார் சென்றாலும், இவர்களது பார்வைக்குத் தப்ப முடியாது.
ஆனால், 'லிஃப்ட்' வேலை செய்யாத போது செல்வதற்காக, வீட்டின் பின்புறமாக ஒரு படிக்கட்டி இருந்தது. அதற்குச் செல்ல ஒரு கதவும் எல்லா வீடுகளுக்கும் உண்டு.
பாதுகாப்புக் கருதி, அந்தப் பின்புறக் கதவைப் பூட்டி விடும்படி பாதுகாப்பு நிறுவனத்தால் ஆலோசனை கூறப்பட்டு, அப்படி அந்தக் கதவு பூட்டப்பட்டும் இருந்தது.
எப்போதாவது மின்சாரம் தடைப்பட்டு, லிஃப்டைப் பயன்படுத்த முடியாத போதும் கூட, சக்திவேலிடம் தெரிவித்து விட்டே அந்தக் கதவைப் பயன்படுத்தும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தச் சமயங்களில் இருவரில் ஒருவர் அந்தப் பக்கம் காவலிருப்பார்கள்.
பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளைப் புவனேந்திரன் அப்படியே கடைப்பிடிப்பான். அதில் அரை குறைத்தனமே கிடையாது. அவன் ஏற்பாட்டில் ஏற்ற பணி என்பதால், அவனுடைய வருங்கால மனைவியின் வீட்டிலும் அதே நிலைமையைப் பாதுகாப்பு நிறுவனமும், அதனுடைய பணியாளர்களும் எதிர்பார்த்தனர்.
அன்றுவரை, அவர்கள் குறைப் படும்படியாக எதுவும் நடக்கவும் இல்லை. அதனால், அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவும் இல்லை.
எனவே, அந்தக் கதவின் வழியே, வீட்டை விட்டு வெளியேறி, நளினி கடைக்குச் செல்வது இலகுவாகவே முடிந்து விட்டது.
என்ன வாங்க வேண்டியிருந்தது என்பதைச் சொல்லியதால், மகளை அறிந்த தாயும் அவளைத் தடுக்கவில்லை. பிளஸ் டூ தங்கைக்கும் அதுவே சரியாகப் பட்டது.
பல நாட்களுக்குப் பிறகு, காவலர் புடைசூழச் செல்வது, அதை யார் யார் பார்த்து என்னென்ன கிண்டலடிக்கிறார்களோ என்பன போன்ற எந்த விதக் கட்டுப்பாடோ, குன்றலோ இல்லாமல் வெளியே செல்கையில், வெகு சுதந்திரமாக, மிகச் சுதந்திரமாக நளினி உணர்ந்தாள்.
அந்தச் சுகத்தில், திட்டமிட்டதை விடவும் அதிக நேரம் வெளியே சுற்றியலைந்து, இன்னும் பல பொருட்களையும் வாங்கிக் கொண்டு, அவள் வீடு திரும்பினால், சிவந்த கண்களுடன், இறுகிய முகத்துடன் புவனேந்திரன் அவள் வீட்டில் உட்கார்ந்திருந்தான். உண்ணவும், அருந்தவுமாக, அவன் முன்னே வைக்கப்பட்டிருந்தவை தொடக்கூடப் படாமல், அப்படியே இருந்தன.
ஒரு கணம், நளினிக்குத் திக்கென்றுதான் இருந்தது.
ஆனாலும், அவள் அப்படியென்ன தப்பு செய்து விட்டாள்? அவனது அசட்டுப் பாதுகாவலை ஒரு தரம் மீறியிருக்கிறாள். மற்றபடி ஒன்றுமில்லையே என்று தோன்றிவிடவும், தானாக அவளது தலை நிமிர்ந்து விட்டது.
வீட்டில் அவளுடைய தந்தை, தாய் இருவருமே பெரும் சிக்கல் தீர்ந்த பெருமூச்சுடன், "வாம்மா!" என்று அவசரமாக அவளை எதிர் கொண்டனர்.
"இதோ வந்து விடுவாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம்! அதே போல, வந்து விட்டாய். எல்லாம் கிடைத்ததாடா?" என்றாள் சகுந்தலா. "போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. புவனேந்திரன் அப்போது பிடித்துக் காத்திருக்கிறார்!" என்றாள் குறிப்பாக.
புவனேந்திரன் வெறுமனே காத்திருக்கவில்லை, பார்த்து நடந்து கொள் என்று தாயார் சொல்வது நளினிக்குப் புரிந்தது.
ஆனால், இந்த மூன்று மணி நேரம் சுதந்திரமாகச் சுற்றியலைந்தது, நளினியை வேறு விதமாக எண்ண வைத்தது.
பாதுகாப்பு, பாதுகாப்பு என்று புவனேந்திரன் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. பொன் வண்ணம் பூசியதாலேயே, சிறைக் கம்பிகள் வேறாகி விடுமா? சொந்த வீட்டிலேயே, காசு கொடுத்துக் கைதிகளாக வாழ்வதா?
அவசியமற்றுத் தன்னைத்தானே கைதியாக்கிக் கொண்டதோடு, அவளையும் அந்த நிலைக்கு அவன் தள்ள முயற்சிக்கிறான்.
அந்த நிலையிலிருந்து, தன்னோடு, பாவம்! அவனையும் காப்பாற்ற வேண்டும்.
ஒரு ரதி கடத்தப்பட்டதாலேயே, எல்லாப் பணக்காரர்களுடைய மனைவிமாரும் கடத்தப்பட்டு விடுவார்களா, என்ன? மாட்டார்கள் என்று, அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.
அவனிடம் என்ன மாதிரிப் பேசிப் புரிய வைப்பது என்று, அவள் அவசரமாக மனதுள் ஒத்திகை பார்க்கையில், "உன்னிடம் தனியாகப் பேச வேண்டும். சற்று வெளியே போய் வரலாமா?" என்று உணர்ச்சி அடைத்த குரலில் கேட்டான் அவன்.
ஒரு கணம் நளினி யோசித்தாள்.
இருவருக்கும் அறிமுகமாகி இந்தச் சில மாதங்களில், அவன் சொல்லாமலும், எங்கே என்ன காரியம் என்று விவரம் சொல்லாமலும், குறைந்தது ஐந்து முறையேனும் புவனேந்திரன் வெளியூர் சென்றிருப்பான். திரும்பி வந்த பிறகும், அது பற்றி அவன் பேசுவதில்லை.
திருமணம் நிச்சயம் ஆன பிறகும், அவன் அப்படிச் சென்றது, அவளுக்கு வருத்தத்தோடு சற்றுக் கோபமாகவும் இருந்தது.
புவனேந்திரனின் கடந்த காலம் அவளுக்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலம்? அதிலிருந்து அவன் அவளை எப்படி ஒதுக்கலாம்?
அவளுக்கு மட்டும் அத்தனை கட்டுப்பாடுகள், காவலர்களின் கண்காணிப்பா?
எவ்வளவோ ஆத்திரம் வந்த போதும், அவன் சிரிப்பும் விளையாட்டுமாகப் பேசத் தொடங்கியதும், பதிலுக்கு, அவனைப் போலவே பேசத் தோன்றியதே தவிர, கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள அவளுக்கு வரவே இல்லை.
அன்று அவனிடம் பேச வேண்டும் போல, நளினிக்கு ரொம்பவும் ஆவலாக இருந்தது.
ஒரு கருநீல வண்ணச் சுரிதார் செட்டுக்கு, வண்ணக் கல்லாலேயே வட்ட வட்டமாய் அங்கங்கே பூவேலை செய்து முடித்திருந்தாள். அணிந்து பார்க்கும் போது மிக அழகாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை புவனனோடு கலந்து கொள்ள, அவள் மிகவும் விரும்பினாள்.
அதற்காக, அவனை செல்லில் பிடிக்கலாம் என்று பார்த்தால், செல்லை அணைத்து வைத்திருந்தான். ஃபோன் செய்து பார்த்தபோதுதான், அவளிடம் சொல்லாமலே, புவனேந்திரன் வெளியூர் சென்றிருந்தது, அவளுக்குத் தெரிய வந்தது.
மீண்டுமா என்று எண்ணியவளுக்கு, முகம் கறுத்துச் சிறுத்துப் போயிற்று.
அவள் மட்டும், அவளது ஒவ்வொரு கணத்துக்கும், பாதுகாவல் என்ற பெயரில், அவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அவன் விருப்பம் போலச் சுற்றுவானா?
குறைந்த பட்சமாய், வெளியூர் போகிறேன் என்று கூடவா சொல்லக் கூடாது?
அதையெல்லாம் அறியும் உரிமை உனக்குக் கிடையாது என்று வாய் வார்த்தையாகச் சொல்லாமல், செயலில் செய்து காட்டி, அதற்கு அவளைப் பழக்குகிறானா? இன்னொருவர் மூலம் அறிய நேரும் போது, இன்றைய நிலையில், அவளுக்கு அது எவ்வளவு பெரிய அவமானம் என்று கூடவா யோசிக்கக் கூடாது?
இதையெல்லாம் ஏற்று வாழ்வதற்கு அவள் ஒன்றும் முதுகெலும்பே இல்லாத புழு அல்லவே!
அல்லது, அவனது பணத்துக்காக அவள் எதையும் பொறுத்துப் போவாள் என்று எண்ணினானா?
அப்படி மட்டும் எண்ணியிருந்தான் என்றால், அவனுக்கு விரைவிலேயே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது நிச்சயம்.
இது பற்றிக் கட்டாயமாகப் புவனனிடம் பேசியாக வேண்டும் என்று எண்ணியவளுக்குத் தனக்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களை உதறி விட்டுத் தனியே கடைக்குச் சென்றாக வேண்டும் என்பதும் உள்ளூர உறுதியாயிற்று.
புவனனிடம் ஊதியம் பெறுகிறவர்களிடம் தன் அதிகாரம் செல்லாது என்பதால், அவர்களை ஏமாற்றிச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாள். தவிர, மற்ற யாரிடமும், புவனனிடம் கூடத் தான் தனியே செல்வதை மறைக்க அவள் எண்ணவில்லை.
அவளிடம் தெரிவியாமல் அவன் வெளியூருக்கே சென்று வரும் போது, அவள் உள்ளூரில் ஒரு கடைக்குச் செல்வதில் என்னவென்று தப்புக் காண முடியும்?
இப்படித்தான் நளினி நினைத்தாள்.
ஆனால்...
சக்திவேலுக்கும், அவனுடைய கூட்டாளிக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது, நளினிக்கு அப்படி ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.
காவலர்கள் இருவரும் இருப்பது, பெரும்பாலும் முன் வராண்டாவில் தான். நளினியும், புவனேந்திரனும் உட்கார்ந்து வேலை செய்த இடம்.
வாயில் வழியே, உள்ளே, வெளியே யார் சென்றாலும், இவர்களது பார்வைக்குத் தப்ப முடியாது.
ஆனால், 'லிஃப்ட்' வேலை செய்யாத போது செல்வதற்காக, வீட்டின் பின்புறமாக ஒரு படிக்கட்டி இருந்தது. அதற்குச் செல்ல ஒரு கதவும் எல்லா வீடுகளுக்கும் உண்டு.
பாதுகாப்புக் கருதி, அந்தப் பின்புறக் கதவைப் பூட்டி விடும்படி பாதுகாப்பு நிறுவனத்தால் ஆலோசனை கூறப்பட்டு, அப்படி அந்தக் கதவு பூட்டப்பட்டும் இருந்தது.
எப்போதாவது மின்சாரம் தடைப்பட்டு, லிஃப்டைப் பயன்படுத்த முடியாத போதும் கூட, சக்திவேலிடம் தெரிவித்து விட்டே அந்தக் கதவைப் பயன்படுத்தும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தச் சமயங்களில் இருவரில் ஒருவர் அந்தப் பக்கம் காவலிருப்பார்கள்.
பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளைப் புவனேந்திரன் அப்படியே கடைப்பிடிப்பான். அதில் அரை குறைத்தனமே கிடையாது. அவன் ஏற்பாட்டில் ஏற்ற பணி என்பதால், அவனுடைய வருங்கால மனைவியின் வீட்டிலும் அதே நிலைமையைப் பாதுகாப்பு நிறுவனமும், அதனுடைய பணியாளர்களும் எதிர்பார்த்தனர்.
அன்றுவரை, அவர்கள் குறைப் படும்படியாக எதுவும் நடக்கவும் இல்லை. அதனால், அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவும் இல்லை.
எனவே, அந்தக் கதவின் வழியே, வீட்டை விட்டு வெளியேறி, நளினி கடைக்குச் செல்வது இலகுவாகவே முடிந்து விட்டது.
என்ன வாங்க வேண்டியிருந்தது என்பதைச் சொல்லியதால், மகளை அறிந்த தாயும் அவளைத் தடுக்கவில்லை. பிளஸ் டூ தங்கைக்கும் அதுவே சரியாகப் பட்டது.
பல நாட்களுக்குப் பிறகு, காவலர் புடைசூழச் செல்வது, அதை யார் யார் பார்த்து என்னென்ன கிண்டலடிக்கிறார்களோ என்பன போன்ற எந்த விதக் கட்டுப்பாடோ, குன்றலோ இல்லாமல் வெளியே செல்கையில், வெகு சுதந்திரமாக, மிகச் சுதந்திரமாக நளினி உணர்ந்தாள்.
அந்தச் சுகத்தில், திட்டமிட்டதை விடவும் அதிக நேரம் வெளியே சுற்றியலைந்து, இன்னும் பல பொருட்களையும் வாங்கிக் கொண்டு, அவள் வீடு திரும்பினால், சிவந்த கண்களுடன், இறுகிய முகத்துடன் புவனேந்திரன் அவள் வீட்டில் உட்கார்ந்திருந்தான். உண்ணவும், அருந்தவுமாக, அவன் முன்னே வைக்கப்பட்டிருந்தவை தொடக்கூடப் படாமல், அப்படியே இருந்தன.
ஒரு கணம், நளினிக்குத் திக்கென்றுதான் இருந்தது.
ஆனாலும், அவள் அப்படியென்ன தப்பு செய்து விட்டாள்? அவனது அசட்டுப் பாதுகாவலை ஒரு தரம் மீறியிருக்கிறாள். மற்றபடி ஒன்றுமில்லையே என்று தோன்றிவிடவும், தானாக அவளது தலை நிமிர்ந்து விட்டது.
வீட்டில் அவளுடைய தந்தை, தாய் இருவருமே பெரும் சிக்கல் தீர்ந்த பெருமூச்சுடன், "வாம்மா!" என்று அவசரமாக அவளை எதிர் கொண்டனர்.
"இதோ வந்து விடுவாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம்! அதே போல, வந்து விட்டாய். எல்லாம் கிடைத்ததாடா?" என்றாள் சகுந்தலா. "போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. புவனேந்திரன் அப்போது பிடித்துக் காத்திருக்கிறார்!" என்றாள் குறிப்பாக.
புவனேந்திரன் வெறுமனே காத்திருக்கவில்லை, பார்த்து நடந்து கொள் என்று தாயார் சொல்வது நளினிக்குப் புரிந்தது.
ஆனால், இந்த மூன்று மணி நேரம் சுதந்திரமாகச் சுற்றியலைந்தது, நளினியை வேறு விதமாக எண்ண வைத்தது.
பாதுகாப்பு, பாதுகாப்பு என்று புவனேந்திரன் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. பொன் வண்ணம் பூசியதாலேயே, சிறைக் கம்பிகள் வேறாகி விடுமா? சொந்த வீட்டிலேயே, காசு கொடுத்துக் கைதிகளாக வாழ்வதா?
அவசியமற்றுத் தன்னைத்தானே கைதியாக்கிக் கொண்டதோடு, அவளையும் அந்த நிலைக்கு அவன் தள்ள முயற்சிக்கிறான்.
அந்த நிலையிலிருந்து, தன்னோடு, பாவம்! அவனையும் காப்பாற்ற வேண்டும்.
ஒரு ரதி கடத்தப்பட்டதாலேயே, எல்லாப் பணக்காரர்களுடைய மனைவிமாரும் கடத்தப்பட்டு விடுவார்களா, என்ன? மாட்டார்கள் என்று, அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.
அவனிடம் என்ன மாதிரிப் பேசிப் புரிய வைப்பது என்று, அவள் அவசரமாக மனதுள் ஒத்திகை பார்க்கையில், "உன்னிடம் தனியாகப் பேச வேண்டும். சற்று வெளியே போய் வரலாமா?" என்று உணர்ச்சி அடைத்த குரலில் கேட்டான் அவன்.
ஒரு கணம் நளினி யோசித்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
புவனனோடு எங்கே சென்றாலும், அவனுடைய மெய்க்காவலர்கள் கண் பார்க்கும்... ஏன், காது கேட்கும் தொலைவிலேயே இருப்பார்கள். அப்படி இரு பார்வையாளர்களை அருகில் வைத்துக் கொண்டு, அவளால் இலகுவாகப் பேச முடியாது.
எனவே, "நிஜமாகவே தனியாகப் பேசுவது என்றால், வெளியே போவதை விட, அப்பாவின் அலுவல் அறையில் இருந்து பேசுவது மேல்..." என்றாள், அவனுக்குப் பதிலாக.
அவளது பேச்சின் பொருள் புரிந்தாற் போலப் புவனனின் முகம் சற்றுக் கடுத்தது.
ஆனாலும், அவளது யோசனையை மறுக்காமல், சுதர்சனத்தின் அலுவலக அறைப் பக்கமாக நடந்தான்.
அறைக் கதவுக்கு முடிந்தவரை உட்புறமாகத் தூரச் சென்றவன், அவளும் அருகே வந்ததும், "நான் சொன்னது எதுவுமே, உன் மூளையை எட்டவில்லையா? ஏன் இப்படிச் செய்தாய்?" என்று தணிந்த குரலில் சீறினான்.
முட்டாளே என்கிறானா?
"அன்னிய ஆண்களைப் பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு உள்ளாடைகளை வாங்கும் பழக்கம் எனக்குக் கிடையாது!" என்றாள் இவள் வெடுக்கென.
"ஓகோ! நீ உள்ளாடைகளை வாங்கும் போது, உன்னைக் கடத்தக் கூடாது என்று, ஏதேனும் சட்டம் இருக்கிறதா?" என்றான் அவன் எகத்தாளமாக. "அப்படியே ஒரு சட்டம் இருந்தாலும், அவர்கள் வன்முறையாளர்கள். அந்தச் சட்டத்தை எப்படியும் மீறிகிறவர்கள். இது கூடவா உனக்குப் புரியவில்லை?"
பொறுமையிழந்து, "நிறுத்துங்கள், புவனன்! என்ன இது, எப்போது பார்த்தாலும், கடத்தல், கடத்தல் என்று கொண்டு!" என்று ஆத்திரப்பட்டாள் நளினி.
"என்ன செய்வது? எத்தனை முறை சொன்னாலும், அது உன் மண்டையோட்டைத் தாண்டி, உள்ளே போவதாகத் தெரியவில்லையே! அதனால் தான், திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது," என்றான் புவனேந்திரன் பதிலுக்கு ஆத்திரமாகவே. ஆனால், உடனே தணிந்து, "சொன்னால் புரிந்து கொள், நளினி. ஏற்கெனவே பட்ட கடனே எனக்கு முழுதாகத் தீரவில்லை. இன்னும் உனக்காக வேறு கடன்பட வைத்துவிடாதே!" என்றான் கனத்த குரலில்.
"கடனா? என்ன கடன்?"
"எனக்கு மனைவியான பாவத்துக்கு, ஒருத்தி பலியானது போதாதா? உனக்கும் ஏதேனும் நேர்ந்தால், நான் என்ன செய்வேன்? என்னால் தாங்கவே முடியாதும்மா."
எதுவும் நேரத் தேவையே இல்லை என்றால், இவன் ஏன் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் என்கிறான்? கீறல் விழுந்த பழைய கிராமபோன் இசைத்தட்டு மாதிரி, அதே 'கடத்தலை' உருப் போட்டால், அவளுக்கு எரிச்சல் வராதா? முதலில், இந்தப் பேச்சை நிறுத்தியாக வேண்டும்.
"நீங்கள் பாதிக்கப்பட்டவர், புவனன்! சூடு பட்ட பூனை மாதிரிப் பட்டறிவில் பேசுகிறீர்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், பூனையை விட, ஓர் அறிவு உங்களுக்கு அதிகம் இருக்கிறதல்லவா? அதைக் கொண்டு, யோசித்துப் பாருங்கள். எந்தப் பணக்காரனுடைய மனைவி எப்போது கிடைப்பாள், கடத்திப் போய்ப் பணம் பறிக்கலாம். கூடவே கொல்லலாம் என்று ஊரெல்லாம் வன்முறையாளர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றா நினைப்பது? அப்படி எல்லோரும் எண்ணத் தொடங்கினால் அப்புறம் தொழில் நடத்துவதிலும், பொருள் ஈட்டுவதிலும், யாருக்கு ஆர்வம் இருக்கும்? மனைவியை நேசிப்பவர்கள் எல்லோரும், கையில் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு பிச்சையெடுக்கத்தானே போவார்கள்? அப்புறம் நாட்டின் பொருளாதாரமே நாசமாகி விடாதா?" என்று மனதில் இருந்ததை மூச்சு விடாமல், படபடவென்று பொரிந்து கொட்டினாள்.
அவள் பேசி முடித்த போது, புவனேந்திரனின் கண்களுக்குச் சமமாக, முகமும் கன்றிச் சிவந்து போயிருந்தது.
இறுக மூடியிருந்த உதடுகளும், கை முஷ்டிகளுமாக, அவன் உணர்ச்சிகளை அடக்கப் பாடுபடுவதைக் கண்ட நளினிக்குச் சற்றுப் பரிதாபமாகக் கூட இருந்தது.
ஆனால், இது சொல்லியாக வேண்டிய விஷயம் அல்லவா?
அவன் கற்சிலையாய் நிற்க, அவனை நெருங்கி அவனது கரத்தைத் தொட்டு, "மெய்யாகத்தான் சொல்லுகிறேன், புவனன். ரதிக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம் எல்லோருக்கும் நேர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்கள் அப்படி அஞ்சத் தேவையும் இல்லை," என்றாள்.
அவளது விரல்களுக்கு அடியில், புவனேந்திரனின் தோல் மேலும் இறுகுவதை அவளால் உணர முடிந்தது.
அந்த இறுகலின் அடிப்படையான வேதனை புரியவும், அது தாங்காமல், "ஐயோ, வேண்டாம், புவன்!" என்று இரு கைகளாலும் அவனை இறுக அணைத்தாள்.
அவனது கரங்களும் அவளைச் சுற்றிக் கொள்ள, இருவரும் சற்று நேரம் அப்படியே நின்றனர்.
அவனது இறுக்கம் மெல்லத் தளர்வதை உணர்ந்து, அவனது தோளை மெல்ல வருடி, "அனாவசியமாக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள், புவனன்!" என்று வேதனையோடு வேண்டினாள் நளினி.
ஓரிரு கணங்கள் அசையாமல் நின்று விட்டு, ஆறுதலாக வருடிக் கொடுத்த அவளது கைகளைப் பற்றி நிறுத்தினான் புவனேந்திரன்.
"அனாவசியமாகவா?" என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டவன், அவளை நேராக நோக்கி, "ரதிக்கு நேர்ந்த ஆபத்து எல்லோருக்கும் நேர வேண்டிய கட்டாயம் இல்லை என்றாயே. அப்படி நேரவே நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேட்டான்.
பழைய கதைக்கே வருகிறான்.
இதற்கெல்லாம் என்ன உறுதி கொடுக்க முடியும்? வெகு சில வாய்ப்புகள் மட்டும்தானே உண்டு என்றாலும், அதற்காகவேனும் அவள் காவல் கைதியாக வாழ்ந்தே ஆக வேண்டும் எனப் போகிறான்.
உள்ளம் சலிப்புறக் கைகளை விடுவிடுத்துக் கொண்டாள் அவள். "அப்படி வெகு அபூர்வமாக ஏதேனும் நேர்ந்தாலும், என்னைக் காப்பாற்றிக் கொள்ள, என்னால் முடியும்," என்றாள் எங்கோ பார்த்தபடி.
"எப்படியாம்? அன்றைக்கு என்னிடம் மாட்டினாயே, அது போலவா?" என்று ஏளனமாகக் கேட்டான் அவன். "உன்னால் முடியாது என்று, அன்று போலவே இன்னொரு தரம் நிரூபித்துக் காட்டினால் அப்போதேனும் மனதில் நிற்குமா?"
அவனது ஏளனம் தைக்க, "தேவையில்லை. ஆனால் நீங்களும் ஒன்றை யோசித்துப் பாருங்கள். நான் ஒன்றும், உங்கள் வில்லாதி வில்லர்களை உற்றவர்கள் என்று நம்பி, உங்களிடம் போலத் தனியாகச் சென்று, அவர்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதில்லையே! பொது இடங்களில், அந்த மாதிரிக் கடத்த முயன்றால், நம் பொதுமக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். அதனால், உங்கள் அச்சமும், கவலையும் அனாவசியமேதான்!" என்றாள் அவள் தெளிவாக.
"கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா!" என்று வாசகம் சொல்வார்கள். மதுரையில் பார்த்திருக்கிறாயா? அவ்வளவு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கும் திருமலை நாயக்கர் மகாலிலேயே, அவரது காவல் படையையும் மீறிக் கள்வர்கள் கன்னமிட்ட இடம் இருக்கிறது. சாதாரணப் பொதுமக்கள், எந்த விதத்தில், உன்னைக் காப்பாற்றிவிட முடியும் என்கிறாய்?" என்று கேட்டான் அவன்.
"அப்படிப் பார்த்தாலும், நாயக்க மன்னருடைய பெரும் படை வீரர்களையே மீறி, அந்தக் கள்வர்கள் கன்னம் போட்டிருக்கிறார்களே! உங்கள் இரண்டு பாதுகாவலர்கள் அந்த வன்முறையாளர்களுக்கு எம் மாத்திரம்?" என்று மடக்கினாள் நளினி.
இவளிடம் என்ன சொன்னால் புரிந்து கொள்வாள் என்று அறியாதவன் போலச் சற்று நேரம் அவளைப் பார்த்தபடி, புவனேந்திரன் புருவம் சுழித்து நின்றான்.
பிறகு, "உண்மையாகவே, இந்தப் பாதுகாப்பு தேவை இல்லை என்று உனக்குத் தோன்றுகிறதா, அல்லது இங்குள்ள சூழ்நிலையில் அது சங்கடமாக இருப்பதால், வேண்டாம் என்கிறாயா? நன்கு யோசித்து எனக்குப் பதில் சொல், நளினி," என்று வரண்ட குரலில் வினவினான்.
அவனது குரலில், 'கண்மணி, ம்மா' விகுதியைக் கைவிட்டு வெறுமனே நளினியென்று அழைத்த விதமும், அவளை எச்சரித்திருக்க வேண்டும்.
ஆனால், அவனிடம் இருக்கும் ஒரே அசட்டுத்தனம் என்று அவள் கருதியதைப் போக்கிவிடும் வேகத்தில், "தேவையில்லை... தேவையில்லை... நிஜமாகவே, எனக்குப் பாதுகாப்புத் தேவையே இல்லை!" என்றாள் அவள் அவசரமாக!
"நான் உன்னை யோசித்துப் பதில் சொல்லச் சொன்னேன்!" என்றான் அவன் கோபமாக.
"மனதில் எப்போதும் இருப்பதைச் சொல்ல, எதற்கு யோசனை?" என்றாள் நளினி.
"மனதில் எப்போதும் இருப்பதா?" என்று, அவளது வார்த்தைகளையே மெதுவாகத் திருப்பிச் சொன்னான் புவனேந்திரன். "அப்படியானால், ஏற்கெனவே யோசித்து, ஒரு முடிவுடன் தான் இருக்கிறாய் என்று தெரிகிறது."
"நிச்சயமாக! இனி நீங்கள் தான் யோசிக்க வேண்டும்."
"யோசித்து நான் எடுத்த முடிவு பற்றி, முன்பே உன்னிடம் சொல்லியிருக்கிறேன்," என்றான் அவன் - இளக்கமற்ற, கனத்த குரலில்.
அவன் சொன்னது நினைவு வர, நளினி அதிர்ந்தாள்.
எனவே, "நிஜமாகவே தனியாகப் பேசுவது என்றால், வெளியே போவதை விட, அப்பாவின் அலுவல் அறையில் இருந்து பேசுவது மேல்..." என்றாள், அவனுக்குப் பதிலாக.
அவளது பேச்சின் பொருள் புரிந்தாற் போலப் புவனனின் முகம் சற்றுக் கடுத்தது.
ஆனாலும், அவளது யோசனையை மறுக்காமல், சுதர்சனத்தின் அலுவலக அறைப் பக்கமாக நடந்தான்.
அறைக் கதவுக்கு முடிந்தவரை உட்புறமாகத் தூரச் சென்றவன், அவளும் அருகே வந்ததும், "நான் சொன்னது எதுவுமே, உன் மூளையை எட்டவில்லையா? ஏன் இப்படிச் செய்தாய்?" என்று தணிந்த குரலில் சீறினான்.
முட்டாளே என்கிறானா?
"அன்னிய ஆண்களைப் பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு உள்ளாடைகளை வாங்கும் பழக்கம் எனக்குக் கிடையாது!" என்றாள் இவள் வெடுக்கென.
"ஓகோ! நீ உள்ளாடைகளை வாங்கும் போது, உன்னைக் கடத்தக் கூடாது என்று, ஏதேனும் சட்டம் இருக்கிறதா?" என்றான் அவன் எகத்தாளமாக. "அப்படியே ஒரு சட்டம் இருந்தாலும், அவர்கள் வன்முறையாளர்கள். அந்தச் சட்டத்தை எப்படியும் மீறிகிறவர்கள். இது கூடவா உனக்குப் புரியவில்லை?"
பொறுமையிழந்து, "நிறுத்துங்கள், புவனன்! என்ன இது, எப்போது பார்த்தாலும், கடத்தல், கடத்தல் என்று கொண்டு!" என்று ஆத்திரப்பட்டாள் நளினி.
"என்ன செய்வது? எத்தனை முறை சொன்னாலும், அது உன் மண்டையோட்டைத் தாண்டி, உள்ளே போவதாகத் தெரியவில்லையே! அதனால் தான், திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது," என்றான் புவனேந்திரன் பதிலுக்கு ஆத்திரமாகவே. ஆனால், உடனே தணிந்து, "சொன்னால் புரிந்து கொள், நளினி. ஏற்கெனவே பட்ட கடனே எனக்கு முழுதாகத் தீரவில்லை. இன்னும் உனக்காக வேறு கடன்பட வைத்துவிடாதே!" என்றான் கனத்த குரலில்.
"கடனா? என்ன கடன்?"
"எனக்கு மனைவியான பாவத்துக்கு, ஒருத்தி பலியானது போதாதா? உனக்கும் ஏதேனும் நேர்ந்தால், நான் என்ன செய்வேன்? என்னால் தாங்கவே முடியாதும்மா."
எதுவும் நேரத் தேவையே இல்லை என்றால், இவன் ஏன் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் என்கிறான்? கீறல் விழுந்த பழைய கிராமபோன் இசைத்தட்டு மாதிரி, அதே 'கடத்தலை' உருப் போட்டால், அவளுக்கு எரிச்சல் வராதா? முதலில், இந்தப் பேச்சை நிறுத்தியாக வேண்டும்.
"நீங்கள் பாதிக்கப்பட்டவர், புவனன்! சூடு பட்ட பூனை மாதிரிப் பட்டறிவில் பேசுகிறீர்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், பூனையை விட, ஓர் அறிவு உங்களுக்கு அதிகம் இருக்கிறதல்லவா? அதைக் கொண்டு, யோசித்துப் பாருங்கள். எந்தப் பணக்காரனுடைய மனைவி எப்போது கிடைப்பாள், கடத்திப் போய்ப் பணம் பறிக்கலாம். கூடவே கொல்லலாம் என்று ஊரெல்லாம் வன்முறையாளர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றா நினைப்பது? அப்படி எல்லோரும் எண்ணத் தொடங்கினால் அப்புறம் தொழில் நடத்துவதிலும், பொருள் ஈட்டுவதிலும், யாருக்கு ஆர்வம் இருக்கும்? மனைவியை நேசிப்பவர்கள் எல்லோரும், கையில் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு பிச்சையெடுக்கத்தானே போவார்கள்? அப்புறம் நாட்டின் பொருளாதாரமே நாசமாகி விடாதா?" என்று மனதில் இருந்ததை மூச்சு விடாமல், படபடவென்று பொரிந்து கொட்டினாள்.
அவள் பேசி முடித்த போது, புவனேந்திரனின் கண்களுக்குச் சமமாக, முகமும் கன்றிச் சிவந்து போயிருந்தது.
இறுக மூடியிருந்த உதடுகளும், கை முஷ்டிகளுமாக, அவன் உணர்ச்சிகளை அடக்கப் பாடுபடுவதைக் கண்ட நளினிக்குச் சற்றுப் பரிதாபமாகக் கூட இருந்தது.
ஆனால், இது சொல்லியாக வேண்டிய விஷயம் அல்லவா?
அவன் கற்சிலையாய் நிற்க, அவனை நெருங்கி அவனது கரத்தைத் தொட்டு, "மெய்யாகத்தான் சொல்லுகிறேன், புவனன். ரதிக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம் எல்லோருக்கும் நேர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்கள் அப்படி அஞ்சத் தேவையும் இல்லை," என்றாள்.
அவளது விரல்களுக்கு அடியில், புவனேந்திரனின் தோல் மேலும் இறுகுவதை அவளால் உணர முடிந்தது.
அந்த இறுகலின் அடிப்படையான வேதனை புரியவும், அது தாங்காமல், "ஐயோ, வேண்டாம், புவன்!" என்று இரு கைகளாலும் அவனை இறுக அணைத்தாள்.
அவனது கரங்களும் அவளைச் சுற்றிக் கொள்ள, இருவரும் சற்று நேரம் அப்படியே நின்றனர்.
அவனது இறுக்கம் மெல்லத் தளர்வதை உணர்ந்து, அவனது தோளை மெல்ல வருடி, "அனாவசியமாக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள், புவனன்!" என்று வேதனையோடு வேண்டினாள் நளினி.
ஓரிரு கணங்கள் அசையாமல் நின்று விட்டு, ஆறுதலாக வருடிக் கொடுத்த அவளது கைகளைப் பற்றி நிறுத்தினான் புவனேந்திரன்.
"அனாவசியமாகவா?" என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டவன், அவளை நேராக நோக்கி, "ரதிக்கு நேர்ந்த ஆபத்து எல்லோருக்கும் நேர வேண்டிய கட்டாயம் இல்லை என்றாயே. அப்படி நேரவே நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேட்டான்.
பழைய கதைக்கே வருகிறான்.
இதற்கெல்லாம் என்ன உறுதி கொடுக்க முடியும்? வெகு சில வாய்ப்புகள் மட்டும்தானே உண்டு என்றாலும், அதற்காகவேனும் அவள் காவல் கைதியாக வாழ்ந்தே ஆக வேண்டும் எனப் போகிறான்.
உள்ளம் சலிப்புறக் கைகளை விடுவிடுத்துக் கொண்டாள் அவள். "அப்படி வெகு அபூர்வமாக ஏதேனும் நேர்ந்தாலும், என்னைக் காப்பாற்றிக் கொள்ள, என்னால் முடியும்," என்றாள் எங்கோ பார்த்தபடி.
"எப்படியாம்? அன்றைக்கு என்னிடம் மாட்டினாயே, அது போலவா?" என்று ஏளனமாகக் கேட்டான் அவன். "உன்னால் முடியாது என்று, அன்று போலவே இன்னொரு தரம் நிரூபித்துக் காட்டினால் அப்போதேனும் மனதில் நிற்குமா?"
அவனது ஏளனம் தைக்க, "தேவையில்லை. ஆனால் நீங்களும் ஒன்றை யோசித்துப் பாருங்கள். நான் ஒன்றும், உங்கள் வில்லாதி வில்லர்களை உற்றவர்கள் என்று நம்பி, உங்களிடம் போலத் தனியாகச் சென்று, அவர்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதில்லையே! பொது இடங்களில், அந்த மாதிரிக் கடத்த முயன்றால், நம் பொதுமக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். அதனால், உங்கள் அச்சமும், கவலையும் அனாவசியமேதான்!" என்றாள் அவள் தெளிவாக.
"கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா!" என்று வாசகம் சொல்வார்கள். மதுரையில் பார்த்திருக்கிறாயா? அவ்வளவு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கும் திருமலை நாயக்கர் மகாலிலேயே, அவரது காவல் படையையும் மீறிக் கள்வர்கள் கன்னமிட்ட இடம் இருக்கிறது. சாதாரணப் பொதுமக்கள், எந்த விதத்தில், உன்னைக் காப்பாற்றிவிட முடியும் என்கிறாய்?" என்று கேட்டான் அவன்.
"அப்படிப் பார்த்தாலும், நாயக்க மன்னருடைய பெரும் படை வீரர்களையே மீறி, அந்தக் கள்வர்கள் கன்னம் போட்டிருக்கிறார்களே! உங்கள் இரண்டு பாதுகாவலர்கள் அந்த வன்முறையாளர்களுக்கு எம் மாத்திரம்?" என்று மடக்கினாள் நளினி.
இவளிடம் என்ன சொன்னால் புரிந்து கொள்வாள் என்று அறியாதவன் போலச் சற்று நேரம் அவளைப் பார்த்தபடி, புவனேந்திரன் புருவம் சுழித்து நின்றான்.
பிறகு, "உண்மையாகவே, இந்தப் பாதுகாப்பு தேவை இல்லை என்று உனக்குத் தோன்றுகிறதா, அல்லது இங்குள்ள சூழ்நிலையில் அது சங்கடமாக இருப்பதால், வேண்டாம் என்கிறாயா? நன்கு யோசித்து எனக்குப் பதில் சொல், நளினி," என்று வரண்ட குரலில் வினவினான்.
அவனது குரலில், 'கண்மணி, ம்மா' விகுதியைக் கைவிட்டு வெறுமனே நளினியென்று அழைத்த விதமும், அவளை எச்சரித்திருக்க வேண்டும்.
ஆனால், அவனிடம் இருக்கும் ஒரே அசட்டுத்தனம் என்று அவள் கருதியதைப் போக்கிவிடும் வேகத்தில், "தேவையில்லை... தேவையில்லை... நிஜமாகவே, எனக்குப் பாதுகாப்புத் தேவையே இல்லை!" என்றாள் அவள் அவசரமாக!
"நான் உன்னை யோசித்துப் பதில் சொல்லச் சொன்னேன்!" என்றான் அவன் கோபமாக.
"மனதில் எப்போதும் இருப்பதைச் சொல்ல, எதற்கு யோசனை?" என்றாள் நளினி.
"மனதில் எப்போதும் இருப்பதா?" என்று, அவளது வார்த்தைகளையே மெதுவாகத் திருப்பிச் சொன்னான் புவனேந்திரன். "அப்படியானால், ஏற்கெனவே யோசித்து, ஒரு முடிவுடன் தான் இருக்கிறாய் என்று தெரிகிறது."
"நிச்சயமாக! இனி நீங்கள் தான் யோசிக்க வேண்டும்."
"யோசித்து நான் எடுத்த முடிவு பற்றி, முன்பே உன்னிடம் சொல்லியிருக்கிறேன்," என்றான் அவன் - இளக்கமற்ற, கனத்த குரலில்.
அவன் சொன்னது நினைவு வர, நளினி அதிர்ந்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
சக்திவேலின் காவல் தேவையில்லை என்று, புவனேந்திரனிடம் அவள் கேட்கப் போனபோது நடந்தது, நளினிக்குத் தெள்ளத் தெளிவாக நினைவு இருந்தது.
அவனது விஷயங்கள் எதையுமேதான் அவள் மறப்பது இல்லையே.
அதிலும், இது அவனது முதல் இதழொற்றுதல்.
பிரிவைத் தேர்ந்தெடுத்து விடாதே என்று, அவன் எப்படிக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான்.
அந்த அன்பு பெரு மரமாய் இவ்வளவு வளர்ந்த பிறகு, அவனுக்கு மட்டும் பிரிவது எளிதாகவா இருக்கும்? அதற்காக, அவனும் அவள் பக்கம் வரலாமே.
ஆனால், புவனேந்திரன் ஒரு மாதிரிப் பிடிவாதக்காரன். பெற்றோருக்கு அநியாயம் செய்தார் என்று, பாட்டியைக் கடைசி வரை... மரண வாசலில் ஒரு தரம் எட்டிப் பார்த்தது தவிர, இன்னமும் கூட, அவன் மன்னிக்கவே இல்லை.
ஆனால், முன்பின் பார்த்தே அறியாத பாட்டியின் பாசமும், அவளது காதலும் ஒன்றல்ல.
அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பின் வலிமை பெரியது. அது, அவனை அவள் பக்கம் இழுத்து வந்து விடும் என்று நளினி பிடிவாதமாக எண்ணமிடும் போது, அதை நிரூபிப்பவன் போன்று, புவனன் அவள் புறமாக ஓர் எட்டு எடுத்து வைத்தான்.
ஆனால், அவள் ஆவலாக நோக்குகையிலேயே, கைகளை இறுக மூடிக் கொண்டு, திரும்பி நடந்து அறையை விட்டு வெளியேறி விட்டான்.
வெளியே சென்றவன், அறைக்குள் நடப்பதைக் கவனியாதிருக்க மிகவும் முயன்று கொண்டிருந்த சுதர்சனத்திடம் போனான். "பாருங்கள், அங்கிள்! என் கடந்த காலத்தில் நடந்தது பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். விளக்கி, விலாவாரியாக விவரிக்க முடியாத சிலதைத் தேவையில்லை என்று விட்டிருந்தேன்... அதில்... அங்கிள், நளினிக்கும் இது தெரிய வேண்டியதுதான்..." என்று மேலும் சற்றுத் தடுமாறி விட்டு, அவனே தொடர்ந்து பேசினான்.
"அங்கிள்! ரதிக்குப் பூ மாதிரி முகம். இளமை, சந்தோஷம் எல்லாமாக, அன்றலர்ந்த பூ தவிர, அவள் முகத்துக்கு வேறு உவமை கிடையாது. ஆனால், அவள் காணாமல் போய்... இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு, பிணக் கிடங்கில் பார்த்தபோது, அந்த முகம் எப்படி இருந்தது, தெரியுமா? எனக்கு மறக்காது. இந்தப் பிறவியில் அது மறக்கக் கூடியது அல்ல, அங்கிள். என்னை மணந்த ஒரு காரணத்துக்காக... அவள்... அந்தப் புதுமலர்... கடவுளே..." என்று, மேலே பேச முடியாமல் தவிப்புடன் அவன் நிறுத்திய போது, எல்லோருக்கும் மூச்சடைத்துப் போயிற்று.
சகுந்தலா ஓசையற்று அழவே தொடங்கி விட்டாள்.
முதலில் சமாளித்துக் கொண்டவனும் புவனன் தான்.
தொண்டையைச் செருமிச் சரிப்படுத்திக் கொண்டு, "அங்கிள், ஆன்ட்டி! நீங்கள் இருவரும் என்னைப் போலவே, நளினி மீது நீங்களும் மிகுந்த அன்புள்ளவர்கள் என்பதால், நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நளினி என் மனைவியாக இருப்பதை விட, அவள்... நல்லபடியாக உயிரோடு இருப்பது எனக்கு முக்கியம். இன்னொரு... அதுபோல, இன்னொரு தப்பு நடக்க விட முடியாது, அங்கிள். அதனால் நான் இந்தத் திருமண நிச்சயத்தை முறிக்கிறேன்!" என்று முடித்தான்.
அவரது அலுவல் அறை வாயிலில், முகத்தில் ரத்தப் பசையே இல்லாமல் வெளுத்த முகத்துடன், ஓர் ஆவியைப் போன்று நின்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார், சுதர்சனம்.
மகளின் மனம் அவர் அறியாதது அல்ல.
அது, இப்போது என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கும் என்று உணர்ந்து, "பாருங்கள் புவனேந்திரன். அவள் சின்னப் பெண்! இந்த ஒரு தடவை யோசியாமல்..." என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.
"இல்லை, அங்கிள். நன்கு யோசித்துத்தான், தனக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என்று, நளினி செயல்பட்டிருக்கிறாள். வரக்கூடிய ஆபத்து பற்றி அவளுக்குப் புரியவில்லை என்பதோடு, எதையும் புரிந்து கொள்ளப் பிரியமும் இல்லை. அவசியமற்ற அசட்டுத்தனமாக நிச்சயமாக நினைக்கிறாள். எனவே, மீதம் இருக்கும் ஒரே வழி, ஆபத்துக்கு ஆளாகாத, பாதுகாப்புத் தேவையற்ற ஒரு நிலையை, அவளுக்கு உருவாக்கிக் கொடுப்பதுதான். அதனால் தான், விலகிப் போக முடிவு செய்திருக்கிறேன். இன்னொன்று அங்கிள். இதுவே, இன்னொருவர் என்றால், நிச்சயித்த திருமணத்தை நிறுத்துவதற்காக, நஷ்ட ஈடு எவ்வளவு வேண்டும் என்று நேரடியாகக் கேட்டிருப்பேன். ஆனால், இந்தக் குடும்பம் அப்படிப்பட்டது இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், சில ஏற்பாடுகளுக்காக நீங்கள் செய்திருக்கும் அதிகப்படிச் செலவுகளை ஈடு செய்யவே நான் விரும்புகிறேன். அதனால்..."
பணமா தருகிறேன் என்கிறான்? பணம் எல்லாவற்றையும் ஈடு செய்து விடுமாமா?
நளினியின் தவிப்பு கொதிப்பாக மாறியது.
அவன் பேச்சில் குறுக்கிட்டு, "அவரது பணம் இங்கே யாருக்கும் தேவையில்லை. அது இல்லாமலே இதுவரை வாழ்ந்தது போல, இனியும் நம்மால் வாழ முடியும் என்று சொல்லி, அவரை வெளியே அனுப்புங்கள், அப்பா!" என்று சீறீனாள்.
அவளை நேராகப் பாராமலே, "இது, இப்படிப் பிரிய நேர்வது, எனக்கும் மிகுந்த வேதனைதான், அங்கிள். மீண்டும், பழைய பாலைவன வாழ்க்கைக்குத் திரும்புவது எனக்கு மட்டும் மகிழ்ச்சியா? ஆனால், அவள் மேல் உள்ள அக்கறையினாலேயே, இதை விடப் பெரிய துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே, வேறு வழியில்லாமல், மனதைப் பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்திருக்கிறேன்! பணம் பற்றிக் கூட, உங்களுக்குத் தேவை என்று நான் அதைக் கூறவில்லை. நொந்த என் மனதிற்கு ஒரு சிறு ஆறுதல் கிடைக்கக் கூடும் என்றுதான். இதற்கு மேல், நான் வேறு என்ன சொல்லட்டும்? கிளம்புகிறேன்," என்ற புவனேந்திரன் அதற்கு மேல் நில்லாமல், அங்கிருந்து போய்விட்டான்.
புவனேந்திரன் இப்படிச் சொல்லிச் சென்றது, வீட்டினர் எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.
அவர்களிலும், நளினிக்கு, ஒரு பயங்கரக் கனவை நிறுத்த முடியாமல், தொடர்ந்து கண்டு கொண்டே இருக்கும் உணர்வு.
புவனனின் அசட்டுப் பயத்தைப் போக்குவதாக எண்ணி அவள் செய்த முயற்சி, இப்படிப் பூமராங்காகத் திருப்பி அடிக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லையே.
அவள் மீது அவனுக்குள்ள அன்பில் நம்பிக்கை வைத்து, அந்த அன்பை இழக்க விரும்பாமல், புவனன் தன் வழிக்கு வருவான் என்று அவள் கருதியது மாறி, அந்த அன்புக்காகவே, அவளைப் பிரியத் துணிவான் என்று அவள் நினைக்கவில்லையே.
இது கனவாகத்தான் இருக்கும், அல்லது ஏதோ மனப் பிரமையோ என்றெல்லாம் கூட, அவளுக்குத் தோன்றியது.
ஆனால், அவள் ஏதோ கண்ணாடிப் பாத்திரம், உரக்கப் பேசினாலே உடைந்து விடுவாள் போலப் பார்த்துப் பார்த்துப் பெற்றோர் நடந்து கொண்ட விதம், இது கனவோ, பிரமையோ அல்ல என்றது.
வீட்டு வாயிலில் எப்போதும் இருக்கும் சக்திவேலும் அவனுடைய கூட்டாளி கண்ணனும் காணாமல் போனது, எல்லாம் நனவே என்று மேலும் உறுதிப்படுத்தியது.
சூரியன் கிழக்கே உதித்து, மேற்கே மறைவது போல, வெகு நிச்சயமான நடப்பு!
புவனேந்திரன், அவளை விட்டு, நிஜமாகவே பிரிந்து போய் விட்டான்.
எப்படி முடிந்தது?
அவளைப் பார்த்ததுமே, அவன் கண்கள் பளிச்சிட்டதும், முகம் மலர்ந்ததும், எல்லாம் பொய்யா? நடிப்பா? கனவா?
இல்லை. எல்லாமே உண்மையே!
ஆனால், எல்லாவற்றையும் விட, அவர்களது அன்பை விட, அவர்களது ஆனந்தமான எதிர்கால வாழ்வை விட அவனது பாதுகாப்புப் பைத்தியம் பெரிதாக இருந்திருக்கிறது.
அவர்களது வாழ்வில் பூரண மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடும் என்று கருதி, அவள் தவிர்க்க முயன்றது, கடைசியில், அவளது வாழ்வையே அழித்து விட்டது.
மெய்யாகவே, வாழ்க்கையே அழிந்து விட்டது போலத் தான் நளினி உணர்ந்தாள்.
புவனேந்திரன் இல்லாமல் சுகமோ, சந்தோஷமோ அவளுக்கு ஏது?
இனிமேல், தன்னால் வாய்விட்டுச் சிரிக்கவே முடியாது என்று, அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.
அதை விடவும், இதயம் இருந்த இடத்தில் புழுவாய் அரித்த இந்த வேதனை! அது என்றேனும் மட்டுப் படக் கூடுமா? அந்த நம்பிக்கையும் இல்லை.
புவனேந்திரனைப் பிரியவே நேர்ந்து விடும், அந்தப் பிரிவு இவ்வளவு வேதனையைத் தரும் என்று முன்பே தெரிந்திருந்தால், வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாமே!
'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல நடந்து கொள்கிறாள் என்று, அவன் முதல் நாள் சந்திப்பிலேயே சொன்னானே. அதற்கு உதாரணமாக நடந்து, மீண்டும் எதிர்காலத்தைக் கெடுத்துக் கொண்டாளே!
இப்படியெல்லாம் நினைத்துக் கண்ணீர் வடித்துத் தன்னைத் தானே நோகடித்துக் கொண்ட போதும், மனதாரச் சரியானது என்று ஒத்துக் கொள்ளாத ஒன்றைச் சும்மா வாய் மூடி மௌனமாக ஏற்றுக் கொள்வது, தன் இயல்பு அல்ல என்பதையும் நளினி அறிந்தே இருந்தாள்.
புவனனும், பாதுகாப்பு விஷயத்தில் இளகுகிறவன் அல்ல.
எனவே, அன்று இல்லாவிட்டாலும், சற்றுப் பின்னே எப்படியும் ஒரு நாள் இந்த வாக்குவாதமும், அதன் இந்த முடிவும் நிகழ்ந்தே இருக்கும்.
எனவே, இப்படி இருந்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்று எண்ணி மனதைப் புண்ணாக்கிக் கொள்வது மடத்தனம்!
தன்னைப் புண்ணாக்கிக் கொள்வது மட்டும் மடத்தனம் அல்ல. தன் மேல் அன்பு வைத்த பாவத்துக்காகப் பெற்றோரையும், உடன் பிறந்தவளையும் நோகடிப்பது கூட மடத்தனம் தான்.
'நான் பிளஸ் டூ, பிளஸ் டூ!' என்று எப்போதும் புத்தகமும் கையுமாகப் புருவங்களை உயர்த்திக் கொண்டு அலையும் மஞ்சரி கூட, தன் வழக்கத்துக்கு மாறாக, "கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறாயாக்கா? காபி தரட்டுமா?" என்று ஓடி ஓடி வருவது ஒருவாறு, கண்ணிலும், அதைத் தொடர்ந்து கருத்திலும் பட, நளினி தன்னைச் சமாளித்துக் கொள்ள முயற்சித்தாள்.
அவனது விஷயங்கள் எதையுமேதான் அவள் மறப்பது இல்லையே.
அதிலும், இது அவனது முதல் இதழொற்றுதல்.
பிரிவைத் தேர்ந்தெடுத்து விடாதே என்று, அவன் எப்படிக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான்.
அந்த அன்பு பெரு மரமாய் இவ்வளவு வளர்ந்த பிறகு, அவனுக்கு மட்டும் பிரிவது எளிதாகவா இருக்கும்? அதற்காக, அவனும் அவள் பக்கம் வரலாமே.
ஆனால், புவனேந்திரன் ஒரு மாதிரிப் பிடிவாதக்காரன். பெற்றோருக்கு அநியாயம் செய்தார் என்று, பாட்டியைக் கடைசி வரை... மரண வாசலில் ஒரு தரம் எட்டிப் பார்த்தது தவிர, இன்னமும் கூட, அவன் மன்னிக்கவே இல்லை.
ஆனால், முன்பின் பார்த்தே அறியாத பாட்டியின் பாசமும், அவளது காதலும் ஒன்றல்ல.
அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பின் வலிமை பெரியது. அது, அவனை அவள் பக்கம் இழுத்து வந்து விடும் என்று நளினி பிடிவாதமாக எண்ணமிடும் போது, அதை நிரூபிப்பவன் போன்று, புவனன் அவள் புறமாக ஓர் எட்டு எடுத்து வைத்தான்.
ஆனால், அவள் ஆவலாக நோக்குகையிலேயே, கைகளை இறுக மூடிக் கொண்டு, திரும்பி நடந்து அறையை விட்டு வெளியேறி விட்டான்.
வெளியே சென்றவன், அறைக்குள் நடப்பதைக் கவனியாதிருக்க மிகவும் முயன்று கொண்டிருந்த சுதர்சனத்திடம் போனான். "பாருங்கள், அங்கிள்! என் கடந்த காலத்தில் நடந்தது பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். விளக்கி, விலாவாரியாக விவரிக்க முடியாத சிலதைத் தேவையில்லை என்று விட்டிருந்தேன்... அதில்... அங்கிள், நளினிக்கும் இது தெரிய வேண்டியதுதான்..." என்று மேலும் சற்றுத் தடுமாறி விட்டு, அவனே தொடர்ந்து பேசினான்.
"அங்கிள்! ரதிக்குப் பூ மாதிரி முகம். இளமை, சந்தோஷம் எல்லாமாக, அன்றலர்ந்த பூ தவிர, அவள் முகத்துக்கு வேறு உவமை கிடையாது. ஆனால், அவள் காணாமல் போய்... இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு, பிணக் கிடங்கில் பார்த்தபோது, அந்த முகம் எப்படி இருந்தது, தெரியுமா? எனக்கு மறக்காது. இந்தப் பிறவியில் அது மறக்கக் கூடியது அல்ல, அங்கிள். என்னை மணந்த ஒரு காரணத்துக்காக... அவள்... அந்தப் புதுமலர்... கடவுளே..." என்று, மேலே பேச முடியாமல் தவிப்புடன் அவன் நிறுத்திய போது, எல்லோருக்கும் மூச்சடைத்துப் போயிற்று.
சகுந்தலா ஓசையற்று அழவே தொடங்கி விட்டாள்.
முதலில் சமாளித்துக் கொண்டவனும் புவனன் தான்.
தொண்டையைச் செருமிச் சரிப்படுத்திக் கொண்டு, "அங்கிள், ஆன்ட்டி! நீங்கள் இருவரும் என்னைப் போலவே, நளினி மீது நீங்களும் மிகுந்த அன்புள்ளவர்கள் என்பதால், நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நளினி என் மனைவியாக இருப்பதை விட, அவள்... நல்லபடியாக உயிரோடு இருப்பது எனக்கு முக்கியம். இன்னொரு... அதுபோல, இன்னொரு தப்பு நடக்க விட முடியாது, அங்கிள். அதனால் நான் இந்தத் திருமண நிச்சயத்தை முறிக்கிறேன்!" என்று முடித்தான்.
அவரது அலுவல் அறை வாயிலில், முகத்தில் ரத்தப் பசையே இல்லாமல் வெளுத்த முகத்துடன், ஓர் ஆவியைப் போன்று நின்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார், சுதர்சனம்.
மகளின் மனம் அவர் அறியாதது அல்ல.
அது, இப்போது என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கும் என்று உணர்ந்து, "பாருங்கள் புவனேந்திரன். அவள் சின்னப் பெண்! இந்த ஒரு தடவை யோசியாமல்..." என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.
"இல்லை, அங்கிள். நன்கு யோசித்துத்தான், தனக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என்று, நளினி செயல்பட்டிருக்கிறாள். வரக்கூடிய ஆபத்து பற்றி அவளுக்குப் புரியவில்லை என்பதோடு, எதையும் புரிந்து கொள்ளப் பிரியமும் இல்லை. அவசியமற்ற அசட்டுத்தனமாக நிச்சயமாக நினைக்கிறாள். எனவே, மீதம் இருக்கும் ஒரே வழி, ஆபத்துக்கு ஆளாகாத, பாதுகாப்புத் தேவையற்ற ஒரு நிலையை, அவளுக்கு உருவாக்கிக் கொடுப்பதுதான். அதனால் தான், விலகிப் போக முடிவு செய்திருக்கிறேன். இன்னொன்று அங்கிள். இதுவே, இன்னொருவர் என்றால், நிச்சயித்த திருமணத்தை நிறுத்துவதற்காக, நஷ்ட ஈடு எவ்வளவு வேண்டும் என்று நேரடியாகக் கேட்டிருப்பேன். ஆனால், இந்தக் குடும்பம் அப்படிப்பட்டது இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், சில ஏற்பாடுகளுக்காக நீங்கள் செய்திருக்கும் அதிகப்படிச் செலவுகளை ஈடு செய்யவே நான் விரும்புகிறேன். அதனால்..."
பணமா தருகிறேன் என்கிறான்? பணம் எல்லாவற்றையும் ஈடு செய்து விடுமாமா?
நளினியின் தவிப்பு கொதிப்பாக மாறியது.
அவன் பேச்சில் குறுக்கிட்டு, "அவரது பணம் இங்கே யாருக்கும் தேவையில்லை. அது இல்லாமலே இதுவரை வாழ்ந்தது போல, இனியும் நம்மால் வாழ முடியும் என்று சொல்லி, அவரை வெளியே அனுப்புங்கள், அப்பா!" என்று சீறீனாள்.
அவளை நேராகப் பாராமலே, "இது, இப்படிப் பிரிய நேர்வது, எனக்கும் மிகுந்த வேதனைதான், அங்கிள். மீண்டும், பழைய பாலைவன வாழ்க்கைக்குத் திரும்புவது எனக்கு மட்டும் மகிழ்ச்சியா? ஆனால், அவள் மேல் உள்ள அக்கறையினாலேயே, இதை விடப் பெரிய துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே, வேறு வழியில்லாமல், மனதைப் பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்திருக்கிறேன்! பணம் பற்றிக் கூட, உங்களுக்குத் தேவை என்று நான் அதைக் கூறவில்லை. நொந்த என் மனதிற்கு ஒரு சிறு ஆறுதல் கிடைக்கக் கூடும் என்றுதான். இதற்கு மேல், நான் வேறு என்ன சொல்லட்டும்? கிளம்புகிறேன்," என்ற புவனேந்திரன் அதற்கு மேல் நில்லாமல், அங்கிருந்து போய்விட்டான்.
புவனேந்திரன் இப்படிச் சொல்லிச் சென்றது, வீட்டினர் எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.
அவர்களிலும், நளினிக்கு, ஒரு பயங்கரக் கனவை நிறுத்த முடியாமல், தொடர்ந்து கண்டு கொண்டே இருக்கும் உணர்வு.
புவனனின் அசட்டுப் பயத்தைப் போக்குவதாக எண்ணி அவள் செய்த முயற்சி, இப்படிப் பூமராங்காகத் திருப்பி அடிக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லையே.
அவள் மீது அவனுக்குள்ள அன்பில் நம்பிக்கை வைத்து, அந்த அன்பை இழக்க விரும்பாமல், புவனன் தன் வழிக்கு வருவான் என்று அவள் கருதியது மாறி, அந்த அன்புக்காகவே, அவளைப் பிரியத் துணிவான் என்று அவள் நினைக்கவில்லையே.
இது கனவாகத்தான் இருக்கும், அல்லது ஏதோ மனப் பிரமையோ என்றெல்லாம் கூட, அவளுக்குத் தோன்றியது.
ஆனால், அவள் ஏதோ கண்ணாடிப் பாத்திரம், உரக்கப் பேசினாலே உடைந்து விடுவாள் போலப் பார்த்துப் பார்த்துப் பெற்றோர் நடந்து கொண்ட விதம், இது கனவோ, பிரமையோ அல்ல என்றது.
வீட்டு வாயிலில் எப்போதும் இருக்கும் சக்திவேலும் அவனுடைய கூட்டாளி கண்ணனும் காணாமல் போனது, எல்லாம் நனவே என்று மேலும் உறுதிப்படுத்தியது.
சூரியன் கிழக்கே உதித்து, மேற்கே மறைவது போல, வெகு நிச்சயமான நடப்பு!
புவனேந்திரன், அவளை விட்டு, நிஜமாகவே பிரிந்து போய் விட்டான்.
எப்படி முடிந்தது?
அவளைப் பார்த்ததுமே, அவன் கண்கள் பளிச்சிட்டதும், முகம் மலர்ந்ததும், எல்லாம் பொய்யா? நடிப்பா? கனவா?
இல்லை. எல்லாமே உண்மையே!
ஆனால், எல்லாவற்றையும் விட, அவர்களது அன்பை விட, அவர்களது ஆனந்தமான எதிர்கால வாழ்வை விட அவனது பாதுகாப்புப் பைத்தியம் பெரிதாக இருந்திருக்கிறது.
அவர்களது வாழ்வில் பூரண மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடும் என்று கருதி, அவள் தவிர்க்க முயன்றது, கடைசியில், அவளது வாழ்வையே அழித்து விட்டது.
மெய்யாகவே, வாழ்க்கையே அழிந்து விட்டது போலத் தான் நளினி உணர்ந்தாள்.
புவனேந்திரன் இல்லாமல் சுகமோ, சந்தோஷமோ அவளுக்கு ஏது?
இனிமேல், தன்னால் வாய்விட்டுச் சிரிக்கவே முடியாது என்று, அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.
அதை விடவும், இதயம் இருந்த இடத்தில் புழுவாய் அரித்த இந்த வேதனை! அது என்றேனும் மட்டுப் படக் கூடுமா? அந்த நம்பிக்கையும் இல்லை.
புவனேந்திரனைப் பிரியவே நேர்ந்து விடும், அந்தப் பிரிவு இவ்வளவு வேதனையைத் தரும் என்று முன்பே தெரிந்திருந்தால், வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாமே!
'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல நடந்து கொள்கிறாள் என்று, அவன் முதல் நாள் சந்திப்பிலேயே சொன்னானே. அதற்கு உதாரணமாக நடந்து, மீண்டும் எதிர்காலத்தைக் கெடுத்துக் கொண்டாளே!
இப்படியெல்லாம் நினைத்துக் கண்ணீர் வடித்துத் தன்னைத் தானே நோகடித்துக் கொண்ட போதும், மனதாரச் சரியானது என்று ஒத்துக் கொள்ளாத ஒன்றைச் சும்மா வாய் மூடி மௌனமாக ஏற்றுக் கொள்வது, தன் இயல்பு அல்ல என்பதையும் நளினி அறிந்தே இருந்தாள்.
புவனனும், பாதுகாப்பு விஷயத்தில் இளகுகிறவன் அல்ல.
எனவே, அன்று இல்லாவிட்டாலும், சற்றுப் பின்னே எப்படியும் ஒரு நாள் இந்த வாக்குவாதமும், அதன் இந்த முடிவும் நிகழ்ந்தே இருக்கும்.
எனவே, இப்படி இருந்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்று எண்ணி மனதைப் புண்ணாக்கிக் கொள்வது மடத்தனம்!
தன்னைப் புண்ணாக்கிக் கொள்வது மட்டும் மடத்தனம் அல்ல. தன் மேல் அன்பு வைத்த பாவத்துக்காகப் பெற்றோரையும், உடன் பிறந்தவளையும் நோகடிப்பது கூட மடத்தனம் தான்.
'நான் பிளஸ் டூ, பிளஸ் டூ!' என்று எப்போதும் புத்தகமும் கையுமாகப் புருவங்களை உயர்த்திக் கொண்டு அலையும் மஞ்சரி கூட, தன் வழக்கத்துக்கு மாறாக, "கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறாயாக்கா? காபி தரட்டுமா?" என்று ஓடி ஓடி வருவது ஒருவாறு, கண்ணிலும், அதைத் தொடர்ந்து கருத்திலும் பட, நளினி தன்னைச் சமாளித்துக் கொள்ள முயற்சித்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
சும்மா விழுந்தடித்துப் படுத்திருப்பதும், படுத்துக் கொண்டு அழுவதும், இனிக் கூடாது.
குறுக்கிட்டுக் கொண்டே இருந்த புவனேந்திரன் நினைவைப் பிடிவாதமாக முயன்று ஒதுக்கியபடி, என்ன செய்வது என்று நளினி யோசித்தாள்.
'உன்னத'த்துக்குப் போய்த் தொடர்ந்து பணிபுரிவது முடியாத காரியம்.
தன் நெஞ்சில் தானே கத்தியால் திருகுவது போல, அது முட்டாள்தனமான காரியம்.
வீட்டிலும் வழக்கம் போல எந்த விதமான அலங்காரப் பூ வேலைகளைச் செய்யவும் முடியவில்லை.
அதற்குக் கற்பனா சக்தி வேலை செய்ய வேண்டும். கண்ணும் மனமும் ஒன்றி வேலை செய்ய வேண்டும். எப்போதும் கண்ணுக்குள் புவனேந்திரனை வைத்துக் கொண்டு செய்தால், ஊசி குத்திக் குத்தியே கை புண்ணாகி விடும்.
வேறு என்ன செய்வது என்று அவள் யோசித்த போது, 'உன்னத'த்திலிருந்து அவளது சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து ஒரு காசோலையும், வேலையைத் திறம்படச் செய்ததற்காக ஒரு நன்னடத்தைச் சான்றிதழும் வந்து சேர்ந்தன.
அங்கே தொடர்ந்து அவள் வேலை செய்வது முடியாது என்று, அவளைப் போலவே, அவனும் எண்ணியிருக்கிறான்.
யாராக இருந்தாலும், அப்படித்தான் யோசித்திருப்பார்கள் என்றாலும், நளினிக்கு என்னவோ, தன்னைப் போலவே ஒத்த மனமாகப் புவனேந்திரனும் நினைத்திருப்பதாகத் தோன்றி, அதற்கோர் அழுகை வந்தது.
ஆனால், அதுவே இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தது.
அடுத்த வேலை தேடப் போவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே செல்லத் தொடங்கினாள்.
ஆனால், முழு மனதோடு, நளினி வேலை தேடினாள் என்று சொல்ல முடியாது.
ஆனால், முதல் லாபமாக, அவளது கண்ணீர் நின்றது. வெளியே கண்ட கண்ட அன்னியர்கள் பார்க்க அழ முடியாது அல்லவா? அந்த அளவுக்குச் செல்ல முடியாமல், குறைந்த பட்சமாக, அவளது உடல் உறுப்புகளுக்கேனும் ரோஷம் இருந்தது.
அத்தோடு, அவளது மூளையும் பிடிவாதமாக மற்ற விஷயங்களில் - இந்த உடையில் கழுத்து அமைப்பு நன்றாக இருக்கிறது. இது வண்ணக் கலவை சரியில்லை. இந்த உடல் அமைப்புக்கு இது போலப் பெரிய கட்டங்கள் உள்ள சேலை கட்டவே கூடாது. நீளவாக்கில் கோடுகள் வரும்படி வேலைப்பாடாவது செய்ய வேண்டும்... என்பன போன்ற அவளது வேலை தொடர்பான விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தக் கண் கரிப்பு மெல்ல மெல்ல மறைந்து போகும்.
எனவே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, கண்ணீரும், வேதனையுமாக மற்ற மூவரையும் வருத்திக் கொண்டிருந்தது மாறியது.
வீட்டிலிருந்து கிளம்பியவள், வேலை தேடினாளா, அல்லது சும்மா சுற்றியலைந்தாளா என்று சொல்வதற்கில்லைதான். அலைச்சல் ரொம்பவும் சலிப்பூட்டினால், ஏதாவது பூங்காவிற்குப் போய், அங்கே சும்மா உட்கார்ந்திருப்பதும் உண்டு. சும்மா இருப்பது புவனேந்திரன் நினைவை அதிகமாகக் கொணர்ந்தால், மீண்டும் கிளம்பி ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குப் போய் விடுவாள்.
இப்படி ஒரு குறிப்பின்றி அலைகையில் திடுமென ஒரு நாள், யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவது போல, நளினிக்குத் தோன்றியது.
என்ன இது என்று அவள் மனம் சற்றே படபடத்தது.
அவளை யார் பின் தொடரக் கூடும்?
அதுவும், புவனேந்திரன் அவளைப் பிரிந்து சென்று விட்ட இப்போது!
சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்வதற்காக, அவ்வப்போது சடக்கென்று திரும்பிப் பார்த்தால், அப்படி யாரும் அவளைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.
நாலாவது தடவையாகத் திரும்பிப் பார்த்தவளுக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.
புவனேந்திரனின் கடத்தல் பிரமை, இப்போது அவளையும் பிடித்துக் கொண்டு விட்டதா?
இந்தப் பைத்தியம் முன்பே அவளைப் பிடித்துத் தொலைத்திருந்தால், பேசாமல் அவனது பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தலையாட்டி ஏற்று நிம்மதியாக இருந்திருக்கலாம் என்று தோன்றவும், அவளுக்குத் தொண்டை அடைத்தது.
நடைபாதையில் வைத்து, இது என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணப் போக்கு, என்று தன்னைத் தானே கடிந்தபடி, நளினி மேலே நடந்தாள்.
மறுநாள் வீட்டை விட்டு வெளியே செல்லுமுன், வாயில்புற ஜன்னல் வழியே, நளினி சுற்றுப் புறத்தை ஆராய்ந்தாள்.
முந்திய நாள் கலக்கத்தை வலியுறுத்தும்படியாக எதுவும் அவள் கண்ணில் படவில்லை... அல்லது தெரு முனைக் கடையின் அருகில் நின்று பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஒருவன், பத்திரிகையைத் தாழ்த்தி, அவளது வீட்டை உற்றுப் பார்த்தானோ?
வீட்டைத்தான் பார்த்தானோ, அல்லது தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவன், அலுத்த கண்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகப் பத்திரிகையை விட்டுப் பார்வையை விலக்கியதைப் போய், அவள் தப்பாக எண்ணுகிறாளோ?
அவனை மணக்கப் போகிறவள் என்கிற நிலை மாறினாலே, நளினிக்கு ஆபத்து வராது என்பது, புவனேந்திரனின் கருத்து. அதன்படி, சக்திவேலும், கண்ணனும் அகற்றப்பட்டுப் பத்து நாட்களுக்கு மேலாகிறது.
எனவே, இது, அவளுக்கான காவல் இல்லை என்பது நிச்சயம்.
பின்னே?
மகள் முகத்தில் யோசனையைக் கண்டு, "என்னடாம்மா... கிளம்பவில்லை?" என்று சகுந்தலா வினவினாள்.
தாயிடம் எதையும் சொல்லிக் கலங்க வைக்க மனமின்றி, "ஒன்றும் இல்லையம்மா. ஒரு சேலைக்கு அலங்காரப் பூவேலை செய்யலாம் என்று நினைத்தேன். அதற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்," என்று பெற்றவளுக்கு ஒரு காரணம் கண்டு பிடித்துச் சொல்லியபடியே, சும்மா பார்ப்பது போன்ற பாவனையோடு கீழே பார்த்தாள்.
பத்திரிகை படித்தவன் அந்தப் பக்கம் எங்குமே கண்ணில் படவில்லை.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்கிற மாதிரி, அவளுக்கும் தோன்றத் தொடங்கி விட்டது போலும்.
சகவாச தோஷம். புவனனின் சகவாசம்.
முன் தினம் யாரோ பின் தொடர்வது போல, இன்று யாரோ வீட்டைக் கவனிப்பது போல.
இது போன்ற பிரமைகள் தான் புவனேந்திரனுக்கும் இருந்திருக்குமோ? அப்படி ஒரு துக்கமும் நேர்ந்து விட்டதால், இந்தப் பாதுகாப்பு விஷயத்தில், அவன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் போலும்!
மீண்டும் மனம் புவனேந்திரனிடம் சென்று விட்டது மட்டுமின்றி, அவனை நியாயப்படுத்தவும் தொடங்கி விட்டதையும் நளினி உணர்ந்தாள்.
ஆனால், புவனேந்திரனுக்கு இருப்பது, வெறும் பிடிவாதம் மட்டுமல்ல-வெறி, மதவெறி போலத் தீவிரமான ஒன்று.
அந்த வெறிக்குப் பணிந்து, அவன் ஒருவன் கைதி வாழ்க்கை வாழ்வது போதும்.
அவளும் அதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.
அந்தப் பயத்தில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவும் கூடாது.
இந்த எண்ணத்தில்தான் உள்ளத்தில் ஆர்வமே இல்லாத போதும், நளினி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றது.
ஆனால், புவனேந்திரனின் அசட்டுப் பயம், வெறி என்று அவளால் வர்ணிக்கப்பட்டது, அன்று அவளுக்கு நடந்தது.
நளினி கடத்தப்பட்டாள்.
குறுக்கிட்டுக் கொண்டே இருந்த புவனேந்திரன் நினைவைப் பிடிவாதமாக முயன்று ஒதுக்கியபடி, என்ன செய்வது என்று நளினி யோசித்தாள்.
'உன்னத'த்துக்குப் போய்த் தொடர்ந்து பணிபுரிவது முடியாத காரியம்.
தன் நெஞ்சில் தானே கத்தியால் திருகுவது போல, அது முட்டாள்தனமான காரியம்.
வீட்டிலும் வழக்கம் போல எந்த விதமான அலங்காரப் பூ வேலைகளைச் செய்யவும் முடியவில்லை.
அதற்குக் கற்பனா சக்தி வேலை செய்ய வேண்டும். கண்ணும் மனமும் ஒன்றி வேலை செய்ய வேண்டும். எப்போதும் கண்ணுக்குள் புவனேந்திரனை வைத்துக் கொண்டு செய்தால், ஊசி குத்திக் குத்தியே கை புண்ணாகி விடும்.
வேறு என்ன செய்வது என்று அவள் யோசித்த போது, 'உன்னத'த்திலிருந்து அவளது சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து ஒரு காசோலையும், வேலையைத் திறம்படச் செய்ததற்காக ஒரு நன்னடத்தைச் சான்றிதழும் வந்து சேர்ந்தன.
அங்கே தொடர்ந்து அவள் வேலை செய்வது முடியாது என்று, அவளைப் போலவே, அவனும் எண்ணியிருக்கிறான்.
யாராக இருந்தாலும், அப்படித்தான் யோசித்திருப்பார்கள் என்றாலும், நளினிக்கு என்னவோ, தன்னைப் போலவே ஒத்த மனமாகப் புவனேந்திரனும் நினைத்திருப்பதாகத் தோன்றி, அதற்கோர் அழுகை வந்தது.
ஆனால், அதுவே இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தது.
அடுத்த வேலை தேடப் போவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே செல்லத் தொடங்கினாள்.
ஆனால், முழு மனதோடு, நளினி வேலை தேடினாள் என்று சொல்ல முடியாது.
ஆனால், முதல் லாபமாக, அவளது கண்ணீர் நின்றது. வெளியே கண்ட கண்ட அன்னியர்கள் பார்க்க அழ முடியாது அல்லவா? அந்த அளவுக்குச் செல்ல முடியாமல், குறைந்த பட்சமாக, அவளது உடல் உறுப்புகளுக்கேனும் ரோஷம் இருந்தது.
அத்தோடு, அவளது மூளையும் பிடிவாதமாக மற்ற விஷயங்களில் - இந்த உடையில் கழுத்து அமைப்பு நன்றாக இருக்கிறது. இது வண்ணக் கலவை சரியில்லை. இந்த உடல் அமைப்புக்கு இது போலப் பெரிய கட்டங்கள் உள்ள சேலை கட்டவே கூடாது. நீளவாக்கில் கோடுகள் வரும்படி வேலைப்பாடாவது செய்ய வேண்டும்... என்பன போன்ற அவளது வேலை தொடர்பான விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தக் கண் கரிப்பு மெல்ல மெல்ல மறைந்து போகும்.
எனவே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, கண்ணீரும், வேதனையுமாக மற்ற மூவரையும் வருத்திக் கொண்டிருந்தது மாறியது.
வீட்டிலிருந்து கிளம்பியவள், வேலை தேடினாளா, அல்லது சும்மா சுற்றியலைந்தாளா என்று சொல்வதற்கில்லைதான். அலைச்சல் ரொம்பவும் சலிப்பூட்டினால், ஏதாவது பூங்காவிற்குப் போய், அங்கே சும்மா உட்கார்ந்திருப்பதும் உண்டு. சும்மா இருப்பது புவனேந்திரன் நினைவை அதிகமாகக் கொணர்ந்தால், மீண்டும் கிளம்பி ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குப் போய் விடுவாள்.
இப்படி ஒரு குறிப்பின்றி அலைகையில் திடுமென ஒரு நாள், யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவது போல, நளினிக்குத் தோன்றியது.
என்ன இது என்று அவள் மனம் சற்றே படபடத்தது.
அவளை யார் பின் தொடரக் கூடும்?
அதுவும், புவனேந்திரன் அவளைப் பிரிந்து சென்று விட்ட இப்போது!
சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்வதற்காக, அவ்வப்போது சடக்கென்று திரும்பிப் பார்த்தால், அப்படி யாரும் அவளைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.
நாலாவது தடவையாகத் திரும்பிப் பார்த்தவளுக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.
புவனேந்திரனின் கடத்தல் பிரமை, இப்போது அவளையும் பிடித்துக் கொண்டு விட்டதா?
இந்தப் பைத்தியம் முன்பே அவளைப் பிடித்துத் தொலைத்திருந்தால், பேசாமல் அவனது பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தலையாட்டி ஏற்று நிம்மதியாக இருந்திருக்கலாம் என்று தோன்றவும், அவளுக்குத் தொண்டை அடைத்தது.
நடைபாதையில் வைத்து, இது என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணப் போக்கு, என்று தன்னைத் தானே கடிந்தபடி, நளினி மேலே நடந்தாள்.
மறுநாள் வீட்டை விட்டு வெளியே செல்லுமுன், வாயில்புற ஜன்னல் வழியே, நளினி சுற்றுப் புறத்தை ஆராய்ந்தாள்.
முந்திய நாள் கலக்கத்தை வலியுறுத்தும்படியாக எதுவும் அவள் கண்ணில் படவில்லை... அல்லது தெரு முனைக் கடையின் அருகில் நின்று பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஒருவன், பத்திரிகையைத் தாழ்த்தி, அவளது வீட்டை உற்றுப் பார்த்தானோ?
வீட்டைத்தான் பார்த்தானோ, அல்லது தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவன், அலுத்த கண்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகப் பத்திரிகையை விட்டுப் பார்வையை விலக்கியதைப் போய், அவள் தப்பாக எண்ணுகிறாளோ?
அவனை மணக்கப் போகிறவள் என்கிற நிலை மாறினாலே, நளினிக்கு ஆபத்து வராது என்பது, புவனேந்திரனின் கருத்து. அதன்படி, சக்திவேலும், கண்ணனும் அகற்றப்பட்டுப் பத்து நாட்களுக்கு மேலாகிறது.
எனவே, இது, அவளுக்கான காவல் இல்லை என்பது நிச்சயம்.
பின்னே?
மகள் முகத்தில் யோசனையைக் கண்டு, "என்னடாம்மா... கிளம்பவில்லை?" என்று சகுந்தலா வினவினாள்.
தாயிடம் எதையும் சொல்லிக் கலங்க வைக்க மனமின்றி, "ஒன்றும் இல்லையம்மா. ஒரு சேலைக்கு அலங்காரப் பூவேலை செய்யலாம் என்று நினைத்தேன். அதற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்," என்று பெற்றவளுக்கு ஒரு காரணம் கண்டு பிடித்துச் சொல்லியபடியே, சும்மா பார்ப்பது போன்ற பாவனையோடு கீழே பார்த்தாள்.
பத்திரிகை படித்தவன் அந்தப் பக்கம் எங்குமே கண்ணில் படவில்லை.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்கிற மாதிரி, அவளுக்கும் தோன்றத் தொடங்கி விட்டது போலும்.
சகவாச தோஷம். புவனனின் சகவாசம்.
முன் தினம் யாரோ பின் தொடர்வது போல, இன்று யாரோ வீட்டைக் கவனிப்பது போல.
இது போன்ற பிரமைகள் தான் புவனேந்திரனுக்கும் இருந்திருக்குமோ? அப்படி ஒரு துக்கமும் நேர்ந்து விட்டதால், இந்தப் பாதுகாப்பு விஷயத்தில், அவன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் போலும்!
மீண்டும் மனம் புவனேந்திரனிடம் சென்று விட்டது மட்டுமின்றி, அவனை நியாயப்படுத்தவும் தொடங்கி விட்டதையும் நளினி உணர்ந்தாள்.
ஆனால், புவனேந்திரனுக்கு இருப்பது, வெறும் பிடிவாதம் மட்டுமல்ல-வெறி, மதவெறி போலத் தீவிரமான ஒன்று.
அந்த வெறிக்குப் பணிந்து, அவன் ஒருவன் கைதி வாழ்க்கை வாழ்வது போதும்.
அவளும் அதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.
அந்தப் பயத்தில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவும் கூடாது.
இந்த எண்ணத்தில்தான் உள்ளத்தில் ஆர்வமே இல்லாத போதும், நளினி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றது.
ஆனால், புவனேந்திரனின் அசட்டுப் பயம், வெறி என்று அவளால் வர்ணிக்கப்பட்டது, அன்று அவளுக்கு நடந்தது.
நளினி கடத்தப்பட்டாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
கடந்த நாலைந்து நாட்களைப் போலவே, அன்றும் நளினி சில பெரிய கடைகளுக்குள் சென்று சுற்றியலைந்தாள்.
ஒரு கடையில், ஏதோ பேருக்கு ஒரு வேலை கேட்டாள்.
நளினியின் ஃபைலைப் பார்த்து ஆவலோடு, அவளது திறமை, தகுதி முதலியவற்றை விசாரித்த கடை நிர்வாகி, அவளது ஈடுபாடற்ற அரைகுறையான பதில்களில் அதிருப்தியுற்றுக் கையை விரித்து விட்டார்.
நளினியும் அதற்காகப் பெரிதாக வருந்தி விடவில்லை.
'உன்னத'த்தில் பணி புரிந்த பிறகு, அதே போன்ற இன்னோர் இடத்தில் வேலை செய்ய அவளுக்கும் மனமில்லை தான்.
ஏன், வேறு யாரிடமும், எந்த விதமான வேலை செய்யவுமே, அப்போதைக்கு அவளுக்குப் பிடிக்கவே இல்லைதான்.
இந்த வேலை தேடும் படலமே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, மற்றவர்களை வருத்துவதைத் தவிர்ப்பதற்கான சாக்காகத்தான் இருந்தது.
இந்த வருமானம் வந்துதான் வாழ வேண்டும் என்கிற நிலை இல்லாத காரணத்தால், வேலை கிடைக்காததை யாரும் பெரிதாகக் கருதவும் இல்லை.
நளினியுடைய பெற்றோருக்குமே மகள், வெளியே சென்று, நாலு பேர் முகத்தைப் பார்த்துப் புவனேந்திரனின் இழப்பை மறக்க மாட்டாளா என்பதுதான் முக்கியமாக இருந்தது.
இந்தச் சில நாட்களின் பழக்கம் போலவே, ஓரிரு பெருங்கடைகளில் ஏறி இறங்கியதும், தன் கால் போன போக்கில் நளினி நடக்கலானாள்.
மனமும் வழக்கம் போலவே, புவனேந்திரனிடம் ஓடியது.
காவல், காவல் என்று வீதிகளில் சுதந்திரமாக நடக்கக் கூட முடியவில்லையே என்று அவன் மீது எரிச்சல் பட்டாளே! இப்போது சுதந்திரமாக நடப்பது சுகமாகவா இருக்கிறது? இல்லவே, இல்லையே...
நேரே செல்ல முடியாமல், எதுவோ வழியில் தடுப்பதை உணர்ந்து, நின்று நிமிர்ந்து பார்த்தாள் நளினி.
அறிமுகமற்ற ஒரு மனிதன், கையில் ஒரு துண்டுக் காகிதத்தை வைத்துக் கொண்டு, "இந்த முகவரி தெரியுமா, மேடம்?" என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
நடைபாதைகளில் கூட்டமில்லாத நேரம். ஆனாலும், அங்கொருவர், இங்கொருவர் போய்க் கொண்டு தான் இருந்தார்கள்.
அருகே நடைபாதை ஓரமாகக் கூடவே, மெல்ல நகர்ந்து வந்த காரும், அந்த அன்னியன் குறிப்பாக அவளை நிறுத்திக் கேட்ட விதமும், மனதை உறுத்த, சட்டென விழிப்புற்று, அவள் வேகமாக விலகிச் செல்ல முயன்றாள்.
ஆனால், அதே வேகத்தில் இலகுவாக அவளோடு கூட நடந்தபடி, "கவனி பெண்ணே, அந்தப் பக்கம் பார்த்தாயானால், துப்பாக்கியில் கை வைத்தபடி, எங்கள் ஆள் நிற்பது தெரியும். மறுப்பின்றி எங்களோடு இந்தக் காரில் ஏறி வந்து விட்டாயானால், உனக்குப் பிரச்சனை இராது! இல்லாவிட்டால், கை, கால், உயிர் என்று என்னவெல்லாம் போகும் என்று சொல்ல முடியாது," என்று புன்னகையோடு பேசி மிரட்டினான்.
ஆனால், அந்த மிரட்டலுக்குப் பயந்து நளினி அவன் காட்டிய காரில் ஏறி விடவில்லை. ஏனெனில், அப்படி அந்தக் காரில் ஏறிச் சென்ற பிறகு, அவள் சொன்ன எதுவும் அவளை விட்டுப் போகாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லையே!
ஆனால் அவன் காட்டிய பக்கமாக அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, உடனே தவறுணர்ந்து, அவள் அவசரமாகத் திரும்புமுன் கிடைத்த சில கணங்கள், அந்தக் கடத்தல்காரனுக்குப் போதுமானதாக இருந்தன.
மென்னியோரமாக விழுந்த அளவான சிறு தட்டில், நளினி உணர்வு மயங்கிச் சரிய, சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த ஓரிருவர் என்னவென்று எட்டிப் பார்க்கும் முன்னதாகக் கார் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளி ஏற்றிக் கொண்டு, கார் பறந்து விட்டது.
போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருந்த சமயம் என்பதால், கார் வேகமெடுப்பதற்கு வசதியாகவும் இருந்தது.
சிறு கூச்சலிடக்கூட நளினிக்கு அவகாசம் இல்லாது போக, இங்கே ஓர் அநியாயம் நடக்கிறது என்று யாருக்கும் தெரியவும் வழியே இல்லாது போயிற்று.
எனவே, புவனேந்திரனிடம் அவள் பெரிதாகச் சொன்ன பொதுமக்களின் உதவி அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.
ஆகச் சில மணி நேரம் கழித்து, நளினிக்கு முழுமையாகச் சுய உணர்வு வந்த போது, அவள் கை, கால்கள் கட்டப்பட்டு, ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தாள்.
வலிக்கும் அளவுக்கு இறுக்கமாக இல்லை என்றாலும், தானாக அவிழ்த்துக் கொள்ள முடியாத கட்டுகள் என்று, உடனேயே புரிந்தது.
அவளுக்கு அறிமுகமே இல்லாத சில மனிதர்கள், அந்த அறையில் அவரவர் வசதிக்கு ஏற்ப நின்று கொண்டோ, உட்கார்ந்தோ இருந்தார்கள்!
நளினிக்கு விழுந்த அடி வலுவானது அல்ல.
மன வலிமையும், உடல் ஆரோக்கியமும் உள்ளவள் என்பதால், நளினிக்கும் விரைவிலேயே மயக்கம் தெளியத் தொடங்கிவிட்டது.
சில மணி நேரத்தில், தானாகவே தெளிந்து விடக் கூடிய அளவிலேயே, அந்தக் கடத்தல்காரன் அவனது வலுவைப் பயன்படுத்தியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.
அதனாலேயே, அவன் இந்தப் போர்க்கலையில் எவ்வளவு வல்லவன் என்பதும் புரிபட்டது. புரிந்த அளவில், அவள் மனம் சோர்ந்தது.
இதைத்தானே புவனனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னான். அப்போது அதை அசட்டுத்தனம் என்று எண்ணியதை நினைத்து, இப்போது மனம் வேதனைப் பட்டது.
ஆனால், அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் அசட்டுத்தனம் தான். இப்போது என்ன செய்வது என்று யோசிப்பதில் மூளையைப் பயன்படுத்தினால், கொஞ்சமேனும் பலன் இருக்கக் கூடும் என்று யோசிக்கத் தொடங்கினாள் நளினி.
எதிரிக்கு முழுப் பலத்தைக் காட்டுவது முட்டாள்தனம். அதிலும், மயங்கித் தெளிந்து, இப்போதிருக்கும் பலவீனமான நிலையில், உறுப்புகள் வசப்படும் வரையேனும், வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது.
எனவே, அவள் உடனே கண்ணைத் திறந்து பார்த்து விடவில்லை. கண் மூடிய அதே நிலையில் இருந்தவாறே, காதுகளைப் பயன்படுத்திச் சுற்றுப் புறத்தை ஆராயத் தொடங்கினாள்.
இந்தக் கடத்தல் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது பற்றித்தான் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நிச்சயமாக முழுப் பலன் கிடைக்கும் என்பது பெரும்பான்மை அபிப்பிராயமாக இருந்தது.
ஆனாலும், "... இவள் வெறும் காதலிதானே? எத்தனையோ பேரில் ஒருத்தியாகக் கூட இருக்கலாம். இவளுக்காக, அவன், நாம் கேட்கிற பிணைத் தொகையைக் கொடுப்பானோ, என்னவோ. எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது," என்று ஒரு குரல் சந்தேகமும் பட்டது.
காதலிதானே என்று, சற்று இளப்பமாகப் பேசியது, தன்னையா? அதுவும், எத்தனையோ பேரில் ஒருத்தியாமே.
புவனேந்திரன் அப்படிப்பட்டவன் அல்ல என்று கத்த வேண்டும் போல, அவளுக்கு ஆத்திரம் வந்தது.
ஆனால், அவளது வேஷம் கலைந்து போகுமே, ஏமாற்றினாயா என்று ஆத்திரத்தில் என்னவேனும் சித்திரவதை செய்தால்?
சிரமப்பட்டு, எந்தவித மாற்றமும் இல்லாமல் முகத்தை வைத்துக் கொண்டு நளினி இருக்க, நல்ல வேளையாக, அவர்களில் ஒருவனே, முன்னவனை மறுத்துப் பேசினான்.
"சே, புவனேந்திரன் அப்படிப்பட்ட ஆள் இல்லையடா. ஐந்து ஆண்டுகளாகப் பெண் வாசனையே இல்லாமல் இருந்திருக்கிறான். அதனால் தான், இவளை வைத்து அவனைப் பிடிக்கும் ஐடியா வந்ததே. சரியான குரங்குப் பயல். பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை என்று இன்னொருத்தியை மணந்து கொண்டு, சும்மா இருப்பதுதானே. அதை விட்டு, நொட்டு, நொசுக்கு என்று கண்டதையும் நோண்டிக் கொண்டு. அந்த முட்டாளுக்கு உயிரை விடுவதற்கு வேறு வழியா கிடைக்கவில்லை?"
உயிரை விடுவதா? யாருடைய உயிர்? புவனேந்திரனின் உயிரா? கடவுளே!
அதற்கு மேல் சும்மா இருக்க முடியாமல், நளினியின் முகம் மாறிவிட்டது.
அவளைக் கவனித்திருந்த யாரோ, "ஷ்... மயக்கம் தெளிகிறது," எனவும், இனி நடிப்பதில் பலனில்லை என்று உணர்ந்து, அப்போதுதான் மயக்கம் தெளிகிறவள் போன்ற பாவனையுடன், முக்கலும் முனகலுமாக நளினி மெல்லக் கண்ணைத் திறந்தாள்.
போடுகிற வேஷத்தை ஒழுங்காகப் போட வேண்டும், அல்லவா?
கண்ணைத் திறந்தவள், கண் முன்னே காண்பதை நம்ப முடியாதவள் போலக், கண்ணைக் கசக்கிக் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தாற்போல, மேலும் முகத்தில் திகைப்பைக் காட்டினாள்.
திகைப்பும் பயமுமாக, "ஐயோ! நீங்களெல்லாம் யார்? என்னை... என்னை ஏன் இங்கே... கடவுளே! என்னை ஒன்றும் பண்ணி விடாதீர்கள். ப்ளீஸ்!" என்று பதறினாள்.
தன்னை என்ன செய்யப் போகிறார்களோ என்பதோடு, புவனேந்திரனின் உயிரைப் பற்றிய அச்சமும் உள்ளே நிஜமாகவே மிக அதிகமாக இருந்ததால், அவளது கலக்கம் பெருமளவு உண்மையாகவே இருந்தது. பார்த்தவர்களுக்கும் அப்படியே தோன்றிற்று.
ஒரு கடையில், ஏதோ பேருக்கு ஒரு வேலை கேட்டாள்.
நளினியின் ஃபைலைப் பார்த்து ஆவலோடு, அவளது திறமை, தகுதி முதலியவற்றை விசாரித்த கடை நிர்வாகி, அவளது ஈடுபாடற்ற அரைகுறையான பதில்களில் அதிருப்தியுற்றுக் கையை விரித்து விட்டார்.
நளினியும் அதற்காகப் பெரிதாக வருந்தி விடவில்லை.
'உன்னத'த்தில் பணி புரிந்த பிறகு, அதே போன்ற இன்னோர் இடத்தில் வேலை செய்ய அவளுக்கும் மனமில்லை தான்.
ஏன், வேறு யாரிடமும், எந்த விதமான வேலை செய்யவுமே, அப்போதைக்கு அவளுக்குப் பிடிக்கவே இல்லைதான்.
இந்த வேலை தேடும் படலமே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, மற்றவர்களை வருத்துவதைத் தவிர்ப்பதற்கான சாக்காகத்தான் இருந்தது.
இந்த வருமானம் வந்துதான் வாழ வேண்டும் என்கிற நிலை இல்லாத காரணத்தால், வேலை கிடைக்காததை யாரும் பெரிதாகக் கருதவும் இல்லை.
நளினியுடைய பெற்றோருக்குமே மகள், வெளியே சென்று, நாலு பேர் முகத்தைப் பார்த்துப் புவனேந்திரனின் இழப்பை மறக்க மாட்டாளா என்பதுதான் முக்கியமாக இருந்தது.
இந்தச் சில நாட்களின் பழக்கம் போலவே, ஓரிரு பெருங்கடைகளில் ஏறி இறங்கியதும், தன் கால் போன போக்கில் நளினி நடக்கலானாள்.
மனமும் வழக்கம் போலவே, புவனேந்திரனிடம் ஓடியது.
காவல், காவல் என்று வீதிகளில் சுதந்திரமாக நடக்கக் கூட முடியவில்லையே என்று அவன் மீது எரிச்சல் பட்டாளே! இப்போது சுதந்திரமாக நடப்பது சுகமாகவா இருக்கிறது? இல்லவே, இல்லையே...
நேரே செல்ல முடியாமல், எதுவோ வழியில் தடுப்பதை உணர்ந்து, நின்று நிமிர்ந்து பார்த்தாள் நளினி.
அறிமுகமற்ற ஒரு மனிதன், கையில் ஒரு துண்டுக் காகிதத்தை வைத்துக் கொண்டு, "இந்த முகவரி தெரியுமா, மேடம்?" என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
நடைபாதைகளில் கூட்டமில்லாத நேரம். ஆனாலும், அங்கொருவர், இங்கொருவர் போய்க் கொண்டு தான் இருந்தார்கள்.
அருகே நடைபாதை ஓரமாகக் கூடவே, மெல்ல நகர்ந்து வந்த காரும், அந்த அன்னியன் குறிப்பாக அவளை நிறுத்திக் கேட்ட விதமும், மனதை உறுத்த, சட்டென விழிப்புற்று, அவள் வேகமாக விலகிச் செல்ல முயன்றாள்.
ஆனால், அதே வேகத்தில் இலகுவாக அவளோடு கூட நடந்தபடி, "கவனி பெண்ணே, அந்தப் பக்கம் பார்த்தாயானால், துப்பாக்கியில் கை வைத்தபடி, எங்கள் ஆள் நிற்பது தெரியும். மறுப்பின்றி எங்களோடு இந்தக் காரில் ஏறி வந்து விட்டாயானால், உனக்குப் பிரச்சனை இராது! இல்லாவிட்டால், கை, கால், உயிர் என்று என்னவெல்லாம் போகும் என்று சொல்ல முடியாது," என்று புன்னகையோடு பேசி மிரட்டினான்.
ஆனால், அந்த மிரட்டலுக்குப் பயந்து நளினி அவன் காட்டிய காரில் ஏறி விடவில்லை. ஏனெனில், அப்படி அந்தக் காரில் ஏறிச் சென்ற பிறகு, அவள் சொன்ன எதுவும் அவளை விட்டுப் போகாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லையே!
ஆனால் அவன் காட்டிய பக்கமாக அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, உடனே தவறுணர்ந்து, அவள் அவசரமாகத் திரும்புமுன் கிடைத்த சில கணங்கள், அந்தக் கடத்தல்காரனுக்குப் போதுமானதாக இருந்தன.
மென்னியோரமாக விழுந்த அளவான சிறு தட்டில், நளினி உணர்வு மயங்கிச் சரிய, சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த ஓரிருவர் என்னவென்று எட்டிப் பார்க்கும் முன்னதாகக் கார் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளி ஏற்றிக் கொண்டு, கார் பறந்து விட்டது.
போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருந்த சமயம் என்பதால், கார் வேகமெடுப்பதற்கு வசதியாகவும் இருந்தது.
சிறு கூச்சலிடக்கூட நளினிக்கு அவகாசம் இல்லாது போக, இங்கே ஓர் அநியாயம் நடக்கிறது என்று யாருக்கும் தெரியவும் வழியே இல்லாது போயிற்று.
எனவே, புவனேந்திரனிடம் அவள் பெரிதாகச் சொன்ன பொதுமக்களின் உதவி அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.
ஆகச் சில மணி நேரம் கழித்து, நளினிக்கு முழுமையாகச் சுய உணர்வு வந்த போது, அவள் கை, கால்கள் கட்டப்பட்டு, ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தாள்.
வலிக்கும் அளவுக்கு இறுக்கமாக இல்லை என்றாலும், தானாக அவிழ்த்துக் கொள்ள முடியாத கட்டுகள் என்று, உடனேயே புரிந்தது.
அவளுக்கு அறிமுகமே இல்லாத சில மனிதர்கள், அந்த அறையில் அவரவர் வசதிக்கு ஏற்ப நின்று கொண்டோ, உட்கார்ந்தோ இருந்தார்கள்!
நளினிக்கு விழுந்த அடி வலுவானது அல்ல.
மன வலிமையும், உடல் ஆரோக்கியமும் உள்ளவள் என்பதால், நளினிக்கும் விரைவிலேயே மயக்கம் தெளியத் தொடங்கிவிட்டது.
சில மணி நேரத்தில், தானாகவே தெளிந்து விடக் கூடிய அளவிலேயே, அந்தக் கடத்தல்காரன் அவனது வலுவைப் பயன்படுத்தியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.
அதனாலேயே, அவன் இந்தப் போர்க்கலையில் எவ்வளவு வல்லவன் என்பதும் புரிபட்டது. புரிந்த அளவில், அவள் மனம் சோர்ந்தது.
இதைத்தானே புவனனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னான். அப்போது அதை அசட்டுத்தனம் என்று எண்ணியதை நினைத்து, இப்போது மனம் வேதனைப் பட்டது.
ஆனால், அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் அசட்டுத்தனம் தான். இப்போது என்ன செய்வது என்று யோசிப்பதில் மூளையைப் பயன்படுத்தினால், கொஞ்சமேனும் பலன் இருக்கக் கூடும் என்று யோசிக்கத் தொடங்கினாள் நளினி.
எதிரிக்கு முழுப் பலத்தைக் காட்டுவது முட்டாள்தனம். அதிலும், மயங்கித் தெளிந்து, இப்போதிருக்கும் பலவீனமான நிலையில், உறுப்புகள் வசப்படும் வரையேனும், வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது.
எனவே, அவள் உடனே கண்ணைத் திறந்து பார்த்து விடவில்லை. கண் மூடிய அதே நிலையில் இருந்தவாறே, காதுகளைப் பயன்படுத்திச் சுற்றுப் புறத்தை ஆராயத் தொடங்கினாள்.
இந்தக் கடத்தல் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது பற்றித்தான் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நிச்சயமாக முழுப் பலன் கிடைக்கும் என்பது பெரும்பான்மை அபிப்பிராயமாக இருந்தது.
ஆனாலும், "... இவள் வெறும் காதலிதானே? எத்தனையோ பேரில் ஒருத்தியாகக் கூட இருக்கலாம். இவளுக்காக, அவன், நாம் கேட்கிற பிணைத் தொகையைக் கொடுப்பானோ, என்னவோ. எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது," என்று ஒரு குரல் சந்தேகமும் பட்டது.
காதலிதானே என்று, சற்று இளப்பமாகப் பேசியது, தன்னையா? அதுவும், எத்தனையோ பேரில் ஒருத்தியாமே.
புவனேந்திரன் அப்படிப்பட்டவன் அல்ல என்று கத்த வேண்டும் போல, அவளுக்கு ஆத்திரம் வந்தது.
ஆனால், அவளது வேஷம் கலைந்து போகுமே, ஏமாற்றினாயா என்று ஆத்திரத்தில் என்னவேனும் சித்திரவதை செய்தால்?
சிரமப்பட்டு, எந்தவித மாற்றமும் இல்லாமல் முகத்தை வைத்துக் கொண்டு நளினி இருக்க, நல்ல வேளையாக, அவர்களில் ஒருவனே, முன்னவனை மறுத்துப் பேசினான்.
"சே, புவனேந்திரன் அப்படிப்பட்ட ஆள் இல்லையடா. ஐந்து ஆண்டுகளாகப் பெண் வாசனையே இல்லாமல் இருந்திருக்கிறான். அதனால் தான், இவளை வைத்து அவனைப் பிடிக்கும் ஐடியா வந்ததே. சரியான குரங்குப் பயல். பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை என்று இன்னொருத்தியை மணந்து கொண்டு, சும்மா இருப்பதுதானே. அதை விட்டு, நொட்டு, நொசுக்கு என்று கண்டதையும் நோண்டிக் கொண்டு. அந்த முட்டாளுக்கு உயிரை விடுவதற்கு வேறு வழியா கிடைக்கவில்லை?"
உயிரை விடுவதா? யாருடைய உயிர்? புவனேந்திரனின் உயிரா? கடவுளே!
அதற்கு மேல் சும்மா இருக்க முடியாமல், நளினியின் முகம் மாறிவிட்டது.
அவளைக் கவனித்திருந்த யாரோ, "ஷ்... மயக்கம் தெளிகிறது," எனவும், இனி நடிப்பதில் பலனில்லை என்று உணர்ந்து, அப்போதுதான் மயக்கம் தெளிகிறவள் போன்ற பாவனையுடன், முக்கலும் முனகலுமாக நளினி மெல்லக் கண்ணைத் திறந்தாள்.
போடுகிற வேஷத்தை ஒழுங்காகப் போட வேண்டும், அல்லவா?
கண்ணைத் திறந்தவள், கண் முன்னே காண்பதை நம்ப முடியாதவள் போலக், கண்ணைக் கசக்கிக் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தாற்போல, மேலும் முகத்தில் திகைப்பைக் காட்டினாள்.
திகைப்பும் பயமுமாக, "ஐயோ! நீங்களெல்லாம் யார்? என்னை... என்னை ஏன் இங்கே... கடவுளே! என்னை ஒன்றும் பண்ணி விடாதீர்கள். ப்ளீஸ்!" என்று பதறினாள்.
தன்னை என்ன செய்யப் போகிறார்களோ என்பதோடு, புவனேந்திரனின் உயிரைப் பற்றிய அச்சமும் உள்ளே நிஜமாகவே மிக அதிகமாக இருந்ததால், அவளது கலக்கம் பெருமளவு உண்மையாகவே இருந்தது. பார்த்தவர்களுக்கும் அப்படியே தோன்றிற்று.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
அவர்கள் நாலு பேர் இருந்தனர். அவர்களுள் தலைவன் போலத் தோன்றியவனை மற்ற மூவரும் பார்க்க, அவன் பேசினான்.
"பாரம்மா, உனக்கும் எங்களுக்கும் இடையே ஒன்றுமே இல்லை..."
அவனது பேச்சில் குறுக்கிட்டு, "பி...பின்னே என்னை ஏன் இப்படி... இப்படிக் கடத்தி வந்திருக்கிறீர்கள்?" என்று, பாதிப் பயமும், பாதி நடிப்புமாகக் கேட்டாள் நளினி.
தன் விதியைக் காட்டிலும், புவனேந்திரனுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறதோ என்பதை அறிந்து கொள்ளும் துடிப்பு அவளுக்கு.
"பாஸ் பேசும் போது, யாரும் குறுக்கே பேசக்கூடாது," என்று அதட்டியவனின் குரலில் நளினி திகைத்து நோக்கினாள்.
அவளிடம் வழி கேட்டவனின் குரல்.
இப்போது, அவனது குறுந்தாடி காணாமல் போயிருந்தது. பதிலாகப் பெரிய மீசை முளைத்திருந்தது.
எவ்வளவு இலகுவாக வேஷம் மாறுகிறார்கள். அவளைக் கடத்தும் போது யாரேனும் பார்த்திருந்தால் கூட இப்போது அவனை அடையாளம் கண்டு, பின் தொடர்ந்து, அவளைக் கண்டு பிடிப்பது கடினம்.
அவனது கண்களும் சந்தேகத்தில் இடுங்க, "என்ன பார்க்கிறாய்?" என்று வினவினான்.
தன் மூளைத் திறனைப் பற்றி, அவர்கள் மட்டமாக நினைப்பதே நல்லது என்று நளினிக்குத் தோன்றவும், "ஓ... ஒன்றுமில்லை...உங்களில் யா...யார் பாஸ் என்று எனக்குத் தெரியவே தெரியாது. அதனால்தான்... அது, நீங்களா, அவரா? யார் பேசும் போது, நான் குறுக்கே பேசக்கூடாது?" என்று குரல் நடுங்க விசாரித்தாள்.
அவனது பார்வையில் இருந்த ஐயம் மறைய, "அவர்தான்," என்று முதலில் பேசியவனைச் சுட்டிக் காட்டிவிட்டு, ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் புது மீசைக்காரன்.
சும்மா பார்க்கவில்லை, சுற்றிலும் அவனது பார்வை கவனத்துடன் ஆராய்ந்தது.
இவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்கும் இவர்களிடம் இருந்து எபப்டித் தப்புவது?
மனம் சோர்வுறக் கவலையுடன் தலைவனைப் பார்த்தாள், நளினி.
"குறுக்கிடாமல் கவனி, பெண்ணே. நான் சொன்னது போல, உனக்கும் எங்களுக்கும் இடையே, நல்லது கெட்டது ஒன்றும் கிடையாது. இப்போதைக்கு, நீ எங்களுக்கு ஒரு கருவி. அவ்வளவுதான். ஆனால், அந்தப் புவனேந்திரன் விஷயம் வேறு. அவன் எங்களை நாயாகத் துரத்துகிறான். அதுவும் வேட்டை நாயாக. அவனால், எட்டுப் பேராக இருந்த நாங்கள் நாலு பேரை இழந்து விட்டோம். எப்பேர்ப்பட்ட நாலு உயிர்களைக் கொன்று விட்டான், தெரியுமா? அவர்கள் வீராதி வீரர்கள்."
அந்த வீராதி வீரர்களை மரியாதையோடு நினைவு கூர்பவன் போல, சில வினாடிகள் பேச்சை நிறுத்தினான் அவன்.
நளினியின் மனம் படபடப்புடன், படு வேகமாகவும் வேலை செய்தது.
புவனேந்திரனின் கடத்தல் பயமும், காவலும், இவர்களுக்குப் பயந்து தானா? திடீர்த் திடீரென அவன் காணாமல் போனது இவர்களை வேட்டை நாயாக விரட்டத்தானா?
ஆனால், இவன் சொல்வது போல, நாலு பேரை அவன் கொன்றிருக்க முடியுமா?
கொலை செய்வது சாதாரண விஷயம் அல்ல. அதற்குக் குரூரமான மனம் வேண்டும். அது புவனனிடம் கிடையாது. அவன் பிடிவாதக்காரனே தவிர, ஊகூம், நிச்சயமாகக் கொலைகாரனாக இருக்கவே முடியாது.
ஊகூம்... இருக்காது. அத்தோடு, அவன் எதற்காக இவர்களைத் துரத்த வேண்டும்?
எல்லாம் பொய்.
ஆனால், அவனது பாதுகாப்புப் பைத்தியம்...?
இல்லை. அது வேறு விஷயம். அது ரதிக்காக, அவளது மரணத்துக்காக. மற்றபடி, இவர்கள் கொலை கிலை என்கிறார்களே, அதற்கும், அவனுக்கும் சம்பந்தம் இராது.
எது எப்படியானாலும், புவனன் யாரையும் கொன்றிருக்க முடியாது. அது நிச்சயமாகச் சாத்தியம் அல்ல. இவர்கள், ஏதோ தவறாக எண்ணி, அவனை விரட்டுகிறார்கள். உண்மை தெரிந்தால், இந்த விரட்டல், கடத்தல், கோபம், பயம் எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய் விடக் கூடும்.
நிச்சயமாகப் போய்விடும்.
மனம் நினைத்ததையே, அவள் வாய்விட்டும் சொன்னாள். "பாருங்கள், நீங்கள் ஏதோ தவறாக எண்ணிக் கொண்டு, புவ...புவனேந்திரனைக் கொலைகாரர் என்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவர் அல்ல. ரொம்ப நல்லவர். ஒரு காக்காய், குருவிக்குக் கூடக் கெடுதல் நினைக்காத உத்தமர், அவர்!" என்றாள் அழுத்தமான குரலில்.
அவளைக் கடத்தி வந்த நால்வரும், ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வது போல, மற்றவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த விதத்தில், ஏதோ தப்பாக - அவர்களுக்குச் சாதகமாக ஏதோ சொல்லி விட்டோம் என்று நளினி உணர்ந்தாள்.
என்ன அது?
"பரவாயில்லையே, அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாயே! ரொம்...பவே...!" என்று தலைவன் சொல்ல, மற்ற மூவரும் நகைத்தனர்.
குரூரம் கலந்த சிரிப்பு. அவள் நினைத்தது போலக் கொலைக்குத் தேவையான குரூரம்.
ஆனால், இப்போது ஏன் இப்படிச் சிரிக்க வேண்டும்?
உடனடியாகக் கொலை செய்யும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. பி...பின்னே?
அவள் சொன்னது பொய் என்கிறார்களா? அப்படியும் தோன்றவில்லையே.
ஒன்றும் புரியாமல், "ஏ...ஏன் சிரிக்கிறீர்கள்? நான் சொன்னதில் என்ன தப்பு?" என்று திகைப்புடன் கேட்டாள் அவள்.
மறுபடியும் சிரித்துவிட்டு, "நாங்கள் சிரித்தது, அவனைப் பற்றி இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் உன்னால், எங்கள் வேலை இலகுவாக முடியும் போலத் தெரிகிறதே என்ற மகிழ்ச்சியே. ஏனெனில், நீ மிகச் சரியாகச் சொன்னபடி, அவன் நேரடியாக யாரையும் கொல்லவில்லை. ஆனால், சாவது தவிர வேறு வழியில்லாதபடி செய்தான். அவ்வளவே. அப்புறம் என்ன கேட்டாய்? நீ சொன்னதில் தப்பென்ன என்றா? தப்பே கிடையாதும்மா. அந்தப் புவனேந்திரன், ஒரு காக்காய் குருவி என்ன, ஒரு சின்ன ஈ, எறும்பாகவே இருக்கட்டுமே, அவற்றுக்கு ஒரு சின்னக் கெடுதல் செய்வது பற்றியும் கூட, நினைத்தே பார்க்க மாட்டான். நீ சொன்னது சத்திய வாக்கு. ஏனென்றால், காக்காய், குருவி, ஈ, எறும்பையெல்லாம் கொன்று, மனைவி செத்ததற்குப் பழி வாங்க முடியுமா, என்ன?" என்று கேட்டு விட்டு, அவன் அவுட்டுச் சிரிப்பு சிரிக்க, மற்றவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
ரதி!
அவள் இறந்ததற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இராது என்று எண்ணினாளே. இருந்திருக்கிறது.
இவர்கள் ரதியைக் கொன்ற கொலைகாரர்கள்.
கடன் பாக்கி இருக்கிறது என்றானே, புவனன்.
அந்தக் கடன், மனைவியைக் கொன்ற இவர்களைப் பிடிப்பதுதான் போலும். இவர்களே சொன்னது போல, வேட்டை நாயாக விரட்டியிருக்க வேண்டும்.
அதை நியாயம் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்? இந்த நால்வரையும் சேர்த்துக் கொன்றால் கூடத் தப்பில்லைதான்.
ஆனால், பாதிக் கிணறு தாண்டியவன் கதையாகிப் பாதி ஜெயித்தவனின் தோல்விக்கு, அவள் அல்லவா வழி வகுத்துக் கொடுத்து விட்டாள்.
அவனது நல்லியல்புகளைப் பற்றி அவள் எடுத்துச் சொன்ன விதத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பு பற்றி, இவர்களுக்கு நன்கு தெளிவாகி விட்டது.
அதைப் பற்றித்தான், அவர்கள் நால்வரும் அவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கிறார்கள்.
புவனனின் அன்புக்குரியவளாக இருந்த ரதியைக் கடத்திச் சென்று, அவளை வைத்து மிரட்டி, அவனிடம் இருந்து பணத்தைப் பறித்தது போல, இப்போதும் அவனுடைய அன்புக்குரிய அவளைக் கடத்தி வந்து, மிரட்டி, அவனது உயிரைப் பறிக்கப் போகிறார்கள்.
ஏனெனில், பிரிந்தே போனாலும், அந்தப் பிரிவிற்கான அடிப்படைக் காரணம், அவள் மீது அவன் கொண்டிருந்த அளவில்லாத அன்புதானே?
அந்த அன்பு, அவனது உயிருக்கே உலை வைத்துவிடும் போல இருக்கிறதே!
நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு மயக்கம் வந்தது.
"பாரம்மா, உனக்கும் எங்களுக்கும் இடையே ஒன்றுமே இல்லை..."
அவனது பேச்சில் குறுக்கிட்டு, "பி...பின்னே என்னை ஏன் இப்படி... இப்படிக் கடத்தி வந்திருக்கிறீர்கள்?" என்று, பாதிப் பயமும், பாதி நடிப்புமாகக் கேட்டாள் நளினி.
தன் விதியைக் காட்டிலும், புவனேந்திரனுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறதோ என்பதை அறிந்து கொள்ளும் துடிப்பு அவளுக்கு.
"பாஸ் பேசும் போது, யாரும் குறுக்கே பேசக்கூடாது," என்று அதட்டியவனின் குரலில் நளினி திகைத்து நோக்கினாள்.
அவளிடம் வழி கேட்டவனின் குரல்.
இப்போது, அவனது குறுந்தாடி காணாமல் போயிருந்தது. பதிலாகப் பெரிய மீசை முளைத்திருந்தது.
எவ்வளவு இலகுவாக வேஷம் மாறுகிறார்கள். அவளைக் கடத்தும் போது யாரேனும் பார்த்திருந்தால் கூட இப்போது அவனை அடையாளம் கண்டு, பின் தொடர்ந்து, அவளைக் கண்டு பிடிப்பது கடினம்.
அவனது கண்களும் சந்தேகத்தில் இடுங்க, "என்ன பார்க்கிறாய்?" என்று வினவினான்.
தன் மூளைத் திறனைப் பற்றி, அவர்கள் மட்டமாக நினைப்பதே நல்லது என்று நளினிக்குத் தோன்றவும், "ஓ... ஒன்றுமில்லை...உங்களில் யா...யார் பாஸ் என்று எனக்குத் தெரியவே தெரியாது. அதனால்தான்... அது, நீங்களா, அவரா? யார் பேசும் போது, நான் குறுக்கே பேசக்கூடாது?" என்று குரல் நடுங்க விசாரித்தாள்.
அவனது பார்வையில் இருந்த ஐயம் மறைய, "அவர்தான்," என்று முதலில் பேசியவனைச் சுட்டிக் காட்டிவிட்டு, ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் புது மீசைக்காரன்.
சும்மா பார்க்கவில்லை, சுற்றிலும் அவனது பார்வை கவனத்துடன் ஆராய்ந்தது.
இவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்கும் இவர்களிடம் இருந்து எபப்டித் தப்புவது?
மனம் சோர்வுறக் கவலையுடன் தலைவனைப் பார்த்தாள், நளினி.
"குறுக்கிடாமல் கவனி, பெண்ணே. நான் சொன்னது போல, உனக்கும் எங்களுக்கும் இடையே, நல்லது கெட்டது ஒன்றும் கிடையாது. இப்போதைக்கு, நீ எங்களுக்கு ஒரு கருவி. அவ்வளவுதான். ஆனால், அந்தப் புவனேந்திரன் விஷயம் வேறு. அவன் எங்களை நாயாகத் துரத்துகிறான். அதுவும் வேட்டை நாயாக. அவனால், எட்டுப் பேராக இருந்த நாங்கள் நாலு பேரை இழந்து விட்டோம். எப்பேர்ப்பட்ட நாலு உயிர்களைக் கொன்று விட்டான், தெரியுமா? அவர்கள் வீராதி வீரர்கள்."
அந்த வீராதி வீரர்களை மரியாதையோடு நினைவு கூர்பவன் போல, சில வினாடிகள் பேச்சை நிறுத்தினான் அவன்.
நளினியின் மனம் படபடப்புடன், படு வேகமாகவும் வேலை செய்தது.
புவனேந்திரனின் கடத்தல் பயமும், காவலும், இவர்களுக்குப் பயந்து தானா? திடீர்த் திடீரென அவன் காணாமல் போனது இவர்களை வேட்டை நாயாக விரட்டத்தானா?
ஆனால், இவன் சொல்வது போல, நாலு பேரை அவன் கொன்றிருக்க முடியுமா?
கொலை செய்வது சாதாரண விஷயம் அல்ல. அதற்குக் குரூரமான மனம் வேண்டும். அது புவனனிடம் கிடையாது. அவன் பிடிவாதக்காரனே தவிர, ஊகூம், நிச்சயமாகக் கொலைகாரனாக இருக்கவே முடியாது.
ஊகூம்... இருக்காது. அத்தோடு, அவன் எதற்காக இவர்களைத் துரத்த வேண்டும்?
எல்லாம் பொய்.
ஆனால், அவனது பாதுகாப்புப் பைத்தியம்...?
இல்லை. அது வேறு விஷயம். அது ரதிக்காக, அவளது மரணத்துக்காக. மற்றபடி, இவர்கள் கொலை கிலை என்கிறார்களே, அதற்கும், அவனுக்கும் சம்பந்தம் இராது.
எது எப்படியானாலும், புவனன் யாரையும் கொன்றிருக்க முடியாது. அது நிச்சயமாகச் சாத்தியம் அல்ல. இவர்கள், ஏதோ தவறாக எண்ணி, அவனை விரட்டுகிறார்கள். உண்மை தெரிந்தால், இந்த விரட்டல், கடத்தல், கோபம், பயம் எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய் விடக் கூடும்.
நிச்சயமாகப் போய்விடும்.
மனம் நினைத்ததையே, அவள் வாய்விட்டும் சொன்னாள். "பாருங்கள், நீங்கள் ஏதோ தவறாக எண்ணிக் கொண்டு, புவ...புவனேந்திரனைக் கொலைகாரர் என்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவர் அல்ல. ரொம்ப நல்லவர். ஒரு காக்காய், குருவிக்குக் கூடக் கெடுதல் நினைக்காத உத்தமர், அவர்!" என்றாள் அழுத்தமான குரலில்.
அவளைக் கடத்தி வந்த நால்வரும், ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வது போல, மற்றவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த விதத்தில், ஏதோ தப்பாக - அவர்களுக்குச் சாதகமாக ஏதோ சொல்லி விட்டோம் என்று நளினி உணர்ந்தாள்.
என்ன அது?
"பரவாயில்லையே, அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாயே! ரொம்...பவே...!" என்று தலைவன் சொல்ல, மற்ற மூவரும் நகைத்தனர்.
குரூரம் கலந்த சிரிப்பு. அவள் நினைத்தது போலக் கொலைக்குத் தேவையான குரூரம்.
ஆனால், இப்போது ஏன் இப்படிச் சிரிக்க வேண்டும்?
உடனடியாகக் கொலை செய்யும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. பி...பின்னே?
அவள் சொன்னது பொய் என்கிறார்களா? அப்படியும் தோன்றவில்லையே.
ஒன்றும் புரியாமல், "ஏ...ஏன் சிரிக்கிறீர்கள்? நான் சொன்னதில் என்ன தப்பு?" என்று திகைப்புடன் கேட்டாள் அவள்.
மறுபடியும் சிரித்துவிட்டு, "நாங்கள் சிரித்தது, அவனைப் பற்றி இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் உன்னால், எங்கள் வேலை இலகுவாக முடியும் போலத் தெரிகிறதே என்ற மகிழ்ச்சியே. ஏனெனில், நீ மிகச் சரியாகச் சொன்னபடி, அவன் நேரடியாக யாரையும் கொல்லவில்லை. ஆனால், சாவது தவிர வேறு வழியில்லாதபடி செய்தான். அவ்வளவே. அப்புறம் என்ன கேட்டாய்? நீ சொன்னதில் தப்பென்ன என்றா? தப்பே கிடையாதும்மா. அந்தப் புவனேந்திரன், ஒரு காக்காய் குருவி என்ன, ஒரு சின்ன ஈ, எறும்பாகவே இருக்கட்டுமே, அவற்றுக்கு ஒரு சின்னக் கெடுதல் செய்வது பற்றியும் கூட, நினைத்தே பார்க்க மாட்டான். நீ சொன்னது சத்திய வாக்கு. ஏனென்றால், காக்காய், குருவி, ஈ, எறும்பையெல்லாம் கொன்று, மனைவி செத்ததற்குப் பழி வாங்க முடியுமா, என்ன?" என்று கேட்டு விட்டு, அவன் அவுட்டுச் சிரிப்பு சிரிக்க, மற்றவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
ரதி!
அவள் இறந்ததற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இராது என்று எண்ணினாளே. இருந்திருக்கிறது.
இவர்கள் ரதியைக் கொன்ற கொலைகாரர்கள்.
கடன் பாக்கி இருக்கிறது என்றானே, புவனன்.
அந்தக் கடன், மனைவியைக் கொன்ற இவர்களைப் பிடிப்பதுதான் போலும். இவர்களே சொன்னது போல, வேட்டை நாயாக விரட்டியிருக்க வேண்டும்.
அதை நியாயம் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்? இந்த நால்வரையும் சேர்த்துக் கொன்றால் கூடத் தப்பில்லைதான்.
ஆனால், பாதிக் கிணறு தாண்டியவன் கதையாகிப் பாதி ஜெயித்தவனின் தோல்விக்கு, அவள் அல்லவா வழி வகுத்துக் கொடுத்து விட்டாள்.
அவனது நல்லியல்புகளைப் பற்றி அவள் எடுத்துச் சொன்ன விதத்தில், அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பு பற்றி, இவர்களுக்கு நன்கு தெளிவாகி விட்டது.
அதைப் பற்றித்தான், அவர்கள் நால்வரும் அவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கிறார்கள்.
புவனனின் அன்புக்குரியவளாக இருந்த ரதியைக் கடத்திச் சென்று, அவளை வைத்து மிரட்டி, அவனிடம் இருந்து பணத்தைப் பறித்தது போல, இப்போதும் அவனுடைய அன்புக்குரிய அவளைக் கடத்தி வந்து, மிரட்டி, அவனது உயிரைப் பறிக்கப் போகிறார்கள்.
ஏனெனில், பிரிந்தே போனாலும், அந்தப் பிரிவிற்கான அடிப்படைக் காரணம், அவள் மீது அவன் கொண்டிருந்த அளவில்லாத அன்புதானே?
அந்த அன்பு, அவனது உயிருக்கே உலை வைத்துவிடும் போல இருக்கிறதே!
நளினிக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு மயக்கம் வந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
கெட்டிக்காரி என்று, நளினிக்குத் தன்னைப் பற்றி ஒரு அபிப்பிராயம் உண்டு.
அது, தலைக்கனத்தினால் தானாக வந்தது அல்ல.
பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது ஆசிரியப் பெருமக்களாலும், நறுவிசாக வீட்டிலும், வெளியிலும் செய்வன திருந்தச் செய்வது பார்த்து உற்றார் உறவினராலும், ஊட்டி வளர்க்கப்பட்ட அபிப்பிராயம் அது.
புவனேந்திரனிடம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியும் என்று, அவள் தன்னம்பிக்கையோடு சொன்னதன் அடிப்படையும் அதுதான்.
ஆனால், 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைத் தன் மடத்தனத்தால், அவள் மூன்றாவது முறையாக நிரூபித்திருக்கிறாள்.
ஆனால், இதற்கு முன் நடந்தது போல, அவளது வேலையோ, சந்தோஷ வாழ்வோ பறி போனால் கூடப் பரவாயில்லையே.
அவளது சொந்த உயிர் கூட இப்போது பெரிதாகத் தோன்றவில்லை!
ஆனால், தான் சிக்கி, அதன் மூலமாய்ப் புவனேந்திரனையும் அல்லவா மாட்டி வைத்து விட்டாள்!
அவளது உயிரேயாகிவிட்ட புவனனை!
அப்போதைய சிக்கலில், எப்படி, என்ன செய்து அவனைக் காப்பது என்று நளினிக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவளை நாற்காலியோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்த இடத்திலிருந்து சுற்று முற்றும் தலையும் கழுத்தும் வலிக்க வலிக்க எவ்வளவு வளைத்து திருப்பிப் பார்த்தாலும், செடி கொடிகளும் மரங்களும் தான் தெரிந்தன. ஏதோ காட்டுக்குள், ஒரு பாழடைந்த சிறு வீடு!
சுற்றிலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஆள் நடமாட்டமே தெரியவில்லை.
இப்படிப்பட்ட இடங்கள், இவர்களுக்கென்று, எப்படித்தான் கிடைக்கின்றனவோ!
இப்போது, இவர்களின் திட்டம் என்னவாக இருக்கக் கூடும் என்று, அவளால் ஊகித்திருக்க முடிந்தது.
அவளை ஏதாவது செய்துவிடுவோம் என்று மிரட்டிப் புவனேந்திரனிடம் முதலில் பணம் பிடுங்குவார்கள். அப்புறம், ஏதாவது சாக்கிட்டு, அவனை வரவழைத்து இருவரையும் கொன்று விடப் போகிறார்கள்.
அவளுக்கு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று, புவனன் வராமல் இருந்தால் நல்லது.
கடவுளிடம் அதை வேண்டிக் கொள்வது தவிர, அவளால் ஆகக் கூடியது ஒன்றும் இல்லை.
அவளைக் கடத்தி வந்தவர்கள், அவளது கை, கால் கட்டுகளைச் சரி பார்த்துவிட்டு, வெளியே நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
பேச்சென்ன? புவனனின் பணத்தை, உயிரை எவ்வளவு, எப்படி உறிஞ்சுவது என்று திட்டமிடுவார்கள்.
சற்றும் மனிதத் தன்மையே இல்லாத இந்த அரக்கர்கள், மற்றபடி மகாத்மா காந்தியைப் பற்றியும், அகிம்சையைப் பற்றியுமா பேசிவிடப் போகிறார்கள்? உழைத்துப் பிழைப்பதற்கு என்ன வந்தது? பாவிகள்!
பதினெட்டு வயதுச் சின்னப் பெண், மணமாகிப் பத்தே நாட்களில் கடத்திக் கொல்வதற்கு, இவர்கள் மனதில் என்ன குரூரம் இருக்க வேண்டும்!
இருந்திருந்து இவர்களிடம் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறாளே!
பேச்சு முடிந்து விட்டது போல, நால்வரும் உள்ளே வந்தனர்.
பசிக்கிறதா? தண்ணீர் வேண்டுமா என்று சாதாரண மனிதர்களைப் போல, அவளிடம் வினவினார்கள்.
படங்களில் வருகிற மாதிரித் தண்ணீரை வாயருகே கொண்டு வந்து, பருகப் போகிற நேரம் பறித்துக் கொடுமை செய்வார்களோ என்று தவிப்பாக இருந்த போதும், தொண்டை காய்ந்து வறண்டு போயிருந்ததால், "தண்ணீர்," என்று சுருக்கமாகக் கேட்டாள் நளினி.
"குடி!" என்று ஒரு புதிய தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திறந்து, அவள் கையில் கொடுத்தான், அவர்களுள் ஒருவன்.
சந்தேகமாகப் பார்த்தபடி, அவள் அதை அருந்தவும், "வேறு வழியின்றி உன்னைக் கடத்த நேர்ந்தாலும், நாங்கள் ஒன்றும் ஈவு, இரக்கம் இல்லாதவர்கள் அல்லம்மா. நீ, அனாவசியமாகத் தாகத்தால் தவிப்பதில், எங்களுக்கு என்ன லாபம், சொல்லு," என்றான் தலைவன், நயமான குரலில்.
அதாவது, லாபம் இருக்குமானால், உன்னைத் தாகத்தால் தவிக்க விடத் தயார் என்று, சொல்லாமல் சொல்லுகிறானா?
பதினெட்டு வயதுப் பச்சை மண்ணைக் கொன்றிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈவாவது, இரக்கமாவது!
எல்லாம் பொய்.
இந்த அரக்கர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால் தான், புவனேந்திரன், அவளது பாதுகாப்புக்காக, அவளிடமே அவ்வளவு போராடியிருக்கிறான்.
தங்கள் திருமணத்தைப் புவனேந்திரன் நிறுத்தியதன் காரணம் முன்னெப்போதையும் விட, நளினிக்கு, இப்போது மிக நன்றாகப் புரிந்தது. பாவம்! அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பினால் அல்லவோ, பிரிந்தேனும் அவளைக் காப்பாற்ற முயன்றிருக்கிறான்.
ஆனால், அவனது அந்த முயற்சி காலம் கடந்து, இப்போது புரிந்து என்ன பயன்?
ஆனால்... முடிந்தால்...
தெளிவான ஊகம் இருந்த போதும், "என்னை எதற்காகக் கடத்தி வந்திருக்கிறீர்கள்?" என்று அந்தத் தலைவனிடம் நேரடியாகக் கேட்டாள் நளினி.
அது, தலைக்கனத்தினால் தானாக வந்தது அல்ல.
பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது ஆசிரியப் பெருமக்களாலும், நறுவிசாக வீட்டிலும், வெளியிலும் செய்வன திருந்தச் செய்வது பார்த்து உற்றார் உறவினராலும், ஊட்டி வளர்க்கப்பட்ட அபிப்பிராயம் அது.
புவனேந்திரனிடம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியும் என்று, அவள் தன்னம்பிக்கையோடு சொன்னதன் அடிப்படையும் அதுதான்.
ஆனால், 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைத் தன் மடத்தனத்தால், அவள் மூன்றாவது முறையாக நிரூபித்திருக்கிறாள்.
ஆனால், இதற்கு முன் நடந்தது போல, அவளது வேலையோ, சந்தோஷ வாழ்வோ பறி போனால் கூடப் பரவாயில்லையே.
அவளது சொந்த உயிர் கூட இப்போது பெரிதாகத் தோன்றவில்லை!
ஆனால், தான் சிக்கி, அதன் மூலமாய்ப் புவனேந்திரனையும் அல்லவா மாட்டி வைத்து விட்டாள்!
அவளது உயிரேயாகிவிட்ட புவனனை!
அப்போதைய சிக்கலில், எப்படி, என்ன செய்து அவனைக் காப்பது என்று நளினிக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவளை நாற்காலியோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்த இடத்திலிருந்து சுற்று முற்றும் தலையும் கழுத்தும் வலிக்க வலிக்க எவ்வளவு வளைத்து திருப்பிப் பார்த்தாலும், செடி கொடிகளும் மரங்களும் தான் தெரிந்தன. ஏதோ காட்டுக்குள், ஒரு பாழடைந்த சிறு வீடு!
சுற்றிலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஆள் நடமாட்டமே தெரியவில்லை.
இப்படிப்பட்ட இடங்கள், இவர்களுக்கென்று, எப்படித்தான் கிடைக்கின்றனவோ!
இப்போது, இவர்களின் திட்டம் என்னவாக இருக்கக் கூடும் என்று, அவளால் ஊகித்திருக்க முடிந்தது.
அவளை ஏதாவது செய்துவிடுவோம் என்று மிரட்டிப் புவனேந்திரனிடம் முதலில் பணம் பிடுங்குவார்கள். அப்புறம், ஏதாவது சாக்கிட்டு, அவனை வரவழைத்து இருவரையும் கொன்று விடப் போகிறார்கள்.
அவளுக்கு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று, புவனன் வராமல் இருந்தால் நல்லது.
கடவுளிடம் அதை வேண்டிக் கொள்வது தவிர, அவளால் ஆகக் கூடியது ஒன்றும் இல்லை.
அவளைக் கடத்தி வந்தவர்கள், அவளது கை, கால் கட்டுகளைச் சரி பார்த்துவிட்டு, வெளியே நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
பேச்சென்ன? புவனனின் பணத்தை, உயிரை எவ்வளவு, எப்படி உறிஞ்சுவது என்று திட்டமிடுவார்கள்.
சற்றும் மனிதத் தன்மையே இல்லாத இந்த அரக்கர்கள், மற்றபடி மகாத்மா காந்தியைப் பற்றியும், அகிம்சையைப் பற்றியுமா பேசிவிடப் போகிறார்கள்? உழைத்துப் பிழைப்பதற்கு என்ன வந்தது? பாவிகள்!
பதினெட்டு வயதுச் சின்னப் பெண், மணமாகிப் பத்தே நாட்களில் கடத்திக் கொல்வதற்கு, இவர்கள் மனதில் என்ன குரூரம் இருக்க வேண்டும்!
இருந்திருந்து இவர்களிடம் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறாளே!
பேச்சு முடிந்து விட்டது போல, நால்வரும் உள்ளே வந்தனர்.
பசிக்கிறதா? தண்ணீர் வேண்டுமா என்று சாதாரண மனிதர்களைப் போல, அவளிடம் வினவினார்கள்.
படங்களில் வருகிற மாதிரித் தண்ணீரை வாயருகே கொண்டு வந்து, பருகப் போகிற நேரம் பறித்துக் கொடுமை செய்வார்களோ என்று தவிப்பாக இருந்த போதும், தொண்டை காய்ந்து வறண்டு போயிருந்ததால், "தண்ணீர்," என்று சுருக்கமாகக் கேட்டாள் நளினி.
"குடி!" என்று ஒரு புதிய தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திறந்து, அவள் கையில் கொடுத்தான், அவர்களுள் ஒருவன்.
சந்தேகமாகப் பார்த்தபடி, அவள் அதை அருந்தவும், "வேறு வழியின்றி உன்னைக் கடத்த நேர்ந்தாலும், நாங்கள் ஒன்றும் ஈவு, இரக்கம் இல்லாதவர்கள் அல்லம்மா. நீ, அனாவசியமாகத் தாகத்தால் தவிப்பதில், எங்களுக்கு என்ன லாபம், சொல்லு," என்றான் தலைவன், நயமான குரலில்.
அதாவது, லாபம் இருக்குமானால், உன்னைத் தாகத்தால் தவிக்க விடத் தயார் என்று, சொல்லாமல் சொல்லுகிறானா?
பதினெட்டு வயதுப் பச்சை மண்ணைக் கொன்றிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈவாவது, இரக்கமாவது!
எல்லாம் பொய்.
இந்த அரக்கர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால் தான், புவனேந்திரன், அவளது பாதுகாப்புக்காக, அவளிடமே அவ்வளவு போராடியிருக்கிறான்.
தங்கள் திருமணத்தைப் புவனேந்திரன் நிறுத்தியதன் காரணம் முன்னெப்போதையும் விட, நளினிக்கு, இப்போது மிக நன்றாகப் புரிந்தது. பாவம்! அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பினால் அல்லவோ, பிரிந்தேனும் அவளைக் காப்பாற்ற முயன்றிருக்கிறான்.
ஆனால், அவனது அந்த முயற்சி காலம் கடந்து, இப்போது புரிந்து என்ன பயன்?
ஆனால்... முடிந்தால்...
தெளிவான ஊகம் இருந்த போதும், "என்னை எதற்காகக் கடத்தி வந்திருக்கிறீர்கள்?" என்று அந்தத் தலைவனிடம் நேரடியாகக் கேட்டாள் நளினி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
"சொல்லுகிறேன், சொல்லுகிறேன். அதைச் சொன்னால் தானே உனக்குப் புரியும்," என்று தொடங்கினான் அந்தக் குழுவின் தலைவன்.
உயர்ந்த சில நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவினர் அவர்கள். சில கொடிய மனிதர்களைப் பிடித்து வந்து, அவர்களிடம் பணம் பிடுங்குவதும், அதை ஏழைகளின் தேவைக்குக் கொடுப்பதும்.
புவனேந்திரன் கொடிய மனிதன் அல்ல, மிக மிக நல்லவன் என்பது, நளினியின் தொண்டை வரை வந்து அடங்கியது.
ஒரு தரம் தவளையாக வாயை விட்டது போதும், அதே கருத்தை மேலும் வலியுறுத்துவது, மன்னிக்க முடியாத மடத்தனம்.
எனவே, வேறு விதமாக மடக்கினாள். "நீங்கள் எட்டே பேருக்குப் பெரிய குழு என்று பெயரா? எட்டுப் பேர் இருந்து என்ன சாதிக்க முடியும்?" என்றாள் நம்பாத குரலில்.
மற்றவர்கள் கோபமாக முறைத்த போது, குழுத் தலைவன் தலையாட்டி, "நீ சொல்வது சரிதான்," என்று ஒத்துக் கொண்டான். "நாங்கள் எட்டுப் பேருமே, ஒரு பெரிய குழுவின் சிறு பிரிவு தான். இப்படி ஒவ்வொரு பிரிவிடமும், ஒவ்வொரு வேலை ஒப்படைக்கப்படும். அந்த வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவது, அந்தந்தக் குழுவினரின் பொறுப்பு. அதற்குள், எப்படியாவது தப்பிச் சென்று, எங்கள் ஆணி வேரையே எப்படிப் பிடுங்குவது என்று திட்டம் போடாதே. அது முடிகிற காரியம் இல்லை. ஏனெனில், எங்களுக்கு அடுத்த படியில் இருப்பவர்களிடம் கூட, எங்களுக்கு நேரடித் தொடர்பு கிடையாது. ஒப்படைக்கப்பட்ட வேலையில் தவறு நேர்ந்தால், அதை வைத்துக் கொண்டு, மேலிடம் வரை போய்விடக் கூடாது அல்லவா? எனவே, தவறின் விளைவையும், நாங்களேதான் அனுபவிக்க வேண்டும். இடையூறுகளை விலக்கி, நிலைமையைச் சீர்ப்படுத்துவதும், எங்கள் பொறுப்பே. இப்படித்தான், புவனேந்திரன் மனைவியை எங்கள் வழியிலிருந்து அகற்ற நேர்ந்தது," என்றான் அவன்.
இடையூறுகளை விலக்குவதா? வழியிலிருந்து அகற்றுவதா? தன்னைப் போல ஒரு மனித உயிரை அழிப்பது பற்றி எவ்வளவு இலகுவாகப் பேசுகிறான்?
புவனனிடம் இருந்து பணம் பிடுங்குவதற்காக ரதியைக் கடத்திச் சென்று, பணத்தையும் பறித்ததோடின்றி, அவளையும் கொன்றுவிட்டு, பாவி அதையும் என்னமாகச் சொல்லுகிறான். மனிதத்தன்மை, மனிதநேயம் எதுவுமே இல்லாமல், மனித உருவில் இப்படி ஒரு மிருகம்.
பிணக் கிடங்கில் ரதியைப் பார்த்தது பற்றிப் புவனன் தவிப்புடன் கூறியது நினைவு வர, "வெளி உலகம் அறியாமல் ஆசிரமத்தில் வளர்ந்த சின்னப் பெண், மணமாகிப் பத்தே நாட்களுக்குள், உங்கள் மாபெரும் பணிக்கு, அவள் எப்படி இடையூறாக இருக்க முடியும்? எனக்குப் புரியவில்லையே!" என்றாள் அவள், சற்றே ஏளனமாக.
"உனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும், அதைப் பற்றி யாருக்கும், எதுவும் இல்லை," என்று உதாசீனமாகப் பேசிய ஒருவனைக் கையுயர்த்தி அடக்கினான் தலைவன்.
"ச்சு! சும்மா இருப்பா. இந்தப் பெண் கொஞ்சம் நல்ல விதமாக, சொன்னால் புரிந்து கொள்கிற விதமாகத் தெரிகிறது. கண்ணில் நேர்மையும் தெரிகிறது. எனவே, எடுத்துச் சொன்னால் புரிந்து கொண்டு, நமக்கு உதவியே செய்யக் கூடும். அதனால், இவளிடம் சொல்வதில் ஒரு தப்பும் நடக்காது. எப்படியும் இவள் நிச்சயமாக, நம்மைக் காட்டிக் கொடுக்கவே மாட்டாள்," என்று தன் தோழர்களை ஒரு பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வையில், மற்ற மூவரும் சட்டெனப் பணிந்து போன விதம், நளினிக்கு வியப்பூட்டிற்று.
இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களே என்று வியக்கும் போதே, உள்ளூர ஏதோ நெருடியது.
தலைவனுக்குப் பணிவதில் இவ்வளவு கட்டுப்பாடா? அல்லது, அந்தப் பார்வையில் வேறேதும் சேதி இருந்ததா?
இருந்தது, இருந்தது. விரிந்த விழிகள், ஒரு கணம் நின்று திரும்பினவே.
அவளுக்குத் தெரிவிப்பதில் தயக்கம் தேவையில்லை என்ற சேதியா? அப்படியானால், தெரிந்ததை வெளியே சொல்லும் வாய்ப்பு அவளுக்கு இருக்கப் போவது இல்லை என்றானா?
அத்தோடு, அவர்களைக் காட்டிக் கொடுப்பது பற்றி, அவளுக்கே இல்லாத நிச்சயம், இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவளால் இயலாது என்றுதானே, தன் கூட்டாளிகளுக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கிறான்.
முதுகுத் தண்டில் சிலீரென்றது நளினிக்கு.
அதாவது, ரதியைப் போலவே, அவளையும் கொன்று விடப் போகிறார்கள்.
புவனனைப் பார்த்து, வருத்தம் தெரிவிக்கும் முன்னரா? அவனைப் பாராமலேயா சாவது?
நெஞ்சுக்குள் ரயில் தடதடப்பதைக் குரல் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற அச்சத்தில், இறுகி நளினி வாய் திறவாது, வெறுமனே அவனது பேச்சைக் கவனிக்கும் பாவனையில் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தொடர்ந்தான்.
"அகமதாபாத்தில், ஒரு தரகன். திருட்டுப் பயல். எல்லா வகைத் தரகும் செய்வான். பெண்கள் உட்பட. அவனைப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு கொன்றோம். அந்த முட்டாள் பெண், அப்போது பார்த்து, அந்த வழியே போய்த் தொலைத்திருக்கிறாள். எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா? இத்தனைக்கும், அவளுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கண்டறிய மட்டும்தான், அவளை முதலில் கடத்தி வந்தது. ஆனால் அவள் உளறிக் கொட்டியதில் தான், அவளுடைய கணவனிடம் இருந்து பெரும் தொகை கறக்க முடியும் என்று தெரிந்தது. எங்களைப் போன்றவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும், யோசித்துப் பார். ஒழுங்காக ஒரு வேலை செய்து சம்பாதிக்க முடியாத, ஒளிவு மறைவு வாழ்க்கை. அந்த ஒளிவு மறைவுக்கே செலவோ அதிகம். அதனால், புவனேந்திரனிடம் பணம் கேட்டோம். ஆனால், அதற்குள், அவளைத் தப்பாகத் தொடப் போகிறோம் என்று அந்தப் பெண் நினைத்தாள் போல, காட்டுப் பூனை மாதிரிக் கத்திக் கூச்சலிட்டு, அலறி, அடித்துக் கடித்துப் பிராண்டி அவள் செய்த ஆர்ப்பாட்டத்தினால், வேறு வழியின்றிக் கொல்ல நேர்ந்தது. அ... அது கூடத் தற்செயலாக நடந்ததுதான். மற்றபடி, அவளைப் பலமாக எச்சரித்துத் திருப்பி அனுப்புவதாகத்தான் இருந்தோம்," என்றான் கூட்டத் தலைவன், நல்லவனைப் போல.
இது பொய் என்று நளினி உடனே கணித்தாள்.
அவனது கதையின் முதல் பகுதி உண்மையாக இருக்கக் கூடும். ஆனால், ரதியை வேறு வழியின்றிக் கொன்றதாகச் சொன்னதில் இருந்து, எல்லாமே தலைவனின் கற்பனை என்பதைக் கூட இருந்த மற்றவர்களின் முகங்கள் காட்டிக் கொடுத்தன.
சிறு திகைப்பும், அதையடுத்து, அந்தத் திகைப்பை ஈடுகட்டுவது போலச் சற்று அதிகப்படியான தலையாட்டலும், அவை போன்ற தன்னையறியாத சிறு சிறு மாறுதல்களுக்காகக் கூர்மையுடன் கவனித்துக் கொண்டிருந்த நளினியின் கண்களில் தெளிவாகத் தென்பட்டன.
இது பொய் என்றால், இந்தப் பொய்யை அவன் எதற்காகச் சொன்னான்?
அவளிடம் தங்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொள்வதில், இவர்களுக்கு என்ன லாபம்?
அவள் என்னவோ, அவர்கள் பிடியில் சிக்கியாயிற்று. இனிப் பழைய மாதிரி, புவனனுக்கு போன் செய்து, இத்தனை லட்சம், இங்கே கொண்டு வா என்று பணத்துக்காக மிரட்ட வேண்டியதுதானே?
அதுதானே, இவர்களது செயல்முறையாக, இதுவரை இருந்திருக்கும்? இருந்திருக்கிறது!
இப்போது மட்டும் ஏன் மாறுபாடு?
ஒரு வேளை, அவளும் புவனனும் பிரிந்திருப்பதால், பணம் தருவானோ, மாட்டானோ என்ற சந்தேகமா?
ஆனால், அதையும் தான் அவளே கெடுத்து வைத்திருந்தாளே.
பின் என்ன?
உயர்ந்த சில நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவினர் அவர்கள். சில கொடிய மனிதர்களைப் பிடித்து வந்து, அவர்களிடம் பணம் பிடுங்குவதும், அதை ஏழைகளின் தேவைக்குக் கொடுப்பதும்.
புவனேந்திரன் கொடிய மனிதன் அல்ல, மிக மிக நல்லவன் என்பது, நளினியின் தொண்டை வரை வந்து அடங்கியது.
ஒரு தரம் தவளையாக வாயை விட்டது போதும், அதே கருத்தை மேலும் வலியுறுத்துவது, மன்னிக்க முடியாத மடத்தனம்.
எனவே, வேறு விதமாக மடக்கினாள். "நீங்கள் எட்டே பேருக்குப் பெரிய குழு என்று பெயரா? எட்டுப் பேர் இருந்து என்ன சாதிக்க முடியும்?" என்றாள் நம்பாத குரலில்.
மற்றவர்கள் கோபமாக முறைத்த போது, குழுத் தலைவன் தலையாட்டி, "நீ சொல்வது சரிதான்," என்று ஒத்துக் கொண்டான். "நாங்கள் எட்டுப் பேருமே, ஒரு பெரிய குழுவின் சிறு பிரிவு தான். இப்படி ஒவ்வொரு பிரிவிடமும், ஒவ்வொரு வேலை ஒப்படைக்கப்படும். அந்த வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவது, அந்தந்தக் குழுவினரின் பொறுப்பு. அதற்குள், எப்படியாவது தப்பிச் சென்று, எங்கள் ஆணி வேரையே எப்படிப் பிடுங்குவது என்று திட்டம் போடாதே. அது முடிகிற காரியம் இல்லை. ஏனெனில், எங்களுக்கு அடுத்த படியில் இருப்பவர்களிடம் கூட, எங்களுக்கு நேரடித் தொடர்பு கிடையாது. ஒப்படைக்கப்பட்ட வேலையில் தவறு நேர்ந்தால், அதை வைத்துக் கொண்டு, மேலிடம் வரை போய்விடக் கூடாது அல்லவா? எனவே, தவறின் விளைவையும், நாங்களேதான் அனுபவிக்க வேண்டும். இடையூறுகளை விலக்கி, நிலைமையைச் சீர்ப்படுத்துவதும், எங்கள் பொறுப்பே. இப்படித்தான், புவனேந்திரன் மனைவியை எங்கள் வழியிலிருந்து அகற்ற நேர்ந்தது," என்றான் அவன்.
இடையூறுகளை விலக்குவதா? வழியிலிருந்து அகற்றுவதா? தன்னைப் போல ஒரு மனித உயிரை அழிப்பது பற்றி எவ்வளவு இலகுவாகப் பேசுகிறான்?
புவனனிடம் இருந்து பணம் பிடுங்குவதற்காக ரதியைக் கடத்திச் சென்று, பணத்தையும் பறித்ததோடின்றி, அவளையும் கொன்றுவிட்டு, பாவி அதையும் என்னமாகச் சொல்லுகிறான். மனிதத்தன்மை, மனிதநேயம் எதுவுமே இல்லாமல், மனித உருவில் இப்படி ஒரு மிருகம்.
பிணக் கிடங்கில் ரதியைப் பார்த்தது பற்றிப் புவனன் தவிப்புடன் கூறியது நினைவு வர, "வெளி உலகம் அறியாமல் ஆசிரமத்தில் வளர்ந்த சின்னப் பெண், மணமாகிப் பத்தே நாட்களுக்குள், உங்கள் மாபெரும் பணிக்கு, அவள் எப்படி இடையூறாக இருக்க முடியும்? எனக்குப் புரியவில்லையே!" என்றாள் அவள், சற்றே ஏளனமாக.
"உனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும், அதைப் பற்றி யாருக்கும், எதுவும் இல்லை," என்று உதாசீனமாகப் பேசிய ஒருவனைக் கையுயர்த்தி அடக்கினான் தலைவன்.
"ச்சு! சும்மா இருப்பா. இந்தப் பெண் கொஞ்சம் நல்ல விதமாக, சொன்னால் புரிந்து கொள்கிற விதமாகத் தெரிகிறது. கண்ணில் நேர்மையும் தெரிகிறது. எனவே, எடுத்துச் சொன்னால் புரிந்து கொண்டு, நமக்கு உதவியே செய்யக் கூடும். அதனால், இவளிடம் சொல்வதில் ஒரு தப்பும் நடக்காது. எப்படியும் இவள் நிச்சயமாக, நம்மைக் காட்டிக் கொடுக்கவே மாட்டாள்," என்று தன் தோழர்களை ஒரு பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வையில், மற்ற மூவரும் சட்டெனப் பணிந்து போன விதம், நளினிக்கு வியப்பூட்டிற்று.
இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களே என்று வியக்கும் போதே, உள்ளூர ஏதோ நெருடியது.
தலைவனுக்குப் பணிவதில் இவ்வளவு கட்டுப்பாடா? அல்லது, அந்தப் பார்வையில் வேறேதும் சேதி இருந்ததா?
இருந்தது, இருந்தது. விரிந்த விழிகள், ஒரு கணம் நின்று திரும்பினவே.
அவளுக்குத் தெரிவிப்பதில் தயக்கம் தேவையில்லை என்ற சேதியா? அப்படியானால், தெரிந்ததை வெளியே சொல்லும் வாய்ப்பு அவளுக்கு இருக்கப் போவது இல்லை என்றானா?
அத்தோடு, அவர்களைக் காட்டிக் கொடுப்பது பற்றி, அவளுக்கே இல்லாத நிச்சயம், இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவளால் இயலாது என்றுதானே, தன் கூட்டாளிகளுக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கிறான்.
முதுகுத் தண்டில் சிலீரென்றது நளினிக்கு.
அதாவது, ரதியைப் போலவே, அவளையும் கொன்று விடப் போகிறார்கள்.
புவனனைப் பார்த்து, வருத்தம் தெரிவிக்கும் முன்னரா? அவனைப் பாராமலேயா சாவது?
நெஞ்சுக்குள் ரயில் தடதடப்பதைக் குரல் காட்டிக் கொடுத்து விடுமோ என்ற அச்சத்தில், இறுகி நளினி வாய் திறவாது, வெறுமனே அவனது பேச்சைக் கவனிக்கும் பாவனையில் பார்த்துக் கொண்டிருக்க, அவன் தொடர்ந்தான்.
"அகமதாபாத்தில், ஒரு தரகன். திருட்டுப் பயல். எல்லா வகைத் தரகும் செய்வான். பெண்கள் உட்பட. அவனைப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு கொன்றோம். அந்த முட்டாள் பெண், அப்போது பார்த்து, அந்த வழியே போய்த் தொலைத்திருக்கிறாள். எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா? இத்தனைக்கும், அவளுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கண்டறிய மட்டும்தான், அவளை முதலில் கடத்தி வந்தது. ஆனால் அவள் உளறிக் கொட்டியதில் தான், அவளுடைய கணவனிடம் இருந்து பெரும் தொகை கறக்க முடியும் என்று தெரிந்தது. எங்களைப் போன்றவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும், யோசித்துப் பார். ஒழுங்காக ஒரு வேலை செய்து சம்பாதிக்க முடியாத, ஒளிவு மறைவு வாழ்க்கை. அந்த ஒளிவு மறைவுக்கே செலவோ அதிகம். அதனால், புவனேந்திரனிடம் பணம் கேட்டோம். ஆனால், அதற்குள், அவளைத் தப்பாகத் தொடப் போகிறோம் என்று அந்தப் பெண் நினைத்தாள் போல, காட்டுப் பூனை மாதிரிக் கத்திக் கூச்சலிட்டு, அலறி, அடித்துக் கடித்துப் பிராண்டி அவள் செய்த ஆர்ப்பாட்டத்தினால், வேறு வழியின்றிக் கொல்ல நேர்ந்தது. அ... அது கூடத் தற்செயலாக நடந்ததுதான். மற்றபடி, அவளைப் பலமாக எச்சரித்துத் திருப்பி அனுப்புவதாகத்தான் இருந்தோம்," என்றான் கூட்டத் தலைவன், நல்லவனைப் போல.
இது பொய் என்று நளினி உடனே கணித்தாள்.
அவனது கதையின் முதல் பகுதி உண்மையாக இருக்கக் கூடும். ஆனால், ரதியை வேறு வழியின்றிக் கொன்றதாகச் சொன்னதில் இருந்து, எல்லாமே தலைவனின் கற்பனை என்பதைக் கூட இருந்த மற்றவர்களின் முகங்கள் காட்டிக் கொடுத்தன.
சிறு திகைப்பும், அதையடுத்து, அந்தத் திகைப்பை ஈடுகட்டுவது போலச் சற்று அதிகப்படியான தலையாட்டலும், அவை போன்ற தன்னையறியாத சிறு சிறு மாறுதல்களுக்காகக் கூர்மையுடன் கவனித்துக் கொண்டிருந்த நளினியின் கண்களில் தெளிவாகத் தென்பட்டன.
இது பொய் என்றால், இந்தப் பொய்யை அவன் எதற்காகச் சொன்னான்?
அவளிடம் தங்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொள்வதில், இவர்களுக்கு என்ன லாபம்?
அவள் என்னவோ, அவர்கள் பிடியில் சிக்கியாயிற்று. இனிப் பழைய மாதிரி, புவனனுக்கு போன் செய்து, இத்தனை லட்சம், இங்கே கொண்டு வா என்று பணத்துக்காக மிரட்ட வேண்டியதுதானே?
அதுதானே, இவர்களது செயல்முறையாக, இதுவரை இருந்திருக்கும்? இருந்திருக்கிறது!
இப்போது மட்டும் ஏன் மாறுபாடு?
ஒரு வேளை, அவளும் புவனனும் பிரிந்திருப்பதால், பணம் தருவானோ, மாட்டானோ என்ற சந்தேகமா?
ஆனால், அதையும் தான் அவளே கெடுத்து வைத்திருந்தாளே.
பின் என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
என்ன என்பதை அந்த வன்முறைக் குழுவுடைய தலைவனே சொன்னான்.
இப்போது அவர்களுக்குப் பணம் வேண்டாமாம். பதிலாக, அந்தக் குழுவினரின் பின்னணி பற்றிய உண்மை விவரங்களைத் திரட்டிப் புவனேந்திரன் ஒரு ஃபைல் வைத்திருக்கிறானாம். அது போலீசுக்குப் போனால், பலருக்குப் பிரச்சனை ஏற்படக் கூடுமாம். அந்த ஃபைலை அவன் வேறு யாரிடமும் கொடுத்து அனுப்பி, அது எங்கேயேனும் தவறி விட்டால் என்ன செய்வது?
அதை அவனே கொண்டு வந்தால், நளினியைக் காப்பாற்றுவதற்காக, முழுக் கவனத்துடன் கொண்டு வருவான் அல்லவா?
அதனால், அவனுக்கு போன் செய்து, அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு நேரில் வருமாறு, அவளே சொன்னால், அவனும் அதன்படி ஃபைலைப் பத்திரமாகக் கொண்டு வந்து தருவான்.
அப்படிப் புவனேந்திரன் ஃபைலைக் கொணர்ந்து தந்ததும், இருவரையும் ஜோடியாகத் திருப்பி அனுப்பி வைப்பார்களாம்.
எங்கே அனுப்பி வைப்பார்கள் என்று தெளிவாகத் தெரிந்திருந்த நளினி, இந்தத் திட்டத்தை எப்படி முறியடிப்பது என்று யோசித்தாள்.
தன்னைப் பொறுத்த வரையில், இந்தக் கொடியவர்களிடம் இருந்து தப்புவது மிகக் கடினம் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
இனிப் பெற்றோரை, தங்கையைச் சந்திப்பது நடக்கக் கூடியது அல்லதான்.
சும்மா என்றால், இதுவே அவளை இடிய வைத்திருக்கும்.
ஆனால், ஒரு கோடு, அதை விடப் பெரிய கோடு ஒன்றுடன் ஒத்திடும் போது, சின்னதாகி விடுவது போல, புவனேந்திரன் உயிருக்கு ஆபத்து என்ற பெரிய துன்பத்தின் முன், தன் வீடு குடும்பம் போன்ற பிரச்னைகள் அவளுக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றியது.
ஏனெனில், அவர்களுக்குள் நால்வர் அழியக் காரணமானவனை, அவர்கள் நிச்சயமாக உயிரோடு விடப் போவது இல்லை.
எனவே, அவளுக்கு என்ன நேர்ந்தாலும், எப்படியும், புவனனைக் காப்பாற்றியாக வேண்டும் என்பது மட்டிலுமே மனதில் நின்றது.
ஆனால், கை கால் கட்டப்பட்டிருந்த இந்த நிலையில் அவளால் என்ன செய்ய முடியும்?
அவளுக்கு இப்போது உதவிக்கு இருந்தது வாய் மட்டுமே.
அதைக் கொண்டும், கத்தி அலறிப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.
ஏதேனும் மாயமாலம் செய்து, கட்டுகளை அவிழ்க்கச் செய்தாலும் கூட, இந்தக் கட்டைத் தடியர்களில், ஒருவர் இருவரை அவளால் தாக்க இயலலாம். அதுவும், நால்வரும் சேர்ந்து எதிர்த்தால், அவளால் பத்து நிமிஷம் தாக்குப் பிடிக்க முடியாது. பத்தென்ன? ஐந்து கூட அதிசயம் தான்.
எனவே, அந்த வழி பிரயோஜனம் இல்லை.
சற்று யோசித்துவிட்டு, "நீங்கள் தப்புக் கணக்குப் போடுகிறீர்கள். புவனேந்திரனும் நானும் காதலித்தது கடந்த காலத்தில்தான். என்னைப் பிடிக்காமல், எங்கள் திருமண நிச்சயத்தை அவர் முறித்துப் போய் விட்டார். அவர் எனக்காக எதையும் செய்யப் போவது இல்லை!" என்றாள் சோகத்தைப் பிழிந்தெடுத்த குரலில்.
"பார்த்தாயா, பார்த்தாயா, எங்களையே ஏமாற்றப் பார்க்கிறாய். இப்போதுதானே, அவனை இந்திரன், சந்திரன் என்றாய், அதற்குள் மாற்றிப் பேசுகிறாயே!" என்றான் தலைவன்.
தவளையாய் வாயை விட்டதை உள்ளூர நொந்தபடி, "இன்றைக்கும் நான் அவரைக் காதலிப்பது உண்மைதான். அவருக்குத்தானே என்னைப் பிடிக்காமல் விலகினார் என்றேன்," என்று, அவள் பிடிவாதமாகத் தன் கதையையே தொடர்ந்து உரைத்தாள்.
"அதையும் தான் பார்க்கலாமே! நாங்கள் சொல்லுகிற மாதிரி, போனில் சொல்லு! அவன் வருகிறானா, இல்லையா, பார்ப்போம்."
வருவான். வந்தே விடுவான். அவளை உயிராய் நேசிக்கும் அவளுடைய அன்பன், அவனது உயிரைக் கொடுத்தேனும், அவளைக் காப்பாற்ற, நிச்சயமாக வந்து விடுவான்.
ஆனால், அவனுக்கு இங்கே மரணம் காத்திருக்கிறதே.
"வரத்தான் செய்வார். ஆனால், போலீசோடு வருவார். உங்களைப் பிடித்து, ரதியின் மரணத்துக்குப் பழி வாங்க வேண்டாமா?"
காட்டுப் புலியாய் ஓரிருவர் உறும, "ஆனால் உன்னைக் கொன்று விடுவோமே!" என்றான் தலைவன்.
தொண்டையில் அடைத்ததைச் சமாளித்துக் கொண்டு, "செய்யுங்கள். இன்னொரு கொலைக்காகச் சேர்ந்து மாட்டுவீர்கள். எப்படியும் நீங்கள் மாட்டப் போவது நிச்சயம் தானே?" என்றாள் நளினி, அலட்சியம் போலக் காட்ட முயன்றபடி.
"ஏ...ய்...!" என்று கையை ஓங்கிக் கொண்டு முன்னே வந்தான் ஒருவன்.
அந்த அறை விழுந்திருந்தால், அவள் என்ன ஆகியிருப்பாளோ? கழுத்து ஒடிந்திருக்கும். அல்லது, குறைந்த பட்சமாகச் செவிப்பறை கிழிந்திருக்கும்.
ஆனால், "வேண்டாம், பொறு," என்று அவனைத் தடுத்தான் தலைவன். "இதையெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். எனக்கென்னவோ, இவள் இப்போது நடிக்கிறாள் என்று தான் தோன்றுகிறது. அந்தப் பயலுக்குப் போன் பண்ணாமல் இருப்பதற்காக, இப்படிக் கதை விடுகிறாள்."
"ஆனால், இவள் வீட்டோடு இருந்த காவலர்களை நீக்கியது உண்மைதானே? நாமே பார்த்து அறிந்ததுதானே? அப்புறம்தானே, இவளைப் பின் தொடர்ந்து, நாம் பிடித்து வந்தது?"
சற்றுத் தயங்கி, "உண்மைதான்..." என்று இழுத்தான் தலைவன். "ஆனால், அது நம்மைப் பிடிப்பதற்காக ஏதாவது தந்திரம் என்பதுதான், என் கருத்து. அதனால் தான், இவளைக் கடத்துவதில், இவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தது."
"ஒருவேளை, நாம் அவனைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து விட்டோம் என்று தெரிந்ததும், தனக்கும் இவளுக்கும் ஒன்றும் இல்லை என்று நமக்குக் காட்டுவதற்காகப் புவனேந்திரன் திருமணத்தை முறித்திருப்பானோ என்று எனக்குச் சந்தேகம்," என்றான் இன்னொருவன்.
குழப்பம் ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் நிம்மதிதான். ஆனால், இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வகை அறியாமல், நளினி திகைத்தாள். ஏனெனில், அவர்கள் பேச்சில் அவளுக்குச் சாதகம், பாதகம் இரண்டுமே இருந்தது.
மதில் மேல் பூனை எந்தப் பக்கம் பாயும் என்று யார் சொல்லக் கூடும்?
அந்த வில்லன்கள் எல்லோருமாக எந்தப் பக்கம் சாயக் கூடும் என்று தெரியாததோடு, கட்டுப்பட்டுக் கிடந்த அவளது நிலைமை எப்படியும் மிக மோசமாக இருந்தது.
புவனன் மெய்யாகவே அவளைப் பிரிந்து விட்டான் என்று நம்பினாலும் கூட, அதற்காக அவர்கள், அவளைக் கட்டவிழ்த்து, நல்லபடியாக வீட்டுக்கு அனுப்பிவிடப் போவதில்லை. அதிலும், அவர்கள் நால்வரின் முகங்களையும் தெளிவாகக் கண்டுவிட்ட அவளது உயிர், எந்த வினாடியும் வானத்தில் பறக்கப் போவது நிச்சயம் தான்.
எனவே, அதைக் காப்பது பற்றி நினைத்துப் பார்ப்பது கூட நேர விரயம்.
அந்த நேரத்தில், ஏதாவது செய்து புவனனைக் காப்பாற்ற முடிந்ததானால், அது போதும். அவள் பிறந்ததன் பயனே, அப்போது கிட்டிவிடும்.
மூளையைக் கசக்கி, வேகமாக யோசித்துக் கண்களை மலர்த்தி, "நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? ஐயோ! இது தெரியாமல், அன்றிலிருந்து நான் அழுது கரைந்து, என் எடையே நாலு கிலோ குறைந்து போயிற்றே! இப்படியே சும்மா இருந்தால், வயிற்றுப்பாடு என்ன ஆகும் என்று, வேலைக்காக எத்தனை படி ஏறி இறங்கினேன், தெரியுமா? பேசாமல் வீட்டோடு கிடந்திருந்தால், உங்களை விரட்டியடித்துப் பிடித்துக் கொடுத்து விட்டு, என் புவனனே என்னைத் தேடி வந்திருப்பார் போலத் தெரிகிறதே! அத்தோடு, நானும் உங்களிடம் மாட்டிக் கொண்டு, இப்படிக் கைக்கட்டும், கால்கட்டுமாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க மாட்டேனே, அடடா!" என்று பெரிதாக வருத்தம் காட்டிப் புலம்பினாள்.
"ஆனால்..." என்று, உடனேயே சந்தேகம் காட்டி, "அப்படிக் கொஞ்சமேனும் அன்பு மிச்சம் இருந்திருந்தால், உங்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியிருப்பாரா? ஊம், இந்தப் பணக்காரப் பசங்கள் எல்லோரும் இப்படித்தான். பிடித்து விட்டால், ஓகோ என்று உருகுவது. பிடிக்கவில்லை என்றால் ஒரு வார்த்தையில் வெறுத்து, அப்படியே கை கழுவி விடுவது. அதுவே, அவர் விட்டுப் போனதே, எனக்குப் பெரும் வேதனை! அதற்கு மேல், விஷயம் புரியாத உங்களைப் போன்றவர்கள் பண்ணும் அநியாயம் வேறு!" என்று விசும்பினாள் அவள்.
உள்ளூர இருந்த பயமும், கலக்கமும் சேர்ந்து கொள்ளக் கண்களை அழுந்த மூடித் திறந்து, கொஞ்சம் கண்ணீரையும் கொண்டு வர முடிந்ததால், இந்த நால்வரும் நம்பும்படியாக நடித்து விட்டதாகத்தான் நளினி நினைத்தாள்.
தொடர்ந்த சில வினாடி நேர அமைதியில், அந்த வன்முறையாளர்களின் ஆராய்ச்சிப் பார்வையைத் தாங்கவும் அவளால் முடிந்தது.
"இவள் சொல்லுவதுதான் நிஜமாயிருக்குமோ பாஸ்?" என்று ஒருவன் கேட்க, "அவளை அவிழ்த்து விடு!" என்று தலைவன் சொல்லவும், வியப்பும் மகிழ்ச்சியுமாக, அவள் மனம் துள்ளிக் குதித்தது.
"பாஸ், இவள் சொன்னது பொய்யாக இருந்தால்?" என்று கேட்டவாறே, தயக்கத்துடன் அவர்களுள் இன்னொருவன் அவளை நெருங்கினான்.
அவளைக் கொண்டு வந்த புது மீசைக்காரன் அவன் என்பதைக் கண்ட நளினிக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது.
ஏனெனில், அவன் போர்க் கலைகள் தெரிந்தவன். சட்டென்று செயல்படுகிறவன். எனவே, தட்டு, வெட்டு என்று எதையாவது படபடவென்று செய்து திகைக்க வைத்துவிட்டு அவனிடம் இருந்து தப்பி ஓடுவது கடினம்.
இப்போது அவர்களுக்குப் பணம் வேண்டாமாம். பதிலாக, அந்தக் குழுவினரின் பின்னணி பற்றிய உண்மை விவரங்களைத் திரட்டிப் புவனேந்திரன் ஒரு ஃபைல் வைத்திருக்கிறானாம். அது போலீசுக்குப் போனால், பலருக்குப் பிரச்சனை ஏற்படக் கூடுமாம். அந்த ஃபைலை அவன் வேறு யாரிடமும் கொடுத்து அனுப்பி, அது எங்கேயேனும் தவறி விட்டால் என்ன செய்வது?
அதை அவனே கொண்டு வந்தால், நளினியைக் காப்பாற்றுவதற்காக, முழுக் கவனத்துடன் கொண்டு வருவான் அல்லவா?
அதனால், அவனுக்கு போன் செய்து, அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு நேரில் வருமாறு, அவளே சொன்னால், அவனும் அதன்படி ஃபைலைப் பத்திரமாகக் கொண்டு வந்து தருவான்.
அப்படிப் புவனேந்திரன் ஃபைலைக் கொணர்ந்து தந்ததும், இருவரையும் ஜோடியாகத் திருப்பி அனுப்பி வைப்பார்களாம்.
எங்கே அனுப்பி வைப்பார்கள் என்று தெளிவாகத் தெரிந்திருந்த நளினி, இந்தத் திட்டத்தை எப்படி முறியடிப்பது என்று யோசித்தாள்.
தன்னைப் பொறுத்த வரையில், இந்தக் கொடியவர்களிடம் இருந்து தப்புவது மிகக் கடினம் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
இனிப் பெற்றோரை, தங்கையைச் சந்திப்பது நடக்கக் கூடியது அல்லதான்.
சும்மா என்றால், இதுவே அவளை இடிய வைத்திருக்கும்.
ஆனால், ஒரு கோடு, அதை விடப் பெரிய கோடு ஒன்றுடன் ஒத்திடும் போது, சின்னதாகி விடுவது போல, புவனேந்திரன் உயிருக்கு ஆபத்து என்ற பெரிய துன்பத்தின் முன், தன் வீடு குடும்பம் போன்ற பிரச்னைகள் அவளுக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றியது.
ஏனெனில், அவர்களுக்குள் நால்வர் அழியக் காரணமானவனை, அவர்கள் நிச்சயமாக உயிரோடு விடப் போவது இல்லை.
எனவே, அவளுக்கு என்ன நேர்ந்தாலும், எப்படியும், புவனனைக் காப்பாற்றியாக வேண்டும் என்பது மட்டிலுமே மனதில் நின்றது.
ஆனால், கை கால் கட்டப்பட்டிருந்த இந்த நிலையில் அவளால் என்ன செய்ய முடியும்?
அவளுக்கு இப்போது உதவிக்கு இருந்தது வாய் மட்டுமே.
அதைக் கொண்டும், கத்தி அலறிப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.
ஏதேனும் மாயமாலம் செய்து, கட்டுகளை அவிழ்க்கச் செய்தாலும் கூட, இந்தக் கட்டைத் தடியர்களில், ஒருவர் இருவரை அவளால் தாக்க இயலலாம். அதுவும், நால்வரும் சேர்ந்து எதிர்த்தால், அவளால் பத்து நிமிஷம் தாக்குப் பிடிக்க முடியாது. பத்தென்ன? ஐந்து கூட அதிசயம் தான்.
எனவே, அந்த வழி பிரயோஜனம் இல்லை.
சற்று யோசித்துவிட்டு, "நீங்கள் தப்புக் கணக்குப் போடுகிறீர்கள். புவனேந்திரனும் நானும் காதலித்தது கடந்த காலத்தில்தான். என்னைப் பிடிக்காமல், எங்கள் திருமண நிச்சயத்தை அவர் முறித்துப் போய் விட்டார். அவர் எனக்காக எதையும் செய்யப் போவது இல்லை!" என்றாள் சோகத்தைப் பிழிந்தெடுத்த குரலில்.
"பார்த்தாயா, பார்த்தாயா, எங்களையே ஏமாற்றப் பார்க்கிறாய். இப்போதுதானே, அவனை இந்திரன், சந்திரன் என்றாய், அதற்குள் மாற்றிப் பேசுகிறாயே!" என்றான் தலைவன்.
தவளையாய் வாயை விட்டதை உள்ளூர நொந்தபடி, "இன்றைக்கும் நான் அவரைக் காதலிப்பது உண்மைதான். அவருக்குத்தானே என்னைப் பிடிக்காமல் விலகினார் என்றேன்," என்று, அவள் பிடிவாதமாகத் தன் கதையையே தொடர்ந்து உரைத்தாள்.
"அதையும் தான் பார்க்கலாமே! நாங்கள் சொல்லுகிற மாதிரி, போனில் சொல்லு! அவன் வருகிறானா, இல்லையா, பார்ப்போம்."
வருவான். வந்தே விடுவான். அவளை உயிராய் நேசிக்கும் அவளுடைய அன்பன், அவனது உயிரைக் கொடுத்தேனும், அவளைக் காப்பாற்ற, நிச்சயமாக வந்து விடுவான்.
ஆனால், அவனுக்கு இங்கே மரணம் காத்திருக்கிறதே.
"வரத்தான் செய்வார். ஆனால், போலீசோடு வருவார். உங்களைப் பிடித்து, ரதியின் மரணத்துக்குப் பழி வாங்க வேண்டாமா?"
காட்டுப் புலியாய் ஓரிருவர் உறும, "ஆனால் உன்னைக் கொன்று விடுவோமே!" என்றான் தலைவன்.
தொண்டையில் அடைத்ததைச் சமாளித்துக் கொண்டு, "செய்யுங்கள். இன்னொரு கொலைக்காகச் சேர்ந்து மாட்டுவீர்கள். எப்படியும் நீங்கள் மாட்டப் போவது நிச்சயம் தானே?" என்றாள் நளினி, அலட்சியம் போலக் காட்ட முயன்றபடி.
"ஏ...ய்...!" என்று கையை ஓங்கிக் கொண்டு முன்னே வந்தான் ஒருவன்.
அந்த அறை விழுந்திருந்தால், அவள் என்ன ஆகியிருப்பாளோ? கழுத்து ஒடிந்திருக்கும். அல்லது, குறைந்த பட்சமாகச் செவிப்பறை கிழிந்திருக்கும்.
ஆனால், "வேண்டாம், பொறு," என்று அவனைத் தடுத்தான் தலைவன். "இதையெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். எனக்கென்னவோ, இவள் இப்போது நடிக்கிறாள் என்று தான் தோன்றுகிறது. அந்தப் பயலுக்குப் போன் பண்ணாமல் இருப்பதற்காக, இப்படிக் கதை விடுகிறாள்."
"ஆனால், இவள் வீட்டோடு இருந்த காவலர்களை நீக்கியது உண்மைதானே? நாமே பார்த்து அறிந்ததுதானே? அப்புறம்தானே, இவளைப் பின் தொடர்ந்து, நாம் பிடித்து வந்தது?"
சற்றுத் தயங்கி, "உண்மைதான்..." என்று இழுத்தான் தலைவன். "ஆனால், அது நம்மைப் பிடிப்பதற்காக ஏதாவது தந்திரம் என்பதுதான், என் கருத்து. அதனால் தான், இவளைக் கடத்துவதில், இவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தது."
"ஒருவேளை, நாம் அவனைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து விட்டோம் என்று தெரிந்ததும், தனக்கும் இவளுக்கும் ஒன்றும் இல்லை என்று நமக்குக் காட்டுவதற்காகப் புவனேந்திரன் திருமணத்தை முறித்திருப்பானோ என்று எனக்குச் சந்தேகம்," என்றான் இன்னொருவன்.
குழப்பம் ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் நிம்மதிதான். ஆனால், இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வகை அறியாமல், நளினி திகைத்தாள். ஏனெனில், அவர்கள் பேச்சில் அவளுக்குச் சாதகம், பாதகம் இரண்டுமே இருந்தது.
மதில் மேல் பூனை எந்தப் பக்கம் பாயும் என்று யார் சொல்லக் கூடும்?
அந்த வில்லன்கள் எல்லோருமாக எந்தப் பக்கம் சாயக் கூடும் என்று தெரியாததோடு, கட்டுப்பட்டுக் கிடந்த அவளது நிலைமை எப்படியும் மிக மோசமாக இருந்தது.
புவனன் மெய்யாகவே அவளைப் பிரிந்து விட்டான் என்று நம்பினாலும் கூட, அதற்காக அவர்கள், அவளைக் கட்டவிழ்த்து, நல்லபடியாக வீட்டுக்கு அனுப்பிவிடப் போவதில்லை. அதிலும், அவர்கள் நால்வரின் முகங்களையும் தெளிவாகக் கண்டுவிட்ட அவளது உயிர், எந்த வினாடியும் வானத்தில் பறக்கப் போவது நிச்சயம் தான்.
எனவே, அதைக் காப்பது பற்றி நினைத்துப் பார்ப்பது கூட நேர விரயம்.
அந்த நேரத்தில், ஏதாவது செய்து புவனனைக் காப்பாற்ற முடிந்ததானால், அது போதும். அவள் பிறந்ததன் பயனே, அப்போது கிட்டிவிடும்.
மூளையைக் கசக்கி, வேகமாக யோசித்துக் கண்களை மலர்த்தி, "நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? ஐயோ! இது தெரியாமல், அன்றிலிருந்து நான் அழுது கரைந்து, என் எடையே நாலு கிலோ குறைந்து போயிற்றே! இப்படியே சும்மா இருந்தால், வயிற்றுப்பாடு என்ன ஆகும் என்று, வேலைக்காக எத்தனை படி ஏறி இறங்கினேன், தெரியுமா? பேசாமல் வீட்டோடு கிடந்திருந்தால், உங்களை விரட்டியடித்துப் பிடித்துக் கொடுத்து விட்டு, என் புவனனே என்னைத் தேடி வந்திருப்பார் போலத் தெரிகிறதே! அத்தோடு, நானும் உங்களிடம் மாட்டிக் கொண்டு, இப்படிக் கைக்கட்டும், கால்கட்டுமாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க மாட்டேனே, அடடா!" என்று பெரிதாக வருத்தம் காட்டிப் புலம்பினாள்.
"ஆனால்..." என்று, உடனேயே சந்தேகம் காட்டி, "அப்படிக் கொஞ்சமேனும் அன்பு மிச்சம் இருந்திருந்தால், உங்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், எனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியிருப்பாரா? ஊம், இந்தப் பணக்காரப் பசங்கள் எல்லோரும் இப்படித்தான். பிடித்து விட்டால், ஓகோ என்று உருகுவது. பிடிக்கவில்லை என்றால் ஒரு வார்த்தையில் வெறுத்து, அப்படியே கை கழுவி விடுவது. அதுவே, அவர் விட்டுப் போனதே, எனக்குப் பெரும் வேதனை! அதற்கு மேல், விஷயம் புரியாத உங்களைப் போன்றவர்கள் பண்ணும் அநியாயம் வேறு!" என்று விசும்பினாள் அவள்.
உள்ளூர இருந்த பயமும், கலக்கமும் சேர்ந்து கொள்ளக் கண்களை அழுந்த மூடித் திறந்து, கொஞ்சம் கண்ணீரையும் கொண்டு வர முடிந்ததால், இந்த நால்வரும் நம்பும்படியாக நடித்து விட்டதாகத்தான் நளினி நினைத்தாள்.
தொடர்ந்த சில வினாடி நேர அமைதியில், அந்த வன்முறையாளர்களின் ஆராய்ச்சிப் பார்வையைத் தாங்கவும் அவளால் முடிந்தது.
"இவள் சொல்லுவதுதான் நிஜமாயிருக்குமோ பாஸ்?" என்று ஒருவன் கேட்க, "அவளை அவிழ்த்து விடு!" என்று தலைவன் சொல்லவும், வியப்பும் மகிழ்ச்சியுமாக, அவள் மனம் துள்ளிக் குதித்தது.
"பாஸ், இவள் சொன்னது பொய்யாக இருந்தால்?" என்று கேட்டவாறே, தயக்கத்துடன் அவர்களுள் இன்னொருவன் அவளை நெருங்கினான்.
அவளைக் கொண்டு வந்த புது மீசைக்காரன் அவன் என்பதைக் கண்ட நளினிக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது.
ஏனெனில், அவன் போர்க் கலைகள் தெரிந்தவன். சட்டென்று செயல்படுகிறவன். எனவே, தட்டு, வெட்டு என்று எதையாவது படபடவென்று செய்து திகைக்க வைத்துவிட்டு அவனிடம் இருந்து தப்பி ஓடுவது கடினம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காக்கும் இமை நானுனக்கு
தப்பி ஓடுவது பற்றி, நளினி எண்ணமிடுகையிலேயே, "இவள் ஏதாவது தில்லு முல்லு செய்தால், பட்டென்று மண்டையிலேயே போடுவதற்குத் தயாராகத் தடிக் கம்புடன் இவளுக்குப் பின்புறமாக நில்லுங்கள். என்னப்பா, சீக்கிரமாகக் கட்டை அவிழ்க்கிறாயா? இவளது பேச்சு உண்மையா, பொய்யா என்று, இப்போது பார்த்து விடலாம்," என்றான் தலைவன்.
எப்படித் தெரியும்? என்ன செய்யப் போகிறான்?
இவ்வளவு நேரம் பேசிய பாணியைக் கைவிட்டு, தடிக்கம்பு, மண்டையில் போடுவது என்றெல்லாம் சொல்கிறானே!
அவசரப்பட்டு அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்து, கட்டவிழ்த்த பிறகும், நளினி நாற்காலியில் இருந்து எழக்கூட இல்லை. அப்படியே அமர்ந்து, ஒரே நிலையில் இருந்த கை கால்களைத் தளர விட்டபடி, கூட்டத் தலைவனைப் பார்த்தாள்.
"கெட்டிக்காரி. அப்படியே இரு!" என்று விட்டு ஓர் ஓரமாகக் கிடந்த சாக்குப் பையிலிருந்து, ஒரு செல்போனைத் தேடி எடுத்து வந்தான் அவன். "புவனேந்திரன் நம்பரைப் போட்டுத் தருகிறேன். அவனை ஃபைலுடன் இங்கே வரச் சொல்லு."
உள்ளூரத் திகைத்த போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல், "எனக்காக அவர் வர மாட்டார் என்றேனே!" என்றாள் நளினி, வருத்தப் பாவனையையே தொடர்ந்து.
"அதையும் தான் பார்ப்போமே! அவன் வந்தாலும், வராவிட்டாலும், அது உனக்கு லாபமாகத்தான் முடியும். எங்கள் கருத்துப்படி, அவன் வந்தான் என்றால், நீ அவனோடு சேர்ந்து போகலாம். அப்படி அந்த ராஸ்கல் வராவிட்டால், நீ சொன்னது உண்மை என்று ஆகும். அப்போது, உன்னைக் கடத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, நாங்களே உன்னைத் தனியாக அனுப்பி வைத்து விடுவோம். அதனால், எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்பதில் உனக்கு என்ன பிரச்சனை, சொல்லு."
அவன் ஏதோ விட் அடித்து விட்டாற் போல, எல்லோரும் சேர்ந்து சிரிக்கக் காரணம் புரிந்து, நளினிக்கு வாய் உலர்ந்தது.
அவளைப் பரலோகத்துக்கு அனுப்பி வைப்பது பற்றியல்லவா, அவர்களுடைய தலைவன் பேசுகிறான். அவர்களுக்குச் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?
இப்போது அவள் வகையாக மாட்டிக் கொண்டாளே!
இவ்வளவு புத்தி இல்லாமலா, இவர்கள் இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் எல்லாம் செய்ய முடியும்?
இப்போது போன் பண்ண மறுத்தால், அவள் சொன்னது அத்தனையும் பொய் என்று உடனேயே தெளிவாகிவிடும். அதற்காக வேறு, அவளை என்ன மாதிரிக் கொடுமைகள் செய்வார்களோ?
ஆனால், அந்தக் கொடுமைகளுக்குப் பயந்து போன் பண்ணினாலோ, புவனேந்திரன் நிச்சயம் வந்து விடுவான். இந்த அரக்கர்கள் அவனை அழிக்காமல் விட மாட்டார்கள்.
சட்டென ஒன்று அவள் மனதில் பட்டது.
எப்படியும், அவளது சாவு உறுதிதானே! அதைத்தானே, 'அனுப்பி வைப்பதாக'ச் சொல்லி அவர்கள் விலா வெடிக்கச் சிரித்தது.
புவனன் வந்தால், அவனோடு அல்லது தனியாகவேனும் அவளைச் சாகடித்து விடுவது என்பது, இவர்களது முடிவு. இங்கே, இவர்கள் முடிவுதான் நடக்க முடியும்.
எப்படியும் அவள் சாகத்தான் வேண்டும் என்றால், தனியாகச் சாவதே மேல் அல்லவா?
அதிலும், புவனனைக் காப்பதில் சாவது என்றால், அந்தச் சாவுக்கே பெருமைதான்.
அவனோடு சேர்ந்து வாழ முடியாது போகிறதே என்று நெஞ்சை அடைத்துக் கொண்டு வரத்தான் செய்தது. ஆனால், அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இது நேரம் அல்ல.
சுருள முயன்ற முதுகுத் தண்டை நிமிர்த்தி அமர்ந்து, "என்னால் முடியாது. உனக்குத் தேவை என்றால், நீயே புவனனுக்கு போன் செய்து கொள்!" என்றாள் அமர்த்தலாக.
ஆனால், கொத்தாக அவளது கூந்தலைப் பிடித்துத் தூக்கி, அவளை அவன் நிறுத்திய விதத்தில், வலியால் நளினியின் கண்களில் நீர் சுரந்தது.
எட்டி உதைப்பதற்கு வழியின்றி, அந்தத் தலைவன் எச்சரிக்கையோடு நின்றான். மற்ற மூவரும் கூட, அவளைத் தாக்குவதற்குத் தயாராகவே இருந்தார்கள்.
"கிண்டலாடீ? அவன் நம்ப மாட்டான் என்று, உனக்குத் தெரியாது? உன் குரல் அவனுக்குக் கேட்கா விட்டால், நீ எங்கள் வசம் இருப்பதையே, அவன் நம்பப் போவதில்லை. அதிலும் உயிரோடு இருக்கிறாய் என்று, நிச்சயமாக நம்பமாட்டான். ஒரு மடத்தனத்தை, இரண்டாம் முறை செய்து ஏமாற, அவன் ஒன்றும் முட்டாள் அல்ல என்பது, எங்களுக்குத் தெரியும்."
கடவுளே! என்னவோ, அவளே கேட்டால்தான் கவனமாக புவனனே ஃபைலை எடுத்து வருவான், அது இது என்று கதை விட்டானே. கடைசியில், இதுவா விஷயம்?
ரதியைக் கொன்ற பிறகும், அவளைக் கொன்று விடப் போவதாக மிரட்டியே புவனனிடம் பல லட்சங்கள் பறித்தார்களே. அப்போது, இருபத்தோரு வயது இளைஞனாக இருந்த புவனனும், ரதி உயிரோடு இருப்பதாக நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தான்.
ஆனால், இன்றையப் புவனனை அப்படி ஏமாற்ற முடியாது.
தன்னை இவர்கள் முன்பே கொல்லாததன் காரணம் நளினிக்கு இப்போது புரிந்தது. நல்ல விதமாகப் பேசியதன் காரணமும்.
இப்போது புவனனைப் பிடிப்பதற்கு, இவர்களுக்கு அவளது குரல் தேவைப்படுகிறது. அதாவது, அவனைப் பிடிக்கும் வரை, அவளது குரலுக்காக வேனும், அவளைக் கொல்ல மாட்டார்கள்.
ஆனால், தன் உயிருக்கு உடனடி ஆபத்தில்லை என்பதை விடவும், இதில் புவனனைக் காப்பாற்ற ஒரு வழி கிடைத்ததை எண்ணியே, நளினிக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது.
அவனுடன் பேச மாட்டேன் என்று, அவள் பிடிவாதமாக இருந்துவிட்டால், இவர்களால் புவனனை நெருங்க முடியாது.
என்ன, சில பல உதைகள், சித்திரவதைகள் தாங்க வேண்டியிருக்கும். அவ்வளவுதானே? தாங்கிக் கொண்டால் போகிறது.
எனவே, தலைநிமிர்ந்து, "என்ன ஆனாலும், புவனனுக்கு நான் போன் செய்யப் போவது இல்லை. அவரை இங்கே வரவழைக்கப் போவதும் இல்லை," என்றாள் அவள்.
அடி உதைகளை எதிர்பார்த்துதான் நளினி இதைச் சொன்னது.
ஆனால், இந்தத் துறையில் தாங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று அவர்கள், மறுபடியும் அவளுக்கு நிரூபித்தார்கள்.
ஆத்திரத்தில் முகம் சிவக்க, "அவனை நீ என்னடி வரவழைப்பது? இந்த போனில் உன் கதறலைக் கேட்டு, அவனே இங்கே ஓடி வரப் போகிறான். அவனுக்கு, நீ அழைப்பதை விட, நீ உயிரோடு இருக்கிறாய் என்பதற்கான ஆதாரம் தான் தேவை. உன் அலறலும், கதறலும் அதற்குப் போதும்," என்று அவளிடம் சொல்லிவிட்டுத் தன் கூட்டாளிகளைப் பார்த்தான், குழுத் தலைவன்.
பார்வையிலேயே அவனது மனதை அறிந்தவர்கள் போல, இருவர் அவளது கரங்களை இறுகப் பற்றினார்கள்.
"இவள் சாதாரண அடி உதைக்கெல்லாம், வாயைத் திறக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். ஆனால்..." என்று ஒரு குரூரத்துடன் அவளை நோக்கி, "நாங்கள் நாலு பேர் வக்கிரம் பிடித்த நாலு ஆண்கள். நீ ஒரு பெண். எங்களால் உன்னை என்னென்ன மாதிரிக் கேவலப்படுத்திக் கதற வைக்க முடியும் தெரியுமா?" என்று அவன் மிரட்டுகையில் நளினிக்குச் சட்டென ரதியின் நினைவு வந்தது.
'காட்டுப் பூனை போல அலறியடித்துக் கடித்துப் பிராண்டி ஆர்ப்பாட்டம்' செய்தாள் என்று ரதியைப் பற்றிச் சொன்னானே! இப்படித்தானே, அவளையும் மிரட்டியிருப்பார்கள். இருபத்திரண்டு வயதில் தனக்கே வயிறு கலங்கும் போது, பாவம்! உலகம் அறியாத பதினெட்டு வயதுச் சின்னப் பெண் ரதி எப்படி அரண்டு போயிருப்பாள். அதில் பதறியடித்து கண்மண் தெரியாமல் ஓடி, சிக்கி, விடுபடத் துடித்து, கடித்து, பிராண்டி, ஒன்றும் பலனின்றி... கடவுளே! என்ன பரிதாபம்.
"...அப்போது நீ அலறுவதைக் கேட்டு அந்தப் பயல் புவனன், அவனாக இங்கே ஓடோடி வருகிறானா இல்லையா என்று நீயே பார்," என்று, அவளை மேலும் மிரள வைத்து விட்டு, செல்லில் புவனேந்திரன் செல் எண்களை அழுத்தினான், அந்தப் படுபாவி.
எதிர்ப்புறத்தில், புவனேந்திரன் போனை எடுத்திருக்க வேண்டும்.
பேசுவது யார் என்றும் கேட்டிருக்க வேண்டும்.
"எல்லாம் உன் பங்காளி தான், தம்பி! உனக்குப் பிரியமான பொண்ணு எங்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் இங்கே எங்களிடம் படுகிற கஷ்டம் என்ன என்று உனக்குத் தெரிய வேண்டாமா? செல்லைக் காதில் வைத்தபடி, அமைதியாக ஓர் ஐந்து நிமிஷங்கள் கேட்டுக் கொண்டிரு. அப்புறமாக, அவளைத் திரும்பப் பெறுவதற்காக நீ என்ன செய்ய வேண்டும் என்று, நான் உனக்குச் சொல்லுகிறேன்," என்று அவனிடம் கூறிவிட்டு, நளினியிடம் திரும்பினான் அந்த அரக்கர் குழுத் தலைவன்.
பதறக்கூடாது. ரதியைப் போல நிலையிழப்பது, இவர்களுக்கு எக்காளமாக இருக்கும்.
பூனை எலியைப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வது போல, இந்த மாதிரி வக்கிரங்களுக்கு, அது உற்சாகமான பொழுது போக்காக இருக்கும்! அதற்கு இடம் தராமல், முடிந்தவரை, இவர்களுக்கு வலி, வேதனை உண்டாக்க வேண்டும்.
கைகளை அசைக்க முடியாத நிலை, ஆனால், எவனாவது அருகில் நெருங்கினால், காலால் எட்டி உதைத்து, அவன் ஒருவன் இடுப்பையாவது உடைத்து விட வேண்டும் என்று நளினி திட்டமிட்ட போது, "ஐந்து நிமிஷங்கள் அமைதியாகக் கேட்பது எதற்கு? நேரிலேயே பார்க்க, நான் தான் இங்கேயே வந்து விட்டேனே!" என்ற குரலில் பிரமித்துத் திரும்பிப் பார்த்தால், அங்கே வாயில் அருகே புவனேந்திரன் நின்றிருந்தான்.
எல்லோருக்குமே பிரமிப்புதான்!
ஆனால், "ஐயோ!" என்று, ரதியைப் போலவே, அரண்டு மிரண்டு, நிலையிழந்து போனாள் நளினி. ஈவு இரக்கமற்ற இந்தக் கொலைகாரர்களிடம், புவனேந்திரன் மாட்டிக் கொண்டான் என்பது மட்டும்தான் அவளுக்குப் புரிந்தது.
ஓர் அசுர பலத்துடன், தன் கைகளைப் பற்றியிருந்தவர்களிடம் இருந்து, தன்னை விடுவித்துக் கொண்டு, ஓடியே போய், புவனேந்திரனை மறைத்தாற் போலக் கைகளை விரித்துக் கொண்டு அவன் முன்னே போய் நின்றாள். "அவரை ஒன்றும் செய்யாதே! முதலில் என்னைக் கொன்று விட்டு, அவரிடம் போ! ஐயோ, அதற்குள் நீங்கள் ஓடி விடுங்களேன்," என்று கதறிப் பதறினாள்.
எப்படித் தெரியும்? என்ன செய்யப் போகிறான்?
இவ்வளவு நேரம் பேசிய பாணியைக் கைவிட்டு, தடிக்கம்பு, மண்டையில் போடுவது என்றெல்லாம் சொல்கிறானே!
அவசரப்பட்டு அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்து, கட்டவிழ்த்த பிறகும், நளினி நாற்காலியில் இருந்து எழக்கூட இல்லை. அப்படியே அமர்ந்து, ஒரே நிலையில் இருந்த கை கால்களைத் தளர விட்டபடி, கூட்டத் தலைவனைப் பார்த்தாள்.
"கெட்டிக்காரி. அப்படியே இரு!" என்று விட்டு ஓர் ஓரமாகக் கிடந்த சாக்குப் பையிலிருந்து, ஒரு செல்போனைத் தேடி எடுத்து வந்தான் அவன். "புவனேந்திரன் நம்பரைப் போட்டுத் தருகிறேன். அவனை ஃபைலுடன் இங்கே வரச் சொல்லு."
உள்ளூரத் திகைத்த போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல், "எனக்காக அவர் வர மாட்டார் என்றேனே!" என்றாள் நளினி, வருத்தப் பாவனையையே தொடர்ந்து.
"அதையும் தான் பார்ப்போமே! அவன் வந்தாலும், வராவிட்டாலும், அது உனக்கு லாபமாகத்தான் முடியும். எங்கள் கருத்துப்படி, அவன் வந்தான் என்றால், நீ அவனோடு சேர்ந்து போகலாம். அப்படி அந்த ராஸ்கல் வராவிட்டால், நீ சொன்னது உண்மை என்று ஆகும். அப்போது, உன்னைக் கடத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, நாங்களே உன்னைத் தனியாக அனுப்பி வைத்து விடுவோம். அதனால், எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்பதில் உனக்கு என்ன பிரச்சனை, சொல்லு."
அவன் ஏதோ விட் அடித்து விட்டாற் போல, எல்லோரும் சேர்ந்து சிரிக்கக் காரணம் புரிந்து, நளினிக்கு வாய் உலர்ந்தது.
அவளைப் பரலோகத்துக்கு அனுப்பி வைப்பது பற்றியல்லவா, அவர்களுடைய தலைவன் பேசுகிறான். அவர்களுக்குச் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?
இப்போது அவள் வகையாக மாட்டிக் கொண்டாளே!
இவ்வளவு புத்தி இல்லாமலா, இவர்கள் இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் எல்லாம் செய்ய முடியும்?
இப்போது போன் பண்ண மறுத்தால், அவள் சொன்னது அத்தனையும் பொய் என்று உடனேயே தெளிவாகிவிடும். அதற்காக வேறு, அவளை என்ன மாதிரிக் கொடுமைகள் செய்வார்களோ?
ஆனால், அந்தக் கொடுமைகளுக்குப் பயந்து போன் பண்ணினாலோ, புவனேந்திரன் நிச்சயம் வந்து விடுவான். இந்த அரக்கர்கள் அவனை அழிக்காமல் விட மாட்டார்கள்.
சட்டென ஒன்று அவள் மனதில் பட்டது.
எப்படியும், அவளது சாவு உறுதிதானே! அதைத்தானே, 'அனுப்பி வைப்பதாக'ச் சொல்லி அவர்கள் விலா வெடிக்கச் சிரித்தது.
புவனன் வந்தால், அவனோடு அல்லது தனியாகவேனும் அவளைச் சாகடித்து விடுவது என்பது, இவர்களது முடிவு. இங்கே, இவர்கள் முடிவுதான் நடக்க முடியும்.
எப்படியும் அவள் சாகத்தான் வேண்டும் என்றால், தனியாகச் சாவதே மேல் அல்லவா?
அதிலும், புவனனைக் காப்பதில் சாவது என்றால், அந்தச் சாவுக்கே பெருமைதான்.
அவனோடு சேர்ந்து வாழ முடியாது போகிறதே என்று நெஞ்சை அடைத்துக் கொண்டு வரத்தான் செய்தது. ஆனால், அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இது நேரம் அல்ல.
சுருள முயன்ற முதுகுத் தண்டை நிமிர்த்தி அமர்ந்து, "என்னால் முடியாது. உனக்குத் தேவை என்றால், நீயே புவனனுக்கு போன் செய்து கொள்!" என்றாள் அமர்த்தலாக.
ஆனால், கொத்தாக அவளது கூந்தலைப் பிடித்துத் தூக்கி, அவளை அவன் நிறுத்திய விதத்தில், வலியால் நளினியின் கண்களில் நீர் சுரந்தது.
எட்டி உதைப்பதற்கு வழியின்றி, அந்தத் தலைவன் எச்சரிக்கையோடு நின்றான். மற்ற மூவரும் கூட, அவளைத் தாக்குவதற்குத் தயாராகவே இருந்தார்கள்.
"கிண்டலாடீ? அவன் நம்ப மாட்டான் என்று, உனக்குத் தெரியாது? உன் குரல் அவனுக்குக் கேட்கா விட்டால், நீ எங்கள் வசம் இருப்பதையே, அவன் நம்பப் போவதில்லை. அதிலும் உயிரோடு இருக்கிறாய் என்று, நிச்சயமாக நம்பமாட்டான். ஒரு மடத்தனத்தை, இரண்டாம் முறை செய்து ஏமாற, அவன் ஒன்றும் முட்டாள் அல்ல என்பது, எங்களுக்குத் தெரியும்."
கடவுளே! என்னவோ, அவளே கேட்டால்தான் கவனமாக புவனனே ஃபைலை எடுத்து வருவான், அது இது என்று கதை விட்டானே. கடைசியில், இதுவா விஷயம்?
ரதியைக் கொன்ற பிறகும், அவளைக் கொன்று விடப் போவதாக மிரட்டியே புவனனிடம் பல லட்சங்கள் பறித்தார்களே. அப்போது, இருபத்தோரு வயது இளைஞனாக இருந்த புவனனும், ரதி உயிரோடு இருப்பதாக நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தான்.
ஆனால், இன்றையப் புவனனை அப்படி ஏமாற்ற முடியாது.
தன்னை இவர்கள் முன்பே கொல்லாததன் காரணம் நளினிக்கு இப்போது புரிந்தது. நல்ல விதமாகப் பேசியதன் காரணமும்.
இப்போது புவனனைப் பிடிப்பதற்கு, இவர்களுக்கு அவளது குரல் தேவைப்படுகிறது. அதாவது, அவனைப் பிடிக்கும் வரை, அவளது குரலுக்காக வேனும், அவளைக் கொல்ல மாட்டார்கள்.
ஆனால், தன் உயிருக்கு உடனடி ஆபத்தில்லை என்பதை விடவும், இதில் புவனனைக் காப்பாற்ற ஒரு வழி கிடைத்ததை எண்ணியே, நளினிக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது.
அவனுடன் பேச மாட்டேன் என்று, அவள் பிடிவாதமாக இருந்துவிட்டால், இவர்களால் புவனனை நெருங்க முடியாது.
என்ன, சில பல உதைகள், சித்திரவதைகள் தாங்க வேண்டியிருக்கும். அவ்வளவுதானே? தாங்கிக் கொண்டால் போகிறது.
எனவே, தலைநிமிர்ந்து, "என்ன ஆனாலும், புவனனுக்கு நான் போன் செய்யப் போவது இல்லை. அவரை இங்கே வரவழைக்கப் போவதும் இல்லை," என்றாள் அவள்.
அடி உதைகளை எதிர்பார்த்துதான் நளினி இதைச் சொன்னது.
ஆனால், இந்தத் துறையில் தாங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று அவர்கள், மறுபடியும் அவளுக்கு நிரூபித்தார்கள்.
ஆத்திரத்தில் முகம் சிவக்க, "அவனை நீ என்னடி வரவழைப்பது? இந்த போனில் உன் கதறலைக் கேட்டு, அவனே இங்கே ஓடி வரப் போகிறான். அவனுக்கு, நீ அழைப்பதை விட, நீ உயிரோடு இருக்கிறாய் என்பதற்கான ஆதாரம் தான் தேவை. உன் அலறலும், கதறலும் அதற்குப் போதும்," என்று அவளிடம் சொல்லிவிட்டுத் தன் கூட்டாளிகளைப் பார்த்தான், குழுத் தலைவன்.
பார்வையிலேயே அவனது மனதை அறிந்தவர்கள் போல, இருவர் அவளது கரங்களை இறுகப் பற்றினார்கள்.
"இவள் சாதாரண அடி உதைக்கெல்லாம், வாயைத் திறக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். ஆனால்..." என்று ஒரு குரூரத்துடன் அவளை நோக்கி, "நாங்கள் நாலு பேர் வக்கிரம் பிடித்த நாலு ஆண்கள். நீ ஒரு பெண். எங்களால் உன்னை என்னென்ன மாதிரிக் கேவலப்படுத்திக் கதற வைக்க முடியும் தெரியுமா?" என்று அவன் மிரட்டுகையில் நளினிக்குச் சட்டென ரதியின் நினைவு வந்தது.
'காட்டுப் பூனை போல அலறியடித்துக் கடித்துப் பிராண்டி ஆர்ப்பாட்டம்' செய்தாள் என்று ரதியைப் பற்றிச் சொன்னானே! இப்படித்தானே, அவளையும் மிரட்டியிருப்பார்கள். இருபத்திரண்டு வயதில் தனக்கே வயிறு கலங்கும் போது, பாவம்! உலகம் அறியாத பதினெட்டு வயதுச் சின்னப் பெண் ரதி எப்படி அரண்டு போயிருப்பாள். அதில் பதறியடித்து கண்மண் தெரியாமல் ஓடி, சிக்கி, விடுபடத் துடித்து, கடித்து, பிராண்டி, ஒன்றும் பலனின்றி... கடவுளே! என்ன பரிதாபம்.
"...அப்போது நீ அலறுவதைக் கேட்டு அந்தப் பயல் புவனன், அவனாக இங்கே ஓடோடி வருகிறானா இல்லையா என்று நீயே பார்," என்று, அவளை மேலும் மிரள வைத்து விட்டு, செல்லில் புவனேந்திரன் செல் எண்களை அழுத்தினான், அந்தப் படுபாவி.
எதிர்ப்புறத்தில், புவனேந்திரன் போனை எடுத்திருக்க வேண்டும்.
பேசுவது யார் என்றும் கேட்டிருக்க வேண்டும்.
"எல்லாம் உன் பங்காளி தான், தம்பி! உனக்குப் பிரியமான பொண்ணு எங்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் இங்கே எங்களிடம் படுகிற கஷ்டம் என்ன என்று உனக்குத் தெரிய வேண்டாமா? செல்லைக் காதில் வைத்தபடி, அமைதியாக ஓர் ஐந்து நிமிஷங்கள் கேட்டுக் கொண்டிரு. அப்புறமாக, அவளைத் திரும்பப் பெறுவதற்காக நீ என்ன செய்ய வேண்டும் என்று, நான் உனக்குச் சொல்லுகிறேன்," என்று அவனிடம் கூறிவிட்டு, நளினியிடம் திரும்பினான் அந்த அரக்கர் குழுத் தலைவன்.
பதறக்கூடாது. ரதியைப் போல நிலையிழப்பது, இவர்களுக்கு எக்காளமாக இருக்கும்.
பூனை எலியைப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வது போல, இந்த மாதிரி வக்கிரங்களுக்கு, அது உற்சாகமான பொழுது போக்காக இருக்கும்! அதற்கு இடம் தராமல், முடிந்தவரை, இவர்களுக்கு வலி, வேதனை உண்டாக்க வேண்டும்.
கைகளை அசைக்க முடியாத நிலை, ஆனால், எவனாவது அருகில் நெருங்கினால், காலால் எட்டி உதைத்து, அவன் ஒருவன் இடுப்பையாவது உடைத்து விட வேண்டும் என்று நளினி திட்டமிட்ட போது, "ஐந்து நிமிஷங்கள் அமைதியாகக் கேட்பது எதற்கு? நேரிலேயே பார்க்க, நான் தான் இங்கேயே வந்து விட்டேனே!" என்ற குரலில் பிரமித்துத் திரும்பிப் பார்த்தால், அங்கே வாயில் அருகே புவனேந்திரன் நின்றிருந்தான்.
எல்லோருக்குமே பிரமிப்புதான்!
ஆனால், "ஐயோ!" என்று, ரதியைப் போலவே, அரண்டு மிரண்டு, நிலையிழந்து போனாள் நளினி. ஈவு இரக்கமற்ற இந்தக் கொலைகாரர்களிடம், புவனேந்திரன் மாட்டிக் கொண்டான் என்பது மட்டும்தான் அவளுக்குப் புரிந்தது.
ஓர் அசுர பலத்துடன், தன் கைகளைப் பற்றியிருந்தவர்களிடம் இருந்து, தன்னை விடுவித்துக் கொண்டு, ஓடியே போய், புவனேந்திரனை மறைத்தாற் போலக் கைகளை விரித்துக் கொண்டு அவன் முன்னே போய் நின்றாள். "அவரை ஒன்றும் செய்யாதே! முதலில் என்னைக் கொன்று விட்டு, அவரிடம் போ! ஐயோ, அதற்குள் நீங்கள் ஓடி விடுங்களேன்," என்று கதறிப் பதறினாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...
» வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...
» பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» காக்கும் கை வைத்தியம்
» வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...
» பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» காக்கும் கை வைத்தியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|