புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_c10கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_m10கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_c10கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_m10கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_c10 
2 Posts - 20%
heezulia
கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_c10கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_m10கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழியைத் தூற்றாதீர்கள்! - பா. ராகவன்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 9:10 am

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சுட்டிக்காட்டப்பட்டு, கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இருவார கால நீதிமன்ற விசாரணைக்காக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுநாள்வரை வேறு எந்தக் கைது நடவடிக்கைக்கும் இல்லாத அளவு, இந்தச் செய்தி வெளியானது முதல் இணையத்திலும் வெளியிலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் ஆவேசத்தையும் ஒருங்கே பார்க்கிறேன். தமிழகப் பொதுத் தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாகியிருந்தால் இன்று இச்சம்பவம் நடைபெற்றிருக்குமா என்று தொலைபேசியில் இது குறித்து உரையாடிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். தெய்வமும் இப்போதெல்லாம் உடனுக்குடன் கணக்குகளை பைசல் செய்துவிடுகிறது என்று ஒருவர் சொன்னார். சென்ற வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் வந்தன, இந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது, அடுத்த வெள்ளிக்கிழமை வேறு ஏதாவது அவசியம் நடக்கும் பாருங்கள் என்று இன்னொரு நண்பர் கலைஞரின் புதிய வெள்ளிக்கிழமை ராசி குறித்து அறிவித்தார். அவரே. பிப்ரவரி 17ம் தேதி முதல் ஆ. ராசா திகார் சிறையில் இருக்கிறார், கலைஞர் எப்படி அம்போவென்று அவரைக் கழற்றிவிட்டுவிட்டார் பாருங்கள்! அந்தப் பாவத்துக்கு இது சரியான தண்டனை என்றும் சொன்னார்.
நிச்சயமாக ஒரு பெரிய முறைகேடு / மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆ. ராசாவில் ஆரம்பித்து கனிமொழியில் முடிகிற விஷயம் இல்லை இது. எத்தனை காலம் விசாரணை நீளப்போகிறதோ தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஏராளமான பெரும்புள்ளிகள் உள்பட இந்த அலையில் அடித்துவரப்போகிற அழுக்குகள் அதிகமாகத்தான் இருக்கப்போகிறது. தேசிய அளவில், சாதி-இன-மத-மொழி-கட்சி பேதங்கள் கடந்து பலபேர் இணைந்து புரிந்திருக்கும் ஊழல் இது. ஏற்கெனவே டைம் பத்திரிகை வரை புகழ்பெற்றுவிட்டது. சுதந்தர பாரதத்தின் ஊழல் வரலாறில் தனிச்சிறப்பிடம் பெறப்போகிற முறைகேடு என்பது தெளிவாகிவிட்டது.
இதில் கனிமொழியின் பங்கேற்பும் கைதும் அத்தனை பெரிதா? மிக நிச்சயமாக, அவரைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘பங்களிப்பு’ வேறு பலரால் செய்யப்பட்டிருக்கிறது. காலக்கிரமத்தில் அவையும் வெளிவரத்தான் போகின்றன. ஆனால் இந்தக் கைது சம்பவத்தைக் குறித்து குதூகலமாகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாகப் பாதகமான விளைவுகளையே உண்டாக்கும் என்று நினைக்கிறேன்.
கனிமொழி செய்தது என்ன?
அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த டிபி ரியாலிடி குழுமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம் [சினியுக்] மூலமாகக் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கிடைத்தது. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்களுள் ஒருவர் என்பதும் ஆ. ராசாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு இந்தச் சதிப்பின்னலில் ஒரு கண்ணியாக இருந்திருக்கிறார் என்பதும் அவர்மீதான குற்றச்சாட்டு. ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் நியாயமானவையே. பிழை புரிந்தார், கைதானார். தீர்ந்தது விஷயம்.
இதை எதற்காகக் கொண்டாடவேண்டும்?
கருணாநிதி சந்திக்காத வழக்குகளா? அவர் கைதானதில்லையா? ஜெயலலிதா ஏறாத நீதிமன்றப் படிகளா? இந்த தேசத்தின் பிரதமராக இருந்தவர்கள் முதல் அரசியல் பெருங்கடலின் அலை வந்து கால் தொடும் தூரத்தில் மட்டுமே வசித்து மறைந்தோர் வரை எத்தனையோ நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகளையும் அதில் சம்பந்தப்பட்டோரையும் அவர்களது கைதுகளையும் விடுதலைகளையும் வழக்கு மறக்கடிப்புகளையும் மற்றவையையும் பார்த்து வந்திருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் ஊழலுக்கு ஓர் நிரந்தர இட ஒதுக்கீடு உண்டென்பது நேரு காலம் முதலே நிரூபணமான விஷயம்.
விசாரணைக்காகக் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்கும் இத்தருணத்தை ஒரு கொண்டாட்டக் களமாக்கிக்கொள்வது – உண்மையில் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக இணையத்தளங்களிலும் நாளிதழ்களின் மின் பதிப்பில் வெளியாகும் வாசகர் கருத்துகளும் பொதுவெளியில் பேசப்படும் பேச்சுகளும் பயங்கரமாக இருக்கின்றன.
கருணாநிதியின் மகள் கைது என்றில்லை; யாருடைய தவறுகளுக்கும் வழங்கப்படும் நியாயமான நீதி உள்ளார்ந்த மகிழ்ச்சியளிப்பது இயற்கையே. ஆனால் கொண்டாடப்பட வேண்டியதா இது? அவமானமல்லவா? சர்வதேச அளவில் நம்மைப் பார்த்துச் சிரிக்க நாமளிக்கும் வாய்ப்பல்லவா? இந்த வழக்கின் தலைகுனிவு கனிமொழிக்கு மட்டுமா? நமக்கில்லையா? நல்லவர்கள் என்று நாம் பார்த்து நியமித்தவர்கள் செய்த காரியமல்லவா இது?
திமுகவின் தேர்தல் தோல்வி என்பது, ஆட்சிக்காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை. கனிமொழி கைது, சம்பந்தப்பட்ட வழக்கில் அவரது தொடர்பு ஊர்ஜிதமாகிக்கொண்டிருப்பதற்கான அறிவிப்பு. திமுக ஜெயித்திருந்தால் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்க மாட்டார் என்பதெல்லாம் ஊகங்கள். நீதித்துறையைக் கேலிக்கூத்தாக்கும் முயற்சி. ஒருவேளை கைது நடவடிக்கை சற்று தள்ளிப்போயிருக்கலாமே தவிர, முற்றிலும் தவிர்க்கப்பட வாய்ப்பில்லை.
யோசித்துப் பார்த்தால், பத்திரிகையாளராக இருந்தபோது குறிப்பிடத்தக்க விதத்தில் அவர் ஏதும் செய்யவில்லை. கவிஞராகக் கனிமொழியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இலங்கையில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நாள்களில் ஈழப் போர்க்களத்தில் இருந்த முக்கியமான சிலர் அவருக்கு எழுதிய கடிதங்கள் என்று சிலவற்றைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு செல்ல மகளாகத் தந்தையை இன்ஃப்ளுயன்ஸ் செய்தோ, பொறுப்புள்ள உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அப்பிரச்னையை அழுத்தமாக எழுப்பியோ இழப்புகளைச் சற்றுக் குறைக்க முயற்சி செய்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் செய்யவில்லை. ஒரு சராசரி அரசியல்வாதிக்குரிய அனைத்துக் கல்யாண குணங்களுடன் ஒரு பெரும் ஊழலின் ஒரு கண்ணியாக இன்று கைதாகிச் சிறைக்குச் சென்றிருக்கிறார். கருணாநிதியின் மகள் என்பது இக்கெட்ட வெளிச்சத்தின் வீரியத்தைக் கூட்டிக்காட்டுகிறது.
தூற்றத் தோன்றுவது இயற்கையே. ஆனால் பிரச்னையின் ஆழத்தை நோக்காமல், சம்பவம் விளைவித்த உடனடிக் கிளர்ச்சியின் விளைவாக மட்டுமே வெளிப்பாடுகள் அமைவது அவரை மேலும் பிரபலப்படுத்தி, அனுதாபக் கோட்டின் விளிம்புக்கு மட்டுமே இட்டுச்செல்லும். பிரச்னையை திசை திருப்பி, நீர்க்கச் செய்யும்.
நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதியில் சிறு கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கிறது. மண் சுமக்கும் இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். ஜெயலலிதா முதல்வர் ஆனார். சென்றமுறை கருணாநிதியைக் கைது செய்தார்கள். ஜெயலலிதா முதல்வர் ஆனார். இந்த முறை கனிமொழியைக் கைது செய்தார்கள்!
அனுதாபம் ஆபத்தானது. தூற்றல்களைக் காட்டிலும்.


http://www.writerpara.com/paper/?p=2255

இதற்க்கு வந்த கருத்து மேலே உள்ள தளத்தில் சென்று படிக்கவும்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 23, 2011 9:42 am

தாமு wrote:ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சுட்டிக்காட்டப்பட்டு, கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இருவார கால நீதிமன்ற விசாரணைக்காக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுநாள்வரை வேறு எந்தக் கைது நடவடிக்கைக்கும் இல்லாத அளவு, இந்தச் செய்தி வெளியானது முதல் இணையத்திலும் வெளியிலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் ஆவேசத்தையும் ஒருங்கே பார்க்கிறேன். தமிழகப் பொதுத் தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாகியிருந்தால் இன்று இச்சம்பவம் நடைபெற்றிருக்குமா என்று தொலைபேசியில் இது குறித்து உரையாடிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். தெய்வமும் இப்போதெல்லாம் உடனுக்குடன் கணக்குகளை பைசல் செய்துவிடுகிறது என்று ஒருவர் சொன்னார். சென்ற வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் வந்தன, இந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது, அடுத்த வெள்ளிக்கிழமை வேறு ஏதாவது அவசியம் நடக்கும் பாருங்கள் என்று இன்னொரு நண்பர் கலைஞரின் புதிய வெள்ளிக்கிழமை ராசி குறித்து அறிவித்தார். அவரே. பிப்ரவரி 17ம் தேதி முதல் ஆ. ராசா திகார் சிறையில் இருக்கிறார், கலைஞர் எப்படி அம்போவென்று அவரைக் கழற்றிவிட்டுவிட்டார் பாருங்கள்! அந்தப் பாவத்துக்கு இது சரியான தண்டனை என்றும் சொன்னார்.
நிச்சயமாக ஒரு பெரிய முறைகேடு / மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆ. ராசாவில் ஆரம்பித்து கனிமொழியில் முடிகிற விஷயம் இல்லை இது. எத்தனை காலம் விசாரணை நீளப்போகிறதோ தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஏராளமான பெரும்புள்ளிகள் உள்பட இந்த அலையில் அடித்துவரப்போகிற அழுக்குகள் அதிகமாகத்தான் இருக்கப்போகிறது. தேசிய அளவில், சாதி-இன-மத-மொழி-கட்சி பேதங்கள் கடந்து பலபேர் இணைந்து புரிந்திருக்கும் ஊழல் இது. ஏற்கெனவே டைம் பத்திரிகை வரை புகழ்பெற்றுவிட்டது. சுதந்தர பாரதத்தின் ஊழல் வரலாறில் தனிச்சிறப்பிடம் பெறப்போகிற முறைகேடு என்பது தெளிவாகிவிட்டது.
இதில் கனிமொழியின் பங்கேற்பும் கைதும் அத்தனை பெரிதா? மிக நிச்சயமாக, அவரைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘பங்களிப்பு’ வேறு பலரால் செய்யப்பட்டிருக்கிறது. காலக்கிரமத்தில் அவையும் வெளிவரத்தான் போகின்றன. ஆனால் இந்தக் கைது சம்பவத்தைக் குறித்து குதூகலமாகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாகப் பாதகமான விளைவுகளையே உண்டாக்கும் என்று நினைக்கிறேன்.
கனிமொழி செய்தது என்ன?
அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த டிபி ரியாலிடி குழுமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம் [சினியுக்] மூலமாகக் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கிடைத்தது. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்களுள் ஒருவர் என்பதும் ஆ. ராசாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு இந்தச் சதிப்பின்னலில் ஒரு கண்ணியாக இருந்திருக்கிறார் என்பதும் அவர்மீதான குற்றச்சாட்டு. ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் நியாயமானவையே. பிழை புரிந்தார், கைதானார். தீர்ந்தது விஷயம்.
இதை எதற்காகக் கொண்டாடவேண்டும்?
கருணாநிதி சந்திக்காத வழக்குகளா? அவர் கைதானதில்லையா? ஜெயலலிதா ஏறாத நீதிமன்றப் படிகளா? இந்த தேசத்தின் பிரதமராக இருந்தவர்கள் முதல் அரசியல் பெருங்கடலின் அலை வந்து கால் தொடும் தூரத்தில் மட்டுமே வசித்து மறைந்தோர் வரை எத்தனையோ நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகளையும் அதில் சம்பந்தப்பட்டோரையும் அவர்களது கைதுகளையும் விடுதலைகளையும் வழக்கு மறக்கடிப்புகளையும் மற்றவையையும் பார்த்து வந்திருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் ஊழலுக்கு ஓர் நிரந்தர இட ஒதுக்கீடு உண்டென்பது நேரு காலம் முதலே நிரூபணமான விஷயம்.
விசாரணைக்காகக் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்கும் இத்தருணத்தை ஒரு கொண்டாட்டக் களமாக்கிக்கொள்வது – உண்மையில் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக இணையத்தளங்களிலும் நாளிதழ்களின் மின் பதிப்பில் வெளியாகும் வாசகர் கருத்துகளும் பொதுவெளியில் பேசப்படும் பேச்சுகளும் பயங்கரமாக இருக்கின்றன.
கருணாநிதியின் மகள் கைது என்றில்லை; யாருடைய தவறுகளுக்கும் வழங்கப்படும் நியாயமான நீதி உள்ளார்ந்த மகிழ்ச்சியளிப்பது இயற்கையே. ஆனால் கொண்டாடப்பட வேண்டியதா இது? அவமானமல்லவா? சர்வதேச அளவில் நம்மைப் பார்த்துச் சிரிக்க நாமளிக்கும் வாய்ப்பல்லவா? இந்த வழக்கின் தலைகுனிவு கனிமொழிக்கு மட்டுமா? நமக்கில்லையா? நல்லவர்கள் என்று நாம் பார்த்து நியமித்தவர்கள் செய்த காரியமல்லவா இது?
திமுகவின் தேர்தல் தோல்வி என்பது, ஆட்சிக்காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை. கனிமொழி கைது, சம்பந்தப்பட்ட வழக்கில் அவரது தொடர்பு ஊர்ஜிதமாகிக்கொண்டிருப்பதற்கான அறிவிப்பு. திமுக ஜெயித்திருந்தால் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்க மாட்டார் என்பதெல்லாம் ஊகங்கள். நீதித்துறையைக் கேலிக்கூத்தாக்கும் முயற்சி. ஒருவேளை கைது நடவடிக்கை சற்று தள்ளிப்போயிருக்கலாமே தவிர, முற்றிலும் தவிர்க்கப்பட வாய்ப்பில்லை.
யோசித்துப் பார்த்தால், பத்திரிகையாளராக இருந்தபோது குறிப்பிடத்தக்க விதத்தில் அவர் ஏதும் செய்யவில்லை. கவிஞராகக் கனிமொழியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இலங்கையில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நாள்களில் ஈழப் போர்க்களத்தில் இருந்த முக்கியமான சிலர் அவருக்கு எழுதிய கடிதங்கள் என்று சிலவற்றைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு செல்ல மகளாகத் தந்தையை இன்ஃப்ளுயன்ஸ் செய்தோ, பொறுப்புள்ள உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அப்பிரச்னையை அழுத்தமாக எழுப்பியோ இழப்புகளைச் சற்றுக் குறைக்க முயற்சி செய்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் செய்யவில்லை. ஒரு சராசரி அரசியல்வாதிக்குரிய அனைத்துக் கல்யாண குணங்களுடன் ஒரு பெரும் ஊழலின் ஒரு கண்ணியாக இன்று கைதாகிச் சிறைக்குச் சென்றிருக்கிறார். கருணாநிதியின் மகள் என்பது இக்கெட்ட வெளிச்சத்தின் வீரியத்தைக் கூட்டிக்காட்டுகிறது.
தூற்றத் தோன்றுவது இயற்கையே. ஆனால் பிரச்னையின் ஆழத்தை நோக்காமல், சம்பவம் விளைவித்த உடனடிக் கிளர்ச்சியின் விளைவாக மட்டுமே வெளிப்பாடுகள் அமைவது அவரை மேலும் பிரபலப்படுத்தி, அனுதாபக் கோட்டின் விளிம்புக்கு மட்டுமே இட்டுச்செல்லும். பிரச்னையை திசை திருப்பி, நீர்க்கச் செய்யும்.
நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதியில் சிறு கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கிறது. மண் சுமக்கும் இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். ஜெயலலிதா முதல்வர் ஆனார். சென்றமுறை கருணாநிதியைக் கைது செய்தார்கள். ஜெயலலிதா முதல்வர் ஆனார். இந்த முறை கனிமொழியைக் கைது செய்தார்கள்!
அனுதாபம் ஆபத்தானது. தூற்றல்களைக் காட்டிலும்.


http://www.writerpara.com/paper/?p=2255

இதற்க்கு வந்த கருத்து மேலே உள்ள தளத்தில் சென்று படிக்கவும்

வணக்கம் தோழர் ராகவன்,
ஒரு செய்தியை மிக சுளுவாக மறக்கிறோமா?
இந்த ஊழலில் ஒரு கருவிதான் ராசா. இந்த ஊழலுக்காகவே ராசாவை அந்த இடத்திற்கு கொண்டு வந்தவர்கள் டாடாவும் கனிமொழியும்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 38691590

இரா.எட்வின்

கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 9892-41
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 23, 2011 9:46 am

மெல்ல ஊசி நுழைத்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர்... இவர் சொல்ல வருவது என்ன என்று தான் புரியவில்லை. கைது சரி என்கிறார். தூற்றாதீர்கள் என்கிறார். அப்படி இல்லாது அவரைப்பாராட்ட வேண்டும் என்று சொல்கிறாரா..?






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 10:35 am

எனக்கு புரியலை கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Mon May 23, 2011 10:48 am

ஒன்று மட்டும் நிச்சையம் இந்த ஊழலில் தண்டனை என்பது நிச்சயமாக இல்லை குறைந்தபட்சமாக நீதிமன்ற காவல் என்ற தண்டனை கிடைத்ததே மகிழ்ச்சிதான்.அனுதாபம் என்பது ஏற்படத்தான் செய்யும் இதை விளக்க இன்று மீடியாக்கள் பலம் மிகஅதிகமாக உள்ளது பதினைந்து வருடங்களுக்கு முன் என்றால் நீங்கள் செல்லியிருப்பது சரியாக இருந்து இருக்கும் பாமர மக்களின் வீடுகளில் கலைஞரின் புன்னியத்தில் டீ.வி வந்துவிட்டது மாறன் குடும்பத்தின் புன்னியத்தில் டிஸ் ஆன்டனாக்கள் கேபிள் இனைப்புகள் வந்து விட்டது டேலும் பாமரமக்கள் என்பது 1995 - ல் முடிந்துவிட்டது என்பது என் கருத்து.இன்று அவர்களின் குழந்தைகள் குறைந்தபட்சம் ஆரம்ப கல்வி முடித்துவிட்டார்கள் எனவே அனுதாபம் என்பது தலைவர்களின் துர்மரனத்தால் மட்டுமே ஏற்படும் என்பது என் தாழ்மையான கருத்து



பிரபு கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 362913
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Mon May 23, 2011 11:12 am

எனக்கு கொஞ்சம் புரிஞ்சது ! கட்டுரை ஆசிரியர் சொல்ல வந்தது இதுதான்!
1. உலக நாடுகள் அனைத்தும் நம்மை கவனிக்கின்றன.
2.நாமே இவர்களை நல்லவர்கள் என தேர்ந்தெடுத்தோம்,
இதில் நாமே நட்டமடைந்தோம்.
3.நிச்சயமாய் இது அவர்களுடைய குடுப்ப சொத்தல்ல!
நமது ஒவ்வருடைய வியர்வையும் உழைப்பும்..!
4.இது வேதனைக்குரியது..
5.அரசியலாய் பார்க்காமல்..நீதி துறைக்கும்முன் அனைவரும் சமம்!
எந்த பதவியிலிருப்பினும்,யாராக இருப்பினும்!
6.தியாகம் செய்து அன்று சிறை சென்றனர்
நாட்டையாண்டவர்கள். ஆனால் இன்று!??? கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 440806
7.நமது தேர்தல் முடிவு! கட்சிகளை தாண்டி யார் தவறு செய்தாலும்..தவறு தவறுதான் என்பதை காண்பிக்கின்றது!
(இனி யாரும் தவறு செய்ய கண்டிப்பாய் யோசிப்பார்கள்)!! கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 139731
8.ஏனெனில் மக்களின் தீர்ப்பு மகத்தானது..அது எப்போதும் சுய நலமாய் யோசிப்பது இல்லை! அது இருபுறமும் கூர்மையாய் இருக்கும் கத்தியை போல்!
(அப்பாடா எனக்கு புரிஞ்ச அளவுக்கு சொல்லிட்டேம்பா) கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 11:14 am

vvijayarani wrote:எனக்கு கொஞ்சம் புரிஞ்சது ! கட்டுரை ஆசிரியர் சொல்ல வந்தது இதுதான்!
1. உலக நாடுகள் அனைத்தும் நம்மை கவனிக்கின்றன.
2.நாமே இவர்களை நல்லவர்கள் என தேர்ந்தெடுத்தோம்,
இதில் நாமே நட்டமடைந்தோம்.
3.நிச்சயமாய் இது அவர்களுடைய குடுப்ப சொத்தல்ல!
நமது ஒவ்வருடைய வியர்வையும் உழைப்பும்..!
4.இது வேதனைக்குரியது..
5.அரசியலாய் பார்க்காமல்..நீதி துறைக்கும்முன் அனைவரும் சமம்!
எந்த பதவியிலிருப்பினும்,யாராக இருப்பினும்!
6.தியாகம் செய்து அன்று சிறை சென்றனர்
நாட்டையாண்டவர்கள். ஆனால் இன்று!??? கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 440806
7.நமது தேர்தல் முடிவு! கட்சிகளை தாண்டி யார் தவறு செய்தாலும்..தவறு தவறுதான் என்பதை காண்பிக்கின்றது!
(இனி யாரும் தவறு செய்ய கண்டிப்பாய் யோசிப்பார்கள்)!! கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 139731
8.ஏனெனில் மக்களின் தீர்ப்பு மகத்தானது..அது எப்போதும் சுய நலமாய் யோசிப்பது இல்லை! அது இருபுறமும் கூர்மையாய் இருக்கும் கத்தியை போல்!
(அப்பாடா எனக்கு புரிஞ்ச அளவுக்கு சொல்லிட்டேம்பா) கனிமொழியைத் தூற்றாதீர்கள்! -  பா. ராகவன் 838572


நன்றி நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக