Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
+8
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
அப்துல்லாஹ்
positivekarthick
balakarthik
jeylakesengg
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
FILE''திருமண உதவி கேட்கும் ஏழைப் பெண்களும், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' என்று தமிழக அரசு புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அவர் அறிவித்த கையோடு தமிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூலம் வெளியிட்டப்பட்டுள்ள அரசாணையில் இந்த புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. அந்த அளவுக்கு தங்கத்தின் விலை ஏழைகள் வாங்க முடியாத அளவுக்கு எட்டா நிலைக்குச் சென்று விட்டது. அப்படி இப்படி என்று சிறுக சிறுக நகைகளை சேர்த்து வைக்கின்றனர் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள். ஒருவழியாக நகைகளை சேர்த்து தங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அத்துடன் தமிழக அரசு கொடுத்த 20,000 ரூபாயும் அவர்களுக்கு ஒரு கடன் சுமையை குறைப்பதாக இருந்தது.
தற்போது அதற்கும் இடி விழுந்த மாதிரி வெட்டு வைத்துள்ளது தமிழக அரசு. திருமண உதவித் தொகை பெற வேண்டுமானால் பெண்ணின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 24,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று. கிராமப்புறத்தில் நெற்பயிருக்கு களை எடுக்கும் ஒரு பெண்ணின் ஒரு நாள் கூலி 100 முதல் 130 வரை கொடுக்கப்படுகிறது. மண்வெட்டியை எடுத்து வேலைக்கு சென்றால் 150 ரூபாய்க்கு குறைந்து கூலியை வாங்காமல் வருவதில்லை கிராமபுற மக்கள். இப்படி கூலிவேலைக்கு சென்று சம்பாதிக்கும் ஏழைப்பெற்றோர்களின் ஆண்டு வரும் 35 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் போது 24 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் திருமண உதவி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள எந்த வகையில் நியாயம்?
தமிழக அரசு அறிவித்துள்ளதை பார்த்தால் ஏழைகளின் ஒரு நாள் சம்பளம் ரூ.65.75 காசுதான் இருக்க வேண்டும். இந்த சம்பளத்திற்கு வேலை பார்த்த காலம் எப்போதோ மலையேறிவிட்டது.
மேலும் திருமண உதவித்தொகையை பெற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 5ஆம் வகுப்பு வரையும், ஆதிதிராவிடர் வகுப்பு உள்ளிட்ட மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டுமாம். தற்போது திருமண வயதை எட்டியுள்ள ஏழைப்பெண்களுக்கு எப்படி இந்த அறிவிப்பு சாத்தியமாகும். மீண்டும் அவர்கள் முதல் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்று நினைக்கிறாரா முதலமைச்சர் ஜெயலலிதா.
கிராமப்புறங்களில் ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பெண் பிள்ளைகள் இருந்தால் இதில் யாராவது ஒரு பெண் பிள்ளையைத்தான் படிக்க வைக்கிறார்கள். மற்ற இரண்டு பிள்ளைகளையும் தங்களுடன் கூலி வேலைக்கு அழைத்து சென்று விடுகின்றனர். அப்படி இருக்கும்போது தமிழக அரசின் இந்த அறிவிப்பு உதவியா? ஏமாற்றலா?
மேலும் ஒரு இடியை ஏழை மக்களுக்கு தூக்கிப் போட்டுள்ளார் ஜெயலலிதா. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது தமிழக அரசு! கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு அரசின் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது அதற்கும் வேட்டு வைக்கப்பட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித் திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
FILEஇந்தத் திட்டங்களையெல்லாம் தி.மு.க. அரசு நிறைவேற்றி வந்தது. ஏழைப் பெண்களின் திருமண உதவித்தொகையாக 20 ரூபாய் வழங்கியது. அதுமட்டுமின்றி திருமண உதவித்தொகை பெற்ற அதே பெண்மணியின் கர்ப்பகாலங்களில் மாதாமாதம் 700 ரூபாய் வழங்கியது. குழந்தை பிறந்த உடன் 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது. ஏழைப் பெண்களுக்கு இப்படி என்னற்ற சலுகைகளை வழங்கியது கடந்த ஆட்சி. இந்த ஆட்சி ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நேரடியாக பறிக்காமல் நிபந்தனை விதித்து தடுக்கிறது. இலவசம் கொடுப்பதும், கொடுக்காததும் ஆளும் அரசின் வசதி. ஆனால், கொடுக்கிறேன் என்று கூறி அதற்கு நிபந்தனை விதிப்பது ஏழைகள் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும்.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிபந்தனைகள் மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. மொத்தத்தில் திருமண உதவித்திட்டத்துக்கு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மூடுவிழா நடத்தப்போகிறது.
தனது பெண் பிள்ளையின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயும், 4 கிராமம் தங்கமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த ஏழை வாக்காளர்களுக்கு ஆட்சி அமைத்த ஐந்தே நாளில் முதல் அல்வாவை கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இது தவிர இன்னும் என்னென்ன திட்டங்களை கைவசம் வைத்துள்ளாரோ!
போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்.
வெப் துனியா
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அவர் அறிவித்த கையோடு தமிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூலம் வெளியிட்டப்பட்டுள்ள அரசாணையில் இந்த புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. அந்த அளவுக்கு தங்கத்தின் விலை ஏழைகள் வாங்க முடியாத அளவுக்கு எட்டா நிலைக்குச் சென்று விட்டது. அப்படி இப்படி என்று சிறுக சிறுக நகைகளை சேர்த்து வைக்கின்றனர் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள். ஒருவழியாக நகைகளை சேர்த்து தங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அத்துடன் தமிழக அரசு கொடுத்த 20,000 ரூபாயும் அவர்களுக்கு ஒரு கடன் சுமையை குறைப்பதாக இருந்தது.
தற்போது அதற்கும் இடி விழுந்த மாதிரி வெட்டு வைத்துள்ளது தமிழக அரசு. திருமண உதவித் தொகை பெற வேண்டுமானால் பெண்ணின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 24,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று. கிராமப்புறத்தில் நெற்பயிருக்கு களை எடுக்கும் ஒரு பெண்ணின் ஒரு நாள் கூலி 100 முதல் 130 வரை கொடுக்கப்படுகிறது. மண்வெட்டியை எடுத்து வேலைக்கு சென்றால் 150 ரூபாய்க்கு குறைந்து கூலியை வாங்காமல் வருவதில்லை கிராமபுற மக்கள். இப்படி கூலிவேலைக்கு சென்று சம்பாதிக்கும் ஏழைப்பெற்றோர்களின் ஆண்டு வரும் 35 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் போது 24 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் திருமண உதவி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள எந்த வகையில் நியாயம்?
தமிழக அரசு அறிவித்துள்ளதை பார்த்தால் ஏழைகளின் ஒரு நாள் சம்பளம் ரூ.65.75 காசுதான் இருக்க வேண்டும். இந்த சம்பளத்திற்கு வேலை பார்த்த காலம் எப்போதோ மலையேறிவிட்டது.
மேலும் திருமண உதவித்தொகையை பெற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 5ஆம் வகுப்பு வரையும், ஆதிதிராவிடர் வகுப்பு உள்ளிட்ட மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டுமாம். தற்போது திருமண வயதை எட்டியுள்ள ஏழைப்பெண்களுக்கு எப்படி இந்த அறிவிப்பு சாத்தியமாகும். மீண்டும் அவர்கள் முதல் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்று நினைக்கிறாரா முதலமைச்சர் ஜெயலலிதா.
கிராமப்புறங்களில் ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பெண் பிள்ளைகள் இருந்தால் இதில் யாராவது ஒரு பெண் பிள்ளையைத்தான் படிக்க வைக்கிறார்கள். மற்ற இரண்டு பிள்ளைகளையும் தங்களுடன் கூலி வேலைக்கு அழைத்து சென்று விடுகின்றனர். அப்படி இருக்கும்போது தமிழக அரசின் இந்த அறிவிப்பு உதவியா? ஏமாற்றலா?
மேலும் ஒரு இடியை ஏழை மக்களுக்கு தூக்கிப் போட்டுள்ளார் ஜெயலலிதா. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது தமிழக அரசு! கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு அரசின் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது அதற்கும் வேட்டு வைக்கப்பட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித் திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
FILEஇந்தத் திட்டங்களையெல்லாம் தி.மு.க. அரசு நிறைவேற்றி வந்தது. ஏழைப் பெண்களின் திருமண உதவித்தொகையாக 20 ரூபாய் வழங்கியது. அதுமட்டுமின்றி திருமண உதவித்தொகை பெற்ற அதே பெண்மணியின் கர்ப்பகாலங்களில் மாதாமாதம் 700 ரூபாய் வழங்கியது. குழந்தை பிறந்த உடன் 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது. ஏழைப் பெண்களுக்கு இப்படி என்னற்ற சலுகைகளை வழங்கியது கடந்த ஆட்சி. இந்த ஆட்சி ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நேரடியாக பறிக்காமல் நிபந்தனை விதித்து தடுக்கிறது. இலவசம் கொடுப்பதும், கொடுக்காததும் ஆளும் அரசின் வசதி. ஆனால், கொடுக்கிறேன் என்று கூறி அதற்கு நிபந்தனை விதிப்பது ஏழைகள் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும்.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிபந்தனைகள் மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. மொத்தத்தில் திருமண உதவித்திட்டத்துக்கு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மூடுவிழா நடத்தப்போகிறது.
தனது பெண் பிள்ளையின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயும், 4 கிராமம் தங்கமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த ஏழை வாக்காளர்களுக்கு ஆட்சி அமைத்த ஐந்தே நாளில் முதல் அல்வாவை கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இது தவிர இன்னும் என்னென்ன திட்டங்களை கைவசம் வைத்துள்ளாரோ!
போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்.
வெப் துனியா
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
இந்த கடாசி வரில எறும்பு சயிசுல கண்டிசன்ஸ் அப்லை அப்படினு இருக்குமே அதல்லாம் பாக்குரத்தில்லயா அதுபோலத்தான் இதுவும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
இலவசமே வேண்டாம் இது நான் சொல்லவில்லை மக்கள் கருத்து இது.இதை தான் எதிர்பார்த்தேன்.முக்கியமா ஒன்றை சொல்கிறேன் போன ஆட்சி மக்களை சோம்பேறி ஆக்கி விட்டது .சலசலப்பு இருக்கத்தான் செய்யும்.பின்னாடி சரியாகி விடும்.போன ஆட்சியில எங்க வீட்டுல குழந்தைக்கு 6000 வந்தது. இத்தனிக்கும் வறிய நிலையில் நாங்கள் இல்லை எனினும் இலவசம் தானே யென்று நான் எவ்வளவோ தடுத்தும் காசோலை வங்கி வந்து விட்டார்கள்.பெரிய பணக்காரர்களும் இந்த 6000 வாங்கினார்கள். இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் தானே. இது யென் மக்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. இதை நான் உறவுகள் அனைவரும் வரவேற்க வேண்டும்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்.
சகோதரரே
பூவாக இருந்தால் தானே வாசம்.
பூதமல்லவா நாம் வெட்டிய கிணற்றிலிருது கிளம்பியது.
வாசம் என்ன வாசம் நம் நிலை தான் இனி மோசம்.
சகோதரரே
பூவாக இருந்தால் தானே வாசம்.
பூதமல்லவா நாம் வெட்டிய கிணற்றிலிருது கிளம்பியது.
வாசம் என்ன வாசம் நம் நிலை தான் இனி மோசம்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
அதிமுக நம்பி ஓட்டு போட்டது கடைசியில் ஆப்பு தானா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
என்ன அக்கா இப்படியெல்லாம் தில்லு முல்லு பண்ணுராங்க.அக்கா, கொஞ்சம் அடக்கி வாசிங்க, இல்லேன்னா அங்களுக்கும் விழும் பெரிய ஆப்பு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
மழை அனைவருக்கும் பெய்கிறது. அதில் பாகுபாடு கிடையாது. அதே போல அரசு உதவிகளும் அனைவருக்கும் பொருந்தும். ஒருவருக்கு கிடைத்து மற்றவருக்கு கிடைக்காமல் போனால் வருத்தமே! (இந்த காலத்தில் மாதம் 15000 சம்பளம் வாங்கும் மக்களும் ஏழைகள் தான். இது ஏன் மற்றவர்களுக்கு புரிய மாட்டேங்குது )
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
அதுக்கு இன்னும் 5 வருசம் இருக்கு அதுக்குள்ள அடுத்த 5 ஆண்டுகளுக்கு வேண்டிய கையிருப்பை தேத்திக்குவாங்கnadesmani wrote:என்ன அக்கா இப்படியெல்லாம் தில்லு முல்லு பண்ணுராங்க.அக்கா, கொஞ்சம் அடக்கி வாசிங்க, இல்லேன்னா அங்களுக்கும் விழும் பெரிய ஆப்பு.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
அனைவருடைய ஆட்சியிலும் குறைகள் இருக்க தான் செய்யும் 100% மக்களையும் திருப்தி படுத்துவது என்பது இயலாத காரியம் தொடக்கத்தை பொறுத்து எதுவும் கூற இயலாது காத்திருப்போம் சில வருடங்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஏழைப் பெண்களுக்கு ஜெயலலிதா கொடுத்த முதல் அல்வா
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» பொறுப்பாளர்கள் நீக்கம். ஜெயலலிதா அதிரடி
» மாறன் சகோதரர்களிடம் சமரசம் ஏன்? - ஜெயலலிதா
» 950 வகை சிகிச்சை முறைக்கு அனுமதி- புதிய காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
» விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» பொறுப்பாளர்கள் நீக்கம். ஜெயலலிதா அதிரடி
» மாறன் சகோதரர்களிடம் சமரசம் ஏன்? - ஜெயலலிதா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|