Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
5 posters
Page 1 of 1
கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் பல மணி நேரம் கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விளையாட்டால் மாணவர்களின் உடல் மற்றும் மன நலம் பாதிக்கும் என மன நல டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு வருவதற்கு முன் கோடை விடுமுறை என்றால் பள்ளி மாணவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு செல்வது, மற்ற நண்பர்களுடன் சேர்ந்து வீதிகளில் ஓடி பிடித்து விளையாடுவது மற்றும் கோடை கால பயிற்சி முகாம்களில் சேர்ந்து பயிற்சிபெறுவது வழக்கம். ஆனால் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்த பிறகு கோடை விடுமுறையை மாணவர்கள் தங்களது வீட்டில் உள்ள டிவியின் முன் அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று கேம் விளையாடுவதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இத்தகைய மாணவர்களுக்காக தமிழகத்தின் நகர் பகுதிகளில் புற்றீசல் போல ஆங்காங்கே கம்ப்யூட்டர் சென்டர்கள் உருவாகியுள்ளன. இங்குள்ள கம்ப்யூட்டர்களில் பிளே ஸ்டேஷன் மற்றும் கேம்ஸ் சிடிக்கள் மூலமும் ஏராளமான விளையாட்டுகளை பதிவு செய்து வைத்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் மாணவர்கள் வெயிலில் சென்று விளையாடுவதை தவிர்த்து சக நண்பர்களுடன் கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்று பிடித்தமான கேம்களை ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டிற்கு கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள் மணிக்கு 10 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்கின்றனர். இந்த தொகையை மாணவர்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ வாங்கி வந்து கம்ப்யூட்டர் கேம்களை விளையாடி வருகின்றனர். இதில் இரண்டு பேர் பயங்கரமாக மோதிக் கொள்ளக்கூடிய ஸ்நாக் டவுன், குத்துச்சண்டை, தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கிசூடு நடத்துதல் போன்ற கம்ப்யூட்டர் கேம்களை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்து விளையாடுகின்றனர். இதுதவிர சீசனிற்கு தகுந்தாற்போல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போட்டி, கார் மற்றும் பைக் ரேஸ் போன்ற விளையாட்டுக்களை சில மாணவர்கள் விளையாடுகின்றனர். கம்ப்யூட்டர் கேம்களை மாணவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து விளையாட கம்ப்யூட்டர் சென்டரில் வசதி செய்துள்ளனர். இந்த கேம்களை மாணவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடுகின்றனர்.
அதுபோல் மாணவிகளில் ஒரு தரப்பினர் கம்ப்யூட்டர் கேம்களை வீட்டில் உள்ள டிவியிலோ அல்து சக தோழிகளுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று விளையாடி வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தற்போது பெரும்பாலான கம்ப்யூட்டர் சென்டர்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கம்ப்யூட்டர் கேம்களை பல மணி நேரம் தொடர்ந்து விளையாடுவதால் மாணவர்களிடையே உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். இது குறித்து நெல்லை சிநேகா மன நல மருத்துவ மைய டாக்டர் பன்னீர் செல்வன் கூறியதாவது; இன்றைய மாணவர்களிடையே கம்ப்யூட்டர் கேம் என்பது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மாணவர்கள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை விளையாடலாம். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கோடை வெயிலில் அலைவதை தவிர்த்து நண்பர்களுடன் வீட்டில் உள்ள டிவியிலோ அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றோ பல மணி நேரம் கம்ப்யூட்டர் கேம் விளையாடுகின்றனர். இதனால் நாளடைவில் மாணவர்களிடையே கவனக்குறைவு, மறதி, படிப்பில் ஆர்வமின்மை, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. ஸ்நாக் டவுன் போன்ற மோதல் காட்சிகள் தொடர்பான விளையாட்டுக்களை விளையாடும் மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் உளைச்சல் காரணமாக சிறிய விஷயங்களுக்காக கூட பெற்றோர் மற்றும் சகோதர்களிடம் அடிக்கடி சண்டை போடும் பழக்கம் அதிகரிக்கும். கம்ப்யூட்டர் கேம் விளையாடும் மாணவர்களுக்கு நாளடைவில் கண்ணில் அழுத்தம், வலி ஏற்படுவதோடு, கம்ப்யூட்டர் கேமிற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகும். எனவே பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை கம்ப்யூட்டர் கேம்கள் விளையாடுவதை அனுமதிக்க கூடாது.
இதற்கு மாறாக உடலுக்கு வலிமையும், சுறுசுறுப்பையும் அளிக்கும் வகையில் சக நண்பர்களுடன் ஓடி விளையாடுதல், நீச்சல் பயிற்சி போன்ற விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்கலாம். இந்த விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வெற்றி, தோல்வியில் இருந்து பாடம் கற்பிப்பதோடு, உடல் மற்றும் மனநலம் வலிமை பெற்று திகழ்கின்றனர் என்பது ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு மன நல டாக்டர் பன்னீர்செல்வன் தெரிவித்தார்.
தினமலர்
இத்தகைய மாணவர்களுக்காக தமிழகத்தின் நகர் பகுதிகளில் புற்றீசல் போல ஆங்காங்கே கம்ப்யூட்டர் சென்டர்கள் உருவாகியுள்ளன. இங்குள்ள கம்ப்யூட்டர்களில் பிளே ஸ்டேஷன் மற்றும் கேம்ஸ் சிடிக்கள் மூலமும் ஏராளமான விளையாட்டுகளை பதிவு செய்து வைத்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் மாணவர்கள் வெயிலில் சென்று விளையாடுவதை தவிர்த்து சக நண்பர்களுடன் கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்று பிடித்தமான கேம்களை ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டிற்கு கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள் மணிக்கு 10 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்கின்றனர். இந்த தொகையை மாணவர்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ வாங்கி வந்து கம்ப்யூட்டர் கேம்களை விளையாடி வருகின்றனர். இதில் இரண்டு பேர் பயங்கரமாக மோதிக் கொள்ளக்கூடிய ஸ்நாக் டவுன், குத்துச்சண்டை, தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கிசூடு நடத்துதல் போன்ற கம்ப்யூட்டர் கேம்களை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்து விளையாடுகின்றனர். இதுதவிர சீசனிற்கு தகுந்தாற்போல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போட்டி, கார் மற்றும் பைக் ரேஸ் போன்ற விளையாட்டுக்களை சில மாணவர்கள் விளையாடுகின்றனர். கம்ப்யூட்டர் கேம்களை மாணவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து விளையாட கம்ப்யூட்டர் சென்டரில் வசதி செய்துள்ளனர். இந்த கேம்களை மாணவர்கள் பல மணி நேரம் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடுகின்றனர்.
அதுபோல் மாணவிகளில் ஒரு தரப்பினர் கம்ப்யூட்டர் கேம்களை வீட்டில் உள்ள டிவியிலோ அல்து சக தோழிகளுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று விளையாடி வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தற்போது பெரும்பாலான கம்ப்யூட்டர் சென்டர்களில் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கம்ப்யூட்டர் கேம்களை பல மணி நேரம் தொடர்ந்து விளையாடுவதால் மாணவர்களிடையே உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். இது குறித்து நெல்லை சிநேகா மன நல மருத்துவ மைய டாக்டர் பன்னீர் செல்வன் கூறியதாவது; இன்றைய மாணவர்களிடையே கம்ப்யூட்டர் கேம் என்பது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மாணவர்கள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை விளையாடலாம். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் கோடை வெயிலில் அலைவதை தவிர்த்து நண்பர்களுடன் வீட்டில் உள்ள டிவியிலோ அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றோ பல மணி நேரம் கம்ப்யூட்டர் கேம் விளையாடுகின்றனர். இதனால் நாளடைவில் மாணவர்களிடையே கவனக்குறைவு, மறதி, படிப்பில் ஆர்வமின்மை, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. ஸ்நாக் டவுன் போன்ற மோதல் காட்சிகள் தொடர்பான விளையாட்டுக்களை விளையாடும் மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் உளைச்சல் காரணமாக சிறிய விஷயங்களுக்காக கூட பெற்றோர் மற்றும் சகோதர்களிடம் அடிக்கடி சண்டை போடும் பழக்கம் அதிகரிக்கும். கம்ப்யூட்டர் கேம் விளையாடும் மாணவர்களுக்கு நாளடைவில் கண்ணில் அழுத்தம், வலி ஏற்படுவதோடு, கம்ப்யூட்டர் கேமிற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகும். எனவே பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை கம்ப்யூட்டர் கேம்கள் விளையாடுவதை அனுமதிக்க கூடாது.
இதற்கு மாறாக உடலுக்கு வலிமையும், சுறுசுறுப்பையும் அளிக்கும் வகையில் சக நண்பர்களுடன் ஓடி விளையாடுதல், நீச்சல் பயிற்சி போன்ற விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்கலாம். இந்த விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வெற்றி, தோல்வியில் இருந்து பாடம் கற்பிப்பதோடு, உடல் மற்றும் மனநலம் வலிமை பெற்று திகழ்கின்றனர் என்பது ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு மன நல டாக்டர் பன்னீர்செல்வன் தெரிவித்தார்.
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
விளையாட்டு விபரிதம்! பெற்றொர்களெ தயவு செய்து உங்கள் பிள்ளைகள் மீது கவனம் வையுங்கள்;
vvijayarani- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
Re: கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
பயனுள்ள பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி மகா பிரபு
பகிர்ந்தமைக்கு நன்றி மகா பிரபு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
இங்கே மேற்குலகில் இன்னும் மோசமாகிக்கொண்டிருக்கிறது. என்னுடையமகன் மூன்று கேம் விளையாடும் கொன்சோல் வைத்திருக்கிறார். வயது டீன் ஏஜ் தான். அவர் நண்பர்களும் அதேதான். விடுமுறை என்றால் காதில் ஹெட்போன் போல ஒன்றிக்கொளுவிக் கொண்டு இணையமூலம்மாக அவரவ்ர் வீடுகளில் இருந்துகொண்டே Call duty என்றொரு விளையாட்டை போட்டுவிட்டு அவர்கள் ஒன்றாகக்கூடி சுட்டு விளையாடுவார்கள்.
வீடு சுற்றி நாங்கள் இருப்பதையும் மறந்து அவர்கள் அந்த உலகத்துக்குள் இருப்பார்கள். பலமாக கத்தி ”சுடுடா அட என்னடா விட்டுட்டியே. பின்னல பாரடா நிக்குறான் சுடுடா இதோ நான் சுட்டுட்டேன். நீ என்னடா பயப்பிடுறியா” இப்படி ஆங்கிலத்தி உரையாடி அவர்கள் விளையாடுவது . தடுக்கலாம் என்கிறீங்களா/
முடியவில்லை உலகம் மாறிவருகிறது...??
வீடு சுற்றி நாங்கள் இருப்பதையும் மறந்து அவர்கள் அந்த உலகத்துக்குள் இருப்பார்கள். பலமாக கத்தி ”சுடுடா அட என்னடா விட்டுட்டியே. பின்னல பாரடா நிக்குறான் சுடுடா இதோ நான் சுட்டுட்டேன். நீ என்னடா பயப்பிடுறியா” இப்படி ஆங்கிலத்தி உரையாடி அவர்கள் விளையாடுவது . தடுக்கலாம் என்கிறீங்களா/
முடியவில்லை உலகம் மாறிவருகிறது...??
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கம்ப்யூட்டர் கேம் மீது மாணவர்களுக்கு : உடல், மன நலம் பாதிக்கும் அபாயம்
நன்றி நண்பர்களே. திருச்சியில் ஒரு ப்ரவுசிங் சென்டர் இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னால் மணிக்கு 5 ரூபாய்தான். ஒரு கேபினில் 3 பேர் கூட அமரலாம். அங்கு பார்த்தால் 10 வயது முதல் உள்ள பள்ளி மாணவர்கள் தான் அதிக அளவில் கேம் விளையாடுவார்கள். பள்ளிக்கு செல்லாமல் தினசரி வரும் மாணவர்களும் உண்டு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» 90 சதவீத மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு : டாக்டர்கள் அதிர்ச்சி
» நைட் ஷிப்ட் வேலை: உடல் நலம் பாதிக்கும் – எச்சரிக்கை ரிப்போர்ட்
» கம்ப்யூட்டர் இல் TVவீடியோ கேம்
» கம்ப்யூட்டர் கேம் ஆடும் சிறுவர்களுக்கு ஆபத்து
» கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்
» நைட் ஷிப்ட் வேலை: உடல் நலம் பாதிக்கும் – எச்சரிக்கை ரிப்போர்ட்
» கம்ப்யூட்டர் இல் TVவீடியோ கேம்
» கம்ப்யூட்டர் கேம் ஆடும் சிறுவர்களுக்கு ஆபத்து
» கெமிக்கல சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|