புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகில் அதிரடி Poll_c10அழகில் அதிரடி Poll_m10அழகில் அதிரடி Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அழகில் அதிரடி Poll_c10அழகில் அதிரடி Poll_m10அழகில் அதிரடி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அழகில் அதிரடி Poll_c10அழகில் அதிரடி Poll_m10அழகில் அதிரடி Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அழகில் அதிரடி Poll_c10அழகில் அதிரடி Poll_m10அழகில் அதிரடி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகில் அதிரடி Poll_c10அழகில் அதிரடி Poll_m10அழகில் அதிரடி Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அழகில் அதிரடி Poll_c10அழகில் அதிரடி Poll_m10அழகில் அதிரடி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அழகில் அதிரடி Poll_c10அழகில் அதிரடி Poll_m10அழகில் அதிரடி Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அழகில் அதிரடி Poll_c10அழகில் அதிரடி Poll_m10அழகில் அதிரடி Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகில் அதிரடி


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 10, 2011 7:04 am


பெண்களின் ஆடை – அலங்கார துறைகளில் கடந்த சில ஆண்டுகளில் அதிரடியான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பது, அழகுக் கலைத்துறை.
பெட்டிக் கடைகள்போல் நகரப் பகுதிகளில் ஒதுங்கிக் கிடந்த பிட்டி பார்லர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் சாயலில் கம்பீரமாக உயர்ந்து விட்டன. வீடுகளில் அமர்ந்துகொண்டு எதை தேய்த்தால் அழகு கூடும் என்று சிந்தித்துக்கொண்டிருந்த பெண்கள், `நாமும் அதன் உள்ளே சென்றுதான் பார்ப்போமே!’ என்று புகுந்து செல்ல தயாரானார்கள்!
ஆனால் தொடக்கத்தில் அது அவர்களுக்கு தயக்கத்தை தான் தந்தது. விதவிதமாக வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்கள் அங்கே குவித்துவைக்கப்பட்டிருந்தன. பெண்களுக்கு கூந்தலை வெட்டி அலங்காரம் செய்ய கத்திரியோடு ஆண்கள் காத்திருந்தார்கள். `இது நமக்கு சரிப்படுமா?` என்று தயங்கினார்கள்.
இன்று அந்த தயக்கங்கள் போன இடம் தெரியவில்லை. அதனால் அழகு நிலையங்கள் அதிரடியாக மாறிப்போய்விட்டன. பெரும்பாலான இடங்களில் ஆண்கள்தான், பெண்களுக்கு கூந்தலை வெட்டி அலங்காரம் செய்கிறார்கள். அவர்கள் கைகளில் சாதாரணமாக தென்பட்ட கத்திரி, சீப்புகள் இப்போது வித விதமாக மினுமினுக்கின்றன. கேட்டால் அதற்கே ஆயிரக் க ணக்கில் விலை சொல்கிறார்கள். நவீன கருவிகள் நாள்தோறும் வந்து இறங்குகின்றன. சொகுசு படுக்கைகள், இருக்கைகள் அழகை விரும்புகிறவர்களின் மேனியை மென்மையாய் தழுவுகின்றன.
அழகுக் கலை நிபுணர்களின் விரல்களுக்கு மாபெரும் மந்திரசக்தி உண்டு. இன்றோ அவர்களது விரல்களோடும், விழிகளோடும் கம்ப்ட்டர்களும் போட்டி போட்டு அழகுக் கலை துறையில் புகுந்துவிட்டன. அழகுக்கலை நிபுணர்களிடமும் நிறைய மாற்றங்கள். எப்போதும் பழகிய முகங்களை பார்த்துக் கொண்டிருந்தால் சலித்துவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ, வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அழகழகான ஆண், பெண் நிபுணர்களும் வந்து குவிகிறார்கள். அழகுக்கலைத் துறையில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய அதிரடி மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்து கிறதா? அல்லது அழகை விரும்புகிறவர்களுக்கு அபரிமிதமான பலனைத் தருகிறதா? என்பதை அறிவதற்காக இத்தகைய மாற்றங்களை உள்வாங்கியிருக்கும் நவீன `பேஜ் 3 லக்சுரி சலூன் மேக்ஓவர் ஸ்டுடியோ’விற்குள் ழைந்தோம்.
அழகுக் கலை நிறுவனங்கள் வைக்கும் பெயர்களில்கூட புதுமை புகுந்துவிட்டது. `பேஜ் 3′ என்றால் என்ன அர்த்தம்? என்று ப்ரண்ட் ஆபீசில் சிரித்து வரவேற்ற பெண்ணிடம் கேட்டால், அவர் சி.ஈ.ஓ. வீணாவிடம் அழைத்துச் சென்றார். அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டால் அவர் பத்திரிகை களை மேற்கோள்காட்டி பதிலளித்தார். “பொதுவாக பத்திரிகை களில் மூன்றாம் பக்கம் எனப்படும் ஓபனிங் பேஜ் முக்கியத்துவ மானது. அதில் புகழ் பெற்றவர்களைப் பற்றிய செய்தியோ, முக்கிய செய்திகளோ வெளியாகும். அதுபோல் இதுவும் முக்கியத்துவமானது, பிரபலமானவர்களுக்கானது என்பதற்காக இப்படி பெயர் வைத்திருக்கிறோம்” என்றார்.

உள்ளே இளம் பெண்ணின் கூந்தலை வெட்டிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் தலையலங்காரம் நம்மைக் கவர்ந்தது. `வாடிக்கையாளர்கள்தானே தங்கள் கூந்தலை விதவிதமாக அலங்காரம் செய்துகொண்டு செல்வார்கள். இங்கு அலங்காரம் செய்யக்கூடிய நீங்களே உங்கள் முடியில் ஏதேதோ அலங்காரம் செய்திருக்கிறீர்களே?’ என்று கேட்டால், கிடைக்கும் பதில் இன்னொரு விதத்தில் ருசிகரமாக இருக்கிறது.
“எல்லோருமே மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். மாற்றங்களுக்காக யாரும் அதிக காலம் காத்திருப்பதில்லை. அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்தால்தான் ரசிக்கிறார்கள். பியூட்டி பார்லரில் அட்டகாசமான உள்ளறை அலங்காரம், நவீன கருவிகள், மாறுபட்ட அழகுடைய பெண்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் அழகுக்கலை நிபுணர்களிடமும் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். அதனால் நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை எங்கள் தலைமுடியையே புதுமையாக இப்படி மாற்றிக்கொள்வோம். அதுபோல் இங்கே இருக்கும் ஒவ்வொரு அழகுக்கலை நிபுணரும் தங்கள் முடியை ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்திருப்பார்கள். எல்லாம் புதுமைக்காகத்தான்..”- என்றார். இப்படிப்பட்ட புதுமையையும் இங்கே காணமுடிகிறது.
ஐதீகம் நிறைந்த நகரமான சென்னையில் இப்போது பெண்களுக்கு, ஆண் நிபுணர்கள் கூந்தல் அலங்காரம் செய்கிறார்கள். இந்த மாற்றம் நிகழ என்ன காரணம்?
“முன்பு பெண்கள் தங்கள் கூந்தலை வெட்டிக்கொள்ளவே மாட்டார்கள். எவ்வளவு நீளமானலும் வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். பின்பு கூந்தலை வெட்டிக்கொள்ள முன்வந்தார்கள். அதுவும் ஒருசில ஸ்டைல்களிலே மீண்டும் மீண்டும் வெட்டிக் கொண்டார்கள். பெண்களுக்கு பெண்கள் தான் கூந்தலை வெட்டவும் செய்தார்கள். இப்போது 100-க்கு மேற்பட்ட வகைகளில் விதவித மான ஸ்டைல்களில் கூந்தலை வெட்ட முடியும். அந்த புதிய முறை ஹேர் ஸ்டைல்களை வெளி நாட்டு ஆண்களும், இந்தியாவின் வடகிழக்கு மாநில இளைஞர்களும் நிறைய கற்றார்கள். அவர்களின் கூந்தல் வடிவமைப்பு கலையை இந்தியாவில் எல்லா நகரங்களும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்தன. சென்னையும் அதில் முக்கியமான இடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக் கிறது. இங்கும் ஏராளமான ஆண் கலைஞர்கள் வந்துவிட்டார்கள். அவர்களை பயன்படுத்தும் போது பெண்களுக்கு சிறப்பான கூந்தல் அலங்காரம் கிடைக்கும். எப்போதுமே பெண்களை அலங்கரித்து பார்ப்பதில் ஆண்களுக்கு சந்தோஷம்தானே. ஆண்களிடம் கூந்தல் அலங்காரம் செய்துகொள்ள பெண்கள் இப்போது தயங்குவதில்லை. மாறாக அந்த ஆண் நிபுணரும், அந்தப் பெண்ணின் கணவரும் கலந்து பேசி தன் மனைவிக்கு பொருத்தமான ஸ்டைலை தேர்ந்தெடுக் கிறார்கள்..”
பெண் அழகுக்கலை நிபுணர்களாக வடகிழக்கு மாநில பெண்கள்தானே அதிகம் காணப்படுகிறார்கள். அப்படி அவர்களிடம் என்ன சிறப்பு இருக்கிறது?
“எப்போதும் சிரித்த முகத்துடன், சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சமர்ப்பண உணர்வோடு, மிகுந்த ஈடுபாட்டோடு வேலை பார்ப்பார்கள். இவர்களது அணுகுமுறை எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கிறது. சிறு வயதில் இருந்தே தங்களை அழகுப்படுத்திக்கொள்ளுதல், நேர்த்தியாக உடை அணிதல் போன்றவை இவர்களின் பிளஸ் பாயிண்ட். அதனால் அவர்கள் இளமைப் பருவத்தில் அழகுக்கலையையே பாடமாக எடுத்து படித்து திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். தற்போது தென்னிந்திய பெண்களும் பெருமளவு அழகுக்கலையை கற்று வருவதால், பிற்காலத்தில் இதில் நிறைய மாற்றங்கள் தோன்றும்”
வெளிநாட்டு, வெளிமாநில ஆண்- பெண் அழகுக்கலை நிபுணர்களை இங்கு வரவழைப்பது வியாபார வெற்றித் தந்திரங்களில் ஒன்றா?
“தற்போது அழகுக் கலையில் மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்கள் இளமையாக, அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக உலகளாவிய நிலையில் உள்ள சிறந்த அழகு சாதன பொருட்கள் இந்தியாவிற்கு வருகின்றன. அவைகளை பயன்படுத்தும்போது பக்க விளைவு இல்லாத அழகை பெற முடிகிறது. அதுபோல்தான் சிறந்த அழகுக்கலை கலைஞர்கள் எங்கிருந்தாலும் அவர்களையும் கண்டுபிடித்து கொண்டு வருகிறார் கள். இதில் வியாபார தந்திரம் எதுவும் இல்லை”
டெல்லி, மும்பை போல் இங்கும் அதி நவீன பார்லர்கள் உருவாக்கும்போது, இங்குள்ள மக்களும் அழகுக்காக அதிக பணத்தை செலவிட வேண்டியது இருக்கும்தானே?
“இப்போது அழகை விரும்புகிறவர்கள் அதற்கு தக்கபடியான பணத்தை செலவிட தயங்குவ தில்லை. சிறந்த பொருட்களால், சிறந்த கலைஞர்களால் தாங்கள் அழகுப்படுத்தப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார் கள். `கேரா ஸ்கின் ட்ரீட்மென்ட்’ என்ற புதிய முறை இப்போது அறிமுகமாகியுள்ளது. பிரபலங்கள் அதை விரும்புகிறார்கள். இன்றும் நாம் சிலரைப் பார்த்து, `இப்போதும் இவர்கள் இளமையாக இருக்கிறார்களே அது எப்படி?’ என்று வியக்கிறோமே. இனி நாம் அப்படி ஏராளமான பெண்களைப் பார்த்து வியக்க வேண்டியதிருக்கும்…”
ஆனாலும் பெண்கள் ஆரோக்கியத்திற்கு செலவிடும் நேரத்தைவிட அழகுக்காக அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?
“ஆரோக்கியம்தானே சிறந்த அழகு. ஆனால் அழகு இல்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தாலும் மனிதர்களால் திருப்தியாக வாழ முடியாது. அழகும், ஆரோக்கியமும் இருகண்கள். இரண்டிற்கும் பெண்கள் போதுமான நேரத்தை செலவிடுகிறார்கள். ஜிம்முக்கும் செல்கிறார்கள். பியூட்டி பார்லர்களுக்கும் வருகிறார்கள்..”
`கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..’ என்று பாட்டெல்லாம் பாடினாலும், இப்போதும் சிவப்புதான் சிறந்த அழகு என்ற எண்ணம் நிலவுகிறதே.. என்ன செய்வது?
“நிறம் ஒரு பிரச்சினை இல்லை. அதற்காக ஸ்கின் லைட்னிங் உள்ளது. இயற்கைதன்மை நிறைந்த ஆர்கானிக் பேஷியல் இருக்கிறது. பழச்சாறு, காய்கறிச் சாறு கலந்த அவை சருமத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். சுருக்கங்கள் நீங்கும். ஒயின் தெரபி, சாக்லேட் தெரபி போன்றவைகளுக்கும் வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் மனைவி அழகாக இருக்கவேண்டும் என்று கணவர் எதிர்பார்த்தார். பின்பு அம்மா அழகாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகள் எதிர்பார்த்தார்கள். இப்போது பாட்டிகளும் அழகாக இருக்கவேண்டும் என்று பேத்திகள் எதிர்பார்க்கிறார்கள். ஆக 7 முதல் 70 வயதுவரை எல்லோரும் அழகாக இருக்க விரும்புகிறார் கள். அவர்கள் விரும்பும் சிறந்த அழகை கொடுக்க பார்லர்கள் தயாராக இருக்க வேண்டியதுள் ளது”

எவ்வளவுதான் பார்லர்கள் கம்ப்ட்டர் மயமானாலும் ஐபுரோ திரெட்டிங் போன்றவை கையால், நூலால்தானே செய்கிறீர்கள்?
“இது தென்னிந்தியாவிற்கே கிடைத்த பொக்கிஷம் போன்ற கலை. வெளிநாடுகளில் திரெட்டிங் செய்ய ரேசர்தான் பயன்படுத்துகிறார்கள். அது அங்குள்ள பெண்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் கையால் கலை ட்பத்தோடு செய்யும் இந்த கலைக்கு உலகம் முழுக்க வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இந்த முறையை கற்றுச் சென்றுள்ள பலர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் திரெட்டிங் மட்டும் செய்து நிறைய சம்பாதிக்கிறார்கள். நூலால் திரெட்டிங் செய்வது எளிதல்ல. முகத்திற்கு, இமைக்கு தக்கபடி அற்புதமாக அதை வடிவமைக்க வேண்டும்”



vayal




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக