புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் மார்க்கெட் தந்திரங்கள் – 1
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
Viruvirupu, Thursday 05 May 2011, 02:30 GMT
இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.
20 வருடங்களுக்குமுன் மேலை நாடுகளில் மாத்திரமே பிரபலமாக இருந்த சூப்பர் மார்க்கட்கள் இப்போது ஆசிய நாடுகளிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் வந்துவிட்டன. ஒருகாலத்தில் இந்தியப் பாவனையாளர்களின் தேவைகளை முழுமையாக கவர் செய்தவை சிறிய மளிகைக் கடைகள்தான். இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன சூப்பர் மார்க்கெட்கள். சிறிய நகரங்களில்கூட வந்துவிட்டன.
உலகின் பிரபல சூப்பர் மார்க்கெட் செயின்கள் இந்தியாவில் கடைவிரிக்கத் தொடங்குகின்றன. அல்லது, ஒரு இந்தியப் பார்ட்னருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் செயின்களை அமைத்திருக்கின்றன. இதைத்தவிர இந்திய வர்த்தகர்களும் அச்சு அசலாக மேலைநாட்டுப் பாணியில் சூப்பர் மார்க்கெட்களைத் திறந்திருக்கிறார்கள்.
அட்லான்டாவிலுள்ள (அமெரிக்கா) ஒரு சூப்பர் மார்க்கெட்
மொத்தத்தில் நீங்கள் வசிப்பது ஐரோப்பாவோ, வட அமெரிக்காவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றோ, சூப்பர் மார்க்கெட்கள் உங்கள் வாழ்க்கையில் அவசியமான ஒன்றாகி விட்டது.
வட அமெரிக்காவில் வசிப்பவராக நீங்கள் இருந்தால் உங்கள் குடும்ப வருமானத்தில் சுமார் 25 சதவீதம் வரை நீங்கள் செலவு செய்வது சூப்பர் மார்க்கெட்களில் என்கிறது கனேடிய பாவனையாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரம். இது ஒரு ஆவரேஜ் சதவீதம். ஐரோப்பாவிலும் மற்றய மேலை நாடுகளிலும் இருப்பதும் கிட்டத்தட்ட இதே ஆவரேஜ்தான். ஆசியாவில் வசித்தால் நீங்கள் செலவு செய்வது இதைவிடச் சற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
இந்தக் கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவராக நீங்கள் இருந்தால், ஒரு காரியம் செய்யுங்கள். – அடுத்துவரும் 1 மாத காலத்திற்கு ஒவ்வொரு தடவையும் நீங்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குப் போய் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போதும், ரசீதுகளை ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். 1 மாதம் முடிந்ததும் அவற்றிலுள்ள டாலர், யூரோ, அல்லது ரூபா பெறுமதியைக் கூட்டி வரும் தொகையை 12 ஆல் பெருக்குங்கள்.
வரும் விடை அல்லது நீங்கள் செலவு செய்யும் பணத்தின் தொகை ஆயிரக் கணக்கில் இருக்கும். உங்களுக்குத் தலைசுற்றும்.
இந்தத் தொகைதான் நீங்கள் வருடமொன்றுக்கு சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்களுக்கு செலவு செய்யப்போகும் ஆவரேஜ் தொகை.
நான் ஏற்கனவே கூறியதுபோல இந்தத் தொகை ஆளாளுக்கு அல்லது வேறு வேறு குடும்பங்களுக்கு வேறுபடும். சிலருக்கு வருட வருமானத்தில் 30 சதவீதமாக இருக்கலாம். வேறு சிலருக்கு வருட வருமானத்தில் 20 சதவீதமாக இருக்கலாம். புள்ளிவிபரப்படி கனேடிய ஆவரேஜ் 25 சதவீதம்.
பிரான்சிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வைன் பிரிவு
“சரி. இதற்கு என்ன செய்வது? வாழ்க்கைச் செலவு அப்படி” என்று வழமைபோல செலவு செய்துகொண்டு இருப்பதானால், நீங்கள் இதைப் படிக்க வேண்டியது அவசியமல்ல. அவசியம் எங்கே வருகிறது என்றால், கனேடியப் புள்ளிவிபரம் கொடுக்கும் மற்றொரு தரவில்!
அந்தத் தரவு என்ன? மொத்த வருமானத்தின் 25 சதவிகித தொகையை சூப்பர் மார்க்கெட்டில் செலவு செய்யும் ஒரு குடும்பத்தில் செலவு செய்யும் முழுத்தொகையின் 80 சதவீதம்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி வேஸ்ட் ஆகப் போய்விடுகிறது. அடடா!
அதாவது நீங்கள் 5000 டாலருக்கு ஷாப்பிங் செய்திருந்தால் 4000 டாலருக்கு வாங்கும் பொருட்களைத்தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மிகுதி 1000 டாலர் பெறுமதியான பொருட்களை வீணடிக்கிறீர்கள் அல்லது உபயோகிக்காமல் எறிகிறீர்கள். இதில் பத்து நாட்களுக்குமேல் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு அழுகி எறியும் தக்காளி முதல், 2 வாரம் கண்டுகொள்ளாமல் விட்டு வைத்திருந்த பாதிப் பாக்கட் பால் எக்ஸ்பயரி தேதி முடிந்து எறிவது வரை அடங்கும்.
விஷயம் அத்துடன் முடிந்துவிடவில¢லை. கனேடியப் புள்ளிவிபரத்தில் மேலும் ஒரு தரவு இருக்கிறது. அதன்படி, நீங்கள் செலவு செய்யும் தொகையின் 10 சதவீதம், நீங்கள் தேவையில்லாமல் வாங்கும் பொருட்களில் செலவாகின்றது. அதாவது வருடத்திற்கு 5000 டாலர் செலவு செய்தால், சுமார் 500 டாலர் பெறுமதியான பொருட்களை நீங்கள் தேவையில்லாமல் அல்லது அவசியமில்லாமல் வாங்குகிறீர்கள்.
ஜப்பானிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் டிஸ்பிளே ஸ்டைல்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இந்தக் கணிப்பு சரி என்பது புரியும்.
மலிவாகப் போட்டிருக்கிறார்கள், அல்லது இந்த வாரம் மாத்திரம் இந்தப் பொருள் தள்ளுபடி விலையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வாங்கப்படும் பொருட்கள் இந்த வகை. அதே நேரத்தில், புதிதாக அறிமுகம் செய்கிறோம் என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களின் விளம்பரத்தால் கவரப்பட்டு வாங்கப்படும் பொருட்களும் இந்த வகையில் வரும்.
இந்த 10 சதவீத பொருட்களின் தள்ளுபடி விலை விளம்பரங்கள் உங்கள் கண்ணில் தட்டுப்படாதிருந்திருந்தால், சூப்பர்மார்க்கெட்டில் இவை உங்களின் கைகளில் தட்டுப்பட்டிருக்காது. உங்கள் வீடுவரை வந்துமிருக்காது.
மேலேயுள்ள தரவுகள் இரண்டையும் கூட்டினால், சூப்பர் மார்க்கெட்களில் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் சுமார் 30 சதவீதத்தை வேஸ்ட் செய்கிறீர்கள். இது ஒருபுறம் இருக்க, மிகுதி 70 சதவீதம் செலவு செய்து நீங்கள் வாங்கிவரும் பொருட்களின் நிஜமான பெறுமதி அதுதானா? – அதை வேறுவிதமாகக் கேட்டால், நீங்கள் வாங்கிய பொருட்களை அதைவிட மலிவாக வாங்கியிருக்க முடியாதா?
நீங்கள் எந்தளவுக்கு ஷாப்பிங் புலி என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு சராசாரி வட அமொரிக்கப் பாவனையாளர் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் சாதாரணமாக வாங்கும் அதே பொருட்களை 15 சதவீதம் குறைவான விலையில் வாங்குவது சாத்தியம் என்கிறது அதே கனேடியப் புள்ளிவிபரம்.
கனடாவிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வெளிப்புறத் தோற்றம்.
இதைச் சொல்வது ஃபிளெக்ஸ் ப்ரைசிங் என்று. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் இங்கு சொல்லப் போகின்றோம்.
நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு கடைசியாக எப்போது போனீர்கள்? இன்று? நேற்று? கடந்த வாரம்? அது எப்போதாக இருந்தாலும், அந்த சூப்பர் மார்க்கெட்டின் உட்புறத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டுவாருங்கள்.
வழமையாக சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும், அது எந்த நகரத்தில் இருந்தாலும், பொதுவான சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? கவனித்திராவிட்டால் நாங்கள் இப்போது சொல்லப்போகும் சில அம்சங்கள் நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்கள் எல்லாவற்றிலும் இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
1) சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் ஆட்களில் அனேகமானவர்கள் வைத்திருக்கும் ஷாப்பிங் லிஸ்டில் இருக்கும் ஒரு அவசியப் பொருள் பால். இது நீங்கள் பயன்படுத்தும் பாலாகவோ, அல்லது குழந்தைகளுக்கான பாலாகவோ இருக்கலாம். சூப்பர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் தமது வருகையின் 70 சதவீதமான ட்ரிப்களில் பால் வாங்குகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.
அதை வேறுவிதமாகச் சொன்னால், நீங்கள் 10 தடவைகள் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் அதில் 7 தடவைகள் உங்களது ஷாப்பிங் லிஸ்ட்டில் பால் இருக்கிறது. சரி. கேள்வி என்னவென்றால், இப்படி அதிகமானவர்களால் வாங்கப்படும் பால், ஏன் சூப்பர் மார்க்கெட்டின் வாயிலருகேயோ காஷியருக்கு அருகேயோ வைக்கப்பட்டிருப்பதில்லை?
2) அநேக சூப்பர் மார்க்கெட்களின் உள்ளே வாத்திய இசை ஒலிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படி ஒலிக்கும் இசை எந்த வகையான இசை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா. கவனித்திருந்தால் அதை இப்போது ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
3) நீங்கள் போகும் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட், சிப்ஸ், பாப்கார்ன் சூயிங்கம் போன்றவை உள்ளே ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃபில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால் அதே பொருட்கள் நீங்கள் பணம் செலுத்தும் கேஷியருக்கு அருகிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்திருப்பீர்கள். ஒரே பொருட்கள் ஏன் இரண்டு வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
பிரிட்டனிலுள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் செயின்.
மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் ஏதோ தற்செயலாக சூப்பர் மார்க்கெட்களில் அமைந்து விடுவதல்ல. இவை காரணமாக அமைக்கப்பட்டடிருப்பவை. காரணம் -சைக்காலஜி. மனோத்ததுவம். மனோதத்துவ ரீதியாக உங்களை மடக்குவதுதான் திட்டம்.
சூப்பர் மார்க்கெட் ஒன்றின் விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிப்பது இந்த மனோத்துவ தந்திரங்கள். Consumer psychological Tricks.
முதலாவதாகக் கூறப்பட்ட பால் விவகாரத்தையே பாருங்கள். சூப்பர் மார்க்கெட்கள் பாவனையாளர்களின் வசதிக்கே முக்கியத்துவம் கொடுப்பதானால், கடைக்குள் நீங்கள் நுழைந்தவுடன் கையில் எடுக்கும் விதத்தில் அவை வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் சூப்பர் மார்க்கெட்டுக்கு நீங்கள் 10 தடவைகள் சென்றால், 7 தடவைகள் பால் வாங்கச் செல்கிறீர்கள்.
ஆனால் பால் வைக்கப்பட்டிருப்பது சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே வெகுதொலைவில் வைக்கப்பட்டிருப்பதன் காரணம், உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே அதிகதூரம் நடக்கவைப்பது.
ஏன் நடக்க வைக்கிறார்கள்? ஏதாவது பாதயாத்திரை பயிற்சியா?
இல்லை. அதிக நேரம் உங்களை சூப்பர் மார்க்கெட்டுக்குள் தங்க வைக்க விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால்தான் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகநேரம் உங்கள் கண்களில் படும். அதிகநேரம் கண்களில் படும்போது, அந்தப் பொருட்கள் உங்கள் மனதில் பதியும். இதுதான் இலவச விளம்பரம்.
ஒரு புத்திசாலித்தனமான சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் வாயிலில் இருந்து பால் இருக்கும் இடத்துக்கு நடந்து செய்லும் பாதையின் இருபுறமும் பரொமோஷனல் ஐட்டம்கள், உங்களின் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
சூப்பர் மார்க்கெட்டில் பால் வைக்கப்பட்டிருப்பது எங்கே?
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த புரொமோஷனல் ஐட்டம்கள் குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கின்றன என்று பாவனையாளருக்குத் தெரியப்படுத்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? விளம்பரம் செய்ய வேண்டும்.
பத்திரிகையிலோ, டிவியிலோ, ரேடியோவிலோ, இணையத்தளத்திலோ அதை விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுத்து விளம்பரம் செய்தாலும், அந்த விளம்பரத்தை உங்களைப் பார்க்க வைத்து, சூப்பர் மார்க்கெட்டுக்கு வரவைக்கவும் வேண்டும். ஒருவேளை விளம்பரத்தைப் பார்த்து 3 நாட்களின்பின் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும்போது, அந்த விளம்பரம் உங்களது மனதிலிருந்து மறைந்தும் விட்டிருக்கலாம்.
ஆனால், இதோ நீங்கள் பால் எடுக்கச் செல்லும் பாதையில் அவர்கள் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய பொருட்களையே கவர்ச்சிகரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். விளம்பரச் செலவு கிடையாது. பத்திரிகை விளம்பரத்தை நீங்கள் பார்த்துவிட்டு 3 நாட்களில் அதை மறந்து விடுவது போல இல்லாமல், விளம்பரப்படுத்தப்படும் பொருள் உங்கள் கைக்கெட்டிய தொலைவிலேயே இருக்கிறது.
இலவச விளம்பரம்! உடனடி விற்பனை!!
இரண்டாவது பாலை மாத்திரம் வாங்கும் உத்தேசத்துடன் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தால், அவை வாயிலுக்கு அருகே வைக்கப்பட்டடிருந்தால் அவற்றை எடுத்து, காசைக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்து விடுவீர்கள். சூப்பர் மார்க்கெட்டில் டிஸ்பிளே செய்யப்பட்டிருக்கும் மற்ற எந்தப் பொருளும் உங்கள் கண்களில் பட்டிருக்காது.
தாய்லாந்திலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்
அதனால்தான் பாவனையாளர் அதிக தடவைகள் கட்டாயம் வாங்கியே தீரவேண்டும் என்றிருக்கும் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தொலைவில் வைக்கிறார்கள். அதை எடுக்கப் போகும்போது நீங்கள் மற்றைய பொருட்களையும் பார்க்கப் போகின்றீர்கள். அப்போது உங்கள் மனதில் சில எண்ணங்கள் தோன்றுப் போகின்றன.
“அட இந்தப் பொருளைத்தானே வீட்டில் மறக்காமல் வாங்கிவரச் சொன்னார்கள். நல்லவேளை இப்போது கண்களில் பட்டதே”
“இந்தப் பொருள் பார்க்க நன்றாக இருக்கிறதே. சும்மா ஒரு தடவை வாங்கிப் பார்க்கலாமா?”
“ஓகோ இந்தப் பொருளும் இங்கே விற்பனையாகிறதா? எங்கே வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.”
“வாவ். இந்தப் பொருளின் விலை இவ்வளவுதானா, மலிவாக இருக்கிறதே. வாங்கிப் பார்க்கலாமா?”
பால் பாக்கட்டை எடுப்பதற்கு சூப்பர் மார்க்கெட்டின் கடைசி ஷெல்ஃப்வரை நடக்கும் பத்துக்கு இரண்டு பேருக்காவது மேற்கண்ட யோசனைகளில் ஏதாவது தோன்றினால் சூப்பர் மார்க்கெட்காரருக்கு வெற்றி. பத்துக்கு நான்கு பேருக்கு தோன்றினால் அதிஷ்டம். அதற்குமேல் தோன்றினால் தீபாவளி!!
பார்த்தீர்களா? எல்லாமே மனோத்துவ ரீதியான தந்திரம்தான்.
அடுத்ததாக சூப்பர் மார்க்கெட்டில் ஒலிக்கும் இசை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இப்போது யோசித்துப் பாருங்கள். அந்த இதை மிகவும் மென்மையான, ஸ்லோ மியூசிக்காக இருந்திருக்கும்.
அதற்குக் காரணம் என்ன? எல்லா சூப்பர் மார்க்கெட்காரர்களுக்கும் வேகமான தடாங் படாங் இசை பிடிப்பதில்லையா? அப்படியல்ல.
விஷயம் என்னவென்றால், மனோதத்துவ அடிப்படையில் மென்மையான ஸ்லோவான இசை உங்களின் மனசை இலோசாக்குவதுடன், உங்களது இயங்கு திறனையும் குறைக்கின்றது.
நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் கார்ட் ஒன்றைத் தள்ளியபடி ஒவ்வொரு ஷெஃப்பாகப் போய் உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வகை ஸ்லோவான இசை உங்களது நடையையும் ஸ்லோவாக்கிவிடும்.
ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளியபடி அங்கு ஒலிக்கும் இசையைக் கேட்டபடி நடந்து பாருங்களேன்!
சாதாரணமாக நீங்கள் நடக்கும் வேகத்தில் சூப்பர் மார்க்கெட்டின் ஒரு குறிப்பிட்ட ஷெல்ஃப்பை நீங்கள் கடக்க எடுக்கும் நேரத்தைவிட, அதிக நேரம் எடுக்கப்போகின்றீர்கள். உங்களையறியாமல் அதிக நேரம் ஒவ்வொரு பொருளையும் பார்க்கப் போகின்றீர்கள். அதிக நேரம் பார்க்கும்போது, அவை அதிகநேரம் உங்கள் மனதில் பதியப் போகின்றன.
இந்த வேகக் குறைவால், வழக்கத்தைவிட ஓரிரு பொருட்களை நீங்கள் அதிகமாக வாங்குவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகின்றது. இல்லையா.
பிரிட்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்.
அதேபோல சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே சொக்லட், சூயிங்கம் போன்ற பொருட்கள் உள்ளே ஒரு இடத்தில் இருக்கும். அதே போருட்கள் நீங்கள் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டு பணம்செலுத்த தயாராக கேஷியருக்கு முன்னால் நிற்கும்போதும் வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவா.
அதிலும் ஒரு சிறிய மனோதத்துவ தந்திரம் இருக்கின்றது.
அது என்னவென்றால், கேஷியரிடம் பணம் செலுத்த வருமுன்னர் நீங்கள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்களை எடுத்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். எல்லாம் முடிந்து கேஷியருக்கு முன்னே வரும்போது அங்கே வரிசையாக ஆட்கள் பணம் செலுத்த நிற்பார்கள். நீங்களும் அந்த வரிசையில் போய் இணைந்து கொள்வீர்கள்.
ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் இருந்து எப்போதாவது தாவி இறங்கியிருக்கிறீர்களா? அப்படி இறங்கியிருந்தால், நீங்களும் பஸ் செல்லும் திசையில் சிறிது தூரம் ஓடித்தான் நிற்க முடியும் என்பது தெரிந்திருக்கும். இங்கு நடப்பதும் கிட்டத்தட்ட அதே ரிஃப்ளெக்ஷன்தான்.
கடந்த பல நிமிடங்களாக சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஆக்டிவ்வாக நடந்து நடந்து பொருட்கைள எடுத்து ஷாப்பிங் கார்ட்டுக்குள் போட்ட உங்கள் கைகள் கேஷியருக்கு முன்பு ஓரே இடத்தில் காத்திருக்கும்போது துறுதுறுக்கும். அப்போது நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து எட்டக்கூடிய தொலைவில் எதையாவது எடுக்கும்படி உங்கள் மனம் தூண்டும்.
கேஷியருக்கு அருகேயுள்ள ஷெல்ஃபில் இருக்கிறது உங்களுக்கான இரண்டாவது வலைவிரிப்பு!
ஆனால் எட்டக்கூடிய தொலைவில் இருக்கும் பொருள் விலையுயர்ந்த பொருளாக இருந்தால் நீங்கள் கைவைக்க மாட்டீர்கள். விலை அதிகமில்லாத நொறுக்குத்தீனி அருகே இருந்தால் அதிலும் ஒன்றை எடுத்துக் கொள்வீர்கள்.
அதைத் தவிர நீங்கள் குழந்தைகளுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தால், அவர்களை கேஷியருக்கு முன்னாலுள்ள வரிசையில் சில நிமிடங்கள் காத்திருக்க வைத்தபடி நிற்கையில், குழந்தைகளின் கண்களில் படும்படி சாக்லெட் போன்ற பொருட்கள் இருந்தால் என்னாகும்?
அடுத்த தடவை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் கேஷியருக்கு முன்னால் நிற்கும்போது, அங்கே உங்களுக்கு முன்னால் நிற்பவர்களில் எத்தனைபேர் அருகிலிருக்கும் சிறு பொருட்களை வாங்குகிறார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். பத்தில் இரண்டு பேராவது வாங்குவார்கள்.
இவர்களில் யாரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு உள்ளே தின்பண்டங்கள் விற்கும் பிரிவில் இதே பொருட்கள் இருந்தும், அங்கே எடுக்காமல் தவிர்த்துவிட்டு, கேஷியர்வரை வந்தவர்கள். கடைசிக் கிளைமாக்ஸில் மாட்டிக் கொண்டார்கள்.
சூப்பர் மார்க்கெட் மனோதத்துவ தந்திரங்களில் இவை ஒரு சிறு துளிதான். வேறு சில தந்திரங்களை அடுத்துவரும் வாரங்களில் இக் கட்டுரையின் 2ம் 3ம் பாகங்களில் பார்க்கலாம்.
நன்றி விறுவிறுப்பு.com
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சூப்பர் மார்க்கெட் ஒன்றின் விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிப்பது இந்த மனோத்துவ தந்திரங்கள். Consumer psychological Tricks.
அருமையான பதிவு நண்பா. பாராட்டுக்கள்!!
நான் இந்தியா நண்பா,
கேஷ் கௌண்டர் அருகில் இருக்கும் அந்த சாக்லேட் மீதிச் சில்லறைக்காகவும் கொடுக்கப் படுகிறது. அந்த அழகான பெண் கேஷியர், "சாரி சார், சேஞ்ச் இல்லை!" என்று மீதமுள்ள 5 ரூபாய்க்குக் கூட அந்த சாக்கிலேட்டை கொடுக்கிறார்கள். பிரேஸ்டீஜ் காரணமாக சிரித்துக் கொண்டே அதை வாங்கிக்கொண்டும் போகிறார்கள். நான் "டீவியில்" என்னைப் பார்ப்பதற்காகவும், வேடிக்கைப் பார்ப்பதற்காகவும் மட்டுமே அங்கு செல்கிறேன்.
சூப்பர் மார்க்கெட்-ல பேரம் பேச முடியாதே... அதனால, எனது பர்ச்சேஸ் எல்லாம், "நாட்டார் கடையில் தான்"
அதுவும், அவர் 5 ரூபாய் சொன்னா, 10 எடுத்துக்கறேன் 3 ரூபாய்க்குத் தாங்க-ன்னு சண்டை போடுவேன். (கெட்டுப் போகாத பொருளா இருந்தா)
சென்னையில் உள்ள "Richie Street"-ல இருக்கிற முக்கியமான கடைகளில் போயி குயிலன் அனுப்பினாறுன்னு சொன்னீங்கன்னா, உங்களைக் கண்டுக்கவே மாட்டாங்க.
இல்லன்னா நீங்க பொருளைக் கேக்குறதுக்குள்ள, இல்லைன்னு சொல்லிடுவாங்க. என்னோட வந்தீங்கன்னா... கடையில யாரும் இல்லைன்னா தான் பொருள் தருவாங்க.
அவ்வளவு அதிரடியான "purchase officer" நான்...!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சூப்பர் மார்க்கெட்களில் பெண்களை அதிக அளவில் வேலைக்கு வைத்திருப்பதும் ஒரு டெக்னிக் தான்.
நன்றி கண்ணன்.
நன்றி கண்ணன்.
நல்ல பதிவு நன்றி கண்ணன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல பகிர்வு நண்பரே
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
யென கொடுமை சாமி இது யெல்லாம் ?
இது யெல்லாம் நாம கிர்டா நடக்குமா?
30 திர்காம்கு வாங்க 3 மால் போவோம் ஆனா 20 திர்காம்குதா வாங்குவோம்
இது யெல்லாம் நாம கிர்டா நடக்குமா?
30 திர்காம்கு வாங்க 3 மால் போவோம் ஆனா 20 திர்காம்குதா வாங்குவோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல அருமையான பதிவு கண்ணன் நீங்கள் சொல்வதை நான் அனுபவித்துள்ளேன் . முதல் முறை எங்க பில் ரொம்ப அதிகமாய்டுச்சு , பின் ஒரு ஐடியா பண்ணோம் நாங்க . யார் வேணா என்ன வேணா எடுக்கலாம் , ஆனால் பில் போடும்முன்பு ஒருவர் எடுத்ததை அடுத்தவர் டிராலி லிருந்து எடுத்து "இது வேணுமா , ரொம்ப அவசியமா என் கேட்போம்" (நாங்க 3 பேர் ) அவ்வளவுதான் , பாதி சாமான் மீண்டும் அதன் இடத்துக்கே போய்விடும். ஹா ... ஹா .... ஹா ... எப்படி எங்க ஐடியா? அப்படித்த்தான் நாங்க எங்க பில்லை சமாளித்தோம்
உங்க கட்டுரையால கொஞ்ச நேரம் என் பழய நினைவுகளுக்கு சென்றுவிட்டேன் கண்ணன், நன்றி
உங்க கட்டுரையால கொஞ்ச நேரம் என் பழய நினைவுகளுக்கு சென்றுவிட்டேன் கண்ணன், நன்றி
அருமையான பதிவு நண்பா. பாராட்டுக்கள்!!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சூப்பர் மார்கெட்டின் சூப்பர் ரகசியங்களை தரும் நண்பருக்கு பாராட்டுக்கள். இது ஒரு வியாபாரத் தந்திரமே! ஆனால் ஏமாற்று வேலை அல்ல
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|