Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை! எஸ். ரவீந்திரன்
4 posters
Page 1 of 1
மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை! எஸ். ரவீந்திரன்
மின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க மின் கட்டணம் செலுத்துவதில் புதிய முறையை அமல்படுத்தியிருக்கும் வாரியத்தின் முடிவை என்னவென்று சொல்ல?
ஊரெல்லாம் இருட்டு. ஏதோ மீண்டும் கற்காலத்தில் வாழ்கிறோமா என்ற நிலையில் ஓடாத மின்சாரத்துக்கு ஏகப்பட்ட மின்கட்டணம் வசூலித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் மக்களின் கவலை.
அரசு இலவச மின்சாரம் அளிக்கிறது. நிலமில்லாமல் தவிக்கிறார் விவசாயி. இதுதான் யதார்த்த நிலை.
இந்நிலையில் மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு எப்படி மக்களை ஏமாளியாக்கலாம் என்ற வித்தையைக் கற்றுள்ளது மின்வாரியம்.
வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. அதன்படி 15-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் மின்கட்டணத்தை இனி மாதாமாதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின்கட்டணம் கணக்கீடு செய்ததில் இருந்து 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பதுதான் புதிய நடைமுறை. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
பயன்படுத்திய மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். இது நியாயம்தான். ஆனால், புதிய முறையால் யாருக்கு லாபம் என்பதை மின்வாரியம் நன்கு உணர்ந்திருக்கிறது. அதேவேளையில் பயனீட்டாளர்களுக்குப் பல வழிகளில் இது உபத்திரவத்தைத்தான் ஏற்படுத்தும்.
புதிய அறிவிப்பின்படி மின்அளவீடு செய்த நாளிலிருந்து 20 தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை ஏனோ மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை.
பெரும்பாலும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மாதத்தின் முதல்வாரத்தில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருக்காது. ஆனால், தனியார் நிறுவன ஊழியர்கள் பிற வகையினர் 7-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்துவார்களா என்பது அந்த மின்வாரியத்தில் இருக்கும் புண்ணியவான்களுக்குத்தான் தெரியும். இதுபோக மின் கணக்கீடு செய்பவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே அது கொஞ்சநஞ்சமல்ல.
ஒப்பந்த அடிப்படையில் கணக்கீட்டுப் பணி மேற்கொள்பவர்கள், மின்வாரியத்துக்கும் இந்தப் பணிக்கும் சம்பந்தபட்டவர்கள் அல்ல. அவர்களில் பலர் நிர்ணயிப்பதுதான் கட்டணம். ஏன், எதற்கென கேட்கக் கூடாது. இந்த லட்சணத்தில் மின்வாரியத்தின் ஓசைப்படாத அத்துமீறலை யாரும் கவனிக்கவில்லை.
அதாவது, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாதபோது அட்டை இருக்காது. இதனால் அவர்களுக்குச் சராசரி கட்டணம் கணக்கிடப்படும்.
உதாரணமாக, இரு மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தது ரூ.40 முதல் ரூ.100 வரை செலுத்துபவர்கள் பலர் உண்டு. இனி அவர்கள் மாதாமாதம் இதே தொகையைத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிபார்த்தால் இரு மாதங்களுக்கு ரூ.40 என்பது இனி ரூ. 80-ஆக இருக்கும்.
இதுதவிர, தப்பித்தவறிக் கட்டணம் செலுத்த மறந்தானைல் அபராதக் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை. இது நடைமுறைக்கு வர இன்னும் சில காலங்கள் பிடிக்கும்.
மேலும், மின்வாரியம் அஞ்சலகங்களில் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இதற்குத் தனியாகச் சேவைக் கட்டணம் வேறு கொடுக்க வேண்டுமாம். இதற்குப் பதிலாக நடமாடும் மின்வசூலிப்பு மையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாமே.
இதுபோன்று சட்டங்களை அமல்படுத்தும் மின்வாரியம் பிற சங்கடங்களை மனதில் கொள்வதில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல மடங்கு கட்டணத்தை வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதே தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டும்.
இன்னும் இலவச மின்சாரம் என்ற பெயரில் பலர் மின்சாரத்தை விரயமாக்குகின்றனர். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, இலவச மின்சாரத் திட்டத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும். பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்து அதற்கு மானியம் வழங்கலாம்.
பெரும்பாலானோர் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திப் பிறருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அதற்காகக் கட்டணம் பெறுவதும் நடந்து வருகிறது. இதை மின்வாரியம் கண்காணித்தல் அவசியம்.
இப்படிப் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தால் மின் தட்டுப்பாடு குளறுபடிகளைத் தீர்க்க முடியும்.
ஊரெல்லாம் இருட்டு. ஏதோ மீண்டும் கற்காலத்தில் வாழ்கிறோமா என்ற நிலையில் ஓடாத மின்சாரத்துக்கு ஏகப்பட்ட மின்கட்டணம் வசூலித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் மக்களின் கவலை.
அரசு இலவச மின்சாரம் அளிக்கிறது. நிலமில்லாமல் தவிக்கிறார் விவசாயி. இதுதான் யதார்த்த நிலை.
இந்நிலையில் மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு எப்படி மக்களை ஏமாளியாக்கலாம் என்ற வித்தையைக் கற்றுள்ளது மின்வாரியம்.
வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. அதன்படி 15-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் மின்கட்டணத்தை இனி மாதாமாதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின்கட்டணம் கணக்கீடு செய்ததில் இருந்து 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பதுதான் புதிய நடைமுறை. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
பயன்படுத்திய மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். இது நியாயம்தான். ஆனால், புதிய முறையால் யாருக்கு லாபம் என்பதை மின்வாரியம் நன்கு உணர்ந்திருக்கிறது. அதேவேளையில் பயனீட்டாளர்களுக்குப் பல வழிகளில் இது உபத்திரவத்தைத்தான் ஏற்படுத்தும்.
புதிய அறிவிப்பின்படி மின்அளவீடு செய்த நாளிலிருந்து 20 தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை ஏனோ மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை.
பெரும்பாலும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மாதத்தின் முதல்வாரத்தில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருக்காது. ஆனால், தனியார் நிறுவன ஊழியர்கள் பிற வகையினர் 7-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்துவார்களா என்பது அந்த மின்வாரியத்தில் இருக்கும் புண்ணியவான்களுக்குத்தான் தெரியும். இதுபோக மின் கணக்கீடு செய்பவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே அது கொஞ்சநஞ்சமல்ல.
ஒப்பந்த அடிப்படையில் கணக்கீட்டுப் பணி மேற்கொள்பவர்கள், மின்வாரியத்துக்கும் இந்தப் பணிக்கும் சம்பந்தபட்டவர்கள் அல்ல. அவர்களில் பலர் நிர்ணயிப்பதுதான் கட்டணம். ஏன், எதற்கென கேட்கக் கூடாது. இந்த லட்சணத்தில் மின்வாரியத்தின் ஓசைப்படாத அத்துமீறலை யாரும் கவனிக்கவில்லை.
அதாவது, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாதபோது அட்டை இருக்காது. இதனால் அவர்களுக்குச் சராசரி கட்டணம் கணக்கிடப்படும்.
உதாரணமாக, இரு மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தது ரூ.40 முதல் ரூ.100 வரை செலுத்துபவர்கள் பலர் உண்டு. இனி அவர்கள் மாதாமாதம் இதே தொகையைத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிபார்த்தால் இரு மாதங்களுக்கு ரூ.40 என்பது இனி ரூ. 80-ஆக இருக்கும்.
இதுதவிர, தப்பித்தவறிக் கட்டணம் செலுத்த மறந்தானைல் அபராதக் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை. இது நடைமுறைக்கு வர இன்னும் சில காலங்கள் பிடிக்கும்.
மேலும், மின்வாரியம் அஞ்சலகங்களில் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இதற்குத் தனியாகச் சேவைக் கட்டணம் வேறு கொடுக்க வேண்டுமாம். இதற்குப் பதிலாக நடமாடும் மின்வசூலிப்பு மையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாமே.
இதுபோன்று சட்டங்களை அமல்படுத்தும் மின்வாரியம் பிற சங்கடங்களை மனதில் கொள்வதில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல மடங்கு கட்டணத்தை வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதே தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டும்.
இன்னும் இலவச மின்சாரம் என்ற பெயரில் பலர் மின்சாரத்தை விரயமாக்குகின்றனர். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, இலவச மின்சாரத் திட்டத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும். பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்து அதற்கு மானியம் வழங்கலாம்.
பெரும்பாலானோர் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திப் பிறருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அதற்காகக் கட்டணம் பெறுவதும் நடந்து வருகிறது. இதை மின்வாரியம் கண்காணித்தல் அவசியம்.
இப்படிப் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தால் மின் தட்டுப்பாடு குளறுபடிகளைத் தீர்க்க முடியும்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை! எஸ். ரவீந்திரன்
அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. நன்றி
மற்றுமொரு விடயம். பல வீடுகளில் மின் மானி (meter) இயங்குவதில்லை. மின் அளவீடு எடுப்பவர்கள் அதைக் கவனிப்பதில்லை, அவரிடம் எடுத்துச் சொன்னால் அது எங்கள் வேலை அல்ல, தனியாகப் புகார் மனு கொடுங்கள் என்று சொல்லுகின்றனர், தனியாக மனுக் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. மீண்டும் சென்று விசாரித்தால் மின் மானி கைவசம் இல்லை என்ற பதில்! என்ன செய்ய?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நல்ல பதிவு. நன்றி
மற்றுமொரு விடயம். பல வீடுகளில் மின் மானி (meter) இயங்குவதில்லை. மின் அளவீடு எடுப்பவர்கள் அதைக் கவனிப்பதில்லை, அவரிடம் எடுத்துச் சொன்னால் அது எங்கள் வேலை அல்ல, தனியாகப் புகார் மனு கொடுங்கள் என்று சொல்லுகின்றனர், தனியாக மனுக் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. மீண்டும் சென்று விசாரித்தால் மின் மானி கைவசம் இல்லை என்ற பதில்! என்ன செய்ய?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை! எஸ். ரவீந்திரன்
மின் சிக்கனதிற்கு பல வழிகள்
உறவினர் வீட்டிற்கு செல்லும் போது தின் பண்டங்கள் வாங்குவதற்கு பதிலாக cfl பல்பு வாங்கி செல்லலாம் .
அவர்கள் பல்பை பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் நினைவு வரும் அல்லவா.
முடிந்தவரை நம் வீட்டிற்கு முதலில் cfl மாட்டி விட வேண்டும். .அடுத்தவங்களுக்கு புத்தி சொல்வதற்க்கு முன் நாம் சுத்தமாக முன் உதாரணமாக இருக்க வேண்டும் இல்லையா ?
பச்சை சேலை மேட்டரை கொஞ்சம் உல்டா பண்ணி cfl பல்பு மாட்ட வைக்கலாம் .
mlm முறையில் ஒவ்வொரு ஈகரை cfl பல்பின் பலனை சொல்லி வாங்க செய்யலாம்.
திருமண ,பிறந்த நாள் சமயங்களில் பெரிய cfl பல்புகளை பரிசு அளிக்கலாம்.
இந்த மாதிரி சின்ன சின்ன விசயதிற்க்கு எல்லாம் அரசை எதிர்பார்க்காமல்
நாமே செய்யலாம் இல்லையா?
உறவினர் வீட்டிற்கு செல்லும் போது தின் பண்டங்கள் வாங்குவதற்கு பதிலாக cfl பல்பு வாங்கி செல்லலாம் .
அவர்கள் பல்பை பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் நினைவு வரும் அல்லவா.
முடிந்தவரை நம் வீட்டிற்கு முதலில் cfl மாட்டி விட வேண்டும். .அடுத்தவங்களுக்கு புத்தி சொல்வதற்க்கு முன் நாம் சுத்தமாக முன் உதாரணமாக இருக்க வேண்டும் இல்லையா ?
பச்சை சேலை மேட்டரை கொஞ்சம் உல்டா பண்ணி cfl பல்பு மாட்ட வைக்கலாம் .
mlm முறையில் ஒவ்வொரு ஈகரை cfl பல்பின் பலனை சொல்லி வாங்க செய்யலாம்.
திருமண ,பிறந்த நாள் சமயங்களில் பெரிய cfl பல்புகளை பரிசு அளிக்கலாம்.
இந்த மாதிரி சின்ன சின்ன விசயதிற்க்கு எல்லாம் அரசை எதிர்பார்க்காமல்
நாமே செய்யலாம் இல்லையா?
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை! எஸ். ரவீந்திரன்
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. நன்றி
மற்றுமொரு விடயம். பல வீடுகளில் மின் மானி (meter) இயங்குவதில்லை. மின் அளவீடு எடுப்பவர்கள் அதைக் கவனிப்பதில்லை, அவரிடம் எடுத்துச் சொன்னால் அது எங்கள் வேலை அல்ல, தனியாகப் புகார் மனு கொடுங்கள் என்று சொல்லுகின்றனர், தனியாக மனுக் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. மீண்டும் சென்று விசாரித்தால் மின் மானி கைவசம் இல்லை என்ற பதில்! என்ன செய்ய?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நிச்சயமாக அக்கா இதில் புதிய மீட்டர் கேட்டு விண்ணப்பம் கொடுத்தும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை அது மட்டுமின்றி கடந்த சில மாதங்களில் நாம் எவ்வளவு அதிகம் பயனீட்டு கட்டணம் கட்டி உள்ளோமோ அந்த கட்டணத்தை காட்டும் படி கூறுகிறார்கள் இது எந்த வாகயில் நியாயம் என்றே புரியவில்லை
Similar topics
» கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை
» ஆன் லைனில் மின்கட்டணம்
» நடைமுறையில் மாறுதல்
» வீடு மாறுதல்
» பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!
» ஆன் லைனில் மின்கட்டணம்
» நடைமுறையில் மாறுதல்
» வீடு மாறுதல்
» பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|