Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
+5
றினா
அசுரன்
positivekarthick
அருள்மொழியான்
இரா.எட்வின்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
First topic message reminder :
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தோழர் ஜெயலலிதா அவர்களுக்கு,
வணக்கமும், வாழ்த்துக்களும்.. இப்படி நான் விளிப்பது தங்களுக்கு பிடிக்காமலும் போகலாம். ஏன், என் மீது கோவமே வரவும் கூடும். நீங்கள் பழைய அம்மையாராக இருப்பின் இதன் விளைவுகள் மிகக் கடுமையாகவும் இருந்திருக்கக் கூடும். நீங்கள் பழைய நிலையிலேயே இருந்திருப்பீர்கள் என்றால் நிச்சயமாய் நானும் இந்தக் கடிதத்தை எழுதியிருக்க மாட்டேன். காரணம் நீங்கள் மாறாத நிலையில் இது மாதிரி எளிய கடிதங்களால் எந்த விளைவும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் நீங்கள் நிறைய மாறியிருப்பதாகவே படுகிறது. அது மட்டுமல்ல நான் உளப் பூர்வமாக யாரை மதிக்கிறேனோ அவர்களை மட்டுமே தோழரே என்று விளிப்பது வழக்கம். நீங்கள் மாறியிருப்பதன் மூலம் தமிழகம் ஆக்கப் பூர்வமான சில அடிப்படை மாற்றங்களை உங்கள் மூலம் அடைவதற்கு வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையும் கூட உங்கள் மீதான எனது மரியாதைக்கும் தோழமைக்குமானக் காரணமாக இருக்கலாம்.
தேர்தல் கூட்டணி அமைந்தது. மிகச் சிறப்பான ஒரு கூட்டணியை மிக லாவகமாக ஏற்படுத்தினீர்கள். ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்களை கொஞ்சமும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான உங்கள் வேட்பாளர்களை அறிவித்தீர்கள். அதன் விளைவாக இடதுசாரிகளும் தே.மு. தி. க வும் ஒன்றிணைந்து மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் முயற்சி வரைக்கும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கூடிக் கூடி ஆலோசனை செய்தனர். இந்தச் சூழலில் கருணாநிதியோ தனக்கே உரிய ராஜ தந்திரங்களைப் பயன் படுத்தி அதையும் இதையும் பக்குவமாக செய்து ஏதோ செய்து மக்கள் மத்தியில் அவரது கூட்டணிதான் வெற்றி பெறப் போகும் கூட்டணி என்பது போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.அவ்வளவுதான் நீங்கள். ஒழிந்தீர்கள் என்றுதான் நினைத்திருந்தோம். அதற்கு தகுந்தாற்போலவே கருணாநிதியும் தான் நிமிடத்திற்கு நிமிடம் முன்னேறி செல்வதைப் போன்றதொரு பிம்பத்தை வலுவாக்கிக் கொண்டே சென்றார்.
பழைய ஆளாக இருந்திருந்தால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கோவத்தில் எதையாவது பேசியிருப்பீர்கள். விளைவாக நீங்கள் தோற்பதோடு இந்த மண்ணும் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னாப் படுவதற்கு காரணமாக இருந்திருப்பீர்கள்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த நிதானத்தோடும் பொறுமையோடும் இந்த சிக்கலை நீங்கள் கையாண்டீர்கள். ஏறத்தாழ அந்த நிமிடத்தில் முறிந்தே போயிருந்த கூட்டணியை மறு கட்டமைப்பு செய்தீர்கள். எல்லா தலைவர்களையும் உரிய மரியாதை கொடுத்து அரவணைத்த விதம் நீங்கள் மாறியிருப்பதையே காட்டியது.மட்டுமல்ல யாருக்கும் கசப்பின் தழும்பே இல்லாமல் பார்த்துக் கொண்டீர்கள். அப்பாடா, நிறைய பக்குவப் பட்டிருக்கிறீர்கள் எனப் புரிந்தது.
எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவானதும் அந்த ஒப்பந்த நகலினை வந்து வாங்குவத்ற்கு மறுத்து தோழர் மகேந்திரனை அனுப்பி வைத்த தோழர் தா.பாண்டியன் அவர்களை நீங்களே தொலை பேசி வற்புறுத்தி வரச் சொன்னதாக ஒரு தகவலை உங்கள் கட்சி நண்பர் ஒருவர் சொன்னார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களிடம் மேம்பட்ட செயல்பாடுகளை எங்களால் எதிர்பார்க்க முடியும்.
மட்டுமல்ல, வைகோ அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி வெளிச் சென்றபோது நீங்கள் உங்கள் நிலையை வெளிப்படுத்தி நீங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களின் முதிர்ச்சிக்கான அடையாளம். இதுவும் உங்களிடம் நாங்கள் பார்க்கும் புதுசு. கடந்த காலங்களில் நாவலர் உள்ளிட்டவர்களையே உதிர்ந்த ரோமங்கள் என்ற நீங்கள் எங்கே, இப்போது இவ்வளவு பொறுமையோடும் கண்ணியத்தோடும் வெளிப் படுத்தும் நீங்கள் எங்கே? முற்றாய் மாறியிருக்கிறீர்கள்.
தேர்தலில் வரலாறு காணாத அளவு, ஏன் நீங்களே கனவிலும் நினைத்துப் பார்த்திராத இவ்வளவு பெரிதான ஒரு வெற்றியை அடைந்த பிறகு நீங்கள் அதை எடுத்துக் கொண்ட விதம் நாங்கள் உங்களிடம் இதற்கு முன்னர் கண்டிராத ஒன்று. வழக்கமாக எனது ஆட்சியில்,என்னால், நான் என்று சுய முனைப்போடு பேசும் நீங்கள் மிகச் சரியாக ” அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி மக்களின் வெற்றி” என்று இந்த வெற்றியய் உங்களின் அமைப்பின் வெற்றியாக பார்த்தீர்கள். உங்களிடத்தில் இதை நாங்கள் புதிதாகவே காண்கிறோம். “ இது கருணாநிக்கு எதிராக விழுந்த வாக்குகளின் விளைவு “ என்பதை மிகவும் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள். தி.மு.க தோற்றதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணமாகக் கருதப் படுவது அவர் தன் குடும்பத்தை இயக்கத்தைக் காட்டிலும் அதிகமாய் முன்னிலைப் படுத்தியதுதான்.
அருள் கூர்ந்து உங்களின் இயக்கத் தொண்டனை, இயக்கத்தை எதையும் விட மேலாய் உழைக்கும் மக்களை முன்னிலைப் படுத்துங்கள்.இறுதி வரைக்கும் அவர்கள் உங்களைக் கை விட மாட்டார்கள்.
தோழர், காவேரிக் கரையில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள். காவேரி நதி நீர்ப் பிரச்சினையை உணர்ச்சி வசப்படாமல், பதட்டப் படாமல் அணுகி ஆக்கப் பூர்வமாகசெயல்பட்டு நமக்கு வரவேண்டிய நீரைப் பெற்றுத்தாருங்கள். காவேரிப் பிரச்சினை என்பது ஏதோ கர்நாடகாவிற்கும் நமக்குமிடையே உள்ள மூன்று அல்லது மூன்றரை டி. எம் .சிக்கான சிக்கல் என்பதாக மட்டுமே இரண்டு மாநிலங்களிலும் சொல்லப் படுகிறது. “ நடந்தாய் வாழி காவேரி” என்றுதான் இள்ங்கோ எழுதினான். இன்று காவேரியின் வேகம் அதிகரித்திருக்கிறது. காரணம் என்ன என்பதை அருள் கூர்ந்து அறிஞர்களைக் கொண்டு ஆராயுங்கள். ஓசை காளிதாஸ் மிகச் சரியாக, குடகில் இருந்த “சோலாஸ்” என்ற அமைப்பு காபி தோட்டங்களுக்காக அழிக்கப்பட்டதே இதற்கான காரணம் என்கிறார். குடகில் “:சோலாஸ்” மீண்டும் அதிகமாய் உருவாக்கப் பட்டால் காவேரியில் நான்கு மாதங்கள் ஓடும் நீர் ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு ஓடும். நிலத்தடி நீர் பெருகும். இரண்டு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினையின் பெரும் பகுதி தீர்ந்து போகும். வருடா வருடம் இரு மாநிலங்களிலும் நடைபெறும் பந்துகளுக்கு தேவை இருக்காது.
உய்ர்ச்சேதம் இருக்காது. அமைதியாய் மக்கள் இருப்பதற்கான சுமூகமான சூழல் ஏற்படும்.
மேலும் குறைந்த நீர் செலவில் அதிக விளைச்சலைப் பெறுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். களவு போன ஏரி குளங்களை கண்டுபிடித்து அவை யாரிடம் இருந்தாலும் இரக்கமே காட்டாமல் பறிமுதல் செய்யுங்கள். தூர் வாரி அவற்றில் நீர் சேமிக்க முயற்சி செய்யுங்கள். புதிது புதிதாய் ஏரி குளங்களையும் தடுப்பனைகளையும் ஏற்படுத்துங்கள். இவ்வளவையும் செய்துவிட்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுவிடுங்கள். இதை மட்டும் நீங்கள் செய்து விடுங்கள். பிறகு அடுத்த தேர்தலுக்கு நீங்கள் இலவசங்களை நீங்கள் தேர்தல் அறிக்கையிலே திணிக்க வேண்டியாவசியமே இருக்காது. மாறாக ,மக்கள் தங்கள் வாக்குகளை இலவசமாக உங்களுக்குப் போடுவார்கள்.
காவேரி வறண்டு கிடப்பதற்கான முக்கிய காரணக்களுள் மிக முக்கியமானது மணல் கொள்ளை. காவேரி என்றதும் காவேரி மணல்தான் எதையும் தாண்டி துறுத்திக் கொண்டு முன்னுக்கு வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுக்கு காவேரி மணலும் ஒரு காரணம் என்பதை அவசியம் உணர்ந்து கொள்ளுங்கள். கோடிக் கணக்கில் ஆங்காங்கே மணல் கொள்ளை அடித்த அக்கிரமத்தை தட்டி கேட்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்த மக்கள் தங்களது கோவத்தை இந்தத் தேர்தலில் வரிசையில் நின்று காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். மணல் கொள்ளையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுருட்டப் பட்ட மக்கள் பணத்தை தைரியமாக மீட்டெடுத்துத் தாருங்கள். இதை செய்யும் போது நீங்கள் எதற்கும் பயடத் தேவை இல்லை ( நீங்கள் எதற்கும் பயபடுகிறவரும் இல்லை). மக்கள் உங்களோடு இருப்பார்கள். ஆனாலும் ஒன்று இந்த மணல் கொள்ளை உங்கள் காலத்தில்தான் தொடங்கியது. இது விஷயத்தில் உங்கள் மந்திரி மார்கள் கோடு போட்டார்கள் அவர்கள் நீளமாய் அகலமாய் ரோடே போட்டார்கள். எனவே உங்கள் அமைச்சர்கள் மற்றும் பொருப்பாளர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். எச்சரித்தும் வையுங்கள்.
என்ன விலை கொடுத்தேனும் கல்வியைப் பொதுப் படுத்துங்கள். அதிக்காரத்தைப் பயன் படுத்தி கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கொள்ளை அடித்தவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்களை அரசுடமை ஆக்குங்கள். கல்வியை மட்டும் பொதுப் படுத்திப் பாருங்கள். காலா காலத்துக்கும் மக்கள் உங்களை இதயத்தில் வைத்துக் கொண்டாடுவார்கள்.
கல்வியை சந்தை சரக்காக மாற்றியவர்களை ஈவு இரக்கமற்று தண்டியுங்கள்.எதிர்ப்பவர்களை இரும்புக்கரம் கொண்டே அடக்குங்கள்.
ஸ்டார் காப்பீட்டுக் கழகத்திற்கு செல்லும் பணத்தில் அரசு மருத்துவமனைகளை சீர் படுத்துங்கள். ஏழைகள் பயன் பெறுவார்கள்.
அரசு ஊழியர்களை எதிரியாகப் பார்க்கும் உங்கள் பழையப் பார்வையை அருள் கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்கள்.
மின்சாரத் தட்டுப்பாடு அவர்களது தோல்விக்கான ஆகப் பெரிய காரணங்களுள் ஒன்று. தமிழகத்தில் மின்சாரத்திற்கு இவ்வளவு தேவை இருக்கும் போது இந்தியா மின்சாரத்தை இலங்கைக்கு வழங்க இருப்பதாக கேள்விப் படுகிறோம். மத்திய அரசின் சட்டையைப் பிடித்து உலுக்கி அதை தமிழகத்தின் பக்கம் திருப்பி வாங்குங்கள்.
ஈழத்தில் நடந்த இனப் படு கொலைகளுக்கு மத்திய அரசும் வெளியேறும் மாநில அரசும் பெரும் காரணங்களாக ஆனார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு வார காலத்திற்குள் சொந்த அரசால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். செத்தவர்கள் நானும் நீங்களும் பேசுகிற தமிழைப் பேசிய நம் மொழிக்காரர்கள். இப்போதும் முள் வேலியில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அவதிப் படுகிறார்கள் என்பதை விளக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லை.
இதுவரைக்கும் ஈழப் பிரச்சினையில் இருந்தது போல் இருந்து விடாமல் நீங்கள் சரியான நடவடிக்கையை இது விஷயத்தில் எடுக்க வேண்டும்.
1974 ல் கச்சத் தீவினை தாரை வார்த்தப் பொழுது எழுதிப் பரிமாறப்பட்ட ஒப்பந்த ஷரத்துகளைக் கூட இப்போது நடைமுறைப் படுத்த முடியாத சூழல் ஏன் வந்தது? 2008 ல் இரு நாட்டு அரசு அதிகாரிகளின் அளவில் ஒரு ஒப்பந்தம் கை எழுத்தாகி இருப்பதாகவும் அந்த ஷரத்தின் விளைவாகவே பல பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க தடை செய்யப் பட்டிருப்பதாகவும் அறிகிறோம். இது உண்மையா எனப் பார்த்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.
இலங்கை ஒன்றும் ஏதோ உணர்ச்சி வசப்பட்ட சூழலில் இதை செய்ய வில்லை. ஏற்கனவே பெட்ரோல் கிணறு அமைக்க இந்தப் பகுதியில் சீனாவிற்கு அனுமதிக்கப் பட்டு அவர்கள் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், இப்போது அடுத்ததாய் இங்கிலாந்து நாட்டின் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதன் விளைவாகவும்தான் அந்தப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல இயலாத நிலை உருவாகி வருகிறது. 1974 ஒப்பந்தப் படி இந்தப் பகுதியில் இலங்கையும் இந்தியாவும்தான் பெட்ரோல் கிணறுகளை அமைக்க முடியும். அருள் கூர்ந்து இது விஷயத்தில் கவனம் செலுத்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். இது வரைக்கும் ஐநூறுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் ஈவு இரக்கமற்ற முறையில் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு அமைச்சருக்கு 700 விழுக்காடு சொத்து அதிகரித்ததாய் சொல்கிறார்கள். நீங்கள் இது விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு உங்கள் அமைச்சர்களைக் கண்காணிக்க வேண்டும். வெளிப்படையான சொத்துக் கணக்கை நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்களும் இந்த ஐந்தாண்டுகாலமும் அவ்வப்போது மக்களிடம் சொல்லுங்கள்.
இந்தத் தேர்தல் தரும் பாடம் இதுதான். காசு சேர்ப்பவன் மக்களை சேர்க்க முடியாது. நீங்கள் மக்களை சேர்க்கிறவராய் மாறவேண்டும்.
கொட நாடை விடவும் போயெஸ் தோட்டத்தை விடவும் வேறெந்த சொர்க்க பூமியை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
வாழ்த்துக்கள் தோழர்.
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தோழர் ஜெயலலிதா அவர்களுக்கு,
வணக்கமும், வாழ்த்துக்களும்.. இப்படி நான் விளிப்பது தங்களுக்கு பிடிக்காமலும் போகலாம். ஏன், என் மீது கோவமே வரவும் கூடும். நீங்கள் பழைய அம்மையாராக இருப்பின் இதன் விளைவுகள் மிகக் கடுமையாகவும் இருந்திருக்கக் கூடும். நீங்கள் பழைய நிலையிலேயே இருந்திருப்பீர்கள் என்றால் நிச்சயமாய் நானும் இந்தக் கடிதத்தை எழுதியிருக்க மாட்டேன். காரணம் நீங்கள் மாறாத நிலையில் இது மாதிரி எளிய கடிதங்களால் எந்த விளைவும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் நீங்கள் நிறைய மாறியிருப்பதாகவே படுகிறது. அது மட்டுமல்ல நான் உளப் பூர்வமாக யாரை மதிக்கிறேனோ அவர்களை மட்டுமே தோழரே என்று விளிப்பது வழக்கம். நீங்கள் மாறியிருப்பதன் மூலம் தமிழகம் ஆக்கப் பூர்வமான சில அடிப்படை மாற்றங்களை உங்கள் மூலம் அடைவதற்கு வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையும் கூட உங்கள் மீதான எனது மரியாதைக்கும் தோழமைக்குமானக் காரணமாக இருக்கலாம்.
தேர்தல் கூட்டணி அமைந்தது. மிகச் சிறப்பான ஒரு கூட்டணியை மிக லாவகமாக ஏற்படுத்தினீர்கள். ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்களை கொஞ்சமும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான உங்கள் வேட்பாளர்களை அறிவித்தீர்கள். அதன் விளைவாக இடதுசாரிகளும் தே.மு. தி. க வும் ஒன்றிணைந்து மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் முயற்சி வரைக்கும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கூடிக் கூடி ஆலோசனை செய்தனர். இந்தச் சூழலில் கருணாநிதியோ தனக்கே உரிய ராஜ தந்திரங்களைப் பயன் படுத்தி அதையும் இதையும் பக்குவமாக செய்து ஏதோ செய்து மக்கள் மத்தியில் அவரது கூட்டணிதான் வெற்றி பெறப் போகும் கூட்டணி என்பது போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.அவ்வளவுதான் நீங்கள். ஒழிந்தீர்கள் என்றுதான் நினைத்திருந்தோம். அதற்கு தகுந்தாற்போலவே கருணாநிதியும் தான் நிமிடத்திற்கு நிமிடம் முன்னேறி செல்வதைப் போன்றதொரு பிம்பத்தை வலுவாக்கிக் கொண்டே சென்றார்.
பழைய ஆளாக இருந்திருந்தால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கோவத்தில் எதையாவது பேசியிருப்பீர்கள். விளைவாக நீங்கள் தோற்பதோடு இந்த மண்ணும் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னாப் படுவதற்கு காரணமாக இருந்திருப்பீர்கள்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த நிதானத்தோடும் பொறுமையோடும் இந்த சிக்கலை நீங்கள் கையாண்டீர்கள். ஏறத்தாழ அந்த நிமிடத்தில் முறிந்தே போயிருந்த கூட்டணியை மறு கட்டமைப்பு செய்தீர்கள். எல்லா தலைவர்களையும் உரிய மரியாதை கொடுத்து அரவணைத்த விதம் நீங்கள் மாறியிருப்பதையே காட்டியது.மட்டுமல்ல யாருக்கும் கசப்பின் தழும்பே இல்லாமல் பார்த்துக் கொண்டீர்கள். அப்பாடா, நிறைய பக்குவப் பட்டிருக்கிறீர்கள் எனப் புரிந்தது.
எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவானதும் அந்த ஒப்பந்த நகலினை வந்து வாங்குவத்ற்கு மறுத்து தோழர் மகேந்திரனை அனுப்பி வைத்த தோழர் தா.பாண்டியன் அவர்களை நீங்களே தொலை பேசி வற்புறுத்தி வரச் சொன்னதாக ஒரு தகவலை உங்கள் கட்சி நண்பர் ஒருவர் சொன்னார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களிடம் மேம்பட்ட செயல்பாடுகளை எங்களால் எதிர்பார்க்க முடியும்.
மட்டுமல்ல, வைகோ அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி வெளிச் சென்றபோது நீங்கள் உங்கள் நிலையை வெளிப்படுத்தி நீங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களின் முதிர்ச்சிக்கான அடையாளம். இதுவும் உங்களிடம் நாங்கள் பார்க்கும் புதுசு. கடந்த காலங்களில் நாவலர் உள்ளிட்டவர்களையே உதிர்ந்த ரோமங்கள் என்ற நீங்கள் எங்கே, இப்போது இவ்வளவு பொறுமையோடும் கண்ணியத்தோடும் வெளிப் படுத்தும் நீங்கள் எங்கே? முற்றாய் மாறியிருக்கிறீர்கள்.
தேர்தலில் வரலாறு காணாத அளவு, ஏன் நீங்களே கனவிலும் நினைத்துப் பார்த்திராத இவ்வளவு பெரிதான ஒரு வெற்றியை அடைந்த பிறகு நீங்கள் அதை எடுத்துக் கொண்ட விதம் நாங்கள் உங்களிடம் இதற்கு முன்னர் கண்டிராத ஒன்று. வழக்கமாக எனது ஆட்சியில்,என்னால், நான் என்று சுய முனைப்போடு பேசும் நீங்கள் மிகச் சரியாக ” அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி மக்களின் வெற்றி” என்று இந்த வெற்றியய் உங்களின் அமைப்பின் வெற்றியாக பார்த்தீர்கள். உங்களிடத்தில் இதை நாங்கள் புதிதாகவே காண்கிறோம். “ இது கருணாநிக்கு எதிராக விழுந்த வாக்குகளின் விளைவு “ என்பதை மிகவும் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள். தி.மு.க தோற்றதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணமாகக் கருதப் படுவது அவர் தன் குடும்பத்தை இயக்கத்தைக் காட்டிலும் அதிகமாய் முன்னிலைப் படுத்தியதுதான்.
அருள் கூர்ந்து உங்களின் இயக்கத் தொண்டனை, இயக்கத்தை எதையும் விட மேலாய் உழைக்கும் மக்களை முன்னிலைப் படுத்துங்கள்.இறுதி வரைக்கும் அவர்கள் உங்களைக் கை விட மாட்டார்கள்.
தோழர், காவேரிக் கரையில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள். காவேரி நதி நீர்ப் பிரச்சினையை உணர்ச்சி வசப்படாமல், பதட்டப் படாமல் அணுகி ஆக்கப் பூர்வமாகசெயல்பட்டு நமக்கு வரவேண்டிய நீரைப் பெற்றுத்தாருங்கள். காவேரிப் பிரச்சினை என்பது ஏதோ கர்நாடகாவிற்கும் நமக்குமிடையே உள்ள மூன்று அல்லது மூன்றரை டி. எம் .சிக்கான சிக்கல் என்பதாக மட்டுமே இரண்டு மாநிலங்களிலும் சொல்லப் படுகிறது. “ நடந்தாய் வாழி காவேரி” என்றுதான் இள்ங்கோ எழுதினான். இன்று காவேரியின் வேகம் அதிகரித்திருக்கிறது. காரணம் என்ன என்பதை அருள் கூர்ந்து அறிஞர்களைக் கொண்டு ஆராயுங்கள். ஓசை காளிதாஸ் மிகச் சரியாக, குடகில் இருந்த “சோலாஸ்” என்ற அமைப்பு காபி தோட்டங்களுக்காக அழிக்கப்பட்டதே இதற்கான காரணம் என்கிறார். குடகில் “:சோலாஸ்” மீண்டும் அதிகமாய் உருவாக்கப் பட்டால் காவேரியில் நான்கு மாதங்கள் ஓடும் நீர் ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு ஓடும். நிலத்தடி நீர் பெருகும். இரண்டு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினையின் பெரும் பகுதி தீர்ந்து போகும். வருடா வருடம் இரு மாநிலங்களிலும் நடைபெறும் பந்துகளுக்கு தேவை இருக்காது.
உய்ர்ச்சேதம் இருக்காது. அமைதியாய் மக்கள் இருப்பதற்கான சுமூகமான சூழல் ஏற்படும்.
மேலும் குறைந்த நீர் செலவில் அதிக விளைச்சலைப் பெறுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். களவு போன ஏரி குளங்களை கண்டுபிடித்து அவை யாரிடம் இருந்தாலும் இரக்கமே காட்டாமல் பறிமுதல் செய்யுங்கள். தூர் வாரி அவற்றில் நீர் சேமிக்க முயற்சி செய்யுங்கள். புதிது புதிதாய் ஏரி குளங்களையும் தடுப்பனைகளையும் ஏற்படுத்துங்கள். இவ்வளவையும் செய்துவிட்டு நமக்கு உரிமையான நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுவிடுங்கள். இதை மட்டும் நீங்கள் செய்து விடுங்கள். பிறகு அடுத்த தேர்தலுக்கு நீங்கள் இலவசங்களை நீங்கள் தேர்தல் அறிக்கையிலே திணிக்க வேண்டியாவசியமே இருக்காது. மாறாக ,மக்கள் தங்கள் வாக்குகளை இலவசமாக உங்களுக்குப் போடுவார்கள்.
காவேரி வறண்டு கிடப்பதற்கான முக்கிய காரணக்களுள் மிக முக்கியமானது மணல் கொள்ளை. காவேரி என்றதும் காவேரி மணல்தான் எதையும் தாண்டி துறுத்திக் கொண்டு முன்னுக்கு வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுக்கு காவேரி மணலும் ஒரு காரணம் என்பதை அவசியம் உணர்ந்து கொள்ளுங்கள். கோடிக் கணக்கில் ஆங்காங்கே மணல் கொள்ளை அடித்த அக்கிரமத்தை தட்டி கேட்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்த மக்கள் தங்களது கோவத்தை இந்தத் தேர்தலில் வரிசையில் நின்று காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். மணல் கொள்ளையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுருட்டப் பட்ட மக்கள் பணத்தை தைரியமாக மீட்டெடுத்துத் தாருங்கள். இதை செய்யும் போது நீங்கள் எதற்கும் பயடத் தேவை இல்லை ( நீங்கள் எதற்கும் பயபடுகிறவரும் இல்லை). மக்கள் உங்களோடு இருப்பார்கள். ஆனாலும் ஒன்று இந்த மணல் கொள்ளை உங்கள் காலத்தில்தான் தொடங்கியது. இது விஷயத்தில் உங்கள் மந்திரி மார்கள் கோடு போட்டார்கள் அவர்கள் நீளமாய் அகலமாய் ரோடே போட்டார்கள். எனவே உங்கள் அமைச்சர்கள் மற்றும் பொருப்பாளர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். எச்சரித்தும் வையுங்கள்.
என்ன விலை கொடுத்தேனும் கல்வியைப் பொதுப் படுத்துங்கள். அதிக்காரத்தைப் பயன் படுத்தி கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கொள்ளை அடித்தவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்களை அரசுடமை ஆக்குங்கள். கல்வியை மட்டும் பொதுப் படுத்திப் பாருங்கள். காலா காலத்துக்கும் மக்கள் உங்களை இதயத்தில் வைத்துக் கொண்டாடுவார்கள்.
கல்வியை சந்தை சரக்காக மாற்றியவர்களை ஈவு இரக்கமற்று தண்டியுங்கள்.எதிர்ப்பவர்களை இரும்புக்கரம் கொண்டே அடக்குங்கள்.
ஸ்டார் காப்பீட்டுக் கழகத்திற்கு செல்லும் பணத்தில் அரசு மருத்துவமனைகளை சீர் படுத்துங்கள். ஏழைகள் பயன் பெறுவார்கள்.
அரசு ஊழியர்களை எதிரியாகப் பார்க்கும் உங்கள் பழையப் பார்வையை அருள் கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்கள்.
மின்சாரத் தட்டுப்பாடு அவர்களது தோல்விக்கான ஆகப் பெரிய காரணங்களுள் ஒன்று. தமிழகத்தில் மின்சாரத்திற்கு இவ்வளவு தேவை இருக்கும் போது இந்தியா மின்சாரத்தை இலங்கைக்கு வழங்க இருப்பதாக கேள்விப் படுகிறோம். மத்திய அரசின் சட்டையைப் பிடித்து உலுக்கி அதை தமிழகத்தின் பக்கம் திருப்பி வாங்குங்கள்.
ஈழத்தில் நடந்த இனப் படு கொலைகளுக்கு மத்திய அரசும் வெளியேறும் மாநில அரசும் பெரும் காரணங்களாக ஆனார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு வார காலத்திற்குள் சொந்த அரசால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். செத்தவர்கள் நானும் நீங்களும் பேசுகிற தமிழைப் பேசிய நம் மொழிக்காரர்கள். இப்போதும் முள் வேலியில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அவதிப் படுகிறார்கள் என்பதை விளக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லை.
இதுவரைக்கும் ஈழப் பிரச்சினையில் இருந்தது போல் இருந்து விடாமல் நீங்கள் சரியான நடவடிக்கையை இது விஷயத்தில் எடுக்க வேண்டும்.
1974 ல் கச்சத் தீவினை தாரை வார்த்தப் பொழுது எழுதிப் பரிமாறப்பட்ட ஒப்பந்த ஷரத்துகளைக் கூட இப்போது நடைமுறைப் படுத்த முடியாத சூழல் ஏன் வந்தது? 2008 ல் இரு நாட்டு அரசு அதிகாரிகளின் அளவில் ஒரு ஒப்பந்தம் கை எழுத்தாகி இருப்பதாகவும் அந்த ஷரத்தின் விளைவாகவே பல பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க தடை செய்யப் பட்டிருப்பதாகவும் அறிகிறோம். இது உண்மையா எனப் பார்த்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.
இலங்கை ஒன்றும் ஏதோ உணர்ச்சி வசப்பட்ட சூழலில் இதை செய்ய வில்லை. ஏற்கனவே பெட்ரோல் கிணறு அமைக்க இந்தப் பகுதியில் சீனாவிற்கு அனுமதிக்கப் பட்டு அவர்கள் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், இப்போது அடுத்ததாய் இங்கிலாந்து நாட்டின் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதன் விளைவாகவும்தான் அந்தப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல இயலாத நிலை உருவாகி வருகிறது. 1974 ஒப்பந்தப் படி இந்தப் பகுதியில் இலங்கையும் இந்தியாவும்தான் பெட்ரோல் கிணறுகளை அமைக்க முடியும். அருள் கூர்ந்து இது விஷயத்தில் கவனம் செலுத்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். இது வரைக்கும் ஐநூறுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் ஈவு இரக்கமற்ற முறையில் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு அமைச்சருக்கு 700 விழுக்காடு சொத்து அதிகரித்ததாய் சொல்கிறார்கள். நீங்கள் இது விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு உங்கள் அமைச்சர்களைக் கண்காணிக்க வேண்டும். வெளிப்படையான சொத்துக் கணக்கை நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்களும் இந்த ஐந்தாண்டுகாலமும் அவ்வப்போது மக்களிடம் சொல்லுங்கள்.
இந்தத் தேர்தல் தரும் பாடம் இதுதான். காசு சேர்ப்பவன் மக்களை சேர்க்க முடியாது. நீங்கள் மக்களை சேர்க்கிறவராய் மாறவேண்டும்.
கொட நாடை விடவும் போயெஸ் தோட்டத்தை விடவும் வேறெந்த சொர்க்க பூமியை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
வாழ்த்துக்கள் தோழர்.
Last edited by இரா.எட்வின் on Thu May 19, 2011 2:46 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
சரியான வார்த்தைகள் எட்வின்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
தாமு wrote:![]()
நன்றி தோழர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
மஞ்சுபாஷிணி wrote:சரியான வார்த்தைகள் எட்வின்...
மிக்க நன்றி சுபா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
positivekarthick wrote:என்ன செய்ய!!! நல்ல விஷயத்தை விட கெட்ட விசயங்களே நம்மை ஆக்கிரமிக்கின்றன. முயன்றால் முடியாதது இல்லை.
நிறைய நல்லதுகள் முகவரி அறியப் படாமலே முடங்கிக் கிடக்கின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
றினா wrote:தனி மனித ஒழுக்கமா?
அப்படி என்றால் என்ன?
இப்போ இப்படித்தான் இருக்கிறது.
அப்படி எல்லாம் பயப்படத் தேவை இல்லை றினா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
நன்றி மறப்பது நன்றநு ஈகரை மறப்பது நன்றல்ல
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
முத்தியாலு மாதேஷ் wrote:நன்றி மறப்பது நன்றநு ஈகரை மறப்பது நன்றல்ல
மீண்டும் ஒரு முறை புரியிற மாதிரி சொல்லுங்க மாதேஷ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது.
மிக்க நன்றி அருள்மொழியான்அருள்மொழியான் wrote:![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![எதை விடவும் உழைக்கும் மக்களின் உள்ளம் சுத்தமானது, சொகுசானது, பாதுகாப்பானது. - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்
» முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...
» கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?
» மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என சோதனையில் முடிவு, மீண்டும் விற்பனைக்கு வருகிறது
» வெள்ளப் பேரழிவுக்கு என்ன காரணம் ? உழைக்கும் பாட்டாளிகளை மதிக்காததே !
» முபாரக்குகளை விடவும்.... கடாபிகளை விடவும் ...
» கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?
» மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என சோதனையில் முடிவு, மீண்டும் விற்பனைக்கு வருகிறது
» வெள்ளப் பேரழிவுக்கு என்ன காரணம் ? உழைக்கும் பாட்டாளிகளை மதிக்காததே !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|