ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிபெயர்ச்சி பலன் 2009

+4
ரூபன்
சிவா
kirupairajah
மீனு
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு Tue Sep 08, 2009 8:19 pm

சனிபெயர்ச்சி பலன் 2009

மேஷம்

மேஷராசி அன்பர்களே நீங்கள் அற்ப ஆசை அற்றவர் களாகவும் வாக்குவன்மை நிறைந்தவர்களாகவும் இருப்பர். உங்களுக்கு தற்போது சனி பகவான் 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு இடமாறுகிறார். அவர் ஐந்தில் இருக்கும்போது பல்வேறு இடைïறையும் இன்னலையும் கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி இருப்பார். கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இருக்கும். இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் விடை கொடுக்கும் காலம் இது. சனிபகவான் தற்போது 6-ம் இடத்துக்கு வந்து பல்வேறு நன்மை உள்ளார். அவர் நல்ல பணப்புழக்கத்தையும், எடுத்த காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றலால் எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். உடல் நலம் சிறப்பு அடையும். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும் காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு இனி விடை கொடுத்து முன்னேற்றத்துக்கு அடியெடுத்து வைக்கும் காலம். சனி இனி பொருளாதார நிலையை மேம்படுத்துவார். பழைய கடன்கள் அடைபட்டு சேமிப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். பின்னர் புதிய இடம், வீடு வாங்கலாம். புதிய வாகனம் வாங்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே இருந்த பிணக்குகள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் டிசம்பருக்கு பிறகு கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் தற்போது நிலவும் பிற்போக்கான பலன்கள் அனைத்தும் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு விலகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை விட்டு விலகியவர்கள் அதே வேலையை மீண்டும் கிடைக்க பெறுவர். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நஷ்டம் என்ற நிலை இருக்காது. கேதுவால் இருந்துவந்த எதிரிகளின் தொல்லை இனி இருக்காது. அவர்களின் சதி உங்களிடம் எடுபடாமல் போகும். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இரும்பு தொடர்பான வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் ஈடுபடலாம். அதுவும் 2010 ஜனவரி 10-ந் தேதிக்குள் தொடங்குவது சிறப்பு. கலைஞர்கள் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மாறுபடும். டிசம்பருக்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மேம்பாடு காண்பர். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். விவசாயத்தில் அதிக மகசூல் வரும். நெல், கோதுமை சோளம், மொச்சை. கரும்பு, எள் பனைத் தொழில் எந்த காலத்திலும் சிறப்பை தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு.பெண்கள் முன்னேற்றம் காண்பர். கோவில் போன்ற புண்ணியத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக வயிறு தொடர்பாக பிரச்சினை அடியோடு தீரும். மருத்துவ செலவு இனி இருக்காது. பரிகாரம்: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். உளுந்து, படைத்து வணங்கலாம். ஆதரவற்றர்களுக்கு இயன்ற உதவி செய்யலாம். மே 2010-ஏப்ரல்2011 குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கடந்த காலம்போல் இல்லாமல் செலவை சற்று குறைத்துக் கொள்ளவும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படலாம். சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலருக்கு குரு வக்கிர காலத்தில் திருமணம் கைகூடலாம். தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து எதிர்பாராத விரும்பத் தகாத செய்தி வரலாம்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்களிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு விரும்பமில்லா இடமாற்றம் வரலாம். வியாபாரிகள், புதிய தொழில் தொடர்ந்து அனுகூலத்தை கொடுக்கும். ராகுவால் எதிரிகளின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். குருவால் செலவு அதிகரிக்கும். பணவிஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. 2011 பிப்ரவரி முதல் புதிய முதலீட்டை தவிர்க்கவும்.கலைஞர்கள் உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கமால் போகலாம். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுங்கள். விவசாயிகள் சிறப்பான வருவாயோடு காணப்படுவர். குறிப்பாக கரும்பு, எள், பயறுவகை மற்றும் பனை பொருட்களில் நல்ல லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அலைச்சலும் பளுவும் இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பரிகாரம்: குருபகவானுக்கும் ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகள் படிக்கவும், வயதான மூதாட்டிகளுக்கும் உதவி செய்யலாம். மே 2011 - நவம்பர் 2011 பொருளாதார வளம் சிறப்பாகவே இருக்கும். அதேநேரம் கேதுவால் செலவுகள் அதிகரிக்கும். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.குடும்பத்தில் புதிய வீடு மனை வாங்கும் யோகம் கூடிவரும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடித்தாலும் ராகுவால் சிற்சில கருத்துவேறுபாடும், ஊடல்களும் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு உருவாகலாம். எனவே அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.உத்தியோகத்தில் கடந்த காலத்தை போல் பிற்போக்கான நிலை இருக்காது. வேலையில் திருப்தி ஏற்படும். சிலருக்கு தற்காலிகமாக வெளிïர் பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். 2011 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மட்டும் வேலையில் சற்று கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் எதிரிகளின் இடைïறு இனி இருக்காது. அதே நேரம் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. அரசு வகையில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். கலைஞர்களுக்கு இந்த காலம் சீராக இருக்கும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் இருப்பர். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தடைகள் வரலாம். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் நல்ல வருமானத்தை பெறலாம். கரும்பு, எள் போன்ற பயிர்களின் சிறப்பான மகசூல் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பரிகாரம்: ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by kirupairajah Tue Sep 08, 2009 8:24 pm

சிவா, நீங்க மேஷ ராசி தானே


சனிபெயர்ச்சி பலன் 2009 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு Tue Sep 08, 2009 8:28 pm

உங்க ராசி சொல்லுங்க கிருபை..

மெயில் பாருங்க..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by kirupairajah Tue Sep 08, 2009 8:29 pm

ரிஷபம்


ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட மாட்டீர்கள். உங்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் தரும் காலமாக இது அமையும். சனிபகவான் தற்போது அர்த்தாஷ்டமம் என்னும் 4-ம் இடத்தில் இருந்து 5-ம் இடத்திற்கு செல்கிறார். இது சுமாரான நிலை என்றாலும் கவலை கொள்ள வேண்டாம். சனிபகவான் 4-ம் இடத்தில் இருக்கும் போது, உங்களுக்கு பல்வேறு இடைïறை கொடுத்திருப்பார். உங்களை பல வழிகளில் அலைக்கழித்திருப்பார். தாயின் உடல் நலனும் பாதிப்படைந்து உங்களை கவலைக்குள்ளாக்கி இருக்கும். இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. 5-ல் சனி இருக்கும் போது குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தருவார் என்பது பொது விதி. சனி திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7 மற்றும் 10 இடத்து பார்வையும் சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும். அதே நேரம் மற்றய கிரகங்களும் நன்மை தரலாம். மேலும் திருப்தியற்ற நிலையில் உள்ள கிரகங்கள் கெடுபலன்களை தரமுடியாது. செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 இந்த காலக்கட்ட தொடக்கத்தில் பல்வேறு சிறப்புகளை தரும். பொருளாதார வளம் நன்றாகவே இருக்கும். செலவுகளும் ஏற்படும். சிக்கனம் தேவை. உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் வசிதிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். சிலரது குடும்பத்தில் தற்காலிகமாக பிரிவும்கூட உருவாகலாம்.உறவினர் வகையிலும் அவ்வளவு அன்னியோனியம் காணப்படவில்லை. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். வீடு-மனை வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடக்கத்தில் சிறப்பாக இருப்பர். ஆனால் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். உங்கள் வேலைகளை வேறுநபரிடம் ஒப்படைக்க வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதால் எந்த விபரீத விளைவும் ஏற்பட்டு விடாது. வியாபாரிகள் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவீர்கள். பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை.. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்திருக்கவும் புதிய தொழிலை இந்த காலத்தில் தொடங்க வேண்டாம். 2010 ஜனவரி10-ந் தேதி முதல் நன்மைகள் அதிகம் கிடைக்கும். கலைஞர்கள் அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். எதிர்பாÖத்த பதவி கிடைக்காமல் போகலாம். மாணவர் கள் குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.விவசாயத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பவர்களும் நல்ல பலனை காணலாம். பெண்கள் சீரான நிலையில் இருப்பர். அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பத்திரகாளி அம்மன் வழிபாடு நன்மையை தரும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். சன்னியாசிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். மே 2010 - ஏப்ரல் 2011 பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். உங்கள் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு


சனிபெயர்ச்சி பலன் 2009 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by kirupairajah Tue Sep 08, 2009 8:30 pm

அதிகரிக்கும். வீட்டில் கடந்த காலத்தில் இருந்து வந்த பிணக்குகள் குறையும். அதே நேரம் சனியும் ராகுவும் சாதகமாக இல்லாததால் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். இதுவரை தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பின்தங்கிய நிலை ஏற்?டும். புதிய பதவி வர வாய்ப்பு உண்டு. சம்பள உயர்வு வரும். சிலர் முக்கிய பொறுப்பு கிடைக்க பெறுவர். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும வேலை கிடைக்க பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சற்று கவனமாக இருக்கவும்.வியாபாரிகள் பணப்புழக்கம் அதிகரிக்கும். 2011 ஜனவரிக்கு பிறகு சனி வக்கிரம் அடைவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். அரசு வகையில் தொடர்ந்து அனுகூலம் காணப்படவில்லை. எதிரிகள் வகையிலும் ஒரு கண் இருப்பது நல்லது. கலைஞர்கள் புத்துணர்ச்சி பெறுவர். புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் இதுவரை இருந்து வந்த தடை- தோல்வி இனி இருக்காது. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலனை காணலாம். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலர் பெறலாம்.விவசாயிகள் சற்று முயற்சி எடுத்து புதிய சொத்துக்களை வாங்கலாம். பெண்கள் முன்னேற்றம் அடைவர். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் நெருப்பு தொடர்பான சிற்சில பிரச்சினைகள் வரலாம். பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஏதாவது கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யானைக்கு கரும்பு கொடுங்கள். மே 2011 - நவம்பர் 2011 காரிய அணுகூலம் முயற்சியின் பேரில்தான் நிறைவேறும். எதையும் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுத்துவது நல்லது. மதிப்பு, மரியாதை முன்புபோல் இல்லாவிட்டாலும் உங்கள் செல்வாக்குக்கு பங்கம் வராது. கணவன்-மனைவி அவ்வப்போது கருத்துவேறுபாடு வரத்தான் செய்யும். பொறுமையும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. வீடு மனை வாங்க யோகம் தள்ளிபோகலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதப்படலாம். தூரத்து உறவினர் வகையில் இருந்து துக்ககரமான செய்தி வரலாம். திருட்டு சம்பவம் அடியோடு மறையும்.உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்க தற்போது சிறப்பான நேரம் அல்ல. ஆனால் அதிக முதல் போடாமல் சிறு தொழில் தொடங்குவதில் எந்த தவறும் இல்லை. அரசு வகையில் இருந்த பிரச்சினை இனி இருக்காது. சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். யாரிடமும் கவனமுடன் பழகவும்.வழக்கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும். கலைஞர்கள் சுமாரான பலனை காணலாம். சமுக நல சேவகர்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மாணவர்கள் மிகவும் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. . பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். பிள்ளைகள் வகையில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவர். உடல்நலம் சீராக இருக்கும். நெருப்பு தொடர்பான உபாதை இனி இருக்காது. பரிகாரம்: எல்லா கிரகங்களும் சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வரவும். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்


சனிபெயர்ச்சி பலன் 2009 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by சிவா Tue Sep 08, 2009 8:30 pm

kirupairajah wrote:சிவா, நீங்க மேஷ ராசி தானே
மகரம் கிருபை


சனிபெயர்ச்சி பலன் 2009 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by kirupairajah Tue Sep 08, 2009 8:30 pm

meenuga wrote:உங்க ராசி சொல்லுங்க கிருபை..

மெயில் பாருங்க..

நான் துலா ராசி


சனிபெயர்ச்சி பலன் 2009 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு Tue Sep 08, 2009 8:34 pm

மிதுனம்:


மிதுன ராசி அன்பர்களே உங்கள் பேச்சில் சாமர்த்தி யம் காணப்படும். இதுவரை சனிபகவான். மூன்றாம் இடமான சிம்மத்தில் இருந்து உங் களுக்கு பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக பொருளாதார வளத்தை கொடுத்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றிருப்பார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்திருக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். இந்த நிலையில் சனிபகவான் தற்போது 4-ம் இடமான கன்னிக்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்பத்தில் வீண்விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.- இவை எல்லாம் பொதுவான பலன். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிக உகந்த நிலை. செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 உங்கள் முயற்சியில் சிற்சில தடைகள் வரலாம். ஆனாலும் எளிதில் முறியடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். ராகு சிறப்பாக இல்லாததால் சிற்சில கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஆனால் அதற்காக கடன் வாங்க நேரிடலாம். வீட்டில் நிகழும் திருட்டு சம்பவங்கள் அனைத்தும் நவம்பர் மாதம் முதல் அடியோடு மறையும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருக்கவும். ஆனாலும் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரிகள் தொடக்கத்தில் சற்று மந்த நிலையில் இருந்தாலும் டிசம்பருக்கு பிறகு முன்னேற்றம் ஆரம்பிக்கும். லாபம் அதிகரிக்க தொடங்கும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. பொருள் விரயம், பணம் மாயம் போன்ற சம்பவங்கள் நவம்பருக்கு பிறகு இருக்காது.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் புதிய பதவி கிடைக்கப்பெறுவர்.மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. வழக்கு விவகாரங்கள் சீராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காண்பீர்கள். விருந்துவிழா என சென்று வருவீர்கள். குடுபத்தினரிடம் சற்று விட்டுக் கொடுத்து போகவேண்டும். உடல் நலனை பொறுத்தவரை சிலர் வீண் மனஉளைச்சலில் இருப்பர். நெருப்பு தொடர்பான உபாதைகள் பூரண குணம் அடையும். பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும் கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். மே 2010 - ஏப்ரல் 2011 பொருளாதார நிலையில் முன்பு போல் இல்லாவிட்டாலும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பண வரவு இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஜனவரிக்கு பிறகு நல்ல பணப்புழக்கம் இருக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். முக்கிய காரியங்களை குடும்ப பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். குருவின் வக்கிர காலமான ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் கைகூடலாம். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் அவ்வப்போது தலைதூக்கும். உறவினர்கள் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் கடந்த காலத்தைவிட அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். வியாபாரத்தில் அலைச்சலும் பளுவும் இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். ஜனவரிக்கு பிறகு நிலைமை மேம்படும்.கலைஞர்கள்: சுமாரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்காது. வக்கீல்கள், எழுத்தாளர்கள் போன்றோரும் சுமாரான பலனை பெறுவர். கூலி வேலை செய்பவர்கள் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவர். சேமிப்பு இருக்கும். மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்க பெறலாம். பெண்கள் சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவேண்டும். உடல்நலம் சுமாராக இருக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது வரும். பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யுங்கள். மே2011 - நவம்பர்2011 பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் அனைத்தும் மறையும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிணக்குகள் மறையும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். புதிய வாகனம் வாங்கலாம். உத்தியோகம் வேலையில் ஆர்வம் பிறக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு ஊழியர்கள் மேம்பாடு காண்பர்.வியாபாரிகள் முன்னேற்றம் காண்பர். இதுவரை நஷ்டத்தில் தவித்து கொண்டு இருந்தவர்கள் அதில் இருந்து விடுபட்டு தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்கலாம். அரசின் உதவிகள் கிடைக்கும்..செலவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பாராட்டு விருது போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் செல்வாக்குடன் இருப்பர். எழுத்தாளர்கள், வக்கீல்கள் போன்றோர் சிறப்பான பலனை காண்பர். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் சற்று முயற்சி செய்தால் வெளிநாடு சென்று படிக்கலாம். விவசாயிகள் நல்ல வளத்தை காணலாம். சிலர் புதிய சொத்து வாங்குவர். வழக்கு விவகாரங்கள் எதிர்பார்த்த படி அமையும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.பெண்கள் முன்னேற்றமான பலனை காண்பர். கணவர் மற்றும் குடும்பத்தார் உங்களை மெச்சுவர். உடல் நலம் சுமாராக இருக்கும். பித்தம் போன்ற சிறுசிறு பாதிப்புகள் வரலாம். தாயாரின் உடல்நலனில் படிப்படியாக முன்னேற்றம் தெரியும். பரிகாரம்: சனி உங்களுக்கு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்யுங்கள். மேலும். ஞானிகளை சந்தித்து அவர்களுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு Tue Sep 08, 2009 8:55 pm

கடகம்


கடக ராசி அன்பர்களே குடும்பத்தாரிடம் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் நீங்கள் சாமர்த்தியமாக பேசும் திறமை படைத்தவர்கள். உங்களுக்கு இது மிக சிறப்பான காலம். ஏழரை சனியின் பிடியில் இருந்து பூரணமாக விடுபட்டு விட்டீர்கள். சனிப்பெயர்ச்சி பல்வேறு முன்னேற்றங்களை தர உள்ளது. ஏழரை சனி காலத்தில் நீங்கள் பட்ட துன்பங்கள் கணக்கில் அடங்காது. தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலையே ஏற்பட்டு இருக்கும். குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கும். சிலர் குடும்பத்தை விட்டே பிரிந்து சென்றிருக்க கூடும். வீட்டில் அடிக்கடி பொருட்கள் கூட களவு போயிருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் இப்போது சனிபகவான் 3-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 தொடக்க காலத்தில் சனியின் பலத்தால் நல்ல பொருளாதார வளத்தை காணலாம். பின்னர் ராகுவும் சாதகமான இடத்துக்கு வந்து மேலும் நன்மை தருவார்கள். இதனால் இது ஒரு பொற்காலமாக அமையும். எந்த ஒரு காரியத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் டிசம்பர் வரை குதூகலம் அதிகம் இருக்கும் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அதன்பின் நற்காரியங்கள் தள்ளி போகலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம்.உத்தியோகம் பார்ப்பவர்கள் டிசம்பர் வரை சிறப்பான பலனை பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். அதன்பின் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அலைச்சல் கூடும்.வியாபாரம் சிறப்படையும். புதிய வியாபாரம் நல்ல லாபத்தை தரும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு Tue Sep 08, 2009 8:56 pm

இரும்பு வியாபாரம், தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம். கலைஞர்கள் விடா முயற்சியோடு உழைத்து வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த விருது, பாராட்டு போன்றவை கிடைப்பதில் தாமதமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நல்ல வளமாக காணப்படுவர். மாணவர்களுக்கு விரும்பிய பாடம் கிடைக்க அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படாது. விவசாயம் புதிய சொத்து வாங்கலாம். நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேறுவர். கூலி தொழிலாளர்கள் பணச் செழிப்புடன் இருப்பர். சுய தொழிலில் ஈடுபடுபவர்கள் அதை விரிவு படுத்தலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் குதூகல நிலையிலே இருப்பர். பிள்ளைகள் நலனில் தனி அக்கறை காட்டவும். அக்கம் பக்கத்தாரிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும்.. பிறந்த வீட்டில் இருந்து எந்த வரவையும் எதிர்பார்க்க முடியாது.உடல்நலம் சுமாராக இருக்கும். கேதுவால் சிறு உபாதைகள் வந்தாலும் பாதகம் இருக்காது. பரிகாரம்: குருவுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யலாம். கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள் ஆசிரியர்கள், ஞானிகள். சன்னியாசிகள் ஆகியோருக்கு இயன்ற உதவி செய்யுங்கள் மே2010 - ஏப்ரல்2011 இந்த காலம் மேலும் சிறப்பானதாக அமையும். காரிய அனுகூலங்கள் ஏற்படும். பணவிரயம் மறைந்து பொருளாதாரவளம் பெருகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். கடந்த சில மாதங்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குருவின் வக்கிர காலமான ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சுப நிகழ்ச்சிகளை தவிர்க்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உத்தியோகம் கடந்த சில மாதங்களாக நீங்கள் அனுபவித்த பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகள் புதிய தொழில் அனுகூலத்தை தரும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜனவரிக்குள் தொடங்குவது நல்லது. கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மேம்பாடு காண்பர். மாணவர்கள் கடந்த ஆண்டைவிட நல்ல மதிப்பெண் பெறலாம். விவசாயத்தில் கால்நடை செல்வம் பெருகும். பெண்கள் முன்னேற்றம் காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருள்கள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பரிகாரம்: பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள் மேலும் சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம். இதனால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும். மே 2011 - நவம்பர் 2011 காரிய அனுகூலம் ஏற்படும். சில தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். வீண்விவாதங்களை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே அவ்வப்போது பிணக்குகள் வரலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். சற்று முயற்சி செய்தால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுபங்கள் கைகூடலாம்.உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்புபோல் உற்சாக பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் லாபம் கிடைக்கும். அதேநேரம் செலவும் அதிகரிக்கும். புதிய வியாபாரம் சிறப்பை தரும். பொருள் இழப்பு இருக்காது. பழைய கழிவு பொருட்கள் தொடர்பான தொழில் மற்றும் இரும்பு தொடர்பான தொழில் சிறப்பாக நடைபெறும்.கலைஞர்கள் சிரத்தை எடுத்தால்தான் ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். மாணவர்கள் சிலருக்கு விரும்பிய பாடம் கிடைக்காமல் போகலாம். விவசாயத்தில் அதிக உடல்உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும. கரும்பு, எள், பனை தொழில் மற்றும் மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். உடல்நலம் பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் பூரண குணம் அடையும். வீண் மனஉளைச்சல் இருக்கலாம். பரிகாரம்: வியாழக்கிழமை கொண்டக்கடலை தானம் செய்யலாம். ராகுவுக்கும் அர்ச்சனை செய்து கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். எந்த துறையில் இருந்தாலும் அதில் தனித்திறமை காட்டும் சிம்ம ராசி அன்பர்களே ஏழரை சனியின் பிடியில் சிக்கியுள்ள நீங்கள் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அளவுக்கு அதிகமான சிக்கலையும் பிரச்சினைகளையும் சந்தித்து வந்திருப்பீர்கள். அதற்கு காரணம் சனி உங்கள் ராசியில் இருந்தது தான். அவர் அதிக அலைச்சலை உருவாக்கி இருப்பார். வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு இருந்திருக்காது. உங்கள் உதவியை நாடி வந்திருப்பார்களே தவிர உங்களுக்கு எந்த உதவியும் செய்திருக்க மாட்டார்கள். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றிருக்க வேண்டியதிருக்கும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஏழரை சனி காலம் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தொடரும். சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.-இது பொதுவான விதி. ஆனால் மற்றய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால் வரும் இரண்டரை ஆண்டு காலம் கொடுமையாக அமையாது. காரணம் இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்க மாட்டார். மேலும் சனிபகவானின் 10-ம்இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சனிபெயர்ச்சி பலன் 2009 Empty Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum