ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி

+5
SK
மகா பிரபு
உமா
அருண்
அப்துல்லாஹ்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Empty விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி

Post by அப்துல்லாஹ் Tue May 17, 2011 12:33 pm

First topic message reminder :

தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ள இலவச மிக்சி, கிரைண்டர் எப்போது தரப்படும்?

பதில்: இப்போதுதானே பதவி ஏற்றிருக்கிறேன்.

கேள்வி: அரசு எதற்கெல்லாம் முன்னுரிமை தரும் என்ற தகவலை நீங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளீர்கள். தற்போது மின்சார வெட்டை நீங்குவதற்கு குறுகிய கால திட்டம் எதையும் வைத்திருக்கிறீர்களா?

பதில்: நான் இன்றுதான் பதவி ஏற்றேன். அமைச்சர்களும் இன்றுதான் தங்களுக்கான பதவிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே எதுவென்றாலும், துறைரீதியாக அவற்றைப் பற்றி பரிசீலனை செய்வதற்கு எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய கால அவகாசம் தேவை.

கேள்வி: கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படுமா?

பதில்: இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். விரைவில் நிறைவேற்றப்படும்.

கேள்வி: இந்த அமைச்சரவையை புதியவர்களையும், பழையவர்களையும் கலந்து நீங்கள் நல்ல கலவையாக அமைத்திருக்கிறீர்கள். இதன் பின்னணியைப் பற்றி சொல்ல முடியுமா?

பதில்: இந்த அமைச்சரவையில் தமிழகத்தின் எல்லா பகுதிகள், சமுதாயம், மதம், சாதியினரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த முயற்சியில் நான் நல்ல வெற்றியை அடைந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல இந்த அமைச்சரவை, பழையவர்கள், அவர்களின் அனுபவம் மற்றும் புதியவர்கள் ஆகியோர் கலந்த நல்ல கலவைதான்.

கேள்வி: நீங்கள் ஜார்ஜ் கோட்டையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் என்னாகும்?

பதில்: இப்போதே அது குறித்து எதுவும் கூற முடியாது. அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதுபற்றிய முடிவை எடுப்போம்.

கேள்வி: முதல்வராக பதவி ஏற்றுள்ள இந்த முதல் நாளில் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் நிர்வாகமே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது. அரசு நிர்வாகம் என்பதே இல்லாமல் இருந்தது. அரசாங்கப் பணி என்பது நடைபெறவே இல்லை. எனவே கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த மாநிலம் வெறும் 5 ஆண்டு கால பின்னடைவை மட்டும் அடையவில்லை. கற்காலத்துக்கே சென்றுவிட்டது. ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லாமே சீரழிக்கப்பட்டுவிட்டது, சீரழிந்து போய்விட்டது. எனவே தமிழ்நாட்டை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், மீண்டும் கட்ட வேண்டும். விலைவாசியை குறைக்க வேண்டும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்.

விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். நெசவுத்துறையை மேம்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த தொழில்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இப்படி துறை தோறும் ஏராளமான பணிகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தை புனரமைக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்கள் ஒரு அச்ச உணர்வுடனேயே வாழ்க்கையை நடத்தினர். ஊடகங்களுக்கு கூட சுதந்திரம் இல்லாத நிலை இருந்தது. இனிமேல் எல்லாரும் சுதந்திரமாக வாழலாம். தேர்தல் பிரசாரத்தின் போதே ஒவ்வொரு கூட்டத்திலும் இதைச் சொன்னேன்.

ஒரு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து இருக்கிறார்கள். மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்.

எனவே படிப்படியாக நிலமை மாறும். தமிழக மக்களைப் பொறுத்தவரை இனி அச்ச உணர்வு தேவையில்லை. நம் எதிர்காலம் எப்படி இருக்குமோ, நமது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ, கணவர் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது மனைவி உயிருடன் இருப்பாளா? இல்லையா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

ஒரு சராசரி மனிதர் வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும்போது வயதான தாயார் உயிருடன் இருப்பாரா? இல்லையா? என்ற கவலை தேவையில்லை. சூழ்நிலைகள் மாறும். சட்டம்-ஒழுங்கு செம்மையாக காக்கப்படும், பராமரிக்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். தமிழ்நாடு செழிப்படையும். இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் உயர்வு பெறும்.

கேள்வி: நீங்கள் இந்த பொறுப்புக்கு வரும்போது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முதலில் உங்களது மங்களகரமான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. நிச்சயமாக தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும். அதை புனரமைத்த பிறகு நிச்சயம் மேலே நோக்கி செல்லும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரம் அழிந்துபோன நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. எனவே தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். அதை மேலேங்கி வளரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் வசிக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு பற்றிய கவலை உள்ளதே?

பதில்: யாரும் பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. எல்லாருக்கும் முழுமையான பாதுகாப்பு தரப்படும் என்றார்.

நிருபர்களுடன் டீல்:

பேட்டியின் முடிவில் ஜெயலலிதா கூறுகையில், `நட்புரீதியாக நமக்குள் ஒரு டீல் வைத்துக் கொள்வோம். வாரத்துக்கு ஒருமுறை உங்களை சந்திக்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்வி அனைத்துக்கும் பதிலளிக்கிறேன். அதை விட்டுவிட்டு, நுழைவாயிலில் அருகே, வீட்டருகே, ஹோட்டல் அருகே என்று நின்று கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது. சரியா?’ என்று கேட்க, நிருபர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

நிருபருக்கு அட்வைஸ்:

முன்னதாக அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது ஒரு நிருபரின் செல்போனில் இருந்து சினிமா பாட்டு ரிங் டோனாக ஒலித்தது. அப்போது ஜெயலலிதா`நீங்கள் கேட்டுக்கொண்டதால்தான் மரியாதை நிமித்தமாக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே என்னை சந்திக்க வருவதற்கு முன்பு செல்போன்களை நீங்கள் அணைத்து வருவதை கடைப்பிடித்திருக்க வேண்டும்’ என்றார்.
நன்றி kadayanallur.org


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Aவிரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Bவிரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Dவிரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Uவிரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Lவிரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Lவிரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Aவிரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 Empty Re: விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி

Post by தாமு Wed May 18, 2011 6:32 am

விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி - Page 2 678642 மிகவும் நல்லது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சன் "டிவி'க்கு கேபிள் பதித்த பிரச்னை :விரைவில் நடவடிக்கை என ஜெயலலிதா பேட்டி
» தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கும்- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
» அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்
» ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது
» அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum