புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு - கேது பெயர்ச்சி - 12 ராசி பலன்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 8:32 am

First topic message reminder :

.

ராகு கேது பலன்
மேஷம் - (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)


மேஷ ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த ராகு இப்போது 8-ஆம் இடத்துக்கும்; 3-ல் இருந்த கேது இப்போது 2-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள்.


எட்டாம் இடம் என்பது கெட்ட ஸ்தானம். சஞ்சலம், ஏமாற்றம், விபத்து, பீடை, கௌரவ பங்கம், விசனம், கவலை, இழப்பு ஆகிய வற்றைக் குறிக்கும் இடம். இயற்கையில் பாப கிரகமாகிய ராகு மேற்கண்ட பாப ஸ்தானத்தில் வருவதால் அந்த பாபத் தன்மைகளை விரட்டியடிப்பார் அல்லது அழித்துவிடுவார் என்று சொல்லலாம். டபுள் மைனஸ் ஒரு பிளஸ் என்பதுபோல கெட்ட இடத்தில் வந்திருக்கும் கெட்ட கிரகம் கெட்ட பலனைக் கெடுப்பதால் நன்மை உண்டாகும். குளத்திலே உள்ள மீன்கள் தங்கள் உணவுக்காக அழுக்குகளைச் சாப்பிடுவதால் குளம் சுத்தப்படுவதுபோல!


கேதுவுக்கு ஏற்கெனவே இருந்த மூன்றாம் இடம் அற்புதமான இடம்- யோகமான இடம்தான்! இப்போது மாறியுள்ள இரண்டாம் இடம் சுமாரான இடம்தான். என்றாலும் தன ஸ்தானத்தில் உள்ள கேது பணப் பஞ்சத்தைப் போக்கித் தாராளமான வரவு- செலவு, பணப் புழக்கத்தைத் தரலாம். 2-க்குடைய சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சியாக வந்தபிறகு எதிர்பார்க்கலாம். (வைகாசி 22-ல் ரிஷபத்தில் சுக்கிரன் மாறுவார்.)


தன காரகன் குரு தனாதிபதியான சுக்கிரன் சாரத்தில் (பரணியில்) சஞ்சரிக்கும் காலத்திலும் கேது தன ஸ்தான பலனை நிறைவாகச் செய்வார். (21-7-2011 முதல் 10-10-2011 முடிய).


மேலும் 2-ஆம் இடம் என்பது வாக்கு, தனம், வித்தை, கல்வி, குடும்பம், நேத்ரம் ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம். கேது மிருக சீரிட நட்சத்திரத்தில்- ராசிநாதன் செவ்வாயின் சாரத்தில் (16-5-2011 முதல் 18-9-2011) சஞ்சரிக்கும் காலம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும், லாபத்தையும் வாக்கு, நாணயத்தைக் காப்பாற்றும் தன்மையையும், செல்வாக்கு யோகத்தையும் செய்வார். செய் முயற்சிகளில் வெற்றியும் தொழில் மேன்மையும் முன்னேற்றமும் உண்டாகும்.


அதேநேரம் மேஷ ராசிக்கு 8-ல் இருக்கும் ராகு 3, 6-க்குடைய புதன் சாரத்தில் சஞ்சரிக்கும் வரை (16-5-2011 முதல் 22-1-2012) சோதனை, பணத் தட்டுப்பாடு, வாக்கு நாணயம் தவறிவிடுமோ என்ற கவலை, குடும்பத்தில் குழப்பம், பார்வைக் கோளாறு, கண் ஆபரேஷன், கடன் போன்ற பலனையும் அனுபவிக்க நேரலாம். ஜாதக தசா புக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். அத்துடன் மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு ஜென்ம ராசியில் நின்று 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சக்தியும் மன தைரியமும் உண்டாகும்.


குளத்திலே நீர் நிறைய இருந்தால் தாமரைப்பூ நீரின் மேல் மட்டத்திலேயே மிதக்கும். குளத்தில் நீர் வற்றிவிட்டாலும் அதே நீர் அளவுக்குத்தான் தாமரை மிதக்குமே தவிர மூழ்கி விடாது. "நீரளவே ஆகுமாம் நீராம்பல்'. அதுபோல குரு ஜென்மத்தில் நிற்பது "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே' என்ற மாதிரி உங்கள் கௌரவம் காப்பாற்றப்படும். மதிப்பு, மரியாதை குறையாது. நிலையிலும் தாழ்வு ஏற்படாது.


விருச்சிக ராசியில் இருக்கும் ராகு மேஷ ராசிக்கு 6-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ரிஷபத்தில் இருக்கும் கேது மேஷ ராசிக்கு 12-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ராகுவுக்கும் கேதுவுக்கும் தான் நின்ற இடத்தில் இருந்து 3, 7, 11-ஆம் இடங்களுக்கு பார்வை உண்டு.


6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம். ராகு அதைப் பார்ப்பதால் 6-ஆம் இடத்துப் பலன்களைக் கெடுப்பார். அதனால் உங்களுக்கு நன்மைதான்! எதிரிகள் ஒழிந்து போகலாம். அல்லது உங்களோடு சமாதானமாகலாம். போட்டியாளர்களும் பொறாமைக்காரர்களும் புகைந்து போய் விடுவார்கள். விரோதிகள் விலகியோடி விடுவார்கள். எதிர்ப்பும் இடையூறும் இல்லாது ஒழிந்துவிடும். தடையும், தாமதமும் தரைமட்டமாகிவிடும். 6-ல் பாப கிரகம் இருந்தாலும் 6-ஆம் இடத்தைப் பார்த்தாலும் ஆறாம் இடத்துப் பலன் வேறாகிவிடும். அதேபோல நோயும் விலகிவிடும்.


நோய் என்பது மூன்று வகையில் வரலாம். ஒன்று, இயற்கை மாற்றத்தால் ஏற்படலாம். இதுதான் கண்வலி, ஆஸ்துமா, புளு காய்ச்சல், சிக்குன் குன்யா போன்றவை. அடுத்து உணவு, பழக்க வழக்கத்தால் வரக்கூடியது. குடி, புகை, நேரம் கெட்ட நேரம் சாப்பாடு, தூக்கமின்மை போன்றவற்றால் வருவது. மூன்றாவது கர்மவினையால்- செய்வினைக் கோளாறால்- ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்படக்கூடியது.

சில நோய், வைத்திய சிகிச்சையால் தீரும். அல்லது பிரார்த்தனை பலத்தாலும் பரிகாரத்தாலும் மாறும். ஜாதகத்தில் ஆயுள் தீர்க்கமாக இருந்தால் காப்பாற்றப்படலாம். ஜாதக வலு இல்லையென்றால் நோய்க்குப் பலி ஆகலாம். இதயக் கோளாறு, கிட்னி பாதிப்பு, கேன்சர் போன்ற வியாதிகள் உயிர்க் கொல்லியாகும். மூளை நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் இல்லையென்றால் "கோமா ஸ்டேஜ்' ஏற்படும். பழைய திரைப்பட நடிகை சாவித்திரி இப்படி "கோமா'வால் அன்ன ஆகாரம் இன்றி மாதக்கணக்கில் படுக்கையில் கிடந்து அவதிப்பட்டு காலமானார்.


கூடியவரை 6-ஆம் இடத்துக்கு லக்னாதிபதி அல்லது ராசியதிபதி அல்லது சுப ஆதிபத்தியம் பெற்ற குரு சம்பந்தம் கிடைத்தால், குருவருளும் திருவருளும் நோயின் பிடியில் இருந்து காப்பாற்றும்.


கல்விக்கு சரசுவதி- செல்வத்துக்கு லட்சுமி- வீரத்துக்கு பார்வதி என்பதுபோல ஆரோக்கியத்துக்கு தன்வந்திரி பகவான்! நோயுள்ள வர்கள் ஸ்ரீ தன்வந்திரி பகவானை வழிபட்டாலும் அவர் மந்திரத்தை தினசரி எழுதினாலும் ஜெபித்தாலும் நோய் குணமாகும். ஆரோக் கியத்துடன் உலக மக்கள் வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளு டன் வாலாஜாபேட்டை அருகில் யாக புருஷர் ஸ்ரீ முரளீதர சுவாமிகள் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தை நிறுவி ஏழு அடி உயரத்தில் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து தினசரி ஹோமம், ஜெபம் செய்து வருகிறார். சுமார் 50 கோடி மந்திரங்களை ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமயத்தாரும் எழுதியனுப்ப- அதையே மூலஸ்தான சிலையின் பீடத்தின் அடியில் மந்திரப் பிரதிஷ் டையாக அமைத்திருக்கிறார். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.'


"ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்ய லெட்சுமி ஸமேத ஸ்ரீமகாவிஷ்ணவே நமஹா' என்பதுதான் தன்வந்திரி மூலமந்திரம். இந்த மந்திரத்தை முடிந்த அளவு எழுதி தன்வந்திரி ஆரோக்கிய பீடத்துக்கு அனுப்பலாம். தினசரி ஜெப பாராயணம் செய்யலாம். சாப்பிடுகிற மருந்து உடம்பில் கலந்து ஆரோக்கியத்தைக் கொடுக்கும். நோய் வராமலே தடுக்கும். ஸ்ரீமுரளீதர சுவாமிகள்- தன்வந்திரி ஆரோக்கிய பீடம், கீழ்ப்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 512- வேலூர் மாவட்டம். தொலைபேசி 04172-230033.


6-ஆம் இடம் என்பது கடனையும் குறிக்கும். "கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வார்த்தைகள். "யானைபோல் கடன் பட்டால் பூனைபோல ஒல்கிப் போவார்' என்பது பாடல். கடன் வாங்கிக் கடனைக் கொடுப்பவனும் மரமேறிக் கைவிட்டவனும் ஒன்று என்பது அனுபவம். அதற்காக கடன் வாங்காமல் இருக்க முடியாது. அத்தியாவசிய தேவைக்கும் அவசரத்துக்கும் கடன் வாங்கு வது தவறல்ல- ஆனால் தரமறிந்து கடன் வாங்க வேண்டும். பத்து வட்டிக்கும் இருபது வட்டிக்கும் ரன் வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போட்டு கடன் வாங்கக்கூடாது. தரம் கெட்டவர்களிடம் கடன் வாங்குவதும் தப்பு.

திருப்பிக் கொடுக்க வழி வகை இல்லாதவர்கள் கடன் வாங்குவதும் தப்பு 6-க்குடைய தசா புக்தி நடக்கும்போது நிச்சயம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். அப்படிக் கடன் வாங்கவில்லையென்றால் நோய், வைத்தியச் செலவு, மேஜர் ட்ரீட்மெண்டு, அல்லது கோர்ட் கேஸ், போலீஸ் விவகாரம், எதிரி தொல்லை என்று படுகுழியில் தள்ளி விட்டுவிடும். கல்விக்கடன், கல்யாணக் கடன், வீட்டுக் கடன், வெளிநாட்டு வேலைக் கடன், வாகனக் கடன் என்று சுபக் கடனை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மாதிரி சூழ்நிலையில் கடன் காரர்களால் கேவலப்படாமல் இருக்கவும் கடன் சீக்கிரம் அடை படவும் "கடன் நிவர்த்தீஸ்வரர்' என்ற சாரபரமேசுவரரை வழிபட வேண்டும். வசிஷ்ட மகரிஷி "தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்ரம்' என்று பதினோரு பாடல்கள் இயற்றியுள்ளார். இதை தினசரி பாராயணம் பண்ணலாம். கும்பகோணம் அருகில் திருச்சேறை என்ற ஊரில் சாரபரமேசுவரர் கோவில் இருக்கிறது. அங்கு 11 திங்கட்கிழமைகள் மேற்கண்ட ஸ்தோத்திரங்களைப் படித்து அவரவர் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. நேரில் போக முடியாதவர்கள் சுந்தரமூர்த்தி குருக்களை, செல்: 94437 37759-ல் தொடர்பு கொள்ளலாம்.


இதேபோல திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள சாரபரமேஸ்வரர் சந்நிதியிலும் 11 திங்கட்கிழமை அவரவர் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இதைச் செய்வதால் கடன் அடைபட வழிவகை அமையும். அல்லது கடன்காரர்களின் விரட்டுதலும் கெடுபிடியும் தணியும்.


விருச்சிக ராகு 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஏற்கெனவே அங்கு கேதுவும் மாறியிருக்கிறார். 2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம், வித்தை, கண் பார்வை முதலியவற்றைக் குறிக்கும் இடம். ராகுவும் கேதுவும் 2-ஆம் பாவத்தில் சம்பந்தப்படுவதால் வித்தை, ஞானம், வாக்குப்பலிதம் உண்டாகும். படிப்பு மேன்மையாகும். காசு பணப் புழக்கம் தாராளமாக அமையும். ஜாதகத்தில் 6, 8, 12-க்குடைய தசா புக்திகள் நடந்தாலும், சம ராகு- சம கேது தசா புக்திகள் நடந்தாலும் படிப்பு, வித்தையில் தடைகளும் குடும்பத்தில் குழப்பமும் பிரச்சினைகளும் உண்டாகலாம். கண் பார்வை சிகிச்சையும் ஏற்படலாம்.


அடுத்து ராகு மேஷ ராசிக்கு 10-ஆம் இடத்தை- தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்- தொழில் துறையிலும் வேலையிலும் நல்ல திருப்பம் உண்டாகும். 10-க்குடைய சனி ராசிக்கு 6-ல் மறைந்து 8-ல் உள்ள ராகுவைப் பார்ப்பதால் தொழில் துறையில் நல்ல திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் ராகு 10-ஆம் இடத்துக்கு 12-ல்- ராசிக்கு 9-ல் நின்ற சமயம்- ராகுவுக்கு வீடு கொடுத்த குருவும் ராசிக்கு 12-ல் மறைந்த காரணத் தால் பலருக்கு தொழில் பாதிப்பு இருந்தது. சிலருக்கு உடல்நலக் குறைவால் தனது கடமையை நேரடியாகக் கவனிக்க முடியாதபடி அவல நிலையும் ஏற்பட்டது. அதனால் நஷ்டம், விரயம், ஏமாற்றம், நம்பிக்கைத் துரோகம் போன்ற சங்கடங்களையும் சந்தித்தி ருக்கலாம். இந்த ராகு- கேது பெயர்ச்சி இவற்றுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தும்.


கேது மேஷ ராசிக்கு 2-ல் நின்று 12-ஆம் இடம், 8-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்ப்பதால் சில சமயம் சுப விரயமும் உண்டாகும். நினைத்தோம் முடித்தோம் என்று இல்லாமல் தடை களையும் இடையூறுகளையும் சந்தித்து கவலைப்பட்டு விடா முயற்சியினால் நினைத்ததை நிறைவேற்றலாம். மொத்தத்தில் "கேதுவைப்போல் கெடுப்பாரில்லை. ராகுவைப்போல் கை கொடுப்பாரில்லை' என்பது பழமொழி. ஆனால், கேது கெடுத்துக் கொடுப்பார்; ராகு கொடுத்துக் கெடுப்பார். எனவே ராகுவும் கேதுவும் அடிக்கிற கை அணைக்கும் என்பதுபோல உங்களுக்கு கண்டிப்பான வாத்தியாராக இருந்து வழி நடத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அசுவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி பிரபல யோகமாக இல்லாவிட்டாலும்கூட பாதிப்பான பலனைச் செய்ய மாட்டார்கள். ஸ்டார் ஹோட்டலில் போய் பந்தாவாக சாப்பிட முடியாவிட்டாலும் ரோட்டுக் கடையில் வாய்க்கு ருசியாகவும் சிக்கனமாகவும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். சூரியனார் கோவில் சென்று வழிபடவும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி வாழ்க்கையில் புதுப்புது பிரச்சினை களையும் போராட்டங்களையும் சந்தித்தாலும் மன தைரியத்தோடு அவற்றை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு, சாதனை புரிய துணை நிற்கும். பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து விடலாம். காள ஹஸ்தி சென்று ருத்ராபிஷேக பூஜை செய்தால் தடைகள் விலகும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் பரிகாரமாக நல்லது செய்து சாதனை புரியச் செய்யும். வழக்கு, விவகாரம், பூர்வீகச் சொத்துப் பிரச்சினை, அரசு சம்பந்தப்பட்ட காரியங்களால் நீங்கள் அனுபவித்த துன்பங்களையும் துயரங்களையும் துடைத்து, புண்ணுக்கு மருந்து போடுவதுபோல ஆறுதலும் தேறுதலுமாக அமையும். இழப்புகளையும் நஷ்டங்களையும் ஈடுசெய்துவிடலாம். திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி போகும் பாதையில் மயிலம் தாண்டி திருவக்கரைக்குப் பாதை பிரியும். அங்கு வக்ரகாளி, சந்திரமௌலீஸ்வரர், அம்பாள், பெருமாள் சந்நிதிகளோடு குண்டனி முனிவர் ஜீவசமாதியும் சிறப்பாக விளங்குகிறது. பிறந்த ஜாதகத்தில் சனி வக்ரமாக இருக்கும் ஜாதகர்கள் இங்குள்ள வக்ர சனியை வழிபட வேண்டும். உங்கள் குறைகளை முறையிட்டு வழிபட்டால் வேண்டுவது நிறைவேறும்.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 8:39 am



கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)


கும்ப ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் ராசிக்கு 11-ல் இருந்த ராகு இப்போது 10-ஆம் இடத்துக்கும்; 5-ல் இருந்த கேது இப்போது 4-ஆம் இடத்துக்கும் மாறியிருக்கிறார்கள். ராகுவும் கேதுவும் மாறியிருக்கும் ஸ்தானங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். 5, 9- திரிகோண ஸ்தானம். 4, 7, 10- கேந்திர ஸ்தானம். 1-ஆம் இடம் திரிகோணத்திலும் சேரும்; கேந்திர ஸ்தானத்திலும் சேரும். பாப கிரகங்கள் கேந்திர ஸ்தானத்திலும் சுப கிரகங்கள் திரிகோண ஸ்தானத்திலும் பலம் பெறுவார்கள்; நலம் தருவார்கள். ராகுவும் கேதுவும் அசுப கிரகங்கள் என்பதால்- அவர்கள் கேந்திர ஸ்தானங்களில் வந்திருப்பதால் நற்பலன்களே செய்வார்கள் என்பது தெளிவு!


ஏற்கெனவே ராகு இருந்த 11-ஆம் இடம் மிகமிக நல்ல இடம்தான். 3, 6, 11- ஆம் இடம் ராகு- கேது, சனி போன்றவர்களுக்கு அதி அற்புதமான இடங்கள். அதனால் உங்களுக்கு முன்னேற்றத் தையும் வெற்றியையும் லாபத்தையும் தந்திருக்கலாம். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும், சௌகரியங்களுக்கும் கேடு கெடுதி யில்லாத யோகத்தைக் கொடுத்திருக்கலாம். பிள்ளைகளுக்கு வீடு, வாசல், வாகன யோகம், தொழில், சம்பாத்தியம் ஆகிய யோகங்களையும் செய்திருக்கலாம். ஆனால் கேது 5-ல் நிற்கவும் ராகு பார்க்கவும் ராசிநாதன் சனி 8-ல் மறைந்ததால், ஒருசிலருக்கு ஏதோ ஒரு வகையில் மன மகிழ்ச்சியும், மன திருப்தியும், மன நிறைவும் இல்லாத சூழ்நிலையைத் தந்திருக்கலாம். பெரும்பாலும் அதற்குக் காரணம் பிள்ளைகளாகவும் இருந்திருக்கலாம். சகோதரர்களாகவும் இருந்திருக்கலாம்.


நல்ல படிப்பும் வேலையும் சம்பளமும் அமைந்தும் பையன்களுக்கு அல்லது பெண்களுக்கு கல்யாணம் காட்சி ஆகாமல் தள்ளிப்போன வகையில் கவலை! சில பிள்ளைகள் பெற்றோர்களைப் புறக்கணித்து தங்கள் இஷ்டம்போல் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் கவலை! சில பிள்ளைகள் காரணம் காரியம் கூறாமல் இப்போது கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதால் கவலை! வயது நாற்பதைக் கடக்கும் நிலையிலும் கல்யாணத்துக்கு சம்மதிக்காமல், "தம்பிக்குத் திருமணம் செய்யுங்கள்; எனக்கு இப்போது வேண்டாம்' என்று பிடிவாதம் பிடிப்பதால் கவலை! அழகு இருக்கு, படிப்பு இருக்கு, நகை இருக்கு, வசதியிருக்கு. ஆனாலும் பெண்ணைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். முடிவு சொல்லாமல் இருந்து விடுகிறார்கள் என்று கவலை! இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை!


இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் அம்மா இல்லாத குடும்பத்தில் அம்மா பேரில் அப்பா வாங்கிப் போட்ட சொத்துக்காக அண்ணன், தம்பி, தங்கை மூவரும் பங்கு கேட்டு விவகாரம் பண்ணும் நிலை! அண்ணன் வேறு யாருக்கும் பங்கு கொடுக்காமல் தானே எல்லாவற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட, தம்பி நல்ல வேலை, சம்பாத்தி யத்தில் இருக்க, அண்ணணுக்கும் தங்கைக்கும் பல லட்சங்கள் செலவு செய்து கல்யாணம் பண்ணி வைத்ததால் அதைத் திரும்பக் கேட்க, கூட்டுக் குடும்பத்தில் பிரச்சினை. தன் பிள்ளைகளில் யார் பக்கம் பேசுவது என்று புரியாமல் தகப்பனார் கவலைப்பட்டு கவலைப்பட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட நிலை! இப்படியெல்லாம் பிள்ளைகளின் பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்து வேதனை மூட்ட, கடந்த ஒன்றரை வருடமும் வசதி இருந்தும் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியாத நிலையில் அவதிப்பட நேர்ந்தது. இவையெல்லாம் இந்த ராகு- கேது பெயர்ச்சிக்கு முன்னதாக அனுபவித்த அனுபவங்கள்!


இப்படியெல்லாம் கும்ப ராசிக்காரர்களை அல்லல்படுத்தி அவதிப்பட வைத்த ராகு- கேது இப்போது பெயர்ச்சியாவதால், ஏதாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்காதா என்று கும்ப ராசிக்காரர்கள் எதிர்பார்க்கலாம். அந்த எதிர்பார்ப்பு நியாயமானதுதான். அது நிறைவேறுமா?


கும்ப ராசிக்கு 10-ஆம் இடத்தில் ராகு வந்துள்ளார். அவரை ராசிநாதன் சனி பார்க்கிறார். எனவே, 10-ஆம் இடம் என்பது தொழில், கீர்த்தி, செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவற்றைக் குறிப்பதால் உங்களை சிறந்த தொழிலதிபராக உயர்த்திவிடும். வி.ஐ,பி. அந்தஸ்து, பெருமை சேர்க்கும். தமிழ்நாடே பாராட்டும் அளவிற்கு பேரும் புகழும் உண்டாகிவிடும். தொழில் மேன்மையும் உயர்வும் ஏற்படும். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள்கூட பொறுப்புகளை சுமந்து கடமை உணர்வோடு பணியாற்றி சிறப்புகளை அடையும் நிலை ஏற்படும். அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் பொறுப்புள்ள பெரிய பதவிகள் வகிக்கும் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு மேலிடத்தாரின் பாராட்டு போன்ற பெருமை உண்டாகும்.


2, 11-க்குடைய குரு மேஷ ராசியில் நின்று கும்ப ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 7-ஆம் இடம் மனைவி ஸ்தானம் மட்டுமல்ல; 10-ஆம் இடத்துக்கும் 10-ஆம் இடம். எனவே, மனைவிக்கு வேலை பார்க்கும் யோகமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும் அல்லது மனைவி பேரில் தொழில் ஆரம்பித்து வருமானம் பார்க்கும் அமைப்பு உருவாகும்.


அதேபோல கும்ப ராசிக்கு 11-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு 10-ஆம் இடத்துக்கு 8-ல் மறைவதால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உண்டாகும். கடல் கடந்த வேலை அல்லது வெளிநாட்டு வர்த்தகர் தொடர்பு அல்லது வெளியூர் வாசம் ஏற்படலாம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் அடையலாம்.


ராகு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால்- 4-ல் கேதுவும் இருப்பதால் பூமி, வீடு, வாகன யோகங்களை அடையலாம் அல்லது பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனை எனப்படும்.


அடுத்து ராகு கும்ப ராசிக்கு 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அபகீர்த்தி, சஞ்சலம், தன்பயம், பீடை, கவலை, அவமானம் போன்ற 8-ஆம் இடத்துக்குரிய தீமைகளை விரட்டியடிப்பார்.


ஜாதகத்தில் 6, 8-க்குடைய தசா புக்திகள் நடந்தால் அவர்களுக்கு 8-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகுவால் சங்கடங்களும் சஞ்சலங்களும் ஏற்படலாம். அப்படியே இருந்தாலும் அட்டமத்துச் சனி மாறிய பிறகு 8-ஆம் இடத்து தீமைகளை அணுகவிடாமல் காப்பாற்றுவார்.


ரிஷப ராசியில் இருக்கும் கேது கும்ப ராசிக்கு 2-ஆம் இடத்தையும் 10-ஆம் இடத்தையும் 6-ஆம் இடத்தையும் பார்க்கிறார். கேது 4-ல் நிற்பதால் பூமி, வீடு, வாகன யோகங் களையும் தன் சுகத்தையும் சிறப்பாகச் செய்வார். 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் வகைக்காகவும் அல்லது 4-ஆம் பாவ சம்பந்த மாகவும் கடன்கள் வாங்கலாம். வங்கிக் கடன் அல்லது குறைந்த வட்டிக்கு தனியார் கடன் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஐந்து வட்டி, பத்து வட்டி என்று கொடுத்து வாங்குகிறவர்கள் உங்கள்மேல் உள்ள அபிமானத்தால் இரண்டு வட்டிக்கு கொடுப்பார்கள்.

அதேபோல நீங்களும் வட்டி தேதியை டைரியில் குறித்து வைத்து முதல் தேதியன்றே தேடிப்போய்க் கொடுத்து வருவீர்கள். கடன் கேட்பதற்கும் வாங்குவதற்கும் ஒரு முகராசி வேண்டும். ஆட்டோவில் போவதற்குகூட ராசி வேண்டும். ஒருசிலர் யோகத் துக்கு பத்து ரூபாய் அதிகம் கேட்கும் ஆட்டோக்காரர்கூட பத்து ரூபாய் குறைந்தே சவாரிக்கு வருவார்.


கேது தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஏற்கெனவே குறிபிட்டபடி தொழில் போட்டி, பொறாமைகளை எல்லாம் விலக்கி தொழில் மேன்மை அடையச் செய்வார். புதிய முயற்சிகளையும் வெற்றி பெறச் செய்வார். 2-ஆம் இடத்தையும் கேது பார்க்கிறார். 2-ஆம் இடம் என்பது வாக்கு, தனம், கல்வி, குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். கேது ஞான காரகன் என்பதால் வித்தை (கல்வி) மேன்மையடையும். கவிதைத் திறன் வளரும். கற்பனை வளம் ஏற்படும். கலைத்துறை ஈடுபாடு அமையும். பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் நுட்பப் படிப்பு போன்றவை எல்லாம் சிறப்படையும்.


2-ல் கேது இருப்பதற்கும், 2-ஐப் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஜனன ஜாதகத்தில் 2-ல் கேது இருந்தால் பட்டப் படிப்பில் தடை ஏற்படலாம் அல்லது அரியர்ஸ் வைத்து மறுமுறை எழுதிப் பாஸ் பண்ணலாம் அல்லது டிப்ளமோ படிக்கலாம். ஆனால் ஜனன ஜாதகத்தில் 2-ஆம் இடத்துக்கு கேது பார்வை இருந்தால் செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். ஜோதிடம், கைரேகை, எண்கணிதம் போன்ற வகையில் வாக்கு பலிதம் உண்டாகும். அருள்வாக்கு கூறலாம். தெய்வ உபாசனை, ஜபதபம், மந்திர உச்சாடனம் போன்றவை சித்திக்கும்.


தற்போது கோட்சாரரீதியாக கும்ப ராசிக்கு 2-ஆம் இடத்தை கேது பார்ப்பதால் சொல்வாக்கும் செல்வாக்கும் குறையாது என்றாலும், பண சேமிப்பு, ரொக்க கை இருப்பு இருக்காது. தேவைகள் நிறைய இருக்கும். வரவுகள் இருந்தாலும் அவற்றை நிறைவேற்றுமளவு உபரியாக வராது. கடைசியில் தேவைகள் பூர்த்தியாகும் கட்டத்தில் அக்கம் பக்கம் புரட்டித்தான் அரும்பாடுபட்டு நிறைவேற்ற வேண்டும். ஒரு அன்பர் நல்ல வசதி படைத்த பணக்காரர். அவர் அப்பாவுக்கு திடீரென்று "ஹார்ட் அட்டாக்' வந்துவிட்டது. குடும்ப டாக்டரிடம் அழைத்துப் போனார். அவர் முதலுதவி செய்து அப்போலோவில் உடனே அட்மிட் ஆகும்படி அட்வைஸ் பண்ணிவிட்டார். அங்கு உடனே ஐ.சி. யூனிட்டில் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் கட்டச் சொல்லிவிட்டார்கள். அப்போது இரண்டு நாட்கள் "பேங்க்' ஸ்டிரைக். கையிருப்பும் இல்லை. ஏ.டி.எம்மிலும் பணம் இல்லை. நண்பருக்கு போன் செய்து கைமாற்று வாங்கித்தான் ஆஸ்பத்திரியில் கட்டினார். அவருக்கு அப்போது 2-ல் கேது.


அதேபோல 6-ஆம் இடத்தை கேது பார்க்கிறார். 6-ஆம் இடத்தைக் கேது பார்ப்பதால் எதிரி, கடன், போட்டி, பொறாமை, வைத்தியச் செலவு ஆகியவற்றை உண்டாக்கி போராடி அப்புறம் அதில் வெற்றிபெறச் செய்யும் அல்லது அவை நாசமாகும். அதாவது சத்ரு ஜெயம். சத்ரு இருந்தால்தானே சத்ருவை ஜெயிக்க முடியும். போட்டி என்று இருந்தால்தானே வெற்றி ஏற்படும். கோர்ட், கேஸ் என்று வழக்கு இருந்தால்தானே ஜெயித்துவிட்டது என்று சந்தோஷப்பட முடியும்.


6-ல் கேது இருப்பதற்கும் 6-ஆம் இடத்தைக் கேது பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. 6-ல் கேது இருந்தால் போட்டி இருக்காது- ஏகமனதாகத் தேர்வு என்பது மாதிரி! 6-ல் கேது இருந்தால் நோய் இல்லை. ஆனால் சத்து ஊசி போட்டுக் கொள்ள டாக்டரை சந்திக்கலாம். 6-ஐ கேது பார்த்தால் நோய் ஏற்பட்டு நோய் நிவர்த்திக் காக டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 6-ல் கேது இருந்தால் வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் காட்சி செலவு செய்ய, கடன் வாங்கி மாதத் தவணையை அசலும் வட்டியுமாகத் திருப்பிச் செலுத்தலாம். கேது 6-ஐப் பார்த்தால் தவணையை ஒழுங்காகக் கட்ட முடியாமல் அபராத வட்டியுடன் கட்ட நேரும். அதற்கும் இன்னொரு இடத்தில் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதுதான் வித்தியாசம்!


ராகு- கேது பெயர்ச்சி அட்டமச் சனி இருக்கும் வரை எந்த விதமான முன்னேற்றமும் நன்மையும் எதிர்பார்க்க முடியாது. கிணற்றில் போட்ட கல்லைப்போல அசைவற்ற நிலையில் இருக்கும். சனி மாறியதும் அற்புதமான யோகங்களைச் செய்யும். திருப்தியாக அமையும். தடையில்லாத யோகங்களைச் செய்யும்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாயின் வீட்டில்தான் ராகு நிற்கிறார்; கேது பார்க்கிறார். எனவே கொள்கைக் கூட்டணி வைத்துக் கொண்ட அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுபோல ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தையும் வெற்றியையும் தருவது நிச்சயம்! கும்பகோணம் அருகில் சுவாமிமலைக்குப் போகும் வழியில் திருவலஞ்சுழியில் ஸ்வேத விநாயகரையும், பட்டீஸ்வரரையும், துர்க்கையம்மனையும் வழிபடவும். கேதுவுக்கு விநாயகரும் ராகுவுக்கு துர்க்கையும் அதிதேவதைகள்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு:
சதயம் ராகுவின் சொந்த நட்சத்திரம். ஆகவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு ராஜயோகத்தையும் ஆற்றலையும் கொடுத்து வாழ்க்கையில் சாதித்துக் காட்டவைக்கும். உங்களைப் புறக்கணித்தவர்களையும் ஒதுக்கியவர்களையும், "ஆஹா! உச்சத்துக்கு வந்துட்டான்யா!' என்று ஆச்சரியப்பட செய்யும்! தஞ்சாவூர் அருகில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடவும். நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை பண்ணிய ஸ்தலம்! அருகில் ராமர் கோவில் இருக்கிறது. சரபோஜி மகாராஜாவால் சாலக்கிராமக் கல்லில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட சிலை- ராமர் சிலை!

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
பூரட்டாதி 2, 11-க்குடைய குருவின் நட்சத்திரம். குருவுக்கு ராகுவும் கேதுவும் சம கிரகங்கள்; பகையில்லை. மேலும் ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு சமூகத்தில் வி.ஐ.பி அந்தஸ்தை ஏற்படுத்தி கௌரவிக்கும். வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளையெல்லாம் நிறைவேறச் செய்து வளமும் நலமும் உண்டாக்கும். கோவையிலிருந்து பூண்டி- வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் வழியில் செம்மேடு என்ற இடத்தில் முட்டத்து ஈஸ்வரர்- மனோன்மணி ஆலயம் இருக்கிறது. அந்த ஈஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடலாம்.









புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 8:41 am

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசி அன்பர்களே!


கடந்த ஒன்றரை வருடகாலமாக மீன ராசிக்கு 10-ல் இருந்த ராகு இப்போது 9-ஆம் இடத்திலும்; 4-ல் இருந்த கேது இப்போது 3-ஆம் இடத்திலும் மாறுகிறார்கள். 10-ஆம் இடமும், 4-ஆம் இடமும் கேந்திர ஸ்தானம் எனப்படும். சுபர்கள் திரிகோணத்திலும் பாபர்கள் கேந்திரத்திலும் நற்பலன் செய்வார்கள் என்பது பொதுவிதி!


அதன் அடிப்படையில் கடந்த காலத்தில் ராகுவும் கேதுவும் இருந்த இடம் அற்புத இடம் என்று சொல்லலாம். அதனோடு ஒப்பிடும்போது இப்போது மாறியுள்ள 9-ஆம், 3-ஆம் இடங்கள் சுமாரான இடங்கள்தான்!


என்றாலும் 3, 6, 11-ஆம் இடங்கள் ராகு, கேது, சனி போன்ற அசுப கிரகங்களுக்கு யோகமான இடங்கள் ஆகும். அந்த வகையில் கேது 3-ல் இருப்பதும், அதற்கு 7-ஆம் இடமான 9-ல் ராகு இருப் பதும் உங்களுக்கு கெடுதலைச் செய்யாது என்பது ஒரு ஆறுதலான சமாச்சாரம்தான்! 3-க்கு 7-ஆம் இடம் என்ன கணக்கு என்கிறீர்களா? எந்த ஒரு இடத்துக்கும் 7-ஆம் இடம் என்பது 180-ஆவது டிகிரி- சமசப்தமம் ஆகும். ஜென்மம் என்பது ஜாதகர். அதற்கு 7-ஆம் இடம் என்பது மனைவி (களஸ்திரம்) அல்லது கணவர் ஸ்தானம். சரிசமம். அதுதான் அர்த்தநாரீஸ்வர தத்துவம்! அதனால் ஒரு பாவத்தின் நல்லது- கெட்டது அந்த பாவத்தின் 7-ஆம் இடத்தைப் பொறுத்தும் பலன் செய்யும். ஆகவே 3-ஆம் இடத்துக்கு 7-ஆம் இடம் என்பது ஜென்ம ராசிக்கு அல்லது ஜென்ம லக்னத்துக்கு 9-ஆம் இடம் ஆவதால், ராகு 9-ல் இருந்தாலும் 3-ல் இருப்பது மாதிரி நற்பலனே செய்வார்.


ஏற்கெனவே 10-ல் இருந்த ராகுவும் 4-ல் இருந்த கேதுவும் நல்ல இடத்தில் இருந்தும் நூறு சதவிகிதம் நற்பலனைச் செய்யத் தவறிவிட்டார்கள் எனலாம். அதற்குக் காரணம் ராகு நின்ற வீட்டின் அதிபதி குருவை சனி பார்த்தது எனலாம். கேதுவையும் சனி பார்த்தது காரணம் எனலாம். கேது நின்ற வீடு மிதுனம்- அதற்கும் சனி பார்வை. (சனி 12-க்குடையவர்).


கடந்த காலத்தில் ராகுவின் பார்வை மீன ராசிக்கு 8-ஆம் இடம், 4-ஆம் இடம், 12-ஆம் இடங்களுக்கும்; கேதுவின் பார்வை மீன ராசிக்கு 2-ஆம் இடம், 10-ஆம் இடம், 6-ஆம் இடங்களுக்கும் கிடைத்தது. (3, 7, 11 பார்வை). அதனால் சில நன்மையான பலன் களும் நடந்தன என்பதுதான் உண்மை. பூமி, வீடு, வாகனம் சம்பந்த மான யோகத்தையும் புதிய தொழில் வாய்ப்பு, பழைய தொழில் முன்னேற்றத்தையும் கொடுத்து, அவற்றுக்காக சக்திக்கு மீறிய கடன் களையும் ஏற்படுத்தி வட்டி கட்ட வைத்தது. சிலருக்கு போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு, வைத்தியச் செலவு, நோய், நொடி, பிணி, பீடைகளைக் கொடுத்து சுகத்தையும் கெடுத்தது.
இனி, விருச்சிக ராசிக்கு மாறியுள்ள ராகுவும் ரிஷப ராசிக்கு மாறியுள்ள கேதுவும் மீன ராசிக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஆராயலாம்.


9-ஆம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் எனப்படும். அது தகப்பனார், தெய்வ உபாசனை ஆகிய வற்றையும் குறிக்கும். அந்த வீட்டுக்குடைய செவ்வாயும் மீனராசிக்கு 10-க்குடையவர். அவருடன் குருவும் சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். எனவே குருவருளும் திருவருளும் கூடுகிற நேரம்! உங்க ளுக்கு அருளாசி வழங்குகிற காலம்! உங்களது செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உயருகிற காலம்! உங்களுடைய செயல்களில் வேகமும் விவேகமும் உண்டாகும் காலம்! பாராட்டுகளும் பரிசுகளும் குவிகிற காலம்! புகழும் பொருளும் சேருகிற காலம்!


ராகுவும் குருவும் செவ்வாய் வீட்டில் நிற்க, செவ்வாய் 2-ல் ஆட்சி பெறுவதால் மீன ராசிக்கு தொழில் துறையில் முன்னேற்றமும் லாபமும் பெருகும். பதவி, செல்வாக்கு சிறக்கும். பணியில் இருப் போருக்கு உயர்வும் ஊதியமும் உண்டாகும். ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம், ஆன்மிகம், அருள்வாக்கு சொல்லுவது, எண் கணிதம், வாஸ்து போன்ற துறைகளிலும் ஈடுபாடும் ஆராய்ச்சி அறிவும் பெருகும். ஒருசிலர் அறக்கட்டளை நிறுவி அனாதைப் பிள்ளை களை ஆதரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தலாம். சிலர் கல்விக் கூடங்களைத் தொடங்கலாம். ஊனமுற்றோர் மறுவாழ்வு, முதியோர் நல இல்லம், குழந்தைகள் காப்பகம் போன்ற பராமரிப்பு சேவா நிலையங்களையும் ஆரம்பிக்கலாம். அதற்கான அரசு மானிய உதவி களையும் வெளிநாட்டு சேவா நிறுவன உதவிகளையும் பெறலாம்.


ராகு மீன ராசிக்கு 7-ஆம் இடத்தையும், 3-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ராகு- கேதுக்களுக்கு 3, 7, 11 -ஆம் பார்வை உண்டு என்பது தெரியுமல்லவா! 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் திருமணத் தடை விலகும். ஆண் - பெண்களுக்குத் திருமண யோகம் கூடும். 7-ல் ராகு நிற்பது தோஷம். ஆனால் பார்ப்பது விசேஷம். ஜாதக தசா புக்திகள் பாதகமாக இருந்தால் திருமணமானவர்களின் மண வாழ்க்கையில் குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகி மறையும். 6-க்குடைய தசா புக்திகள் நடைபெற்றால் கணவர் அல்லது மனைவிக்கு எதிர்பாராத வைத்தியச் செலவுகள், பிணி, பீடைகள் ஏற்படலாம்.


அடுத்து ராகு 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அங்கு கேது நிற்கிறார். அவரையும் பார்க்கிறார். குரு அதற்கு 12-ல் மறைவதால் சகோதர- சகோதரி வகையில் சில குழப்பமும், சலசலப்பும், சச்சரவு களும் உருவாகலாம். நெருங்கிப் பழகிய நண்பர்கள் வட்டாரத்திலும் அர்த்தமற்ற பிரச்சினைகள் உருவாகி பகையை வளர்த்துவிடும். அல்லது கவலையை உண்டாக்கிவிடும். இது குரு மேஷத்தில் இருக்கும் வரைதான். குரு ரிஷப ராசிக்கு மாறும்போது மீன ராசிக்கு 11-ல் (லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம்) குரு பார்வை கிடைத்தவுடன் பகை நீங்கி உறவு பொங்கிவிடும். சமாதானமும் சமரசமும் ஏற்பட்டு விடும். நண்பர்களின் சகாயமும் உண்டாகிவிடும். உதவிகளும் கிடைத்துவிடும்.


ராகு மீன ராசிக்கு 11-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 11-க்குடைய சனி அந்த இடத்துக்கு 9-ஆம் இடத்திலும் மீனத்துக்கு 7-ஆம் இடத்திலும் (ராகுவுக்கு 11-ஆம் இடத்திலும்) இருக்கிறார். அடுத்த ராகு- கேது பெயர்ச்சி வரை சனி கன்னி, துலாத்தில் இருப்பார். அதனால் காரிய அனுகூலம், தொட்டவை துலங்குதல், முயற்சிகளில் வெற்றி, வில்லங்கம், விவகாரத்தில் ஜெயம், தொழில் துறையில் லாபம் ஆகிய நல்ல பலன்களை உண்டாக்கும். சுபக் கடன்கள் உருவானாலும் தவணைகளையும் வட்டியையும் தவறாமல் செலுத்தி வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். தொழில், வியாபாரத்தில் ஒரு பங்குதாரர் விலகினாலும் அந்த இடத்தை நிரப்ப அவரைவிட நல்ல பங்குதாரர் வந்து சேருவார்.


11-ஆம் இடம் என்பது மூத்த சகோதரன், மூத்த சகோதரியையும் குறிக்கும்; உபய களஸ்திரத்தையும் குறிக்கும். எனவே மூத்தவர்களால் உதவியும் ஒத்தாசையும் முன்னேற்றமும் லாபமும் எதிர்பார்க்கலாம்.


இதுவரை ராகு நின்ற இடத்துப் பலனையும் பார்த்த இடத்துப் பலனையும் பார்த்தோம். இனி கேது நின்ற இடத்துப் பலனையும் அவர் பார்த்த இடத்துப் பலனையும் பார்க்கலாம்.


பொதுவாக ராகுவும் கேதுவும் தனித்தனி கிரகங்களாக இருந்தாலும் ஒரே கிரகமாகத்தான் பலன் தரும்; செயல்படும். கண்கள் இரண்டாக இருந்தாலும் இரு கண்களும் ஒரே பொருளைத்தானே பார்க்கும்! வலக்கண் ஒரு புறமும் இடக்கண் ஒரு புறமும் பார்ப்பதில்லையே!


மீன ராசிக்கு 3-ல் உள்ள கேது சகோதர சகாயத்தையும் நண்பர்களின் நட்பையும் உதவிகளையும் அடைவதற்கு உதவி செய்வார். குரு மேஷத்தில் இருக்கும் வரை அந்தப் பலன்களை அடைவதற்கு தடை, தாமதம், குறுக்கீடுகளைச் சந்தித்தாலும் குரு ரிஷப ராசிக்கு மாறியதும் தடைகள் விலகி அனுகூலமான பலனை அனுபவிக்கலாம். கன்னிச் சனியும் ராகுவைப் பார்ப்பது ஆரம்பத்தில் சிற்சில தாமதங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் சாதக பலனைத் தரும். நினைத்ததை நிறைவேற்றலாம்; எண்ணியது ஈடேறும்.


ரிஷப கேது ஜென்ம ராசியையும், 9-ஆம் இடத்தையும், 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். உங்கள் செல்வாக்கு குறையாது. அந்தஸ்து, கௌரவம், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய நன்மைகளும் குறையாது. ஜாதக தசா புக்திகள் பாதகமாக இருந்தால் தகப்பனாருக்கு அல்லது தகப்பனார் வர்க்கத்தில் கண்டம், வைத்தியச் செலவு, விபத்துகள் அல்லது பொருள் இழப்புகள் உண்டாகலாம்.


5-ஆம் இடத்தைக் கேது பார்ப்பதால், புத்திரகாரகன் குரு கேதுவுக்கு 12-ல் இருக்கும் காலம் சிலருக்கு புத்திர தோஷமோ புத்திர சோகமோ ஏற்படலாம். ஜாதக தசா புக்திகளும் மோசமாக இருந்தால் அந்தக் கெடுபலனைத் தவிர்க்க வாஞ்சா கல்ப லதா மகா கணபதி ஹோமம் செய்து கொள்ளலாம். அத்துடன் வாஞ்சா கல்ப மகா கணபதி புத்திர ப்ராப்தி ஹோமமும் செய்து கொள்ளலாம். இந்த ஹோமத்தை காரைக்குடியிலும், பள்ளத் தூரிலும் வாலாஜாப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திலும் முறையாகச் செய்வார்கள். மேற்படி ஹோமங்களைச் செய்து பலன் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. 40 வயதிலும் பெண்கள் கருத்தரித்துக் குழந்தைகளைப் பெற்றதோடு, சம ராகு தோஷத்துக்கு சூலினி தூர்க்கா ஹோமம் செய்து உயிர் சேதத்தில் இருந்து காப் பாற்றப் பட்டிருக்கிறார்கள்.


குருவும் கேதுவும் 2, 12-ஆக இருப்பதால், புத்திர காரகன் குரு புத்திர ஸ்தானமான கடகத்துக்கு 10-ல் நின்று கேது, ஜென்ம ராசி- பாக்கியஸ்தானம்- புத்திர ஸ்தானம் என்று (1, 9, 5-ஆம் இடங் களைப் பார்த்தாலும்) சம்பந்தப்படுவதாலும் சிலருடைய வாழ்க்கையில்- சில குடும்பத்தில் வறட்டுப் பிடிவாதத்தாலும் வீம்பு, வைராக்கியம், ஈகோ பிரச்சினையாலும் தாய்- தந்தையரோடு பேசாமல் கொள்ளாமல் சண்டை போட்டுக் கொண்டு பிள்ளைகள் முரண்டு செய்வார்கள். அல்லது வெளியேறி தனியாக இருப்பார்கள். அதனால் பிள்ளைகளால் தொல்லைகள் அனுபவிக்கிறவர்களும் மனத் துன்பத்துக்கு ஆளானவர்களும் 25 ஞாயிற்றுக் கிழமை களுக்கு காலை சூரிய ஹோரையில் (காலை 6.00 மணி முதல் 7.00 வரை) சிவன் கோவிலில் நந்தியின் முன்பாக நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 11 வாரங்களிலேயே பலன் தெரியும்.


அத்துடன் கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் அல்லது நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் (சாமியார் கரடு ஸ்டாப்) ஆகிய இடங்களில்- உங்களுக்கு எது வசதியோ அங்கு சென்று தத்தாத்ரேயரை சிறப்பு பூஜை செய்து வழிபடவும். புத்திர தோஷம் விலகும். ஒழுக்கக் குறைவாக வழி தவறி நடக்கும் பிள்ளைகளையும் பெற்றோர்களுக்கு அடங்காத பிள்ளைகளையும் குரு தத்தாத்ரேயர் திருத்தி விடுவார்.


யார் இந்தத் தத்தாத்ரேயர்? பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இணைந்த அம்சம்தான் தத்தாத்ரேயர் என்னும் தெய்வம்! அத்ரி முனிவரின் பத்னி அனுசுயா தேவி - மகா பதிவிரதை! ஒருசமயம் தேவலோகத்தில்- கைலாயத்தில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் பதிவிரதா தர்மத்திலும் பதி சேவையிலும் தங்களைவிடச் சிறந்தவர்கள் யாருமில்லை என்று கர்வம் கொண்டார்கள். அப்போது அங்கு வந்த நாரத முனிவர், நீங்கள் தெய்வாம்சம் பெற்றவர்கள் என்பதால் அது உங்களுக்குப் பெருமையல்ல - பூலோகத்தில் அனுசுயா என்னும் மானிடப் பெண் மணி பதிவிரதா தர்மத்தை அனுஷ்டிப்பதில் மிகச் சிறந்தவர் என்று சொல்ல, முப்பெரும் தேவியரும் தங்கள் கணவர்களாகிய சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரிடமும் அனுசுயாவின் பதிவிரதா தர்மத்தை- சோதிக்கும்படி வேண்டினார்கள். மும்மூர்த்திகளும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாத முப்பெரும் தேவியரும் பிடிவாதம் பிடிக்க, அவர்களுக்குப் பாடம் புகட்ட மாறுவேடம் பூண்டு பூலோகம் வந்தார்கள்.


அனுசுயா தேவியிடம் இளந்துறவிகளாக உருவெடுத்து வந்து பிச்சை கேட்டார்கள். அந்த அம்மையாரும் அவர்களை ஆத்மார்த்தமாக வரவேற்று உபசரித்து, ஆசனமிட்டு இலையைப் போட்டதும், "இச்சா பிச்சை வேண்டும்' என்றார்கள். அவர்கள் கேட்ட மாதிரி பிச்சையிட வேண்டும் என்றார்கள். அனுசுயா பிறந்த மேனியாக உணவு படைக்க வேண்டும் என்று கூற, அவர் திடுக்கிட்டு, வந்தவர்கள் தெய்வாம்சம் நிரம்பியவர்கள்போல் தெரிய, ஏன் இவர்களுக்கு இந்த விபரீத ஆசை என்று கணவரைத் தியானித்து, பதிவிரதா தர்மம் சாத்தியமானால் இவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க, வந்தவர்கள் மும்மூர்த்திகள் என்பதைக் கண்டு அவர்கள் மூவரையும் தனது சக்தி யால் குழந்தைகளாக்கி விட்டார். முனிவர் வந்ததும், முன்ஜென் மாவில் அனுசுயா தேவி மும்மூர்த்திகளும் தனக்கு குழந்தைகளாக வரவேண்டும் என்று தவம் செய்ததை உணர்த்தி, அதற்காகவே இந்தத் திருவிளையாடல் நடந்திருக்கிறது என்று குழந்தைகளை வளர்க்க, மூன்று தேவிமார்களும் தமது தவறை உணர்ந்து அனுசுயா தேவியிடம் மாங்கல்ய பிச்சை கேட்க, மும்மூர்த்திகளும் தம் அம்சத்தில் இருந்து ஒரு குழந்தையை உருவாக்கி அனுசுயாவிடம் தர, அவரே தத்தாத்ரேயர் ஆனார்.


மொத்தத்தில் ராகு- கேது பெயர்ச்சிப் பலனில் ராகு மத்திமப் பலனைத் தரக்கூடிய நிலையில் இருந்தாலும் கேது மிகமிக உத்தம இடத்தில் இருப்பதால் மீன ராசிக்கு மிகமிக நல்ல பலனாகவே நடக்கும் என்று நம்பலாம்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த ராகு- கேது பெயர்ச்சி பொதுவாக அனுகூலமான பலனைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். ராகுவைவிட கேது உங்களுக்கு தேறுதலும் ஆறுதலும் தந்து ஆதரிப்பார். அப்பா கண்டித்தாலும் அம்மா அரவணைப்பதைப்போல ராகு நிதான பலனைத் தந்தாலும் கேது நிறைவான பலனைச் செய்வது நிச்சயம்! பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும் வழிபடவும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த ராகு - கேது பெயர்ச்சி நன்மையானதாக அமையும் என்று நம்பலாம். உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம். சனி, ராகு - கேது அசுரத் தன்மையுடைய கிரகங்கள்தான். எனவே உங்களை விட்டுக் கொடுக்காமல் தட்டிக் கொடுத்து தைரியம் ஊட்டுவார்கள். கெட்டுப் போக விடாமல் கை கொடுத்து உதவுவார்கள். திருச்சி, சமயபுரம் சென்று வழிபடவும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த ராகு- கேது பெயர்ச்சி உங்களை மயங்கச் செய்யலாம்; தயங்க வைக்கலாம். ரேவதி புதன் நட்சத்திரம். புதன் ராகு, கேதுவுக்கு சம கிரகம். எனவே சாதக பாதகமில்லாதபடி ராகு- கேது பெயர்ச்சி வேலை செய்யும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும். பரீக்கல் போகலாம்.


பணிப்புலம் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 16, 2011 8:52 am

ராசி பலன்களை இங்கு தந்த ஜோசியர் தாமுவுக்கு நன்றி சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2011 12:59 pm

நன்றி தாமு, நான் போட வந்தேன் .... அதர்க்குள் நீங்க போட்டுடிங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 16, 2011 1:21 pm

நன்றி தாமு அண்ணா!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக