Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."...
Page 1 of 1
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."...
''கடைசிக் கேள்வி. பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா?'' - ஆனந்த விகடனுக்காக உருத்திரகுமாரனின் பதில்
[ வியாழக்கிழமை, 12 மே 2011, 08:17.14 AM GMT ]
முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியின் தொடர்ச்சி.
''உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும், தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம்.
ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் தமது அரசியல் வேட்கைகளைப் பூர்த்திசெய்யவென்று வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. தமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க, ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் அமைந்த கருத்துக் கணிப்பை நடத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது; அது எமக்குக் கிடைக்கவில்லை.
கருத்துக் கணிப்பு நடத்த எமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையானது, நீதிக்கு அப்பாற்பட்ட - அரசியல் பண்பாடற்ற ஒன்று. பன்னாட்டுச் சமூகம் மேற்கொண்ட இந்த மாறுபட்ட முடிவுகள் காரணமாகத்தான், ஜூபாவின் தெருக்களில் புன்னகை பூத்த முகங்களையும் அழகுறு நடனங்களையும் நாம் காணும் அதே வேளையில், தமிழீழத்தின் தெருக்களில் அவலத்தின் குரல்களையும் பெருகியோடும் ரத்த ஆற்றையும் மட்டுமே காண முடிகிறது!''
''இந்திய அரசையும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளையும் இன்னமும் நீங்கள் நம்புகிறீர்களா?''
''அனைத்துலக உறவுகளில் நிரந்தர நண்பனோ, எதிரிகளோ இருப்பது இல்லை; நலன்களே உண்டு என்று கூறுவார்கள். அமெரிக்காவும் இந்தியாவும், ஈழத் தமிழ்த் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய உலகப்பெரும் சக்திகள்தான். இங்கு கேள்வி, யார் நண்பன் அல்லது எதிரி என்பது அல்ல. எவ்வாறு இந்த உலக சக்திகளின் நலன்களையும், ஈழ தேசத்தின் நலன்களையும் பொருந்தச் செய்வது என்பது தான்!''
''யதார்த்தத்தை உணராததால்தான் வீழ்ந்தார்கள் புலிகள் எனச் சொல்லப்படுவது உண்டு. இன்னமும் நாம் யதார்த்தத்தை உணரவில்லையா?''
''இன்றைய யதார்த்தம், அன்றைய நிலையைவிட முற்றாக மாறுபட்டது என்பதுதான் எமது வாதம். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கும் சிறீலங்காவின் செயற்பாடுகளை, பன்னாட்டுச் சமூகம் அப்படியே நம்பிவிடத் தயார் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
தமிழ் மக்களுக்குச் சிறீலங்கா அரசாங்கமும் ராணுவமும் புரிந்துள்ள கொடுமைகள், திருத்தப்படக்கூடியவை அல்ல. தன்னாட்சி பொருந்திய தமிழீழம் மட்டுமே தமிழரைக் காப்பாற்றும்; இந்தப் பிராந்தியத்துக்கு அமைதியைக் கொண்டுவரும் என்று உலக வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் தெளிவாகப் புரியவைக்க அரியதொரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. அதைச் சரியாக உணர்ந்து, தமிழ் மக்களின் விடிவுக்கு வழி தேட வேண்டியது எமது கடமை. உண்மை ஒருநாள் வெல்லும். தெற்கு ஆசியாவிலும், இந்து சமுத்திரத்திலும், தற்போது விரைவாக மாறிவரும் பூகோள-அரசியல் இயக்கப்பாடுகள் தெளிவுறும்போது, எமக்கென்று அரசு ஒன்றை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பும் அதற்குத் தேவையான அரசியல் வெளியும்கூடத் தாமாகவே வந்து அமையும்!''
''நாடு கடந்த தமிழீழ அரசு கனவா, கற்பனையா, ஏமாற்று நாடகமா?''
''நாடு கடந்த தமிழீழ அரசாங் கம் என்பது, கனவு அல்ல. கற்பனையும் அல்ல. நாடகமும் அல்ல. தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பது உலகத் தமிழரின் கனவு. அதை நனவாக்கும் வகையில், ஈழத் தமிழரின் பாரம்பரியத் தாயகப் பிரதேசத்தில் தமிழீழத் தனி அரசை அமைக்கும் முயற்சியில், நாம் இறங்கி இருக்கிறோம். இது உலகுக்கு தமிழர்கள் வழங்கும் ஒரு முன் மாதிரி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகில் ஒரு வலு மையமாக உருவாவது உலகத் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது!''
''விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் நீட்சிபோல அதே அடையாளங்களுடன், உங்கள் அமைப்பை முன்னெடுப்பது ராஜதந்திரரீதியில் புத்திசாலித்தனமான நடவடிக்கைதானா?''
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். உலக வல்லாதிக்க நலன்களுடன் ஒத்திசைந்து, தமிழ் மக்களின் சுதந்திர உணர்வைச் சமரசம் செய்துகொள்ள மறுத்ததால்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் ராணுவ ரீதியில் அழிக்கப்பட்டது. ஆனாலும், தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வு இப்போதும் உயிர்ப்போடுதான் உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இருந்த மக்கள் ஆதரவை அனைத்துலகச் சமூகம்நன்கு அறியும். இது தமிழ் மக்கள் தமக்கெனத் தனிஅரசு அமைக்கும் பெருவிருப்புடன் வழங்கப்பட்ட ஆதரவு என்பதனையும் அனைத்துலகச் சமூகம் அறியும்.''
''ஈழத்தில் தமிழர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைவர் இல்லையா?''
''அனைத்து ஈழத் தமிழரும் இலக்கில் ஒன்றுபட்டே உள்ளனர்.''
''ராஜபக்ஷே... சுதந்திரா கட்சியின் ஏகபோக வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''சிங்கள இன வெறி மேலாதிக்கத்தின் திரட்சியாக!''
''கே.பி?''
''கே.பி. சிறீலங்கா அரசின் ஒரு கைதியாக உள்ள காரணத்தால், தற்போதைய கட்டத்து விடுதலைப் போரில், அவர் ஒரு பொருட்டு அல்ல!''
''மதுக் கடைகள், கேளிக்கை விடுதிகள், விபசாரம் என ஈழத் தமிழர்கள் இடையே இப்போது காணப்படும் கலாசார மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''இவற்றை சிறீலங்கா அரசு, ஈழத் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் நடத்தும் பண்பாட்டு வடிவிலான இனப் படுகொலையின் பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டி உள்ளது. தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதற்கு சிங்களம் எடுக்கும் முயற்சிகள் இவை!''
''ஈழத்தில் இப்போது ஆங்காங்கே முளைவிடும் ஆயுதக் குழுக்கள்பற்றி?''
''இந்த ஆயுதக் குழுக்களானவை, தமிழீழ மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஆள்வதை அனைத்துலகத்தின் கண்களில் நியாயப்படுத்தும் ஒரே நோக்கத்துக்காக, சிறீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டப்பட்டு வருபவை!''
''கடைசிக் கேள்வி. பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா?''
''காலம் பதில் அளிக்க வேண்டிய ஒரு கேள்வி இது!''
முந்தைய கேள்விகளும் பதில்களும்
நன்றி
ஆனந்தவிகடன்
[ வியாழக்கிழமை, 12 மே 2011, 08:17.14 AM GMT ]
முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியின் தொடர்ச்சி.
''உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும், தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம்.
ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் தமது அரசியல் வேட்கைகளைப் பூர்த்திசெய்யவென்று வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. தமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க, ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் அமைந்த கருத்துக் கணிப்பை நடத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது; அது எமக்குக் கிடைக்கவில்லை.
கருத்துக் கணிப்பு நடத்த எமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையானது, நீதிக்கு அப்பாற்பட்ட - அரசியல் பண்பாடற்ற ஒன்று. பன்னாட்டுச் சமூகம் மேற்கொண்ட இந்த மாறுபட்ட முடிவுகள் காரணமாகத்தான், ஜூபாவின் தெருக்களில் புன்னகை பூத்த முகங்களையும் அழகுறு நடனங்களையும் நாம் காணும் அதே வேளையில், தமிழீழத்தின் தெருக்களில் அவலத்தின் குரல்களையும் பெருகியோடும் ரத்த ஆற்றையும் மட்டுமே காண முடிகிறது!''
''இந்திய அரசையும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளையும் இன்னமும் நீங்கள் நம்புகிறீர்களா?''
''அனைத்துலக உறவுகளில் நிரந்தர நண்பனோ, எதிரிகளோ இருப்பது இல்லை; நலன்களே உண்டு என்று கூறுவார்கள். அமெரிக்காவும் இந்தியாவும், ஈழத் தமிழ்த் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய உலகப்பெரும் சக்திகள்தான். இங்கு கேள்வி, யார் நண்பன் அல்லது எதிரி என்பது அல்ல. எவ்வாறு இந்த உலக சக்திகளின் நலன்களையும், ஈழ தேசத்தின் நலன்களையும் பொருந்தச் செய்வது என்பது தான்!''
''யதார்த்தத்தை உணராததால்தான் வீழ்ந்தார்கள் புலிகள் எனச் சொல்லப்படுவது உண்டு. இன்னமும் நாம் யதார்த்தத்தை உணரவில்லையா?''
''இன்றைய யதார்த்தம், அன்றைய நிலையைவிட முற்றாக மாறுபட்டது என்பதுதான் எமது வாதம். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கும் சிறீலங்காவின் செயற்பாடுகளை, பன்னாட்டுச் சமூகம் அப்படியே நம்பிவிடத் தயார் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
தமிழ் மக்களுக்குச் சிறீலங்கா அரசாங்கமும் ராணுவமும் புரிந்துள்ள கொடுமைகள், திருத்தப்படக்கூடியவை அல்ல. தன்னாட்சி பொருந்திய தமிழீழம் மட்டுமே தமிழரைக் காப்பாற்றும்; இந்தப் பிராந்தியத்துக்கு அமைதியைக் கொண்டுவரும் என்று உலக வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் தெளிவாகப் புரியவைக்க அரியதொரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. அதைச் சரியாக உணர்ந்து, தமிழ் மக்களின் விடிவுக்கு வழி தேட வேண்டியது எமது கடமை. உண்மை ஒருநாள் வெல்லும். தெற்கு ஆசியாவிலும், இந்து சமுத்திரத்திலும், தற்போது விரைவாக மாறிவரும் பூகோள-அரசியல் இயக்கப்பாடுகள் தெளிவுறும்போது, எமக்கென்று அரசு ஒன்றை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பும் அதற்குத் தேவையான அரசியல் வெளியும்கூடத் தாமாகவே வந்து அமையும்!''
''நாடு கடந்த தமிழீழ அரசு கனவா, கற்பனையா, ஏமாற்று நாடகமா?''
''நாடு கடந்த தமிழீழ அரசாங் கம் என்பது, கனவு அல்ல. கற்பனையும் அல்ல. நாடகமும் அல்ல. தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பது உலகத் தமிழரின் கனவு. அதை நனவாக்கும் வகையில், ஈழத் தமிழரின் பாரம்பரியத் தாயகப் பிரதேசத்தில் தமிழீழத் தனி அரசை அமைக்கும் முயற்சியில், நாம் இறங்கி இருக்கிறோம். இது உலகுக்கு தமிழர்கள் வழங்கும் ஒரு முன் மாதிரி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகில் ஒரு வலு மையமாக உருவாவது உலகத் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது!''
''விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் நீட்சிபோல அதே அடையாளங்களுடன், உங்கள் அமைப்பை முன்னெடுப்பது ராஜதந்திரரீதியில் புத்திசாலித்தனமான நடவடிக்கைதானா?''
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். உலக வல்லாதிக்க நலன்களுடன் ஒத்திசைந்து, தமிழ் மக்களின் சுதந்திர உணர்வைச் சமரசம் செய்துகொள்ள மறுத்ததால்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் ராணுவ ரீதியில் அழிக்கப்பட்டது. ஆனாலும், தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வு இப்போதும் உயிர்ப்போடுதான் உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இருந்த மக்கள் ஆதரவை அனைத்துலகச் சமூகம்நன்கு அறியும். இது தமிழ் மக்கள் தமக்கெனத் தனிஅரசு அமைக்கும் பெருவிருப்புடன் வழங்கப்பட்ட ஆதரவு என்பதனையும் அனைத்துலகச் சமூகம் அறியும்.''
''ஈழத்தில் தமிழர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைவர் இல்லையா?''
''அனைத்து ஈழத் தமிழரும் இலக்கில் ஒன்றுபட்டே உள்ளனர்.''
''ராஜபக்ஷே... சுதந்திரா கட்சியின் ஏகபோக வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''சிங்கள இன வெறி மேலாதிக்கத்தின் திரட்சியாக!''
''கே.பி?''
''கே.பி. சிறீலங்கா அரசின் ஒரு கைதியாக உள்ள காரணத்தால், தற்போதைய கட்டத்து விடுதலைப் போரில், அவர் ஒரு பொருட்டு அல்ல!''
''மதுக் கடைகள், கேளிக்கை விடுதிகள், விபசாரம் என ஈழத் தமிழர்கள் இடையே இப்போது காணப்படும் கலாசார மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''இவற்றை சிறீலங்கா அரசு, ஈழத் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் நடத்தும் பண்பாட்டு வடிவிலான இனப் படுகொலையின் பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டி உள்ளது. தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதற்கு சிங்களம் எடுக்கும் முயற்சிகள் இவை!''
''ஈழத்தில் இப்போது ஆங்காங்கே முளைவிடும் ஆயுதக் குழுக்கள்பற்றி?''
''இந்த ஆயுதக் குழுக்களானவை, தமிழீழ மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஆள்வதை அனைத்துலகத்தின் கண்களில் நியாயப்படுத்தும் ஒரே நோக்கத்துக்காக, சிறீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டப்பட்டு வருபவை!''
''கடைசிக் கேள்வி. பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா?''
''காலம் பதில் அளிக்க வேண்டிய ஒரு கேள்வி இது!''
முந்தைய கேள்விகளும் பதில்களும்
நன்றி
ஆனந்தவிகடன்
Re: ''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."...
நன்றி கண்ணன் நான் பதிவேற்ற நினைத்தேன் ஆனால் என் இணயம் 6 நாட்களாக வேலை செய்யவில்லை ///... மிக்க நன்றி ![''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழீழ விடுதலைப் புலிகளை தவறாக எடைபோட்டது அனைத்துலக சமூகம்!
» தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம்
» தமிழீழ விடுதலை புலிகள்
» தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு
» ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம்
» தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம்
» தமிழீழ விடுதலை புலிகள்
» தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு
» ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|