ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_m10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10 
ayyasamy ram
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_m10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10 
mohamed nizamudeen
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_m10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10 
VENKUSADAS
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_m10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10 

Top posting users this month
heezulia
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_m10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10 
ayyasamy ram
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_m10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10 
mohamed nizamudeen
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_m10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10 
VENKUSADAS
''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_m10''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."...

Go down

''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Empty ''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."...

Post by கண்ணன்3536 Fri May 13, 2011 7:38 am

''கடைசிக் கேள்வி. பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா?'' - ஆனந்த விகடனுக்காக உருத்திரகுமாரனின் பதில்
[ வியாழக்கிழமை, 12 மே 2011, 08:17.14 AM GMT ]

முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியின் தொடர்ச்சி.

''உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும், தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம்.

ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் தமது அரசியல் வேட்கைகளைப் பூர்த்திசெய்யவென்று வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது. தமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க, ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் அமைந்த கருத்துக் கணிப்பை நடத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது; அது எமக்குக் கிடைக்கவில்லை.

கருத்துக் கணிப்பு நடத்த எமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையானது, நீதிக்கு அப்பாற்பட்ட - அரசியல் பண்பாடற்ற ஒன்று. பன்னாட்டுச் சமூகம் மேற்கொண்ட இந்த மாறுபட்ட முடிவுகள் காரணமாகத்தான், ஜூபாவின் தெருக்களில் புன்னகை பூத்த முகங்களையும் அழகுறு நடனங்களையும் நாம் காணும் அதே வேளையில், தமிழீழத்தின் தெருக்களில் அவலத்தின் குரல்களையும் பெருகியோடும் ரத்த ஆற்றையும் மட்டுமே காண முடிகிறது!''

''இந்திய அரசையும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளையும் இன்னமும் நீங்கள் நம்புகிறீர்களா?''

''அனைத்துலக உறவுகளில் நிரந்தர நண்பனோ, எதிரிகளோ இருப்பது இல்லை; நலன்களே உண்டு என்று கூறுவார்கள். அமெரிக்காவும் இந்தியாவும், ஈழத் தமிழ்த் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய உலகப்பெரும் சக்திகள்தான். இங்கு கேள்வி, யார் நண்பன் அல்லது எதிரி என்பது அல்ல. எவ்வாறு இந்த உலக சக்திகளின் நலன்களையும், ஈழ தேசத்தின் நலன்களையும் பொருந்தச் செய்வது என்பது தான்!''

''யதார்த்தத்தை உணராததால்தான் வீழ்ந்தார்கள் புலிகள் எனச் சொல்லப்படுவது உண்டு. இன்னமும் நாம் யதார்த்தத்தை உணரவில்லையா?''

''இன்றைய யதார்த்தம், அன்றைய நிலையைவிட முற்றாக மாறுபட்டது என்பதுதான் எமது வாதம். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கும் சிறீலங்காவின் செயற்பாடுகளை, பன்னாட்டுச் சமூகம் அப்படியே நம்பிவிடத் தயார் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.

தமிழ் மக்களுக்குச் சிறீலங்கா அரசாங்கமும் ராணுவமும் புரிந்துள்ள கொடுமைகள், திருத்தப்படக்கூடியவை அல்ல. தன்னாட்சி பொருந்திய தமிழீழம் மட்டுமே தமிழரைக் காப்பாற்றும்; இந்தப் பிராந்தியத்துக்கு அமைதியைக் கொண்டுவரும் என்று உலக வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் தெளிவாகப் புரியவைக்க அரியதொரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. அதைச் சரியாக உணர்ந்து, தமிழ் மக்களின் விடிவுக்கு வழி தேட வேண்டியது எமது கடமை. உண்மை ஒருநாள் வெல்லும். தெற்கு ஆசியாவிலும், இந்து சமுத்திரத்திலும், தற்போது விரைவாக மாறிவரும் பூகோள-அரசியல் இயக்கப்பாடுகள் தெளிவுறும்போது, எமக்கென்று அரசு ஒன்றை நிறுவிக்கொள்ளும் வாய்ப்பும் அதற்குத் தேவையான அரசியல் வெளியும்கூடத் தாமாகவே வந்து அமையும்!''

''நாடு கடந்த தமிழீழ அரசு கனவா, கற்பனையா, ஏமாற்று நாடகமா?''

''நாடு கடந்த தமிழீழ அரசாங் கம் என்பது, கனவு அல்ல. கற்பனையும் அல்ல. நாடகமும் அல்ல. தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்பது உலகத் தமிழரின் கனவு. அதை நனவாக்கும் வகையில், ஈழத் தமிழரின் பாரம்பரியத் தாயகப் பிரதேசத்தில் தமிழீழத் தனி அரசை அமைக்கும் முயற்சியில், நாம் இறங்கி இருக்கிறோம். இது உலகுக்கு தமிழர்கள் வழங்கும் ஒரு முன் மாதிரி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகில் ஒரு வலு மையமாக உருவாவது உலகத் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது!''

''விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் நீட்சிபோல அதே அடையாளங்களுடன், உங்கள் அமைப்பை முன்னெடுப்பது ராஜதந்திரரீதியில் புத்திசாலித்தனமான நடவடிக்கைதானா?''

''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். உலக வல்லாதிக்க நலன்களுடன் ஒத்திசைந்து, தமிழ் மக்களின் சுதந்திர உணர்வைச் சமரசம் செய்துகொள்ள மறுத்ததால்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் ராணுவ ரீதியில் அழிக்கப்பட்டது. ஆனாலும், தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வு இப்போதும் உயிர்ப்போடுதான் உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இருந்த மக்கள் ஆதரவை அனைத்துலகச் சமூகம்நன்கு அறியும். இது தமிழ் மக்கள் தமக்கெனத் தனிஅரசு அமைக்கும் பெருவிருப்புடன் வழங்கப்பட்ட ஆதரவு என்பதனையும் அனைத்துலகச் சமூகம் அறியும்.''

''ஈழத்தில் தமிழர்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைவர் இல்லையா?''

''அனைத்து ஈழத் தமிழரும் இலக்கில் ஒன்றுபட்டே உள்ளனர்.''

''ராஜபக்ஷே... சுதந்திரா கட்சியின் ஏகபோக வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சிங்கள இன வெறி மேலாதிக்கத்தின் திரட்சியாக!''

''கே.பி?''

''கே.பி. சிறீலங்கா அரசின் ஒரு கைதியாக உள்ள காரணத்தால், தற்போதைய கட்டத்து விடுதலைப் போரில், அவர் ஒரு பொருட்டு அல்ல!''

''மதுக் கடைகள், கேளிக்கை விடுதிகள், விபசாரம் என ஈழத் தமிழர்கள் இடையே இப்போது காணப்படும் கலாசார மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''இவற்றை சிறீலங்கா அரசு, ஈழத் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் நடத்தும் பண்பாட்டு வடிவிலான இனப் படுகொலையின் பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டி உள்ளது. தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதற்கு சிங்களம் எடுக்கும் முயற்சிகள் இவை!''

''ஈழத்தில் இப்போது ஆங்காங்கே முளைவிடும் ஆயுதக் குழுக்கள்பற்றி?''

''இந்த ஆயுதக் குழுக்களானவை, தமிழீழ மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஆள்வதை அனைத்துலகத்தின் கண்களில் நியாயப்படுத்தும் ஒரே நோக்கத்துக்காக, சிறீலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டப்பட்டு வருபவை!''

''கடைசிக் கேள்வி. பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்களா?''

''காலம் பதில் அளிக்க வேண்டிய ஒரு கேள்வி இது!''


முந்தைய கேள்விகளும் பதில்களும்

நன்றி
ஆனந்தவிகடன்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... Empty Re: ''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."...

Post by Guest Fri May 13, 2011 12:33 pm

நன்றி கண்ணன் நான் பதிவேற்ற நினைத்தேன் ஆனால் என் இணயம் 6 நாட்களாக வேலை செய்யவில்லை ///... மிக்க நன்றி ''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."... 224747944
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum