ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது

2 posters

Go down

உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Empty உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது

Post by முரளிராஜா Thu May 12, 2011 8:39 am

தில்லி மாநகருக்கு அருகில் உத்தரப்பிரதேச எல்லையில் இருக்கும் பட்டா பர்செüல் கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து புதன்கிழமை தர்னா செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முன்னெச்சரிக்கையாக போலீஸôர் கைது செய்தனர்.
குற்றவியல் சட்டப் பிரிவு 151-ன் படி அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மாஜிஸ்திரேட் முன்னிலையில் வியாழக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மீரட் சரக போலீஸ் ஐ.ஜி. ரஜினிகாந்த் மிஸ்ரா தெரிவித்தார்.
தர்னா நடைபெற்ற இடத்திலிருந்து டாடா சஃபாரி காரில் அவரை போலீஸôர் அழைத்துச் சென்றனர். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ஃபெரோஷாபாத் எம்.பி. ராஜ் பப்பர் ஆகியோரும் சென்றனர். எனினும் அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
உத்தரப்பிரதேச மாநில அரசு விவசாய நிலங்களை வளர்ச்சிப் பணிகளுக்காகக் குறைந்த விலை தந்து கையகப்படுத்துவதை விவசாயிகள் கடந்த சில மாதங்களாகவே எதிர்த்து வருகின்றனர். அடிமாட்டு விலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தி அதிக விலைக்கு நில முதலைகளுக்கும் தனியார், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் பகுஜன் சமாஜ் தலைவர்கள் என்று மக்கள் மத்தியில் எண்ணம் பரவியிருக்கிறது.
இந்த நிலையில் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்திய பட்டாபர்செüல் கிராமவாசிகள் மீது போலீஸôர் கடந்த சனிக்கிழமை தடியடி நடத்தி வன்முறை கட்டுக்கடங்காமல் போகவே துப்பாக்கிச் சூடும் நடத்தினர். அன்றைய சம்பவத்தில் 2 போலீஸôர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக ஏராளமான விவசாயிகளைப் போலீஸôர் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அன்றைய தினம் போலீஸôரிடம் சிக்காமல் தப்பிய கிராமத்து இளைஞர்கள் ஊரைவிட்டே ஓடி எங்கோ தலைமறைவாக இருக்கின்றனர்.
இதன் பிறகு பாரதிய ஜனதா, சமாஜவாதி,ராஷ்ட்ரீய லோகதளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அடுத்தடுத்து விவசாயிகளைச் சந்திக்கச் சென்று போலீஸôரால் தடுக்கப்பட்டு கைதாகி பின்னர் விடுதலை ஆனார்கள்.
ராகுல் காந்தியின் ரகசிய முடிவு: இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ராகுல் காந்தி போலீஸôரின் கண்ணில்படாமல் அந்த கிராமத்துக்குச் சென்று விவசாயிகளுக்குத் தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்தார். பகல் நேரத்தில் காரில் சென்றால் போலீஸôரால் தடுக்கப்படலாம் என்பதால் அதிகாலை 4 மணிக்கே யாரோ ஒருவருடன் மோட்டார் பைக்கின் பின் சீட்டில் அமர்ந்து அந்த கிராமத்துக்குச் சென்றுவிட்டார்.
அந்த கிராமத்தில் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸôர், ""யாரோ போகிறார்கள்'' என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். கிராமப் பெரியவர்களை அழைத்து ஊரின் மையப் பகுதியில் (செüபல்) தர்னாவில் ராகுல் அமர்ந்த பிறகுதான் அவர்களுக்கு அவர் யாரென்று தெரிந்தது. சிறிது நேரம் கழித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங்கும் அவருடன் சேர்ந்து கொண்டார்.
குறைகளைத் தெரிவித்தனர்: ஊரில் உள்ள அனைத்து மக்களும் - ஏராளமான பெண்கள் உள்பட - அங்கே கூடி தங்களுடைய குறைகளை அவரிடம் ஒவ்வொருவராக தெரிவித்தனர். ராகுல் காந்தி அவற்றைப் பரிவுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
தடியடித் தழும்புகள்: கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களில் சிலர் போலீஸôர் தங்களைத் தடியால் அடித்ததால் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டினர். இன்னும் சிலர் தடியடியிலிருந்து தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்ததால் பட்ட அடிகளைக் காண்பித்தனர்.
ஊரில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் ஏராளமான இளைஞர்கள் ஊரைவிட்டே எங்கோ ஓடிவிட்டனர் என்று கிராமத்துப் பெரியவர்கள் குறிப்பிட்டனர்.
பி.ஏ.சி. அத்துமீறல்: கலவரக்காரர்களைத் தேடும் சாக்கில் வீடுவீடாக நுழைந்த மாகாண ஆயுதப்படை போலீஸôர் (பி.ஏ.சி.) பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டனர் என்று பெண்கள் புகார் தெரிவித்தனர்.
அதிகாரி கெஞ்சல்: கிரேட்டர் நொய்டா மாவட்ட சார்பு கோட்ட அதிகாரி விஷால் சிங் கிராமத்துக்கு விரைந்து ராகுல் காந்தியை அணுகி தர்னாவை உடனே விலக்கிக் கொள்ளுமாறு வேண்டினார். ""நீங்களோ மிக அதிக பாதுகாப்பு வளையத்தில் இருக்கவேண்டிய முக்கியப் பிரமுகர். இந்தக் கிராமத்தில் இப்படி ஊர் மந்தையில் இருந்தால் உங்களைப் பாதுகாப்பது மிகவும் இடரான வேலையாகிவிடும். இந்த கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. இங்கே அரசியல் தலைவர்களைப் பேச அனுமதித்தால் நிலைமை கட்டுக்குள் வருவதற்குப் பதிலாக கையை மீறும் ஆபத்து இருக்கிறது. உங்கள் தர்னாவை முடித்துக் கொள்ளுங்கள், உங்களுடைய கோரிக்கையை அரசிடம் தெரிவித்து ஆவன செய்கிறோம்'' என்று கெஞ்சினார்.
ராகுலின் கோரிக்கைகள்: ராகுல் காந்தி அவ்வாறு தர்னாவைக் கைவிட மறுத்துவிட்டார். விவசாயிகள் மீது போலீஸôர் நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூடு குறித்து உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், நீதி விசாரணை அறிக்கை வரும்வரையில் அவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எதையும் எடுக்கக்கூடாது, விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக நிலங்களைக் கட்டாயப்படுத்தி கையகப்படுத்தக் கூடாது, கிராமத்திலிருந்து போலீஸ் படையினரை விலக்கிக் கொள்ள வேண்டும், கிராமவாசிகளை அச்சுறுத்தக் கூடாது என்ற கோரிக்கைகளை ராகுல் காந்தி வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகளை மாயாவதி தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஏற்பதாக இருந்தால் தர்னாவைக் கைவிடுவதாகவும் இல்லாவிட்டால் அந்த கிராமத்தைவிட்டு வெளியேறப் போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்.
கைது.. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராகுல் காந்தியை போலீஸôர் கைது செய்தனர். அவருடன் திக்விஜய் சிங், ராஜ்பப்பர் எம்.பி. ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதாகி காரில் ஏறும்போது விவசாயிகளைப் பார்த்து சிரித்தபடியே கையசைத்துக் கொண்டிருந்தார் ராகுல். அவர் எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்கிற விவரத்தை போலீஸôர் தெரிவிக்கவில்லை.
மாஜிஸ்திரேட் முன்பு அவர் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீஸôர் தெரிவித்தனர்.
ராகுல் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நன்றி தின மணி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது Empty Re: உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 8:46 am

ராகுலின் அரசியல் நாடகம் ஆரம்பம்..! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு: ஒருவர் கைது
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
» விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சீமான்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum